Jump to content

எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல்

இரட்டை குடியுரிமையை கொண்டுள்ளதால் நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு தனக்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதியாக இருந்த போதே நான் நாட்டை விட்டு சென்றேன். 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினேன்.

பின்னர் 2011 ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து பேசியதால் அப்போதைய அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு இலக்கானேன்.

எனவே தான் நான் இரட்டை குடியுரிமையை பெற்றேன். ஆதனால் நாட்டை விட்டு இரண்டாவது தடவையாகவும் சென்றேன்.

இருப்பினும் இலங்கையில் வசித்து, இறப்பதே எனது ஆசை. இப்போதும் அமெரிக்காவுக்கு செல்வோம் என்று என் குடும்பத்தார் கூறுகின்றனர். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை.

நான் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக பத்திரிகை ஒன்றில் எழுதப்படுகின்றது. அப்படி சொல்லப்படும் போது சிங்கள மக்கள் அதை நம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மற்ற பக்கத்தில் தமிழர்கள் என்னை ஒரு தேசியத்திற்கு எதிரான ஒருவாராகவே பார்ப்பர். அப்படி எல்லோருக்கும் இடையில் அவப்பெயரை சம்பாதித்துக் கொண்டு வாழ்வது துக்கம். சுரியான துக்கம் எனவும் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/144967?ref=imp-news

 

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

மஹிந்த ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து பேசியதால் அப்போதைய அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு இலக்கானேன்.

காரணத்தை நம்புகிறோம், ஏற்றுக்கொள்கிறோம்.

1 hour ago, உடையார் said:

விடுதலைப் புலிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினேன்.

விடுதலைப் புலிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தலுக்குக் காரணம் என்ன? அதனையும் வெளிப்படுத்தினால்... நடந்ததை அறிந்து நாங்களும் ரென்சனின்றிக் கூலாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல்

எனது இந்த நிலைக்கு மஹிந்தவும்
உதை கேட்கும்போது எங்களுக்கு படு கூல் , 

ஒருவேளை மகிந்தவிற்கு பதிலாக மீண்டும் புலிகளை போடுவாரோ பேரா ..என்று பார்த்தால் தெளிவாக தான் இருக்கிறார்.
சட்ட கிழிஞ்சிருந்தா தைத்து முறையிடலாம் பனையே முறிஞ்சிருக்கு எங்க முறையிடலாம் ....? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இவர் எல்லாம் ஒரு போராசிரியர் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இவர் எல்லாம் ஒரு போராசிரியர் 😏

சரி, அவர் படிக்காத பாடங்கள் எவையென்று நீங்கள் சொன்னால் பலருக்கு உதவியாக இருக்கக் கூடுமல்லவா? சொல்லுங்களேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

சரி, அவர் படிக்காத பாடங்கள் எவையென்று நீங்கள் சொன்னால் பலருக்கு உதவியாக இருக்கக் கூடுமல்லவா? சொல்லுங்களேன்?

உண்மையைக் கூறுங்கள்,

1) பேராசிரியரை நொந்தது உங்கள் பிரச்சனையா அல்லது

2) வரலாறு என்று நான் குறிப்பிட்டது உமக்குப் புரியவில்லையா 

எதுவென்று குறிப்பிட்டால் பலருக்குப் (😏) பாடமெடுக்க வசதியாக இருக்கும் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

உண்மையைக் கூறுங்கள்,

1) பேராசிரியரை நொந்தது உங்கள் பிரச்சனையா அல்லது

2) வரலாறு என்று நான் குறிப்பிட்டது உமக்குப் புரியவில்லையா 

எதுவென்று குறிப்பிட்டால் பலருக்குப் (😏) பாடமெடுக்க வசதியாக இருக்கும் 👍

 

2 hours ago, Justin said:

சரி, அவர் படிக்காத பாடங்கள் எவையென்று நீங்கள் சொன்னால் பலருக்கு உதவியாக இருக்கக் கூடுமல்லவா? சொல்லுங்களேன்?

