Jump to content

70/80 களில்  யாழ்ப்பாணத்தில் இருந்த  Restaurant களின் பெயர் விபரமும், விலைப் பட்டியலும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1970 1980 களில்...

யாழ்ப்பாணத்தில்... இருந்த,  Restaurant களின்

பெயர் விபரமும்விலைப் பட்டியலும்:grin:

 

*கோட்டை முனியப்பகோயில்

தேங்காய்ச் சொட்டு.

 

 *பரணி ஹோட்டல்*                       

அப்பம்.

 

 *சிற்ரி பேக்கறி*                               

 கால், றாத்தல்... பாணும், பருப்பும்....

 

 *சுபாஸ் கபே*                                 

 ஐஸ்கிரீம்.

 

*றிக்கோ கோப்பி பார்*                            

 றோல்ஸ்கோப்பி.

 

 *மலாயன் கபே*                               

 உளுந்து வடை  போளி.

 

 *தாமோதர விலாஸ்*                      

 நெய் தோசை.

 

*சந்திரா ஐஸ் கிறீம்*                      

ஐஸ் சொக்.

 

 *கொழும்பு றெஸ் ரோறன்ட்*          

  இறால்கறி, குளம்பு.

 

 *பிளவ்ஸ்*                                         

 Beef றோஸ்.

(5 சதம்)         

 

 *மொக்கன் கடை*                             

 புட்டு, ஆணம், மட்டிச் சம்பல்.

*சில வேளைகளில்... நீங்கள், குடுக்கிற காசை.. வாங்கி, 
கல்லாப்  பெட்டிக்குள், போட்டு விட்டு...
அவர் தாற,  மிச்சக் காசு.... நீங்கள் கொடுத்த காசை விட, அதிகமாக இருக்கும்.
:grin:

 

*முனீஸ்வரா கபே*                       

    புட்டு, இடியப்பம், புளிச்சொதி,  தாளித்த சம்பல் (கடுகு தூக்கல்).

(வெலிங்டன் சந்தி)

 

*லிங்கம் கூல்பார்*                             

 சர்பத் , இதரை வாழைப்பழம், பீடா..........

(வெலிங்டன் சந்தி)

 

*கபே பாரத்*                                            

 அப்பம், பிளேன் ரீ.

(ஆரிய குளம் சந்தி)                           

 

*ஒரியென்டல் பேக்கரி*                     

 சங்கிலிப் பாண்.

 

 *சொக்கன் கடை*                                   

கடலை வடை.

(3 - 5 சதம்பிளேன் ரீ

(கைலாச பிள்ளாயார் கோயில்)

 

உங்களுக்கு தெரிந்தகடைகளின் பெயரை... கூறுங்களேன்😁 :grin:

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிலிற்ரறி கபே ராஜா தியேட்டர் ஓடைக்குள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

மிலிற்ரறி கபே ராஜா தியேட்டர் ஓடைக்குள்.

ஓம்... ஈழப்பிரியன், அந்தக் கடையும் இப்ப தான், நினைவு வருகுது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கன் கடை, ரொட்டியும், மாட்டு இறைச்சி ரோஸ்டுக்கும் தானே பெயர் போனது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6422516251_0985452a08_o.jpg

இந்த கொட்டல் 70/80 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவில்லையா தோழர்..? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீக்ஷித்து விலாஸ்.....!

தாமோதர விலாசுக்கு முன்பாக.

தோசை இடியப்பம்,சைவச் சாப்பாடு.....(முதலாளி ஒரு  மலையாளி. கடையின் பின்னால் அவரே எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் புக்கை கட்டுதல் முதலியன......காசு கொடுக்காமல் சாப்பிட்டாலும் பிரச்சினை இல்லை.அவரே முறித்து அவரே காட்டும் போட்டு விடுவார்)........!

சீதாஸ் கஃபே.....!

ராஜா தியேட்ட்ருக்கு முன், வின்ஸருக்கு அருகில்.....!

வழமையான உணவு வகைகள்.....!

லக்ஸ்மி விலாஸ் .....!

