Jump to content

வேலைக்கான நேர்முகத்தேர்வில் ஒரு கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேர்முகத்தேர்வு: ஒரு வேலைக்கான நேர்முகத்தேர்வில் ஒரு கேள்வி.

ஒரு மோசமான காலநிலையில் காரை செலுத்திக் கொண்டு வருகின்றீர்கள்.

வழியில் ஒரு பஸ் நிலையத்தில் மூவர் காத்திருக்கின்றனர்.

ஒருவர், உங்கள் மனதை கவர்ந்த பெண்.
இன்னோருவர், முன்பொருமுறை உங்கள் உயிர் காத்த ஒருவர்.

மூன்றாவது நபரோ, ஒரு வயதான, நோயாளியனா, உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு போகப்படவேண்டிய பெண்மணி.  மோசமான காலநிலை காரணமாக ஆம்புலன்ஸ் வர தாமதமாகின்றது. 

வாகனத்தில் ஒரே ஒரு சீட் மட்டுமே உள்ளது. என்ன செய்வீர்கள்? 

இன்னும் 99 பேர் நேர்முகத்துக்கு காத்திருக்கின்றனர்.

சிறப்பான பதில் உங்களுக்கு வேலையினை பெற்று தரும். 

சிறப்பான பதில் ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் வேலை எடுக்க விருப்பமில்லை போல கிடக்குது. லொக்டவுணால வந்த பிரச்சணை. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோயளிப் பெண் தான் ஏற்றிச் செல்லப்பட வேண்டியவர் . ஆனால் மனங்கவர்ந்த   பெண் கோபிக்க கூடும்  உயிர்காத்த பெண் செய்நன்றி   மறந்தவன் என சொல்லக்  கூடும்  பின்  இருவரையும் இவர் சமாளிக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றால் எனக்கு முன்பு உதவியவரிடம் காரைக் கொடுத்து அந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்க சொல்லி விட்டு அந்த அழகனுடன் எங்கேயோ போவன்😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் என்றால் எனக்கு முன்பு உதவியவரிடம் காரைக் கொடுத்து அந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்க சொல்லி விட்டு அந்த அழகனுடன் எங்கேயோ போவன்😍

உங்களுக்கு வேலை கிடைத்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்களின் lateral thinking, data thinking, judgement மற்றும் உங்களின், மற்றவர்களின், நிலைமையின்  முன்னுரிமையை  மற்றும் முக்கியத்துவத்தை எப்படி எஹிற்கொள்வீர்கள் மற்றும் சமாளிப்பீர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்றப்பட்ட தேவைகளை நிறைவேற்ற முயதர்சிக்கிறீர்களா என்று சிந்திப்பதை அறிய உதவும் கேள்வி.

இங்கே, நோயாளியே முன்னுரிமையும், முக்கியத்துவமும் உள்ளவர். 

ஆனால், காரில் நோயாளியை ஏற்றி செல்வதற்கு, , உரிய முறையில், உங்களுக்கு தெரியுமா, காரில்  வசதி இருக்கிறதா  என்பது தெரியவில்லை. நோயாளின் நிலைமையை பொறுத்து, காரில் ஏற்றி செல்வதால் அவரின் நிலை மோசமடையாக் கூடும்.

இதே தகுதி மற்ற இருவருக்கும் உள்ளதா (அதாவது நோயாளியை உரிய முறையில் transport பண்ணுவதற்கு)?

மற்றும், நோயாளியை டிரான்ஸ்போர்ட் பண்ணுவது  என்பது சுய விருப்பின் படி நடப்பது நல்லது. 

எவரிடம் தகுதி இருந்தாலும் , நோயாளியும்ம் ஏற்றுக்கொண்டால், இதை உரிய மெடிக்கல் & physical opinion படி   எடுக்க வேண்டும். ஆகவே, உடனடி நோயாளர் பிரிவுக்கு தொடபு கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும். 

நோயாளி காரில் டிரான்ஸ்போர்ட் பண்ணுப்படலாம் என்றால், தகுதி உடையவரே தெரிவு செய்யப்படலாம், ஒருவருக்கு  மட்டும் தகுதி இருக்கிறது என்றால் அவரே நோயாளியை கூட்டி செல்ல வேண்டும். 

மற்ற இருவருக்கும் தகுதி உள்ளது என்றால், உதவி செய்தவரை நோயாளியுடன் கரை கொடுத்து அனுப்பி விட்டு, பிடித்தவருடன் நீங்கள் போகலாம், அவர்க்கும் விருப்பம் என்றால். இதே முடிவு, உங்களுக்கும் உதவி செய்தவரகும் தகுதி இருந்தால். 

