Jump to content

சிங்கள அரசின் மறுப்புக்கு மறுப்பு: ஈழம் இலங்கையின் பூர்வீகப்பெயர்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின் மறுப்புக்கு மறுப்பு: ஈழம் இலங்கையின் பூர்வீகப்பெயர் 

eelam-kili-260617-seithy-2.jpg

ஈழத்தமிழரின் தொன்மையை விளக்குவதற்கு இற்றைவரையும் பயன்படுத்தப்பட்ட இலக்கிய ஆதாரங்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும் விடுத்து முற்றிலும் நவீன விஞ்ஞான முறையினான தொல்லியல், மரபணுவியல், புவிச்சரிதவியல், மானிடவியல், கல்வெட்டியல் மற்றும் பண்பாட்டியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தரவுகளையும் முடிவுகளையும் ஆதாரமாக கொண்டு ஆராய வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் தலையாய கடமையாகும் என கட்டுரையாளர் அ.மயூரன், M.A தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது….

அதிலும் குறிப்பாக எம்மினத்திலிருக்கக்கூடிய வரலாற்றாய்வாளர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது. இற்றைவரையும் இலங்கையின் வரலாற்றை கி.மு.5ஆம் நூற்றாண்டில் விஜயனின் வருகையுடன் ஆரம்பிப்பதாக சிங்கள வரலாற்றாசிரியர்கள் கூறிவந்த பொய்யான கற்பனையான வரலாற்றை முற்றுமுழுதாக மறுதலிக்கும் நம்பகத்தன்மை வாய்ந்த வரலாற்று ஆய்வுகளை செய்யவேண்டிது காலத்தின் தேவையாகும்.

அண்மையில் பிரித்தானியாவிலுள்ள கார்டியன் பத்திரிகையில் (07.05.2020) உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா மான் பிறைடே (Travel Quiz; do you know your island Man Friday) என்ற புதிர்பகுதியில் எழுப்பப்பட்டிருந்த ”Eelam is an indigenous name for which popular holiday island? என்ற கேள்விக்கு அதாவது ஈழம் என்ற பூர்வீகப் பெயர் கொண்ட பிரபலமான சுற்றுலாத்தீவு எது? என்ற கேள்விக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய பிரித்தானியாவுக்கான இலங்கைத்தூதரகம் (15.05.2020) 1976 ஆண்டு உருவான விடுதலைப்புலிகள் அமைப்பின் சித்தாந்தமே ஈழம் எனவும் மாறாக ஈழம் என்ற பெயர் ஒருபோதும் இலங்கையின் பூர்வீகப் பெயராகப் பயன்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டு அதன் தூதுவர் சறோஜினி சிறிசேனவின் கையெழுத்துடன் கார்டியன் பத்திரிகைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

ஈழத்தமிழரின் வரலாற்றுத் தொன்மையின் மூலத்தை ஆராய்வதன் மூலம் வரலாற்றுக் காலங்களில் ஈழம் என்ற பெயரின் பயன்பாட்டை அறியலாம். ஈழம் என்ற பெயர் இலங்கைக்கு ஆரம்ப காலங்களிலிருந்து வழங்கப்பட்டு வந்தது என்பதை இலங்கையரசாங்கம் வெளியிட்ட பாடப்புத்தகங்களில் பல இடங்களில் காணலாம்.

அவ்வாறே இலங்கையின் தமிழில் உள்ள தேசிய கீதத்தில் ஈழம் என்ற பெயர் காணப்படுவதனைக் காணலாம் அவை

“..ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி நமோ நமோ தாயே, நம் ஸ்ரீலங்கா நமோ நமோ தாயே” என வருகிறது.

அத்தோடு இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் ஆதாரங்களும் நிரூபித்திருக்கிறது. பொதுவாக ஈழத்தினுடைய வரலாற்றினை எழுத முனையும் இலங்கை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவரும் “ஈழம்” என்ற பெயரை தவிர்த்து இலங்கை என்ற பெயரையே பாவிப்பதனைக் காணலாம்.

அதேநேரம் அவர்கள் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றவுடன் ஈழம் என்ற பெயரை அடிக்கடி பாவித்திருப்பதனைக் காணமுடிகிறது. புலம்பெயர்ந்து வாழும் தகைசார் அறிஞர்கள் மாத்திரம் ஈழம் என்ற பெயரை பொதுவாகவே தமது ஆய்வுநூல்களில் பயன்படுத்துகின்றார்கள்.

ஈழம் என்ற பெயர் எவ்வாறு வரலாற்றுக்காலங்களில் அழைக்கப்பட்டது என்பதனை தொல்லியல், மற்றும் கல்வெட்டியல் ஆய்வியல் நோக்கில் பார்க்கின்றபோது பூநகரி மண்ணித்தலையில் 1992 ஆண்டு பேரா.பரமு புஸ்பரட்ணம் தலைமையில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் இரண்டு எழுத்துக்கள் கொண்ட இரண்டு மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகக் காலக் கணிப்பிடப்பட்டிருக்கிறது.

