Jump to content

கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 4வது இடம் நோக்கி பயணிக்கும் இந்தியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை நெருங்கியது; 56 ஆயிரம் பேர் பலி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை நெருங்கியது; 56 ஆயிரம் பேர் பலி

 

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றின் கோரமுகம், ஒவ்வொரு நாளும் உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. நேற்று மதியம் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் வெளியிட்ட புள்ளி விவரங்கள், உலகில் 2 கோடியே 32 லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதையும், 8 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலி கொண்டு இருப்பதையும் காட்டுகின்றன.


இன்றளவும் மிக மோசமான பாதிப்பை சந்திக்கும் நாடாக அமெரிக்கா (58.06 லட்சம்) தொடர்கிறது. அங்கு 1.79 லட்சம் பேர் கொரோனாவின் கோரப்பசிக்கு இரையாகி உள்ளனர். அடுத்த நிலையில் உள்ள பிரேசில் நாட்டில் 35.36 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிற சூழலில், 1.13 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

மூன்றாம் இடத்தில் இந்தியா நீடிக்கிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 69 ஆயிரத்து 874 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, புதிய உச்சம் தொட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 29 லட்சத்து 75 ஆயிரத்து 701 ஆக உயர்ந்துள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்து விடும்.

ஒரே நாளில் 945 பேர் பலியாகியும் உள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் (983) நேற்று பலி சற்று குறைந்துள்ளது. பலியான 945 பேரில் மராட்டிய மாநிலத்தில் மட்டுமே 339 பேர் பலியாகி இருப்பது அங்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது அதிகபட்ச உயிரிழப்பை தமிழகம் சந்தித்துள்ளது. கர்நாடகத்தில் 93, ஆந்திராவில் 91, உத்தரபிரதேசத்தில் 64, மேற்கு வங்காளத்தில் 55, பஞ்சாப்பில் 34, ஜம்மு காஷ்மீரில் 15, குஜராத்திலும், மத்திய பிரதேசத்திலும் தலா 14, டெல்லியில் 13, கேரளா, சத்தீஷ்கார், ராஜஸ்தானில் தலா 12, ஜார்கண்டில் 11 பேர், ஒடிசாவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒற்றை இலக்க உயிரிழப்பை சந்தித்துள்ள மாநிலங்களாக கோவா (9), அரியானா (7), தெலுங்கானா (7), அசாம் (6), பீகார் (6), புதுச்சேரி (6), உத்தரகாண்ட் (5), சண்டிகர், இமாசலபிரதேசம், மணிப்பூர், அந்தமான் நிகோபார் (அனைத்திலும் தலா 2), லடாக் (1), திரிபுரா (1) ஆகியவை உள்ளன.

இதுவரை நாட்டில் கொரோனாவுக்கு இரையானோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 794 ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலம் முதல் இடத்தில் (21 ஆயிரத்து 698) நீடிக்கிறது. 2-வது இடத்தில் தமிழகம் (6,340), 3-வது இடத்தில் கர்நாடகம் (4,522) உள்ளன.

பிற மாநிலங்களை பொறுத்தமட்டில் டெல்லியில் 4,270, ஆந்திராவில் 3,092, குஜராத்தில் 2,867, உத்தரபிரதேசத்தில் 2,797, மேற்கு வங்காளத்தில் 2,689, மத்திய பிரதேசத்தில் 1,185 பேர் உயிரிழந்துள்ளனர்.

1000-க்குள் உயிர்ப்பலி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் பஞ்சாப் (991), ராஜஸ்தான் (933), தெலுங்கானா (744), ஜம்மு காஷ்மீர் (593), அரியானா (585), பீகார் (498), ஒடிசா (390), ஜார்கண்ட் (297), அசாம் (227), கேரளா (203), உத்தரகாண்ட் (192), சத்தீஷ்கார் (180), புதுச்சேரி (143), கோவா (135), திரிபுரா (70), சண்டிகார் (33), அந்தமான் நிகோபார் (32), இமாசலபிரதேசம் (25), மணிப்பூர் (20), லடாக் (19), நாகலாந்து (8), மேகாலயா (6), அருணாசலபிரதேசம் (5), சிக்கிம் (3), தத்ராநகர் ஹவேலி தாமன் தியு (2) ஆகியவை உள்ளன.

