Jump to content

யாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இன்றைக்கு   கள்ளு வாங்கி அடிச்ச மாதிரி இருக்கு, இன்னும் முறியவில்லை போல் உள்ளது😀. பார்ப்பம் எப்ப வருகின்றா என்று. 

நானும் தான் பார்த்தனான்.நாங்களும் அந்தக் காலத்தில் சின்ன பேணி கொண்டு போய் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்திருக்கிறோம்.இதென்ன பெரிய பானையோடு போக அவனும் நிறைய ஊத்தி விடுறான்.சரி முறிஞ்சு வரட்டும் பார்ப்போம்.
ஏற்கனவே காணொளி பார்த்தாச்சு.

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply
22 hours ago, பெருமாள் said:

உறைப்பு சாப்பாடு ஒன்றும் யு டியூப் ல்  வரவில்லையோ ?

இனிவரும் காணொளிகளில் இருக்கும்.

Link to comment
Share on other sites

15 hours ago, உடையார் said:

இன்றைக்கு   கள்ளு வாங்கி அடிச்ச மாதிரி இருக்கு, இன்னும் முறியவில்லை போல் உள்ளது😀. பார்ப்பம் எப்ப வருகின்றா என்று. 

கள் வாங்கியதோடு என் வேலை முடிந்து விட்டது. அடிமண்டி கூட எனக்கு கிடைக்கவில்லை.ஏற்கனவே சுவைத்துப்பார்த்த அனுபவம் இருந்ததால் அந்த அளவுக்கு ஆர்வமும் இருக்கவில்லை. 
எனக்கு கள்ளு விட்ட அப்பம் மட்டுமே மிச்சம்.அப்பம் சுவையோ சுவை. 

Link to comment
Share on other sites

14 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் தான் பார்த்தனான்.நாங்களும் அந்தக் காலத்தில் சின்ன பேணி கொண்டு போய் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்திருக்கிறோம்.இதென்ன பெரிய பானையோடு போக அவனும் நிறைய ஊத்தி விடுறான்.சரி முறிஞ்சு வரட்டும் பார்ப்போம்.
ஏற்கனவே காணொளி பார்த்தாச்சு.

குடல்புழுக்களுக்கு கள்ளு நல்லது என்று சொல்லி எல்லோரும் குடித்து முடித்துவிட்டார்கள். எனக்கு அப்பம் மட்டுமே மிச்சம். :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/ekBYtoMcBrc

 

 SHARE வை கிளிக் பண்ணும் போது அதில் வரும் லிங்கை கொப்பி பண்ணி இங்கே இணைத்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை மரத்திலையிருந்து... உடன் இறக்கின, கள்ளை  பார்த்தவுடன்... 
வாயெல்லாம்... வீணீர், வழியத்  தொடங்கி விட்டது. 🤪😝

குண்டுமணி எடுக்கிற பத்தைக்குள்ளை... 
ஒரு  நாக பாம்பு,  "உஸ்ஸ்"....  என்று படம் எடுத்து விட்டு, 
சர்ரென்று.... ஓடிப் போனதை பார்த்து, பயந்து விட்டேன். 🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sanchu Suga said:

நன்றாக இருக்கு உங்கள் ஒளிப்பதிவு பிள்ளைகளுடன், தொடருங்கள் 

Link to comment
Share on other sites

11 hours ago, தமிழ் சிறி said:

பனை மரத்திலையிருந்து... உடன் இறக்கின, கள்ளை  பார்த்தவுடன்... 
வாயெல்லாம்... வீணீர், வழியத்  தொடங்கி விட்டது. 🤪😝

குண்டுமணி எடுக்கிற பத்தைக்குள்ளை... 
ஒரு  நாக பாம்பு,  "உஸ்ஸ்"....  என்று படம் எடுத்து விட்டு, 
சர்ரென்று.... ஓடிப் போனதை பார்த்து, பயந்து விட்டேன். 🤓

அது பாம்புகள் ஊசாடுற பற்றைகள்தானாம். ஏதோ தப்பிவிட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை கள்ளு சீவி குடுக்கிறவரும் கசவாரம்.கள்ளு வாங்குறவரும் கசவாரம். நோர்மலாய் ஊரிலையெல்லாம் அப்பம் புளிக்கிறதுக்கு கள்ளு வாங்கிறதெண்டாலும் முட்டி/போத்தில்   நிறையத்தான் வாங்குவம். :cool:

Link to comment
Share on other sites

On 21/6/2020 at 13:10, nedukkalapoovan said:

இதில் குழந்தை மாங்காய் பறிக்கும் முறை தவறு. மாங்காய் பறிக்கும் போது முகத்துக்கு அப்பால் எதிர் திசையில் திருப்பி பறிக்க வேண்டும்.

