Jump to content

அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்!


Recommended Posts

அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்!

 

 

     by : Benitlas

Namal-Rajapaksa-with-President-Gotabaya-

விமான நிலையத்தில் அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது ஒத்துழைப்பும் முன்னரை விட அதிகமாக மரியாதையும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் சர்வதேச தோற்றுநோய் பரவலின் பிடியில் உள்ள இவ்வேளையில் வியன்னா பிரகடனத்தை விட ஒத்துழைப்பும், உயிர்களை காப்பாற்றுவதற்காக நாடொன்று பின்பற்றும் கட்டமைப்பை மதிப்பதுமே முக்கியமானது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த இராஜதந்திரி இலங்கைக்கு சென்றமை இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா பிரகடனத்தின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்துள்ள அமெரிக்க தூதரகம் இது அமெரிக்கா செல்லும் இலங்கை இராஜதந்திரிக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

http://athavannews.com/அமெரிக்க-இராஜதந்திரி-பிச/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பெடியள் எல்லாம்..... அமெரிக்க ராஜதந்திரிக்கு, ஆலோசனை சொல்லும் அளவிற்கு நிலைமை வந்திருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராஜதந்திரிகள் பிசிஆர் சோதனை அறிக்கையை சமர்பிப்பது கட்டாயம்!

 
sri-lanka-government_800x400-720x400-1.jpg?189db0&189db0
 

வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கான கொரோனா பரிசோதனை நடைமுறையில் வெளிவிவகார அமைச்சு திருத்தம் செய்துள்ளது.

இதன்படி நாட்டுக்கு வரும் இராஜதந்திர ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தமது நாட்டிலிருந்து புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்குள் பெற்ற கொரோனா (பிசிஆர்) பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://newuthayan.com/இராஜதந்திரிகள்-பிசிஆர்-ச/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.