Jump to content

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள்- என்ன சிக்கல்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ்

கொரோனா வைரஸ் பாதிப்பால், பல கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். மாதாந்திர செக் அப், ஸ்கேன், உள்ளிட்ட பல விஷயங்களுக்கு அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கொரோனா தொற்று அதற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, கொரோனா காலகலலத்தில் வெளியே சென்றால், அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் உள்ளது.

சென்னை அரசு மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 191 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருவதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. அந்த வகையில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் 70 பேரும், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 68 பேரும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 29 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 பேரும் என மொத்தம் 191 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பலர் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதனை தனிப்பட்ட வகையில் பிபிசி தமிழால் உறுதி செய்ய முடியவில்லை.

எனினும் மாநில அரசின் தரவுகள்படி, கர்ப்பிணி பெண்கள் ஒருசிலர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்,

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக கர்ப்பிணி பெண்கள் இருக்கிறார்களா? அரசு இதுகுறித்து என்ன செய்ய வேண்டும்? கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அத்தொற்று நிச்சயம் இருக்குமா ஆகியவை குறித்து மகப்பேறு மருத்துவர் ஷாந்தி ரவீந்திரநாத் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் இருந்து.

கேள்வி: முதியவர்கள், நாள்பட்ட வியாதி உடையவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கர்ப்பிணிப் பெண்களும் அதிகம் பாதிக்கக்கூடிய விளிம்பில் இருக்கிறார்களா?

பதில்: நம் சமூகம் பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சமூகம், ஏனெனில் தாய், சேய், என இரு உயிர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில், சொல்லப்போனால் ஏப்ரல் மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) ஓர் அறிவிப்பானையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தை பிறக்கும் 5ல் இருந்து 10 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அப்போது அதிகம் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால், மே 18ஆம் தேதி ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட அறிவிப்பானையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு நீக்கப்பட்டது.

கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற உத்தரவு இருந்தபோதே பல கர்ப்பிணிப் பெண்கள் அதனை மேற்கொள்ள தயக்கம் காட்டினார்கள். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், நீண்ட நேரம் காத்திருப்பு, பரிசோதனை செய்யப்போய் தங்களுக்கு கொரோனா தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தார்கள்.

https://www.bbc.com/tamil/science-53021112

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.