Jump to content

இனி கிரிக்கெட் இப்படித்தான் நடக்கும்: ஐசிசி அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனி கிரிக்கெட் இப்படித்தான் நடக்கும்: ஐசிசி அறிவிப்பு!

 

spacer.png

கொரோனா வைரஸின் தாக்கத்தை கணக்கில் கொண்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அதன் விளையாட்டு விதிமுறைகளில் இடைக்கால மாற்றங்களை உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனாவிற்கு பிறகான கிரிக்கெட் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம், எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதைக் குறித்த முக்கியமான கூட்டம் நேற்று(ஜூன் 9) நடைபெற்றது. அதில், ஐ.சி.சி தலைமை நிர்வாகிகள் குழு (சி.இ.சி) அனில் கும்ப்ளே தலைமையிலான கிரிக்கெட் குழுவின் பரிந்துரைகளை ஒப்புதல் அளித்தது. இது கொரோனா வைரஸால் ஏற்படும் அபாயங்களைத் தணிப்பதையும், கிரிக்கெட் மீண்டும் தொடங்கும் போது வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. ஐ.சி.சி தனது அறிக்கையில், "பந்தை வழுவழுப்பாக வைக்க உமிழ்நீரைப் பயன்படுத்த வீரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு வீரர் பந்துக்கு உமிழ்நீரைப் பயன்படுத்தினால், நடுவர்கள் முதல்கட்டத்தில் நிலைமையை சில மென்மையான நடவடிக்கையுடன் நிர்வகிப்பார்கள். ஆனால் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற்றால், இதன் விளைவாக அணிக்கு எச்சரிக்கை விடப்படும்" என தெரிவித்துள்ளது.

மேலும், "ஒரு அணிக்கு ஒரு இன்னிங்ஸுக்கு இரண்டு எச்சரிக்கைகள் வரை வழங்கப்படலாம். ஆனால் பந்தில் மீண்டும் மீண்டும் உமிழ்நீரைப் பயன்படுத்துவதால் பேட்டிங் தரப்பில் 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும். பந்தில் உமிழ்நீர் பயன்படுத்தப்படும்போதெல்லாம், பந்தை சுத்தம் செய்ய நடுவர்களுக்கு அறிவுறுத்தப்படும்" என அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், சர்வதேச பயணங்களில் ஏற்பட்டுள்ள தற்போதைய சவால்கள் காரணமாக நடுநிலை போட்டி அதிகாரிகளை நியமிப்பதற்கான தேவை அனைத்து சர்வதேச வடிவங்களுக்கான விளையாட்டு நிலைமைகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படும். ஐ.சி.சி எலைட் பேனல் ஆப் மேட்ச் அதிகாரிகளிடமிருந்தும், ஐ.சி.சி இன்டர்நேஷனல் பேனல் ஆப் மேட்ச் அதிகாரிகளிடமிருந்தும் உள்நாட்டிலுள்ள மேட்ச் அதிகாரிகளை ஐ.சி.சி நியமிக்க முடியும்.

கிரிக்கெட் போட்டியில் வீரருக்கு அடிபடும் போது அவருக்குப் பதில் வேறு வீரர் பீல்டிங் செய்வார். ஆனால், அந்த வீரரால் பந்து வீசவும், பேட் செய்யவும் முடியாது. ஆனால், ஐசிசி தற்போதைய முடிவின் படி வீரருக்கு அடிபடும் பட்சத்தில் மாற்று வீரரால் பேட்டிங் மற்றும் பந்து வீசவும் முடியும். இந்த விதிமுறை கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் இது பொருந்தாது என்று கிரிக்கெட் நிர்வாக குழு உறுதிப்படுத்தியது.
 

https://minnambalam.com/entertainment/2020/06/10/24/icc-confirms-interim-changes-to-playing-regulations

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர் ல‌சித் ம‌லிங்காவுக்கு இது பேர் இடியாய் போக‌ போகுது கிருப‌ன்னா ,

ம‌லிங்கா ப‌ந்து போட‌ முத‌ல் ப‌ந்துக்கு முத்த‌ம் கொடுப்பார் ஹாஹா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பையன்26 said:

இல‌ங்கை வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர் ல‌சித் ம‌லிங்காவுக்கு இது பேர் இடியாய் போக‌ போகுது கிருப‌ன்னா ,

ம‌லிங்கா ப‌ந்து போட‌ முத‌ல் ப‌ந்துக்கு முத்த‌ம் கொடுப்பார் ஹாஹா 😁

உது ஒன்றும் பேரிடி இல்லை அவருக்கு பையா....... அவர் பந்தை மேலே எறிந்து பறக்கும் முத்தம் குடுத்து விட்டு பிடித்துப் போடுவார்.....!   👍

Flying Kiss GIF - Find & Share on GIPHY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகலதுறை ஆட்டக்காரர்,ஒரு சொத்தை வீரருக்காய் விளையாட வந்தால் விளையாட்டின் போக்கையே மாற்றி விட்டு விடுவார்கள் ...கேணைத்தனமான முடிவு 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

சகலதுறை ஆட்டக்காரர்,ஒரு சொத்தை வீரருக்காய் விளையாட வந்தால் விளையாட்டின் போக்கையே மாற்றி விட்டு விடுவார்கள் ...கேணைத்தனமான முடிவு 
 

உண்மை தான் ,
இது ந‌டைமுறைக்கு வ‌ருதோ தெரியாது , முந்தியும் உப்ப‌டி ப‌ல‌ செய்திக‌ள் வ‌ந்த‌து ஆனால் ந‌ட‌முறைக்கு வ‌ர‌ வில்லை 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.