Jump to content

தொங்கவிடப்படும் கோப்பி மற்றும் உணவுவகைகள் .. (Suspended coffee & food )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொங்கவிடப்படும் கோப்பி மற்றும் உணவுவகைகள் .. (Suspended coffee & food )

அண்மையில் அறிந்தது ..

நீங்கள் உணவகத்திற்கு செல்லும் நேரங்களில் , சில இடங்களில் உணவு  வகைகட்கு நீங்கள் பணம் செலுத்தி தொங்க விடலாம் ( suspend ),  தேவையுள்ள வேறு எவராவது அந்த உணவகத்திற்கு வந்து அதனை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பல வகைகளில் நன்மை .. தேவையுள்ளவர் பொது இடங்களில் இரந்து கொள்வதை தவிர்க்கலாம் , உதவியவருக்கு முகம் தெரியாமலேயே உதவி செய்யும் திருப்தி , பணப் புழக்கம் அதிகரிப்பு என ...     

எவருக்காவது அனுபவம் இருக்கின்றதா , இலங்கையிலோ அவுஸ்திரேலியாவிலோ  நான் செல்லும் இடங்களில் இது வரை சந்தித்ததில்லை   

 

Link to comment
Share on other sites

20 minutes ago, சாமானியன் said:

தொங்கவிடப்படும் கோப்பி மற்றும் உணவுவகைகள் .. (Suspended coffee & food )  

 கோப்பி கொட்டைகளை தொங்கவிட்டு உணவு தயாரிக்கிறார்கள் என்று பார்த்தால், இடைநிறுத்தப்பட்ட விற்பனை பற்றி எழுதி இருக்கிறீர்கள். சொல்லுக்கு சொல்லு மொழிபெயர்த்து அர்த்தத்தை தொலைத்துவிடலாமா?

இந்திய மத்திய அரசின் ஆவணம் ஒன்றில், The government has a big roll to play. என்பதை தமிழில், “அரசாங்கம் விளையாடுவதற்கு ஒரு பெரிய உருளையை கொண்டுள்ளது.” என்று மொழிபெயர்த்து இருந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

 கோப்பி கொட்டைகளை தொங்கவிட்டு உணவு தயாரிக்கிறார்கள் என்று பார்த்தால், இடைநிறுத்தப்பட்ட விற்பனை பற்றி எழுதி இருக்கிறீர்கள். சொல்லுக்கு சொல்லு மொழிபெயர்த்து அர்த்தத்தை தொலைத்துவிடலாமா?

இந்திய மத்திய அரசின் ஆவணம் ஒன்றில், The government has a big roll to play. என்பதை தமிழில், “அரசாங்கம் விளையாடுவதற்கு ஒரு பெரிய உருளையை கொண்டுள்ளது.” என்று மொழிபெயர்த்து இருந்தார்கள்.

மன்னிக்க வேண்டும் , விற்பனை அங்கே முடிவடைந்து விட்டது தானே , சரியான பதவுரை உடனேயும் பிடிபடாததால் , அடைப்புக் குறிக்குள் ஆங்கில மூலத்தையும் குறிப்பிட்டிருந்தேன் .
எம்மவர்க்கு இது ஒரு புதிய விடயம் தான் போலும் ….

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சரியான மொழிப்யர்ப்புதான் என நினக்கின்றேன். பொதுவாக கணக்கியலில் ஆங்கிலத்தில் suspense a/c எனப்படுவது, தமிழில் தொங்கல் கணக்கு என மொழிபெயர்க்கப்படும். ஒருவேளை அந்த அர்த்தத்தில் இது மொழிபெய‌ர்க்கப்ப்ட்டதோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

 கோப்பி கொட்டைகளை தொங்கவிட்டு உணவு தயாரிக்கிறார்கள் என்று பார்த்தால், இடைநிறுத்தப்பட்ட விற்பனை பற்றி எழுதி இருக்கிறீர்கள். சொல்லுக்கு சொல்லு மொழிபெயர்த்து அர்த்தத்தை தொலைத்துவிடலாமா?

இந்திய மத்திய அரசின் ஆவணம் ஒன்றில், The government has a big roll to play. என்பதை தமிழில், “அரசாங்கம் விளையாடுவதற்கு ஒரு பெரிய உருளையை கொண்டுள்ளது.” என்று மொழிபெயர்த்து இருந்தார்கள்.

மொழிபெயர்ப்பு பிரச்சனைகள் குறித்து, ஹிட்லர் திரியில் பார்த்தோம்.

Suspense என்பது, எந்த வகை செலவு என்று தெரிந்து கொள்ளும் வரை, அந்த செலவு தற்காலிகமாக போஸ்ட் பண்ணப்படுவது.

தமிழில் தவறாக தொங்கல் என்று சொல்கிறார்கள். என்ன என்று தெரியாத, சந்தேக செலவு.

இதுல ஒரு பொடியளுக்குள் பிரபல்யமான பகிடி ஒன்று உண்டு. 'கணக்குப்பிள்ளை, அந்த செலவு விபரம் என்ன எண்டால், கொக்கு சுட்டது ஐந்து ரூபா. துவக்கு திருத்தினது ஆயிரம் ரூபா'.

Suspend என்பது, நிறுத்துவது அல்லது நிறுத்தி வைப்பது. ஆண்களின் உள்ளாடைகளை suspender என்றும் சொல்வார்கள். விளக்கம் தேவையில்லை.

இந்த பதிவில் மொழி பெயர்த்த வகையில், கோப்பி மற்றும் உணவு வியாபாரம் நிறுத்தி வைக்கப்படுவதாகவே புரியவேண்டி இருந்தது. கோரோனோ காரணமாக அப்படி நிறுத்தப்படுகின்றதோ என்று தான் உள்ளே வந்து பார்த்தால், விசயமே வேறு.

அதாவது, கொஞ்சம் நல்ல மனது படைத்தோர், கோப்பி, மற்றும் உணவு பொருட்களை வாங்கி, அங்கே தொங்கி கொண்டிருக்கும் ஒரு கூடையில் (பாஸ்கெட்) அல்லது பையினுள் வைத்துவிட்டு செல்வார்கள்.

தேவைப்படுபவர்கள் அதனை எடுத்து உண்டு கொள்ளலாம்.

இந்த முறை, இலங்கையிலோ அவுஸ்திரேலியாவிலோ  நான் செல்லும் இடங்களில் இது வரை சந்தித்ததில்லை என்கிறார்.

உண்மையில் கோரோனோ, இத்தாலியில் வேகமாக பரவி, மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாதவாறு முடக்கப்படட போது, வெளியில் கூடையினை தொங்க விடும் பழக்கத்தினை அறிமுகப்படுத்தினர்.

அயலவர்கள், பழமோ, சமைத்த உணவோ, கோப்பியோ அல்லது சமைக்கப்படாத உலர் உணவுகளையோ விட்டு செல்வர்.

இதுதான் சாமானியன் கேட்கும் கேள்வியின் அடிப்படை என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இதுல ஒரு பொடியளுக்குள் பிரபல்யமான பகிடி ஒன்று உண்டு. 'கணக்குப்பிள்ளை, அந்த செலவு விபரம் என்னடா எண்டால், கொக்கு சுட்டது ஐந்து ரூபா. துவக்கு திருத்தினது ஆயிரம் ரூபா

ஐம்பது ரூபாவுக்கு....  கொக்கு சுட்டு இருந்தால், துவக்கு திருத்த வேண்டி வந்திருக்காது. 😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.