உங்களுக்கும், பிடித்தவர்க்கு மட்டுமே தகுதி உள்ளது என்றால், பிடித்தவர் நோயாளியை ஹாஸ்பிடல் கொண்டு செல்வதற்றக்கான விருப்பின் படி செய்யலாம்.


நோயாளி ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருப்பதே உசிதம் என்றால், பிடித்தவரின் விருப்பை அறிந்து விட்டு, ஒன்றில் அவரையும் சேர்த்து, அல்லது அவரும் செல்ல விரும்பினால், உங்களுக்கு உதவி செய்தவரோடு சேர்ந்து போக விருப்பம் என்றால் அவர்களுக்கு கரை கொடுத்து விட்டு, நோயாளியுடன் ஆம்புலன்ஸ் வரும் வரை moral சப்போர்ட் ஆக இருப்பதே பிரச்சனைகளை சமாளிப்பதத்திற்கான வழி.   

இதற்கு அச்சொட்டான சரியான அல்லது பிழையான விடைகள் இல்லை என்றே எதிர்பார்க்கவேண்டி உள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரிலிருந்து இறங்கி உயிர்காத்த நண்பரிடம் சாவியை கொடுத்து நோயாளியை அவசராமாக கூட்டி செல்ல சொல்லிவிட்டு, 🚕

மனதுக்கு பிடித்த பெண்ணுக்கு பாதுகாப்பாக அந்த மோசமான காலநிலையையும் இதம் தரும் சூழ்நிலையாக மாற்ற முயற்சி செய்வேன் 😍😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--- பஸ்நிலையத்தில் அழகான பெண்களுக்கா பஞ்சம்.இன்னொரு பெண்ணின் மனத்தைக் கவர்ந்தால் போயிற்று. அதனால் அவளை ஒதுக்கி விடலாம்.அவளை அடுத்து வருகிற ஜொள்ளு பார்ட்டிகள்( ரதி, கடைஞ்சா, உடையார் நீங்கலாக). பார்த்து கொள்வார்கள்......!

--- அம்புலன்சுக்கு இருக்கிற அதே காலநிலைதான் நான் நோயாளியை ஏற்றினாலும்  இருக்கப் போகுது.எப்படியும் அம்புலன்ஸ் விரைவில் வந்து விடும். அதனால் அது வரும்வரை நண்பருடன் காத்திருந்து அவரை அனுப்பிவிடுவேன். 

--- நண்பருடன் சென்று அவரை இறக்கி விட்டு, முதல் வேலையாய் ஐந்து சீட் உள்ள கார் வாங்கி விடுவேன்.....!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

--- பஸ்நிலையத்தில் அழகான பெண்களுக்கா பஞ்சம்.இன்னொரு பெண்ணின் மனத்தைக் கவர்ந்தால் போயிற்று. அதனால் அவளை ஒதுக்கி விடலாம்.அவளை அடுத்து வருகிற ஜொள்ளு பார்ட்டிகள்( ரதி, கடைஞ்சா, உடையார் நீங்கலாக). பார்த்து கொள்வார்கள்......!

--- அம்புலன்சுக்கு இருக்கிற அதே காலநிலைதான் நான் நோயாளியை ஏற்றினாலும்  இருக்கப் போகுது.எப்படியும் அம்புலன்ஸ் விரைவில் வந்து விடும். அதனால் அது வரும்வரை நண்பருடன் காத்திருந்து அவரை அனுப்பிவிடுவேன். 

--- நண்பருடன் சென்று அவரை இறக்கி விட்டு, முதல் வேலையாய் ஐந்து சீட் உள்ள கார் வாங்கி விடுவேன்.....!  😍

முன்பு சொன்னது போலவே, இந்த கேள்விக்கு, சரியான, பிழையான பதில்கள் என்று இருப்பது முடியாதது, ஏனெனில் முடிவெடுக்க வேண்டிய அளவு தரவுகள் இல்லை.

இந்த கேள்வி உங்கள் அனுபவம், பிரச்சனைகளை ஆய்வது, அணுகுவது, மதிப்பாய்வது (judgement), தீர்ப்பது, மற்றும் தலைமைத்துவ பண்பு (அதாவது நிலைமைக்கு ஏற்ப உங்களின் மற்றும் உங்களளின் தேவைகளின் முக்கியத்துவதுக்கு முன்னுரிமை கொடுப்பது அல்லது தள்ளி வைப்பது மற்றும் குழப்பமான சூழ் நிலையில் seeking directions and help).  

