Jump to content

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அட விடுங்க தோழர்.. இங்க கல்யாண வீட்டுக்காரன் பாண்டியில் இருந்து சரக்கு கடத்தி வர தாவு தீர்ந்துடும்..😢

 

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எம்மை விட சமூக மாற்றம் என்பது ஐரோப்பிய சமூகங்களில் நாகரீக கலை கலாச்சார ரீதியாக தம் தேசியத்தையும் அடையாளத்தையும் இழக்காமல் அதோடு சேர்த்த மாற்ரத்தாயே காணக்கூடியதாக இருக்கிறது.புலம் பெயர் நம் சமூகமானது இரு தோணியில் பயணம் செய்வது தவிர்க்க முடியாத காரணமாக இருந்தாலும் மாற்றங்களோடு இவர்கள் பயணித்தாலும் தம் இனம் சார்ந்து அடையாளம் சார்ந்து எந்த வித அக்கறையும் இல்லாமல் பயணிப்பவர் போலவே தெரிகின்றது.இந்த மாற்றமானது எமது அடையாளத்துக்கு எதிர் காலத்தில் அச்சுறுத்தலாக அமையலாம்.இது நிலத்திலும் புலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஒரு சமூகத்தின் இயங்கியவில் விதியானதே அந்த சமுகக்கட்டமைப்பின் பல பாத்திரங்களை வகிப்பதனால் இது எல்லா வளர்ச்சிக்கும் முக்கியமானது.சமூக மாற்றத்தின் மத்தியிலும் அடையாளம் தொலைக்காத ஓர் மாற்றமே அந்த இனத்தின் பலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

அப்படி இல்லை சார். கண்டபடி எண்ணிலடங்கா கோபியரோடு கும்மாளம் கொட்ட நாம் ஒன்றும் கிருஷ்ன பரமாத்மா இல்லை.

இரண்டு பொண்டாட்டியை வருடாவருடம் கட்ட நாம் ஒன்றும் தமிழ்கடவுள் முருகன் இல்லை.

பட்டத்து ராணி என்று ஒன்றையும் அந்தப்பபுரத்தில் பல வைப்பாட்டிகளையும் வைத்திருக்க நாம் ஒன்றும்  பழைய தமிழ் மன்னர்கள் இல்லை. 

பெண்பிள்ளைகளை தேவதாசிகள் என்று கோவிலில் பொட்டுக்கட்டி விட்டு  பின் அவர்களை அவர்களை துஷப்பிரயோகம்  செய்யும் பார்பன இந்து கலாச்சாரத்தையும்  நாம் மாற்றி விட்டோம். 

எழு எட்டு வயதில் பிள்ளைகளுக்கு பால்ய விவாகத்தை நடத்திய, பின்னர் கணவன் இறந்த போது அவர்களை உடன்கட்டை ஏறச்சொல்லி  வற்புறுத்திய மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக தீயில் போட்டு படுகொலை செய்த காட்டுமிராண்டி பார்பன இந்துக்கலாசாரத்திலும் இப்போது நாம் இல்லை. 

ஆகவே காலம் மாற பழைய காட்டுமிராண்டித்தனம் மாறி புதிய நாகரீகம் இப்படிப் புறுப்புறுப்பவர்களைத் தாண்டி ஏற்படுவது  இயற்கை நியதி. என்ன மாற்றங்களை ஏற்றுகொள்ளாத சிலர் இவ்வாறு உங்களைப் போல் புறுபுறுப்பார்கள். அவர்கள் தமக்குள்  இவ்வாறு  புறுபுறுத்துவிட்டு  தமது காலம் வர போய்சேர வேண்டியது தான். மாற்றங்ளையும் புதுமைகளையும் சமுதாயம் உள்வாங்கியே தீரும்.

எங்கே மாற்றினீர்கள்? கிஷ்ணரும் முருகனும் செய்ததைத்தானே இன்று நீங்களும் செய்கின்றீர்கள்.
வேலை இடத்தில் ஒன்று. வீட்டில் ஒன்று என இன்றைய சமுதாயத்தில் கண் கூடாகவே பார்க்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

பத்துப்பேரோடை குடும்பம் நடத்தீட்டு பதினோராவது ஆளை கலியாணம் கட்டுவதுதான் பழையன கழிதலும் புதியன புகுதல் கலாச்சாரமா சார்? :cool:

தாத்தா புல‌ம்பெய‌ர் நாட்டில் ‌ஒரு சில‌  அசிங்க‌ங்க‌ள் ந‌ட‌க்குது  , 

ஒரு ஆட்க‌ளில் உண்மை நில‌வ‌ர‌ம் தெரிந்தா , அவ‌ர்க‌ளை த‌ள்ளி வைப்ப‌து ந‌ல்ல‌ம் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

தாத்தா புல‌ம்பெய‌ர் நாட்டில் ‌ஒரு சில‌  அசிங்க‌ங்க‌ள் ந‌ட‌க்குது  , 

ஒரு ஆட்க‌ளில் உண்மை நில‌வ‌ர‌ம் தெரிந்தா , அவ‌ர்க‌ளை த‌ள்ளி வைப்ப‌து ந‌ல்ல‌ம் ,

புதியன புகுதலும் பழையன கழிதலும் எண்டு எதை சொல்ல வருகினம் எண்டு எனக்கு விளங்கேல்லை.
வெள்ளைக்காரனே தங்கடை நாய்க்கலாச்சாரம் சரியில்லை எண்டுட்டு ஏசியா பக்கம் ஓடுறான். இவையள் என்னடாவெண்டால் ஆட்டுக்கை மாட்டைக்கொண்டு வந்து ஓட்டீனம்.

