Jump to content

யாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வப்போது வந்து பார்ப்பேன்.நேரம் எடுத்து பொறுமையா எல்லாம் செய்து இணைப்பதற்கு மிகவும் நன்றி.🙏

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில்.... காளான் சாப்பிடுபவர்கள் இல்லை என நினைக்கின்றேன்.

அங்கை காளான் எண்டால் கொட்டுக்காளான் தான் ஞாபகத்துக்கு வரும். அதை நினைச்சாலே சாப்பிட மனம் வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில்.... காளான் சாப்பிடுபவர்கள் இல்லை என நினைக்கின்றேன்.

புற்றுகாளானின் சுவைக்கு இங்கு விற்கும் காளான் எல்லாம் பிச்சை எடுக்கனும், அந்தளவு சுவை, இறைச்சி கறி கூட தோத்துவிடும். இடியுடன் மழை பெய்த அடுத்தநாள் காட்டுக்குள் பையுடன் வெளிக்கிட்டு விடுவேன் கறையான் புற்றுகளை தேடி, சிலவேளை பாம்புகளிருக்கு பற்றைக்குள் அவற்றை கலைத்துவிட்டுதான் பிடுங்குவது, மொட்டு விரியாமலிருக்கனும்.

இந்தியன் ஆமியின் பிரச்சனைக்குள் பிடுங்க யாருமில்லை, நான் மட்டும் பெட்டி பெட்டியா பிடுங்கி கறியுடன் சாத்ததை தொட்டு சாப்பிட்டோம் 😀

 

9 hours ago, Sanchu Suga said:

 

 

இந்த காளான் சாப்பிட்டதில்லை எப்படி சுவை? வீட்டில் வளர்த்து சமைப்பதே தனி சுவை

Link to comment
Share on other sites

9 hours ago, யாயினி said:

அவ்வப்போது வந்து பார்ப்பேன்.நேரம் எடுத்து பொறுமையா எல்லாம் செய்து இணைப்பதற்கு மிகவும் நன்றி.🙏

உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்

4 hours ago, குமாரசாமி said:

அங்கை காளான் எண்டால் கொட்டுக்காளான் தான் ஞாபகத்துக்கு வரும். அதை நினைச்சாலே சாப்பிட மனம் வராது.

மொட்டுக்காளானையா சொல்கிறீர்கள்? அதன் சுவை மிக நன்றாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

புற்றுகாளானின் சுவைக்கு இங்கு விற்கும் காளான் எல்லாம் பிச்சை எடுக்கனும், அந்தளவு சுவை, இறைச்சி கறி கூட தோத்துவிடும். இடியுடன் மழை பெய்த அடுத்தநாள் காட்டுக்குள் பையுடன் வெளிக்கிட்டு விடுவேன் கறையான் புற்றுகளை தேடி, சிலவேளை பாம்புகளிருக்கு பற்றைக்குள் அவற்றை கலைத்துவிட்டுதான் பிடுங்குவது, மொட்டு விரியாமலிருக்கனும்.

இந்தியன் ஆமியின் பிரச்சனைக்குள் பிடுங்க யாருமில்லை, நான் மட்டும் பெட்டி பெட்டியா பிடுங்கி கறியுடன் சாத்ததை தொட்டு சாப்பிட்டோம் 😀

 

இந்த காளான் சாப்பிட்டதில்லை எப்படி சுவை? வீட்டில் வளர்த்து சமைப்பதே தனி சுவை

புற்றுக்காளான் கறியை தனியாகவே சாப்பிடலாம். இந்த காளானும் சோறு , பிட்டுடன் சாப்பிட மிக நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

17 hours ago, Sanchu Suga said:

நாய் கடிக்கிற, பூரான் கடிக்கிற, தேள் கடிக்கிற அனுபவம் கிடைக்கணும் எண்டு சொல்லுவீங்க போல இருக்கே.....! 😜

 

ஹா ஹா😀

இருக்கட்டுமே 

ஆனா, விஷ பாம்பு கடிக்காம இருக்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Sanchu Suga said:

நானே சிறுவயதில் புற்றுக்காளான் சாப்பிட்டு இருக்கிறேன்.அந்த சுவையால் இறைச்சி கறியை கூட அடித்து கொள்ள முடியாது...

