Jump to content

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.

எம்மவர் வாழும் புலம்பெயர் நாடுகளில் நான் அவதானித்த வரையில் சைவ கோவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகள் என கவனத்தை  செலுத்தும் பெற்றோர்களின் பிள்ளைகள் நூற்றுக்கு எழுபது வீதமாவது தமிழர் கலாச்சாரத்துடனும் பண்பாட்டுடனும் வாழ்கின்றார்கள். சில பிள்ளைகள் சில இடங்களில் கிர்தா விளையாட்டுக்கள் விட்டாலும் தமிழர் எனும் குடையில் பண்பாட்டுடனேயே இருக்கின்றார்கள்.

※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின்பு
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்க கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர்.   

தாத்தா

முத‌லாவ‌து என‌து  பார்வையில் புல‌ம்பெய‌ர் பிள்ளைக‌ள் கெட்டு போவ‌து , வெள்ளை இன‌த்த‌வ‌ரின் பிள்ளைக‌ளை பார்த்து ,

இர‌ண்டாவ‌து ஒரு கொச‌ப்பு கூட‌ ந‌ண்ப‌ரா இருந்தா அந்த‌ கொச‌ப்பின் எல்லா ப‌ழ‌க்க‌த்தையும் அவ‌னுட‌ன் ப‌ழ‌கும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் தானாக‌ தொத்தும் ,

மூன்றாவ‌து

ந‌ல்ல‌ ந‌ண்ப‌ன் ந‌ல்ல‌ தோழி கூட‌ சிறு வ‌ய‌து முத‌லே ந‌ல்ல‌ ந‌ட்பாய் இருந்து ஒழுங்காய் வ‌ள‌ந்தா பின்னாளில் அந்த‌ பிள்ளைக‌ள் த‌ப்பான‌ வ‌ழிக்கு ஒரு போதும் போக‌ மாட்டார்க‌ள் ,

வெள்ளை இன‌த்த‌வ‌னின் பிள்ளைக‌ள் 10 வ‌ய‌திலே கிஸ் அடிக்குங்க‌ள் , அதுங்க‌ கூட‌ ப‌டிக்கிற‌ புல‌ம்பெய‌ர் நாட்டில் வாழும் பிள்ளைங்க‌ள் அதுங்க‌ளை பார்த்து 15வ‌ய‌திலே காத‌ல் என்று சொல்லி கில‌ம்பிடுவின‌ம் , அப்ப‌டியான‌ காத‌ல் நீண்ட வ‌ருட‌ம் நீடிக்காது , 

புல‌ம்பெய‌ர் நாட்டு பெற்றோரும் எப்ப‌ பார்த்தாலும் வேலை வேலை என்றால் பிள்ளைக‌ள் வீட்டில் இருந்து கொண்டே அதுங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு ஆட்ட‌ம் போடுங்க‌ள் 

சிறு வ‌ய‌தில் இருந்தே எம் காலாச்சார‌ம் எம் மொழி த‌மிழ‌ர்க‌ளுடைய‌ பார‌ம்ப‌ரிய‌முறைக‌ளை சொல்லிக் கொடுத்து வ‌ள‌த்து இருக்க‌னும்  பிள்ளைக‌ளுக்கு , மேல‌ ஒரு க‌ள‌ உற‌வு எழுதி இருக்கிறார் , சில‌ த‌மிழ் ஆட்க‌ள் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ள்  வேறு மொழி க‌தைப்ப‌த‌ பெருமையா நினைக்கின‌மாம் , உப்ப‌டியான‌ க‌ழுச‌றைய‌ல‌ என்ன‌ செய்ய‌லாம் 😉

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

அப்படியானால் தமிழ் கடவுள் முருகன் சொல்லி தந்த‍து நாய்கலாச்சாரமா?  அந்த கோவிலுக்கு போய் தான் கலாச்சாரத்தை பாதுகாக்கவேண்டும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள். கிருஷ்ன பரமாத்மா  பல கோபியரோடு கும்மாளம் கொட்டியது நாய் கலாச்சாரமா? பண்டை தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பல மனைவியர் இருந்தனர் அவர்கள் எல்லாம் நாய்கலாச்சாரத்திலா இருந்தார்கள்? 

மகா பாரத‍த்தில் திளெபதை 5 கணவர்களை  அதை விட வேறு பலருக்கு குழந்தை பெற்றாள் என்று முன்மாதிரி காட்டப்படுகிறதே இந்து கலாச்சாரத்தில் அது நாய்கலாச்சாரமா?  
 

புராணங்கள், இதிகாசங்கள்,கதைகள்,திரைப்படங்கள் எல்லாத்திலையும் நல்லது கெட்டதை  சொல்வார்கள்.அதிலை நல்லதை/ எமக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு கெட்டதை விட்டுடடோணும்.நீங்கள் எல்லா திரியிலையும் கள்ளுக்கொட்டில்லை கள்ளு வடிக்க பாவிக்கிற அந்த அது மாதிரி நல்லதெல்லாத்தையும் விட்டுட்டு கெட்டதை மட்டும் தலையிலை வைச்சுக்கொண்டு கூத்தாடுறீங்க.

எப்படி வாழ வேண்டும். எப்படி வாழக்கூடாது என்பதைத்தான் பழைய கதைகளும் இதிகாசங்களும் கூறுகின்றன.கண்னப்ப நாயனார் கதையிலும் ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. அதில் சொல்லப்படும் விடயத்தை கவனிக்கணுமே தவிர கண்ணை குத்துவது படு முட்டாள்த்தனம்.

அரசர்கள் பல மனைவிகளை வைத்திருந்தார்கள். ஒரு மாதம் பழகிப்பார்த்து கழட்டி விடவில்லை.சாகும் வரைக்கும் வாழ்வாதாரம் கொடுத்தார்கள். நீங்கள் பூ,புஸ்பம் போல் மதிக்கும்  நாய் மூத்தால் தாய்க்கும் மாப்பிளை கலாச்சாரம் அவர்களிடம் இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஒரு கதையில் படித்தது..

“ஒரு நாய் ஒருநாளைக்கு எப்டியும் பத்தாயிரம் இருபதாயிரம் முத்தம் குடுத்திரும். அது பாக்கிற எல்லாத்தையும் முத்தம் குடுத்திட்டே இருக்கு. ஒரு விஷயம் என்னன்னு பாக்கணும்னா முத்தம். அது பிடிக்கலைன்னா இன்னொரு முத்தம். பிடிச்சிருந்தா முத்தத்தோட முத்தம்… நாயோட வாழ்க்கையே முத்தம் குடுக்கிறதுதான்… காதலை நாய் மாதிரி தெரிஞ்ச எந்த தெய்வம் இருக்கு? நாய் காதலிலே அப்டியே திளைச்சிட்டிருக்குல்ல?”

