Jump to content

தமிழீழ கலைஞர்களின் படைப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் யாழின் நரம்பிழுத்தே  எந்த 
நாளும் உருகி பண்ணிசைத்தே 
மெல்லவே தோகை விரித்தாடும் எழில் 
மயிலினைப் போலவே நீ ஆடு  

நீலக்குறிஞ்சி மலர் எடுத்தே எழில் 
நீல மலர் ஆரம் நீ தொடுத்தே 
கோலக்கலைமகள் அன்னையவள் வரிக்
கோலக் கழுத்தினில் நீ அணிவாய்

வண்ணக் கலைத்தேவி கோவிலிலே என்றும்
வாசப்புகை சேலை நீ இடுவாய் 
மண்ணக மாந்தர்கள் கூடுமிடம் அதில் 
மாமணி தீபங்கள் ஏற்றிடுவாய் 
 

 

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வடை வடையென விற்றுவந்தால் வாயாடி கிழவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மால் மருகா எழில் வேல் முருகா

யாழ்பாணம் என்று சொன்னால் தேன் சுவையூறும் 

ஆய் கூய் எலிகள் பட்டாலம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருமி மேளம் கொட்டு மச்சான் உல்லாசமாய் ஆடு மச்சான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தே. பிரியனின் வரிகளில் தாரகையே பாட்டு 34நிமிடத்தில் இருந்து....  இயற்கை காட்சியுடன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நம்பி என்னை நம்பி உலகம்  இருக்கிறது - இந்த 
உழைக்கிற கைகளை நம்பித்தானே பொழுதே விடிகிறது 

இரத்த துளிகளை வியர்வையாக்கி உழைப்போர் பலருண்டு
இந்த உத்தமர் தேகம் உதிரம் குடிக்கும் அட்டைகளும் உண்டு

சமுதாயத்தின் தாழ்வாரத்தில் வாழும் தோழர்களே - நம்
சக்தியை நாமே உணர்ந்துகொண்டாலே உயர்வோம் வாழ்வினிலே

மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று 
மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று

தேயிலையோடு தேயிலையாக தேயுது ஒரு கூட்டம் - நம்
தேவைகள் தம்மை  தியாகம் செய்தும் வாழ்வே போராட்டம்

உரிமைகள் தன்னை கேட்டுப் பெறவே உரத்தக் குரல் வேண்டும் - நம்
உரத்தக் குரலை எதிரொலிக்கவே சங்கம் ஒன்று போதும்

மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று 
மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று

ஈரமில்லா இதயம் கொண்டவர் பேரம் பேசுகிறார் - நம்மை 
ஏமாற்றுவதையே தொழிலாய் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்

காட்டையும் மேட்டையும் கழனிகளாக்கி கவலையை போக்கிடுவோம் = நம்
நாட்டுக்காகவே சேவைகள் செய்து நன்மைகள் பெருக்கிடுவோம் 

மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று 
மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று

 

புதிய காற்று' 1975ம் ஆண்டு வெளியான திரைப்படம், இலங்கை திரை இரசிகர்களை சற்று புருவங்களை உயர்த்தி நோக்கவைத்த திரைப்படம்.
இப்பாடலில் குறிப்பிடுவதைப்போலவே இலங்கை தமிழ் திரையுலகில் பல மாற்றங்களை கொணர்ந்த திரைப்படம் என்றே இதைச்  சொல்லவேண்டும், 
இலங்கை தமிழ் சினிமா வரலாற்றில் வி. பி. கணேசன் எனும் பெயர் மறக்கப்படமுடியாத பெயர்,

தொழிற்சங்க வாதியும் தொழிலதிபருமான வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன் என்ற வி. பி. கணேசன் ஒரு நல்ல சினிமா தயாரிப்பாளராக  பெயர் எடுத்தவர். 
புதிய காற்று இலங்கைத் தமிழ்த்திரைப்படத்துறையில் புதிய திரைப்பட நடிக, நடிகைகள். புதிய பின்னணிப் பாடகர், பாடகிகள், புதிய திரைப்படக் கதை வசனகர்த்தாக்கள் புதிய இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியது.