தம்பி! யூ நோ பழையன கழிதலும் புதியன புகுதலும்????? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

இங்கு இப்படி கலியாண வீடுகள் நடப்பதில்லை, அத்துடன் நான் இருக்குமிடத்தில் இதுவரை இரண்டு கல்யாணத்திற்குதான் போயுள்ளேன், அதனால் பார்க்காமல் கருத்து கூறவிரும்பவில்லை.

எனக்கும் மூன்று பிள்ளைகள், இன்னும் 7-8 வருடத்தில் செய்து வைக்கனும். தமிழரை செய்து வைக்கனும் என்பதுதான் ஆசை. ஆனா தன் பாலினத்தை கூட்டிவராதவரை யாரென்றாலும் சரி. மகன்களுக்கு ஊரில் உள்ள பெண்களைதான் பார்த்து செய்து வைக்கனும், பார்ப்போம்.

 

ஊரில் உள்ள‌ ஏழைப்பிள்ளைக‌ளை பார்த்து உங்க‌ள் பிள்ளைக‌ளுக்கு திரும‌ண‌ம் செய்து வையுங்கோ உடையார் ஜ‌யா , நூற்றுக்கு நூறு உறுதியாய் சொல்லுவேன் உங்க‌ட‌ பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் ந‌ல்ல‌ ப‌டியா அமையும் அதோடு வீட்டில் பிர‌ச்ச‌னை இருக்காது ,  உங்க‌ட‌ பிள்ளைக‌ளின் சொல்லுக்கு அதுங்க‌ள் க‌ட்டுப் ப‌ட்டு ந‌ட‌ப்பின‌ம் 🙏 ,  

இத‌ சொன்ன‌ ப‌டியால் என்ன  சாத்திரி என்று நினைக்க‌ கூடாது ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் மாறும்போது எல்லாம் மாறுகின்றது

இந்த விடயத்தில் சிங்களவனை பாராட்ட‌ வேண்டும். அவன் கண்டியன் உடுப்பு உடுத்து கலச்சாரத்தை விடாமல் எப்படியும் ஒரு ஒரு படம் எடுத்து விடுவான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

உங்களுடைய தமிழ் இனிமையானது. அதை நான் விரும்பி வாசிக்கிறேன். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் “பஸ்சங்க” என்ற சொல் மட்டும் நாம் வாழ்ந்த பிரதேசத்தில் பயன்படுத்தப்படாத சொல்.

கலாச்சாரம் பற்றிய உங்கள் விருப்பமே எனதும். ஸகொட்லண்ட் முதல் ஆபிரிக்கா வரை திருமணங்கள் பாரம்பரிய உடை, உணவு. பண்பாட்டின்படியே தான் இடம்பெறுகின்றன. இவை பழைமையானவை. காலம் மாறி போக, பாரம்பரியத்தை நினைவிற்கொள்ள இந்த சடங்குகள் என்றும் மாறாத பாரம்பரிய முறைப்படி செய்யப்படுகின்றன. நாமும் இந்த பாரம்பரியத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

வ‌ண‌க்க‌ம் யூட் ஜ‌யா ,
தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி

பஸ்ச‌ங்க‌ள் த‌மிழ் சொல் இல்லையா , என்ர‌ வ‌ய‌து ப‌ஸ்ச‌ங்க‌ள் கூட‌ அப்ப‌ விளையாடினேன் என்று சொல்லுவ‌தா அல்ல‌து சின்ன‌ பிள்ளைக‌ள் எல்லாரும் ஒன்னா ம‌கிழ்வாய் விளையாடினோம் என்று சொல்லுவ‌தா / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கலாச்சார மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது அப்படியான  மாற்றங்கள் வந்தாலும்  ஈழத்தமிழர்களின் கலாச்சாரம் இரண்டாம் மூன்றாம் தலைமுறை தாண்டியும்
காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது
விருந்தோம்பல் என்பது தமிழர்களின் பண்பாடு
பணி நிமிர்த்தம் அதன் பழுக்கள் நேரக்குறைவு
என்ற காரணங்களையும் தாண்டி புலம்பெயர்ந்த தமிழர்கள் விருந்தோம்பலை விரும்புகின்றனர்

திருமணங்கள் சடங்குகள் என்பன எப்படியும் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டிருக்கும்
என்றாலும் இது தமிழர்கள் சடங்குகள் என்ற அடையாளம் எப்போதும் அங்கு
நிலைகொண்டிருக்கும் .அதை மட்டும் எப்படியும் மாற்றமுடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் ஒன்றே மாறாதது தம்பி

நீங்கள் குறிப்பிடும் தேவையற்ற ஆடம்பரங்கள் ஆர்ப்பாட்டங்கள் அநாவசிய பாடல்கள்  கூத்துக்கள் தவிர்க்கப்படணும் கண்டிக்கப்படணும்

இது  பெற்றோர்களின் தவறும் கவனிப்பின்மையும்  தான்.

