Jump to content

70/80 களில்  யாழ்ப்பாணத்தில் இருந்த  Restaurant களின் பெயர் விபரமும், விலைப் பட்டியலும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1970 1980 களில்...

யாழ்ப்பாணத்தில்... இருந்த,  Restaurant களின்

பெயர் விபரமும்விலைப் பட்டியலும்:grin:

 

*கோட்டை முனியப்பகோயில்

தேங்காய்ச் சொட்டு.

 

 *பரணி ஹோட்டல்*                       

அப்பம்.

 

 *சிற்ரி பேக்கறி*                               

 கால், றாத்தல்... பாணும், பருப்பும்....

 

 *சுபாஸ் கபே*                                 

 ஐஸ்கிரீம்.

 

*றிக்கோ கோப்பி பார்*                            

 றோல்ஸ்கோப்பி.

 

 *மலாயன் கபே*                               

 உளுந்து வடை  போளி.

 

 *தாமோதர விலாஸ்*                      

 நெய் தோசை.

 

*சந்திரா ஐஸ் கிறீம்*                      

ஐஸ் சொக்.

 

 *கொழும்பு றெஸ் ரோறன்ட்*          

  இறால்கறி, குளம்பு.

 

 *பிளவ்ஸ்*                                         

 Beef றோஸ்.

(5 சதம்)         

 

 *மொக்கன் கடை*                             

 புட்டு, ஆணம், மட்டிச் சம்பல்.

*சில வேளைகளில்... நீங்கள், குடுக்கிற காசை.. வாங்கி, 
கல்லாப்  பெட்டிக்குள், போட்டு விட்டு...
அவர் தாற,  மிச்சக் காசு.... நீங்கள் கொடுத்த காசை விட, அதிகமாக இருக்கும்.
:grin:

 

*முனீஸ்வரா கபே*                       

    புட்டு, இடியப்பம், புளிச்சொதி,  தாளித்த சம்பல் (கடுகு தூக்கல்).

(வெலிங்டன் சந்தி)

 

*லிங்கம் கூல்பார்*                             

 சர்பத் , இதரை வாழைப்பழம், பீடா..........

(வெலிங்டன் சந்தி)

 

*கபே பாரத்*                                            

 அப்பம், பிளேன் ரீ.

(ஆரிய குளம் சந்தி)                           

 

*ஒரியென்டல் பேக்கரி*                     

 சங்கிலிப் பாண்.

 

 *சொக்கன் கடை*                                   

கடலை வடை.

(3 - 5 சதம்பிளேன் ரீ

(கைலாச பிள்ளாயார் கோயில்)

 

உங்களுக்கு தெரிந்தகடைகளின் பெயரை... கூறுங்களேன்😁 :grin:

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிலிற்ரறி கபே ராஜா தியேட்டர் ஓடைக்குள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

மிலிற்ரறி கபே ராஜா தியேட்டர் ஓடைக்குள்.

ஓம்... ஈழப்பிரியன், அந்தக் கடையும் இப்ப தான், நினைவு வருகுது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கன் கடை, ரொட்டியும், மாட்டு இறைச்சி ரோஸ்டுக்கும் தானே பெயர் போனது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6422516251_0985452a08_o.jpg

இந்த கொட்டல் 70/80 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவில்லையா தோழர்..? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீக்ஷித்து விலாஸ்.....!

தாமோதர விலாசுக்கு முன்பாக.

தோசை இடியப்பம்,சைவச் சாப்பாடு.....(முதலாளி ஒரு  மலையாளி. கடையின் பின்னால் அவரே எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் புக்கை கட்டுதல் முதலியன......காசு கொடுக்காமல் சாப்பிட்டாலும் பிரச்சினை இல்லை.அவரே முறித்து அவரே காட்டும் போட்டு விடுவார்)........!

சீதாஸ் கஃபே.....!

ராஜா தியேட்ட்ருக்கு முன், வின்ஸருக்கு அருகில்.....!

வழமையான உணவு வகைகள்.....!

லக்ஸ்மி விலாஸ் .....!