இப்படத்தில் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் ஆகியோரின் பெயர்கள் பாடல் உருவாக்கத்திலும்  சங்கர் - கணேஷின் பெயர் இசையமைப்பிலும் பேசப்படுகிறது. இத்தகவல்கள் படம் வெளியான நேரத்தில் வெளிப்படவில்லை, இவை படத்தில் ஆரம்ப  தலைப்புகளிலும் இடம்பெறவில்லை.  காரணம் அப்போதிருந்த  அரச கட்டுப்பாடுகளே.  இல்லையெனில் அதையே விளம்பர உத்தியாக கையாண்டிருக்க நிறையவே  வாய்ப்புகள் இருந்திருக்கும்.  தமிழக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த ஒரு இலங்கைத்திரைப்படத்திலும் இந்த பிரச்சனையால் அவரை சென்னையில் இருந்து கோலாலம்பூர்அழைத்து சென்று அங்கிருந்து கொழும்பிற்கு அழைத்து வந்தார்கள் என்றும் சொல்லப்பட்டது. பின்னர் அவரை வசன ஒலிப்பதிவுக்காக இலங்கை அழைத்து வர முடியாமல் அவருக்காய் அறிவுப்பாளரும் நடிகருமான நடராஜசிவம் குரல் கொடுத்தார். 

இப்பாடலை எழுதியவர் கவிஞர் சாது (சாஹுல் ஹமீது) என்று ஒரு பத்திரிகைக்கான கட்டுரையில் இப்படத்தின் நெறியாளர் ராமநாதனுக்கு ஆலோசகராகவும் உதவியாளராகவும் மேலும் தயாரிப்பு நிர்வாகியாக கடமையாற்றிய கொட்டகலை - மு சிவலிங்கம் குறிப்பிட்டு இருந்தார்

இப்பாடலைப் பற்றிய இன்னொரு சுவையான தகவலை, பாடகர்கள் முத்தழகுவும், பாலச்சந்திரன் இருவருமே பகிர்ந்து கொண்டார்கள். கே. எஸ். பாலச்சந்திரன் கலாவதியுடன் புதிய காற்றுக்காய் முதலில் பாடியது, 'ஓ ஓ என் ஆசை ராதா' பாடல். ஆனால் வானொலி மெல்லிசைப்  பாடல்களில் ஏ எம் ராஜாவின் குரல் சாயலில் தன் திறைமையை காட்டிவந்த வி முத்தழகுவின் பாடல்களில் இலயித்துப்போன திருமதி  வி. பி. கணேசன், கணவரிடம் முத்தழகுவிற்கு ஓ ஓ என் ஆசை ராதா பாடலை பாடக்கொடுத்துப் பார்க்கச் சொன்னாராம். எனினும்  வி. பி. கணேசன் பாலச்சந்திரனை கைவிடாமல், படத்தின் முக்கிய, கதாநாயக அறிமுகப் (theme) பாடலாகிய 'உன்னை நம்பி என்னை நம்பி உலகம்  இருக்கிறது' கலாவதியுடன் பாடக் கொடுத்தார்.  கே. எஸ். பாலச்சந்திரன் பின்னர் வி. பி. கணேசனின் முக்கிய  கதாநாயக அறிமுக  பாடகராகிப்போனார்.  கே. எஸ். பாலச்சந்திரன் பாடிய 'நான் உங்கள் தோழன் எந்த நாலுமே நல்ல நண்பன்' மற்றும் 'எல்லாமே பணத்தாலே' போன்ற பாடல்கள்  பிரபல்யமாகியது இதற்குச் சான்று.. 
 
பாடல் இரம்மியமான மலையக சூழலில் படமாகி கண்ணுக்கும், நல்ல பாடல் வரிகளினால் செவிக்கும் விருந்து படைத்தது. துரதிஷ்ட்டவசமாக, இலங்கை தமிழ் படங்களுக்கு நேர்ந்த கதியே புதிய காற்றுக்கும் நேர்ந்து, படப்பிரதிகள் இல்லாமல் ஆவணப்படுத்தப் படாமலேயே போனது பெரும்சோகம்.