கபிதான், இதில் ஒரு கேள்வி தானே இருக்கிறது? எங்கே பிரச்சினை இருப்பதாக எங்கே தெரிகிறது உங்களுக்கு? preconception? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

 

கபிதான், இதில் ஒரு கேள்வி தானே இருக்கிறது? எங்கே பிரச்சினை இருப்பதாக எங்கே தெரிகிறது உங்களுக்கு? preconception? 

வரலாறு தொடர்பாக, உண்மையில் நான் என்ன கூறினேன் என்று உங்களுக்குப் புரியவில்லையா ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல்

 

பதில்  மிக  மிகச்சுலபம்

கோடரிக்காம்புகளின்  இறுதி  நிலையும்  வாழ்வும்  இது  தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

வரலாறு தொடர்பாக, உண்மையில் நான் என்ன கூறினேன் என்று உங்களுக்குப் புரியவில்லையா ? 🤔

இல்லை!

Link to comment
Share on other sites

14 minutes ago, விசுகு said:

எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல்

 

பதில்  மிக  மிகச்சுலபம்

கோடரிக்காம்புகளின்  இறுதி  நிலையும்  வாழ்வும்  இது  தான்

உண்மைதான் விசுகு அவர்களே! ஆனாலும் அந்த நிலைக்கு வருவதற்குள் பல பசுமரங்களையும் வெட்டிச் சாய்த்துவிடுகின்றனவே இந்தக் கோடரிக் காம்புகள். 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

இல்லை!

ஒருவருக்கு அல்லது ஒரு கொள்கைக்குத்தான் விசுவாசமாக இருக்கமுடியும்.  

அல்லது

ஒரு அரசாங்கத்திற்கு அல்லது மக்களின் ஒரு பகுதியினருக்கு மட்டும்தான் சேவகம் செய்ய முடியும். 

வரலாறு இதைத்தான் சொல்லி நிற்கிறது.

ஒருவருக்கும் நம்பிக்கையாக இல்லாவிடின் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டி ஏற்படும்.

Dr. Hoolலின் நிலை இதனை திரும்பவும் ஒருமுறை நிரூபித்து நிற்கிறது. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஒருவருக்கு அல்லது ஒரு கொள்கைக்குத்தான் விசுவாசமாக இருக்கமுடியும்.  

அல்லது

ஒரு அரசாங்கத்திற்கு அல்லது மக்களின் ஒரு பகுதியினருக்கு மட்டும்தான் சேவகம் செய்ய முடியும். 

வரலாறு இதைத்தான் சொல்லி நிற்கிறது.

ஒருவருக்கும் நம்பிக்கையாக இல்லாவிடின் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டி ஏற்படும்.

Dr. Hoolலின் நிலை இதனை திரும்பவும் ஒருமுறை நிரூபித்து நிற்கிறது. ☹️

உங்கள் இந்த ஒரு பக்கத்தை ஒருவர் தேர்ந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு உடன் பட முடியவில்லை! இந்த ஹூலும் சரி, ராஜன் ஹூலும் அவரது கூட்டாளிகளும் சரி, மனித உரிமைகள் முக்கியம் என்ற நிலைப்பாடு எடுத்தமையால் மகிந்த , புலிகள் மட்டுமன்றி, ஏனைய குழுக்களாலும் தூசிக்கப் படுவோராகினர்.

இப்படியானவர்கள் ஒரு சமூகத்தின் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாமல் பாதுகாக்க மிகவும் தேவை என நினைக்கிறேன்! இவர்களை அடக்க முனைவதால் எமக்கு ஒரு நன்மையும் இல்லை, தீமைகள் வேண்டுமானால் வரலாம்!

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

ஒருவருக்கு அல்லது ஒரு கொள்கைக்குத்தான் விசுவாசமாக இருக்கமுடியும்.  