நான்  கையை  கட்டியபடி மண்டபத்தில்  நின்றால் எனது  வீட்டு  எந்த  நிகழ்வும் எல்லை  தாண்டாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nilmini said:

இவைதான் எனது கருத்துக்கள் தம்பி 

புலம் பெயர்ந்து செல்வதென்பது சொந்த இடங்களை விட்டு போவது மட்டும் அல்லாமல் எமது கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள், மற்றும் பலவற்றையும் விட்டு செல்ல வேண்டியுள்ளது. பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகமுதல் வீட்டில் இருக்கும்வரை எம்மைப்போலவே எல்லாவற்றயும் செய்து, சாப்பிட்டு, தமிழும் கதைத்துக்கொண்டு இருப்பார்கள். பள்ளிக்கூடம் போக துடங்க நிலைமை மாறத்துடங்கும் . அதற்கு நடுவில் நாங்கள் வேலையில் பிஸியாகிவிட நிலைமை இன்னும் மாறும். தாய் வீட்டில் இருந்து மற்றும் தாத்தா பாட்டி யாரும் இருந்து , தமிழ், சமயம் என்று சொல்லிக்குடுத்தால் ஓரளவு பலன் கிடைக்கும். ஆனால் இது நிறைய பேருக்கு சரிவராது.

வெளிநாட்டில் பிறந்து வளரும் பிள்ளைகளை ஊரில் நாங்கள்  வளர்வது போல் வளர நினைப்பது பிழை. அத்துடன் இப்ப ஊர் பிள்ளைகள் எம்மை மாதிரி இல்லை.அங்கும் நிறைய மாற்றங்கள். நாங்கள் இரண்டு மகன்மாரையும் அடிக்கடி இலங்கை, இந்தியா என்று கூட்டிப்போய் சொந்தம், கோயில் என்று காட்டி வந்தோம். சரஸ்வதி பூசை என்றால் , மச்சம் சாப்பிடாமல், பின்னேரம்தேவாரம் பாடி  சாமி கும்பிட வேண்டும். முடிந்த நேரங்களில் எல்லாம் கோயிலுக்கு போவது. சிறு வயதில் நாங்கள் இருக்கும் இடத்தில பகவத் கீதை வகுப்புகளுக்கு போய் பஜனைகளும் படித்ததனால்  இப்பவும்  கிழமையில் இரு நாட்கள் பகவத் கீதை , பஜனை படிப்பார்கள். அடிக்கடி இருவருடனும் எமது கலாச்சாரம், சமயம் பற்றி கதைப்பேன். இருவரும் மிகவும் ஆர்வமாக கேட்பார்கள். சில தமிழ் படங்களும் பாப்போம். இப்படி ஒவ்வொரு குடும்பமும் தமக்கு முடிந்ததை பிள்ளைகளுக்கு செய்து காட்டி வந்தால் அவர்கள் பெரியவர்களாகி நாம் இல்லாத காலத்தில் அதனை பெரிதாக எண்ணி  மதிப்பார்கள்.

நாம் அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டால் ஒரு காலத்தில் தமக்கென்று ஒரு அடையாளம் இல்லாமல் தடுமாறுவார்கள்.  எனது சகோதரர்களும், மற்ற உறவினர்களும்  தமது பிள்ளைகளுக்கு அப்படிதான் செய்கிறார்கள். அத்துடன் அவர்களுக்கு எமது சமையல் முறைகளையும் சொல்லிகொடுக்கிறேன் . மிகவும் ஆர்வமாக சமைக்கிறார்கள். நாங்கள் எல்லா அம்மாமாரும் சேர்ந்து இப்போது Google document இல் ரெசிபிக்களை  எழுதிவருகிறோம். அந்த google document எமது பிள்ளைகள் எல்லோரும் பார்த்து தமக்கு விருப்பமான ரெசிபிக்களை ஒருகாலத்தில் சமைக்கலாம். எமது உணவை அவர்கள் உண்ணுவது மட்டும் அன்றி அவர்களுக்கு சமைக்க தெரிவதும் கலாச்சாரத்தை பேணுவத்துக்கு மிகவும் முக்கியம். இதை விட அதிகமாக செய்ய எம்மால் முடியவில்லை. எனக்கு அவர்கள் எம்மை மாதிரி வாழவேண்டும் என்று தேவை இல்லை. எமது மொழி, கலாச்சாரம், சமயம் எல்லாவற்றையும் அவர்கள் வேற்று மொழிகளை காட்டிலும் பெரிதாக மதிக்க வேண்டும் என்பதில் தான் எனக்கு ஆர்வம். அது அவர்களுக்கும் தெரியும்.