 

https://www.youtube.com/watch?v=EqNEeDr4ht8

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள கலைஞர்களால் இயன்றப்பட்ட பாட்டு - குடிப்போம் கொத்தமல்லி

ஆடுபவருக்கு ஒரு ஓ... போடுங்கோ 😂

 

சிங்களத்தில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தரதேவி யாழ்தேவி ஓடுது எங்கள் சீதேவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடுத்துறை மண்ணில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வேம்படி வைரவர் புகழ் கூறும் பாடல் இது 
பாடல் இசை -இசை வேந்தன் .கந்தப்பு ஜெயந்தன் 
பாடல் வரிகள் -சின்னப்பு பாலா (நோர்வே )
பாடல் தயாரிப்பு -S.S.சங்கரப்பிள்ளை குடும்பத்தினர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழையும் முகிலும்.

பாடலை இயற்றி  குரலினிமை சேர்ப்பவர் ஜெயபாரதிதாசன்
இசை இனிமை அப்சராஸ் இரட்டையர்  மோகன் - ரங்கன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘எம்மவர்’ மனோகரன் பாடிய சிறந்த பாடல்களில் மிக முக்கியமான பாடல் என்று இப்பாடலைச் சொல்ல வேண்டும். துரதிர்ஷ்டமாக அவரின் ஏனைய பாடல்களைப் போன்று இது பிரபலமாகப் பேசப்படவில்லை என்பதில் பல மனோ இரசிகர்களுக்கு கவலைதான். இந்த பாடலுக்கு அருமையாக இசையமைத்தவர் ‘எம்மவர்’ விக்டர் இரத்னாயக்க. மனோவும் விக்டரும் “எம்மவர் இசைமழை” பதிவுகளில் ஏலவே பேசப்பட்டு இருக்கிறார்கள். எனவே இப்பாடலின் பெண்குரலான திருமதி கெளரீஸ்வரி இராஜப்பனைப் பற்றி இப்போது பார்க்கலாம். 

கர்னாடக இசைப் பாடகியான கெளரீஸ்வரி கனகரத்தினம் இலங்கைத் தமிழ் திரையுலகின் முதல் பின்னனிப் பாடகிகளில் ஒருவர். தோட்டக்காரி என்னும் திரைப்படத்தில் கெளரீஸ்வரி ஒரு பாடலைப்பாடினார். தோட்டக்காரி, தயாரிப்பில் இரண்டாவது இலங்கை திரைப்படமானாலும் முதலில்  திரையில் காட்சிப்படுத்தப் பட்ட முழு நீள 35 மி.மீ படம் என்று இலங்கை சினிமா பற்றி எழுதும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கெளரீஸ்வரி கனகரத்தினம் மணவாழ்வில் புகைப்பட நிபுணர் திரு இராஜப்பனுடன் இணைந்து கெளரீஸ்வரி இராஜப்பன் ஆனார். 

தென்னக நட்சத்திரங்கள் திரு MG இராமச்சந்திரன் திருமதி சரோஜாதேவி இருவரின் 1965ம் ஆண்டு இலங்கை விஜயம் ஒரு சரித்திரம். அவர்கள் வருகையை முன்னிட்டு சில கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடாகி இருந்தன. இந் நிகழ்வுகளில்   எம்மவர்களான கெளரீஸ்வரி இராஜப்பன், MA குலசீலநாதன் ஆகியோரின் பாடல்களும் இடம்பெற்றன. எம்மவர்கள் கண்ணன்-நேசன் இரட்டையரில் ஒருவரான நேசதுரை தியாகராசா சிறுவனாக மிருதங்கத்துடன் அரங்கேறினார். பின்னாளில் அவர் drums கலைஞராக இலங்கை மேடைகளை கலக்கியது துள்ளிசை இரசிகர்கள் அறிந்தது. 

