Jump to content

ஒரு புறம் பேச்சுவார்த்தை மறுபுறம் மத்திய சீனாவில் பெரிய அளவில் ராணுவம் போர்ப் பயிற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புறம் பேச்சுவார்த்தை மறுபுறம் மத்திய சீனாவில் பெரிய அளவில் ராணுவம் போர்ப் பயிற்சி

ஒரு புறம் பேச்சுவார்த்தை மறுபுறம் மத்திய சீனாவில் பெரிய அளவில் ராணுவம் போர்ப் பயிற்சி

 

இந்தியாவுடனான எல்லை பிரசசினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், சீனாவை சேர்ந்த பிஎல்ஏ இராணுவப் படை மிகப் பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சி மேற்கொண்டுள்ளது.இந்தியா மற்றும் சீனா இருநாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சினை தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதில், இந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அமைதிக்கான முதல் படியாக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் புதிய திருப்பமாக சீனாவை சேர்ந்த மக்கள் விடுதலை ராணுவம் நேற்று மத்திய சீனாவில் மிகப்பெரிய அளவில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

202006091429066488_chinamiltry-002._L_styvpf.gif

 

அனுப்ப புதிய திறன்களைப் பெருமையாகக் கொண்டுள்ளனர் என்று தென் சீன மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சிகள் உளவு மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் ஒருங்கிணைப்பு மற்றும் துல்லியமான தாக்குதல் போன்ற தந்திரோபாய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது குறித்து  பயிற்சியில் அறியபட்டது. மேலும் பீரங்கிப் பிரிவுகள் மற்றும் பல-ஏவுகணை சேத செயல்திறனை விரிவாக சோதித்தன என தென் சீன மார்னிங் போஸ்ட் தெரிவித்து உள்ளது. 

மக்கள் விடுதலை ராணுவ படைத்தான் சீனாவின் முன்னணி இராணுவ பிரிவு ஆகும். இவர்கள் நேற்று மத்திய சீனாவில் பயிற்சி மேற்கொண்டனர். பல்லாயிரம் வீரர்கள் ஒன்றாக சேர்ந்து பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

சீனாவுடன் இந்தியா எல்லை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்த நிலையில் சீனா இப்படி படைகளை வைத்து பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மத்திய சீனாவில் இருந்து லடாக் எல்லைக்கு எவ்வளவு வேகத்தில் படைகளை அனுப்பலாம் என்பதை ஆராயவும், படைகள் தயாராக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கவும் சீனா இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா சமீப நாட்களில் செய்த மிகப்பெரிய பயிற்சி இதுதான், சீனா இந்த பயிற்சியை சரியாக எங்கே செய்தது என்று விவரங்கள் வெளியாகவில்லை.ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாக படைகளை அனுப்பி உள்ளனர். அவர்கள் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க இப்படி செய்துள்ளது

இந்த சீன வீரர்கள் சீனாவின் போர் விமானம், ரெயில், பேருந்து என்று பல வகையில் இடமாற்றம் செய்யப்பட்டு, எவ்வளவு வேகமாக வீரர்களை இடமாற்றம் செய்ய முடியும் என்று சீனா இராணுவம் கண்டறிந்து உள்ளது.

லடாக்கில் பிரச்சினை வந்தால் உடனடியாக வீரர்களை எல்லைக்கு அனுப்ப வசதியாக சீனா இப்படி சோதனையை செய்துள்ளது. இதில் நவீன ஆயுதங்களையும் இப்படி கொண்டு சென்று இருக்கிறார்கள்.

