Jump to content

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நாள் இன்று!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நாள் இன்று!

Thamizh.jpg

பூமியின் வளர்ச்சியினை விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் எடுத்துப்பார்த்தால், மனிதர்கள் தோற்றம் பெறுவதற்கு முன்னரே பல உயிரினங்களும் இயற்கையின் பல விடயங்களும் தோற்றம் பெற்றிருக்கின்றன. சமய நூல்களும் இதனையே வலியுறுத்துகின்றன.

எனினும் மனிதன் தோற்றம் பெற்று படிப்படியாக வளர்ச்சியடைய ஆரம்பித்த பின்னர் தனக்கு தேவையான பல விடயங்களை கண்டுபிடிக்கத்தொடங்கினான். அவ்வாறு கண்டுபிடித்த விடயங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதுமான ஒன்றுதான் மொழி.

ஒரு மனிதன் தனது தேவைகள் நிமித்தம் சக மனிதர்களுடன் தொடர்புகொள்வதற்கு பல வழிகளைக் கண்டுபிடித்தான்.

ஆரம்பத்தில் சைகைகள் வாயிலாக உரையாட, தனது எண்ணங்களை கடத்த முனைந்த மனிதன், பின்னர் அவ்வாறான சைகைகளுடன் சேர்த்து சில ஒலிகளை எழுப்பி அதனூடாக தொடர்புகளை மேற்கொண்டான்.

அந்த ஒலிகளும் ஓசைகளும் நாளடைவில் மொழிகளாக உருவாக்கம் பெற்றன. இவ்வாறு பன்நெடுங்காலத்துக்கு முன்பதாகவே தோற்றம் பெற்ற ஆயிரக்கணக்கான மொழிகள் பின்னாட்களில் மனிதர்களுக்கான நாகரீகங்களை போதிப்பனவையாக அமைந்தன.

ஒரு இனத்தின் தொன்மை என்பது, ஒரு சமூகத்தின் கலாசார முக்கியத்துவம் என்பது குறித்த சமூகங்களின் மொழி சிறப்பினை வைத்து அளவிடப்பட்டன.

இவ்வாறு உருவாக்கம் பெற்ற மொழிகளில் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட மொழிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

செம்மொழி அந்தஸ்து என்றால் என்ன?

ஒரு மொழியினுடைய தோற்றம், அதன் பழமைத்துவம், வரலாற்று முக்கியத்துவம் என்பனவற்றையும் ஒரு மொழியானது சமூகத்தில், மனிதர்களிடத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது போன்ற அளவீடுகளின் அடிப்படையில், முதல் நிலையில் இருக்கக்கூடிய மொழிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே செம்மொழி அந்தஸ்த்து என மேலோட்டமாக வரையறைப்படுத்திவிட முடியும்.

மொழிக்கான முக்கியத்துவத்தையும் அதற்கான அங்கீகாரத்தையும் வெறுமனே ஒரு ஆய்வாளர் குழுவால் வழங்கிவிட முடியாது. மாறாக ஓர் மொழி தனக்கான சிறப்பை, தான் சார்ந்த மனிதர்கள், சமூகத்தினை அடிப்படையாகக்கொண்டு தானே உருவாக்கிக்கொள்கிறது என்றாலும்  இந்த அங்கீகாரம் ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணமாக உருவாக்கப்பட, உலகில் கட்டமைக்கப்பட்டுள்ள நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியிருக்கிறது.

அதனடிப்படையில் செம்மொழி அந்தஸ்து வழங்கப்படுவதற்கு ஓர் மொழி சார்ந்த பல விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

அவற்றில் மிக முக்கியமானவை குறித்த மொழியின் மூலத்தில் இருந்து தோற்றம் பெற்றிருக்கும் இலக்கியங்கள், அது சமூகத்தின்பால் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள்.  இதனைத் தாண்டி ஒரு மொழி மூலமாக படைக்கப்பட்டிருக்கும் கலைகளும் குறித்த மொழி செம்மொழியாவதற்கு மிக முக்கியமான காரண கர்த்தாவாக காணப்படுகின்றன.

இவ்வாறான அளவீடுகள் அடிப்படியில் உலகில் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட மொழிகளை வரிசைப்படுத்தினால் தமிழ், கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், பாரசீகம், அரபு, எபிரேயம், சீனம் ஆகிய மொழிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தமிழை போலவே மேற்குறிப்பிட்ட மொழிகளும் வரலாற்று  முக்கியத்துவம், கலாசார முக்கியத்துவம் வாய்ந்த மொழிகள். என்றாலும் இவை அனைத்திலும் இருந்து தமிழ் எந்த வகையில் வேறுபடுகிறது என பார்க்கின்றபொழுது மேற்குறித்த செம்மொழிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள இரண்டு மொழிகளில் தமிழும் ஒன்று.

