Jump to content

16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இலங்கை அரசு தடை!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இலங்கை அரசு தடை!!

10448822_10154287932675637_5184144913874661093_n-1.jpg?189db0&189db0

 

16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்திலும் திருத்தத்தை மேற்கொள்ளவும் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

இன்று 12ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாக ஊழியர்களை பணியில் ஈடுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயது 16 என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்

2020 ஜுன் மாதம் 12ஆம் திகதியன்று இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாகவும் நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை பிரகடனத்தில் ‘நெனபல சஹித்த லமா பரபுரக்’ என்ற (பாண்டித்தியமிக்க தலைமுறையினர்) தொனிப்பொருளின் கீழ் குறிப்பிபடப்பட்ட வகையில் நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் சர்வதேச சிறுவர் உரிமை பிரகடனத்திற்கு அமைய கிடைக்க வேண்டிய சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதிசெய்வதற்காக அவசியம் பாடசாலைக் கல்வி வயதிற்கு அமைவான வகையில் ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தம் ஆகக்குறைந்த வயதெல்லையை 16 ஆக அதிகரிக்கும் நோக்கில் கீழ்கண்ட தொழிலாளர் கட்டளைச்சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • 1954ஆம் ஆண்டு இலக்கம் 13 இன் கீழான (129 அதிகாரத்திற்கு அமைவாக ) வர்த்தக நிலையங்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான (சேவை மற்றும் சம்பள முறைப்படுத்துதல்) சட்டம்
  • 1956ஆம் ஆண்டு இலக்கம் 47 இன் கீழான பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும் சட்டம்
  • (135 அதிகாரம் – ) ஆகக் கூடிய சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டம் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act
  • 1942ஆம் ஆண்டு இலக்கம் 45 இன் கீழான தொழிற்சாலை கட்டளைச் சட்டம்
  • 1958 ஆண்டு இலக்கம் 15 இன் கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் ஏற்பாடுகளுக்கு அமைவாக 1958.10.31 தினத்தன்று அரசாங்க அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் உள்ள கட்டளை

https://newuthayan.com/16-வயதிற்குட்பட்டவர்களை-வ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் அதிகப்பிரசங்கித்தனமாக உள்ளது. பாடசாலை நேரங்களில் வேலை செய்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தடை விதிக்கலாம். இவ்வாறே வேலை செய்யும் நேரத்தையும் மட்டுப்படுத்தலாம் இத்தனை மணித்தியாலங்கள் ஒரு நாளைக்கு/கிழமைக்கு என்று. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்வதற்கு அனுமதி உள்ளது. 

பிறந்தது தொட்டு  அம்மா, அப்பாவின் வளர்ப்பில் பிள்ளைகள் தங்கி இருந்து பரந்த அறிவு இல்லாமல் கடைசியில் பல்கலைக்கழக பட்டத்தையும் வைத்துக்கொண்டு வேலை இல்லாமல் திண்டாடுவதை காட்டிலும், நான்கு சதம் உழைப்பது எப்படி என்று 14வயதிலேயே கற்றுக்கொண்டால் பணத்தை பக்குவமாய் பயன்படுத்தும் நாட்டமும், வேலைத்தளங்கள், பல்வேறு துறைகள் பற்றிய நடைமுறை அனுபவமும் பிள்ளைகளுக்கு ஏற்படும்.

உணர்ச்சிபூர்வமாக சிந்திக்கலாம், சட்ட வரைபுகளில் அறிவுபூர்வமான அணுகுமுறை தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Young Sri Lankan Buddhist monks look on during a procession ...

Sri Lanka Volunteering 5 Things To Do - Go 4 Travel Blog

சிறுவர்களை... புத்த பிக்குகளாக சேர்ப்பதிலும், வயது வரம்பு... கடைப் பிடிப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சட்டம் அதிகப்பிரசங்கித்தனமாக உள்ளது. பாடசாலை நேரங்களில் வேலை செய்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தடை விதிக்கலாம். இவ்வாறே வேலை செய்யும் நேரத்தையும் மட்டுப்படுத்தலாம் இத்தனை மணித்தியாலங்கள் ஒரு நாளைக்கு/கிழமைக்கு என்று. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்வதற்கு அனுமதி உள்ளது. 

பிறந்தது தொட்டு  அம்மா, அப்பாவின் வளர்ப்பில் பிள்ளைகள் தங்கி இருந்து பரந்த அறிவு இல்லாமல் கடைசியில் பல்கலைக்கழக பட்டத்தையும் வைத்துக்கொண்டு வேலை இல்லாமல் திண்டாடுவதை காட்டிலும், நான்கு சதம் உழைப்பது எப்படி என்று 14வயதிலேயே கற்றுக்கொண்டால் பணத்தை பக்குவமாய் பயன்படுத்தும் நாட்டமும், வேலைத்தளங்கள், பல்வேறு துறைகள் பற்றிய நடைமுறை அனுபவமும் பிள்ளைகளுக்கு ஏற்படும்.

உணர்ச்சிபூர்வமாக சிந்திக்கலாம், சட்ட வரைபுகளில் அறிவுபூர்வமான அணுகுமுறை தேவை.

நீங்கள் கூறுவது சரியாக இருந்தாலும், நடைமுறைப்படுத்த சில காலங்கள் செல்லலாம், ஏனெனில் எங்களுடைய (பெரும்பான்மையான)பெற்றோர்களின் மனநிலை மாறவேண்டும்.. தங்களது முழு சக்தியையும் பிள்ளைகளை படிப்பித்துவிட்டால் போதும் என்று இருப்பவர்களே அதிகம். அல்லது வறுமைகாரணமாக கல்வியை இடைநிறுத்திவிட்டு வேலைசெய்பவர்களும் உண்டு.

இரண்டாவது, மேற்குலநாடுகளில்/வளர்ச்சியடைந்த நாடுகளில் 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் வேலையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம், அந்த நாடுகளுடன் ஓப்பிடும்போது, இலங்கையில் அவ்வாறான வசதிகள் இருக்கிறதா?  அப்படி இருக்கும் பட்சத்தில் அல்லது அவற்றிற்கான வாயப்புகள் உருவாகும் சந்தர்ப்பத்தில் நீங்கள் கூறியது நிறைவேறலாம்..

 

Link to comment
Share on other sites

On 12/6/2020 at 08:11, உடையார் said:

16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

வறுமை - அநேகமான பெற்றோர்கள் வறுமை காரணமாக பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள் 

கல்வி - அரசால் போதிய கல்வி வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என சட்டம் இருக்கலாம். ஆனால், யதார்த்தம் அதுவாக இல்லை 

சுரண்டல் - இவ்வாறான சிறுவர்களை வேலைக்கு வைத்து பணம் உள்ளவர்கள் மேலும் பணக்கார்கள் ஆகின்றனர். அவர்களை அரசு தண்டிப்பது ... குறைவு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.