“நீ நாய்க்க வாலை பாத்திருக்கியா? ஆடிக்கிட்டே இருக்கும். மனசிலே அன்பை வச்சுகிட்டு அதை காட்டத்தெரியாம இருக்கானுக மனுஷனுங்க. நாய் அப்டி இல்லை. மனசிலே அன்பிருந்தா வால் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிரும்… அன்பு அப்டியே துள்ளிகிட்டே இருக்கும்… அத்தனை அன்பை வேற எங்க அப்டி கண்ணாலே பாத்துக்கிட முடியும்?”

“நாய்க்குள்ள காமம் வேற எந்த உசிருக்கு இருக்கு? மனுசனெல்லாம் எங்க காமத்தை அறிஞ்சிருக்கான்? பாதிபேருக்கு பயம், மிச்சபேருக்கு வெக்கம். ரெண்டும் இல்லாதவனுக்கு சுயநலம். தோசைக்கு மாவூத்துதது மாதிரி ஊத்திட்டு போறான்… எங்கிட்டு நெறைய? அவளுக்கு நெறைஞ்சாத்தானே அவனுக்கு நெறையும்? நாயை பாரு,நாய் கொளுவிக்கிட்டுதுன்னா முச்சந்தியானாலும் மெய்மறந்து அப்டியே நின்னுட்டிருக்கும். அப்டியே ஓடும் சாடும். நிறைஞ்ச பிறவுதான் விடும்…”

வணக்கம் மிண்டர்! :cool:

 இப்பவெல்லாம் நாயை மாதிரித்தான் எங்கடை ஒரு சில இளம் சமுதாயத்தினர் வாழுனம்.நேர காலம் தெரியாது.எது எங்கை எப்பிடி இருக்கோணும் எண்டு தெரியாது. ஆரை எப்ப மடக்கலாம். எண்ட ஒரே நாய்ச்சிந்தனை தான்.சபை நாகரீகம் தெரியாது.கண்ட இடத்திலை கையை வைக்கிறது.நோண்டுறது.நடு ரோட்டிலை நிண்டு கிஸ் அடிக்கிறது. நடு ரோட்டிலை நிண்டு தேய்படுறது.

நாய் நன்றியுள்ள மிருகம். அதைப்பற்றி சொல்ல ஆயிரம் விடயங்கள். இருக்க. சொறி நாய்கள் செய்யும் கேடுகெட்ட செயலை வெட்டி ஒட்டி அதை ஒரு உதாரணமாக அழகு பார்க்கின்றீர்கள்.😜

Link to comment
Share on other sites

10 minutes ago, குமாரசாமி said:

புராணங்கள், இதிகாசங்கள்,கதைகள்,திரைப்படங்கள் எல்லாத்திலையும் நல்லது கெட்டதை  சொல்வார்கள்.அதிலை நல்லதை/ எமக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு கெட்டதை விட்டுடடோணும்.நீங்கள் எல்லா திரியிலையும் கள்ளுக்கொட்டில்லை கள்ளு வடிக்க பாவிக்கிற அந்த அது மாதிரி நல்லதெல்லாத்தையும் விட்டுட்டு கெட்டதை மட்டும் தலையிலை வைச்சுக்கொண்டு கூத்தாடுறீங்க.

எப்படி வாழ வேண்டும். எப்படி வாழக்கூடாது என்பதைத்தான் பழைய கதைகளும் இதிகாசங்களும் கூறுகின்றன.கண்னப்ப நாயனார் கதையிலும் ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. அதில் சொல்லப்படும் விடயத்தை கவனிக்கணுமே தவிர கண்ணை குத்துவது படு முட்டாள்த்தனம்.

அரசர்கள் பல மனைவிகளை வைத்திருந்தார்கள். ஒரு மாதம் பழகிப்பார்த்து கழட்டி விடவில்லை.சாகும் வரைக்கும் வாழ்வாதாரம் கொடுத்தார்கள். நீங்கள் பூ,புஸ்பம் போல் மதிக்கும்  நாய் மூத்தால் தாய்க்கும் மாப்பிளை கலாச்சாரம் அவர்களிடம் இருக்கவில்லை.

அடுத்தத நாட்டில் அகதியாக ஒண்ட வந்ந நீங்கள் மட்டும் அடுத்தவன் கலாச்சாரத்தில் உள்ள எவ்வளவோ நல்ல பண்புகளை பார்க்காமல்  நீங்கள் சொல்லஅதே கள்ள வடிக்கும் பன்னாடை போல் நீங்கள் பிழைப்பு தேட வந்த நாட்டு மக்களை பார்த்து நாய் கலாச்சாரம் ஒரு பொது தளத்தில் திட்டினால் உங்கள் சொந்த    கலாச்சசாரத்தின் உள்ளகேவலமான பல ஓட்டைகளும்  வெளியே வர தான் செய்யும்.  

என்னைப்பொறுத்தவரை இந்த உலகி்ல்  வாழும் ஒருவன்  "தன் கலாச்சாரம் தான் சிறந்த‍து அடுத்தவன் கலாச்சாரம் நாய்கலாச்சாரம்" என்று கூறுகிறானோ அவன்தான் இந்த உலகின் வாழும் மிக கேவலமான கலாச்சாரத்தின் சொந்தகாரன் என்பது தான் பொருள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

உங்களைப்  போல எப்போது  பார்தாலும்  தாங்கள் உசத்தி என்று தமக்மகுள்ளே மட்டும் மனப்பால் குடித்துக்கொண்டு அடுத்தவனை மட்டமானவன் என்று கேலி பண்ணும் மனப்பாங்கால் தான் தமிழருக்கு சொந்த நாடு கூட இல்லாமல் உலகெங்கும் பிச்சை எடுக்கவேண்டிய நிலை.  ஒண்ட வந்த இடத்து மக்களின் கலாச்சாரத்தையே திட்டி தீர்ககும் கேவலமான கலாச்சாரம்

என்ரை கலாச்சாரம் என்ரை மொழிய நான் உசத்தியா சொல்லாமல் வேறை ஆர் சொல்லவேணும்?

7 minutes ago, tulpen said:

அடுத்தத நாட்டில் அகதியாக ஒண்ட வந்ந நீங்கள் மட்டும் அடுத்தவன் கலாச்சாரத்தில் உள்ள எவ்வளவோ நல்ல பண்புகளை பார்க்காமல்  நீங்கள் சொல்லஅதே கள்ள வடிக்கும் பன்னாடை போல் நீங்கள் பிழைப்பு தேட வந்த நாட்டு மக்களை பார்த்து நாய் கலாச்சாரம் ஒரு பொது தளத்தில் திட்டினால் உங்கள் சொந்த    கலாச்சசாரத்தின் உள்ளகேவலமான பல ஓட்டைகளும்  வெளியே வர தான் செய்யும்.  