தாமோதர விலாசுக்கு அருகில்.....!

டிபன் சாப்பாடுகள் மற்றும் போண்டா,வடை ,சுசியம், போளி முதலியன.....!

👍  😁

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

மொக்கன் கடை, ரொட்டியும், மாட்டு இறைச்சி ரோஸ்டுக்கும் தானே பெயர் போனது.

தம்பி நாதமுனி... நீங்கள் சொல்வது, 1980´ களில்... இருந்திருக்கலாம். :)
ஆனால்.... 1970´ களில்...  "மொக்கன் கடை" யில், கோதம்ப மாவில்... 
தேங்காய்ப் பூ,  கலந்து  அவிக்கும் புட்டும், அவர்கள் வைக்கும்....
கறி, குழம்பு, சொதி.... எல்லாமே... பிரபல்யமாக இருந்தது.
அதனை... இப்ப, நினைத்தாலும்... நாக்கில்👅, ஜலம்  ஊறும். 😅

மொக்கன் கடையில்.. புட்டு, சாப்பிட வென்றே...  
சனம், பின்னேரம் 7 மணியிலிருந்து, "கியூ" வரிசையில்... காத்து இருப்பார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

6422516251_0985452a08_o.jpg

இந்த கொட்டல் 70/80 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவில்லையா தோழர்..? 

இங்கு அதிகம் போகவில்லை.நான் மட்டுமல்ல காகம் குருவியும்தான் தோழர். கிழவி (ஒளவையார்) கையில தடியோட நிக்குது.....!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

6422516251_0985452a08_o.jpg

இந்த கொட்டல் 70/80 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவில்லையா தோழர்..? 

Suresh Doss on Twitter: "Rolex Hotel. A legendary hole-in-the-wall ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

6422516251_0985452a08_o.jpg

இந்த கொட்டல் 70/80 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவில்லையா தோழர்..? 

தோழர்  புரட்சி.... இந்தப் படத்தை, தேடி எடுத்தமைக்கு, மிக்க நன்றி. ❤️
யாழ்ப்பாண பெரிய ஆஸ்பத்திரிக்கு, நேரே முன்பாக உள்ள, உணவகங்களிலில்...
கண்ட படி, ஒருவரும்... சாப்பிட மாட்டார்கள்.

காரணம்...  "கிருமி"  தொத்தி விடும்... என்று, யாழ்ப்பாணத்தானுக்கு  பயம். 
அந்த, ஆஸ்பத்திரியில்... நோயாளர்களுக்கு, இலவசமாக கொடுக்கும் உணவையே...
பலர் சாப்பிடாமல், வீட்டில் இருந்து... இடியப்பமும், சொதியும், பத்தியக் கறியும்... 
கொண்டு வந்து... கொடுப்பார்கள்.

அந்த ஆஸ்பத்திரி... வாசலில், நிற்கும் காவலாளியை பார்க்க, பாவமாக இருக்கும்.
மத்தியானம்  12 மணிக்கு முன்னம், ஒருவரையும் உள்ளே விடப் படாது.

11 மணியிலேருந்தே.... நம்ம சனம், அவருடன், வாக்கு வாதத்தில் ஈடுபட தொடங்கி விடும்.
11:30 மணிக்கு.... அந்த வாசலில், ஆயிரம் சனம் அளவில் குவிந்து இருக்கும்.
எல்லாவற்றையும்... சமாளித்து,  அனுப்பும் அந்த மனிதர்களும் போற்றுதலுக்குரியவர்கள். 

பழையவற்றை...  மீண்டும் நினைக்கும் போது, 
ஆயிரம்,  துணை நினைவுகள்... மனதில் வந்து போகின்றது. :) ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 *மொக்கன் கடை*                             

 புட்டு, ஆணம், மட்டிச் சம்பல்.