சில குடும்பங்கள் தமது ஊர் ஒன்றுகூடல்கள் வைக்கிறார்கள். எமது அம்மாவின் அப்பாவின் ( ஐயா) ஊர் எழுதுமட்டுவாள் என்றபடியால் நாமும் போவதுண்டு. ஆனால் அங்கு பெரியவர்களே ஜீன்ஸை போட்டுகொண்டு ஆங்கிலம் கதைப்பார்கள். சாப்பாடு மட்டும் ஊர் சாப்பாடு. எனது தங்கையின் மகள் (14 வயது) மிகவும் தமிழ் ஆர்வம் மிக்கவர்.  போனகிழமை சந்தித்தபோது இந்த ஒன்றுகூடல் பற்றி என்னிடம் கதைத்தா . சின்னப்பிள்ளைகளுக்கு விளையாட்டுப்போட்டி வைக்கும்போது எமது பாரம்பரிய விளையாட்டுகளை தமக்கு சொல்லித்தந்து அவற்றை விளையாட வைக்கலாமே என்று அவ சொன்னது எனக்கு மிகவும் பிடித்தது. அம்மா, சித்திமார், மாமி எல்லோரிடமும் கேட்டு  பழைய விளையாட்டுகளை அவவுக்கு விளங்கப்படுத்தினேன். மிகவும் ஆர்வமாக கேட்டா. 

எமது பரந்து  வாழும் பெரிய குடும்பத்தில் (extended  family) எவரும் இப்படி கூத்து மாதிரி சாமத்திய வீடோ, கல்யாண வீடோ வைக்கவில்லை. நாம் எல்லோரும் குடும்பகொண்டாட்டங்களில் சந்திக்கும் போது பொழுது போக்குக்கு இந்தமாதிரி விசித்திரமான கலியாண , சாமர்த்தியவீடு விடீயோக்களை YouTube இல் பார்த்து சிரிப்போம். பிள்ளைகளும் சேர்ந்து பார்த்துவிட்டு தமது அதிருப்தியை சொல்வார்கள்.அக்காவின் மகள் பஞ்சாபி/ராஜஸ்தான் ஆனால் கனடாவில் பிறந்து வளர்ந்த பெடியனை இரு வருடங்களுக்கு முன் கலியாணம் முடித்தபோது. எமது யாழ் முறையிலும், பஞ்சாபி முறையிலும் தான் வைத்தது. ஆனால் மணமக்களின் விருப்பப்படி மணவறை மற்றும் அலங்காரங்களை வித்தியாசமாக தான் செய்தது. மற்றம்படி கூத்துக்கள் ஒன்றும் இல்லை. Reception வெள்ளைக்காரர் மாதிரி வைத்தார்கள். அதற்கு மட்டும் எல்லோரும் ஆடிப்பாடினார்கள்.

சில எனக்கு தெரிந்த அமைதியான பெற்றோரே தமது பிள்ளைகளின் கலியாணத்துக்கு அளவுக்கு அதிகமாக ஆடுவது, பாடுவது ஒருவரை ஒருவர் தூக்குவது என்று பார்க்கும் போது  நம்ப முடியாமல் இருக்கும். எனவே கலாசார சீரழிவுக்கு தனிப்பட்ட மனிதர்கள், குடும்பங்களின் பிழையான தெரிவுகளே காரணம்.

வ‌ண‌க்க‌ம் அக்கா , உங்க‌ பெரிய‌ அன்பான‌ விள‌க்க‌த்துக்கு ந‌ன்றி 🙏

உங்க‌ளின் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌டுகிறேன் , உங்க‌ள் பிள்ளைக‌ளுக்கு எங்க‌ள் க‌லாச்சார‌த்த‌ ப‌ற்றி சொல்லி கொடுத்தத‌ நினைக்க‌ ம‌கிழ்ச்சியாய் இருக்கு 🙏 ,

டென்மார்க்கில் சின்ன‌னில் என்னோட‌ ஒன்னா விளையாடின‌ பிள்ளைக‌ள் த‌ம‌க்கை ம‌ற்றும் த‌ங்கைச்சி  , இங்க‌த்த‌ வெள்ளை இன‌த்த‌வ‌ர‌ திரும‌ண‌ம்  செய்து இருக்கின‌ம் , 
அந்த‌ பிள்ளைக‌ளின் பெற்றோர் அவையை ந‌ல்ல‌ மாதிரி தான் வ‌ள‌த்து விட்ட‌வை ,  அவையின் மூத்த‌ ம‌க‌ள் த‌மிழ் பெடிய‌ன‌ விரும்ப‌ உன‌க்கு இந்த‌ வ‌ய‌திலே காத‌ல் தேவையா என்று த‌க‌ப்ப‌ன் அடிக்க‌ அந்த‌ பிள்ளை வீட்டை விட்டு போய் இப்போ இங்க‌த்த‌ வெள்ளைக் கார‌ன் கூட வாழுகிறா ‌  , அழ‌கான‌ குன‌மான‌ பிள்ளைக‌ளை பெத்து அதுங்க‌ளின் எதிர் கால‌த்த‌ பெற்றோர்  ப‌ழுதாக்கிட்டின‌ம் , அந்த‌ பிள்ளை விரும்பின‌ த‌மிழ் பெடிய‌னையே செய்து வைத்து இருந்தா ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ந்து இருக்காது ,  அக்காவை பார்த்து த‌ங்கைச்சியும் நேர்வே நாட்டு வெள்ளைக் கார‌னை திரும‌ண‌ம் செய்து இருக்கிறா 🤔☺ ,  


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுப.சோமசுந்தரம் said:

தம் மரபு, பழக்க வழக்கங்கள், (மூட நம்பிக்கைகள் தவிர்த்து) நல்ல நம்பிக்கைகளின் வழியில் தம் அடையாளங்களை வேர் பிடிக்க வைக்கும் முனைப்பு எந்த மானிட சமூகத்திலும் இருக்கும், இருக்க வேண்டும். மாற்றங்கள் ஒன்றே மாறாதவை என்பது ஏற்புடைய கருத்துதான். ஆனால் எந்த மாற்றத்தையும் கேள்வி கேட்காமல் கடந்து போவதும், வேறு வழியில்லை என்று கையறு நிலையில் ஏற்றுக் கொள்வதும் அந்த இனத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் கேட்டினை விளைவிக்கும் என்பது என் கருத்து. பையன் அவர்கள் சமூகத்தைக் கேள்வி கேட்கிறார். நல்ல கேள்வி. பையனாய் இருக்கும் போதே கேட்பது கூடுதல் சிறப்பு ! ('பையனாய்' என்று அவர் குறித்த பெயரை வைத்துச் சொன்னேன். அவ்வளவே 😀

நீங்க‌ள் சொல்லுவ‌து முற்றிலும் ச‌ரி , மாற்ற‌ம் ஒன்றே மாறாத‌வை  ,

மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா சொன்ன‌ மாதிரி என‌க்கு பெரிய‌ வ‌ய‌சு இல்ல‌ , யாழில் இணையும் போது சின்ன‌ பெடிய‌னாய் இணைந்தேன் , ஏன் பெய‌ரை மாத்துவான் என்று பைய‌ன் என்ற‌ பெய‌ரில் எழுதுகிறேன் தொட‌ர்ந்து , 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பையன்26 said:

ஊரில் உள்ள‌ ஏழைப்பிள்ளைக‌ளை பார்த்து உங்க‌ள் பிள்ளைக‌ளுக்கு திரும‌ண‌ம் செய்து வையுங்கோ உடையார் ஜ‌யா , நூற்றுக்கு நூறு உறுதியாய் சொல்லுவேன் உங்க‌ட‌ பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் ந‌ல்ல‌ ப‌டியா அமையும் அதோடு வீட்டில் பிர‌ச்ச‌னை இருக்காது ,  உங்க‌ட‌ பிள்ளைக‌ளின் சொல்லுக்கு அதுங்க‌ள் க‌ட்டுப் ப‌ட்டு ந‌ட‌ப்பின‌ம் 🙏 ,  

இத‌ சொன்ன‌ ப‌டியால் என்ன  சாத்திரி என்று நினைக்க‌ கூடாது ,

அதுதான் என் கனவு பையா, மனதில் நினைத்து தினம் தினம் பிரார்த்திப்பதும் அதுவே. மகளுக்கு இங்குதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, உடையார் said:

அதுதான் என் கனவு பையா, மனதில் நினைத்து தினம் தினம் பிரார்த்திப்பதும் அதுவே. மகளுக்கு இங்குதான்

க‌ன‌டாவில் வ‌சிக்கும் என‌து அத்தை த‌ன‌து மூத்த‌ ம‌க‌னுக்கு அதாவ‌து என்ர‌ ம‌ச்சானுக்கு , ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ குடும்ப‌த்தில் இருந்து பெண் எடுத்து திரும‌ண‌ம் செய்து வைச்ச‌வா , 

அதுங்க‌டை ஒற்றுமையை பார்த்து நானே வியந்து போனேன் , நாம் ம‌ன‌ம் வைச்சா எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியா ந‌ட‌க்கும் உடையார் ஜ‌யா , 

நாங்க‌ள் யாழ்ப்பாண‌ம் அந்த‌ பிள்ளை ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு , இர‌ண்டு குடும்ப‌த்துக்கும் பிள்ளைக‌ளின் திரும‌ண‌த்தில் ம‌ன‌தார‌ விருப்ப‌ம் ,  எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியாய் அமைந்த‌து , சீத‌ன‌ பிர‌ச்ச‌னையும் இல்ல‌ ஆட‌ம்ப‌ர‌மாய் க‌லியாண‌ வீட்டை செய்ய‌மா பெண்ணின் உற‌வின‌ர்க‌ள் எங்க‌ள‌து உற‌வின‌ர்க‌ள் என்று சின்ன‌னாய் செய்த‌வை ,  ஊரில் ந‌ட‌ந்த‌ அவ‌ர்களின் ‌ திரும‌ண‌ நிக‌ழ்வு மிக‌ அழ‌கு 🙏 ,

புல‌ம்பெய‌ர் நாட்டில் ஒருசில‌ என்ர‌ சொந்த‌ங்க‌ளின் நிக‌ழ்வை பார்த்தா காரி துப்ப‌ தான் தோனும் 😡

40 minutes ago, விசுகு said:

மாற்றம் ஒன்றே மாறாதது தம்பி

நீங்கள் குறிப்பிடும் தேவையற்ற ஆடம்பரங்கள் ஆர்ப்பாட்டங்கள் அநாவசிய பாடல்கள்  கூத்துக்கள் தவிர்க்கப்படணும் கண்டிக்கப்படணும்

இது  பெற்றோர்களின் தவறும் கவனிப்பின்மையும்  தான்.