என்னைப்பொறுத்தவரை இந்த உலகி்ல்  வாழும் ஒருவன்  "தன் கலாச்சாரம் தான் சிறந்த‍து அடுத்தவன் கலாச்சாரம் நாய்கலாச்சாரம்" என்று கூறுகிறானோ அவன்தான் இந்த உலகின் வாழும் மிக கேவலமான கலாச்சாரத்தின் சொந்தகாரன் என்பது தான் பொருள். 

 

10 hours ago, குமாரசாமி said:

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் எமது கலாச்சாரம். திருமணம் எனும் பெயரில் பலருடன் கூத்தடிக்கும் கலாச்சாரத்தை நாய் கலாச்சாரம் என்று கூறாமல் அதி உன்னத வரலாற்று நிகழ்வு என்றா கூற முடியும்.
 வயது முதிர்ந்த ஐரோப்பியர்களே தமது இளம் சமுதாயத்தின் கலாச்சார நடவடிக்கைகளை பார்த்து வேதனையுடன் புலம்புகின்றார்கள்.
இவருக்கு பழையன கழிதலும் புதியன புகுதலுமாம். ஒரு வேளை காருக்கு உதிரிப்பாகங்கள் மாற்றுவதை சொல்கின்றாரோ???? 😜

 

Link to comment
Share on other sites

5 minutes ago, குமாரசாமி said:

என்ரை கலாச்சாரம் என்ரை மொழிய நான் உசத்தியா சொல்லாமல் வேறை ஆர் சொல்லவேணும்?

 

 

எனது கலாசாரத்தை நானே உசத்தியா சொல்லுவது வீண் வெட்டி பெருமை மட்டுமே. அதை மற்றய இனத்தவர்கள் எமக்கு சொல்லும் படி நடந்து கொள்ள வேண்டும். அதுவே  உண்மையான பெருமை.

வயது முதிர்ந்தாலே இளசுகளை பார்த்து புறுபுறப்பது உலக வழமை . அது உலகில் எல்லா இடத்திலும் இருக்கும் ஒரு வகை மனநோய்.  அதற்கு வெள்ளைகார‍ரும்  விதிவிலக்கல்ல.  நீங்கள் கூறிய அந்த வயது முதிர்ந்த வெள்ளைகார‍ர் இளமையாக இருக்கும் போது அவரை விட வயது முதிர்ந்தவர்கள் அவரைப்பார்த்து இவ்வாறு புறுபுறுத்திருப்பார்கள்.  தனது இளமை போய்விட்டதே என்ற ஆற்றாமையால் வரும் புறுபுறுப்பு அது. உங்களுக்கும் அது இருக்கிறது. எனக்கும் அது இருக்கிறது. ஆனால் அதை உலகம் கணக்கெடுக்கப்போவதில்லை. 

குமாரசாமி, 

காலம் மாற மாற உலக கலாச்சாரம் (Civilization)  மாற்றம் காண்பது உலக இயல்பு. இதில் உங்கள் விருப்பமோ எனது விருப்பமோ முக்கியமில்லை. நீங்களோ நானா அதை ஏற்றுகொள்ளாமல் விட்டாலும் அது மாறி தான் தீரும். அதறகாக நான் தான் ஏதோ எல்லாவற்றையும் மாற்றுகிறேன் என்று நீங்கள் என்னை திட்டுவதில் எந்த பயனும் இல்லை. உலக ஜதார்த்தங்களை ஏற்றுகொண்டால்  மிகுதி வாழ்க்கையை அமைதியாக மகிழ்வாக கழிக்கலாம். இல்லை என்றால் புறுபுறுத்த்கொண்டே நாம் போய் சேரவேண்டியது தான். 😂

  • We can ignore reality, but we cannot ignore the consequences of ignoring reality
  • நாம் யதார்த்தத்தை புறக்கணிக்க முடியும், ஆனால் யதார்த்தத்தை புறக்கணிப்பதன் விளைவுகளை நாம் புறக்கணிக்க முடியாது.

ஜதாரத்தத்தை அன்று  புறக்கணித்ததால் வந்த விளைவுகளை புறக்கணிக்க முடியாமல் இன்று தமிழ் மக்கள்  கஷ்ரபடுவதை நாம் இப்போது பார்க்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

தாத்தா

முத‌லாவ‌து என‌து  பார்வையில் புல‌ம்பெய‌ர் பிள்ளைக‌ள் கெட்டு போவ‌து , வெள்ளை இன‌த்த‌வ‌ரின் பிள்ளைக‌ளை பார்த்து ,

இர‌ண்டாவ‌து ஒரு கொச‌ப்பு கூட‌ ந‌ண்ப‌ரா இருந்தா அந்த‌ கொச‌ப்பின் எல்லா ப‌ழ‌க்க‌த்தையும் அவ‌னுட‌ன் ப‌ழ‌கும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் தானாக‌ தொத்தும் ,

மூன்றாவ‌து

ந‌ல்ல‌ ந‌ண்ப‌ன் ந‌ல்ல‌ தோழி கூட‌ சிறு வ‌ய‌து முத‌லே ந‌ல்ல‌ ந‌ட்பாய் இருந்து ஒழுங்காய் வ‌ள‌ந்தா பின்னாளில் அந்த‌ பிள்ளைக‌ள் த‌ப்பான‌ வ‌ழிக்கு ஒரு போதும் போக‌ மாட்டார்க‌ள் ,

வெள்ளை இன‌த்த‌வ‌னின் பிள்ளைக‌ள் 10 வ‌ய‌திலே கிஸ் அடிக்குங்க‌ள் , அதுங்க‌ கூட‌ ப‌டிக்கிற‌ புல‌ம்பெய‌ர் நாட்டில் வாழும் பிள்ளைங்க‌ள் அதுங்க‌ளை பார்த்து 15வ‌ய‌திலே காத‌ல் என்று சொல்லி கில‌ம்பிடுவின‌ம் , அப்ப‌டியான‌ காத‌ல் நீண்ட வ‌ருட‌ம் நீடிக்காது , 

புல‌ம்பெய‌ர் நாட்டு பெற்றோரும் எப்ப‌ பார்த்தாலும் வேலை வேலை என்றால் பிள்ளைக‌ள் வீட்டில் இருந்து கொண்டே அதுங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு ஆட்ட‌ம் போடுங்க‌ள் 

சிறு வ‌ய‌தில் இருந்தே எம் காலாச்சார‌ம் எம் மொழி த‌மிழ‌ர்க‌ளுடைய‌ பார‌ம்ப‌ரிய‌முறைக‌ளை சொல்லிக் கொடுத்து வ‌ள‌த்து இருக்க‌னும்  பிள்ளைக‌ளுக்கு , மேல‌ ஒரு க‌ள‌ உற‌வு எழுதி இருக்கிறார் , சில‌ த‌மிழ் ஆட்க‌ள் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ள்  வேறு மொழி க‌தைப்ப‌த‌ பெருமையா நினைக்கின‌மாம் , உப்ப‌டியான‌ க‌ழுச‌றைய‌ல‌ என்ன‌ செய்ய‌லாம் 😉

மிகச் சரியாக சொன்னீர்கள், அதனால் நான் வீட்டை படசாலைக்குமுன்னால் வாங்கி, அவர்களின் நண்பர்கள் அனைவரையும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வாருங்கள், வந்து எவ்வளவு நேரமானலும் இருந்து கதையுங்கள் படியுங்கள் என சொல்லியுள்ளேன்.