தாமோதர விலாசுக்கு அருகில்.....!

டிபன் சாப்பாடுகள் மற்றும் போண்டா,வடை ,சுசியம், போளி முதலியன.....!

👍  😁

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

மொக்கன் கடை, ரொட்டியும், மாட்டு இறைச்சி ரோஸ்டுக்கும் தானே பெயர் போனது.

தம்பி நாதமுனி... நீங்கள் சொல்வது, 1980´ களில்... இருந்திருக்கலாம். :)
ஆனால்.... 1970´ களில்...  "மொக்கன் கடை" யில், கோதம்ப மாவில்... 
தேங்காய்ப் பூ,  கலந்து  அவிக்கும் புட்டும், அவர்கள் வைக்கும்....
கறி, குழம்பு, சொதி.... எல்லாமே... பிரபல்யமாக இருந்தது.
அதனை... இப்ப, நினைத்தாலும்... நாக்கில்👅, ஜலம்  ஊறும். 😅

மொக்கன் கடையில்.. புட்டு, சாப்பிட வென்றே...  
சனம், பின்னேரம் 7 மணியிலிருந்து, "கியூ" வரிசையில்... காத்து இருப்பார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

6422516251_0985452a08_o.jpg

இந்த கொட்டல் 70/80 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவில்லையா தோழர்..? 

இங்கு அதிகம் போகவில்லை.நான் மட்டுமல்ல காகம் குருவியும்தான் தோழர். கிழவி (ஒளவையார்) கையில தடியோட நிக்குது.....!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

6422516251_0985452a08_o.jpg

இந்த கொட்டல் 70/80 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவில்லையா தோழர்..? 

Suresh Doss on Twitter: "Rolex Hotel. A legendary hole-in-the-wall ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

6422516251_0985452a08_o.jpg

இந்த கொட்டல் 70/80 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவில்லையா தோழர்..? 

தோழர்  புரட்சி.... இந்தப் படத்தை, தேடி எடுத்தமைக்கு, மிக்க நன்றி. ❤️
யாழ்ப்பாண பெரிய ஆஸ்பத்திரிக்கு, நேரே முன்பாக உள்ள, உணவகங்களிலில்...
கண்ட படி, ஒருவரும்... சாப்பிட மாட்டார்கள்.

காரணம்...  "கிருமி"  தொத்தி விடும்... என்று, யாழ்ப்பாணத்தானுக்கு  பயம். 
அந்த, ஆஸ்பத்திரியில்... நோயாளர்களுக்கு, இலவசமாக கொடுக்கும் உணவையே...
பலர் சாப்பிடாமல், வீட்டில் இருந்து... இடியப்பமும், சொதியும், பத்தியக் கறியும்... 
கொண்டு வந்து... கொடுப்பார்கள்.

அந்த ஆஸ்பத்திரி... வாசலில், நிற்கும் காவலாளியை பார்க்க, பாவமாக இருக்கும்.
மத்தியானம்  12 மணிக்கு முன்னம், ஒருவரையும் உள்ளே விடப் படாது.

11 மணியிலேருந்தே.... நம்ம சனம், அவருடன், வாக்கு வாதத்தில் ஈடுபட தொடங்கி விடும்.
11:30 மணிக்கு.... அந்த வாசலில், ஆயிரம் சனம் அளவில் குவிந்து இருக்கும்.
எல்லாவற்றையும்... சமாளித்து,  அனுப்பும் அந்த மனிதர்களும் போற்றுதலுக்குரியவர்கள். 

பழையவற்றை...  மீண்டும் நினைக்கும் போது, 
ஆயிரம்,  துணை நினைவுகள்... மனதில் வந்து போகின்றது. :) ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 *மொக்கன் கடை*                             

 புட்டு, ஆணம், மட்டிச் சம்பல்.