*சில வேளைகளில்... நீங்கள், குடுக்கிற காசை.. வாங்கி, 
கல்லாப்  பெட்டிக்குள், போட்டு விட்டு...
அவர் தாற,  மிச்சக் காசு.... நீங்கள் கொடுத்த காசை விட, அதிகமாக இருக்கும்.
:grin:

அதனாலோ அந்த பெயர் வந்தது மொக்கன் கடை என்று ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கறி, குழம்பு, சொதி.... எல்லாமே... பிரபல்யமாக இருந்தது.
அதனை... இப்ப, நினைத்தாலும்... நாக்கில்👅, ஜலம்  ஊறும். 😅

குறுமா, ரசம் பெயர் போனது.

கோட்டல் பரடைஸ் வண்ணாங்குளம் முன்பாக.
24 மணிநேரமும் திறந்திருக்கும்.

53 minutes ago, தமிழ் சிறி said:

தோழர்  புரட்சி.... இந்தப் படத்தை, தேடி எடுத்தமைக்கு, மிக்க நன்றி. ❤️
யாழ்ப்பாண பெரிய ஆஸ்பத்திரிக்கு, நேரே முன்பாக உள்ள, உணவகங்களிலில்...
கண்ட படி, ஒருவரும்... சாப்பிட மாட்டார்கள்.

இது சுபாஸ் கபே க்கு பக்கத்தில் என்று தான் ஞாபகம்.
விஜேகுமாரணதுங்க யாழ் வந்தநேரம் இங்கு தான் அடிக்கடி கூட்டி வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பரீக்ஷித்து விலாஸ்.....!

தாமோதர விலாசுக்கு முன்பாக.

தோசை இடியப்பம்,சைவச் சாப்பாடு.....(முதலாளி ஒரு  மலையாளி. கடையின் பின்னால் அவரே எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் புக்கை கட்டுதல் முதலியன......காசு கொடுக்காமல் சாப்பிட்டாலும் பிரச்சினை இல்லை.அவரே முறித்து அவரே காட்டும் போட்டு விடுவார்)........!

சீதாஸ் கஃபே.....!

ராஜா தியேட்ட்ருக்கு முன், வின்ஸருக்கு அருகில்.....!

வழமையான உணவு வகைகள்.....!

லக்ஸ்மி விலாஸ் .....!

தாமோதர விலாசுக்கு அருகில்.....!

டிபன் சாப்பாடுகள் மற்றும் போண்டா,வடை ,சுசியம், போளி முதலியன.....!

👍  😁

சுவி... பரீக்ஷித்து விலாஸ்.... நன்று அறிமுகமுகமான பெயர்.
உள்ளே... போய் சாப்பிடும், சந்தர்ப்பம் கிடைக்க வில்லை.

தாமோதர விலாஸ்...      
யாழ். இந்துக் கல்லூரியில்... என்னுடன், ஒரே வகுப்பில்... படித்த,
சக மாணவனின்... தகப்பன் நடத்திய கடை என்பதாலும்,
அங்கு சென்றால், விசேட கவனிப்பு இருக்கும், என்பதாலும்....  
மற்ற சைவக் கடைகளுக்கு போகும், வாய்ப்பு அரிதாகவே... இருந்து விட்டது.

பிற் குறிப்பு:  "மலயான் கபே",  "சுபாஷ் கபே" ... "தாமோதர விலாஸ்"... என்று,
பிரபலபமான  சாப்பாட்டுக்கடை  முதலாளிகளின்  மகன் மாரும், 
என்னுடன்.... ஒரே...  வகுப்பில் தான் படித்தவர்கள்.  

அதனை... நினைக்க, ஆச்சரியமாக...  உள்ளது.   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அதனாலோ அந்த பெயர் வந்தது மொக்கன் கடை என்று ?

ஓம்... பெருமாள்.  :)
முஸ்லீம்  இனத்தை.. சேர்ந்த ஒருவர், நடத்திய கடைதான்.. அது.
சமையல்... திறமாக செய்தாலும், கணக்கு.. வழக்கு பார்ப்பதில்.. சரியான "மொக்கன்." 

பிற் குறிப்பு: இப்ப... அவரின் பிள்ளைகள், இருந்தால்...
வட்டியும், குட்டியும்... சேர்த்து வசூலிப்பார்கள்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

குறுமா, ரசம் பெயர் போனது.