அவர்களின் நண்பர்களுக்கும் சமைத்து கொடுப்போம்(😂 - 5stars தருவார்கள் வடை, தக்காளி சாதம், முறுக்கு...) , அதனால் அவர்களின் நண்பர்களை பற்றி எம்மால் அறிய முடியும், அத்துடன் பிள்ளைகளுக்கும் ஒரு சுதந்திரம்,

அவர்கள் தங்கள் நண்பர்களுடன் கடைக்கு சினிமாக்கு போகிறோம் என சொன்னால் யாருடன் போகின்றீர்கள் என கேட்டுதான் விடுவோம், எங்களுக்கு அவர்களின் நண்பர்கள் எல்லோரையும் தெரிந்து வைத்திருப்பதால் பயப்படுவதில்லை, என்றாலும் வெளியில் போய் வரும் நேரமெல்லாம் கேட்டுதான் அனுப்புவோம், அத்துடன் போனவுடன் & வெளிக்கிடும் போது whatsapp இல் செய்தியும் அனுப்பிவிடுவார்கள் FAMILY Group க்கு, இது ஒரு பாதுகாப்பிற்கே. கட்டி வைத்திருக்க முடியா இங்கு, ஆனா கவனமாக வளர்க்கலாம், நல்ல அறிவுரைகளை சொல்லி.

ஒவ்வொரு நாளும் வீடு திருவிழா மாதிரிதான் , ஒன்று மனைவியிடம் படிக்க பல பிள்ளைகள் வருவார்கள், அவர்களுடன் எங்கள் பிள்ளைகளும் நட்பாக பழகுவார்கள், அதனால் பல தமிழ், தெலுங்கு, மலையாள பெற்றோர் & பிள்ளைகளுடன் பழகும் வாய்ப்பு அதிகம், அதனால் வெளியில் சேட்டை விட முடியாது, தகவல் உடன் வரும்  😂.

நமது கலாச்சாரத்துடன் போய்கிட்டிருக்கின்றார்கள், கடந்த 10 வருடங்களாக சாய்பாபா SSE வகுப்புகளிற்கு போய்கிட்டு இருக்கின்றார்கள், அதனால பல நல்ல விடயங்களை கற்றுள்ளார்கள்.

நீங்கள் சாய்பாபா பக்தராக இருக்கவேண்டுமென்றில்லை (எனக்கு நம்பிக்கை இல்லை இவரில்😡) SSE வகுப்பிற்கு விடுங்கள், நல்ல பழக்க வழக்கம் வரும், பலருடன் சேர்ந்து பழகும் வாய்ப்பும் கிட்டும். அத்துடன் மனித நேயம், தொண்டு, இப்படி பல அங்கு கற்கலாம். உங்கள் விருப்பம். 🙏🙏🙏 (துல்பன் - வந்து கேட்கப்படாது மூட நம்பிக்கையை வளர்கின்றேன் என😎)

நான் என் நண்பர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களும் அங்கு அனுப்பினவர்கள். சிலர் முழுநேர பக்தர்கள் ஆகிவிட்டார்கள்😂

32 minutes ago, tulpen said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, உடையார் said:

மிகச் சரியாக சொன்னீர்கள், அதனால் நான் வீட்டை படசாலைக்குமுன்னால் வாங்கி, அவர்களின் நண்பர்கள் அனைவரையும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வாருங்கள், வந்து எவ்வளவு நேரமானலும் இருந்து கதையுங்கள் படியுங்கள் என சொல்லியுள்ளேன்.

அவர்களின் நண்பர்களுக்கும் சமைத்து கொடுப்போம்(😂 - 5stars தருவார்கள் வடை, தக்காளி சாதம், முறுக்கு...) , அதனால் அவர்களின் நண்பர்களை பற்றி எம்மால் அறிய முடியும், அத்துடன் பிள்ளைகளுக்கும் ஒரு சுதந்திரம்,

அவர்கள் தங்கள் நண்பர்களுடன் கடைக்கு சினிமாக்கு போகிறோம் என சொன்னால் யாருடன் போகின்றீர்கள் என கேட்டுதான் விடுவோம், எங்களுக்கு அவர்களின் நண்பர்கள் எல்லோரையும் தெரிந்து வைத்திருப்பதால் பயப்படுவதில்லை, என்றாலும் வெளியில் போய் வரும் நேரமெல்லாம் கேட்டுதான் அனுப்புவோம், அத்துடன் போனவுடன் & வெளிக்கிடும் போது whatsapp இல் செய்தியும் அனுப்பிவிடுவார்கள் FAMILY Group க்கு, இது ஒரு பாதுகாப்பிற்கே. கட்டி வைத்திருக்க முடியா இங்கு, ஆனா கவனமாக வளர்க்கலாம், நல்ல அறிவுரைகளை சொல்லி.

ஒவ்வொரு நாளும் வீடு திருவிழா மாதிரிதான் , ஒன்று மனைவியிடம் படிக்க பல பிள்ளைகள் வருவார்கள், அவர்களுடன் எங்கள் பிள்ளைகளும் நட்பாக பழகுவார்கள், அதனால் பல தமிழ், தெலுங்கு, மலையாள பெற்றோர் & பிள்ளைகளுடன் பழகும் வாய்ப்பு அதிகம், அதனால் வெளியில் சேட்டை விட முடியாது, தகவல் உடன் வரும்  😂.

நமது கலாச்சாரத்துடன் போய்கிட்டிருக்கின்றார்கள், கடந்த 10 வருடங்களாக சாய்பாபா SSE வகுப்புகளிற்கு போய்கிட்டு இருக்கின்றார்கள், அதனால பல நல்ல விடயங்களை கற்றுள்ளார்கள்.

