Jump to content

தமிழீழ கலைஞர்களின் படைப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் யாழின் நரம்பிழுத்தே  எந்த 
நாளும் உருகி பண்ணிசைத்தே 
மெல்லவே தோகை விரித்தாடும் எழில் 
மயிலினைப் போலவே நீ ஆடு  

நீலக்குறிஞ்சி மலர் எடுத்தே எழில் 
நீல மலர் ஆரம் நீ தொடுத்தே 
கோலக்கலைமகள் அன்னையவள் வரிக்
கோலக் கழுத்தினில் நீ அணிவாய்

வண்ணக் கலைத்தேவி கோவிலிலே என்றும்
வாசப்புகை சேலை நீ இடுவாய் 
மண்ணக மாந்தர்கள் கூடுமிடம் அதில் 
மாமணி தீபங்கள் ஏற்றிடுவாய் 
 

 

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வடை வடையென விற்றுவந்தால் வாயாடி கிழவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மால் மருகா எழில் வேல் முருகா

யாழ்பாணம் என்று சொன்னால் தேன் சுவையூறும் 

ஆய் கூய் எலிகள் பட்டாலம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருமி மேளம் கொட்டு மச்சான் உல்லாசமாய் ஆடு மச்சான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தே. பிரியனின் வரிகளில் தாரகையே பாட்டு 34நிமிடத்தில் இருந்து....  இயற்கை காட்சியுடன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நம்பி என்னை நம்பி உலகம்  இருக்கிறது - இந்த 
உழைக்கிற கைகளை நம்பித்தானே பொழுதே விடிகிறது 

இரத்த துளிகளை வியர்வையாக்கி உழைப்போர் பலருண்டு
இந்த உத்தமர் தேகம் உதிரம் குடிக்கும் அட்டைகளும் உண்டு

சமுதாயத்தின் தாழ்வாரத்தில் வாழும் தோழர்களே - நம்
சக்தியை நாமே உணர்ந்துகொண்டாலே உயர்வோம் வாழ்வினிலே

மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று 
மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று

தேயிலையோடு தேயிலையாக தேயுது ஒரு கூட்டம் - நம்
தேவைகள் தம்மை  தியாகம் செய்தும் வாழ்வே போராட்டம்

உரிமைகள் தன்னை கேட்டுப் பெறவே உரத்தக் குரல் வேண்டும் - நம்
உரத்தக் குரலை எதிரொலிக்கவே சங்கம் ஒன்று போதும்

மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று 
மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று

ஈரமில்லா இதயம் கொண்டவர் பேரம் பேசுகிறார் - நம்மை 
ஏமாற்றுவதையே தொழிலாய் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்

காட்டையும் மேட்டையும் கழனிகளாக்கி கவலையை போக்கிடுவோம் = நம்
நாட்டுக்காகவே சேவைகள் செய்து நன்மைகள் பெருக்கிடுவோம் 

மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று 
மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று

 

புதிய காற்று' 1975ம் ஆண்டு வெளியான திரைப்படம், இலங்கை திரை இரசிகர்களை சற்று புருவங்களை உயர்த்தி நோக்கவைத்த திரைப்படம்.
இப்பாடலில் குறிப்பிடுவதைப்போலவே இலங்கை தமிழ் திரையுலகில் பல மாற்றங்களை கொணர்ந்த திரைப்படம் என்றே இதைச்  சொல்லவேண்டும், 
இலங்கை தமிழ் சினிமா வரலாற்றில் வி. பி. கணேசன் எனும் பெயர் மறக்கப்படமுடியாத பெயர்,

தொழிற்சங்க வாதியும் தொழிலதிபருமான வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன் என்ற வி. பி. கணேசன் ஒரு நல்ல சினிமா தயாரிப்பாளராக  பெயர் எடுத்தவர். 
புதிய காற்று இலங்கைத் தமிழ்த்திரைப்படத்துறையில் புதிய திரைப்பட நடிக, நடிகைகள். புதிய பின்னணிப் பாடகர், பாடகிகள், புதிய திரைப்படக் கதை வசனகர்த்தாக்கள் புதிய இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியது.