நான்  கையை  கட்டியபடி மண்டபத்தில்  நின்றால் எனது  வீட்டு  எந்த  நிகழ்வும் எல்லை  தாண்டாது

வ‌ண‌க்க‌ம் அண்ண
உங்க‌ளை மாதிரி ஒவ்வொரு சொந்த‌த்திலும் ஒருத‌ர் இருந்தாலே போதும் எம் க‌லாச்சார‌ம் தொட்டு எல்லாம் ந‌ல்ல‌ நிலையில் இருக்கும் ,

வாழ்த்துக்க‌ள் அண்ணா 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலையில் கொஞ்ச‌ம் விசியாய் இருக்கிறேன் , இந்த‌ திரியில் எழுதின‌ உற‌வுக‌ளுக்கு கொஞ்ச‌த்தால் ப‌தில் அளிக்கிறேன்  , 

நீங்க‌ள் தொட‌ர்ந்து எழுதுங்ங்கோ , ந‌ல்ல‌த‌ எழுதுவோம் தீய‌த‌ த‌விர்ப்போம் ,

Link to comment
Share on other sites

1 hour ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் யூட் ஜ‌யா ,
தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி

பஸ்ச‌ங்க‌ள் த‌மிழ் சொல் இல்லையா , என்ர‌ வ‌ய‌து ப‌ஸ்ச‌ங்க‌ள் கூட‌ அப்ப‌ விளையாடினேன் என்று சொல்லுவ‌தா அல்ல‌து சின்ன‌ பிள்ளைக‌ள் எல்லாரும் ஒன்னா ம‌கிழ்வாய் விளையாடினோம் என்று சொல்லுவ‌தா / 

“பசங்க” என்ற பேச்சுத்தமிழ் சொல் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது தமிழ் சொல்லாக தெரியவில்லை. இதற்கு பதிலாக இலங்கை தமிழர் பயன்படுத்துவது “பொடியன்கள்” அல்லது “பெடியள்”, ஆனால் இவையும் தமிழ் சொற்களல்ல. இவை சிங்களத்தில் இருந்து மருவிய சொற்களாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இவை பாவனையில் இல்லை. விடுதலை போராட்ட காலத்தில் போராளிகளை மக்கள் வாஞ்சையுடன் குறிப்பிட பயன்படுத்திய சொல் “எங்கட பெடியள்”. இதற்கு பொருத்தமன சரியான தமிழ் பதம் “பிள்ளைகள்”. இதுவும் இலங்கையில் வழக்கில் இருந்த பதம். ஆனால், பேச்சுவழக்கில், “பிள்ளை” என்ற சொல் சிறுவரையும், பெண்களையும் சுட்டும் சொல்லாகவே இருக்கிறது. இளைஞனை “பெடியன்” என்றே சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சாமானியன் said:

நமது மொழியும் இனமும் மிக மிக பழைமையானவற்றுள் ஒன்று . நீங்கள் எமது பாரம்பரிய முறைமை என்று சொல்லும் விடயங்கள் நடைமுறைக்கு வரமுதல் ( என்ன ஒரு 1000  அல்லது 2000 ஆண்டுகாலம் முன்னர் ) இருந்த நடை முறைகளும் எமது பாரம்பரியமாக இருந்து தான் போயின . சமகாலங்களில் எம்மவரிடையேயே நடந்தேறிய புலம்பெயர்வு கனதி மிக்கது .. மாற்றங்களை தன்னகத்தே கொண்டு வந்து சேர்க்கும் தன்மையது ..
அண்மையில் எமது மூத்த புதல்வியின் திருமணத்தின் போது, கன்னிகாதானம் எனும் நடைமுறையை செய்வதில் எமது இளைய புதல்விக்கு உடன்பாடில்லை . அப்படி எனின்   மணமகனை தானம் செய்வதாகவும் ஒரு சடங்கு தேவையில்லையா என்பது அவளின் வாதம் ; புது தலை முறை - புதிய சிந்தனைகள் - வளர்ச்சியின் படிகள் .. நல்லவை எடுப்போம் , அல்லவை தவிர்ப்போம் , வளர்ச்சி காண்போம் ...   

கன்னிகாதானம் தமிழர் பரம்பரியங்களுக்குள் வராது அல்லவா?
தமிழ் முறைப்படி நடக்கும் திருமண நிகழ்வுகள் எல்லாவற்றையும் விட மிகுந்த சந்தோசத்தையும் இன்பத்தையும் தரும்.

உங்கள் கருத்தில் குறுக்கீடு செய்தமைக்கு மன்னிக்கவும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

“பசங்க” என்ற பேச்சுத்தமிழ் சொல் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது தமிழ் சொல்லாக தெரியவில்லை. இதற்கு பதிலாக இலங்கை தமிழர் பயன்படுத்துவது “பொடியன்கள்” அல்லது “பெடியள்”, ஆனால் இவையும் தமிழ் சொற்களல்ல. இவை சிங்களத்தில் இருந்து மருவிய சொற்களாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இவை பாவனையில் இல்லை. விடுதலை போராட்ட காலத்தில் போராளிகளை மக்கள் வாஞ்சையுடன் குறிப்பிட பயன்படுத்திய சொல் “எங்கட பெடியள்”. இதற்கு பொருத்தமன சரியான தமிழ் பதம் “பிள்ளைகள்”. இதுவும் இலங்கையில் வழக்கில் இருந்த பதம். ஆனால், பேச்சுவழக்கில், “பிள்ளை” என்ற சொல் சிறுவரையும், பெண்களையும் சுட்டும் சொல்லாகவே இருக்கிறது. இளைஞனை “பெடியன்” என்றே சொல்வார்கள்.