நீங்கள் சாய்பாபா பக்தராக இருக்கவேண்டுமென்றில்லை (எனக்கு நம்பிக்கை இல்லை இவரில்😡) SSE வகுப்பிற்கு விடுங்கள், நல்ல பழக்க வழக்கம் வரும், பலருடன் சேர்ந்து பழகும் வாய்ப்பும் கிட்டும். அத்துடன் மனித நேயம், தொண்டு, இப்படி பல அங்கு கற்கலாம். உங்கள் விருப்பம். 🙏🙏🙏 (துல்பன் - வந்து கேட்கப்படாது மூட நம்பிக்கையை வளர்கின்றேன் என😎)

நான் என் நண்பர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களும் அங்கு அனுப்பினவர்கள். சிலர் முழுநேர பக்தர்கள் ஆகிவிட்டார்கள்😂

 

உங்க‌ளின் எழுத்தின் மூல‌ம் தெரியுது , உங்க‌ட‌ பிள்ளைக‌ள் ந‌ல் வ‌ழியில் ப‌ய‌ணிக்கின‌ம் என்று 🙏🙏🙏🙏🙏 ,

என்ர‌ அத்தை ம‌ச்சாள் , இங்கை டென்மார்க்கில் இருக்கும் என‌து ம‌ச்சான் சாய்பாபா வை அதிக‌ம் ந‌ம்பி வ‌ண‌ங்குவின‌ம் , த‌மிழ் நாடு போன‌ போது நானும் சாய்பாபாவின் அழ‌கான‌ ப‌ட‌ம் ஒன்று வாங்கி வ‌ந்தேன் , ஆனால் இதுவ‌ர‌ பெரிசா வ‌ண‌ங்கின‌து இல்ல ‌ப‌ட‌த்தை பார்த்து  , ம‌ச்சாள் சாய்பாபாவின் ப‌ட‌ங்க‌ளை முக‌ நூலில் போடுவா , ம‌ன‌ ஆறுத‌லுக்கு லைக் ப‌ண்ணுவேன் உடையார் ஜ‌யா 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

உலக ஜதார்த்தங்களை ஏற்றுகொண்டால்  மிகுதி வாழ்க்கையை அமைதியாக மகிழ்வாக கழிக்கலாம்.

👍 ஈழப்பிரியன் சொன்ன மாதிரி முள்ளில் விழுந்த சேலை தான் நம் பிள்ளைகள்; எப்படி எடுக்கின்றோம் என்பதே, அவர்கள் வாழப்போகும் வாழ்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

என்னைப்பொறுத்தவரை இந்த உலகி்ல்  வாழும் ஒருவன்  "தன் கலாச்சாரம் தான் சிறந்த‍து அடுத்தவன் கலாச்சாரம் நாய்கலாச்சாரம்" என்று கூறுகிறானோ அவன்தான் இந்த உலகின் வாழும் மிக கேவலமான கலாச்சாரத்தின் சொந்தகாரன் என்பது தான் பொருள். 

எமது கலாசாரத்தை எல்லா திரிகளிலும் கேவலமாக சித்தரிக்கும் உங்களை போன்றவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. இனிமேலாவது  கொஞ்சம் மூடிக்கொண்டிருக்க பழகுங்கள்.

Link to comment
Share on other sites

பல்தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாடுகளில் கலாச்சார பரம்பல் ஏற்படுவது இயற்கை. இந்த உலகில் வாழும் மற்றய மனிதர்களைபோல சாதாரண மனிதர்களான தமிழர்களிலும் அந்த பரம்பல் ஏற்பட தான் செய்யும். இந்த இயல்பு என்ற ஜதாரத்தத்தை மறுத்து எனது கலாச்சாரம் தான் உயர்ந்த‍து மற்றதெல்லாம் தாழ்ந்ந்து என்று கூறும் அறிவிலிகள் எல்லா சமூகத்திலும் உள்ளார்கள் தான். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் சிலர் எமது  கலாச்சாரம் தான் உசத்தி என்று கூறி மற்றயவர்களை தாழ்த்துவதும் அதை வாசித்தது மற்றவர்கள் புளகாங்கிதம் அடைவதும் அதையே எல்லோரும் கூறவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்  இந்த பாடலை ஞாபகப்படுத்தகிறது

 "ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர்வாழ்வேன்".

இப்படியே எனது கலாச்சாரம் தான் உலகில் உயர்ந்தது என்ற பொய்யை கேட்டு மாயையில் வாழவேண்டியது தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, tulpen said:

பல்தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாடுகளில் கலாச்சார பரம்பல் ஏற்படுவது இயற்கை. இந்த உலகில் வாழும் மற்றய மனிதர்களைபோல சாதாரண மனிதர்களான தமிழர்களிலும் அந்த பரம்பல் ஏற்பட தான் செய்யும். இந்த இயல்பு என்ற ஜதாரத்தத்தை மறுத்து எனது கலாச்சாரம் தான் உயர்ந்த‍து மற்றதெல்லாம் தாழ்ந்ந்து என்று கூறும் அறிவிலிகள் எல்லா சமூகத்திலும் உள்ளார்கள் தான். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் சிலர் எமது  கலாச்சாரம் தான் உசத்தி என்று கூறி மற்றயவர்களை தாழ்த்துவதும் அதை வாசித்தது மற்றவர்கள் புளகாங்கிதம் அடைவதும் அதையே எல்லோரும் கூறவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்  இந்த பாடலை ஞாபகப்படுத்தகிறது

 "ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர்வாழ்வேன்".

இப்படியே எனது கலாச்சாரம் தான் உலகில் உயர்ந்தது என்ற பொய்யை கேட்டு மாயையில் வாழவேண்டியது தான். 

கலாச்சாரம் என்பது வாழ்வியலோடும் ஒரு சமூகத்தின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியோடும்  சம்பந்தப்பட்டது

அதற்கு காரண காரியங்களையும் தீர்வுகளையும் விளக்கங்களையும் சொல்வது  கடினம்

தமிழரின் வாழ்வும்  காலமும் வரலாறும் சொல்லும்

வழிமுறைகளையும் பாதைகளையும் தீர்வுகளையும் விளங்கப்படுத்துதல்  அல்லது ஒழுகுதல் அல்லது அலசுதல் என்பது மிக மிக  கடினமானதும் நேரத்தை  விழுங்குவதுமானதாகும்.

சமீபத்திய  உதாரணமாக  கொரோனா  சில  விடயங்களை  தவிர்க்கும்படி சொல்லிவிட்டு  செல்கிறது

தமிழர்கள் இப்படி  எத்தனைக்கு  முகம் கொடுத்து பழக்கவளக்கங்களை சீர்  செய்தனரோ நாம் அறியோம்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இப்படியே எனது கலாச்சாரம் தான் உலகில் உயர்ந்தது என்ற பொய்யை கேட்டு மாயையில் வாழவேண்டியது தான். 

