Jump to content

மூளையில் இரத்தக்கசிவு - வீடு திரும்பி 5 நாட்களின் பின் உயிரிழந்த 5 வயதுச் சிறுவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூளையில் இரத்தக்கசிவு - வீடு திரும்பி 5 நாட்களின் பின் உயிரிழந்த 5 வயதுச் சிறுவன்

மட்டக்களப்பில் விபத்து இடம்பெற்று 5 நாட்களின் பின்னர், 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – கல்லடியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில், கல்லடியை சேர்ந்த ஒருவரும் அவரின் மகனும் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு மறுதினமே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, சிறுவன் மீண்டும் சுகயீனமுற்ற நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், CT Scan எடுப்பதற்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கவனயீனமே சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணமென சிறுவனின் தாய் குற்றஞ் சாட்டியுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியைகள் நேற்று காலை நடைபெற்று நாவலடி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த விபத்து தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்

 

https://www.ibctamil.com/srilanka/80/144705

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.