ஆனால், நோயாளியை,   அதுவும் சீரற்ற காலநிலையில், காரில் hospital இற்கு கொண்டு செல்லலாம் என்ற முடிவை அதில் உள்ள மூவர்களில் ஒருவர் முடிவு எடுப்பது, அவர்கள் வாழ்க்கையில் நோயாளியை TRANsPORT பண்ணிய அனுபவம் இல்லாதவர்கள், அல்லது வேலையைப் பொறுத்தவரையில் risk analysis and assessment இ பார்த்திராதவர்கள் என்று தெரிகிறது.

இன்னுமொன்று, அந்த பிடித்த பெண் உங்களை தனது தெரிவில் ஒருவராக ஏற்கிறாரா என்பதும் தெரியாத நிலை.  

வேடிக்கை, அது அந்த நிறுவன நிர்வாகத்திற்கும் தெரியாது என்பது. நிர்வாகம், analysis ஐ பார்க்காமலே, இருக்கும் ஒரு தெரிவை tunnel view ஆக எடுப்பதால், இந்த நிறுவனத்தில் operation success, patient at the least impaired என்ற நிலையில் வருவதத்தற்கு மிகுந்த வாய்ப்புகள் இருக்கிறது, பிடித்த பெண்ணுடன் wanted to have  fun என்ற நிலையை முயற்சி செய்து பார்ப்பதற்கு (உவமானமாக).       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

patient first. எனவே காரை நிறுத்தி வைத்திய தேவை அவசியமான நோயாளியை உரிய இடம் சேர்ப்பதே முதல் முன்னுரிமை அளிப்பதையே செய்வேன். அத்தோடு அவசர சேவைப்பிரிவுக்கு தகவல் அனுப்பி பஸ் தரிப்பிடத்தில் நிற்பவர்கள் குறித்து தகவல் சொல்லியும் விடுவேன். 

எனக்கு வேலை கிடைக்குதோ இல்லையோ இது தான் எனது பதில் என்று சொல்லிவிடுவேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் பலவிதமாக நேர்முகத் தேர்வை பற்றி பயம் எழுப்புவார்கள். risk assessment, prioritising, critical thinking, scenario case study.. இப்படிப் பல.

ஆனால் என்னிடம் கேட்கப்படும்.. கேள்விகளுக்கு தெரிந்தால் பதில் இல்லையென்றால்.. சொறி சொல்லி சொல்வதே வழமை. எந்த தொழிலுக்கும் இதுவரை கூடியது 3 நேர்முகத் தேர்வுக்கு மேல் செல்ல வேண்டிய அவசியம் வரவில்லை. 

எந்தப் புத்தகமும் வாசிப்பதில்லை.. இணையத்தளமும் பார்ப்பதில்லை..  UCLH work assessment சான்றிதழை யதார்த்தமான பொது அறிவை பயன்படுத்தி ஒரே தடவையில் பெற முடிந்தது. 

நான் நினைக்கிறேன்.. பயம்.. பதட்டத்தை உருவாக்குதலே.. நேர்முகத் தேர்வில்..  சரியாக செயற்பட முடியாமைக்கு காரணம். நேர்முக விடயம் சம்பந்தமான..அடிப்படை அறிவோடு.. உங்களின் இயற்கையான பொது அறிவை.. தர்க்க அறிவை பயன்படுத்திக் கொண்டால்.. நேர்முகத் தேர்வில் இலகுவாக வெற்றி பெறலாம்.

ஒருபோதும்.. நேர்முகத் தேர்வை செய்பவர்கள் ஏதோ பெரிய விற்பன்னர்கள் என்ற தொனியில் அவர்களை உயர்த்தி உங்களை தாழ்த்திக் கொண்டு நேர்முகத் தேர்வுக்கு போகக் கூடாது. நண்பர்களோடு அளாவளாவப் போவதாக எண்ணிக் கொள்வது சிறப்பு. அழுத்த மனநிலையில்.. சரியாக சிந்திக்க முடியாத சூழலை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம். இயல்பாக இவற்றை எதிர்கொள்வதே சிறப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nedukkalapoovan said:

பலர் பலவிதமாக நேர்முகத் தேர்வை பற்றி பயம் எழுப்புவார்கள். risk assessment, prioritising, critical thinking, scenario case study.. இப்படிப் பல.