மாங்காய் பால் கண் பார்வையை சேதப்படுத்தலாம்.

பெற்றோர்கள் இதனை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். 

நல்ல ஆலோசனை!

Link to comment
Share on other sites

On 25/6/2020 at 09:39, தமிழ் சிறி said:

குண்டுமணி எடுக்கிற பத்தைக்குள்ளை... 
ஒரு  நாக பாம்பு,  "உஸ்ஸ்"....  என்று படம் எடுத்து விட்டு, 
சர்ரென்று.... ஓடிப் போனதை பார்த்து, பயந்து விட்டேன். 

ஓன்று இல்லையே, 2 பாம்பு இருந்திச்சு! 

On 25/6/2020 at 09:39, தமிழ் சிறி said:

குண்டுமணி எடுக்கிற பத்தைக்குள்ளை... 
ஒரு  நாக பாம்பு,  "உஸ்ஸ்"....  என்று படம் எடுத்து விட்டு, 
சர்ரென்று.... ஓடிப் போனதை பார்த்து, பயந்து விட்டேன். 

ஓன்று இல்லையே, 2 பாம்பு இருந்திச்சு! 

 

வீட்டு அப்பம் அருமை

Link to comment
Share on other sites

On 21/6/2020 at 20:11, குமாரசாமி said:

நானும் இதை கவனித்திருந்தேன். மாங்காய்பால் முகம் உதடுகளில் பட்டால் அவிந்து புண்ணாக்கி விடும்.

மாங்காயை பிடுங்கி கெட்டு பகுதியை மரத்தில் உரஞ்சி விட்டு கடிப்பதும் பழைய நினைவுகளை கிளறி விட்டது.

கன்னத்தில அவிஞ்சு புண்ணாகி ஆறுவதும் ஒரு அனுபவம். 
பிள்ளைக்கு அது கிடைக்காம பண்ணிப்போடீங்க

Link to comment
Share on other sites

On 26/6/2020 at 04:11, குமாரசாமி said:

இதிலை கள்ளு சீவி குடுக்கிறவரும் கசவாரம்.கள்ளு வாங்குறவரும் கசவாரம். நோர்மலாய் ஊரிலையெல்லாம் அப்பம் புளிக்கிறதுக்கு கள்ளு வாங்கிறதெண்டாலும் முட்டி/போத்தில்   நிறையத்தான் வாங்குவம். :cool:

அப்பத்துக்கு கொஞ்ச கள்ளு போதும். நிறைய வாங்கி யாரோவொரு குடிமகனின் வயிற்றிலடிக்க விருப்பமில்லை.😀

On 27/6/2020 at 05:40, Kali said:

ஓன்று இல்லையே, 2 பாம்பு இருந்திச்சு! 

ஓன்று இல்லையே, 2 பாம்பு இருந்திச்சு! 

 

வீட்டு அப்பம் அருமை

நன்றி 

Link to comment
Share on other sites

On 27/6/2020 at 05:51, Kali said:

கன்னத்தில அவிஞ்சு புண்ணாகி ஆறுவதும் ஒரு அனுபவம். 
பிள்ளைக்கு அது கிடைக்காம பண்ணிப்போடீங்க

நாய் கடிக்கிற, பூரான் கடிக்கிற, தேள் கடிக்கிற அனுபவம் கிடைக்கணும் எண்டு சொல்லுவீங்க போல இருக்கே.....! 😜

On 24/6/2020 at 00:02, பெருமாள் said:

உறைப்பு சாப்பாடு ஒன்றும் யு டியூப் ல்  வரவில்லையோ ?

நான்காவது காணொளியில் பதிவேற்றி இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Sanchu Suga said:

நாய் கடிக்கிற, பூரான் கடிக்கிற, தேள் கடிக்கிற அனுபவம் கிடைக்கணும் எண்டு சொல்லுவீங்க போல இருக்கே.....! 😜

நான்காவது காணொளியில் பதிவேற்றி இருக்கிறேன்.