இப்படத்தில் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் ஆகியோரின் பெயர்கள் பாடல் உருவாக்கத்திலும்  சங்கர் - கணேஷின் பெயர் இசையமைப்பிலும் பேசப்படுகிறது. இத்தகவல்கள் படம் வெளியான நேரத்தில் வெளிப்படவில்லை, இவை படத்தில் ஆரம்ப  தலைப்புகளிலும் இடம்பெறவில்லை.  காரணம் அப்போதிருந்த  அரச கட்டுப்பாடுகளே.  இல்லையெனில் அதையே விளம்பர உத்தியாக கையாண்டிருக்க நிறையவே  வாய்ப்புகள் இருந்திருக்கும்.  தமிழக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த ஒரு இலங்கைத்திரைப்படத்திலும் இந்த பிரச்சனையால் அவரை சென்னையில் இருந்து கோலாலம்பூர்அழைத்து சென்று அங்கிருந்து கொழும்பிற்கு அழைத்து வந்தார்கள் என்றும் சொல்லப்பட்டது. பின்னர் அவரை வசன ஒலிப்பதிவுக்காக இலங்கை அழைத்து வர முடியாமல் அவருக்காய் அறிவுப்பாளரும் நடிகருமான நடராஜசிவம் குரல் கொடுத்தார். 

இப்பாடலை எழுதியவர் கவிஞர் சாது (சாஹுல் ஹமீது) என்று ஒரு பத்திரிகைக்கான கட்டுரையில் இப்படத்தின் நெறியாளர் ராமநாதனுக்கு ஆலோசகராகவும் உதவியாளராகவும் மேலும் தயாரிப்பு நிர்வாகியாக கடமையாற்றிய கொட்டகலை - மு சிவலிங்கம் குறிப்பிட்டு இருந்தார்

இப்பாடலைப் பற்றிய இன்னொரு சுவையான தகவலை, பாடகர்கள் முத்தழகுவும், பாலச்சந்திரன் இருவருமே பகிர்ந்து கொண்டார்கள். கே. எஸ். பாலச்சந்திரன் கலாவதியுடன் புதிய காற்றுக்காய் முதலில் பாடியது, 'ஓ ஓ என் ஆசை ராதா' பாடல். ஆனால் வானொலி மெல்லிசைப்  பாடல்களில் ஏ எம் ராஜாவின் குரல் சாயலில் தன் திறைமையை காட்டிவந்த வி முத்தழகுவின் பாடல்களில் இலயித்துப்போன திருமதி  வி. பி. கணேசன், கணவரிடம் முத்தழகுவிற்கு ஓ ஓ என் ஆசை ராதா பாடலை பாடக்கொடுத்துப் பார்க்கச் சொன்னாராம். எனினும்  வி. பி. கணேசன் பாலச்சந்திரனை கைவிடாமல், படத்தின் முக்கிய, கதாநாயக அறிமுகப் (theme) பாடலாகிய 'உன்னை நம்பி என்னை நம்பி உலகம்  இருக்கிறது' கலாவதியுடன் பாடக் கொடுத்தார்.  கே. எஸ். பாலச்சந்திரன் பின்னர் வி. பி. கணேசனின் முக்கிய  கதாநாயக அறிமுக  பாடகராகிப்போனார்.  கே. எஸ். பாலச்சந்திரன் பாடிய 'நான் உங்கள் தோழன் எந்த நாலுமே நல்ல நண்பன்' மற்றும் 'எல்லாமே பணத்தாலே' போன்ற பாடல்கள்  பிரபல்யமாகியது இதற்குச் சான்று.. 
 
பாடல் இரம்மியமான மலையக சூழலில் படமாகி கண்ணுக்கும், நல்ல பாடல் வரிகளினால் செவிக்கும் விருந்து படைத்தது. துரதிஷ்ட்டவசமாக, இலங்கை தமிழ் படங்களுக்கு நேர்ந்த கதியே புதிய காற்றுக்கும் நேர்ந்து, படப்பிரதிகள் இல்லாமல் ஆவணப்படுத்தப் படாமலேயே போனது பெரும்சோகம்.