கோட்டல் பரடைஸ் வண்ணாங்குளம் முன்பாக.
24 மணிநேரமும் திறந்திருக்கும்.

இது சுபாஸ் கபே க்கு பக்கத்தில் என்று தான் ஞாபகம்.
விஜேகுமாரணதுங்க யாழ் வந்தநேரம் இங்கு தான் அடிக்கடி கூட்டி வருவார்கள்.

ஈழப்பிரியன்....  குறுமா ரசத்தைத் தான்... 
வாசகர்கள். புரியும் படியாக, "சொதி"  என... குறிப்பிட்டேன். :)

அப்பவும், இப்பவும்... தமிழ் வீடுகளில்.... நமது  "இல்லத்து அரசிகள்"... 
"குறுமா ரசம்"  செய்வதைப் பற்றி கேள்விப்  படவில்லை. 

கஸ்தூரியார் வீதியில் இருந்த,   "கோட்டல் பரடைஸ்" நினைவில் வருகின்றது.
வல்வெட்டி துறையை சேர்ந்தவர்கள்,  நடத்திய கடை என கேள்விப் பட்டேன்.

அந்தக் கடை வாசலில்.... வாடிக்கையாளரை கவர்வதற்காக...
அவர்களுக்கு சொந்தமான, சிலோன் (---) என்ற வாகனத் தகட்டு  இலக்கத்தில் 
உதாரணத்துக்கு...  கண்ட நினைவு. 

"ஹோட்டல் பாரடைசுக்கு" முன்பாக... பெரிய குளம் ஒன்று, 
புற்களுடன் பசுமையாக  இருந்தது.
பலர்... அதில்,  உடுப்பு தோய்த்து.... அந்தப் புல் வெளியில் காய விட்டதை,
என் கண்ணால்... சிறு வயதில், பார்த்தும்  இருக்கின்றேன்.

நான்... வாலிப வயதை எட்டும் போதே... 
அந்தப் புல் வெளிகள்... காணமால் போய், அந்த இடத்தில்....
"பூம் புகார்" என்ற... உணவகம் வந்தது.

எமது... இயற்கை... எம் கண் முன்னே.... 
எப்படி, அபகரிக்கப் படுகின்றது, என்பதைக் காண வேதனையாக உள்ளது. 

யாழ். இந்துக் கல்லூரியில்.... கணபதிப்பிள்ளை  என்ற தமிழ் ஆசிரியர்,
மாணவராகிய எமக்கு.... பாடம் எடுக்கும் போது...   
தான்... சிறு வயதில் இருந்த போது.... 
வெலிங்டன் தியேட்டர் சந்தி (லிங்கம் கூல் பார்) அங்காலை, 
ஆரிய குளம் எல்லாம், வயல் வெளிகளாம்... என்று சொன்னவர்.

நாங்கள்.... எங்கள் மண்ணை, தினமும்... எவ்வளவு இழக்கின்றோம்.
என்பதை நினைக்க... வேதனை தான், மிஞ்சம். 😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஓம்... பெருமாள்.  :)
முஸ்லீம்  இனத்தை.. சேர்ந்த ஒருவர், நடத்திய கடைதான்.. அது.
சமையல்... நிறமாக செய்தாலும், கணக்கு.. வழக்கு பார்ப்பதில்.. சரியான "மொக்கன்." 

பிற் குறிப்பு: இப்ப... அவரின் பிள்ளைகள், இருந்தால்...
வட்டியும், குட்டியும்... சேர்த்து வசூலிப்பார்கள்.   :grin:

சில வியாபாரங்களில் விளம்பரம் செய்வதை விட விளம்பரத்துக்கு செய்யும் சிலவுக்கு விலையை குறைத்து கொடுப்பது ஒருவகையான விளம்பர உத்தி .அதே போல் மொக்கன் கடை மூணாவும் அநியாயத்துக்கு கணக்கு வழக்கு தெரியாத அப்பாவி போல் நடித்து தனது கடை வியபாரத்தை பெருக்கியும் இருக்கலாம் .அவரின் கடையில்  முஸ்லிம்கள் வாடிக்கையாளராக இருந்து இருந்தால் ஓரளவுக்கு நம்பலாம் .