இவ் இரண்டு மட்பாண்டங்களில் “ஈலா” என்ற எழுத்துப்பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் முக்கியமானவை. இதில் இரண்டு எழுத்துக்களை உடைய முதலாவது சாசனம் உடைந்த நிலையில் “ஈ” என்ற ஒலிப்பெறுமானம் கொண்ட எழுத்தும், இரண்டாவது மட்பாண்டத்தில் “ல” என்ற பெறுமானம் கொண்ட எழுத்தும் காணப்படுவதாகவும், இவ்விரு எழுத்துக்களுக்கும் இடையிலான இடைவெளியை நோக்கும்போது இடையில் வேறு எழுத்துக்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே பொருந்தக்கூடிய இரண்டு மட்பாண்டங்களையும் சேர்த்து வாசிக்கும் போது முதல் மண்பாண்டத்திலுள்ள எழுத்தில் ‘ஈ” என்ற ஒலியும், இரண்டாவது மட்பாண்டத்திலுள்ள எழுத்தில் ‘ல” என்ற ஒலியையும் சேர்த்து ‘ஈல” அல்லது ‘ஈலெ” என்றும் வாசிக்கமுடியும் என்கிறார் பேரா.புஸ்பரட்ணம்.

மேலும் அங்கு கிடைத்த மற்றுமொரு சாசனத்தில் மூன்று எழுத்துக்கள் காணப்படுகின்றன எனவும் இதன் முதலெழுத்திற்கு ‘ஈ” என்ற ஒலிப்பெறுமானமும், இரண்டாவது எழுத்திற்கு ‘ழ” என்ற ஒலிப்பெறுமானமும் கொடுத்து ‘ஈழ” என வாசிக்க முடியும் எனவும் அவ்விரு எழுத்துக்களைத் தொடர்ந்து மூன்றாவது எழுத்து சிறு கோட்டினை மட்டும் கொண்டிருப்பதால் இவ்விரு எழுத்துக்களையும் நோக்கும் போது இது இலங்கையின் புனைபெயரான ஈழத்தையே குறிக்கின்றது என்றும் பேரா.பரமு புஸ்பரட்ணம் தனது பூநகரி தொல்பொருளாய்வு நூலில் கூறியுள்ளார்.

மேலும் இங்கு காணப்பட்ட எழுத்துக்களை ‘வேளான்” ‘ஈழ” என புகழ்பெற்ற மறைந்த கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் வாசித்ததாகவும், இதன் காலம் கி.மு 2 என அவர் கணித்திருந்ததாகவும், தமிழ் எழுத்தின் தோற்றம் (பக்7) பேரா புஸ்பரட்ணம் எழுதியுள்ளார்.

இதுவே ஈழ என்ற பெயரிலமைந்த கி.மு.2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதல் தொல்பொருட்சான்றாகும்.

அடுத்து அனுராதபுரத்திலுள்ள அபயகிரி விகாரையில் உள்ள பாறைக்கல்வெட்டில் உள்ள கி.மு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி சாசனமானது (இல.94) மூன்று வரிகளைக் கொண்டது. இதில் முதல் வரியில் “ஈழ பரதகி தமிட சமணநே கரிதே தமிட கபதிகந பசதே” என்ற தமிழ்பிராமியும், அசோகப்பிராமியும் கலந்த பிராகிருத வசனத்தில் ஈழபரத என்ற சமணனால் உருவாக்கப்பட்ட தமிழ்வீடு என்று வருகிறது.

இதை வாசித்த பரணவிதான இலா பரதகி என தவறாக வாசித்துள்ளார் இதனை பின்னர் பேராசிரியர் வேலுப்பிள்ளை தமிழ் பிராமியிலமைந்த இந்தக் கல்வெட்டானது “ஈழபரத” (ஈழத்துப்பரதவர்) என வாசித்து ஈழபரதத்தில் வாழும் தமிழ்ச் சமணரும், தமிழ்க் குடும்பத்தலைவனும் கட்டுவித்த மாடம் என விளக்கமளித்துள்ளார்.

இது ஈழம் எனப்பட்டது முழு இலங்கையையும் அழைத்திருந்தமைக்கான சான்றாகும்.

மகாவம்சம் கி.பி 1 ஆம் நூற்றாண்டில் (95 – 101) ஈழநாகன் என்பவன் 6 ஆண்டுகள் அனுராதபுரத்தை ஆண்டதாகவும், இந்த ஈழநாக என்ற அரசனின் பெயர் ராஜவலிய என்ற நூலில் எலுநாக, எலுந்நாக என பதியப்பட்டுள்ளது. பண்டைய ஈழத்தில் தமிழர் தமிழர் (பக்.48) என்னும் நூலில் சி.க சி;ற்றம்பலம் அவர்கள் எழு, ஈழ என்பன ஒரே பொருள் கொண்ட ஒன்றிலிருந்து திரிபடைந்த பதங்கள் என்கிறார்.

இதிலிருந்து மகாவம்சம், ராஜவலிய ஆகிய சிங்கள வாரலாற்று நூல்களே ஈழம் என்கின்ற பெயர் பெயரில் ஆண்ட ஈழமண்ணின் மைந்தர்கள் என்பதை சுட்டிக்காட்டி நிற்கின்றது.

அத்துடன் ஈழத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலுள்ள திருப்பரங்குன்றத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் (கல்:- 03) “எருகாடூர் ஈழக்குடுமிகன் பொலாலையன் செய்த ஆய்சயன் நெடுஞ்சாதன்” என்ற வரி வருகிறது இது எருகாட்டூர் ஈழக்குடுமிகன் பொலாலையன் திருப்பரங்குன்றத்து சைன மதகுருவுக்கு தானம் வழங்கியது பற்றிய குறிப்பை சொல்லுகிறது.

இது ஒட்டுமொத்த இலங்கையையும் ஈழமென அழைக்கப்பட்டதற்கு சான்றாகிறது. இதன் கல்வெட்டினை கீழே நோக்குக.