வெளிநாடுகளில் வாழும் ஈழதமிழர்ககள் பெரும்பாலும் தங்களது கலாச்சாரத்தை குறைவாக தான் நம்புகிறார்கள். அதன் காரணமாகவே எமக்கு தொடர்பற்ற வட இந்திய ஹிந்தி உடைகளை திருமணங்களில் அணிந்து புளகாங்கிதம் அடைகின்றனர். வெளியில் தமிழன் தமிழன் காலாச்சாரம் தான் உலகில் உயர்ந்தது என்று புழுகி கொள்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

பல்தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாடுகளில் கலாச்சார பரம்பல் ஏற்படுவது இயற்கை. இந்த உலகில் வாழும் மற்றய மனிதர்களைபோல சாதாரண மனிதர்களான தமிழர்களிலும் அந்த பரம்பல் ஏற்பட தான் செய்யும். இந்த இயல்பு என்ற ஜதாரத்தத்தை மறுத்து எனது கலாச்சாரம் தான் உயர்ந்த‍து மற்றதெல்லாம் தாழ்ந்ந்து என்று கூறும் அறிவிலிகள் எல்லா சமூகத்திலும் உள்ளார்கள் தான். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் சிலர் எமது  கலாச்சாரம் தான் உசத்தி என்று கூறி மற்றயவர்களை தாழ்த்துவதும் அதை வாசித்தது மற்றவர்கள் புளகாங்கிதம் அடைவதும் அதையே எல்லோரும் கூறவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்  இந்த பாடலை ஞாபகப்படுத்தகிறது

 "ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர்வாழ்வேன்".

இப்படியே எனது கலாச்சாரம் தான் உலகில் உயர்ந்தது என்ற பொய்யை கேட்டு மாயையில் வாழவேண்டியது தான். 

துல்ப‌ன்
நீங்க‌ள் எல்லாத்திலும் எம் ம‌ற்ற‌ க‌ள‌ உற‌வுக‌ளுக்கு எதிரா எழுத‌க் கூடிய‌வ‌ர் , உங்களின் எழுத்த‌ வாசிக்க‌ தெரியுது நீங்க‌ள் எத்த‌ க‌ல்ச்ச‌ரில் வாழ‌ விரும்புகிறீங்க‌ள் என்று 

எம் முன்னோர்க‌ள் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌ ந‌ல்ல‌த‌ எம் அடுத்த‌ ச‌ந்த‌திக்கும் எடுத்து செல்ல‌ வேண்டிய‌து எங்க‌ க‌ட‌மை , 

வெள்ளை இன‌த்த‌வ‌னின் நாட்டில் நாம் வாழ்ந்தாலும் எங்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளுக்கும் நிறைய‌ வேறு பாடு இருக்கு ,

 நூற்றுக்கு 48 விழுக்காடு வெள்ளைய‌ர்க‌ள் க‌லியாண‌ம் செய்து டிவேஸ் எடுத்து வாழுகிறார்க‌ள் இந்த‌ நாட்டில் , 

எம் க‌லாச்சார‌த்தில் எம் முன்னோர்க‌ள் சொன்ன‌து க‌லியாண‌ம் ஆயிர‌ம் கால‌த்து ப‌யிறு ,  இது ப‌ல‌ருக்கு தெரிந்த‌ ஒன்று , இதன் அர்த்த‌ம் உங்க‌ளுக்கு தெரிந்து இருக்க‌ வாய்ப்பு இல்ல‌ , ஊரில் போர் சூழ‌ல் கார‌ண‌மாய் அரைகுறை ப‌டிப்பு ப‌டிச்சிட்டு சிறு வ‌ய‌தில் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ என் போன்ற‌ பிள்ளைக‌ள் ப‌ல‌ருக்கு தெரியும் எம் க‌லாச்சார‌ம் , உங்க‌ளுக்கு தெரியாத‌து ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு 😉

வெள்ளை இன‌த்த‌வ‌ன் உங்க‌ட‌ பெண்டாட்டிக்கு ரூட்டு போட்டா அவ‌ன் போட‌ட்டும் என்று பார்த்து கொண்டு சும்மா இருப்பிங்க‌ளா 😁

ஒரு குடும்ப‌ம் என்றால் ம‌னைவி பிள்ளைக‌ளுட‌ன் ஒரு குறையும் இல்லாம‌ அடுத்த‌வ‌ர்க‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை பார்த்து கேலி செய்யும் அள‌வுக்கு நாம் வாழக் கூடாது , 

எங்கு இருந்தாலும் எம் க‌லாச்சார‌ம் முக்கிய‌ம் ,  எங்களுக்கு எம் போராட்ட‌ம் த‌மிழீழ‌ த‌னி நாடு எவ‌ள‌வு முக்கிய‌மோ அதே போல் த‌மிழ் க‌லாச்சார‌மும் முக்கிய‌ம் , 

நாம் தான் புல‌ம்பெய‌ர் நாட்டில் ந‌ல்லா வாழுகிறோம் எம‌க்கு எத‌ற்கு போராட்ட‌ம் எம‌க்கு எத‌ற்கு த‌னி நாடு என்று ஒதுங்கி இருந்து இருக்கிறோமா , நாட்டை விட்டு தான் வ‌ந்தோம் எம் உண‌ர்வை விட்டுட்டு வ‌ர‌ வில்லை , 

அதே போல‌ தான் வெளி நாட்டில் நாம் வாழ்ந்தாலும் எம் க‌லாச்சார‌ம் முக்கிய‌ம் , அடுத்த‌வ‌ன்ட‌ பெண்டாட்டிய‌ இவ‌ன் வைத்து இருக்கிற‌து இவ‌ன் பெண்டாட்டியை அவ‌ன் வைத்து இருப்ப‌து எல்லாம் த‌மிழீழ‌ ம‌ண்ணில் நான் பார்த்த‌து இல்ல‌ , 

நான் என்ர‌ த‌ங்கைச்சிக‌ள் கூட‌ அதிக‌ம் நெருங்கி ப‌ழ‌குவேன் , அண்ண‌ன் என்ற‌ முறையில் அதுங்க‌ளுக்கு சொல்லி குடுக்க‌ நிறைய‌ இருக்கு , அதுங்க‌ள் இங்கை பிற‌ந்த‌ பிள்ளைங்க‌ள் நான் த‌மிழீழ‌த்தில் , 

நானே அரைகுறை த‌மிழில் எழுதுவேன் என்ர‌ த‌ம்பி அவ‌னுக்கு என்னால் முடிந்த‌ த‌மிழை சொல்லி குடுத்தேன் எப்ப‌டி க‌ணணியில் கைபேசியில் இருந்து த‌மிழ் எழுதுவ‌து என்று , 

இப்ப‌டி ஒரு அண்ண‌ன் த‌மிழ் சொல்லித் த‌ந்த‌ ப‌டியால் தான் நாங்க‌ள் கொஞ்ச‌ம் த‌ன்னும் எழுதுகிறோம் என்று என்ர‌ ஒன்ட‌ விட்ட‌ ச‌கோத‌ர‌ங்க‌ள் நினைத்தா அல்ல‌து நேர‌டியாய் சொன்னால் அது என‌க்கு ம‌கிழ்ச்சி , என்ர‌ ச‌கோத‌ர‌மும் த‌மிழ் மீது ஆர்வ‌ம் காட்டுவ‌து   என‌க்கு ம‌கிழ்ச்சியை த‌ருது 🙏👏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

எங்கள்.. திருமணத்தை தாங்கள் சொல்லியது போல் சைவத் தமிழ் முறைப்படி.. கோவிலில் தான் நடத்தினோம்.

