Jump to content

ஒரேயொரு நிபந்தனையுடன் கோட்டா அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவளிக்க தயார்: சுமந்திரன் அதிரடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் விதமான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால்- அதை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

இன்று யாழில் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 இல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்தில் நாமும் ஓரளவு பங்களித்திருந்த நிலையில், இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மீட்சிக்கும் நான்கரை வருடங்களில் பல விடயங்களை மேற்கொண்டோம். அபிவிருத்தி விடயத்தில் வடக்கு, கிழக்கிற்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது. நிலம் விடுவிக்கப்பட்டது. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது. இவையெல்லாம் முன்னேற்றங்களாக நாம் கருதுகிறோம்.

ஆனால், முழுமையாக எதையும் நாம் தீர்க்க முடியவில்லை. அரசியலமைப்பு நகல் வடிவம் பாராளுமன்றத்திற்கு வந்தாலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. அரசியல் கைதிகள், நிலம் விடுவிப்பு, அபிவிருத்தி திட்டங்கள் எதிலும் முழுமையடைகாமல், மக்கள் முன் சென்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்.

2015 தேர்தலிற்கும் முற்றும் மாறான ஒரு தேர்தல் இது. 2015 ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்ட நன்மையை தொடர்ந்து பேண முடியாத நிலையில், பழைய ஆட்சியாளர்களிடமே ஆட்சி சென்றுள்ளது. வரும் தேர்தலிலும் அவர்கள் பலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய ஜனாதிபதி எடுத்துள்ள சில முடிவுகள், அவரது ஆட்சி எப்படியாக அமையுமென்பதை காண்பிக்கிறது. கிழக்கில் மிகப்பெரும்பான்மையாக தமிழர்கள், முஸ்லிம்கள் இருந்தாலும், கிழக்கு தொல்பொருள் செயலணியில் தமிழர்கள், சிங்களவர்கள் இணைக்கப்படவில்லை. அகழ்வாராய்ச்சிக்கு பெயர் பெற்றவர் என சொல்லப்படும் எல்லாவல மேதானந்த தேரர் அதில் உள்ளார். அவரது கருத்து முழுவதும், இந்த பிரதேசங்கள் முழுவதும் சிங்கள பௌத்த பிரதேசங்கள், அவர்களின் மேலாதிக்கம் பேணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளவர். இராணுவ அதிகாரிகளும் உள்ளனர்.

அமைச்சர் டக்களஸ் தேவானந்தா ஒரு கடிதம் எழுதியுள்ளாராம். இந்த செயலணிக்கு தமிழர், முஸ்விம்களையும் நியமிக்கும்படி. அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், எங்களை போன்றவர்கள் எல்லோரும் உங்களுக்கு விசுவாசமானவர்கள்தானே. நாங்களும் இருக்கிறோம்தானே. எங்களிலும் உங்களிற்கு நம்பிக்கையில்லையா? நீங்கள் சொல்வதைதானே நாங்கள் செய்வோம். எங்களில் யாரையாவது நியமித்திருக்கலாம்தானே என. அந்த கடிதத்தால் எந்த பலனுமில்லை.

ஒழுக்கத்தை பேண இன்னொரு செயலணி, இராணுவ அதிகாரிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், மத தலங்கள் தவிர்த்து, ஒழுக்கத்தை பேண, ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர்களாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக இராணுவ மயமாக்கல் நடக்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் இல்லாவிட்டால் இவர்கள் ஒருவருக்கும் பதில் சொல்ல முடியாத, பொறுப்புக்கூறும் நிலை அல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையில் அவர்கள் பலமாக இருந்தாலும், எமது பிரதேசங்களில் நாம் எமது இருப்பை பாதுகாக்க வேண்டும்.

அதனால், முன்னெப்பொழுதுமில்லாத விதமாக ஒரு அணியாக தமிழ் மக்கள் ஒரு அணியாக தமது பிரதிநிதித்துவத்தை காட்ட வேண்டிய தேவையுள்ளது. பல பிரிந்து, பல அணிகளாக போனால் அது எம்மை பலவீனப்படுத்தும். இன்றைக்கு இருக்கும் கட்சிகள், அணிகளில் வடக்கு, கிழக்கிலுள்ள மக்களை ஓரணியாக பிரதிநிதித்துவப்படுத்தும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. அதனால் மாற்று அணி கோசங்களை புறக்கணித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றியடைய செய்ய வேண்டும்.