இந்தியாவில் இறப்புவிகிதம் என்பது தற்போது 1.87 சதவீதமாக குறைந்துள்ளது. இது உலகின் மிக குறைந்த இறப்புவிகிதங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 330 பேர் மட்டுமே கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/23051026/Corona-impact-in-India-is-close-to-30-lakhs.vpf

 

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது; புதிய உச்சமாக ஒரே நாளில் 78,761 பேருக்கு தொற்று

இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது; புதிய உச்சமாக ஒரே நாளில் 78,761 பேருக்கு தொற்று

 

புதுடெல்லி,

உலக மக்களிடையே கடந்த பல மாதங்களாக பீதியை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா எனும் பெருந்தொற்று, இந்தியாவிலும் நாளுக்கு நாள் தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்து வருகிறது. சில பத்தாயிரங்களில் புதிய பாதிப்புகளை தினமும் வழங்கி வருகிறது. கணிசமான எண்ணிக்கையில் உயிர்களையும் காவு கொண்டு வருகிறது.


அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. இதுவரை இல்லாத அதிக அளவாக 78 ஆயிரத்து 761 பேர் ஒரே நாளில் கொரோனாவிடம் சிக்கி இருக்கின்றனர். இதன் மூலம் நாட்டின் பாதிப்பு மொத்த எண்ணிக்கையும் 35 லட்சத்தை கடந்து இருக்கிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 35 லட்சத்து 42 ஆயிரத்து 733 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியா, 30 லட்சம் கொரோனா நோயாளிகள் என்ற நிலையை கடந்த 23-ந்தேதிதான் எட்டியிருந்தது. அடுத்த ஒரு வாரத்துக்குள் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைப்போல அந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 948 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையும் தற்போது 63 ஆயிரத்து 498 ஆக உயர்ந்து இருக்கிறது.

உயிரிழந்த 948 பேரில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 328 பேர், கர்நாடகாவில் 115, தமிழகத்தில் 87 பேர் பலியாகி இருக்கின்றனர். அடுத்ததாக ஆந்திரா (82), உத்தரபிரதேசம் (62), மேற்கு வங்காளம் (53), பஞ்சாப் (41), மத்திய பிரதேசம் (22), ஜார்கண்ட் (16), டெல்லி (15), ஒடிசா (14), குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 13 என பல மாநிலங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இதைப்போல மொத்த சாவு எண்ணிக்கையிலும் மராட்டியமே முதலிடம் பெற்றுள்ளது. அங்கு இதுவரை 24 ஆயிரத்து 103 பேர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். அடுத்ததாக 7,137 பலி எண்ணிக்கையுடன் தமிழகம் 2-வது இடத்திலும், 5,483 சாவு எண்ணிக்கையுடன் கர்நாடகா 3-வது இடத்தையும் பிடித்து உள்ளன.

மேலும் டெல்லி (4,404), ஆந்திரா (3,796), உத்தரபிரதேசம் (3,356), மேற்கு வங்காளம் (3,126), குஜராத் (2,989) மற்றும் பஞ்சாப் (1,348), மத்திய பிரதேசம் (1,345), ராஜஸ்தான் (1,030) போன்ற மாநிலங்களும் கணிசமான கொரோனா பலி எண்ணிக்கையை பெற்றிருக்கின்றன.

இதற்கிடையே கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்து உள்ளது. நேற்று காலை வரையிலான நிலவரப்படி இதுவரை 27 லட்சத்து 13 ஆயிரத்து 933 பேர் கொரோனாவை வென்று உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 76.61 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் 7 லட்சத்து 65 ஆயிரத்து 302 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 21.60 சதவீதம் ஆகும்.

இதைப்போல இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதமும் 1.79 ஆக சரிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த 10 லட்சத்து 55 ஆயிரத்து 27 பரிசோதனைகளையும் சேர்த்து இதுவரை, 4 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரத்து 636 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

கொரோனாவுக்கு எதிராக ஒவ்வொரு நாடும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, ஒவ்வொரு நாடும் 10 லட்சம் பேருக்கு குறைந்தபட்சம் 140 பரிசோதனைகளை நாளொன்றுக்கு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை இந்த எண்ணிக்கையை ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் ஏற்கனவே கடந்து விட்டதாக கூறியுள்ள மத்திய அரசு, இந்த பரிசோதனைகள் அதிகரித்தாலும் தொற்றை குறைக்கும் நடவடிக்கையில் பல்வேறு மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/31050617/Indias-corona-vulnerability-exceeds-35-lakh-The-new.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஒரே நாளில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா; குணம் அடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் ஒரே நாளில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா; குணம் அடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியது

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியின் ஆவேச தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று மதியம் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, உலகமெங்கும் 2 கோடியே 59 லட்சத்து 83 ஆயிரம் பேரை தொற்று பாதித்துள்ளது. 8.62 லட்சம் பேர் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர். பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 62.60 லட்சம் பேருக்கு தொற்று பாதித்த நிலையில், 1.88 லட்சம் பேர் இறந்துள்ளனர். 2-ம் இடத்தில் இருக்கிற பிரேசில் நாட்டில் 39.52 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதில், 1.22 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 3-வது மோசமான நாடாக இந்தியா தொடர்கிறது.