ஆனால் என்னிடம் கேட்கப்படும்.. கேள்விகளுக்கு தெரிந்தால் பதில் இல்லையென்றால்.. சொறி சொல்லி சொல்வதே வழமை. எந்த தொழிலுக்கும் இதுவரை கூடியது 3 நேர்முகத் தேர்வுக்கு மேல் செல்ல வேண்டிய அவசியம் வரவில்லை. 

எந்தப் புத்தகமும் வாசிப்பதில்லை.. இணையத்தளமும் பார்ப்பதில்லை..  UCLH work assessment சான்றிதழை யதார்த்தமான பொது அறிவை பயன்படுத்தி ஒரே தடவையில் பெற முடிந்தது. 

நான் நினைக்கிறேன்.. பயம்.. பதட்டத்தை உருவாக்குதலே.. நேர்முகத் தேர்வில்..  சரியாக செயற்பட முடியாமைக்கு காரணம். நேர்முக விடயம் சம்பந்தமான..அடிப்படை அறிவோடு.. உங்களின் இயற்கையான பொது அறிவை.. தர்க்க அறிவை பயன்படுத்திக் கொண்டால்.. நேர்முகத் தேர்வில் இலகுவாக வெற்றி பெறலாம்.

ஒருபோதும்.. நேர்முகத் தேர்வை செய்பவர்கள் ஏதோ பெரிய விற்பன்னர்கள் என்ற தொனியில் அவர்களை உயர்த்தி உங்களை தாழ்த்திக் கொண்டு நேர்முகத் தேர்வுக்கு போகக் கூடாது. நண்பர்களோடு அளாவளாவப் போவதாக எண்ணிக் கொள்வது சிறப்பு. அழுத்த மனநிலையில்.. சரியாக சிந்திக்க முடியாத சூழலை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம். இயல்பாக இவற்றை எதிர்கொள்வதே சிறப்பு. 

நீஙகள் IT துறையினர் தானே நெடுக்கர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nedukkalapoovan said:

 

ஆனால் என்னிடம் கேட்கப்படும்.. கேள்விகளுக்கு தெரிந்தால் பதில் இல்லையென்றால்.. சொறி சொல்லி சொல்வதே வழமை. எந்த தொழிலுக்கும் இதுவரை கூடியது 3 நேர்முகத் தேர்வுக்கு மேல் செல்ல வேண்டிய அவசியம் வரவில்லை. 

இன்று வரை ஒன்றுக்கு மேல் நேர்முக தேர்வுக்கு சென்றதில்லை, அத்துடன் நானாகதான் விலகியது பல கொம்பனிகளிலிருந்து. 

அவுஸ்திரேலியாவுக்கு வந்து ஒரு கிழமையில் வேலை கிடைத்தது. இதற்கு நான் மாட்டும் காரணமில்லை நண்பர்களும் & எங்கள் வேலைக்குமுள்ள கேள்வியே.

பல பில்லியன் முதலீட்டுகளுடன் விளையாடுகின்றோம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஒருபோதும்.. நேர்முகத் தேர்வை செய்பவர்கள் ஏதோ பெரிய விற்பன்னர்கள் என்ற தொனியில் அவர்களை உயர்த்தி உங்களை தாழ்த்திக் கொண்டு நேர்முகத் தேர்வுக்கு போகக் கூடாது. நண்பர்களோடு அளாவளாவப் போவதாக எண்ணிக் கொள்வது சிறப்பு.

நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நேர்முக தெரிவாளர்களும், அப்படி நண்பர்களோடு அளவளாவுவதாகவே உரையாடலை கொண்டு செல்வார்கள். உங்களின், இயற்றக்கையான disposition ஐ வெளிக்கொணர்வதற்கும், மற்றும் அதன் தன்மை வேலையோடு, முக்கியமாக culture ஓடு ஒத்துவருகிறதா என்பதை அறிவதற்கு.

மற்றும் அவர்கள் உங்களின் பதில் இருந்து நீவி, வார்ந்து உங்கள் situational emotional intelligence ஐயும் அறிவயா முயற்சிப்பார்கள்.
     
 ஆனால், கேட்கப்படும் கேள்விகள் behavioural, competencies  தொடர்பானவை.  இவைகளுக்கு பதில்கள் ஆயத்தப்படுத்தலாம். 

இவைகள் ஊடக situational emotional intelligence ஐ சாதாரண உரையாடல் வழியாக அறிவதே நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நேர்முக தெரிவாளர்கள்.  