மிகவும் உண்மையான கருத்து. தான் கொண்ட கொள்கைக்கு என்றும் விசுவாசமாக இருக்கும் ஒரு போராளியான நீங்கள் வாழ்ந்து வருவதையே சொல்லி இருக்கிறீர்கள்.

25 minutes ago, Justin said:

இந்த ஹூலும் சரி, ராஜன் ஹூலும் அவரது கூட்டாளிகளும் சரி, மனித உரிமைகள் முக்கியம் என்ற நிலைப்பாடு எடுத்தமையால்

இவர்களும் தாம் தேர்ந்து கொண்ட மனிதத்துக்கான போராட்டத்துக்கு விசுவாசமான போராளிகளாகவே இன்றும், என்றும் இருக்கிறார்கள். இராஜினியின் கொலையோ, ஏனைய அச்சுறுத்தல்களோ இவர்களை பின்னடைய வைக்கவில்லை. ஒரே கொள்கையான, மனிதத்துக்கு முதலிடம் என்ற கொள்கைக்கே இவர்கள் விசுவாசமாக இருக்கிறார்கள்.

இனரீதியான தேசியத்துக்கு முதலிடம் கொடுத்து, மனிதம் அதற்கான விலையாகும் போது இவர்களுக்கும் இனரீதியான தேசியத்துக்கு முதலிடம் கொடுப்பவர்களுக்கும் இடையே முரண்பாடு உருவாகிறது. இனரீதியான தேசியத்துக்கு முதலிடம் கொடுப்பவர்கள் தமது நோக்கத்துக்காக மனிதர்கள் மடிவதை தேவையானதாக கருதுகிறார்கள். மனிதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களோ, ஒவ்வொரு மனித உயிரும் தனது முழுமையான வாழ்வை அனுபவித்து இயற்கை எய்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூலிக்கு மண்டைக்கனமே தவிர.. உண்மையான தமிழ் மக்கள் அக்கறை கிடையாது. தனது தனிப்பட்ட செல்வாக்கை மக்கள் மத்தியில் நிறுவி ஆதாயம் தேட விளைவதையே கூல் செய்கிறார்.

இவரை விட இவரது மனைவிக்கு தமிழ் மக்கள்.. தமிழ் கலை பண்பாடு கலாசாரத்தில் நல்ல ஈடுபாடும்.. உண்மையான அக்கறையும் உண்டு. 

இவர்கள் இருவரையும் அவர்களோடு தொடர்பில் இருக்கக் கூடிய காலத்தில் அறிந்த வகையில் இதையே சொல்ல முடியும்.

இதெல்லாம் கூலின் நீலிக்கண்ணீர் அவ்வளவே. 

Link to comment
Share on other sites

51 minutes ago, Justin said:

 

இப்படியானவர்கள் ஒரு சமூகத்தின் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாமல் பாதுகாக்க மிகவும் தேவை என நினைக்கிறேன்! இவர்களை அடக்க முனைவதால் எமக்கு ஒரு நன்மையும் இல்லை, தீமைகள் வேண்டுமானால் வரலாம்!

ராஜன் ஹூல் முக்கிய பங்காற்றிய யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைகளுக்கான அமைப்பின் (மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்) அறிக்கை எல்லாமே நேர்மையற்றதாகவே இருந்தன. அந்த அறிக்கைகள் எப்படி இருந்தனவென்றால் பத்து பக்க அறிக்கையில் ஒன்பதரைப் பக்கங்கள் புலிகளின் மனிதவுரிமை மீறல்கள் என்று பட்டியலிட்டுவிட்டு இலங்கை அரசினதும், இலங்கைப் படையினரதும் அட்டூழியங்களை அரைப்பக்கத்தில் எழுதியிருப்பர். அவற்றில் விமானப்படையின் குண்டு வீச்சில் அகப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுகளில் இருந்து பாலியல் வல்லுறவுகள் வரைக்கும் இருந்ததில்லை. யாழ் பல்கழகம் என்று போட்டது கூட நேர்மையற்ற செயல்; ஏனெனில் ராஜன் ஜூலும் சரி, அவரது பரிவாரங்களும் சரி யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கவில்லை. விட்டு விலகி வேறு இடங்களுக்கு பெயர்ந்த பின்னும் அதே பெயரை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு இருந்தனர். 