ந‌ன்றி யூட் ஜ‌யா , உங்கை மாதிரி பெரிய‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து த‌மிழ் தெரிந்து கொள்ள‌ நிறைய‌ இருக்கு , 
மீண்டும் ந‌ன்றிக‌ள் ப‌ல‌ ஜ‌யா 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் அக்கா , உங்க‌ பெரிய‌ அன்பான‌ விள‌க்க‌த்துக்கு ந‌ன்றி 🙏

உங்க‌ளின் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌டுகிறேன் , உங்க‌ள் பிள்ளைக‌ளுக்கு எங்க‌ள் க‌லாச்சார‌த்த‌ ப‌ற்றி சொல்லி கொடுத்தத‌ நினைக்க‌ ம‌கிழ்ச்சியாய் இருக்கு 🙏 ,

டென்மார்க்கில் சின்ன‌னில் என்னோட‌ ஒன்னா விளையாடின‌ பிள்ளைக‌ள் த‌ம‌க்கை ம‌ற்றும் த‌ங்கைச்சி  , இங்க‌த்த‌ வெள்ளை இன‌த்த‌வ‌ர‌ திரும‌ண‌ம்  செய்து இருக்கின‌ம் , 
அந்த‌ பிள்ளைக‌ளின் பெற்றோர் அவையை ந‌ல்ல‌ மாதிரி தான் வ‌ள‌த்து விட்ட‌வை ,  அவையின் மூத்த‌ ம‌க‌ள் த‌மிழ் பெடிய‌ன‌ விரும்ப‌ உன‌க்கு இந்த‌ வ‌ய‌திலே காத‌ல் தேவையா என்று த‌க‌ப்ப‌ன் அடிக்க‌ அந்த‌ பிள்ளை வீட்டை விட்டு போய் இப்போ இங்க‌த்த‌ வெள்ளைக் கார‌ன் கூட வாழுகிறா ‌  , அழ‌கான‌ குன‌மான‌ பிள்ளைக‌ளை பெத்து அதுங்க‌ளின் எதிர் கால‌த்த‌ பெற்றோர்  ப‌ழுதாக்கிட்டின‌ம் , அந்த‌ பிள்ளை விரும்பின‌ த‌மிழ் பெடிய‌னையே செய்து வைத்து இருந்தா ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ந்து இருக்காது ,  அக்காவை பார்த்து த‌ங்கைச்சியும் நேர்வே நாட்டு வெள்ளைக் கார‌னை திரும‌ண‌ம் செய்து இருக்கிறா 🤔☺ ,  


 

தான் செய்தது பிழை என்று தகப்பனுக்கு இப்பதான் விளங்கி இருக்கும். சில தாய் தகப்பன்மார் தாங்கள் செய்தவற்றை பிள்ளைகள் செய்ய விடமாட்டார்கள். சிலர் தமக்கு கிடைக்காதவை நடக்காதவை எல்லாவற்றையும் பிள்ளைகள் மீது திணிப்பார்கள். இது மிகவும் தவறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

தான் செய்தது பிழை என்று தகப்பனுக்கு இப்பதான் விளங்கி இருக்கும். சில தாய் தகப்பன்மார் தாங்கள் செய்தவற்றை பிள்ளைகள் செய்ய விடமாட்டார்கள். சிலர் தமக்கு கிடைக்காதவை நடக்காதவை எல்லாவற்றையும் பிள்ளைகள் மீது திணிப்பார்கள். இது மிகவும் தவறு. 

எல்லாம் த‌க‌ப்ப‌ன்  செய்த‌ த‌ப்பு , பிள்ளையின் காத‌ல் பிடிக்காட்டி அத‌ அவ‌ர் வேறு வித‌மாய் கையாண்டு இருக்க‌லாம் , அத‌ விட்டுட்டு பெத்த‌ பிள்ளைக்கு முர‌ட்டு த‌ன‌மாய் அடிச்சா அதுங்க‌ள் ம‌ன‌ம் குழ‌ம்பி போயிடுங்க‌ள் அக்கா ,

என‌க்கு க‌வ‌லை என்ன‌ என்றால் அந்த‌ பிள்ளைக‌ள் இப்ப‌ ம‌து அருந்தின‌ம் , வெள்ளைக் கார‌னை திரும‌ண‌ம் செய்தா அவ‌ன் அவ‌னின் க‌லாச்சார‌த்த‌ தான் ம‌னைவி பிள்ளைக‌ளுக்கு சொல்லி குடுப்பான் ,

த‌ப்பு த‌வ‌றி உங்க‌ட‌ பிள்ளைக‌ளை வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ள் கூட‌ அதிக‌ம் ப‌ழ‌க‌ விட‌ வேண்டாம் அக்கா , முடிந்த‌வ‌ரை உங்க‌ளின் க‌ட்டு பாட்டுக்குள் அன்பை காட்டி வைத்து இருந்து விட்டு பிள்ளைக‌ளுக்கு க‌லியாண‌ வ‌ய‌து வ‌ர‌ ந‌ல்ல‌ த‌மிழ் பிள்ளைக‌ளை ஊரில் அல்ல‌து அவுஸ்ரேலியாவில் பார்த்து செய்து வையுங்கோ , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

