Jump to content

லண்டனில் தவிக்கும் தமிழர்கள்: விமான சேவை எப்போது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தவிக்கும் தமிழர்கள்: விமான சேவை எப்போது?

 

spacer.png

சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லண்டன் வாழ் தமிழர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் உலக அளவில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பமுடியாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து, மத்திய அரசு அவர்களை மீட்பதற்காக 'வந்தேபாரத்' எனும் திட்டத்தின் கீழ் சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் தாயகம் திரும்ப வழிவகை செய்துள்ளது. அந்த வகையில் லண்டனில் உள்ள தமிழர்களை மீட்பதற்காக பேஸ் ஒன்றில் கடந்த மே 14ஆம் தேதி சென்னைக்குச் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக சுமார் 300 பேர் வரை தாயகம் வந்தடைந்தனர்.

 

லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் முறையாகப் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களை மீட்பதற்காக இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டமாக இயக்கப்பட வேண்டிய விமானங்கள் இயக்கப்படவில்லை. திடீரென மீட்பு விமான சேவை நிறுத்தப்பட்டதால் அங்கு வசிக்கும் தமிழர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும், குறிப்பாக தமிழகத்தை அடுத்துள்ள அண்டை மாநிலங்களுக்கும் லண்டனில் இருந்து இயக்கப்படும் மீட்பு விமானங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு லண்டனில் இருந்து மீட்பு விமானங்கள் இயக்கப்படுவதை போல் தமிழகத்துக்கும் இயக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு லண்டன் தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தவண்ணமுள்ளனர். இங்கிலாந்தில் சிக்கித் தவிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் தாயகம் திரும்ப ஏராளமான மனுக்களை எழுதியுள்ளனர். மேலும் லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷன்(Indian High Commission) அலுவலகம் முன்பும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்தனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. சிக்கித் தவிப்பவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகளைத் தவிர, மருத்துவ சிகிச்சைக்காகவோ அல்லது தொழில் ரீதியாகவோ அங்கு சென்ற மாணவர்கள் மற்றும் மக்கள்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுடன் தொலைபேசியில் பேசிய வார்விக் நகரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், "மதுரையில் வசிக்கும் எனது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு வாழ இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன என்று மருத்துவர்கள் சொன்னார்கள். என் அம்மா உதவியற்றவராக இருக்கிறார். நான் இங்கே மாட்டிக்கொண்டேன். நாங்கள் திரும்பப் பெற நிறைய வழிகளை முயற்சி செய்தோம், ஆனால் எதுவும் செயல்படவில்லை" என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இங்கிலாந்தில் உள்ள தங்கள் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றவர்களால் தாங்கள் வழக்கமாக வாங்கும் மருந்துகளை வாங்க முடியவில்லை எனக் கூறுகின்றனர். தெற்கு ஹாம்ப்டனைச் சேர்ந்த 28 வயதான கசால், "என் தந்தையும் தாயும் என்னைப் பார்க்க வந்தார்கள். இருவரும் நீரிழிவு நோயாளிகள், இந்திய மருந்துகளின் அடிப்படையில் மருந்துகளைப் பெற முடியவில்லை. தற்காலிகமாக நாங்கள் இங்கு ஒரு மருத்துவரைச் சந்தித்தோம். ஆனால், அவர்கள் 14 நாட்களுக்கு மேல் மருந்துகள் கொடுக்க தயங்கினர். இருவரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் நாளின் ஒவ்வொரு நிமிடமும் நான் அச்சத்தில் இருக்கிறேன். தமிழக அரசு ஏதாவது செய்ய வேண்டும்" என்று கூறினார்.

அண்மையில் லண்டன் வாழ் தமிழர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் மனுக்களை தொடர்ச்சியாக அனுப்பியும், வீடியோ வடிவில் கோரிக்கை விடுத்தும் தாங்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

லண்டனைச் சேர்ந்த சியாமளா என்பவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "இங்கே இதய நோயாளிகள் இருக்கிறார்கள், சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள். அதே போல ஊரிலும் அப்பா, அம்மா என ரத்த உறவுகளும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். எங்களுக்கு அவர்களை சென்று பார்க்க வேண்டும். இங்கே ஒரு மீட்பு விமானமும் இல்லை. ஆனால், கொச்சின், விஜயவாடா, டெல்லி, மும்பை என மற்ற நகரங்களுக்கு விமானம் இருக்கிறது. எங்களுக்கு மட்டுமில்லை. இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று கொண்டிருக்கும்போது, தமிழர்கள் மட்டும் இங்கே மாட்டிக்கொண்டுள்ளோம். அது எந்த விதத்தில் சரி என்று எங்களுக்கு தெரியவில்லை.

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் என்பதை நாங்கள் உணர்கிறோம். எங்களுக்கும் பொறுப்புணர்வு இருக்கிறது. நாங்கள் யாரும் சென்னை வந்தவுடன் தனிமைப்படுத்தப்படாமல் வெளியே செல்வதற்கு தயாராக இல்லை. எங்களுக்கு ஒரே ஒரு மீட்பு விமானம் மட்டும் கொடுங்கள்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த கிருஷ்ணா வெளியிட்ட பதிவில், "இந்திய தூதரகம் சென்னைக்கு விமான சேவை துவங்கினால் மட்டுமே எங்களை வெளியேற்றுவதைக் குறித்து ஆலோசிக்க முடியும் என கூறிவிட்டது. அண்டை மாநிலங்களுக்கு செல்வதற்கும் அனுமதியளிக்கவில்லை. எப்போது ஊர் திரும்புவோம் என தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். எங்களை சீக்கிரம் இங்கிருந்து வெளியேற்ற உதவி செய்யுங்கள். நன்றி" எனக் கூறியுள்ளார்

 

https://minnambalam.com/public/2020/06/05/9/tamil-people-in-london-waiting-to-reach-their-home

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .
    • எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி -  இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார். ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀. சும்மா ஓளட் போடும் ஶேர்யக்ஹ் கணக்கா கம கமப்பிங்க போல🤣 எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏. இனிய பயணமாகட்டும்.
    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.