 

https://www.youtube.com/watch?v=EqNEeDr4ht8

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள கலைஞர்களால் இயன்றப்பட்ட பாட்டு - குடிப்போம் கொத்தமல்லி

ஆடுபவருக்கு ஒரு ஓ... போடுங்கோ 😂

 

சிங்களத்தில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தரதேவி யாழ்தேவி ஓடுது எங்கள் சீதேவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடுத்துறை மண்ணில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வேம்படி வைரவர் புகழ் கூறும் பாடல் இது 
பாடல் இசை -இசை வேந்தன் .கந்தப்பு ஜெயந்தன் 
பாடல் வரிகள் -சின்னப்பு பாலா (நோர்வே )
பாடல் தயாரிப்பு -S.S.சங்கரப்பிள்ளை குடும்பத்தினர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழையும் முகிலும்.

பாடலை இயற்றி  குரலினிமை சேர்ப்பவர் ஜெயபாரதிதாசன்
இசை இனிமை அப்சராஸ் இரட்டையர்  மோகன் - ரங்கன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘எம்மவர்’ மனோகரன் பாடிய சிறந்த பாடல்களில் மிக முக்கியமான பாடல் என்று இப்பாடலைச் சொல்ல வேண்டும். துரதிர்ஷ்டமாக அவரின் ஏனைய பாடல்களைப் போன்று இது பிரபலமாகப் பேசப்படவில்லை என்பதில் பல மனோ இரசிகர்களுக்கு கவலைதான். இந்த பாடலுக்கு அருமையாக இசையமைத்தவர் ‘எம்மவர்’ விக்டர் இரத்னாயக்க. மனோவும் விக்டரும் “எம்மவர் இசைமழை” பதிவுகளில் ஏலவே பேசப்பட்டு இருக்கிறார்கள். எனவே இப்பாடலின் பெண்குரலான திருமதி கெளரீஸ்வரி இராஜப்பனைப் பற்றி இப்போது பார்க்கலாம். 

கர்னாடக இசைப் பாடகியான கெளரீஸ்வரி கனகரத்தினம் இலங்கைத் தமிழ் திரையுலகின் முதல் பின்னனிப் பாடகிகளில் ஒருவர். தோட்டக்காரி என்னும் திரைப்படத்தில் கெளரீஸ்வரி ஒரு பாடலைப்பாடினார். தோட்டக்காரி, தயாரிப்பில் இரண்டாவது இலங்கை திரைப்படமானாலும் முதலில்  திரையில் காட்சிப்படுத்தப் பட்ட முழு நீள 35 மி.மீ படம் என்று இலங்கை சினிமா பற்றி எழுதும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கெளரீஸ்வரி கனகரத்தினம் மணவாழ்வில் புகைப்பட நிபுணர் திரு இராஜப்பனுடன் இணைந்து கெளரீஸ்வரி இராஜப்பன் ஆனார். 

தென்னக நட்சத்திரங்கள் திரு MG இராமச்சந்திரன் திருமதி சரோஜாதேவி இருவரின் 1965ம் ஆண்டு இலங்கை விஜயம் ஒரு சரித்திரம். அவர்கள் வருகையை முன்னிட்டு சில கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடாகி இருந்தன. இந் நிகழ்வுகளில்   எம்மவர்களான கெளரீஸ்வரி இராஜப்பன், MA குலசீலநாதன் ஆகியோரின் பாடல்களும் இடம்பெற்றன. எம்மவர்கள் கண்ணன்-நேசன் இரட்டையரில் ஒருவரான நேசதுரை தியாகராசா சிறுவனாக மிருதங்கத்துடன் அரங்கேறினார். பின்னாளில் அவர் drums கலைஞராக இலங்கை மேடைகளை கலக்கியது துள்ளிசை இரசிகர்கள் அறிந்தது. 