அவுஸ்ரேலியாவில் பார்த்து செய்து வையுங்கோ , 

தாங்கள் அவுஸ்ரேலியாவை தேர்ந்தெடுத்ததிற்கு காரணங்கள் ஏதாவது இருக்கின்றதா? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

தாங்கள் அவுஸ்ரேலியாவை தேர்ந்தெடுத்ததிற்கு காரணங்கள் ஏதாவது இருக்கின்றதா? 😁

நிமினி அக்கா வ‌சிக்கும் நாடு அவுஸ் தானே தாத்தா அது தான் ஊரையும் எழுதி அவுஸ்ரேலியாவையும் எழுதினேன் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

நிமினி அக்கா வ‌சிக்கும் நாடு அவுஸ் தானே தாத்தா அது தான் ஊரையும் எழுதி அவுஸ்ரேலியாவையும் எழுதினேன் , 

Prabhudeva Tamil GIF - Prabhudeva Tamil Surprised - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கலாச்சார மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது அப்படியான  மாற்றங்கள் வந்தாலும்  ஈழத்தமிழர்களின் கலாச்சாரம் இரண்டாம் மூன்றாம் தலைமுறை தாண்டியும்
காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது
விருந்தோம்பல் என்பது தமிழர்களின் பண்பாடு
பணி நிமிர்த்தம் அதன் பழுக்கள் நேரக்குறைவு
என்ற காரணங்களையும் தாண்டி புலம்பெயர்ந்த தமிழர்கள் விருந்தோம்பலை விரும்புகின்றனர்

திருமணங்கள் சடங்குகள் என்பன எப்படியும் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டிருக்கும்
என்றாலும் இது தமிழர்கள் சடங்குகள் என்ற அடையாளம் எப்போதும் அங்கு
நிலைகொண்டிருக்கும் .அதை மட்டும் எப்படியும் மாற்றமுடியாது

உண்மை தான் வாத்தியார் அண்ணா ,

எம்ம‌வ‌ர் வேலைக‌ள் ,   வேலை முடிந்த‌தும் வீட்டை வ‌ந்து ச‌மைத்து சாப்பிட்டு தூங்க‌ போயிடுவின‌ம் , 
விடுமுறை நாட்க‌ளில் தான் பிள்ளைக‌ளுட‌ன் அதிக‌ நேர‌ம் ஒதுக்குவின‌ம் ,

உந்த‌ நாச‌மாய் போன‌ பிர‌ச்ச‌னை வ‌ராட்டி எம் க‌லாச்சார‌ம் 100வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌த‌ போல‌ இருந்து இருக்கும் , 

புல‌ம்பெய‌ர் நாட்டில்  இன்னும் 20வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா த‌மிழ் மொழி அர‌வாசி அழிந்திடும் , இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் , அவ‌ர்க‌ள் வ‌சிக்கும் நாட்டு மொழியில் தான் க‌தைப்பின‌ம் எழுதுவின‌ம் ,


எப்ப‌டி தான் யோசிச்சாலும் இதில் இருந்து அடுத்த‌ இளையத‌லைமுறை பிள்ளைக‌ளை மீட் எடுப்ப‌து சிர‌ம‌ம் , 
கால‌ங்க‌ள் போக‌ இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் சொல்லுவின‌ம் என்ர‌ அம்மாட‌ அம்மா சிறில‌ங்கா ஆனால் நாங்க‌ள் பிற‌ந்த‌து இங்கை , இந்த‌ நிலையில் தான் பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் இருக்கும் , 

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு இந்த‌க் கால‌ க‌ட்ட‌ம் மிக‌வும் இக்க‌ட்டான‌ கால‌ க‌ட்ட‌ம் , ஊரில் எம்ம‌வ‌ர்க‌ள் இருந்த‌ போது எல்லாத்தையும் பார்த்தார்க‌ள் , 2009ம் ஆண்டு பிடிச்ச‌ ச‌ணிய‌ன் இன்னும் விட்ட‌ பாடு இல்ல‌ ,  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் அவர்களோடு பழக வேண்டாம், இவர்களோடு பழக வேண்டாம் என்று சொல்வது கடினம் பையன்.பள்ளிக் கூடங்கள்.மற்றும் தொழில் சார்ந்த இடங்களில் பல இனத்த வருடனும் ஒத்துழைத்து போக வேண்டிய சூழ்நிலை. அப்படியான தருணங்களில் தான் மிக கூடுதலாக தவறு நடக்கிறது.. 

 

இங்கு எல்லாம் பார்த்தால் தந்தைமார் ஒரு பக்கம் தண்ணீரில் மிதப்பார்கள் , மறு பக்கம் பார்த்தால் சில அம்மாக்கள் போத்தலோடு இல்லை என்றால் கிளாசோடு பார்ட்டிகளில் போடும் பாட்டுகளுக்கு  வேப்பிலை இல்லாத குறையாகத் தான் நிப்பார்கள்..இது ஒன்றும் பொய் புரட்டு இல்ல இப்படி தான் இப்போ.என் கண்டால் காட்சிகள்.

இவர்களேபிள்ளைகள் தவறாக போவதற்கு உதாரணமாக இருக்கும் போது பிள்ளைகளையோ மற்றும் யாரையும் தவறாக எண்ண முடியாத நிலை.நன்றி பையா..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.