*சில வேளைகளில்... நீங்கள், குடுக்கிற காசை.. வாங்கி, 
கல்லாப்  பெட்டிக்குள், போட்டு விட்டு...
அவர் தாற,  மிச்சக் காசு.... நீங்கள் கொடுத்த காசை விட, அதிகமாக இருக்கும்.
:grin:

அதனாலோ அந்த பெயர் வந்தது மொக்கன் கடை என்று ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கறி, குழம்பு, சொதி.... எல்லாமே... பிரபல்யமாக இருந்தது.
அதனை... இப்ப, நினைத்தாலும்... நாக்கில்👅, ஜலம்  ஊறும். 😅

குறுமா, ரசம் பெயர் போனது.

கோட்டல் பரடைஸ் வண்ணாங்குளம் முன்பாக.
24 மணிநேரமும் திறந்திருக்கும்.

53 minutes ago, தமிழ் சிறி said:

தோழர்  புரட்சி.... இந்தப் படத்தை, தேடி எடுத்தமைக்கு, மிக்க நன்றி. ❤️
யாழ்ப்பாண பெரிய ஆஸ்பத்திரிக்கு, நேரே முன்பாக உள்ள, உணவகங்களிலில்...
கண்ட படி, ஒருவரும்... சாப்பிட மாட்டார்கள்.

இது சுபாஸ் கபே க்கு பக்கத்தில் என்று தான் ஞாபகம்.
விஜேகுமாரணதுங்க யாழ் வந்தநேரம் இங்கு தான் அடிக்கடி கூட்டி வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பரீக்ஷித்து விலாஸ்.....!

தாமோதர விலாசுக்கு முன்பாக.

தோசை இடியப்பம்,சைவச் சாப்பாடு.....(முதலாளி ஒரு  மலையாளி. கடையின் பின்னால் அவரே எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் புக்கை கட்டுதல் முதலியன......காசு கொடுக்காமல் சாப்பிட்டாலும் பிரச்சினை இல்லை.அவரே முறித்து அவரே காட்டும் போட்டு விடுவார்)........!

சீதாஸ் கஃபே.....!

ராஜா தியேட்ட்ருக்கு முன், வின்ஸருக்கு அருகில்.....!

வழமையான உணவு வகைகள்.....!

லக்ஸ்மி விலாஸ் .....!

தாமோதர விலாசுக்கு அருகில்.....!

டிபன் சாப்பாடுகள் மற்றும் போண்டா,வடை ,சுசியம், போளி முதலியன.....!

👍  😁

சுவி... பரீக்ஷித்து விலாஸ்.... நன்று அறிமுகமுகமான பெயர்.
உள்ளே... போய் சாப்பிடும், சந்தர்ப்பம் கிடைக்க வில்லை.

தாமோதர விலாஸ்...      
யாழ். இந்துக் கல்லூரியில்... என்னுடன், ஒரே வகுப்பில்... படித்த,
சக மாணவனின்... தகப்பன் நடத்திய கடை என்பதாலும்,
அங்கு சென்றால், விசேட கவனிப்பு இருக்கும், என்பதாலும்....  
மற்ற சைவக் கடைகளுக்கு போகும், வாய்ப்பு அரிதாகவே... இருந்து விட்டது.

பிற் குறிப்பு:  "மலயான் கபே",  "சுபாஷ் கபே" ... "தாமோதர விலாஸ்"... என்று,
பிரபலபமான  சாப்பாட்டுக்கடை  முதலாளிகளின்  மகன் மாரும், 
என்னுடன்.... ஒரே...  வகுப்பில் தான் படித்தவர்கள்.  

அதனை... நினைக்க, ஆச்சரியமாக...  உள்ளது.   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அதனாலோ அந்த பெயர் வந்தது மொக்கன் கடை என்று ?

ஓம்... பெருமாள்.  :)
முஸ்லீம்  இனத்தை.. சேர்ந்த ஒருவர், நடத்திய கடைதான்.. அது.
சமையல்... திறமாக செய்தாலும், கணக்கு.. வழக்கு பார்ப்பதில்.. சரியான "மொக்கன்." 

பிற் குறிப்பு: இப்ப... அவரின் பிள்ளைகள், இருந்தால்...
வட்டியும், குட்டியும்... சேர்த்து வசூலிப்பார்கள்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

குறுமா, ரசம் பெயர் போனது.