இலங்கையில் தென்னிலங்கையில் சுனந்த தேசப்பிரிய, சுனிலா, சார்ள்ஸ் அபேசேகர போன்ற உண்மையான மனிதவுரிமை வாதிகள் புலிகள் /அரசு என்று இருபக்கமும் செய்த மனிதவுரிமை மீறல்களை நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர். இவர்கள் தான் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாதவர்களாக இருந்தனர். அவர்களும் ராஜன் ஹூல் போன்றவர்களும் ஒன்றல்ல. 

இவரை மனிதவுரிமைவாதி என்று குறிப்பிடுவதே மிகப்பெரும் அவலம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் போலி மனித உரிமைப் போராளி.

இலங்கையிலும், இந்தியாவிலும், படித்த மண்டைக்கனம் பிடித்த பலர், அந்த கணத்தால், ஒருவருக்கு கீழே வேலை செய்ய முடியாத நிலையில், சர்வதேச தொண்டுநிறுவணங்கள் நிதியை பெறும் நோக்கத்துடன், மனிதஉரிமை என்று அலம்பறை பண்ண தொடங்கி விடுவார்கள்.

இவர் அமெரிக்கா ஓடியது, புலிகளால் அல்ல. மகிந்தா சார்பில் டக்கியர் எச்சரித்ததால்.

இந்த முறை, தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து கொண்டு, சுயாதீனமான தேர்தல் என்று அலம்பறை பண்ண, எரிச்சல் அடைந்த மகிந்தர் ஏற்பாட்டில், இப்போதும் டக்கியர் முதல் எச்சரிக்கை செய்துள்ளார்.

சமமாக இருக்க வேண்டும் என்று, மகிந்தா  உடன் இல்லாத புலிகளையும் சேர்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

ராஜன் ஹூல் முக்கிய பங்காற்றிய யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைகளுக்கான அமைப்பின் (மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்) அறிக்கை எல்லாமே நேர்மையற்றதாகவே இருந்தன. அந்த அறிக்கைகள் எப்படி இருந்தனவென்றால் பத்து பக்க அறிக்கையில் ஒன்பதரைப் பக்கங்கள் புலிகளின் மனிதவுரிமை மீறல்கள் என்று பட்டியலிட்டுவிட்டு இலங்கை அரசினதும், இலங்கைப் படையினரதும் அட்டூழியங்களை அரைப்பக்கத்தில் எழுதியிருப்பர். அவற்றில் விமானப்படையின் குண்டு வீச்சில் அகப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுகளில் இருந்து பாலியல் வல்லுறவுகள் வரைக்கும் இருந்ததில்லை. யாழ் பல்கழகம் என்று போட்டது கூட நேர்மையற்ற செயல்; ஏனெனில் ராஜன் ஜூலும் சரி, அவரது பரிவாரங்களும் சரி யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கவில்லை. விட்டு விலகி வேறு இடங்களுக்கு பெயர்ந்த பின்னும் அதே பெயரை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு இருந்தனர். 

இலங்கையில் தென்னிலங்கையில் சுனந்த தேசப்பிரிய, சுனிலா, சார்ள்ஸ் அபேசேகர போன்ற உண்மையான மனிதவுரிமை வாதிகள் புலிகள் /அரசு என்று இருபக்கமும் செய்த மனிதவுரிமை மீறல்களை நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர். இவர்கள் தான் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாதவர்களாக இருந்தனர். அவர்களும் ராஜன் ஹூல் போன்றவர்களும் ஒன்றல்ல. 