பிறரைப் போல வாய்ப்பந்தல் போடாமல் பாரம்பரியத்தையும், தொன்மங்களையும் கடைப்பிடித்து திருமணம் செய்த நெடுக்ஸுக்குப் பாராட்டுக்கள்.👏👏👏

திருமணம் எளிமையாகவும், பண்பாட்டையும் தொன்மங்களையும் வெளிப்படுத்துவதுமாக இருக்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

 

ஆனால் பெரும்பாலான திருமணங்கள் ஆடம்பரமாகவும்,  மானாட மயிலாட ஷோ போலவும், போதாக்குறைக்கு கூறை மாத்த பெண்போகும் இடைவெளியில் சீக்கியரின் பாங்கரா மேளமடித்து ஒரு கூத்துமடித்தும் இருக்கும்.

இந்தக் கூத்துகளைப் பார்க்கப் பிடிக்காமல் வெளியே போய் நண்பர்களிடன் இரண்டு பியர் அடித்துவிட்டு (சம்மரில்தானே கலியாணங்கள்), சாப்பாட்டு வரிசை தொடங்க வந்து நாலு விழல்க்கதைகளும் பேசி, குடிச்ச பியருக்கு தோதாக மூன்று நாலு பொரிச்ச உறைப்பான மிளகாயையும் கடித்து, மரக்கறியையும் சாப்பிட்டுவிட்டு மேடையில் கூட்டம் குறைய மாப்பிள்ளை, பொம்பிளைக்கு ஒரு “ஹலோ”, “கொங்கிராயுலேஷன்ஸ்” சொல்லி, கார்ட்டையும் கொடுத்துவிட்டு,  பொண்ணுக்கு கையைக் கொடுக்கிறதா, கொடுக்காமல் விடுகிறதா என்று குழம்பி, அறுகரிசி மேலிருந்து போடுகிறதா, கீழிருந்து போடுகிறதா என்று முளுசி, ஏதோ ஒரு வழத்தால் போட்டுவிட்டு, படம் எடுக்க விறைப்பாக மூஞ்சையை வைத்துக்கொண்டு நின்றுவிட்டு, மேடையை விட்டு இறங்கும்போது கிடைக்கும் பலகார/பரிசுப் பொதியையும் பிரிச்சுப் பார்த்து நல்ல பருத்துறை வடை இருந்தால் ஒரே கடியில் அதையும் விழுங்கி கார் பார்க்குக்கு வந்தால் நிதானம் வந்துவிடும்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பிறரைப் போல வாய்ப்பந்தல் போடாமல் பாரம்பரியத்தையும், தொன்மங்களையும் கடைப்பிடித்து திருமணம் செய்த நெடுக்ஸுக்குப் பாராட்டுக்கள்

இதற்கு முக்கிய காரணம்.. எங்கள் திட்டங்களை கூடிய அளவு நாங்களே வகுத்து ரகசியமாகச் செய்து கொண்டிருந்தது தான்.. கூடிய அளவுக்கு அடுத்தவர்களின் ஆலோசனைக்கு இடமளிக்கவில்லை. திருமணத்திற்கு இரண்டு நாளுக்கு முன் தான் எமது குடும்பப் பெரியவர்களுக்கு.. இளையோருக்கு இது இது தான் உங்கள் வேலை என்று அவரவர் அனுபவம்.. இயலுமைக்கு ஏற்ப வேலைகளைப் பகிர்ந்து கொடுத்தது. எல்லோரும் ஒரு குறையும் சொல்லாமல் அதனை ஏற்றுக் கொண்டமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இதே காலத்தில் எம்மவர் திருமணம் என்றால்.. டுபாயில் நகை.. சிங்கப்பூரில் நகை.. ஹிந்தியாவில் இருந்து சாறி.. ஜோதிகா மாலை.. அந்த மாலை.. இந்த மாலை.. போட்டோ சூட் என்று உலக நாடுகள் எங்கும் ஒரு சுற்றுலா.. என்று கிட்டத்தட்ட ஒராண்டு கால திட்டமிடலும் செயலும் என்று நம்மவர்கள் திருமணம் செய்யப் போய்.. பல நூறு பேரை அழைத்து.. அவர்கள் களைச்சு விழுந்து.. வெறுத்துப் போய் போவது தான் நடக்கிறது. இதே தான் சாறி செரிமனிக்கும்..! 😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு மக்கள் கீழத்தேயத்தை விரும்ப.. கீழத்தேயம்.. குழப்பமயமாகிட்டு வருகுது.

Image may contain: Nthiran Krishnan, standing and outdoor, text that says "FaceApp"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

பிறரைப் போல வாய்ப்பந்தல் போடாமல் பாரம்பரியத்தையும், தொன்மங்களையும் கடைப்பிடித்து திருமணம் செய்த நெடுக்ஸுக்குப் பாராட்டுக்கள்.👏👏👏

திருமணம் எளிமையாகவும், பண்பாட்டையும் தொன்மங்களையும் வெளிப்படுத்துவதுமாக இருக்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

 

ஆனால் பெரும்பாலான திருமணங்கள் ஆடம்பரமாகவும்,  மானாட மயிலாட ஷோ போலவும், போதாக்குறைக்கு கூறை மாத்த பெண்போகும் இடைவெளியில் சீக்கியரின் பாங்கரா மேளமடித்து ஒரு கூத்துமடித்தும் இருக்கும்.

இந்தக் கூத்துகளைப் பார்க்கப் பிடிக்காமல் வெளியே போய் நண்பர்களிடன் இரண்டு பியர் அடித்துவிட்டு (சம்மரில்தானே கலியாணங்கள்), சாப்பாட்டு வரிசை தொடங்க வந்து நாலு விழல்க்கதைகளும் பேசி, குடிச்ச பியருக்கு தோதாக மூன்று நாலு பொரிச்ச உறைப்பான மிளகாயையும் கடித்து, மரக்கறியையும் சாப்பிட்டுவிட்டு மேடையில் கூட்டம் குறைய மாப்பிள்ளை, பொம்பிளைக்கு ஒரு “ஹலோ”, “கொங்கிராயுலேஷன்ஸ்” சொல்லி, கார்ட்டையும் கொடுத்துவிட்டு,  பொண்ணுக்கு கையைக் கொடுக்கிறதா, கொடுக்காமல் விடுகிறதா என்று குழம்பி, அறுகரிசி மேலிருந்து போடுகிறதா, கீழிருந்து போடுகிறதா என்று முளுசி, ஏதோ ஒரு வழத்தால் போட்டுவிட்டு, படம் எடுக்க விறைப்பாக மூஞ்சையை வைத்துக்கொண்டு நின்றுவிட்டு, மேடையை விட்டு இறங்கும்போது கிடைக்கும் பலகார/பரிசுப் பொதியையும் பிரிச்சுப் பார்த்து நல்ல பருத்துறை வடை இருந்தால் ஒரே கடியில் அதையும் விழுங்கி கார் பார்க்குக்கு வந்தால் நிதானம் வந்துவிடும்😎