மேலும் ஈழம் என்பது முழு இலங்கையையும் குறிக்கின்றது என்பதற்கு தமிழகத்தில் சங்ககாலத்தில் கி.பி.முதலாம் நூற்றாண்டில் எழுந்த பட்டிணப்பாலை காவிரிப்பூம்பட்டினத்திற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் விபரிக்கும் பொழுது (வரி 190 -192)* ‘கங்கை வாரியும், காவிரிப்பயனும், ஈழத்துணவும், காழகத்து ஆக்கமும்” .. எனப்புகழ்ந்துரைக்கின்றது. இது முழு ஈழத்தையும் குறிப்பனவாகவே அமைகின்றது. பட்டிணப்பாலை எழுந்த காலத்தில் ஈழம் என்னும் நாட்டின் பெயர் தமிழகத்தில் நன்கு அறிமுகமாகிவிட்டதனை அறியலாம்.

சுப்பிரமணியன்.அ.வே, சங்க இலக்கியம் பத்துப்பாட்டு, பக.450, 2010. கலிங்கத்துப் பரணியிலும் அதன் வரி 200 இல் ஈழமும் தமிழ்க் கூடலும் சிதைந்து.. என இடம்பெறுகிறது. இது ஒட்டுமொத்த இலங்கையையும் ஈழம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு மற்றுமொரு சான்றாக அமைகிறது. அத்துடன் கடியலூர் உருத்திரன் கண்ணனாரின் காலத்தில் ஈழமென்பது இலங்கையின் வடபகுதியினை மட்டும் குறித்ததென்பதை கருத முடியுமென பேரா.சி.பத்மநாதன் தனது யாழ்ப்பாண இராச்சியம் நூலில் (பக்05) குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இற்றைக்கு 12000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியகிழக்கில் யூப்பிரட்டீஸ் நதிக்கரையோரம் உருவாகிய மொசப்பத்தோமிய நாகரிகத்தில் ஈரானின் தென்மேற்குப்பகுதியில் அதாவது சுமேரியாவின் கிழக்கே ஸாகுரொஸ் மலைத்தொடத் தொடருக்குத் தெற்கே உருவாகிய நாகரிகமே “இலம்” (ELAM) எனப்பட்டது.

இவர்கள் உருவாக்கிய நகரங்களான ஊர், சூசா என்பவற்றைச் சொல்லலாம். சுமேரியமும், இலமும் தனித்தனி நாடுகளாக விளங்கின. இவர்கள் உருவாக்கிய மொழி ஆதி இலமைற் (Proto Elamite) எனப்பட்டது. பின்னர் இலத்தின் தலைநகரான ஊர் சுமேரியர் வசமானது. இந்த இலம் நாடு இன்றைய குஸிஸ்தானாகும்.

பின்னர் சுமேரிய நகரங்களை அக்காடியர்கள் கைப்பற்றினர். இதன்பின்னர் அக்காடிய மூன்றாவது அரசமுறை மன்னனான ஷுல்கி என்பவன் இலத்தை கைப்பற்ற, அதை மீண்டும் இலவர்கள் திரண்டெழுந்து கைப்பற்றினர்.

பின்னர் பின்னர் கி.மு.18 ஆம் நூற்றாண்டில் பபிலோனியர்கள் சுமேரியத்தையும், இலத்தையும் கைப்பற்றி பபிலோனிய நாகரிகத்தை உருவாக்க கி.மு.17 இல் இலவர்களின் மூவாயிரமாண்டு சரித்திரம் முடிவுற இவர்கள் கி.மு 9000 இல் இந்தியாவுக்கு வந்தனர் என நவீன மரபணுவியல்கள் நிரூபிக்கின்றன. இவர்களினுடைய மரபணுவியல் குறியீடு M172 ஆகும்.

இந்த இலம் மொழிக்கு நெருக்கமான மொழி சங்ககாலத் தமிழாகும் என டேவிட் மக்அல்பின் குறிப்பிடுகின்றார். இதை அவர் ”…among all the Dravidian languages, the Samgam Tamil is most close to middle Elamite than any of its peer” (David McAlpan 1981) எனவே இலமக்கள் வந்திருந்து தங்கியதனால் இலங்கை ஈழமென அழைக்கப்பட்டது எனக்கூறுவர் மானிடவியலாளர்கள்.

தமிழின் தலை மொழி எழு இதனாலேயே தாய்மொழியை வரைவதற்கு எழுத்து என்றும் அதன் பணியை எழுது என்றும் மொழி ஆராய்ச்சி நிபுணர் வண.டேவிட் அவர்கள் தனது நூலில் தெரிவித்துள்ளார்.

வணபிதா டொக்.சேவியர் தமிழின் தாய்மொழியான மூலத்திராவிட மொழியின் பெயர் எழுத்து என்கிறார். இதற்கு எழு மொழியிலிருந்த பெரும்பாலான சொற்கள் தமிழ் மொழியில் உள்ளன என்றும், பிராகிருத மொழிகளில் ஒன்றான அர்த்தமாகதியில் தமிழ்மொழி “தெமெழு” என்று பதிவாகியுள்ளன என்றும், இந்தியாவின் தென் புறம் பேசப்பட்ட மொழியாதலால் அது அவ் எழுமொழி தெம் எழு ஆகிற்று என்றும். இதனாலேயே அன்றைய அர்த்தமா கதியில் எழு மொழி தெமெழு எனப்பதிவாகியுள்ளதாகவும். சிங்களவர்கள் இன்றும் தமிழர்களை தெமெலா என அழைக்கின்றனர் எனவும் கூறுகிறார்.

