Jump to content

கொரோனா வைரஸ்: 100 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: 100 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்

கொரோனா வைரஸ்: 100 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது இந்திய நிறுவனம்

 

கொரோனா வைரஸ் தொற்று உண்டாகாமல் தடுக்க வாய்ப்புள்ள தடுப்பு மருந்து ஒன்றின் உற்பத்தியை தொடங்க உள்ளதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கான பரிசோதனைகள் இன்னமும் நடந்து வருகின்றன. ஆனால், ஒருவேளை தங்களது தடுப்பூசி கோவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்த கூடியது என்று தெரியவந்தால் உடனடியாக ஏற்படும் தேவையை எதிர்கொள்ளும் பொருட்டே தற்போது அந்த தடுப்பூசிக்கான உற்பத்தியை தொடங்க வேண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் பாஸ்கல் சொரியட் கூறுகிறார்.

"நாங்கள் உடனடியாக இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பணியை தொடங்குகிறோம். பரிசோதனை முடிவுகள் சாதகமாக வரும் நேரத்தில, நாம் தயாராக இருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

தங்களது நிறுவனத்தால் 200 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விநியோகிக்க முடியுமென்று ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிபிசி டுடே நிகழ்ச்சியில் பேசிய சொரியட், "தேவையான அளவு தடுப்பூசியை தயார் செய்வதற்காக உற்பத்தி விரைந்து தொடங்கப்படுகிறது. ஆனால், ஒருவேளை தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனையில் தடுப்பூசி தோல்வியடைந்துவிட்டால், அதனால் எங்களுக்கு மிகப் பெரிய அளவில் நிதி நெருக்கடி ஏற்படும் என்று தெரிந்தே இந்த முடிவை எடுத்துள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.

அதே சமயத்தில், இந்த தடுப்பூசி வெற்றியடைந்தால் அதை சந்தைப்படுத்துவதன் மூலம் லாபத்தை ஈட்டுவதற்கு தங்களது நிறுவனம் முனையாது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம்

கடந்த வியாழக்கிழமை இந்தியாவை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனம் மற்றும் பில் கேட்ஸ் ஆகிய இரண்டு தரப்பினருடன் மேற்கொண்ட புதிய ஒப்பந்தங்களின் மூலம், தடுப்பூசி சோதனையில் வெற்றியடைந்தால், தங்களால் 200 கோடி தடுப்பூசியை உற்பத்தி செய்யமுடியுமென்று அந்த நிறுவனம் கூறுகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து தடுப்பூசியை உருவாக்கி வரும் ஆஸ்ட்ராசெனிகா, குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு உற்பத்தி செய்யும் தடுப்பூசியில் பாதி அளவை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

தடுப்பூசியை உற்பத்தி செய்வது தொடர்பாக இரண்டு முக்கிய ஒப்பந்தங்களை இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதில் குறிப்பாக இந்தியாவின் புனே நகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் மிகப் பெரிய உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) உடன் ஆஸ்ட்ராசெனிகா ஒப்பந்தம் செய்துள்ளது.

அதே போன்று, பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோரின் இரண்டு சுகாதார அமைப்புகளுடன் 750 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

கொரோனா வைரஸ்: 100 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது இந்திய நிறுவனம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சி.இ.பி.ஐ. மற்றும் ஜி.ஏ.வி.ஐ. உள்ளிட்ட இரண்டு தொண்டு நிறுவனங்கள் 30 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்து அவற்றை விநியோகிக்கும் கட்டமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபடும். இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி விநியோகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பரிசோதனை கட்டத்தில் உள்ள AZD1222 என்று பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உதவுமா, இல்லையா என்பதை ஆகஸ்டு மாதம் தெரியவரும் என்று எதிர்பார்ப்பதாக சொரியட் கூறும் நிலையில், இந்த தடுப்பூசி சோதனையில் தோல்வியடைவதற்கும் வாய்ப்புள்ளதாக சி.இ.பி.ஐ. நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ரிச்சர்ட் ஹட்சட் தெரிவிக்கிறார்.

இந்தியாவை சேர்ந்த எஸ்.ஐ.ஐ. நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, அங்கு உற்பத்தி செய்யப்படவுள்ள 100 கோடி தடுப்பூசிகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளன. மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் 40 கோடி தடுப்பூசிகளை வழங்குவதற்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் ஏராளமான விநியோகச் சங்கிலிகளை உருவாக்கி வருவதாகவும், "இந்த பெருந்தொற்று காலத்தில் எந்த லாபமும் இல்லாமல் உலகம் முழுவதும் இரண்டு பில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான ஆதரவு இதுவரை கிடைத்துள்ளது" என்று சொரியட் கூறினார்.

கொரோனா வைரஸ்

"தடுப்பூசியை கண்டுபிடிப்பது முக்கியமானதுதான், ஆனால் அதை அதிகளவில் உற்பத்தி செய்து விநியோகம் செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல" என்று ஆஸ்ட்ராசெனிகா நிறுவனத்தின் தலைவர் கூறுகிறார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் என்பது "ஓர் உலக நெருக்கடி" என்றும் அது "மனிதகுலத்திற்கான சவால்" என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த தடுப்பூசி பரிசோதனை வெற்றியடையும் பட்சத்தில், முதற்கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் 30 கோடி தடுப்பூசி அமெரிக்காவுக்கும், 10 கோடி தடுப்பூசி பிரிட்டனுக்கும் அளிக்கப்படும்.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கோவிட்-19 தடுப்பூசிக்கு பில்லியன்கணக்கான டாலர்களை ஒதுக்க முன்வந்துள்ளன. உலகெங்கிலும் எண்ணற்ற மருந்து நிறுவனங்கள் சாத்தியமான மருந்துகளை உருவாக்கி பரிசோதிக்கும் போட்டியில் உள்ளன.

 

https://www.bbc.com/tamil/science-52946001

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.