இப்படித் தான் அவருடைய திருமணம் நடந்ததிற்கு ஆதாரத்தை இணைக்க சொல்லுங்கோ😂🤩🤩 ...யாழ் தன்னுடைய குடும்பம் என்று சொல்லுறவர் ...தன்னுடைய சகோதர சகோதரிகளை ஏன் கூப்பிடவில்லை என்றும் கேளுங்கோ 🤣

 

அது சரி எங்கட கல்யாண வீடுகளில் பியரும் கொடுக்கிறவையோ :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

அது சரி எங்கட கல்யாண வீடுகளில் பியரும் கொடுக்கிறவையோ :unsure:

யாழில் பலர் ஒழுங்காக தமிழை வாசிப்பதில்லை. நீங்களுமா?😮

Quote

வெளியே போய் நண்பர்களிடன் இரண்டு பியர் அடித்துவிட்டு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

யாழில் பலர் ஒழுங்காக தமிழை வாசிப்பதில்லை. நீங்களுமா?😮

 

ஓ ...மன்னிக்கவும்  அவசரம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இப்படித் தான் அவருடைய திருமணம் நடந்ததிற்கு ஆதாரத்தை இணைக்க சொல்லுங்கோ😂🤩🤩 ...யாழ் தன்னுடைய குடும்பம் என்று சொல்லுறவர் ...தன்னுடைய சகோதர சகோதரிகளை ஏன் கூப்பிடவில்லை என்றும் கேளுங்கோ 🤣

அது சரி எங்கட கல்யாண வீடுகளில் பியரும் கொடுக்கிறவையோ :unsure:

நிகழ்ந்ததை எழுதினால்.. நம்பக் கூடியவர்கள் நம்புங்கள்.. நம்பாதாவர்கள் நம்பாதீர்கள். அது ஒரு பிரச்சனையே அல்ல. 

திருமணம் என்பது தனிப்பட்ட எளிமையான எமது பண்பாட்டு வெளிப்பாட்டுடன் அமைய வேண்டிய ஒரு மனதிரு நிகழ்வு. எமது நெருங்கிய உறவுகள்.. தற்கால நண்பர்களை தவிர வேறு எவரையும் அழைக்கவில்லை. 

மேலும் எங்கள் திருமணம் கடும் குளிர் காலத்தில் நிகழ்ந்த ஒன்று.. குளிர் நாட்டின் தன்மையையும் உள்வாங்க.  அதுவும் ஒரு புது அனுபவம் தான்.

நாங்கள் திருமண வரவேறுப்பு என்று திருமண நிகழ்வுக்கு அப்பாலான.. தனி நிகழ்வு எதனையும் செய்யவில்லை. 

யாழ் கள உறவுகளை அழைப்பது என்று முடிவெடுத்தால்... எல்லா உறவுகளையும் பாரபட்சமின்றி அழைக்கனும்.. அதற்கான வாய்ப்புக்களை செய்து கொடுக்கனும். ஒரு நாட்டில் ஒரு ஊர்காரரை மட்டும் அழைத்து மற்றவர்களுக்கு அதை விடுப்புக்காட்டுவதில் நமக்கு உடன்பாடில்லை. அது உறவுகளை பாரபட்சமின்றி மதிப்பளிப்பது ஆகாது. 

மேலும் யாழ் ஒரு பொதுவெளி. அங்கு எங்கள் தனிப்பட்ட நிகழ்வுக்குரிய விடயங்களை முழுமையாகவோ பகுதியாகவோ.. குறிப்பாக படங்களோடு பிரசுரிக்க முடியாது. அது எங்கள் கொள்கை.. யாழும் எமது தனிப்பட்ட பகிர்வுகளுக்கு நாமே தான் பொறுப்பும் என்று கூறியுள்ளது.. அதன் பொறுப்பை திறந்துள்ளது. ஆகவே இதுவிடயத்தில் எங்களிடம்.. நெகிழ்வுக்கு இடமில்லை. 

நீங்கள் எப்படி தான் தூண்டில் போட்டாலும்.. சிக்கக் கூடிய மீன்கள் மட்டும் தான் சிக்கும். 😀

மீளவும்.. யாழ் ஒரு குடும்பம்... போல. யாழ் கள உறவுகள்.. எங்கள் அன்பின் கள உறவுகள் தாம். அதில் மாற்றுக்கருத்தில்லை. கருத்தால் மோதிக் கொண்டாலும். கொள்ளா விட்டாலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

புகழிடம் vs தாயகம்.

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

அது சரி எங்கட கல்யாண வீடுகளில் பியரும் கொடுக்கிறவையோ :unsure:

எங்கள் தமிழ் கலயாண வீடுகளில்  கிச்சினில் மேசைகளுக்கு அடியிலும் ஆங்காங்கே பார்க பண்ணி இருக்கும் கார் டுக்கிக்குள்ளும்  பெருமளவில் மதுபானங்கள் பரிமாறப்படும் 

சமீப காலங்களில் இங்கு  பிறந்து வளர்ந்த பிள்ளைகளின் திருமண விழாக்களில் தான் நேரடியாக Cocktail 🍹 உட்பட ஒழுங்கு முறையில் பரிமாறுகிறார்கள்.  

கிச்சினுக்குள்ளும் கார் டிக்குள்ளும்  ஒழித்து ஒழித்து குடித்து நிலை தடுமாறி வாந்தி எடுத்து வீடு செல்லும. கலாச்சாரத்தைக் கொண்டவர்களை  மேசையில் இருத்தி அளவோடு குடித்து  மரியாதையாக மனைவி பிள்ளைகளுடன் வீடு செல்ல வைத்தவர்கள் இங்கு  பிறந்த இளம் பிள்ளைகளே.  

Link to comment
Share on other sites

10 minutes ago, nedukkalapoovan said:

 

புகழிடம் vs தாயகம்.

நெடுக்கு இப்படி செலக்ரிவாக படத்தை போடுவதன்  மூலம் தாயகத்திற்கும் புகலிடத்திற்கும் இடையிலான உண்மையான வித்தியாசத்தைக் காட்ட முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் எம்மை விட மோசமான இனப்படுகொலையை எதிர்கொண்டவர்கள். உலகம் பூராவும் புலம்பெயர்ந்து  வாழ்ந்தாலும்..தமது அடையாளம் தொலைக்காமல் மற்றைய இனங்களோடு இணைந்து வாழ்ந்து வரும் அதேவேளை.. தமது தாயகத்தை உருவாக்கி.. அதனையும் செழிப்போடும்.. தமது பண்பாட்டு விழுமியத்தோடும்.. பாதுகாத்து வருகின்றனர்.

இங்கு நாம் எங்கு நிற்கிறோம்..???! 

அதற்காகத்தான் இணைத்தேன். ஒரு ஒப்பீட்டுக்காக. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.