Kräuter, Pilze, Sprossen - Pilze - Kößnach

இலங்கையில்... இருக்கும் போது காளான் சாப்பிட்டதில்லை.
இங்கு வந்த பின்பு பலர் அதனை விரும்பி உண்பதால்... 
ஒரு முறை வாங்கி வந்து, சமைத்துப் பார்த்தோம். 
எனக்கு அதன் சுவை, பிடித்துக் கொண்டதால்...
இப்போ... அடிக்கடி சமைப்போம். 

இங்கு பலவகைகளில்... காளான் கிடைத்தாலும்,
மேலே உள்ள, மண்ணிற காளான் தான்... எமது கறிக்கு சுவையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Sanchu Suga said:

காளான் கறியும் சிவப்பு பச்சை அரிசி சோறும்

ஒரு மாதிரி யுரியூப் போட பழகியாச்சு.
பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Sanchu Suga said:

காளான் கறியும் சிவப்பு பச்சை அரிசி சோறும்

 

நீங்கள்.. சாப்பிடும் போது, காளான் கறிக்குள் போட்ட கருவேப்பிலையை... 
ஏன்  கோப்பையின், கரையில்... எடுத்து வைத்தீர்கள்?  :grin:

நாங்கள்... கறிக்கு போட்ட, கறிவேப்பிலையையும்... சப்பி சாப்பிடுவோம்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அங்கை காளான் எண்டால் கொட்டுக்காளான் தான் ஞாபகத்துக்கு வரும். அதை நினைச்சாலே சாப்பிட மனம் வராது.

மழை காலங்களில்... வீட்டு  வளவுக்குள், பெரிய வெள்ளை நிற காளான் வளரும்.
அது பேய்க் காளான். கிட்ட போய் தொட்டுப் போடாதேங்கோ... 
என்று அப்பம்மா, பயப்பிடுத்துவா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

புற்றுகாளானின் சுவைக்கு இங்கு விற்கும் காளான் எல்லாம் பிச்சை எடுக்கனும், அந்தளவு சுவை, இறைச்சி கறி கூட தோத்துவிடும். இடியுடன் மழை பெய்த அடுத்தநாள் காட்டுக்குள் பையுடன் வெளிக்கிட்டு விடுவேன் கறையான் புற்றுகளை தேடி, சிலவேளை பாம்புகளிருக்கு பற்றைக்குள் அவற்றை கலைத்துவிட்டுதான் பிடுங்குவது, மொட்டு விரியாமலிருக்கனும்.

இந்தியன் ஆமியின் பிரச்சனைக்குள் பிடுங்க யாருமில்லை, நான் மட்டும் பெட்டி பெட்டியா பிடுங்கி கறியுடன் சாத்ததை தொட்டு சாப்பிட்டோம் 😀

காளான்களிலும்  ... சில காளான்கள் நஞ்சுத்தன்மை உடையவை என்று இங்கு சொல்வார்கள்.
காடுகளில்... காளான் பிடுங்கப் போகும் போது,  
அவற்றைப்  பற்றிய விபரம் அறிந்திருக்க வேண்டுமாம்.

நீங்கள்... பாம்பு புற்றுக்கள் போய்.. பாம்பை கலைத்து விட்டு,
காளான் புடுங்கி.. சாப்பிட்டதை  நினைக்க, அதிசயமாக இருக்கு.
நானென்றால்... உந்த வேலைக்கு, போகமாட்டன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

காளான்களிலும்  ... சில காளான்கள் நஞ்சுத்தன்மை உடையவை என்று இங்கு சொல்வார்கள்.
காடுகளில்... காளான் பிடுங்கப் போகும் போது,  
அவற்றைப்  பற்றிய விபரம் அறிந்திருக்க வேண்டுமாம்.