நாம் பாராளுமன்றம் போய் என்ன செய்ய போகிறோம்? கடந்த 5 வருடத்தில் செய்யாததை இனி செய்யப் போகிறோமா என கேட்கிறார்கள். 5 வருடத்தில் நிறைய செய்யப்பட்டுள்ளது. நாம் நாடாளுமன்றம் போகும்போது, எமது அரசியல் அபிலாசையைத்தான் வலியுறுத்துவோம். தீர்வை பெற்றுத்தருவது எமது தலையாய கடமை. அதில் எந்த விட்டுக்கொடுப்பில்லாமல் செய்வோம்.பெற்றுத் தருவோம். ஆனால் அரசியல் தீர்வு வரும்வரை மக்களின் வாழ்வு எப்படியாவது இருக்கட்டும் என விடவும் மாட்டோம். கடந்த அரசின் காலத்திலும்  நாங்கள் சில முன்னெடுப்புக்களை செய்தோம். அரசிலிருந்து பணத்தை பெற்று அபிவிருத்தி திட்டங்கள் செய்தோம்.

ஒரு கட்டமைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்திற்குள் செல்ல வேண்டிய தேவையுள்ளது. விசேடமாக ஒரு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். பொருளாதாரம் எப்படியிருக்க வேண்டுமென்றால், இளையவர்களிற்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இது இலங்கை முழுவதுமுள்ள பொருளாதார திட்டமென்றாலும், வடக்கு கிழக்கில் விசேடமாக உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

இது அத்தியாவசியமானது. இது பற்றி தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடுவோம். எமது மக்கள் தொடர்ந்து இங்கு வாழ்ந்தாலே எமது இருப்பு பாதுக்கப்படும். இளையவர்கள் வேலையில்லையென வெளிநாடு சென்றால், இனப்பிரச்சனை தீர்வுக்கெ தேவையில்லாத நிலையேற்படலாம். மக்களின் வாழ்க்கை கட்டியெழுப்பப்பட வேண்டும், இளையவர்களிற்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.  மக்கள் இங்கு வாழ வழியேற்படுத்த வேண்டும். அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  புலமையாளர்களுடனும் பேசியுள்ளோம். அவர்களின் உதவியுடன் பொருளாார மீள் எழுச்சியென்பதற்கு வருகிற பாராளுமன்ற காலத்தில் கொடுப்போம்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் மரணத்திற்கு எமது அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்.

கொரொனா போகும் போது, ஜனநாயகமும் போய்விடும் என்ற பயமிருந்தது. இதனால்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென விரும்பினோம். தேர்தல் சுயாதீனமாக இருக்க வேண்டும். தேர்தல் நடத்தப்பட வேண்டும், பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து அரசாங்கம் மக்களின் அச்சத்தை நீக்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு ஆதரவு என சொல்ல மாட்டேன். நாம் அரசாங்கத்தை உருவாக்கிய போது கூட அரசில் இணையவில்லை. எமது இனப்பிரச்சனை தீர்வு குறித்து நீண்டதூரம் பயணித்துள்ளோம். அப்படியான சூழலில், அதை நிறைவுக்கு கொண்டுவர அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவைப்பட்டால், அந்த தீர்வு எமது அபிலாசைகளை தீர்க்குமாக இருந்தால் நிச்சமாக ஆதரவை கொடுப்போம்.

ஜனவரி 3ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, புதிய அரசியலமைப்பின் அவசியத்தை சொன்னார். நான் பின்னர் உரையாற்றியபோது, அதை சொல்லியிருந்தேன். நாம் அரசியலமைப்பை உருவாக்கியபோது சொன்ன 3 விடயங்களை அவரும் சொல்லியிருந்தார். அதனால் தொடக்கத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டியதில்லை.

அண்மையில் பிரதமரை சந்தித்தபோது, உங்களிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது. நீங்கள் இதயசுத்தியுடன் செயற்பட்டு, ஜனநாயக அடிப்படையிலான தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய கூடிய விதமாக அரசியலமைப்பை தயாரித்தால், அதை பூர்தி செய்யவும், தயாரிக்கவும் எமது முழு ஆதரவை தர தயாராக இருப்பதாக சொல்லியிருக்கிறேன்.

அரசியல் கைதிகள் 96 பேரின் பெயர் விபரங்களை வழங்கியுள்ளோம். நீதியமைச்சர் அண்மையில் பத்திரிகையொன்றற்கு தெரிவித்தபோது, அதில் 84 பேரின் பெயர்களை தெரிவு செய்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழங்கியிருப்பதாகவும், அவரது பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் எப்படி செயற்படுவார்கள் என தெரியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் எமது கொள்கையல்ல என மாவை சேனாதிராசா சொன்னதாக வெளியான பத்திரிகை செய்தியை படித்தேன். ஆனால் அவர் அப்படி சொன்னாரா என்பதை அவருடன் பேசாமல் என்னால் பதிலளிக்க முடியாது.