கெளரீஸ்வரி, இலங்கை வானொலியில் "மெல்லிசை" அறிமுகமாகிய போது மெல்லிசைப் பாடகியாகவும் பங்களித்தார். விக்டரின் இசையில் அவர் மனோகரனுடன் இரு இனிமையான பாடல்களைப் பாடினார். இருவரும் கைதேர்ந்த பின்னனிப் பாடகர்களைப்போன்று இந்த இரு பாடல்களையும் பாடினார்கள். இந்த முயற்சிகள் தொடராமல் போனதும் எம் துரதிர்ஷ்டமே. கெளரீஸ்வரி தனியாகவும்  பல மெல்லிசைப் பாடல்களை பாடினார். சங்கீத சபை என்னும் இசைகல்லூரியை உருவாக்கி ஆரம்பமுதல் இசை ஆசிரியையாக தொடர்ந்த கெளரீஸ்வரி பல இசை கலைஞர்கள் உருவாவதில் பங்களிப்பு செய்தார். இவர் சகோதரி ‘எம்மவர்’ பத்மினி கனகரத்தினம், “பொப்பிசைப் புயல்” நிகழ்வில் ‘காதோடுதான் நான் பாடுவேன்’ பாடலுடன் மேடையேறியதும் நினைவு. இசைக்குயில், இன்னிசைவாணி, பாசுரப் பாமணிப் பட்டங்கள் கெளரீஸ்வரிக்கு சொந்தமானவை. இன்று இசைக்கல்லூரிக்கு இயன்ற ஆலோசனைகளுடன் இசையுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். 

இ.ஒ.கூ. துள்ளிசை மெல்லிசை பரீட்சார்த்த முயற்சிகளில் தன் பங்களிப்பை அதிகமாகவே வழங்கிய குமார் கனகரத்தினம் கெளரீஸ்வரியின் சகோதரர். இ.ஒ.கூ.வில் குமார் – ஹமீது – இராமச்சந்திரன் – டேவிட் போன்ற அக்கால இளையதலைமுறையின் பரீட்சார்த்த பாடல் உருவாக்கங்களுக்கான பங்களிப்புகள் அளப்பரியவை. இப்பாடல் உருவாக்கத்திலும் குமார் கனகரத்தினம் - அப்துல் ஹமீது பங்கு புறந்தள்ள முடியாதது. அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் குமார் கனகரத்தினம், கலிபோர்னியாவில் லிவர்மோர் (Livermore) நகரில் சிவா - விஷ்னு ஆலய தொண்டில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ஆலய அரங்கத்தில் மேடையேறும் உள்ளூர் வெளியூர் கலைஞர்களின் இசை, நாட்டிய நிகழ்வுகளுக்கு தொழிநுட்ப திறமையாலும் கைவண்ணத்தாலும் தனது பங்களிப்பை வழங்கிவருகிறார். ஆலய வழிநடத்தல் குழு உறுப்பினராகவும் இருந்து சேவை செய்கிறார். 

Video credits to original artists of album Pranayam Vithumbunnu - Entho Mozhiyuvaan and artist - Vidhu Pratap Thanks

வானகம் சூழ்ந்திடும் காரிருள் வாழ்வில் 
வளர்மதியான என் உயிரே
வளர்மதியாகவே வாழ்ந்திட துடித்தேன் 
தளர்ந்திடும் காதலில் தேய்மதியானேன்

ஆழ்கடல் நீல நிறமது எடுத்தேன் 
அன்னத்தின் உருவை அமைத்திடத் துடித்தேன்
வாழ்வது போனால் ஆழ்கடல் திண்ணம்  
அழிந்திடும் என் உயிர் வாழ்வின் வண்ணம்

ஆயிரம் ஆசை என் இதயத்தின் சொல்லை   
அறிந்திட உன் எழில் என் இசையில்லை
ஆயிரம் ஆசைகள் என்னிடம் இல்லை 
அன்பனின் ஒசையே என் மன எல்லை

