Jump to content

நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஜூன் 21 இல்…….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஜூன் 21 இல்…….

maxresdefault-1-960x467.jpg?189db0&189db0

 

எதிர்வரும் 21 ஆம் திகதி முழு அளவிலான சூரிய கிரகணம் ஏற்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தனா ஜெயரத்ன கூறுகிறார்.

2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை நிகழவுள்ளது.

இந்த நேரத்தில் சூரியன் ஒரு பிரகாசமான வளையம் போல் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/நெருப்பு-வளைய-சூரிய-கிரக-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரிய கிரகணம்: ஜூன் 21 நெருப்பு வளையம் எங்கு, எப்போது, எப்படி தெரியும்?

சூரிய கிரகணம்: ஜூன் 21 நெருப்பு வளையம் எங்கு, எப்போது, எப்படி தெரியும்?Getty Images

ஜூன் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. 

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.

ஞாயிறு அன்று நிகழும் சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் (annular solar eclipse) என்றும் சொல்லப்படுகிறது.

அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.

இதன்போது சாதாரண கண்களில் சூரியனை காண்பது கடினம். எனவே, இந்த வளையத்தை நேரடியாக பார்க்கக் கூடாது. இது தவிர சன் ஃபில்ட்டருடன் கூடிய கண்ணாடிகளை பயன்படுத்தியே இந்த கிரகணத்தைக் காண முடியும். 

நாசா போன்ற விண்வெளி ஆய்வு அமைப்புகளின் யூடியூப் பக்கம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் காணலாம்.

சூரியனை எப்போதுமே வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. சூரிய கிரகணத்தின்போது 99% சூரியன் மறைக்கப்பட்டிருந்தாலும் அதை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. அது விழித்திரையை பாதிக்கும் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் சவுந்தர்ராஜ பெருமாள். 

ரிங் ஆஃப் ஃபையர் எப்போது தெரியும்? 

இந்தியாவின் சில பகுதிகளில் இது வளையம் போல நெருப்பு வளையம் போல காட்சியளிக்கும். ஆனால் சில பகுதிகளில் பகுதி அளகு மட்டுமே இந்த சூரிய கிரகணத்தை காண முடியும். 

சூரிய கிரகணம்Getty Images

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் கர்சானாவில் ஞாயிறு காலை 10.12 மணிக்கு இந்த சூரிய கிரகணம் தொடங்கும் என்று கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குநர் தேவி பிரசாத் திவாரி தெரிவித்துள்ளார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. 

ஜூன் 21 காலை 11:49 மணிக்கு வளையம் போல காட்சியளிக்கத் தொடங்கும் இந்த சூரிய கிரகணம், 11.50 மணிக்கு முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தானில் உள்ள சூரத்கார்க், அனுப்கார்க், ஹரியானாவில் உள்ள சிர்சா, ராடியா மற்றும் குருசேத்ரா, உத்தராகண்டில் உள்ள டேராடூன், சம்பா, சமோலி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் நெருப்பு வளையம் போல காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணம் போன்று இந்த வளைவு சூரிய கிரகணம் நீண்ட நேரம் தோன்றாது.

மிகவும் குறைவான நேரம் மட்டுமே நெருப்பு வளையம் தோன்றும். 

தமிழகத்தில் எப்போது சூரிய கிரகணம் தெரியும்?

சென்னையில் 10:22 மணிக்கு தொடங்கும் இந்த சூரிய கிரகணம் மதியம் 1:41 வரை அதிகபட்ச கிரகணம் 11:58 மணிக்கு தெரியும்.

தமிழகத்தில் இது பகுதி அளவு சூரிய கிரகணம் மட்டுமே தெரியும். தமிழகத்தில் 34% மட்டுமே சந்திரன் சூரியனை மறைக்கும் என்பதால் வடமாநிலங்களைப் போல வளைவு சூரிய கிரகணம் தெரியாது.

சூரிய கிரகணம்Getty Images

இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நேரங்களில் இந்த சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் காலை 10: 22 முதல் மதியம் 1:41 வரையிலும், பெங்களூரில் 10:13 முதல் 1:31 வரையிலும், டெல்லியில் 10:20 முதல் 1:48 வரையிலும், மும்பையில் 10 மணி 1:27 வரையிலும் கொல்கத்தாவில் 10:46 முதல் 2:17 வரையிலும் தெரியும்.

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில்தான் ஞாயிறு நிகழவுள்ள சூரிய கிரகணத்தை உலகிலேயே முதல் முறையாக மக்கள் பார்க்க உள்ளனர்.

அந்த சூரிய கிரகணம் தெற்கு சூடான், எத்தியோப்பியா, யேமன், ஓமன், சௌதி அரேபியா, இந்தியப் பெருங்கடல் பகுதி, பாகிஸ்தான் ஆகியவற்றைக் கடந்து இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் தெரியும்.

இந்தியாவுக்கு பிறகு இந்தியாவின் கிழக்கே உள்ள திபெத், சீனா, தைவான் போன்ற நாடுகளில் இந்த சூரிய கிரகணத்தை காண முடியும். 

இந்த சூரிய கிரகணம் கடைசியாக பசிபிக் பெருங்கடலின் மத்திய பகுதியில் தெரியும். 

 

https://www.bbc.com/tamil/science-53120350

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.