அத்துடன் சிந்துவெளி, ஹரப்பா அமைந்திருந்த நாடு பபிலோனியக் களிமண் வில்லைகளில் அக்காடிய மொழியில் “மெழுகா” எனப் பதியப்பட்டிருக்கிறது. இது திராவிட மொழிகளில் எழு மக்களின் நாடு எனப் பொருள்படும் மா எழு அகம் என்ற பதமே அக்காடிய மொழியில் மெழுகா என ஆகியிருக்கிறது என்றும், தென் பகுதியில் பேசப்பட்ட தெமெழு தமிழ் எனப் பெயர் பெற்றது என்றும், எழுமக்கள் வாழ்ந்த இலங்கைத்தீவு “எழு அகம்” எனப்பட்டது அப்பதமே காலப்போக்கில் ஈழகம் ஆகி பின்னர் “ஈழம்” எனவானது எனக்கருதுகின்றார்.

இதை பரணவிதான ஆதியில் இலங்கையில் எளு மொழி பேசப்பட்டதாகவும், அம்மொழியே இலங்கைப் பிராமிகளில் ஹெள எனப் பதியப்பட்டிருப்பதாகவும், ஹெள என்ற பதமே சிங்கள இனக்குழுவை பிரதிபலிப்பதாகக் கூறுகிறார். எது எப்படியோ ஈழம் என்கின்ற பெயரின் முன்னோடி இவற்றிலிருந்து வந்ததாக கருதஇடமுண்டு இங்கு சேவியர் குறிப்பிடும் எழு மொழியும், பரணவிதான குறிப்பிடும் எளு மொழியும் ஒன்றாக இருந்திருக்க சந்தர்பம் அதிகமாகும்.

மேலும் சங்கப்பாடல் பாடிய புலவர்களின் ஒருவராக கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த “ஈழத்துப் பூதந்தேவனார்” எனப்படுபவர் காணப்படுகின்றார்.

இவர் அகநானூறில் மூன்று பாடல்களையும், குறுந்தொகையில் மூன்று பாடல்களையும், நற்றிவீணியில் மூன்று பாடல்களையும் பாடியுள்ளார் என சங்க நூல்கல் கூறுகின்றன.

இவரது பெயரின் முன்னுள்ள ஈழம் என்ற பெயர் ஒட்டுமொத்த இலங்கையையும் குறிப்பதாக அமைகிறது. இதே காலப்பகுதியைச் சேர்ந்த ஈழத்துப் பிராமிக்கல்வெட்டுக்களில் பூதன், பூத, பூதி ஆகிய பெயர்கள் வருகின்றன. பல்லவர்காலத்தில் ஈழம் பற்றிய மிகப்பழைய குறிப்பு வருகிறது. அது “ஈழம்பூட்சி” என்ற கூட்டுமொழியில் வருகிறது. ஈழம்பூட்சி என்பது ஒரு வகையான வரி. அதாவது இச்சொல் கள்ளினை உற்பத்தி செய்வோர்களிடமிருந்து அறவிடப்படும் வரியைக்குறிக்கிறது. இதனால் கள் உற்பத்தி செய்பவர்களை “ஈழவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தெங்கும் பனையும் ஈழவர் ஏறப்பெறாதாராகவும்” என்று சில நலமானியங்கள் தொடர்பாக சாசனங்களிற் குறிப்பிருக்கின்றது. இது தற்போது பூநகரியில் உள்ள கிராஞ்சி கிராமம் முன்னொருகாலத்தில் ஈழவூர் என அழைக்கப்பட்டதை அங்கு பெறப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளிலிருந்து அறிய முடிகிறது.

அண்மைக்காலத்தில் ஈழம் என்பது பனையோடு தொடர்புடைய பெயராக அறியப்பட்டுள்ளது. பேராசிரியர் சி.பத்மநாதன் பெருங்கற் பண்பாட்டு மக்கள் குடியிருப்புக்களை ஏற்படுத்தியபொழுது அங்கு பனைமரங்கள் மிகுதியாகக் காணப்பட்டதனால் அவற்றை ஈழம் எனக்குறிப்பிட்டனர்.

சேது சமுத்திரம் என வழங்கும் கடற்பரப்பின் கரைகளிலும் வாழ்ந்தவர்கள் ஈழம் என்ற நாட்டின் பெயராக பயன்படுத்தினர் என தனது யாழ்ப்பாண இராச்சியம் ஒரு சுருக்க வரலாறு (2011) என்னும் நூலில் எழுதியுள்ளார்.

பேராசிரியர்.க.இந்திரபாலா இலங்கையில் தமிழர் (2004) பக்.338 இல் இன்று தென்னை, தெங்கு எனப்படும் மரப்பெயருக்கு பழந்தமிழில் ஈழம் என்றொரு இன்னொரு பெயரும் இருந்ததாகச் சொல்லுகின்றார். இச்சொற்களனைத்தும் இலங்கைத்தீவின் இன்னொரு பெயராகிய ஈழம் என்ற பெயருடன் தொடர்புபட்டிருப்பதைக் காணலாம் என்கிறார்.

இலங்கையிலிருந்து வந்த மரம் என்ற பொருளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னைக்கு ஈழமரம் என்ற பெயரும் இருந்தது. அந்த மரத்தில் காய்க்கும் காய்க்கு ஈழக்காய் என்றும், அக்காயிலுள்ள நீருக்கு ஈழநீர் என்றும் வழங்கபட்டிருந்ததாகவும், இந்த ஈழநீர் மருவி இளநீராக இன்றுவரை வழங்கப்படுவதையும், ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் தென்னிந்தியாவில் ஒரு தனிச்சமுகப்பிரிவாக ஈழவர் என்ற பிரிவு இருந்தனர் என்பதை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன என்றும் பேரா.இந்திரபாலா குறிப்பிடுகின்றார்.

அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அங்குள்ள ஆலயமொன்றுக்கு 30 ஈழக்காசுகள் தானமாக கொடுக்கப்பட்ட செய்தி பற்றிக்கூறுகிறது. அதேபோல் பராந்தக சோழன்காலத்தில் வேலூரில் பாண்டிர்களுக்கு எதிரான போரில் ஈழத்து ஆட்சியாளனாக ஈழத்து மன்னன் சென்று போரிட்டான் இதை “ஈழத்து ஆரியன்” என சோழக்கல்வெட்டுக்கள் பதிவு செய்வதை பேரா.நீலகண்டசாஸ்திரி அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

ஈழம் என்ற பெயர் சில இடங்களில் இலங்கையின் முழுப்பகுதியையும் பல சந்தர்ப்பங்களில் இலங்கையின் வடபாகத்தையும் குறித்து நிற்கிறது. கி.பி.9ஆம் நூற்றண்டிற்குரிய உதயணன் பெருங்காதையிலும், அதன்பின்னான நன்னூல் மயிலைநாதர் உரையிலும் இலங்கையானது ஈழம், சிங்களம், இலங்கை என வேறுபடுத்தி கூறப்பட்டுள்ளது.

ஒரே வரலாற்று மூலத்தில் ஓரினத்தின் பெயராலேயே சிங்களநாடு கூறப்பட்டு அதே வரலாற்று மூலத்தில் ஈழம் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

பிற்பட்ட பாண்டியக் கல்வெட்டில் இந்த ஈழம் வட இலங்கையையும், விஜய நகரக்கல்வெட்டில் யாழ்ப்பாணத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு வரலாற்று மூலங்களில் வரும் இந்த ஈழம் பற்றிய குறிப்புக்கள் பிற இலங்கை வரலாற்று மூலங்கள் எவற்றிலும் காணப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து கி.பி 10 நூற்றாண்டில் (993) ஈழம் சோழர்கள் வசமானதால் அது சோழர்களின் ஆட்சிமண்டலங்களில் ஒன்றானது. இதனால் இதை “ஈழமான மும்முடிச்சோழ மண்டலம்” என அழைத்தனர்.

முதலாம் இராஜராஜனின் மெய்க்கீர்த்திகள் “எண்திசை புகழ்தர ஈழ மண்டலமும்” எனப்புகழ்கிறது. இதன்போது ஈழத்திலும் “ஈழவளநாட்டு வரி” என்றொரு வரிமுறையையும் சோழர்கள் நடைமுறைப்படுத்தியிருந்தனர். அத்துடன் 10ஆம் நூற்றாண்டுகால சோழக்கல்வெட்டுக்களில் “ஈழக்காசு, ஈழக்கருங்காசு” பற்றிய செய்திகள் காணப்படுகிறது.

சோழர் ஈழத்தை வெற்றிகொண்டதன் நினைவாக ஈழக்காசு, ஈழக்கருங்காசு என்ற பெயரில் நாணயங்கள் வெளியிட்டதை சோழர் காலக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்கேதீஸ்வரம் மாந்தைக் கல்வெட்டில் தமிழகம் சோழமண்டலத்தைச் சேர்ந்த ஒரு நிலக்கிளாந்தர் ஈழத்தில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு நன்கொடை அளித்திருப்பதாக உள்ளது. இக்கல்வெட்டை கிருஸ்ணசாஸ்திரி அவர்கள் வாசித்து படியெடுத்துள்ளார். (கிருஸ்ண சாஸ்திரி 1923)

இக்கல்வெட்டு தற்போது கொழும்பு அருங்காட்சியகத்திலுள்ளது. எனவே 11 ஆம் நூற்றாண்டிலும் இலங்கையில் ஈழம் என்கின்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை மாதோட்டம் கல்வெட்டு சான்றுபகர்கின்றது.

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் ராஜேந்திர சோழனின் சாசனத்தில் “முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலமும்” எனவும், இராசாதிராசன் 1 கல்வெட்டுக்கள் மதுரையும் ஈழமும் கொண்டவன்” என்றும், மூன்றாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகள் “சிங்களவன் தலைமையாற் தென்னீழங் கொள்கவென்னத் திரைகடலை அடைக்கவென்ன” எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதானது. ஈழம் என்கின்ற பெயர் முழு இலங்கைக்கும் வழங்கப்பட்டிருப்பதனை அறியமுடிகிறது.

மேலும் முத்தள்ளாயிரம் என்ற இலக்கியத் தொகைநூலானது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக பலரும் கருதுவர். இது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட 2700 பாடல்களைக்கொண்ட தொகுப்பாகும். கோழி என்னும் உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரியும் கிள்ளிவளவனின் யானையானது போர் புரியும் விதத்தை பாடும்போது “கச்சி ஒருகால் மிதியா ஒரு காலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிறையும் ஈழம் ஒருகால் மிதியா வருமேதங் கோழியர் கோக்கிள்ளி கயிறு” என்று பாடுகிறார் கவிஞர். (எஸ்.வையாபுரிப்பிள்ளை 1943)

இங்கு கிள்ளிவளவனின் யானை ஈழத்திலும் ஒரு காலை வைத்து போரிட்டதாம் என்பதிலிருந்து இலங்கை ஈழம் என அழைக்கப்பட்டிருப்பதனைக் காணமுடிகிறது. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாடவர்மன் சுந்தரபாண்டடியனின் இளைய சகோதரன் வீரபாண்டியன் (1253 – 1273) ஈழத்தின் மீது படையெடுத்தனை அவனது மெய்க்கீர்த்தி கூறும்போது “சோனேடும் ஈழமுங்கொண்டு சாவகன் முடியும், முடித்தலையும் கொண்டருளிய வீரபாண்டிய தேவர்க்கு….” என வருகிறது.

