Jump to content

போன் நலன் முதல் உடல்நலன் வரை! -ஸ்மார்ட் போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த சில குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போன் நலன் முதல் உடல்நலன் வரை! -ஸ்மார்ட் போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த சில குறிப்புகள்

Representational Image

 

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நமது மொபைலை ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டும். ஆனால், அப்படி செய்வதற்கு முன்னர்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நம்மில் பெரும்பாலானோர் விழித்திருக்கும் நேரமெல்லாம் ஸ்மார்ட்போனை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறோம். நமது அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத பந்தமாக மாறிவிட்ட ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த இதோ சில குறிப்புகள்.

செயல்திறன் மேம்பட:

# 01. நமது போனின் முகப்புத் திரையில் (Home Screen -ல்) ஆப்ஸ்களாக வைத்து குவிக்காமல், அதை வெறுமனே வைப்பது அல்லது மிக முக்கியமான ஆப்களை மட்டும் வைத்துக்கொள்வது சிறந்தது. இதன்மூலம், நம் மொபைல் செயல்திறனில் ஒரு பெரிய வித்தியாசம் கிடைக்கும்.

# 02. மூன்று நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது நமது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்வது அவசியம்.

# 03. தூசிகள் மற்றும் அழுக்குகள் நமது போனை பாதிக்கக்கூடும் என்பதால், அடிக்கடி மென்மையான துணியால் சுத்தம் செய்யலாம்.

# 04. அழுக்குகள், கீறல்கள், தூசிகள் போன்றவற்றில் இருந்து நமது போனை பாதுகாத்துக்கொள்ள நல்ல தரமான, உறுதியான மொபைல் கவர்களைப் பயன்படுத்த வேண்டும்.

Representational Image
 
Representational Image Unsplash

# 05. வாரத்திற்கு ஒருமுறை மொபைலை Restart செய்வது நல்லது. மொபைலை அதிகம் பயன்படுத்துவோர், வாரம் இருமுறை Restart செய்யலாம்.

# 06. மொபைல் நிறுவனம் அளிக்கும் Software Update-களையும், அடிக்கடி பயன்படுத்தும் ஆப்ஸ்களின் Update-களையும் உடனுக்குடன் செய்துவிடுவது புத்திசாலித்தனம்.

# 07. நேரம் கிடைக்கும்போது நமது போனின் User Manual -ஐ ஒருமுறையாவது படித்துப் பார்ப்பது நல்லது. மொபைலில் தேவையற்ற Widget களை நீக்கிவிடுவது சிறந்தது.

# 08. அதிக சூடு, குளிர்ச்சி மற்றும் காந்தவிசை உள்ள இடங்களில் நமது போனை வைத்திருப்பது நல்லதல்ல.

# 09. Automatic Screen Lock Time செட் செய்துகொள்வது சிறந்தது.

# 10. நமக்கு மிகவும் பயனுள்ள ஆப்ஸ்களின் Premium மற்றும் Beta Version-களை உபயோகிக்கலாம்.

 

சேமிப்புத் திறன் மேம்பட:

# 01. போனில் நாம் அடிக்கடி பயன்படுத்தாத, தேவையில்லாத ஆப்ஸ்கள் இருந்தால் அதை Uninstall செய்து விடுவது நல்லது. Uninstall செய்யும் முன்பு செட்டிங்கில் ஆப் டேட்டாவை க்ளீயர் செய்துவிட வேண்டும்.

# 02. நாம் ஆப்களை நிறுவும்போது அல்லது அவை இயங்கும்போது, அவை குப்பைக் கோப்புகளை தற்காலிக சேமிப்பில் விட்டுவிடும். அவற்றை (Clear Cache) அவ்வப்போது அழித்துவிட வேண்டும்.

# 03. தரமான SD கார்டுகளைப் பயன்படுத்தி நமது சேமிப்பிடத்தை விரிவாக்கிக்கொள்ள வேண்டும்.

# 04. Light Version கிடைக்கும் ஆப்ஸ்களில், அவை நமக்கு போதுமானதாய் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம்.

Representational Image
 
Representational Image Pixabay

# 05. போனின் மற்றும் ஆப்ஸ்களின் Cloud Storage களைப் போதுமான அளவு பயன்படுத்திக்கொள்ளலாம்.

# 06. நாம் பயன்படுத்த மாட்டோம் என்றால், நமது போனின் Animation -களை Developer Option-ல் சென்று ஆஃப் செய்துவிடலாம்.

பாதுகாப்பு மேம்பட:

# 01. நமது போனை பாஸ்வேர்ட் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் லாக் செய்துகொள்வது பாதுகாப்பானது. இதனால் ஹேக்கர்களிடமும், திருடர்களிடமும் நமது விவரங்கள் செல்வது ஓரளவு தடுக்கப்பட வாய்ப்புண்டு.