மாட்டை உண்ணுவது இழுக்கு பாவம் எனும் ஊரில் தங்கள் உணவுக்கடைகள்  மூலம் மாற்றியமைத்த பெருமக்கள் அவர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அட பாவிகளா
யாழ் இந்து பெருமக்களா

பத்மாகபேயை எப்படி மறந்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

அட பாவிகளா
யாழ் இந்து பெருமக்களா

பத்மாகபேயை எப்படி மறந்தீர்கள்?

அதானே.... அந்தக் காலத்திலேயே.....
வடை, தோசை, இட்டலி... போன்றவைக்கு, தேவையான உளுந்தை அரைக்க,
மெசின் நெடுக, ஓடிக் கொண்டே இருக்கும்.
அந்தக் கடைக்குப் பின்... உளுந்து மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டு, 
சிறிய... ஒரு தொழிற்சாலை மாதிரி இயங்கி வந்தது.. பத்மா கபே.

கந்தர்மட சந்தியில்.... இருந்த, சின்னத்தம்பி கடையின் சுத்தம், சுகாதாரம்...
இலங்கையில்.. எங்கும் இருக்காது. அப்பிடி... எல்லாம், பளிச் என்று, மினுங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி,

சிங்களவவர்களில் உணவகங்கள் அக்காலத்தி யாழில் இல்லையா? விகாரைகள்/சிங்கள பாடசாலைகள் அங்கு அக்காலத்தில் இருந்தனவே. அவர்களது சமையலான பருப்பு கறி, கருவாடு பிரட்டல், ஈர பிலாக்கை பால்கறி, கீரை சுண்டல் போன்றவை கிடைக்குமா?. மேலும் யாழில் சம்பா அரிசி உண்ணுவது குறைவு என்று நினக்கின்றேன். சிகப்பரிசியே சமைக்கப்படும் அது தடிப்பமாக இருக்கும். 

பேக்கரிகள் பொதுவாக சிங்களவர்களே நடத்தியிருப்பார்கள் என நினக்கின்றேன். சிரிமாவின் காலத்தில் அங்கும் மக்கள் கியூவில் நின்றார்களா?  ‌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, colomban said:

தமிழ் சிறி,

சிங்களவவர்களில் உணவகங்கள் அக்காலத்தி யாழில் இல்லையா? விகாரைகள்/சிங்கள பாடசாலைகள் அங்கு அக்காலத்தில் இருந்தனவே. அவர்களது சமையலான பருப்பு கறி, கருவாடு பிரட்டல், ஈர பிலாக்கை பால்கறி, கீரை சுண்டல் போன்றவை கிடைக்குமா?. மேலும் யாழில் சம்பா அரிசி உண்ணுவது குறைவு என்று நினக்கின்றேன். சிகப்பரிசியே சமைக்கப்படும் அது தடிப்பமாக இருக்கும். 

பேக்கரிகள் பொதுவாக சிங்களவர்களே நடத்தியிருப்பார்கள் என நினக்கின்றேன். சிரிமாவின் காலத்தில் அங்கும் மக்கள் கியூவில் நின்றார்களா?  ‌

நிறைய பேக்கரிகள் இருந்தன.சிறிய சிறிய தேநீர்க்கடைகள் இருந்தன.பெரிய கடைகள் என்று எதுவும் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

தோழர்  புரட்சி.... இந்தப் படத்தை, தேடி எடுத்தமைக்கு, மிக்க நன்றி. ❤️
யாழ்ப்பாண பெரிய ஆஸ்பத்திரிக்கு, நேரே முன்பாக உள்ள, உணவகங்களிலில்...
கண்ட படி, ஒருவரும்... சாப்பிட மாட்டார்கள்.

காரணம்...  "கிருமி"  தொத்தி விடும்... என்று, யாழ்ப்பாணத்தானுக்கு  பயம். 
அந்த, ஆஸ்பத்திரியில்... நோயாளர்களுக்கு, இலவசமாக கொடுக்கும் உணவையே...
பலர் சாப்பிடாமல், வீட்டில் இருந்து... இடியப்பமும், சொதியும், பத்தியக் கறியும்... 
கொண்டு வந்து... கொடுப்பார்கள்.