இவரை மனிதவுரிமைவாதி என்று குறிப்பிடுவதே மிகப்பெரும் அவலம்.
 

UTHR (J) இன் அறிக்கைகளை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால், 9 பக்கத்தில் இருந்த புலிகள் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவையா என்று தான் நாம் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன். அவர் ஒரு தரப்பை அதிகம் குற்றம் சாட்டும் ஒருவராக இருந்தாலும் மனித உரிமைகள் சார்ந்து தான் அது இருந்திருக்கிறது என்பது மறுக்க இயலாதல்லவா? 

ஹூல் மீது ஆட்கள் அள்ளிக் கொட்டும் வசைகளைப் பார்க்கையில் நான் யோசிப்பது என்னவென்றால், மண்டையன் குழுவை நடத்தியவர்களும், வவுனியாவிலும் கொழும்பிலும் புலிகளின் போராளிகளை ராணுவத்திடம் போட்டுக் கொடுத்தவர்களும் கூட  தமிழர்களால் டீசன்டாக நடத்தப் படுகிற தற்காலத்தில், புலிகளின் மனித உரிமை மீறல்களை எழுதியவர்களை ஏன் இப்படி வெறுக்க வேண்டும்? 

நாதம்:  பட்டம் பெறாமலே டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளுகிற காலத்தில் இருக்கிறோம், இரண்டு ஹூல்களுமே தங்கள் துறைகளில் மிகுந்த கெட்டிக் காரர்கள்! மனித உரிமையை முன் வைத்து எதையும் தேட வேண்டிய அவசியம் இல்லை எனவே நான் நினைக்கிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உங்கள் இந்த ஒரு பக்கத்தை ஒருவர் தேர்ந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு உடன் பட முடியவில்லை! இந்த ஹூலும் சரி, ராஜன் ஹூலும் அவரது கூட்டாளிகளும் சரி, மனித உரிமைகள் முக்கியம் என்ற நிலைப்பாடு எடுத்தமையால் மகிந்த , புலிகள் மட்டுமன்றி, ஏனைய குழுக்களாலும் தூசிக்கப் படுவோராகினர்.

இப்படியானவர்கள் ஒரு சமூகத்தின் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாமல் பாதுகாக்க மிகவும் தேவை என நினைக்கிறேன்! இவர்களை அடக்க முனைவதால் எமக்கு ஒரு நன்மையும் இல்லை, தீமைகள் வேண்டுமானால் வரலாம்!

நீங்கள் கூற விரும்புவது சரிதான் ஜஸ்ரின். ஆனால் இவற்றுக்கு முன்னால் பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன. 

1) மனித உரிமை என்கின்ற எண்ணக்கரு உண்மையில் நன்மையான விடயமே. ஆனால் யாரால் மனித உரிமைகள் என்கின்ற எண்ணக் கரு முன்வைக்கப் படுகிறது 🤔

1.1) இந்த எண்ணக்கரு யாருக்காக முன்வைக்கப் படுகிறது 🤔

1.2) எத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் முன்வைக்கப் படுகிறது 🤔

1.3) மனித உரிமை என்கின்ற எண்ணக் கருவை முன்னிறுத்துவோர் உண்மையிலேயே அதனை நடைமுறைப் படுத்துகின்றனரா 🤔

2) அழிப்பவனுக்கும் அழிக்கப்படுபவனுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில் மனித உரிமை பேசுவோரின் பங்களிப்பு எத்தகையது 🤔

3) எமது தமிழ்ச் சமூகத்தில் மனித உரிமை பேசியவர்கள் எமது சமூகத்திற்கு, குறிப்பாக போராட்ட காலத்தில் ஏற்படுத்திய தாக்கம் நன்மையானதா தீமையானதா 🤔

4) ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட நிலையில்,  மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் தற்போதைய செயற்பாடு அழிக்கப்பட்ட எம் சமூகத்திற்கு எவ்வகையில் அமைகிறது 🤔

தங்களிடமிருந்து நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

UTHR (J) இன் அறிக்கைகளை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால், 9 பக்கத்தில் இருந்த புலிகள் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவையா என்று தான் நாம் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன். அவர் ஒரு தரப்பை அதிகம் குற்றம் சாட்டும் ஒருவராக இருந்தாலும் மனித உரிமைகள் சார்ந்து தான் அது இருந்திருக்கிறது என்பது மறுக்க இயலாதல்லவா? 

1) ஹூல் மீது ஆட்கள் அள்ளிக் கொட்டும் வசைகளைப் பார்க்கையில் நான் யோசிப்பது என்னவென்றால், மண்டையன் குழுவை நடத்தியவர்களும், வவுனியாவிலும் கொழும்பிலும் புலிகளின் போராளிகளை ராணுவத்திடம் போட்டுக் கொடுத்தவர்களும் கூட  தமிழர்களால் டீசன்டாக நடத்தப் படுகிற தற்காலத்தில், புலிகளின் மனித உரிமை மீறல்களை எழுதியவர்களை ஏன் இப்படி வெறுக்க வேண்டும்? 

நாதம்:  பட்டம் பெறாமலே டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளுகிற காலத்தில் இருக்கிறோம்,

2) இரண்டு ஹூல்களுமே தங்கள் துறைகளில் மிகுந்த கெட்டிக் காரர்கள்! மனித உரிமையை முன் வைத்து எதையும் தேட வேண்டிய அவசியம் இல்லை எனவே நான் நினைக்கிறேன்! 

1) பாதிக்கப்பட்டு நெருப்பின் மீது நின்ற எம் மக்களுக்கு காவலாக இருந்தவர்கள் மீது சேறடித்தவர்கள் என்கின்ற கோபம்தான். (மிகவும் மேலோட்டமாகச் சொன்னால்)🙂

2) இந்தியாவிலுள்ல PETA க் காறர்கள் ஏனோ நினைவிற்கு வந்து தொலைக்கிறார்கள் 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

UTHR (J) இன் அறிக்கைகளை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால், 9 பக்கத்தில் இருந்த புலிகள் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவையா என்று தான் நாம் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன். அவர் ஒரு தரப்பை அதிகம் குற்றம் சாட்டும் ஒருவராக இருந்தாலும் மனித உரிமைகள் சார்ந்து தான் அது இருந்திருக்கிறது என்பது மறுக்க இயலாதல்லவா? 

ஹூல் மீது ஆட்கள் அள்ளிக் கொட்டும் வசைகளைப் பார்க்கையில் நான் யோசிப்பது என்னவென்றால், மண்டையன் குழுவை நடத்தியவர்களும், வவுனியாவிலும் கொழும்பிலும் புலிகளின் போராளிகளை ராணுவத்திடம் போட்டுக் கொடுத்தவர்களும் கூட  தமிழர்களால் டீசன்டாக நடத்தப் படுகிற தற்காலத்தில், புலிகளின் மனித உரிமை மீறல்களை எழுதியவர்களை ஏன் இப்படி வெறுக்க வேண்டும்? 

நாதம்:  பட்டம் பெறாமலே டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளுகிற காலத்தில் இருக்கிறோம், இரண்டு ஹூல்களுமே தங்கள் துறைகளில் மிகுந்த கெட்டிக் காரர்கள்! மனித உரிமையை முன் வைத்து எதையும் தேட வேண்டிய அவசியம் இல்லை எனவே நான் நினைக்கிறேன்! 

ஐயா, புலிகள் மீதல்ல.... மகிந்தர் மீதான உரிமை மீறல்களை தான் வெறுக்கிறேன்.