கெளரீஸ்வரி, இலங்கை வானொலியில் "மெல்லிசை" அறிமுகமாகிய போது மெல்லிசைப் பாடகியாகவும் பங்களித்தார். விக்டரின் இசையில் அவர் மனோகரனுடன் இரு இனிமையான பாடல்களைப் பாடினார். இருவரும் கைதேர்ந்த பின்னனிப் பாடகர்களைப்போன்று இந்த இரு பாடல்களையும் பாடினார்கள். இந்த முயற்சிகள் தொடராமல் போனதும் எம் துரதிர்ஷ்டமே. கெளரீஸ்வரி தனியாகவும்  பல மெல்லிசைப் பாடல்களை பாடினார். சங்கீத சபை என்னும் இசைகல்லூரியை உருவாக்கி ஆரம்பமுதல் இசை ஆசிரியையாக தொடர்ந்த கெளரீஸ்வரி பல இசை கலைஞர்கள் உருவாவதில் பங்களிப்பு செய்தார். இவர் சகோதரி ‘எம்மவர்’ பத்மினி கனகரத்தினம், “பொப்பிசைப் புயல்” நிகழ்வில் ‘காதோடுதான் நான் பாடுவேன்’ பாடலுடன் மேடையேறியதும் நினைவு. இசைக்குயில், இன்னிசைவாணி, பாசுரப் பாமணிப் பட்டங்கள் கெளரீஸ்வரிக்கு சொந்தமானவை. இன்று இசைக்கல்லூரிக்கு இயன்ற ஆலோசனைகளுடன் இசையுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். 

இ.ஒ.கூ. துள்ளிசை மெல்லிசை பரீட்சார்த்த முயற்சிகளில் தன் பங்களிப்பை அதிகமாகவே வழங்கிய குமார் கனகரத்தினம் கெளரீஸ்வரியின் சகோதரர். இ.ஒ.கூ.வில் குமார் – ஹமீது – இராமச்சந்திரன் – டேவிட் போன்ற அக்கால இளையதலைமுறையின் பரீட்சார்த்த பாடல் உருவாக்கங்களுக்கான பங்களிப்புகள் அளப்பரியவை. இப்பாடல் உருவாக்கத்திலும் குமார் கனகரத்தினம் - அப்துல் ஹமீது பங்கு புறந்தள்ள முடியாதது. அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் குமார் கனகரத்தினம், கலிபோர்னியாவில் லிவர்மோர் (Livermore) நகரில் சிவா - விஷ்னு ஆலய தொண்டில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ஆலய அரங்கத்தில் மேடையேறும் உள்ளூர் வெளியூர் கலைஞர்களின் இசை, நாட்டிய நிகழ்வுகளுக்கு தொழிநுட்ப திறமையாலும் கைவண்ணத்தாலும் தனது பங்களிப்பை வழங்கிவருகிறார். ஆலய வழிநடத்தல் குழு உறுப்பினராகவும் இருந்து சேவை செய்கிறார். 

Video credits to original artists of album Pranayam Vithumbunnu - Entho Mozhiyuvaan and artist - Vidhu Pratap Thanks

வானகம் சூழ்ந்திடும் காரிருள் வாழ்வில் 
வளர்மதியான என் உயிரே
வளர்மதியாகவே வாழ்ந்திட துடித்தேன் 
தளர்ந்திடும் காதலில் தேய்மதியானேன்

ஆழ்கடல் நீல நிறமது எடுத்தேன் 
அன்னத்தின் உருவை அமைத்திடத் துடித்தேன்
வாழ்வது போனால் ஆழ்கடல் திண்ணம்  
அழிந்திடும் என் உயிர் வாழ்வின் வண்ணம்

ஆயிரம் ஆசை என் இதயத்தின் சொல்லை   
அறிந்திட உன் எழில் என் இசையில்லை
ஆயிரம் ஆசைகள் என்னிடம் இல்லை 
அன்பனின் ஒசையே என் மன எல்லை