இதில் இலங்கைக்கு ஈழம் என்னும் பெயரைப் பாவிப்பதனை அறியலாம். அதேபோல் ஈழத்தின் மீது படையெடுத்து அங்கு ஆட்சிசெய்த சாவகமன்னனை வெற்றி கொண்டதாக கொங்குநாட்டு வீரபாண்டியன் கல்வெட்டிலும் கூறப்படுகிறது.

“கொங்கீழம் கொண்டு கொடுவடுகு கோடழித்து கங்கை இருகரையும் காவீரியும் கொண்டு” என்னும் வரிகளினூடாக தெளிவுபடுத்துகிறது.

14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கூறப்படும் தட்சிண கைலாசபுராணம் திருக்கோணேஸ்வர வரலாற்றுப் படைப்பு பற்றிக்கூறுமிடத்து அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஜயவீரசிங்கை ஆரியனுக்கு (1380 – 1410) இந்தப் படைப்புரிமை வழங்கப்பட்டதாகவும், ஈழத்தை இந்தக் கோயிலின் நாடு என்று அழைக்கப்படுவதாகவும் தட்சிண கைலாய புராணம் கூறுகிறது.

1-12.png 

கி.பி.1607 இல் சேதுபதிகள் பட்டையத்தில் “ஈழமுங் கொங்கும் யாழ்ப்பாணப் பட்டணமும்” என்று வருகிறது. இது ஈழத்தில் யாழ்ப்பாணம் தனியான பகுதி என்பதனைக் காட்டிநிற்கிறது (தஞ்சை மராட்டியர் செப்பேடு, செ.இராசு. பக்.69, 1963) 18 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் காலத்தில் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் (1716 – 1780) அவர்களால் சுழிபுரம் பறாளைவிநாயகர் மீது பாடப்பட்ட பறாளை விநாயகர் பள்ளிலே பள்ளனின் மனைவிகளான ஈழமண்டலப் பள்ளி, சோழமண்டலப்பள்ளி என இருவரின் கதாபாத்திரங்களின் மூலம் ஈழமண்டலச் சிறப்பையும், சோழமண்டலச் சிறப்பையும் சின்னத்தம்பிப் புலவர் பாடுகிறார். மூத்தவளான ஈழமண்டலப்பள்ளி தம் வரலாற்றைக் கூறும் போது “ஈழமண்டலத்தினிற் பள்ளி நானே” என்றும், அவள் தம் நாட்டுவளம் பற்றி பாடும் பாடல்களின் இறுதியில் “ஈழமண்டல நாடேங்க நாடே” என்று பாடுகிறார்.

இது இலங்கையை ஈழமண்டலம் எனப்புகழ்ந்து அதன் சிறப்புக்களைப்பாடுகிறது.

கி.பி.19ஆம் நூற்றாண்டில் மட்டுவில் ம.க.வேற்பிள்ளை (1848) அவர்களால் “ஈழமண்டலச் சதகம்” என்னும் நூல் எழுதப்பட்டது. இவர் இந்தியாவில் இருந்த சமயத்தில் ஈழத்தின் பெருமையறியாது இகழ்ந்தோருக்கு அதன் பெருமையை எடுத்துச்சொல்லும் முகமாக ஈழமண்டலச் சதகம் ம.க.வேற்பிள்ளையினால் இயற்றப்பட்டதாகும். அதனைத் தொடர்ந்து வித்துவசிரோமணி கணேசய்யர் அவர்களும் தாம் எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரத்தில் “இவ்வீழநாடு பண்டுதொட்டு முத்தமிழுக்கும் உறைவிடமாய் உள்ளதென்று” கூறுகின்றார்.

ஈழகேசரி பத்திரிகையும் ஈழம் என்ற பெயரில் 1976 இற்கு முன்னரே வெளிவந்திருப்பதனையும் நோக்கத்தக்கது.

சி.வை.தாமோதரம்பிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர் முதலானோரும் ஈழம் என்ற பெயரை பயன்படுத்தியிருந்தமையைக் காணலாம்.

1957 ஆம் ஆண்டு தமிழருக்கு தனிநாடு கேட்டு ‘ஆ.தியாகராஜா ‘ “இருபத்தினான்கு லட்சம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும்” என்ற நூலினை எழுதினார். இது பதுளையையும் உள்ளடக்கியது. இதன் படி முஸ்லிம்களும் அடங்குகின்றனர். இதன்பின்னர் சி.சுந்தரலிங்கம் 1964 ஆம் ஆண்டு ஈழத்தின் அவசியத்தை உணர்ந்தவராக எழுத்து மூலமாக Eylom: Beginings of freedom Struggle என்ற நூலை எழுதுகின்றார். இதுவே தமிழீழம் வேண்டும் என எழுதப்பட்ட முதலாவது நூலாகும்.

அதனைத் தொடர்ந்து 1976 மே 14ஆம் திகதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் சாத்வீக வழியில் போராடிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் தமிழர் விடுதலைக்கூட்டணியினர் “தமிழரின் விடிவிற்கும், விமோசனத்திற்கும் ஒரேவழி சிங்கள தேசத்திலிருந்து பிரிந்து சென்று தமிழீழத்தை அமைப்பதுதான் முடிந்த முடிவென்றும் இதனைக் கூட்டணியினர் சாத்வீக வழியில் போராட முடியாவிட்டால் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது”.