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 78 ஆயிரத்து 357 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்று முன்தினம் 10 லட்சத்து 12 ஆயிரத்து 367 மாதிரிகளுக்கு கொரோனா சோதனை நடைபெற்ற நிலையில், இந்தளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மொத்த பாதிப்பு என்பது 37 லட்சத்து 69 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,045 பேர் பலியாகி உள்ளனர். மராட்டியத்தில் அதிகபட்சமாக 320 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்து கர்நாடகத்தில் 135 பேர் இறந்து இருக்கிறார்கள். மூன்றாவது அதிகபட்ச உயிரிழப்பை தமிழகம் சந்தித்துள்ளது.

மற்ற மாநிலங்களை பொறுத்தவரையில் ஆந்திராவில் 84, பஞ்சாப்பில் 59. உத்தரபிரதேசத்தில் 56, மேற்கு வங்காளத்தில் 55, பீகாரில் 39, மத்திய பிரதேசத்தில் 32, டெல்லியில் 18, அரியானாவில் 17, குஜராத்திலும், ஜம்மு காஷ்மீரிலும் தலா 14, ராஜஸ்தானில் 13, புதுச்சேரியில் 12, ஜார்கண்ட், ஒடிசா, உத்தரகாண்டில் தலா 11, சத்தீஷ்காரிலும், தெலுங்கானாவிலும் தலா 10 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 10-க்கும் குறைவான எண்ணிக்கையில் உயிரிழப்பை சந்தித்துள்ளன.

இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை என்பது 66 ஆயிரத்து 333 ஆக உயர்ந்து இருக்கிறது. முதல் இடத்தில் உள்ள மராட்டியத்தில் 24 ஆயிரத்து 903 பேர் இறந்துள்ளனர். அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள கர்நாடகத்தில் 5,837 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

டெல்லியில் 4,462, ஆந்திராவில் 4,053, உத்தரபிரதேசத்தில் 3,542, மேற்கு வங்காளத்தில் 3,283, குஜராத்தில் 3,034, பஞ்சாப்பில் 1,512, மத்திய பிரதேசத்தில் 1,426, ராஜஸ்தானில் 1,069 பேர் மரணம் அடைந்துள்ளனர். 1000-க்கும் கீழான எண்ணிக்கையில் இறப்பை சந்தித்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் தெலுங்கானா (846), ஜம்மு காஷ்மீர் (717), அரியானா (706), பீகார் (621), ஒடிசா (503), ஜார்கண்ட் (428), அசாம் (315), கேரளா (298), சத்தீஷ்கார் (287), உத்தரகாண்ட் (280), புதுச்சேரி (240), கோவா (194), திரிபுரா (118) ஆகியவை உள்ளன.

மேலும், சண்டிகார், அந்தமான் நிகோபார், இமாசலபிரதேசம், லடாக், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, அருணாசலபிரதேசம், சிக்கிம், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு ஆகியவை 100-க்கும் கீழாக இறப்புகளை சந்தித்து உள்ளன.

இறப்புவிகிதம், 1.76 சதவீதமாக உள்ளது. உலகின் மிக குறைந்த இறப்பு விகிதங்களில் இதுவும் ஒன்று.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்து 26 பேர் வீடு திரும்பி உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேலானோர் குணம் அடைந்து வீடு திரும்பிய மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் (10 ஆயிரத்து 978), ஆந்திரா (9,350), தமிழகம், கர்நாடகம் (5,159) ஆகியவை உள்ளன.

இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை, 29 லட்சத்து 1,908 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தோர் விகிதம் 76.98 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. தற்போது நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை என்பது 8 லட்சத்து 1,282 ஆக இருக்கிறது. இது மொத்த பாதிப்பில் 21.26 சதவீதம் ஆகும்.

இதே போன்று இதுவரை இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 37 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா பாதித்தோரில் 54 சதவீதத்தினர் 18-44 வயதினர் ஆவர். 26 சதவீதத்தினர் 45-60 வயதினர், 8 சதவீதத்தினர் 17 வயதுக்குட்பட்டோர், 12 சதவீதத்தினர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்.