பாடல் - வானகம் சூழ்ந்திடும் காரிருள் வாழ்வில் 
இரு குரலிசையில் இணையும் = A. E. மனோகரன் & கௌரீஸ்வரி இராஜப்பன் 
இயற்றியவர் - A. E. மனோகரன் 
இசை - விக்டர் இரத்னாயக்க 

Song - Vaanakam Soolndhidum 
Duet By - A.E. Manoharan & Gowreeswari Rajappan 
Lyrics - A.E. Manoharan 
Music - Victor Ratnayake 

 

https://www.youtube.com/watch?v=Qaa19pwJzDY

Link to comment
Share on other sites

8 hours ago, உடையார் said:

‘எம்மவர்’ மனோகரன் பாடிய சிறந்த பாடல்களில் மிக முக்கியமான பாடல் என்று இப்பாடலைச் சொல்ல வேண்டும். துரதிர்ஷ்டமாக அவரின் ஏனைய பாடல்களைப் போன்று இது பிரபலமாகப் பேசப்படவில்லை என்பதில் பல மனோ இரசிகர்களுக்கு கவலைதான். இந்த பாடலுக்கு அருமையாக இசையமைத்தவர் ‘எம்மவர்’ விக்டர் இரத்னாயக்க. மனோவும் விக்டரும் “எம்மவர் இசைமழை” பதிவுகளில் ஏலவே பேசப்பட்டு இருக்கிறார்கள். எனவே இப்பாடலின் பெண்குரலான திருமதி கெளரீஸ்வரி இராஜப்பனைப் பற்றி இப்போது பார்க்கலாம். 

கர்னாடக இசைப் பாடகியான கெளரீஸ்வரி கனகரத்தினம் இலங்கைத் தமிழ் திரையுலகின் முதல் பின்னனிப் பாடகிகளில் ஒருவர். தோட்டக்காரி என்னும் திரைப்படத்தில் கெளரீஸ்வரி ஒரு பாடலைப்பாடினார். தோட்டக்காரி, தயாரிப்பில் இரண்டாவது இலங்கை திரைப்படமானாலும் முதலில்  திரையில் காட்சிப்படுத்தப் பட்ட முழு நீள 35 மி.மீ படம் என்று இலங்கை சினிமா பற்றி எழுதும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கெளரீஸ்வரி கனகரத்தினம் மணவாழ்வில் புகைப்பட நிபுணர் திரு இராஜப்பனுடன் இணைந்து கெளரீஸ்வரி இராஜப்பன் ஆனார். 

தென்னக நட்சத்திரங்கள் திரு MG இராமச்சந்திரன் திருமதி சரோஜாதேவி இருவரின் 1965ம் ஆண்டு இலங்கை விஜயம் ஒரு சரித்திரம். அவர்கள் வருகையை முன்னிட்டு சில கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடாகி இருந்தன. இந் நிகழ்வுகளில்   எம்மவர்களான கெளரீஸ்வரி இராஜப்பன், MA குலசீலநாதன் ஆகியோரின் பாடல்களும் இடம்பெற்றன. எம்மவர்கள் கண்ணன்-நேசன் இரட்டையரில் ஒருவரான நேசதுரை தியாகராசா சிறுவனாக மிருதங்கத்துடன் அரங்கேறினார். பின்னாளில் அவர் drums கலைஞராக இலங்கை மேடைகளை கலக்கியது துள்ளிசை இரசிகர்கள் அறிந்தது. 