இந்தவகையிற்தான் தமிழர் அரசியல் தலைமைகள் எடுத்த முடிவுகளை இளைஞர்கள் நடைமுறைப்படுத்த முனைந்தமைதான் தமிழீழவிடுதலை ஆயுதப்போராட்டமாகப் பரிணமித்ததை கடந்தகால வரலாற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் சிங்களப் பெருந்தேசியவாதத்திற்கு எதிராக தமிழர் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டபோதுதான் ஈழம் என்ற சொல் இந்த சிங்களப் பேரினவாதத்திற்கு கசப்புக்குரிய சொல்லாக மாறிவிட்டது.

இந்தக் கசப்பின் வெளிப்பாடுதான் கார்டியன் பத்திரிகையில் வெளிவந்த செய்திக்கு எதிர்வினையாக தூதுவர் எழுதியதைக்காணலாம். இதிலிருந்து இன ஒடுக்குமுறையினதும், இன அழிப்பினதும் மூர்க்கத்தை உணரமுடிகிறது. இவ்வாறுதான் இலங்கையில் தமிழர் சார்ந்த அனைத்து வரலாற்று, தொல்லியல், பண்பாட்டு, சிதைவுகளை மேற்கொண்டு சிங்களதேசம் தமிழினப்படுகொலையை முன்னெடுத்து வருகிறது.

உசாத்துணை

இந்திரபாலா.க. இலங்கையில் தமிழர் (ஓர் இனக்குழு ஆ;க்கம் பெற்ற வரலாறு), குமரன் புத்தக இல்லம் கொழும்பு, 2004

இராசு, செ. தஞ்சை மராட்டியர் செப்பேடு, பபக்.69, 1963 சிற்றம்பலம்.சி.க, பண்டைய ஈழத்தில் தமிழர் – ஒரு பன்முகப்பார்வை, யாழ், 2001,

சிற்றம்பலம்.சி.க, பிராமிக் கல்வெட்டுக்களும் தமிழும், சிந்தனை இதழ், யாழ்.பல்கவைக்கழகம், 1985, பக்.24 -25,

சின்னத்தம்பிபுலவர், நல்லூர், பறாளை விநாயகர் பள்ளு, பிரதேசசபை. சங்கானை, 2016 செல்வநாயகம்.அ. ஈழரும் தமிழரும் பக்.02

பத்மநாதன்.சி, யாழ்ப்பாண இராச்சியம் (ஒரு சுருக்க வரலாறு) குமரன் புத்தக இல்லம், 2011.

புஸ்பரட்ணம் ப. இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு, கல்விச்சோலை சுவிச்சர்லாந்து. 2017,

புஸ்பரட்ணம்.ப, பூநகரி தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு. 1993,

புஸ்பரட்ணம்.ப, தமிழ் எழுத்தின் தோற்றம் (ஈழத்திலிருந்து தமிழகத்திற்கு) பவனி பதிப்பகம், யாழ், 2004

தியாகராஜா.எஸ், ஈழத்தமிழரின் ஆதிச்சுவடுகள். தேசம் வெளியீடு, 2004.

கந்தையாப்பிள்ளை.ந.சி, கலிங்கத்துப்பரணி, ஆசிரியர் நூற்பதிப்புக்கழகம், நவாலி, 1938.

நடன காசிநாதன், சோழர் கால செப்பேடுகள், பக்144.

நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்திய வரலாறு, 1966.

வேலுப்பிள்ளை.ஆ. தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும், அவற்றின்

வரலாற்றுப்பின்னணியும், யாழ்ப்பாணம் 1986, பக்.10

அ.மயூரன் , 

வரலாற்று ஆய்வாளர்.

https://www.vanakkamlondon.com/eelam-12-06-2020/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை மொழி பெயர்த்து, கார்டியன் பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்கணுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2020 at 16:59, Nathamuni said:

இதனை மொழி பெயர்த்து, கார்டியன் பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்கணுமே

இவரை லண்டனில் தொடர்பு கொண்டால், அவரிடம் ஆங்கிலத்தில் இருக்கலாம் அல்லது Vanakkam London னிடம் கேட்கலாம் 

அ.மயூரன் , 

வரலாற்று ஆய்வாளர்.

https://www.vanakkamlondon.com/eelam-12-06-2020/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, உடையார் said:

இவரை லண்டனில் தொடர்பு கொண்டால், அவரிடம் ஆங்கிலத்தில் இருக்கலாம் அல்லது Vanakkam London னிடம் கேட்கலாம் 

அ.மயூரன் , 

வரலாற்று ஆய்வாளர்.

https://www.vanakkamlondon.com/eelam-12-06-2020/

இவரிடம் இருக்கும்  என்று நிணைக்கவில்லை.

கார்டியன் பத்திரிகைக்கு விளக்கம் சொல்லி / கேட்டு அனுப்பக் கூடாது.

இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவிற்கு, எழுதி, அதனை, கார்டியன் பத்திரிகைக்கு, பிரசுரிக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

நீங்கள் எனது நாட்டின் வரலாறு தெரியாமல், எப்படி அதனை தவறாக, சர்வதேச ரீதியில் பிரதிநிதித்துவம் செய்ய முடியும் என்ற ரீதியில் தொடங்கி, ஈழம் என்ற பெயர் எனது தாய்நாட்டுக்கு எப்போது இருந்து இருக்கிறது என்று விளக்கம் கொடுத்து, இந்த பத்திரிகையில் அதை மறுத்ததன் மூலம் எனது தாயகத்தின் வரலாற்றினை எந்த வரலாற்று அடிப்படையில் திரித்தீர்கள் என்று விளக்கம் தாருங்கள் என்று கேட்க்க வேண்டும்.