கோட்டல் பரடைஸ் வண்ணாங்குளம் முன்பாக.
24 மணிநேரமும் திறந்திருக்கும்.

இது சுபாஸ் கபே க்கு பக்கத்தில் என்று தான் ஞாபகம்.
விஜேகுமாரணதுங்க யாழ் வந்தநேரம் இங்கு தான் அடிக்கடி கூட்டி வருவார்கள்.

ஈழப்பிரியன்....  குறுமா ரசத்தைத் தான்... 
வாசகர்கள். புரியும் படியாக, "சொதி"  என... குறிப்பிட்டேன். :)

அப்பவும், இப்பவும்... தமிழ் வீடுகளில்.... நமது  "இல்லத்து அரசிகள்"... 
"குறுமா ரசம்"  செய்வதைப் பற்றி கேள்விப்  படவில்லை. 

கஸ்தூரியார் வீதியில் இருந்த,   "கோட்டல் பரடைஸ்" நினைவில் வருகின்றது.
வல்வெட்டி துறையை சேர்ந்தவர்கள்,  நடத்திய கடை என கேள்விப் பட்டேன்.

அந்தக் கடை வாசலில்.... வாடிக்கையாளரை கவர்வதற்காக...
அவர்களுக்கு சொந்தமான, சிலோன் (---) என்ற வாகனத் தகட்டு  இலக்கத்தில் 
உதாரணத்துக்கு...  கண்ட நினைவு. 

"ஹோட்டல் பாரடைசுக்கு" முன்பாக... பெரிய குளம் ஒன்று, 
புற்களுடன் பசுமையாக  இருந்தது.
பலர்... அதில்,  உடுப்பு தோய்த்து.... அந்தப் புல் வெளியில் காய விட்டதை,
என் கண்ணால்... சிறு வயதில், பார்த்தும்  இருக்கின்றேன்.

நான்... வாலிப வயதை எட்டும் போதே... 
அந்தப் புல் வெளிகள்... காணமால் போய், அந்த இடத்தில்....
"பூம் புகார்" என்ற... உணவகம் வந்தது.

எமது... இயற்கை... எம் கண் முன்னே.... 
எப்படி, அபகரிக்கப் படுகின்றது, என்பதைக் காண வேதனையாக உள்ளது. 

யாழ். இந்துக் கல்லூரியில்.... கணபதிப்பிள்ளை  என்ற தமிழ் ஆசிரியர்,
மாணவராகிய எமக்கு.... பாடம் எடுக்கும் போது...   
தான்... சிறு வயதில் இருந்த போது.... 
வெலிங்டன் தியேட்டர் சந்தி (லிங்கம் கூல் பார்) அங்காலை, 
ஆரிய குளம் எல்லாம், வயல் வெளிகளாம்... என்று சொன்னவர்.

நாங்கள்.... எங்கள் மண்ணை, தினமும்... எவ்வளவு இழக்கின்றோம்.
என்பதை நினைக்க... வேதனை தான், மிஞ்சம். 😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஓம்... பெருமாள்.  :)
முஸ்லீம்  இனத்தை.. சேர்ந்த ஒருவர், நடத்திய கடைதான்.. அது.
சமையல்... நிறமாக செய்தாலும், கணக்கு.. வழக்கு பார்ப்பதில்.. சரியான "மொக்கன்." 

பிற் குறிப்பு: இப்ப... அவரின் பிள்ளைகள், இருந்தால்...
வட்டியும், குட்டியும்... சேர்த்து வசூலிப்பார்கள்.   :grin:

சில வியாபாரங்களில் விளம்பரம் செய்வதை விட விளம்பரத்துக்கு செய்யும் சிலவுக்கு விலையை குறைத்து கொடுப்பது ஒருவகையான விளம்பர உத்தி .அதே போல் மொக்கன் கடை மூணாவும் அநியாயத்துக்கு கணக்கு வழக்கு தெரியாத அப்பாவி போல் நடித்து தனது கடை வியபாரத்தை பெருக்கியும் இருக்கலாம் .அவரின் கடையில்  முஸ்லிம்கள் வாடிக்கையாளராக இருந்து இருந்தால் ஓரளவுக்கு நம்பலாம் .