முன்னாள் போராளிகளை கட்சியில் சேர்க்க வேண்டுமென ஒரு தடவை கட்சிக்குள் முன்மொழிந்தபோது, நான் மட்டும்தான் ஆதரித்தேன். அந்த நிலைப்பாட்டில் எப்பொழுதும் இருக்கிறேன். எமது உரிமைக்காக அவர்கள் ஒரு முறையை உபயோகித்து போராட்டம் நடத்தினார்கள். அந்த வடிவத்திலான போராட்டம் முடிந்து விட்டது. ஆனால் எந்த அர்ப்பணிப்புடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்களோ, அந்த அர்ப்பணிப்பு இருக்கும். அவர்களிடம்தான் கூடுகலாக இருக்கும். வேறொரு வடிவத்தில் போராட்டம் நடந்தாலும் அவர்களின் அர்ப்பணிப்பு மிகமிக அத்தியாவசியமானது.

விடுதலைப் புலிகள் பற்றிய நான் பேசியதாக எழுந்த சர்ச்சை பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெதுவும் எடுக்கப்படவில்லை. இதைப்பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை.

எனது உருவப்பொம்மையை யார் எரித்தார்கள் என்பது தெரியாது. இது விழக்கமானது. 2012ஆம் ஆண்டு எனது உருவப்பொம்மையை எரித்தார்கள். அதன் பின்னர் கிரமமாக எரித்து வருகிறார்கள். சிலர் சொல்கிறார்கள், நான்தான் இதை ஏற்பாடு செய்வதாக (நகைச்சுவையாக). அப்படியல்ல.

https://www.pagetamil.com/129426/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகமும், நரியும்,  வடையும் கதை ஞாபகத்துக்கு வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

103306775_3097633016989676_9162776149296743118_o.jpg?_nc_cat=100&_nc_sid=110474&efg=eyJpIjoidCJ9&_nc_oc=AQmvXhNThTCO0YkPk0vQbMbZV-Jm9-xnAr_x5tLI2XlGU_YYcQoqjjssJmB-W1ZjAQ8&_nc_ht=scontent-lax3-1.xx&_nc_tp=14&oh=9af2f151a927a1618fd1aa9d273b7a4d&oe=5F0B1E30

 

அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும்  அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும்  தயாராக இருந்தால் மாத்திரமே  ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்  குறிப்பிட்டார்.

 

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதயில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை(14) மதியம் இடம்பெற்ற போது  தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய  அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக   ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

 

மேலும் தனதுகருத்தில்

 

தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும்  அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும் இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெருன்பான்மை ஆதரவு  வழங்க  தயாராக உள்ளோம்.அதற்காக இந்த ஆதரவிற்காக பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ள முயற்சிக்கின்றோம்.முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் மக்களிடம் தேர்தலுக்காக பணம் கேட்டுள்ளார்.இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என கூறினார்.

 

 

மேலும் நாங்கள் இந்த அரசாங்கத்தை ஏற்படுத்திய போது ஆதரவு வழங்கவில்லை. ஆனால் எமது இனப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக  நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம். அரசியல் தீர்வு  எமது அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதாக இருந்தால் நிச்சயமாக அதற்கு ஆதரவைக் கொடுப்போம் என்றார்.

https://www.madawalaenews.com/2020/06/blog-post_500.html

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

அரசியல் தீர்வு  எமது அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதாக இருந்தால் நிச்சயமாக அதற்கு ஆதரவைக் கொடுப்போம் என்றார்.

இலவங்காயும் பழுக்கும் உண்ணலாம் என்பது எம்.ஏ. சுமந்திரனுக்குமட்டுமே தெரிந்த இரகசியம். 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதோ தெரியுது பார் மல.!அதைத்தான் நீ சாண பிடிக்கணும்..☺️..😊

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

Link to comment
Share on other sites

மடவளவை  யாழ் முஸ்லிலிம் கூட்டத்துக்கு இப்ப சொந்த இனத்தை கூறு போட்டு விக்கும் சுமத்திரன் தான் தலைவர் முன்பு எண்டால் இலங்கைக்கு எண்ணெய் குடுக்க விடமாட்டம்  என்று உதார் விட்டுக்கொண்டு திரிவினம் கொரனோ  வந்து எல்லாத்தையும் தலைகீழாக்கி போட்டுது . 

Link to comment
Share on other sites

கோட்டா ஜனாதிபதி தேர்தல்ல வென்டத்திலிருந்து கோட்டா வீசும் எலும்புத்துண்டை பொறுக்க சுமந்திரன் நாய்படாதபாடா அலைஞ்சு கொண்டிருக்கார்.

மனோகணேசன் வழில எப்பிடியாவது அமைச்சு கதிரைல உட்கார்றது சுத்துமாத்து சுமந்திரனின் தற்போதைய கனவு.

அதை நோக்கி சொதப்பல் சுமந்திரனின் பல அறிக்கைகளை பேட்டிகளை கண்டாச்சு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.