Jump to content

கோட்டாபயவின் படுமோசமான செயல்களை கண்டித்து விரைவில் காட்டமான அறிக்கை


Recommended Posts

"பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார். இதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ராஜபக்ச அரசின் இந்த படுமோசமான செயல்களைக் கண்டித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்டமான அறிக்கையை விரைவில் நாம் வெளியிடவுள்ளோம்."

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான, நீதியான, சட்டத்தை மதிக்கும் சமூகம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். அதில் முந்நாள், இந்நாள் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளை மாத்திரம் உள்ளடக்கிய 13 பேரை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். அதிலும் பௌத்த மதம் சார்ந்த பிக்குகள், படை அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளடங்கலாக 11 சிங்களவர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். ஒரு தமிழரோ, ஒரு முஸ்லிமோ இல்லாமல் இந்தச் செயலணியை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உருவாக்கியுள்ளார்.

இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், ஜனாதிபதி கோட்டாபயவின் இந்த சர்வாதிகார ஆட்சி முறைக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் காட்டமான அறிக்கையை வெளியிடவுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/144690

Link to comment
Share on other sites

அண்மையில் சகுனி சம்மந்தனின் அறிக்கைகள் விரைவில் ... விரைவில்..... என்று வெளிவருகிறது.

ஏன் உடன் வெளியிட முடியாது?

இது சிங்கள அரச கொலைகாரர்களுடன் பேரம் பேசி தங்களுக்கு சலுகைகளை பின்கதவால் பெறும் தந்திரம்.

சலுகைகள் கிடைத்தால் அறிக்கைகள் வரவே வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவமயமாகும் ஸ்ரீலங்கா! சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்

இராணுவமயமாகும் ஸ்ரீலங்கா! சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்

பாதுகாப்புப் படையினர் ஆதிக்கம் செலுத்தும வகையில் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கான பிரகடனத்தை ரத்துச்செய்யவேண்டும் என்று ஐஎப்ஜே என்ற சர்வதேச அறங்கூறுநர் சபை கோரியுள்ளது.

இந்த செயலணியில் முழுமையாக இராணுவ, உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இந்த செயலணிக்கு தலைமை தாங்க உள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி செயலணி அமைப்பானது, தனது அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்துவதற்காக கொரோனா வைரஸை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் இலங்கை அரசாங்கத்தின் மற்றும் ஒரு செயலாகும்' என்று ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான சர்வதேச அறங்கூறுநர் சபையின் பிராந்திய இயக்குனர் ஃபிரடெரிக் ராவ்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க்குற்றவாளிகள் உட்பட்ட படைத்தரப்பின் பலரை உள்ளடக்கியுள்ள இந்த செயலணிக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் இந்த செயலணி, பேச்சு சுதந்திரம் மற்றும் அரசியல் விமர்சகர்களை அடக்குவதற்கு மற்றொரு கருவியாக பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை என்று சர்வதேச அறங்கூறுநர் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை நீதித்துறை அல்லது நாடாளுமன்ற மேற்பார்வை பற்றி எந்த கரிசனையில் இல்லாமல், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களுக்கு ஏற்ப இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது, 'என்று ராவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி செயலணியை நிறுவும் சிறப்பு வர்த்தமானியை ரத்துச்செய்யவேண்டும் என்று சர்வதேச அறங்கூறுநர் சபை கோரியுள்ளது.

https://www.ibctamil.com/

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எதற்கும் அறிக்கை வந்ததும் வெளியால வருவம்..

Imj.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகார மமதையில் தானே வலிய மாட்டிக்கொள்ளப் போறார். 

Link to comment
Share on other sites

2 hours ago, satan said:

அதிகார மமதையில் தானே வலிய மாட்டிக்கொள்ளப் போறார். 

மாட்டினாலும் வெளியே கொண்டுவரத்தான் எங்கள் தமிழ்த் தலைவர்கள் இருக்கிறார்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

மாட்டினாலும் வெளியே கொண்டுவரத்தான் எங்கள் தமிழ்த் தலைவர்கள் இருக்கிறார்களே.

குதிரைகளுக்குப்  பதிலாக மனிதர்களைக் கொண்டிழுத்தால் அத்தோடு திருப்திப்பட்டுக் கொள்வார்கள். 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

மாட்டினாலும் வெளியே கொண்டுவரத்தான் எங்கள் தமிழ்த் தலைவர்கள் இருக்கிறார்களே.

அந்தக் குதிரைகளை நம்பித்தான் சிங்களம் சர்வதேசத்துடன் சொக்கட்டான் ஆடுது. ஒன்றா? இரண்டா? ஒன்று படுத்தாலும், மற்றது இழுத்து காப்பாற்றும் என்கிற துணிவு, அனுபவம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.