பாடல் - வானகம் சூழ்ந்திடும் காரிருள் வாழ்வில் 
இரு குரலிசையில் இணையும் = A. E. மனோகரன் & கௌரீஸ்வரி இராஜப்பன் 
இயற்றியவர் - A. E. மனோகரன் 
இசை - விக்டர் இரத்னாயக்க 

Song - Vaanakam Soolndhidum 
Duet By - A.E. Manoharan & Gowreeswari Rajappan 
Lyrics - A.E. Manoharan 
Music - Victor Ratnayake 

 

https://www.youtube.com/watch?v=Qaa19pwJzDY

Link to comment
Share on other sites

8 hours ago, உடையார் said:

‘எம்மவர்’ மனோகரன் பாடிய சிறந்த பாடல்களில் மிக முக்கியமான பாடல் என்று இப்பாடலைச் சொல்ல வேண்டும். துரதிர்ஷ்டமாக அவரின் ஏனைய பாடல்களைப் போன்று இது பிரபலமாகப் பேசப்படவில்லை என்பதில் பல மனோ இரசிகர்களுக்கு கவலைதான். இந்த பாடலுக்கு அருமையாக இசையமைத்தவர் ‘எம்மவர்’ விக்டர் இரத்னாயக்க. மனோவும் விக்டரும் “எம்மவர் இசைமழை” பதிவுகளில் ஏலவே பேசப்பட்டு இருக்கிறார்கள். எனவே இப்பாடலின் பெண்குரலான திருமதி கெளரீஸ்வரி இராஜப்பனைப் பற்றி இப்போது பார்க்கலாம். 

கர்னாடக இசைப் பாடகியான கெளரீஸ்வரி கனகரத்தினம் இலங்கைத் தமிழ் திரையுலகின் முதல் பின்னனிப் பாடகிகளில் ஒருவர். தோட்டக்காரி என்னும் திரைப்படத்தில் கெளரீஸ்வரி ஒரு பாடலைப்பாடினார். தோட்டக்காரி, தயாரிப்பில் இரண்டாவது இலங்கை திரைப்படமானாலும் முதலில்  திரையில் காட்சிப்படுத்தப் பட்ட முழு நீள 35 மி.மீ படம் என்று இலங்கை சினிமா பற்றி எழுதும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கெளரீஸ்வரி கனகரத்தினம் மணவாழ்வில் புகைப்பட நிபுணர் திரு இராஜப்பனுடன் இணைந்து கெளரீஸ்வரி இராஜப்பன் ஆனார். 

தென்னக நட்சத்திரங்கள் திரு MG இராமச்சந்திரன் திருமதி சரோஜாதேவி இருவரின் 1965ம் ஆண்டு இலங்கை விஜயம் ஒரு சரித்திரம். அவர்கள் வருகையை முன்னிட்டு சில கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடாகி இருந்தன. இந் நிகழ்வுகளில்   எம்மவர்களான கெளரீஸ்வரி இராஜப்பன், MA குலசீலநாதன் ஆகியோரின் பாடல்களும் இடம்பெற்றன. எம்மவர்கள் கண்ணன்-நேசன் இரட்டையரில் ஒருவரான நேசதுரை தியாகராசா சிறுவனாக மிருதங்கத்துடன் அரங்கேறினார். பின்னாளில் அவர் drums கலைஞராக இலங்கை மேடைகளை கலக்கியது துள்ளிசை இரசிகர்கள் அறிந்தது. 