இங்கு சொல்லப்பட்ட பதில்களிலேயே தெரிகிறது. உ.ம். பிடித்த பெண்ணுடன் செல்வது, உதவி செய்தவரிடம் கரைய கொடுத்து நோயாளியை ஹாஸ்பிடல் கொண்டு சேலை சொல்வது. இதில் அவர்கள் problem solving ஜ புறக்கணித்து விட்டார்கள். அவர்கள் நோயாளிக்கு உதவி செய்ய வேண்டும், உதவி செய்தவரையும் கைவிடாமல், என்ற empathy ஐ வெளிகட்கிறார்களே தவிர, அவர்களின் உண்மையான வாஞ்சை அந்த பெண்ணுடன் fun அனுபவிப்பது. இதனால் அவர்களின் bad weather  நோயாளியை ஆம்புலன்ஸ் தவிர்த்து கொண்டு செலவதில் உள்ள சிக்கல்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. முக்கியமாக நோயாளின் நிலை மோசமடையாக் கூடிய நிலை. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்று பல சொல்லிக்கொண்டே போகலாம்.   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நேர்முக தெரிவாளர்களும், அப்படி நண்பர்களோடு அளவளாவுவதாகவே உரையாடலை கொண்டு செல்வார்கள். உங்களின், இயற்றக்கையான disposition ஐ வெளிக்கொணர்வதற்கும், மற்றும் அதன் தன்மை வேலையோடு, முக்கியமாக culture ஓடு ஒத்துவருகிறதா என்பதை அறிவதற்கு.

மற்றும் அவர்கள் உங்களின் பதில் இருந்து நீவி, வார்ந்து உங்கள் situational emotional intelligence ஐயும் அறிவயா முயற்சிப்பார்கள்.
     
 ஆனால், கேட்கப்படும் கேள்விகள் behavioural, competencies  தொடர்பானவை.  இவைகளுக்கு பதில்கள் ஆயத்தப்படுத்தலாம். 

இவைகள் ஊடக situational emotional intelligence ஐ சாதாரண உரையாடல் வழியாக அறிவதே நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நேர்முக தெரிவாளர்கள்.  

இங்கு சொல்லப்பட்ட பதில்களிலேயே தெரிகிறது. உ.ம். பிடித்த பெண்ணுடன் செல்வது, உதவி செய்தவரிடம் கரைய கொடுத்து நோயாளியை ஹாஸ்பிடல் கொண்டு சேலை சொல்வது. இதில் அவர்கள் problem solving ஜ புறக்கணித்து விட்டார்கள். அவர்கள் நோயாளிக்கு உதவி செய்ய வேண்டும், உதவி செய்தவரையும் கைவிடாமல், என்ற empathy ஐ வெளிகட்கிறார்களே தவிர, அவர்களின் உண்மையான வாஞ்சை அந்த பெண்ணுடன் fun அனுபவிப்பது. இதனால் அவர்களின் bad weather  நோயாளியை ஆம்புலன்ஸ் தவிர்த்து கொண்டு செலவதில் உள்ள சிக்கல்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. முக்கியமாக நோயாளின் நிலை மோசமடையாக் கூடிய நிலை. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்று பல சொல்லிக்கொண்டே போகலாம்.   
 

இதை எவ்வளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.

ஓர் உதாரணம்.. வைத்தியத்துறை சார்ந்து படிக்க ஒரு மாணவி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால்.. அதே மாணவி.. இரண்டாம் வருடப் படிப்பின் இடைநடுவில்.. அதனை தொடர முடியாது கைவிடுகிறார். 

இது கற்பனை அல்ல. நிஜச் சம்பவம்.  இதில் அந்த விற்பன்னர்களின் வடிகட்டல் பொறிமுறை எங்கே பிழைத்தது..???!

நோயாளி என்று வரும் போது.. உயிர் தான் முதன்மை. இப்போ தீ என்று வரும் போது உடமை அல்ல உயிர் தான் முக்கியமாக கருதப்படும். அதேபோல் தான் நோயாளி என்பதும். நோயாளியை சரியான நேரத்துக்கு சரியான இடத்தில் சமர்ப்பிப்பதன் மூலம்.. உயிர் காக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம். அதே நோயாளியை அம்புலன்ஸ் வந்து தான் காப்பாற்றிச் செல்ல வேண்டும் என்று நினைத்தால்.. நிச்சயம்.. அது உயிர் காக்கும் வாய்ப்பை மேற்குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் குறைக்கவே வாய்ப்புண்டு. அதனால் தான் எப்போதும் மருத்துவத்துறையில்.. patient first என்று சொல்வார்கள். 