காளான் காணோளிகளை காணவில்லை இன்னும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, உடையார் said:

காளான் காணோளிகளை காணவில்லை இன்னும்

யாழ்ப்பாணத்தில்.... காளான் சாப்பிடுபவர்கள் இல்லை என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பத்துக்கு குறுநல் எடுப்பது மற்றும் கள்ளு விடுகிறது எல்லாம் சரி ஆனால் உரலில் அரிசி குத்த உலக்கை போடும் ஸ்டைல் சரியில்லை. அரிசிக்கு வலிக்காமல் போடுகிறீங்கள்.உங்களுக்கு வழக்கமான கையால் போடும்போது "அக்சூ " என்று மூச்சு பறிதலுடன் பெலமாக உலக்கை விழ வேண்டும்......நாங்களெல்லாம் அந்தக்காலத்தில எவ்வளவு நெல்லு அரிசி எல்லாம் குத்தியிருப்பம்..... சே ... நான் அரிசி குத்தினத்தை சொல்வதற்கு எவ்வளவு பில்டப் குடுக்க வேண்டியிருக்கு......!   😁 

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில்.... காளான் சாப்பிடுபவர்கள் இல்லை என நினைக்கின்றேன்.

நானே சிறுவயதில் புற்றுக்காளான் சாப்பிட்டு இருக்கிறேன்.அந்த சுவையால் இறைச்சி கறியை கூட அடித்து கொள்ள முடியாது...

Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

அப்பத்துக்கு குறுநல் எடுப்பது மற்றும் கள்ளு விடுகிறது எல்லாம் சரி ஆனால் உரலில் அரிசி குத்த உலக்கை போடும் ஸ்டைல் சரியில்லை. அரிசிக்கு வலிக்காமல் போடுகிறீங்கள்.உங்களுக்கு வழக்கமான கையால் போடும்போது "அக்சூ " என்று மூச்சு பறிதலுடன் பெலமாக உலக்கை விழ வேண்டும்......நாங்களெல்லாம் அந்தக்காலத்தில எவ்வளவு நெல்லு அரிசி எல்லாம் குத்தியிருப்பம்..... சே ... நான் அரிசி குத்தினத்தை சொல்வதற்கு எவ்வளவு பில்டப் குடுக்க வேண்டியிருக்கு......!   😁 

எப்படி குற்றினாலென்ன மாவு வந்தா சரிதான். படத்தொகுப்பாளர் வெட்டிய விதத்தில் அப்படி தெரிகிறது. கல்லுரலுக்கு அந்த அளவு அழுத்தம் கொடுத்தால் மாவு முழுக்க நிலத்தில்தான் கிடக்கும்.நீங்கள் சொல்வது மர உரலுக்குதான் நல்லா பொருந்தும்.

 

காளான் கறியும் சிவப்பு பச்சை அரிசி சோறும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, அபராஜிதன் said:


மரத்தூள் யாழ்ப்பாணத்தில் கிடைக்கிறதா? 

என்ன இப்படி கேட்டுப்போட்டியள்...

உங்கட ஊருக்கும் அனுப்பலாம். ஓர்டரை போடுங்கோ.

Link to comment
Share on other sites

11 minutes ago, Nathamuni said:

என்ன இப்படி கேட்டுப்போட்டியள்...

உங்கட ஊருக்கும் அனுப்பலாம். ஓர்டரை போடுங்கோ.

இல்ல boss , இப்படியான மரத்தூள் இங்கு சிங்கப்பூரில் மரங்களுக்கு உரமாக போடுவதற்கு பயன்படுத்துகிறார்கள் .. இலங்கையில் இருக்கிறதா என தேடிக்கொண்டிருந்தேன் அது தான்

Link to comment
Share on other sites

10 hours ago, அபராஜிதன் said:


மரத்தூள் யாழ்ப்பாணத்தில் கிடைக்கிறதா? 

காளான் வளர்ப்பதற்க்கு மரத்தை அரியும் போது வரும் தூளை ஈரலிப்பாக்கி பாவிக்க வேண்டும். இங்கே மரக்காலைகளில் கிடைக்கும்.  சிங்கப்பூரில் மரப்பசளையாக பாவிப்பது சேதன பொருட்களின் அரைத்த தூள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.