Jump to content

யாழ்ப்பாணக் கோட்டை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோவில் பல அனிமேஷன்ஸ் சேர்க்கப்பட்டு சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தாலும் பல வரலாற்று தவறுகள் உள்ளன.

போத்துக்கேயர்கள் 1520ல் யாழ்ப்பாணம் வரவில்லை. நெடுந்தீவு உள்பட்ட, தீவுப்பகுதிகளுக்கே வந்தனர்.

அங்கிருந்த வாறே, தமிழகத்திலிருந்து கிடைக்கக்கூடிய உதவிகளையும், இறக்குமதி, ஏற்றுமதிகளியும் தடுத்ததன் மூலம் யாழ்ப்பாண அரசினை, திறை செலுத்தும் நிலைக்கு கொண்டுவந்து, தமக்கு சார்பான நாடாக்கினார்கள். 1591ல் தமது பொம்மை அரசன் எதிர்மன்னசிங்கம் என்பவரை அரசனாக்கினார்.

1617ல் எதிர்மன்னசிங்கத்தின் மகன் பரராசசேகரன் இறக்க, அவனது மகன் சங்கிலியன், போர்த்துக்கேயர் வந்தபின் சிம்மாதனம் ஏறிய 3வது அரசன். 

தனது அனுமதி இல்லாமல் 3,000 பேரை மன்னாரில் மதம் மாத்தி விட்டார்கள் என்று கோபம் அடைந்து, போர்த்துகேயர்களுடன் நேரடியாக மோதி, போர்க்களத்தில் தோற்று , யாழ்பாண ராஜ்ஜியத்தினை இழந்தார். 

Phillippe de Oliveira  என்பவரால் கைதாகிய இந்த இரண்டாம் சங்கிலி மன்னன் 1619ல் தூக்கிலிடப்பட, அன்றில் இருந்தே யாழ்ப்பாண ராஜ்ஜியம் போர்த்துக்கேயர் வசமானது.

ஆனாலும்1658 ஆம் ஆண்டில் ரிஜ்க்லோஃப் வான் கோயன்ஸின் கீழ் டச்சுக்காரர்களால் யாழ்ப்பாண ராஜ்ஜியம் கைப்பற்றப்பட்டது.

1785 முதல் 1948 வரை பிரிட்டிஷ்காரர்களும், 1948 முதல் சிங்களவர்களாலும், இடையே 1987 முதல் 1990 வரை இந்தியர்களாலும் ஆளப்பட்டது. 1990 முதல் 1995 வரையான காலப்பகுதியில் புலிகள் கட்டுப்பாடில் கூட இருந்திருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இந்த வீடியோவில் பல அனிமேஷன்ஸ் சேர்க்கப்பட்டு சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தாலும் பல வரலாற்று தவறுகள் உள்ளன.

போத்துக்கேயர்கள் 1520ல் யாழ்ப்பாணம் வரவில்லை. நெடுந்தீவு உள்பட்ட, தீவுப்பகுதிகளுக்கே வந்தனர்.

அங்கிருந்த வாறே, தமிழகத்திலிருந்து கிடைக்கக்கூடிய உதவிகளையும், இறக்குமதி, ஏற்றுமதிகளியும் தடுத்ததன் மூலம் யாழ்ப்பாண அரசினை, திறை செலுத்தும் நிலைக்கு கொண்டுவந்து, தமக்கு சார்பான நாடாக்கினார்கள். 1591ல் தமது பொம்மை அரசன் எதிர்மன்னசிங்கம் என்பவரை அரசனாக்கினார்.

1617ல் எதிர்மன்னசிங்கத்தின் மகன் பரராசசேகரன் இறக்க, அவனது மகன் சங்கிலியன், போர்த்துக்கேயர் வந்தபின் சிம்மாதனம் ஏறிய 3வது அரசன். 