நீங்கள்... பாம்பு புற்றுக்கள் போய்.. பாம்பை கலைத்து விட்டு,
காளான் புடுங்கி.. சாப்பிட்டதை  நினைக்க, அதிசயமாக இருக்கு.
நானென்றால்... உந்த வேலைக்கு, போகமாட்டன். :)

கறையான் புற்றுக்குள் தான் காளான் வரும் பாம்பிருக்காது அந்த புற்றில் 

ஆனா புற்று இருக்கும் பற்றைக்குள் பாம்புகள் இருந்திருக்கு, பயமறியா வயசு அது😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடி இடித்து மலை பெய்யும் காலங்களில்தான் கருக்கலில் போனால் மொட்டுக்காளான் பார்த்து பார்த்து பிடுங்கிக் கொண்டு வரலாம்.பழைய இடிந்து கிடக்கும்  மண்சுவர் வீடுகளிலும் காளான் பூத்து இருக்கும்.இறைச்சி போலவும் அதைவிடவும் தனி சுவையுடன் இருக்கும்.....!

இப்பவும் வீட்டில் விசேஷமாய் எல்லோரும் மச்சம் மாமிசம் செய்து சாப்பிடும் நேரங்களில் மனிசிக்கு மனசு தாங்காது, (என்னை நினைத்துத்தான்.எல்லா விலங்குகளையும் வஞ்சகமின்றி விழுங்கின மனுஷன் இப்ப முயல் ஆடு போல இலை குலையும் கேரட்டும் தின்னுதே என்று ). உடனே அவவின் தெரிவு காளானும் அல்லது சோயா மீற்றும்தான்.அதை விதம் விதமாய் குழம்பும் வைத்து பொரித்தும் தருவா.....!  😁

Link to comment
Share on other sites

18 hours ago, Sanchu Suga said:

எப்படி குற்றினாலென்ன மாவு வந்தா சரிதான். படத்தொகுப்பாளர் வெட்டிய விதத்தில் அப்படி தெரிகிறது. கல்லுரலுக்கு அந்த அளவு அழுத்தம் கொடுத்தால் மாவு முழுக்க நிலத்தில்தான் கிடக்கும்.நீங்கள் சொல்வது மர உரலுக்குதான் நல்லா பொருந்தும்.

 

காளான் கறியும் சிவப்பு பச்சை அரிசி சோறும்

 

காளான் கறி. மம்மம்மம சாப்பிட்டதே இல்லை. சரி அக்கா அந்த கப்பியலுக்கு எண்ணை விடுங்கோ. அயலட்டையில் சனம் தூங்கேலாது.

முந்தி என்ர  வீட்டுக்குப் பக்கத்தில இருந்த நண்பன் விடிய 4 மணிக்கு எழும்பி படிக்க தொடங்கிடுவான். அவன் முகம் கழுவ தண்ணி அள்ளுற சத்தம் கேட்க அம்மா தொடங்கிடுவா "உங்கா அந்தப் பிள்ள படிக்க எழும்பிடுத்து" என  பிறகு ஒன்றும் செய்யேலாமல் நான் இரவு களவாக இறங்கி கப்பியலுக்கு எண்ணை ஊத்தினான். 

சமையல் நல்லாயிருக்கு. சிலவற்றில் கொஞ்சம் கவனமெடுங்க அக்கா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இடி இடித்து மலை பெய்யும் காலங்களில்தான் கருக்கலில் போனால் மொட்டுக்காளான் பார்த்து பார்த்து பிடுங்கிக் கொண்டு வரலாம்.பழைய இடிந்து கிடக்கும்  மண்சுவர் வீடுகளிலும் காளான் பூத்து இருக்கும்.இறைச்சி போலவும் அதைவிடவும் தனி சுவையுடன் இருக்கும்.....!