# 02. பொது வெளியில் கிடைக்கும் இலவச WiFi-களைத் தவிர்த்து விடுவது சிறந்தது.

 

# 03. பைக்கில் செல்லும்போது தலையை சாய்த்தவாறும் அல்லது ஹெல்மெட்டினுள் போனை வைத்தும் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

# 04. நாம் பயன்படுத்தும் ஹெட்போன்கள் தரமானவையாக இருக்க வேண்டும். மேலும், அவ்வப்போது அவற்றைத் துடைத்து சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.

# 05. நாம் ஒரு புதிய ஆப்பை பதிவிறக்கி நிறுவ விரும்பும்போது, நம்பகமான Apps Store-களில் இருந்து மட்டுமே ஆப்ஸ்களை Download செய்ய வேண்டும்.

# 06. நமது பல்வேறு பயன்பாடுகளின் Username மற்றும் Password ஆகியவற்றை அவ்வப்போது மாற்றுவது சிறந்தது.

Representational Image
 
Representational Image Unsplash

பேட்டரி திறன் மேம்பட:

# 01. இரவு நேரங்களில் மொபைல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் செல்வதை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்.

# 02. போன் மெமரியைப் பொறுத்தவரை எப்போதும் கால் பங்கு (25%) காலியாக வைத்து இருப்பதே சிறந்தது.

# 03. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நமது மொபைலை ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்வதற்கு முன்னர் நமது அனைத்து விவரங்களையும் பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்வது அவசியம்.

# 04. தேவையற்ற ஆப்களின் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்த நிலையில் வைக்கலாம்.

# 05. மொபைல் பேட்டரியை 100% சார்ஜ் செய்யாமலும்,10%-க்கு கீழ் இறங்கிவிடாமலும் பார்த்துக்கொள்வது சிறந்தது.15% முதல் 95% வரையிலான அளவில் பேட்டரியைப் பராமரிப்பது சிறந்தது.

# 07. இணையதளப் பயன்பாடு இல்லாதபோது மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து வைக்க வேண்டும்.

# 08. அதிக பேட்டரி சக்தியை உபயோகிக்கும் பயன் குறைந்த ஆப்களை நீக்கிவிடுவது சிறந்தது.

Representational Image
 
Representational Image Unsplash

# 09. தேவைப்படும் போது Battery Saver வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

# 10. தரமான ஒரிஜினல் சார்ஜர்களைப் பயன்படுத்துவது பேட்டரியின் திறனை அதிகரிக்கும்.

உடல்நலம் மேம்பட:

# 01. மொபைல் போனை சட்டைப் பையில் வைப்பதைவிட பேன்ட் பாக்கெட்டில் வைப்பது சிறந்தது.

#02. Vibration அதிக ரேடியேஷனை வெளிப்படுத்த வாய்ப்புண்டு என்பதால், முடிந்தவரை நமது மொபைலை Vibration Mode -ல் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.

# 03. எப்போதும் நமது மொபைல்போனை இடதுபுறம் காதில் வைத்துப் பேசுவது நல்லது.

# 04. இரவு தூங்குவதற்கு 1 மணிநேரம் முன்பும், காலையில் எழுந்ததும் 1 மணி நேரம் வரையிலும் நாம் மொபைல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்துவிடலாம்.

# 05. வாரம் ஒருநாள் ஸ்மார்ட் போனை ‘தொடா’ விரதம் இருப்பது சிறந்தது.

# 06. தூங்கும்போது படுக்கை அருகில் மொபைல் போனை வைக்காமல் தூரமாக அல்லது வேறு அறையில் வைப்பது நல்லது.

# 07. சமையலறை மற்றும் பாத்ரூமிற்குள் மொபைல் போனை கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

# 08. தேவையான அளவு Screen Brightness மற்றும் எழுத்துகளின் அளவு (Font Size) மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.

Representational Image
 
Representational Image

# 09. அதிக வெளிச்சம் மற்றும் இருட்டில் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

# 10. ஒருநாளின் குறிப்பிட்ட சில நேரங்களை மொபைல் போன் பயன்படுத்தா நேரம் என நமக்கு நாமே வரையறுத்துக் கொள்ளலாம்.

- அகன் சரவணன்

 

https://www.vikatan.com/technology/tech-news/tips-to-use-smartphone-in-a-smarter-way

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.