அதனடிப்படையில், சீனம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளே தற்போது மக்களால் பயன்படுத்தப்படுகின்ற செம்மொழிகளாக காணப்படுகின்றன. இக்காரணத்தால் தமிழ், ‘வாழும்  செம்மொழி’ எனவும் அழைக்கப்படுகிறது.

தமிழ் இனக்குடும்பம் இதுவரை தனக்கான ஓர் தேசத்தைக் கொண்டிராவிட்டாலும்கூட, உலகெங்கும் பரந்து வாழும் மிகப்பெரிய இனக்குழுவாக காணப்படுகிறது.

அதனடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் உலகின் இந்தியா. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, நோர்வே, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ், மியன்மார் உள்ளிட்ட பல நாடுகளில் வசித்து வருகின்றனர்.

இவ்வாறு தமிழர்கள் பல்வேறு நாடுகளை தமது வாழ்விடமாக கொண்டுள்ளமைக்கு பல காரணங்கள் உள்ளன. பூர்விகம், கல்வி, பொருளாதாரம், யுத்தங்கள், இடப்பெயர்வுகள் என அவை நீண்டுகொண்டே போகும்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து 2004ஆம் ஆண்டு ஜூன் மதம் 06ம் திகதி வழங்கப்பட்டது. இந்தியாவின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்தவரும் உலகம் போற்றும் விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இந்த அந்தஸ்தினை தமிழுக்கு வழங்கினார்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கபடுவதற்கு தமிழ் மொழி மூலம் உருவாக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட நூல்கள் காரணமாக இருந்திருக்கின்றன.

அதனடிப்படையில் உலகப்பொதுமறை என போற்றப்படும் திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்,  தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் உள்ளிட்ட நூல்களே அவை.

மேற்குறிப்பிட்ட நூல்கள் உலகளாவிய இலக்கிய உலகிலும்  சமூகத்திழும் எவ்வாறான தாக்கங்களை செய்திருக்கின்றன என்பதை புதிதாக யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தமிழின் இலக்கியங்கள் எத்துணை சிறப்பு வாய்ந்தவையோ அதே அளவுக்கு தமிழின் இலக்கணத்துக்கான சிறப்புகளும் காணப்படுகின்றன.

தமிழ் இலக்கணம் பெரும்பான்மையாக தொல்காப்பியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. தொல்காப்பியம் ஏறக்குறைய 400ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பெரும்பாலான ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஓர் மொழியின்   நீடிப்பு என்பது  அம்மொழி சார்ந்த மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது என்றால் மறுக்க முடியாது. அதனடிப்படையில், தமிழ் மொழி வெவ்வேறு தளங்களில் மொழி சார்ந்த மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அல்லது அல்லது பாவனைக்குட்படுத்தப்படுகிறது.

ஆய்வுகள் என்றும் இலக்கணம் என்றும் இலக்கியம் என்றும் தொடர்ந்தும் பேணப்பட்டு வரும் தமிழ் மொழியின் மற்றொரு வடிவம் வட்டார மொழி வழக்கு.

தமிழ் மொழி ஒவ்வொரு பிராந்தியத்துக்கு ஏற்றவாறு பல்வேறு வடிவங்களில் பேசப்படும் ஒன்றாக காணப்படுகிறது. அதனடிப்படையில், இலங்கையில் கிழக்கிலங்கையினை சார்ந்தவர்களின் மொழிவழக்கு, மலையகத்தை சார்ந்தவர்களின் மொழிவழக்கு மற்றும் வட பகுதியைக் குறிப்பாக யாழ்ப்பாணத்தை சார்ந்தவர்களின் மொழிவழக்கு என்பன மாறுபடுகின்றன.

அது போலவே  தென்னிந்தியாவில், கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை என ஒவ்வொரு பகுதிகளிலும் தமிழ் வேறு வேறு வட்டார வடிவைக்கொண்டு பாவனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு வட்டார வழக்குகள் காணப்படும் போதும் ஒவ்வொன்றும் தனித்துவத்தினையும் அழகையும் கொண்டவையாகும்.

நீண்ட இயற்கை அனர்த்தங்களை, நீண்ட பெரும் இன அழிப்புகளை, மிகப்பெரும் இடப்பெயர்வுகளை என சொல்லிலடக்க முடியா வரலாற்று துயர்களை தமிழ் சமூகம் கடந்த காலங்களில் எதிர்கொண்டுள்ளபோதும் இன்னும் அசைக்க முடியாத சக்தியாக, தமிழர்களின் பெருமைக்கான முழுமுதல் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் தமிழ் மொழி உலகுள்ள வரையிலும் வாழும்.

 

http://athavannews.com/தமிழுக்கு-செம்மொழி-அந்தஸ/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.