கெளரீஸ்வரி, இலங்கை வானொலியில் "மெல்லிசை" அறிமுகமாகிய போது மெல்லிசைப் பாடகியாகவும் பங்களித்தார். விக்டரின் இசையில் அவர் மனோகரனுடன் இரு இனிமையான பாடல்களைப் பாடினார். இருவரும் கைதேர்ந்த பின்னனிப் பாடகர்களைப்போன்று இந்த இரு பாடல்களையும் பாடினார்கள். இந்த முயற்சிகள் தொடராமல் போனதும் எம் துரதிர்ஷ்டமே. கெளரீஸ்வரி தனியாகவும்  பல மெல்லிசைப் பாடல்களை பாடினார். சங்கீத சபை என்னும் இசைகல்லூரியை உருவாக்கி ஆரம்பமுதல் இசை ஆசிரியையாக தொடர்ந்த கெளரீஸ்வரி பல இசை கலைஞர்கள் உருவாவதில் பங்களிப்பு செய்தார். இவர் சகோதரி ‘எம்மவர்’ பத்மினி கனகரத்தினம், “பொப்பிசைப் புயல்” நிகழ்வில் ‘காதோடுதான் நான் பாடுவேன்’ பாடலுடன் மேடையேறியதும் நினைவு. இசைக்குயில், இன்னிசைவாணி, பாசுரப் பாமணிப் பட்டங்கள் கெளரீஸ்வரிக்கு சொந்தமானவை. இன்று இசைக்கல்லூரிக்கு இயன்ற ஆலோசனைகளுடன் இசையுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். 

இ.ஒ.கூ. துள்ளிசை மெல்லிசை பரீட்சார்த்த முயற்சிகளில் தன் பங்களிப்பை அதிகமாகவே வழங்கிய குமார் கனகரத்தினம் கெளரீஸ்வரியின் சகோதரர். இ.ஒ.கூ.வில் குமார் – ஹமீது – இராமச்சந்திரன் – டேவிட் போன்ற அக்கால இளையதலைமுறையின் பரீட்சார்த்த பாடல் உருவாக்கங்களுக்கான பங்களிப்புகள் அளப்பரியவை. இப்பாடல் உருவாக்கத்திலும் குமார் கனகரத்தினம் - அப்துல் ஹமீது பங்கு புறந்தள்ள முடியாதது. அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் குமார் கனகரத்தினம், கலிபோர்னியாவில் லிவர்மோர் (Livermore) நகரில் சிவா - விஷ்னு ஆலய தொண்டில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ஆலய அரங்கத்தில் மேடையேறும் உள்ளூர் வெளியூர் கலைஞர்களின் இசை, நாட்டிய நிகழ்வுகளுக்கு தொழிநுட்ப திறமையாலும் கைவண்ணத்தாலும் தனது பங்களிப்பை வழங்கிவருகிறார். ஆலய வழிநடத்தல் குழு உறுப்பினராகவும் இருந்து சேவை செய்கிறார். 

Video credits to original artists of album Pranayam Vithumbunnu - Entho Mozhiyuvaan and artist - Vidhu Pratap Thanks

வானகம் சூழ்ந்திடும் காரிருள் வாழ்வில் 
வளர்மதியான என் உயிரே
வளர்மதியாகவே வாழ்ந்திட துடித்தேன் 
தளர்ந்திடும் காதலில் தேய்மதியானேன்

ஆழ்கடல் நீல நிறமது எடுத்தேன் 
அன்னத்தின் உருவை அமைத்திடத் துடித்தேன்
வாழ்வது போனால் ஆழ்கடல் திண்ணம்  
அழிந்திடும் என் உயிர் வாழ்வின் வண்ணம்

ஆயிரம் ஆசை என் இதயத்தின் சொல்லை   
அறிந்திட உன் எழில் என் இசையில்லை
ஆயிரம் ஆசைகள் என்னிடம் இல்லை 
அன்பனின் ஒசையே என் மன எல்லை

பாடல் - வானகம் சூழ்ந்திடும் காரிருள் வாழ்வில் 
இரு குரலிசையில் இணையும் = A. E. மனோகரன் & கௌரீஸ்வரி இராஜப்பன் 
இயற்றியவர் - A. E. மனோகரன் 
இசை - விக்டர் இரத்னாயக்க 

Song - Vaanakam Soolndhidum 
Duet By - A.E. Manoharan & Gowreeswari Rajappan 
Lyrics - A.E. Manoharan 
Music - Victor Ratnayake 