* கொரோனாவால் இறந்தோரில் 51 சதவீதத்தினர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் ஆவார்கள். 36 சதவீதத்தினர் 45-60 வயதினர், 11 சதவீதத்தினர் 26-44 வயதினர், 1 சதவீதத்தினர் 18-25 வயதினர், 17 வயதுக்கு உட்பட்டோர் 1 சதவீதத்தினர் ஆவர்.

இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/03045754/Corona-for-78-thousand-people-in-a-single-day-in-India.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 லட்சத்தை கடந்தது; மீண்டவர் எண்ணிக்கையும் 31 லட்சத்தை தாண்டியது
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 லட்சத்தை கடந்தது; மீண்டவர் எண்ணிக்கையும் 31 லட்சத்தை தாண்டியது
 

புதுடெல்லி,

உலகம் முழுவதும் இன்று மக்களின் சிந்தையை ஆக்கிரமித்து இருக்கும் ஒரே பெயர், கொரோனா. மனுக்குலத்தின் அன்றாட நிகழ்வுகளை முடக்கி வைத்திருக்கும் இந்த பெருந்தொற்று அரசுகளின் இயக்கத்தையும் தடுத்தாள்கிறது. கொத்துக்கொத்தான மரணங்களும், கும்பல் கும்பலான புதிய நோயாளிகளும் அன்றாட நிகழ்வாகிப்போனதால், மருத்துவ துறையே ஆட்டம் காண்கிறது. கண்ணுக்குத்தெரியாத இந்த எதிரியை எதிர்த்து போரிட மருந்துகளோ, தடுப்பூசியோ இல்லாமல் வல்லரசுகளும் நிராயுதபாணிகளாகி இருக்கின்றன.

இப்படி உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் இந்தியாவும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த தொற்றால் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாவும் இடம்பெற்று உள்ளது.

இங்கு தொற்றை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விட்டிருந்தாலும் இந்த கொடிய வைரசை தடுக்க முடியவில்லை. தினசரி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் 86,432 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இல்லாத அதிக அளவாக இந்த பாதிப்பு அமைந்து உள்ளது.

இந்த புதிய நோயாளிகளையும் சேர்த்து நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 23 ஆயிரத்து 179 ஆக அதிகரித்து உள்ளது. இதில் கடைசி 10 லட்சம் நோயாளிகள் மட்டும் கடந்த 2 வாரங்களில் தொற்றுக்கு ஆளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியத்தில் மட்டுமே 8,63,062 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அடுத்ததாக தமிழகம் 4,79,506 நோயாளிகளையும், ஆந்திரா 4,51,827 நோயாளிகளையும் கொண்டுள்ளன.

நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள கொரோனா பலி எண்ணிக்கையும் 70 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 1,089 புதிய சாவு எண்ணிக்கையுடன் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்து 561 ஆக உயர்ந்துள்ளது. சாவு எண்ணிக்கையிலும் மராட்டியமே முதலிடத்தில் (25,964) உள்ளது. அடுத்ததாக தமிழகம் (7,687) மற்றும் கர்நாடகா (6,170) மாநிலங்கள் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்றுக்கு ஆளானவர் மற்றும் பலியானவர் எண்ணிக்கையில் முறையே 46 மற்றும் 52 சதவீதத்தினர் மராட்டியம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே தொற்றுக்கு எதிராக பரிசோதனை, சிகிச்சை உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இந்த மாநிலங்களை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 31 லட்சத்து 7 ஆயிரத்து 223 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டுமே 70 ஆயிரத்து 72 பேர் குணமடைந்து உள்ளனர். மொத்த மீண்டவர் எண்ணிக்கையில் 5 மாநிலங்கள் மட்டுமே 60 சதவீதத்தினரை கொண்டுள்ளன. குறிப்பாக மராட்டியம் (21 சதவீதம்), தமிழகம் (12.63), ஆந்திரா (11.91), கர்நாடகா (8.82), உத்தரபிரதேசம் (6.14) ஆகிய மாநிலங்கள் அதிக குணமடைந்தவர் எண்ணிக்கையை பெற்றுள்ளன.

தற்போதைய நிலையில் 8 லட்சத்து 46 ஆயிரத்து 395 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 77.23 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.73 சதவீதமாகவும் இருக்கிறது.

கொரோனாவை தடுக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று, பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பது. அந்தவகையில் நாடு முழுவதும் தொடர்ந்து பரிசோதனைகள் நடந்து வருகின்றன. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 59 ஆயிரத்து 346 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருக்கின்றன.