தனது அனுமதி இல்லாமல் 3,000 பேரை மன்னாரில் மதம் மாத்தி விட்டார்கள் என்று கோபம் அடைந்து, போர்த்துகேயர்களுடன் நேரடியாக மோதி, போர்க்களத்தில் தோற்று , யாழ்பாண ராஜ்ஜியத்தினை இழந்தார். 

Phillippe de Oliveira  என்பவரால் கைதாகிய இந்த இரண்டாம் சங்கிலி மன்னன் 1619ல் தூக்கிலிடப்பட, அன்றில் இருந்தே யாழ்ப்பாண ராஜ்ஜியம் போர்த்துக்கேயர் வசமானது.

ஆனாலும்1658 ஆம் ஆண்டில் ரிஜ்க்லோஃப் வான் கோயன்ஸின் கீழ் டச்சுக்காரர்களால் யாழ்ப்பாண ராஜ்ஜியம் கைப்பற்றப்பட்டது.

1785 முதல் 1948 வரை பிரிட்டிஷ்காரர்களும், 1948 முதல் சிங்களவர்களாலும், இடையே 1987 முதல் 1990 வரை இந்தியர்களாலும் ஆளப்பட்டது. 1990 முதல் 1995 வரையான காலப்பகுதியில் புலிகள் கட்டுப்பாடில் கூட இருந்திருக்கின்றது.

ஓம் நாதா இந்த‌ ஜ‌ந்து ஆண்டும் கோட்டை எம்ம‌வ‌ர் வ‌ச‌ம் இருந்த‌து , பலாளியில் இருந்து பெரும் ப‌டையுட‌ன் ம‌ற்றும் ராங்கியின் உத‌வியுட‌ன் வ‌ந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் தாக்குத‌ல‌ எதிர் கொள்ள‌ முடியாம‌ல் யாழ்ப்பாண‌த்தை இழ‌க்க‌ நேரிட்ட‌து , பெரிய‌ எதிர்ப்பு இல்லாம‌ அப்போது யாழ்ப்பாண‌த்தை சிங்க‌ள‌ ப‌டை கைப்ப‌ற்றிய‌து , எம் போராட்ட‌த்தில் அப்போது போதுமான‌ அள‌வு போராளிக‌ள் இல்லை , யாழ்ப்பாண‌த்தை கைப‌ற்ற‌ ப‌ல‌ ந‌ட‌வ‌டிக்கை சிங்க‌ள‌ம் எடுத்த‌து அத‌ போராளிக‌ளின்  எதிர் தாக்குத‌ல் மூல‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் பின்வாங்கிய‌து , 1995ம் ஆண்டு க‌ட‌சியில் சிங்க‌ள‌ ப‌டை எல்லா ப‌க்க‌த்தாலும் வ‌ர‌ எம்ம‌வ‌ர்க‌ளால் அவ‌ங்க‌ளின் திட்ட‌த்தை தாக்குத‌ல‌ எதிர் கொள்ள‌ முடியாம‌ல் போய் த‌மிழ‌ர்க‌ளின் கலாச்சார‌பூமி யாழ்ப்பாண‌ம் சிங்க‌ள‌வ‌ன் கையில் 😓 ,  

உந்த‌ தாக்குத‌ல் ந‌ட‌வ‌டிக்கையின் போது சின்ன‌னில் எங்க‌ளுட‌ன் விளையாடின‌ இந்த‌ அண்ண‌ன‌ இழ‌ந்த‌ நாங்க‌ள் , அப்ப‌ குன‌சிலி அண்ண‌னுக்கு 20 வ‌ய‌து இருக்கும் , எங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு அண்ண‌ன் மாதிரி , என்னை விட‌ 12 வ‌ய‌தில் மூப்பு ஆனால் எங்க‌ளை ந‌ல்லா பிடிக்கும் /

மிஞ்சி இருக்கிற‌து குன‌சிலி அண்ண‌னின் நினைவும் இந்த‌ப் ப‌ட‌மும்  தான் ,  க‌ன‌சிலி அண்ண‌னுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏

20200605-134352.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த காலத்தில் யாழில் வசித்தபோது  பண்ணை கடற்கரை, முனியப்பர் ஆலயம், முற்றவெளி, யாழ் கோட்டை போன்ற இடங்களுக்கு நண்பர்களுடன் செல்வது வழக்கம். சுமார் 45 வருடங்களின் பின் கடந்த வருடம் மீண்டும் கோட்டையின் உட்புறம் சென்று சுற்றிப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கோட்டையை நெதர்லாண்ட் நாட்டின் அரசு புனரமைத்தது பற்றி எனக்குள் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அவர்கள் கோட்டையின்  வெளிப்புற மதில்களை மட்டுமே செப்பனிட்டிருந்தார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது.

உட்புறம் கட்டிடங்கள் இடிந்து விழும் தறுவாயில் இருந்ததால் பார்வையாளர்களை தொலைவில் நின்று பார்வையிடும்படி அறிவித்தல் பலகையுடன் கயிற்றுவேலியும்  அமைக்கப்பட்டிருந்தது.  கோட்டைக்குள் அன்று(60, 70 களில்) இருந்த பல கட்டிடங்கள், தேவாலயம், சிறைச்சாலை மற்றும் தூக்குமேடை என்பன இன்று இல்லை. இடிந்த கட்டிடங்களில் இருந்து பெயர்த்து எடுத்த  இடிபாடுகளையும் கற்களையும் கோட்டையின் மத்தியில் இருந்த வெளியான இடத்தில் பார்வைக்கு அடுக்கி வைத்திருந்தார்கள்.

இப்போதும் சிறிய எண்ணிக்கையில் இராணுவம் அங்கு நிலைகொண்டிருந்தது. பல இரும்பு கொள்கலன்களை அடுக்கடுக்காக வைத்து இராணுவத்தினருக்கு தங்குமிடமும்  வழமையான இருப்பிட வசதிகளும் இருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது. பார்வையாளர்களில் 90 வீதமானவர்கள் தென்னிலங்கயை சேர்ந்தவர்களாகவே காணப்பட்டார்கள். 

கோட்டையின் உட்புறமாக அகழிக்கு சமாந்திரமாக நடந்து சென்று முனியப்பர் ஆலயத்தின் பின்புறத்தில் ஏறக்கூடியவாறு மதிலை உடைத்து நடை பாதை ஒன்றை அமைத்திருந்தார்கள். அதே சமயம் ஒரு வயோதிபர்  துவிச்சக்கர வண்டியில்  கோட்டையின் எங்கோ ஒரு மூலையில் இருந்து  உட்புறமாக கோட்டையை கடந்து பிரதான வாயில் வழியாக வெளியேறிசென்றதையும் அவதானிக்ககூடியதாக இருந்தது. காவலாளியை விசாரித்தபோது அவர் சொன்ன தகவலின்படி இராணுவத்தினர் தமது கனரக வாகனங்களை கோட்டையின் முன்பக்க வழியால் உள்ளே கொண்டு  செல்ல முடியாது என்பதால் கோட்டையின் பின்புறம் இருந்த அகழியை புல்டோசர் கொண்டு நிரவி வழி செய்திருந்தார்கள் என அறிந்தேன்.

இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த யாழ் கோட்டை புராதன சின்னம் என்ற அடிப்படையில் இப்போது தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் காலப்போக்கில் சிறிது சிறிதாக பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படும் எனவும் அதற்காக விரைவில் கட்டணம் அறவிடப்படும் என்றும் அந்த காவலாளி தெரிவித்தார்.

இந்த கோட்டை இருந்த இடம் தெரியாமல் அன்றே தரைமட்டமாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. இல்லையென்றால் புராதன சின்னங்கள் என சொல்லப்படும் இது போன்ற இடங்கள் அடிமைத்தனத்தின் சின்னங்களாக காலாதி காலத்துக்கு எமது மக்கள் மத்தியில் காட்சிப்படுத்தப்படுவதை  தவிர்க்கமுடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.