எங்கண்ட தலை மகிந்தர்.... அவரை பத்தி குறை சொன்னா விடேலாது. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின்,

Hoole மிக விரைவில் ""தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தனக்கு இன் நிலை ஏற்பட்டதாக"" கூறுவார் இருந்து பாருங்கள். 😡

Link to comment
Share on other sites

3 hours ago, Justin said:

UTHR (J) இன் அறிக்கைகளை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால், 9 பக்கத்தில் இருந்த புலிகள் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவையா என்று தான் நாம் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன்.

http://www.uthr.org/

4 hours ago, நிழலி said:

இலங்கையில் தென்னிலங்கையில் சுனந்த தேசப்பிரிய, சுனிலா, சார்ள்ஸ் அபேசேகர போன்ற உண்மையான மனிதவுரிமை வாதிகள் புலிகள் /அரசு என்று இருபக்கமும் செய்த மனிதவுரிமை மீறல்களை நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர். இவர்கள் தான் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாதவர்களாக இருந்தனர். அவர்களும் ராஜன் ஹூல் போன்றவர்களும் ஒன்றல்ல. 

வட இலங்கையில் உதாரணம் காட்டக்கூடியதாக ஏன் எவருமே இல்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

UTHR (J) இன் அறிக்கைகளை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால், 9 பக்கத்தில் இருந்த புலிகள் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவையா என்று தான் நாம் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன். அவர் ஒரு தரப்பை அதிகம் குற்றம் சாட்டும் ஒருவராக இருந்தாலும் மனித உரிமைகள் சார்ந்து தான் அது இருந்திருக்கிறது என்பது மறுக்க இயலாதல்லவா? 

ஹூல் மீது ஆட்கள் அள்ளிக் கொட்டும் வசைகளைப் பார்க்கையில் நான் யோசிப்பது என்னவென்றால், மண்டையன் குழுவை நடத்தியவர்களும், வவுனியாவிலும் கொழும்பிலும் புலிகளின் போராளிகளை ராணுவத்திடம் போட்டுக் கொடுத்தவர்களும் கூட  தமிழர்களால் டீசன்டாக நடத்தப் படுகிற தற்காலத்தில், புலிகளின் மனித உரிமை மீறல்களை எழுதியவர்களை ஏன் இப்படி வெறுக்க வேண்டும்? 

நாதம்:  பட்டம் பெறாமலே டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளுகிற காலத்தில் இருக்கிறோம், இரண்டு ஹூல்களுமே தங்கள் துறைகளில் மிகுந்த கெட்டிக் காரர்கள்! மனித உரிமையை முன் வைத்து எதையும் தேட வேண்டிய அவசியம் இல்லை எனவே நான் நினைக்கிறேன்! 

ஹூலிற்றை படிச்சிருந்தால் அவற்றை உள்நோக்கம் தெரிஞ்சிருக்கும். அதைவிட்டுட்டு அவற்றை அறிக்கையைப்படித்தால் உந்தமாதிரியான எண்ணம்தான்வரும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:
18 hours ago, நிழலி said:

இலங்கையில் தென்னிலங்கையில் சுனந்த தேசப்பிரிய, சுனிலா, சார்ள்ஸ் அபேசேகர போன்ற உண்மையான மனிதவுரிமை வாதிகள் புலிகள் /அரசு என்று இருபக்கமும் செய்த மனிதவுரிமை மீறல்களை நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர். இவர்கள் தான் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாதவர்களாக இருந்தனர். அவர்களும் ராஜன் ஹூல் போன்றவர்களும் ஒன்றல்ல. 

வட இலங்கையில் உதாரணம் காட்டக்கூடியதாக ஏன் எவருமே இல்லை?

சுதந்திரமான நாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களே தமிழ்நாட்டில் உள்ள ஒரு இனவெறியன் வீடு புகுந்து அடிப்பேன் என்று உளறியதற்கு விசில் அடித்து மகிழும் நிலையில் தான் உள்ளனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.