இதன் மூலம் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 491 ஆக அதிகரித்து உள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தெரிவித்து உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/06050950/Corona-impact-in-India-exceeds-40-lakhs-The-number.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா; பிரேசிலை பின்னுக்கு தள்ளியது

கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா; பிரேசிலை பின்னுக்கு தள்ளியது

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தை எட்டியுள்ளது. தினசரி பாதிப்பில் தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
பதிவு: செப்டம்பர் 07,  2020 05:00 AM
புதுடெல்லி,

உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. நாளும் அதிகரித்து வரும் புதிய நோயாளிகள் மற்றும் மரணங்களை தடுக்க முடியாமல் அரசுகள் கையை பிசைந்தே நிற்கின்றன.

மனித குலத்தின் இயல்பு வாழ்க்கையையும், அரசுகளின் சுமுக செயல்பாட்டுக்கும் இந்த கொரோனா தொடர்ந்து தடை போட்டு உள்ளது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கைவரப்பெறாததால் கொரோனாவின் வெறியாட்டத்தை வேடிக்கைதான் பார்க்க முடிகிறது.

தொடர்ந்து படுபாதக செயல்களை அரங்கேற்றி வரும் கொரோனா இந்தியாவையும் நிலைகுலையச் செய்து வருகிறது. இங்கு தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 90 ஆயிரத்து 632 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்து 13 ஆயிரத்து 811 ஆக உயர்ந்தது. இது மத்திய-மாநில அரசுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதுடன், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி இருக்கிறது. இந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 1,065 ஆகும். இதன் மூலம் மொத்த சாவு எண்ணிக்கையும் 70 ஆயிரத்து 626 ஆக அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று தொற்றுக்கு ஆளானவர் எண்ணிக்கை இரவில் வெளியிடப்பட்டது. இதில் இரவு 9 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 41 லட்சத்து 60 ஆயிரத்து 493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதன் மூலம் உலக அளவில் அதிக கொரோனா தொற்று கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை எட்டியது. முன்னதாக 2-வது இடத்தில் நீடித்து வந்த பிரேசில் நாடு 41 லட்சத்து 23 ஆயிரம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 64 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்தியாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் உச்சம் மற்றும் உலக அளவிலான பாதிப்பிலும் தொடர்ந்து ஏறுமுகம் போன்றவற்றால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாக 73 ஆயிரத்து 632 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து 2-வது நாளாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்திருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில் இது ஒரு நேர்மறையான தாக்கமாக பார்க்கப்படுகிறது. இவர்களையும் சேர்த்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 31,80,865 ஆக உயர்ந்திருக்கிறது.

தற்போதைய நிலையில் சுமார் 8 லட்சத்து 62 ஆயிரத்து 320 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர் விகிதம் 77.32 சதவீதமாக உள்ளது. இதைப்போல இறப்பு விகிதமும் 1.72 என்ற அளவில்தான் உள்ளது. இது உலக அளவில் மிகவும் குறைந்த சதவீதம் என மத்திய அரசு கூறியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிரான சிகிச்சைப்பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏராளமான உயிர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நாட்டின் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து விட்ட நிலையில், நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 654 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இது மொத்த பரிசோதனை எண்ணிக்கையை 4 கோடியே 88 லட்சத்து 31 ஆயிரத்து 145 என்ற அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.

இதற்கிடையே டெல்லி, மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத், ஜார்கண்ட் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 35 மாவட்டங்களில் அதிக நோயாளிகள் மற்றும் இறப்பு விகிதம் இருப்பதாக மத்திய அரசு கண்டறிந்துள்ளது.

எனவே இந்த மாவட்டங்களில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து நோயாளிகளையும், இறப்பு விகிதத்தையும் குறைக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கேட்டுக்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அந்தந்த மாநில சுகாதார செயலாளர்களுடன் காணொலி மூலம் ஆய்வுக்கூட்டம் ஒன்றையும் அவர் நடத்தினார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/07043910/India-2nd-in-corona-impact-Pushed-Brazil-back.vpf

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல் லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் களின் எண்ணிக்கை 51 இலட்சத்தையும் தாண்டியது 40.25 இலட்சம் பேர் குணமடைந் துள்ளதாக அந்நாட்டு ஊடகங் கள் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர் ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்த எண்ணிக் கை 51 இலட்சத்து 18 ஆயிரத்து 253 பேர் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

40 இலட்சத்து 25 ஆயிரத்து 079 பேர் குணமடைந்துள்ளனர், 10 இலட்சத்து 25 ஆயிரத்து 079 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ள மை குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.