மாட்டை உண்ணுவது இழுக்கு பாவம் எனும் ஊரில் தங்கள் உணவுக்கடைகள்  மூலம் மாற்றியமைத்த பெருமக்கள் அவர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அட பாவிகளா
யாழ் இந்து பெருமக்களா

பத்மாகபேயை எப்படி மறந்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

அட பாவிகளா
யாழ் இந்து பெருமக்களா

பத்மாகபேயை எப்படி மறந்தீர்கள்?

அதானே.... அந்தக் காலத்திலேயே.....
வடை, தோசை, இட்டலி... போன்றவைக்கு, தேவையான உளுந்தை அரைக்க,
மெசின் நெடுக, ஓடிக் கொண்டே இருக்கும்.
அந்தக் கடைக்குப் பின்... உளுந்து மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டு, 
சிறிய... ஒரு தொழிற்சாலை மாதிரி இயங்கி வந்தது.. பத்மா கபே.

கந்தர்மட சந்தியில்.... இருந்த, சின்னத்தம்பி கடையின் சுத்தம், சுகாதாரம்...
இலங்கையில்.. எங்கும் இருக்காது. அப்பிடி... எல்லாம், பளிச் என்று, மினுங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி,

சிங்களவவர்களில் உணவகங்கள் அக்காலத்தி யாழில் இல்லையா? விகாரைகள்/சிங்கள பாடசாலைகள் அங்கு அக்காலத்தில் இருந்தனவே. அவர்களது சமையலான பருப்பு கறி, கருவாடு பிரட்டல், ஈர பிலாக்கை பால்கறி, கீரை சுண்டல் போன்றவை கிடைக்குமா?. மேலும் யாழில் சம்பா அரிசி உண்ணுவது குறைவு என்று நினக்கின்றேன். சிகப்பரிசியே சமைக்கப்படும் அது தடிப்பமாக இருக்கும். 

பேக்கரிகள் பொதுவாக சிங்களவர்களே நடத்தியிருப்பார்கள் என நினக்கின்றேன். சிரிமாவின் காலத்தில் அங்கும் மக்கள் கியூவில் நின்றார்களா?  ‌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, colomban said:

தமிழ் சிறி,

சிங்களவவர்களில் உணவகங்கள் அக்காலத்தி யாழில் இல்லையா? விகாரைகள்/சிங்கள பாடசாலைகள் அங்கு அக்காலத்தில் இருந்தனவே. அவர்களது சமையலான பருப்பு கறி, கருவாடு பிரட்டல், ஈர பிலாக்கை பால்கறி, கீரை சுண்டல் போன்றவை கிடைக்குமா?. மேலும் யாழில் சம்பா அரிசி உண்ணுவது குறைவு என்று நினக்கின்றேன். சிகப்பரிசியே சமைக்கப்படும் அது தடிப்பமாக இருக்கும். 

பேக்கரிகள் பொதுவாக சிங்களவர்களே நடத்தியிருப்பார்கள் என நினக்கின்றேன். சிரிமாவின் காலத்தில் அங்கும் மக்கள் கியூவில் நின்றார்களா?  ‌

நிறைய பேக்கரிகள் இருந்தன.சிறிய சிறிய தேநீர்க்கடைகள் இருந்தன.பெரிய கடைகள் என்று எதுவும் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

தோழர்  புரட்சி.... இந்தப் படத்தை, தேடி எடுத்தமைக்கு, மிக்க நன்றி. ❤️
யாழ்ப்பாண பெரிய ஆஸ்பத்திரிக்கு, நேரே முன்பாக உள்ள, உணவகங்களிலில்...
கண்ட படி, ஒருவரும்... சாப்பிட மாட்டார்கள்.

காரணம்...  "கிருமி"  தொத்தி விடும்... என்று, யாழ்ப்பாணத்தானுக்கு  பயம். 
அந்த, ஆஸ்பத்திரியில்... நோயாளர்களுக்கு, இலவசமாக கொடுக்கும் உணவையே...
பலர் சாப்பிடாமல், வீட்டில் இருந்து... இடியப்பமும், சொதியும், பத்தியக் கறியும்... 
கொண்டு வந்து... கொடுப்பார்கள்.