 

https://www.youtube.com/watch?v=Qaa19pwJzDY

பதிவிற்கு நன்றி உடையார்.இந்தப் பாடலை நான் கேட்டிருக்கிறேன். கெளரீஸ்வரி ராஜப்பன் அவர்களுடைய இனிமையான குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
80களில் எம்மவர் மெல்லிசைப் பாடல்கள் - காதல் காவியம் பாடிடும் நேரம்

இனிய இருகுரலிசையாய் சிவகுமார் - நிலாமதி

பாடல் - ஜெகதீசன்

இசையமைப்பு - நீதிராஜசர்மா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கங்கையாளே இசைத்தட்டு - பாடல் 04


ஈழத்துப்பாடல் பிரியர்களால் விரும்பி கேட்கப்பட்டு, இ.ஒ.கூ. வெளியிட்ட “கங்கையாளே” இசைத்தட்டில் இடம்பெற்ற சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. 

பாடலைப் பாடிய திலகநாயகம் போல் பிரபல கர்னாடக மெல்லிசைப் பாடகர்.  சிறப்பான கவிதை வரிகளுக்கு
உரிமையாளர் சிதம்பரபத்தினி என்னும் புனைப்பெயரில் தன் ஆக்கங்களை வடித்த சிறுகதை எழுத்தாளரும் இலக்கிய ஆர்வலருமான பத்தினியம்மா. இசையமைப்பு ஆர். முத்துசாமி, இவர் பற்றிய மேலும் எழுதுவது இப்பத்தியில் அவசியமற்றது. 

மெல்லிசைப் பாடல்கள் அநேகமாக மெட்டுக்கு எழுதப்பட்டவையல்ல, எழுதப்பட்ட பாடல்களுக்கே இசையமைக்கப்பட்டன. இப்பாடலின் வெற்றிக்கு ஒரு காரணம் முத்துசாமி மாஸ்டரின் ஆளுமையே. “எம்மவர்”களான இம்மூவருமே இப்போது எம்மிடையே இல்லை என்பது மனதை வருடும் விடயம்.


இதயத்தில் இனிமையை உணரவிட்டு அங்கு
இன்பமும் துன்பமும் ஏன் கொடுத்தாய் 
மனதினில் அன்பினை வளரவிட்டு பின்பு
உறவையும் பிரிவையும் ஏன் கொடுத்தாய்

மலரினை மனமுடன் மலரவிட்டு அங்கு 
மதுவையும் முள்ளையும் ஏன் கொடுத்தாய்
மனிதனை உயிருடன் வாழவிட்டு பின்பு
வாழ்வையும் தாழ்வையும் ஏன் கொடுத்தாய்

சிந்தையில் நினைவினை வளரவிட்டு அங்கு
கனவையும் நனவையும் ஏன் கொடுத்தாய்
பந்தத்தில் மனிதனை பழகவிட்டு பின்பு
பாசமும் தோசமும் ஏன் கொடுத்தாய்

பகுத்திட அறிவினை வழங்கிவிட்டு அங்கு
நட்பையும் பகையையும் ஏன் கொடுத்தாய்
மதித்திட  உணர்வினை கொடுத்துவிட்டு பின்பு
நன்மையும் தீமையும் ஏன் கொடுத்தாய்


பாடியவர்   எல். திலகநாயகம்போல்
கற்பனை  பத்தினியம்மா
இசை   ஆர். முத்துசாமி 

Song   Ithayathil inimaiyai - Agony and Ecstasy
Sung By   L. Thilaganayagam Paul
Lyrics   Pathiniamma
Music   R. Muthusamy Master

 

 

Just now, உடையார் said:

பாடலைப் பாடிய திலகநாயகம் போல் பிரபல கர்னாடக மெல்லிசைப் பாடகர்.  சிறப்பான கவிதை வரிகளுக்கு


பாடியவர்   எல். திலகநாயகம்போல்
கற்பனை  பத்தினியம்மா
இசை   ஆர். முத்துசாமி 

Song   Ithayathil inimaiyai - Agony and Ecstasy
Sung By   L. Thilaganayagam Paul
Lyrics   Pathiniamma
Music   R. Muthusamy Master