சீனா தனது தயார் நிலை குறித்து சோதனை செய்து வருகிறது.அமைதியை விரும்பும் ஒரு நாடு ஏன் தயார் நிலை குறித்து சோதிக்க வேண்டும். ஏன் படைகளை வேகமாக அனுப்ப முடியுமா என்று ஆராய வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இந்த பதற்றத்துக்கு மத்தியிலும் லடாக்கின் கிழக்குப் பகுதியில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை இணைக்கும் வகையில் 2 சாலைகளை இந்தியா கட்டமைத்து வருவதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தார்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி இடையே ஒரு சாலையும், சாசோமா- சாசர் லா இடையே இன்னொரு சாலையையும் இந்தியா கட்டமைத்து வருகிறது எனவும், இதில் எல்லை சாலைகள் அமைப்பு ஊழியர்கள் 11 ஆயிரத்து 815 பேர் ஈடுபட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/09142908/Ready-in-hours-China-issues-pointed-military-threat.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன், சீனா.... பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு, மற்றப் பக்கத்தாலை செம சாத்து, சாத்தப் போகுது 🤛🏽போலை இருக்கு.😎

டிஸ்கி:  எதை விதைத்தாயோ... அதை அறுவடை செய்வாய். 🤡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியாவுடன், சீனா.... பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு, மற்றப் பக்கத்தாலை செம சாத்து, சாத்தப் போகுது 🤛🏽போலை இருக்கு.😎

டிஸ்கி:  எதை விதைத்தாயோ... அதை அறுவடை செய்வாய். 🤡

நீங்கள் நினைப்பது போல அல்ல விசயம்.

ஹொங்கோங் கில் நிலைமை கை மீறி செல்கிறது. அங்கு உலக மீடியா பார்வையும் பெரிதாக உள்ளது.

அதனை மீறி அடக்குமுறை பாவிக்க முடியாத நிலை. சீலை கிழியாமல் முள்ளில் இருந்து எடுக்க வேண்டும். ஏனனில் ஹொங்கோங் பொன் முட்டை போடும் வாத்து.

அதனை லாவகமா செய்ய, மீடியா பார்வையினை வேறு எங்காவது மாத்தும் வேலையில் சீனா உள்ளது.

பெரும்பாலும் மோடிக்கு போனை போட்டு  பேசித்தான் இந்த மெகா நடிப்பு நடக்கும்.

பதிலுக்கு, காஸ்மீரில் கண்டுகொள்ள மாட்டோம் என்று சொல்லி இருப்பார்கள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

 

டிஸ்கி:  எதை விதைத்தாயோ... அதை அறுவடை செய்வாய். 🤡

maxresdefault.jpg

இப்போ எல்லாம் சொரூப ராஜ் ஜெயின் தான் நினைவுக்கு வாறார் தோழர்..☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரும்  அடிபடுவானுகள் என்று பார்த்தால் சின்ன புள்ளைகள் போல் தள்ளு முள்ளு படுறாங்கள் உங்களை எதிர்பார்த்து மேல் உலகில் நிறைய பேர் நிக்கிறாங்களடா  சீக்கிரம் தொடங்குங்க. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இரண்டு பேரும்  அடிபடுவானுகள் என்று பார்த்தால் சின்ன புள்ளைகள் போல் தள்ளு முள்ளு படுறாங்கள் உங்களை எதிர்பார்த்து மேல் உலகில் நிறைய பேர் நிக்கிறாங்களடா  சீக்கிரம் தொடங்குங்க. 

இந்திய எல்லைக்கே வந்து சீனா வந்து வம்புக்கு இழுக்க, கிந்திய ஆமி கையை காலை ஆட்டிக்கிட்டிருக்கு😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் இராணுவ படைகளுடன் போர் பயிற்சி: ராஜதந்திரமாக வேலையை காட்டும் சீனா!

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் சீனாவை சேர்ந்த பிஎல்ஏ இராணுவப் படை மிகப் பெரிய அளவில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்திய - சீன எல்லை பிரச்சனை தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள்.

இந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சீனாவின் முன்னணி இராணுவப் பிரிவான பிஎல்ஏ இராணுவப் படை நேற்று மிகப்பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மத்திய சீனாவில் இருந்து லடாக் எல்லைக்கு எவ்வளவு வேகத்தில் படைகளை அனுப்பலாம் என்பதை ஆராயவும், படைகள் தயாராக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கவும் சீனா இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற உலகின் நிகழ்கால விடயங்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

https://www.ibctamil.com/world/80/144885?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.