Jump to content

விண்வெளிக்கும் ஆழ்கடலுக்கும் சென்ற முதல் பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளிக்கும் ஆழ்கடலுக்கும் சென்ற முதல் பெண்

kathryn-sullivan  

விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையைப் படைத்தவர் கேத்ரின் சல்லிவன். தற்போது கடலின் மிக ஆழமான பகுதியான மரியானா ட்ரெஞ்சில் உள்ள சேலஞ்சர் முனைக்குச் சென்று திரும்பிய முதல் பெண் என்கிற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்!

1978-ம் ஆண்டு நாசாவில் பெண்கள் இடம்பெற்ற முதல் விண்வெளித் திட்டத்தில் சேர்ந்தார் கேத்ரின். 25 ஆண்டுகாலம் நாசாவில் பணியாற்றிய போது, 3 முறை விண்வெளிக்குச் சென்றிருக்கிறார். 1984-ம் ஆண்டு சேலஞ்சர் விண்கலத்தைவிட்டு வெளியே வந்து 3.5 மணி நேரம் விண்வெளி நடை மேற்கொண்டார். தனது 3 பயணங்களின் மூலம் மொத்தம் 532 மணி நேரத்தை விண்வெளியில் கழித்திருக்கிறார். 1993-ம் ஆண்டு நாசாவிலிருந்து ஓய்வுபெற்ற கேத்ரின், தனக்கு மிகவும் விருப்பமான கடலியல் துறையில் நுழைந்தார்.

என்ஓஏஏ (National Oceanic and Admospheric Administration) நிறுவனத்தில் முதுநிலை விஞ்ஞானியாகச் செயல்பட ஆரம்பித்தார். பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா ட்ரெஞ்ச் மிக ஆழமான பள்ளத்தாக்கு. இதில் உள்ள மிக மிக ஆழமான பகுதி சேலஞ்சர். பூமியிலேயே மிக ஆழமான பகுதி இதுதான். 11 கி.மீ. ஆழத்தில் இருக்கும் இந்தப் பகுதியில் தண்ணீரின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும் (கேத்ரினின் கூற்றுப்படி 291 ஜம்போ ஜெட் அல்லது 7,900 டபுள் டெக்கர் பேருந்துகளின் எடைக்கு இணையான அழுத்தம்).

‘லிமிட்டிங் ஃபேக்டர்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் இதுபோன்ற கடலின் ஆழப்பகுதிகளுக்குச் செல்வதற்காகவே வடிவமைக்கப்பட்டது. விக்டர் வெஸ்கோவோ என்ற ஆராய்ச்சியாளர் 5 கடல்களின் ஆழப்பகுதிகளுக்குச் சென்று, வரைபடம் தயாரிப்பதற்காக இந்த நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டது.

15918573851138.jpg

வெஸ்கோவோவுடன் இணைந்துதான் சேலஞ்சர் பகுதிக்குச் சென்றார் கேத்ரின். இருவரும் 4 மணி நேரப் பயணத்திட்டத்தில் ஒன்றரை மணி நேரம் சேலஞ்சர் பகுதியில் இருந்து, அழுத்தத்தைச் சமாளித்து, படங்கள் எடுத்து வெற்றிகரமாகத் திரும்பியிருக்கிறார்கள். இந்தப் பயணத்தின் மூலம் கேத்ரின் உலகின் ஆழமான பகுதிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், விண்வெளிக்கும் கடல் ஆழத்துக்கும் சென்ற ஒரே பெண் என்ற சிறப்பும் இவருக்கே. வெஸ்கோவோவுக்கு இது மூன்றாவது பயணம்.

சேலஞ்சரிலிருந்து மேல் பகுதிக்கு வந்தவுடன் கேத்ரினும் வெஸ்கோவோவும் சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விண்வெளி வீரர்களுடன் உரையாடினர். தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

“ஒரு விண்வெளி வீரராகவும் கடலியலாளராகவும் என் வாழ்நாளில் மிகச் சிறந்த நாள்” என்று இந்தச் சாதனையைக் குறிப்பிட்டிருக்கிறார் கேத்ரின் சல்லிவன்.

https://www.hindutamil.in/news/blogs/558889-kathryn-sullivan-1.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.