 

மனைவியின் குரு இவர்தான் சிறுவயதில் இருந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கக்குரலினிமையுடன் காதலின் ஊர்வலத்தில் எம்மை அழைத்து செல்பவர்கள் ‘எம்மவர்’ இசை  ஜோடிகளான முத்தழகுவும் சுஜாதாவும். பாடல் இடம்பெற்ற படம் வி.பி. கணேசனின்  ‘நான் உங்கள் தோழன்’.  தென்னக எம்.ஜி.ஆர் போல் எம்மவர் கணேஷும்  (( விபி கணேசனின் முதல் திரைப்படம் ‘புதிய காற்று’ விளம்பரங்களில் BH அப்துல் ஹமீது விபி கணேசனை “உங்கள் அபிமானத்துக்குரிய கணேஷ்” என்று குறிப்பிட்டு கதாநாயக  அறிமுகம் செய்ததை அக்கால இலங்கைத் திரைப்பட இரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்))  தன் படப் பாடல்களின் தரத்தில் மிகுந்த அக்கரை செலுத்தியவர். அவ்வாறே இப்பாடலும்  பிரபலமானது. எம்.கே. ரொக்சாமி இசையமைத்த திரையிசைப்பாடல்களில் சிறப்பான பாடல் என்பது எங்கள் எண்ணம்.  

சிறந்த ஒலி நயத்துடன் இப்பாடலை தரவேற்றம் செய்ய பாடலின் மூலப்பிரதியை தந்துதவிய அண்ணன் முத்தழகுவிற்கு எங்கள் சிரம்தாழ்த்திய நன்றிகள்.

படம் – நான் உங்கள் தோழன்  06th Jan 1978

பாடல் – காதலின் ஊர்வலம் கண்ணிலே தோன்றுதே

பாடியவர்கள் – வி.முத்தழகு & சுஜாதா

இயற்றியவர் – முருகவேள் காந்தி

இசையமைப்பு – எம்.கே. ரொக்சாமி
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துப் பொப்பிசைப் பாடல்: 'மால்மருகா பாடியவர்: ஜேம்ஸ் ராச்

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 38 ஆவது ஆண்டு பொங்கல் விழா நிகழ்வில் (15.01.2017) ஈழத்துப் பொப்பிசைப் பாடல்: 'மால்மருகா ...' பாடியவர்: ஜேம்ஸ் ராச்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமாளிகை ரோஜா மணம் வீசுது இலேசா

“உனக்குத் தெரியுமா” பாடலுக்கு பின் ‘எம்மவர்’ பரமேஷ் இசையமைத்துப் பாடிய ஒரு சிறந்த பாடலாக இப்பாடலைக் கொள்ளலாம். 
தன் காதல் மனைவி மாலினியை பரமேஷ் இலங்கைத் திருநாட்டின் சிறப்பினைக் கொண்டு வர்ணித்து இருப்பாரோ ‘உனக்கு தெரியுமாவில்’ தன் காதலி மாலினிக்கு செய்தி சொன்னது போல்????

மனமாளிகை ரோஜா மணம் வீசுது இலேசா

இயற்றி 

இசையமைத்து

குரல் கொடுப்பது

MP பரமேஷ்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.. ஐ.. யோ... அவள் வேண்டாம் மனைவி வேண்டாம் தனிமை போதும்😂🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் – குண்டுமணி தோட்டத்திலே

பாடியவர் – A.E. மனோகரன்

இசை - சரத் டீ அல்விஸ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரயில் ஓடுது யாழ் இரயில் ஓடுது

இரயில் ஓடுது யாழ் இரயில் ஓடுது

பாடல் வரிகள் - இராசய்யா
 
இசையமைப்பு - கண்ணன் & நேசம்

குரல் இனிமை - அமுதன் அண்ணாமலை 

பாடல் ஓலிப்பதிவு - இ.ஓ.ப.கூ-1970

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.