கெளரீஸ்வரி, இலங்கை வானொலியில் "மெல்லிசை" அறிமுகமாகிய போது மெல்லிசைப் பாடகியாகவும் பங்களித்தார். விக்டரின் இசையில் அவர் மனோகரனுடன் இரு இனிமையான பாடல்களைப் பாடினார். இருவரும் கைதேர்ந்த பின்னனிப் பாடகர்களைப்போன்று இந்த இரு பாடல்களையும் பாடினார்கள். இந்த முயற்சிகள் தொடராமல் போனதும் எம் துரதிர்ஷ்டமே. கெளரீஸ்வரி தனியாகவும்  பல மெல்லிசைப் பாடல்களை பாடினார். சங்கீத சபை என்னும் இசைகல்லூரியை உருவாக்கி ஆரம்பமுதல் இசை ஆசிரியையாக தொடர்ந்த கெளரீஸ்வரி பல இசை கலைஞர்கள் உருவாவதில் பங்களிப்பு செய்தார். இவர் சகோதரி ‘எம்மவர்’ பத்மினி கனகரத்தினம், “பொப்பிசைப் புயல்” நிகழ்வில் ‘காதோடுதான் நான் பாடுவேன்’ பாடலுடன் மேடையேறியதும் நினைவு. இசைக்குயில், இன்னிசைவாணி, பாசுரப் பாமணிப் பட்டங்கள் கெளரீஸ்வரிக்கு சொந்தமானவை. இன்று இசைக்கல்லூரிக்கு இயன்ற ஆலோசனைகளுடன் இசையுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். 

இ.ஒ.கூ. துள்ளிசை மெல்லிசை பரீட்சார்த்த முயற்சிகளில் தன் பங்களிப்பை அதிகமாகவே வழங்கிய குமார் கனகரத்தினம் கெளரீஸ்வரியின் சகோதரர். இ.ஒ.கூ.வில் குமார் – ஹமீது – இராமச்சந்திரன் – டேவிட் போன்ற அக்கால இளையதலைமுறையின் பரீட்சார்த்த பாடல் உருவாக்கங்களுக்கான பங்களிப்புகள் அளப்பரியவை. இப்பாடல் உருவாக்கத்திலும் குமார் கனகரத்தினம் - அப்துல் ஹமீது பங்கு புறந்தள்ள முடியாதது. அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் குமார் கனகரத்தினம், கலிபோர்னியாவில் லிவர்மோர் (Livermore) நகரில் சிவா - விஷ்னு ஆலய தொண்டில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ஆலய அரங்கத்தில் மேடையேறும் உள்ளூர் வெளியூர் கலைஞர்களின் இசை, நாட்டிய நிகழ்வுகளுக்கு தொழிநுட்ப திறமையாலும் கைவண்ணத்தாலும் தனது பங்களிப்பை வழங்கிவருகிறார். ஆலய வழிநடத்தல் குழு உறுப்பினராகவும் இருந்து சேவை செய்கிறார். 

Video credits to original artists of album Pranayam Vithumbunnu - Entho Mozhiyuvaan and artist - Vidhu Pratap Thanks

வானகம் சூழ்ந்திடும் காரிருள் வாழ்வில் 
வளர்மதியான என் உயிரே
வளர்மதியாகவே வாழ்ந்திட துடித்தேன் 
தளர்ந்திடும் காதலில் தேய்மதியானேன்

ஆழ்கடல் நீல நிறமது எடுத்தேன் 
அன்னத்தின் உருவை அமைத்திடத் துடித்தேன்
வாழ்வது போனால் ஆழ்கடல் திண்ணம்  
அழிந்திடும் என் உயிர் வாழ்வின் வண்ணம்

ஆயிரம் ஆசை என் இதயத்தின் சொல்லை   
அறிந்திட உன் எழில் என் இசையில்லை
ஆயிரம் ஆசைகள் என்னிடம் இல்லை 
அன்பனின் ஒசையே என் மன எல்லை

பாடல் - வானகம் சூழ்ந்திடும் காரிருள் வாழ்வில் 
இரு குரலிசையில் இணையும் = A. E. மனோகரன் & கௌரீஸ்வரி இராஜப்பன் 
இயற்றியவர் - A. E. மனோகரன் 
இசை - விக்டர் இரத்னாயக்க 

Song - Vaanakam Soolndhidum 
Duet By - A.E. Manoharan & Gowreeswari Rajappan 
Lyrics - A.E. Manoharan 
Music - Victor Ratnayake 