இப்பவும் வீட்டில் விசேஷமாய் எல்லோரும் மச்சம் மாமிசம் செய்து சாப்பிடும் நேரங்களில் மனிசிக்கு மனசு தாங்காது, (என்னை நினைத்துத்தான்.எல்லா விலங்குகளையும் வஞ்சகமின்றி விழுங்கின மனுஷன் இப்ப முயல் ஆடு போல இலை குலையும் கேரட்டும் தின்னுதே என்று ). உடனே அவவின் தெரிவு காளானும் அல்லது சோயா மீற்றும்தான்.அதை விதம் விதமாய் குழம்பும் வைத்து பொரித்தும் தருவா.....!  😁

அட உங்கள் வாய்க்கு துணைவியார் கட்டுப்போட்டுவிட்டாரா, அதுதான் மச்சம் மாமிச காணொளிகளை இணைத்து மனதை சந்தோஷப்படுத்துகின்றீர்கள். 😀 . இப்ப விளங்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

அட உங்கள் வாய்க்கு துணைவியார் கட்டுப்போட்டுவிட்டாரா, அதுதான் மச்சம் மாமிச காணொளிகளை இணைத்து மனதை சந்தோஷப்படுத்துகின்றீர்கள். 😀 . இப்ப விளங்குது

உடையார் உங்களுக்கு இப்பதான் உண்மை விசயம் விளங்கிச்சோ!!!!!!!
சிறித்தம்பி எனக்கெல்லாம் எப்பவோ விளங்கீட்டுது.😂
ஐயா ஒவ்வொரு மச்ச வீடியோக்களை வெட்டி ஒட்டேக்கை அவர் விடுற பெருமூச்சு எங்கடை காதுக்கு கேக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Sanchu Suga said:

உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்

மொட்டுக்காளானையா சொல்கிறீர்கள்? அதன் சுவை மிக நன்றாகவே இருக்கும்.

கொட்டுக்காளான் தான் அது.  மழைகாலங்களிலை அங்கினேக்கை தென்னங்குத்தியிலை முளைச்சு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உடையார் உங்களுக்கு இப்பதான் உண்மை விசயம் விளங்கிச்சோ!!!!!!!
சிறித்தம்பி எனக்கெல்லாம் எப்பவோ விளங்கீட்டுது.😂
ஐயா ஒவ்வொரு மச்ச வீடியோக்களை வெட்டி ஒட்டேக்கை அவர் விடுற பெருமூச்சு எங்கடை காதுக்கு கேக்கும்.:grin:

புளிப்பானைக்குள் புளி இல்லையெண்டாலும் அதன் வாசம் போகாது தெரியுமோ ...... !  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

கறையான் புற்றுக்குள் தான் காளான் வரும் பாம்பிருக்காது அந்த புற்றில் 

ஆனா புற்று இருக்கும் பற்றைக்குள் பாம்புகள் இருந்திருக்கு, பயமறியா வயசு அது😀

srithar20194: அறிவியல் அறிவோம்; கரையான் ...

உடையார்,  கறையான் புற்றுக்குள்.... பாம்பு இருக்காது என்பது, 100 வீதம் உண்மையா?
உண்மை என்றால்... இன்று, ஒரு புதிய தகவலை தெரிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

இடி இடித்து மலை பெய்யும் காலங்களில்தான் கருக்கலில் போனால் மொட்டுக்காளான் பார்த்து பார்த்து பிடுங்கிக் கொண்டு வரலாம்.பழைய இடிந்து கிடக்கும்  மண்சுவர் வீடுகளிலும் காளான் பூத்து இருக்கும்.இறைச்சி போலவும் அதைவிடவும் தனி சுவையுடன் இருக்கும்.....!

இப்பவும் வீட்டில் விசேஷமாய் எல்லோரும் மச்சம் மாமிசம் செய்து சாப்பிடும் நேரங்களில் மனிசிக்கு மனசு தாங்காது, (என்னை நினைத்துத்தான்.எல்லா விலங்குகளையும் வஞ்சகமின்றி விழுங்கின மனுஷன் இப்ப முயல் ஆடு போல இலை குலையும் கேரட்டும் தின்னுதே என்று ). உடனே அவவின் தெரிவு காளானும் அல்லது சோயா மீற்றும்தான்.அதை விதம் விதமாய் குழம்பும் வைத்து பொரித்தும் தருவா.....!  😁

சுவி... இயலுமென்றால், மொட்டுக் காளான் படத்தை போட்டு விடுங்களேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உடையார்,  கறையான் புற்றுக்குள்.... பாம்பு இருக்காது என்பது, 100 வீதம் உண்மையா?
உண்மை என்றால்... இன்று, ஒரு புதிய தகவலை தெரிந்து கொண்டேன்.