எனது தாய்நாடு குறித்து தவறான வரலாற்று தகவல் தர, நீஙகள் யார், நோக்கம் என்ன என்று கேட்க வேண்டும்.

யாரிடமாவது சரோக்கா எழுதின கடதாசி விபரம் இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கை ஈழம் நிரூபித்து பலன் என்ன கார்டியன் ஏற்கனவே சொறிலங்கா செய்திகளை போட்டு திவசம் செய்யும் நாதமுனி சொல்வது செய்தால் கட்டாயம் போடுவார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இவரிடம் இருக்கும்  என்று நிணைக்கவில்லை.

கார்டியன் பத்திரிகைக்கு விளக்கம் சொல்லி / கேட்டு அனுப்பக் கூடாது.

இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவிற்கு, எழுதி, அதனை, கார்டியன் பத்திரிகைக்கு, பிரசுரிக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

நீங்கள் எனது நாட்டின் வரலாறு தெரியாமல், எப்படி அதனை தவறாக, சர்வதேச ரீதியில் பிரதிநிதித்துவம் செய்ய முடியும் என்ற ரீதியில் தொடங்கி, ஈழம் என்ற பெயர் எனது தாய்நாட்டுக்கு எப்போது இருந்து இருக்கிறது என்று விளக்கம் கொடுத்து, இந்த பத்திரிகையில் அதை மறுத்ததன் மூலம் எனது தாயகத்தின் வரலாற்றினை எந்த வரலாற்று அடிப்படையில் திரித்தீர்கள் என்று விளக்கம் தாருங்கள் என்று கேட்க்க வேண்டும்.

எனது தாய்நாடு குறித்து தவறான வரலாற்று தகவல் தர, நீஙகள் யார், நோக்கம் என்ன என்று கேட்க வேண்டும்.

யாரிடமாவது சரோக்கா எழுதின கடதாசி விபரம் இருக்கிறதா?

 

Sad.jpg 

EYIzKIGWoAAh67J.pngதோழர் அவாவின்ர ரூவிற்றர் பக்கத்தில் இதுதான் இருந்தது மீதிய (?) காணோம்.. கொஞ்சம் தடவி பாருங்களேன்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

EYIzKIGWoAAh67J.png

தோழர் அவாவின்ர ரூவிற்றர் பக்கத்தில் மீதிய காணோம்.. கொஞ்சம் தடவி பாருங்களேன்..👍

இவோவுக்கு சேம் சைடு கோல் போட்டு ஒரு அலுவல் பார்க்க தான் வேணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இவோவுக்கு சேம் சைடு கோல் போட்டு ஒரு அலுவல் பார்க்க தான் வேணும். 

முதல் பக்கம் கிடைத்து மேலே திருத்தியுள்ளேன் தோழர்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முதல் பக்கம் கிடைத்து மேலே திருத்தியுள்ளேன் தோழர்.👍

ஒரு தமிழனாக உங்கள் உழைப்புக்காக நன்றி தோழர். முடிந்ததை செய்வோம்

முழுவதும் வாசிக்கும் போதே, இந்த அம்மாவை, முழி பிதுங்க வைக்கும் இரு முக்கிய குறிப்புகள் இந்த பதிவில் உள்ளன.

ஒன்று ஈழம் என்பது, இலங்கை தமிழ் தேசிய கீதத்தில் உள்ளது.

அடுத்தது ஈழம் என்ற சொல் கொண்ட கல்வெட்டு, திருக்கேதீஸ்வரத்தில் கண்டு எடுக்கப்பட்டு, கொழும்பு தேசிய நூதன சாலையில் உள்ளது.

இது கூட தெரியாமல் அப்புறம் எப்படி 'எமது' நாட்டினை பிரதிநிதித்துவம் செய்கிறாராம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ லங்கா தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே

நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

Srī laṅkā tāyē – nam Srī laṅkā
Namō namō namō namō tāyē
Nalleḻil poli cīraṇi
Nalaṅkaḷ yāvum niṟai vāṉmaṇi laṅkā
Ñālam pukaḻ vaḷa vayal nati malai malar
Naṟuñcōlai koḷ laṅkā
Namatuṟu pukaliṭam eṉa oḷirvāy
Namatuti ēl tāyē
Namatalai niṉataṭi mēl vaittōmē
Namatuyirē tāyē – nam Srī laṅkā
Namō namō namō namō tāyē

Namatāraruḷ āṉāy
Navai tavir uṇarvāṉāy
Namatere valiyāṉāy
Navil cutantiram āṉāy
Namatiḷamaiyai nāṭṭē
Naku maṭi taṉaiyōṭṭē
Amaivuṟum aṟivuṭaṉē
Aṭalceṟi tuṇivaruḷē

Namatōr oḷi vaḷamē
Naṟiya malar eṉa nilavum tāyē
Yāmellām oru karuṇai aṉaipayanta
Eḻilkoḷ cēykaḷ eṉavē
Iyaluṟu piḷavukaḷ tamai aṟavē
Iḻiveṉa nīkkiṭuvōm
Īḻa cirōmaṇi vāḻvuṟu pūmaṇi
Namō namō tāyē – nam Srī laṅkā
Namō namō namō namō tāyē

கொய்யால... வைச்சு செய்யத்தான் இருக்கு...

நம்ம பிரகிராசிமாரே, இதுக்கு வழக்கு போடலாமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.