 

https://www.youtube.com/watch?v=Qaa19pwJzDY

பதிவிற்கு நன்றி உடையார்.இந்தப் பாடலை நான் கேட்டிருக்கிறேன். கெளரீஸ்வரி ராஜப்பன் அவர்களுடைய இனிமையான குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
80களில் எம்மவர் மெல்லிசைப் பாடல்கள் - காதல் காவியம் பாடிடும் நேரம்

இனிய இருகுரலிசையாய் சிவகுமார் - நிலாமதி

பாடல் - ஜெகதீசன்

இசையமைப்பு - நீதிராஜசர்மா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கங்கையாளே இசைத்தட்டு - பாடல் 04


ஈழத்துப்பாடல் பிரியர்களால் விரும்பி கேட்கப்பட்டு, இ.ஒ.கூ. வெளியிட்ட “கங்கையாளே” இசைத்தட்டில் இடம்பெற்ற சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. 

பாடலைப் பாடிய திலகநாயகம் போல் பிரபல கர்னாடக மெல்லிசைப் பாடகர்.  சிறப்பான கவிதை வரிகளுக்கு
உரிமையாளர் சிதம்பரபத்தினி என்னும் புனைப்பெயரில் தன் ஆக்கங்களை வடித்த சிறுகதை எழுத்தாளரும் இலக்கிய ஆர்வலருமான பத்தினியம்மா. இசையமைப்பு ஆர். முத்துசாமி, இவர் பற்றிய மேலும் எழுதுவது இப்பத்தியில் அவசியமற்றது. 

மெல்லிசைப் பாடல்கள் அநேகமாக மெட்டுக்கு எழுதப்பட்டவையல்ல, எழுதப்பட்ட பாடல்களுக்கே இசையமைக்கப்பட்டன. இப்பாடலின் வெற்றிக்கு ஒரு காரணம் முத்துசாமி மாஸ்டரின் ஆளுமையே. “எம்மவர்”களான இம்மூவருமே இப்போது எம்மிடையே இல்லை என்பது மனதை வருடும் விடயம்.


இதயத்தில் இனிமையை உணரவிட்டு அங்கு
இன்பமும் துன்பமும் ஏன் கொடுத்தாய் 
மனதினில் அன்பினை வளரவிட்டு பின்பு
உறவையும் பிரிவையும் ஏன் கொடுத்தாய்

மலரினை மனமுடன் மலரவிட்டு அங்கு 
மதுவையும் முள்ளையும் ஏன் கொடுத்தாய்
மனிதனை உயிருடன் வாழவிட்டு பின்பு
வாழ்வையும் தாழ்வையும் ஏன் கொடுத்தாய்

சிந்தையில் நினைவினை வளரவிட்டு அங்கு
கனவையும் நனவையும் ஏன் கொடுத்தாய்
பந்தத்தில் மனிதனை பழகவிட்டு பின்பு
பாசமும் தோசமும் ஏன் கொடுத்தாய்

பகுத்திட அறிவினை வழங்கிவிட்டு அங்கு
நட்பையும் பகையையும் ஏன் கொடுத்தாய்
மதித்திட  உணர்வினை கொடுத்துவிட்டு பின்பு
நன்மையும் தீமையும் ஏன் கொடுத்தாய்


பாடியவர்   எல். திலகநாயகம்போல்
கற்பனை  பத்தினியம்மா
இசை   ஆர். முத்துசாமி 

Song   Ithayathil inimaiyai - Agony and Ecstasy
Sung By   L. Thilaganayagam Paul
Lyrics   Pathiniamma
Music   R. Muthusamy Master

 

 

Just now, உடையார் said:

பாடலைப் பாடிய திலகநாயகம் போல் பிரபல கர்னாடக மெல்லிசைப் பாடகர்.  சிறப்பான கவிதை வரிகளுக்கு


பாடியவர்   எல். திலகநாயகம்போல்
கற்பனை  பத்தினியம்மா
இசை   ஆர். முத்துசாமி 

Song   Ithayathil inimaiyai - Agony and Ecstasy
Sung By   L. Thilaganayagam Paul
Lyrics   Pathiniamma
Music   R. Muthusamy Master