கறையான் தான் புத்தொடுக்கும்.பின்னர் அந்தப் புத்துக்குள் பாம்பு போய் இருக்கும்.
என்று எண்ணுகிறேன்.
எமது வீட்டிலேயே இப்படி புத்து இருக்கும். மெழுகுவதற்கும் அடுப்பு செய்வதற்கும் வெட்டி எடுப்போம்.

2 hours ago, suvy said:

புளிப்பானைக்குள் புளி இல்லையெண்டாலும் அதன் வாசம் போகாது தெரியுமோ ...... !  😢

அப்ப மூத்திர ஒழுங்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

கறையான் தான் புத்தொடுக்கும்.பின்னர் அந்தப் புத்துக்குள் பாம்பு போய் இருக்கும்.
என்று எண்ணுகிறேன்.
எமது வீட்டிலேயே இப்படி புத்து இருக்கும். மெழுகுவதற்கும் அடுப்பு செய்வதற்கும் வெட்டி எடுப்போம்.

அப்படித்தான்...  ஒரு பழமொழியும், தமிழில் இருக்கு... ஈழப்பிரியன்.
உடையார்... நமக்கு, நாக பாம்பு கடிக்க வைக்க....  
"பிளான்" பண்ணியிருக்கிறார் போலை கிடக்குது. 🤪

என்ன இருந்தாலும்... நாங்கள் தான், புத்திசாலித்தனமாய் நடக்க வேணும் கண்டியளோ... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுவி... இயலுமென்றால், மொட்டுக் காளான் படத்தை போட்டு விடுங்களேன். :)

Des champignons hallucinogènes contre la dépression résistante aux  traitements ? | Psychomédia

அண்ணளவாக இப்படி இருக்கும்.........!  

கரையான் புத்தெடுக்க கருநாகம் குடியிருக்கும் என்று பழமொழி உண்டு.....!   😁

Link to comment
Share on other sites

18 hours ago, Kali said:
 

ஹா ஹா😀

இருக்கட்டுமே 

ஆனா, விஷ பாம்பு கடிக்காம இருக்கட்டும்

பாம்புகள் எங்கள் இடத்தில் அதிகம். அதற்காகவே சில "கினி கோழி" களை வளர்க்கிறோம். அவை குட்டிப்பாம்புகளை சாப்பிட்டுவிடும்.

18 hours ago, தமிழ் சிறி said:

Kräuter, Pilze, Sprossen - Pilze - Kößnach

இலங்கையில்... இருக்கும் போது காளான் சாப்பிட்டதில்லை.
இங்கு வந்த பின்பு பலர் அதனை விரும்பி உண்பதால்... 
ஒரு முறை வாங்கி வந்து, சமைத்துப் பார்த்தோம். 
எனக்கு அதன் சுவை, பிடித்துக் கொண்டதால்...
இப்போ... அடிக்கடி சமைப்போம். 

இங்கு பலவகைகளில்... காளான் கிடைத்தாலும்,
மேலே உள்ள, மண்ணிற காளான் தான்... எமது கறிக்கு சுவையாக உள்ளது.

நானும் இந்த மண்ணிறகாளான் வகையை  சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் நான் வைத்த ஒயிஸ்ரர் காளான் கறிக்கு கிட்டவும் நிற்காது :)

Link to comment
Share on other sites

18 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு மாதிரி யுரியூப் போட பழகியாச்சு.
பாராட்டுக்கள்.

நன்றி. கைத்தொலைபேசியில் யூரியூப் லிங்கை எடுத்து யாழில் போட்டால் Embed வியூ வராது. Desktop இல் போட்டால் வருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.