அந்த ஆஸ்பத்திரி... வாசலில், நிற்கும் காவலாளியை பார்க்க, பாவமாக இருக்கும்.
மத்தியானம்  12 மணிக்கு முன்னம், ஒருவரையும் உள்ளே விடப் படாது.

11 மணியிலேருந்தே.... நம்ம சனம், அவருடன், வாக்கு வாதத்தில் ஈடுபட தொடங்கி விடும்.
11:30 மணிக்கு.... அந்த வாசலில், ஆயிரம் சனம் அளவில் குவிந்து இருக்கும்.
எல்லாவற்றையும்... சமாளித்து,  அனுப்பும் அந்த மனிதர்களும் போற்றுதலுக்குரியவர்கள். 

பழையவற்றை...  மீண்டும் நினைக்கும் போது, 
ஆயிரம்,  துணை நினைவுகள்... மனதில் வந்து போகின்றது. :) ☺️

சிறி,
இந்த கடை நாங்கள் திரிந்த 80 களின் கடைசியிலும் 90களிலும் மிகவும் பிரபல்யம். இவர்களது பிரியாணியும் மட்டன் ரோல்உம் சாப்பிடாமல் எங்களது Tuition  வாழ்க்கை போகாது. அந்த வயதில் எமது பார்ட்டிகள்கூட ஒன்று இங்கே அல்லது லிங்கம் கூல்பார் இல் தான் நடக்கும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நீர்வேலியான் said:

சிறி,
இந்த கடை நாங்கள் திரிந்த 80 களின் கடைசியிலும் 90களிலும் மிகவும் பிரபல்யம். இவர்களது பிரியாணியும் மட்டன் ரோல்உம் சாப்பிடாமல் எங்களது Tuition  வாழ்க்கை போகாது. அந்த வயதில் எமது பார்ட்டிகள்கூட ஒன்று இங்கே அல்லது லிங்கம் கூல்பார் இல் தான் நடக்கும்   

நீர்வேலியான் இது இருந்த இடம் ஞாபகம் இருக்கிறதா?
ஆஸ்பத்திரி முன்பாக இருந்ததாக சிறி சொல்கிறார்.
ஆனால் சுபாசுக்கு போட்டியாக பஸ்நிலையம் முன்பாகவே இருந்ததாக நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

Suresh Doss on Twitter: "Rolex Hotel. A legendary hole-in-the-wall ...

தோழர் , மட்டன் சாப்ஸ் , முட்டை , இடியாப்பம் , தேங்காய் சம்பல்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

நீர்வேலியான் இது இருந்த இடம் ஞாபகம் இருக்கிறதா?
ஆஸ்பத்திரி முன்பாக இருந்ததாக சிறி சொல்கிறார்.
ஆனால் சுபாசுக்கு போட்டியாக பஸ்நிலையம் முன்பாகவே இருந்ததாக நினைவு.

இது ஆஸ்பத்திரியில் இருந்து தள்ளியே இருந்தது, இப்பவும் அதே இடத்தில இருக்கிறது. கஸ்துரியார் வீதியும் ஆஸ்பத்திரி வீதியும் சந்திக்கும் இடத்தில இருந்தது, சுபாஷ் ஐஸ் கிரீம் கஃபே பக்கம்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரிலிருக்கும்போது கடைகளில் சாப்பிட்டது குறைவு. படிக்கும் போது பெடியளுட்ன் போய் சங்கானையிலிருக்கும் ஒரு சாப்பாட்டுக்கடையில் கொத்து ரொட்டி சாப்பிடுவது வழக்கம். கடைகளின் பெயர்கள் ஞபகமில்லை, வேறு கடைகளுக்கு போனாலும் பிளோன்ரி ஒரு வடை, அவ்வளவுதான், கொழும்பு வந்தபின்தான் கடைச்சாப்பாடு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.