 

மனைவியின் குரு இவர்தான் சிறுவயதில் இருந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கக்குரலினிமையுடன் காதலின் ஊர்வலத்தில் எம்மை அழைத்து செல்பவர்கள் ‘எம்மவர்’ இசை  ஜோடிகளான முத்தழகுவும் சுஜாதாவும். பாடல் இடம்பெற்ற படம் வி.பி. கணேசனின்  ‘நான் உங்கள் தோழன்’.  தென்னக எம்.ஜி.ஆர் போல் எம்மவர் கணேஷும்  (( விபி கணேசனின் முதல் திரைப்படம் ‘புதிய காற்று’ விளம்பரங்களில் BH அப்துல் ஹமீது விபி கணேசனை “உங்கள் அபிமானத்துக்குரிய கணேஷ்” என்று குறிப்பிட்டு கதாநாயக  அறிமுகம் செய்ததை அக்கால இலங்கைத் திரைப்பட இரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்))  தன் படப் பாடல்களின் தரத்தில் மிகுந்த அக்கரை செலுத்தியவர். அவ்வாறே இப்பாடலும்  பிரபலமானது. எம்.கே. ரொக்சாமி இசையமைத்த திரையிசைப்பாடல்களில் சிறப்பான பாடல் என்பது எங்கள் எண்ணம்.  

சிறந்த ஒலி நயத்துடன் இப்பாடலை தரவேற்றம் செய்ய பாடலின் மூலப்பிரதியை தந்துதவிய அண்ணன் முத்தழகுவிற்கு எங்கள் சிரம்தாழ்த்திய நன்றிகள்.

படம் – நான் உங்கள் தோழன்  06th Jan 1978

பாடல் – காதலின் ஊர்வலம் கண்ணிலே தோன்றுதே

பாடியவர்கள் – வி.முத்தழகு & சுஜாதா

இயற்றியவர் – முருகவேள் காந்தி

இசையமைப்பு – எம்.கே. ரொக்சாமி
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துப் பொப்பிசைப் பாடல்: 'மால்மருகா பாடியவர்: ஜேம்ஸ் ராச்

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 38 ஆவது ஆண்டு பொங்கல் விழா நிகழ்வில் (15.01.2017) ஈழத்துப் பொப்பிசைப் பாடல்: 'மால்மருகா ...' பாடியவர்: ஜேம்ஸ் ராச்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமாளிகை ரோஜா மணம் வீசுது இலேசா

“உனக்குத் தெரியுமா” பாடலுக்கு பின் ‘எம்மவர்’ பரமேஷ் இசையமைத்துப் பாடிய ஒரு சிறந்த பாடலாக இப்பாடலைக் கொள்ளலாம். 
தன் காதல் மனைவி மாலினியை பரமேஷ் இலங்கைத் திருநாட்டின் சிறப்பினைக் கொண்டு வர்ணித்து இருப்பாரோ ‘உனக்கு தெரியுமாவில்’ தன் காதலி மாலினிக்கு செய்தி சொன்னது போல்????

மனமாளிகை ரோஜா மணம் வீசுது இலேசா

இயற்றி 

இசையமைத்து

குரல் கொடுப்பது

MP பரமேஷ்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.. ஐ.. யோ... அவள் வேண்டாம் மனைவி வேண்டாம் தனிமை போதும்😂🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் – குண்டுமணி தோட்டத்திலே

பாடியவர் – A.E. மனோகரன்

இசை - சரத் டீ அல்விஸ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரயில் ஓடுது யாழ் இரயில் ஓடுது

இரயில் ஓடுது யாழ் இரயில் ஓடுது

பாடல் வரிகள் - இராசய்யா
 
இசையமைப்பு - கண்ணன் & நேசம்

குரல் இனிமை - அமுதன் அண்ணாமலை 

பாடல் ஓலிப்பதிவு - இ.ஓ.ப.கூ-1970

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.