அந்த ஆஸ்பத்திரி... வாசலில், நிற்கும் காவலாளியை பார்க்க, பாவமாக இருக்கும்.
மத்தியானம்  12 மணிக்கு முன்னம், ஒருவரையும் உள்ளே விடப் படாது.

11 மணியிலேருந்தே.... நம்ம சனம், அவருடன், வாக்கு வாதத்தில் ஈடுபட தொடங்கி விடும்.
11:30 மணிக்கு.... அந்த வாசலில், ஆயிரம் சனம் அளவில் குவிந்து இருக்கும்.
எல்லாவற்றையும்... சமாளித்து,  அனுப்பும் அந்த மனிதர்களும் போற்றுதலுக்குரியவர்கள். 

பழையவற்றை...  மீண்டும் நினைக்கும் போது, 
ஆயிரம்,  துணை நினைவுகள்... மனதில் வந்து போகின்றது. :) ☺️

சிறி,
இந்த கடை நாங்கள் திரிந்த 80 களின் கடைசியிலும் 90களிலும் மிகவும் பிரபல்யம். இவர்களது பிரியாணியும் மட்டன் ரோல்உம் சாப்பிடாமல் எங்களது Tuition  வாழ்க்கை போகாது. அந்த வயதில் எமது பார்ட்டிகள்கூட ஒன்று இங்கே அல்லது லிங்கம் கூல்பார் இல் தான் நடக்கும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நீர்வேலியான் said:

சிறி,
இந்த கடை நாங்கள் திரிந்த 80 களின் கடைசியிலும் 90களிலும் மிகவும் பிரபல்யம். இவர்களது பிரியாணியும் மட்டன் ரோல்உம் சாப்பிடாமல் எங்களது Tuition  வாழ்க்கை போகாது. அந்த வயதில் எமது பார்ட்டிகள்கூட ஒன்று இங்கே அல்லது லிங்கம் கூல்பார் இல் தான் நடக்கும்   

நீர்வேலியான் இது இருந்த இடம் ஞாபகம் இருக்கிறதா?
ஆஸ்பத்திரி முன்பாக இருந்ததாக சிறி சொல்கிறார்.
ஆனால் சுபாசுக்கு போட்டியாக பஸ்நிலையம் முன்பாகவே இருந்ததாக நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

Suresh Doss on Twitter: "Rolex Hotel. A legendary hole-in-the-wall ...

தோழர் , மட்டன் சாப்ஸ் , முட்டை , இடியாப்பம் , தேங்காய் சம்பல்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

நீர்வேலியான் இது இருந்த இடம் ஞாபகம் இருக்கிறதா?
ஆஸ்பத்திரி முன்பாக இருந்ததாக சிறி சொல்கிறார்.
ஆனால் சுபாசுக்கு போட்டியாக பஸ்நிலையம் முன்பாகவே இருந்ததாக நினைவு.

இது ஆஸ்பத்திரியில் இருந்து தள்ளியே இருந்தது, இப்பவும் அதே இடத்தில இருக்கிறது. கஸ்துரியார் வீதியும் ஆஸ்பத்திரி வீதியும் சந்திக்கும் இடத்தில இருந்தது, சுபாஷ் ஐஸ் கிரீம் கஃபே பக்கம்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரிலிருக்கும்போது கடைகளில் சாப்பிட்டது குறைவு. படிக்கும் போது பெடியளுட்ன் போய் சங்கானையிலிருக்கும் ஒரு சாப்பாட்டுக்கடையில் கொத்து ரொட்டி சாப்பிடுவது வழக்கம். கடைகளின் பெயர்கள் ஞபகமில்லை, வேறு கடைகளுக்கு போனாலும் பிளோன்ரி ஒரு வடை, அவ்வளவுதான், கொழும்பு வந்தபின்தான் கடைச்சாப்பாடு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.