6 hours ago, உடையார் said:

இன்று வரை ஒன்றுக்கு மேல் நேர்முக தேர்வுக்கு சென்றதில்லை, அத்துடன் நானாகதான் விலகியது பல கொம்பனிகளிலிருந்து. 

அவுஸ்திரேலியாவுக்கு வந்து ஒரு கிழமையில் வேலை கிடைத்தது. இதற்கு நான் மாட்டும் காரணமில்லை நண்பர்களும் & எங்கள் வேலைக்குமுள்ள கேள்வியே.

பல பில்லியன் முதலீட்டுகளுடன் விளையாடுகின்றோம் 😁

உண்மையில் இது திறமைக்கு மேல்.. உங்கள் மனோதிடத்திலும் இயல்பாக நேர்முகத் தேர்வை சந்திப்பதிலும் கூடிய அளவு தங்கி இருந்திருக்கும்.

எனது நண்பர்.. படிப்பில் நல்ல கெட்டிக்காரர். ஆனால் நேர்முகத்தேர்வில் சறுக்கிக்கொண்டே இருந்தார். அதற்காக அவர் திறமை இல்லாதவர் எனபதல்ல அர்த்தம். அந்தச் சந்தர்ப்பதில் அங்கு எதிர்பார்க்கப்பட்டதை இயல்பாக வெளிப்படுத்தத் தவறியமை தான் காரணம். 

சில சந்தர்ப்பங்களில் நேர்முகத் தேர்வாளர்கள் ஏலவே தீர்மானிக்கப்பட்ட முடிவில் இருந்து கொண்டு நேர்முகத் தேர்வு செய்வதும் உண்டு. இப்படியான பல காரணிகள்.. நேர்முகத் தேர்வுக்கு பின்னாடி இருப்பதையும் அதனை எதிர்கொள்பவர்கள் தெரிந்து கொள்வது.. சலிப்படைவதை.. பீதியடைவதைக் குறைக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

நீஙகள் IT துறையினர் தானே நெடுக்கர்?

இப்போ எங்கும் எதிலும் IT.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்வியை பல வருடங்களுக்கு முன்னர் எங்கோ படித்த நினைவு. இங்கு கருத்தெழுதிய சிலரும் கட்டாயம் பார்த்திருப்பார்கள்☺️

இப்போதெல்லாம் பல ஒன்லைன் சோதனைகள் மூலம் துறை சம்பந்தமான அறிவையும், behavioural சம்பந்தமான psychoanalysis சோதனைகளையும் தாண்டியபின்னர்தான் ஒருவரின் CV hiring manager இடம் வருகின்றது. Programming என்றால் கட்டாயம் இரண்டுநாள் மெனக்கெட்டு செய்யவேண்டிய ஒரு task கொடுத்து, அதைப் பார்த்துத்தான் நமது ரீமில் interview க்கு கூப்பிடுவார்கள். அதில்தான் அதிக கேள்விகள் இருக்கும்.

அதன் பின்னர் ஒரு Skype video call மூலம் ஆரம்பக்கேள்விகளைக் கேட்டு திருப்தியான பின்னர்தான் நேரடியான interview நடக்கும். வேலை முன் அனுபவமில்லாத பல்கலைக்கழக மாணவர்கள் எனில் அவர்கள் செய்த ஆராய்ச்சிகளிலும், படிப்புக்கு வெளியே செய்யும் விடயங்களிலும் கேள்விகள் கேட்கப்படும். அனுபவம் உள்ளவர்களிடம் அநேகமாக அவர்களின் வேலையை எப்படிச் செய்தார்கள் என்ற கேள்வியே திரும்பத் திரும்ப வரும். Team க்கு எடுக்கலாமா என்பதுதான் முக்கியம். தானும் தன்பாடுமாக வேலை செய்பவரை, அடுத்தவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய  விருப்பமில்லாதவரை மூன்று, நான்கு கேள்விகளில் அடையாளம் காணலாம்.

அண்மையில் ஒரு interview இல் என்னுடன் கூட இருந்தவர் உன்னுடைய வீட்டு garden க்குள் ஒட்டகச் சிவிங்கி வந்தால் என்ன செய்வாய் என்று கடைசிக்கேள்வியைக் கேட்டார். 😮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Nathamuni said:

ஒருத்தரும் வேலை எடுக்க விருப்பமில்லை போல கிடக்குது. லொக்டவுணால வந்த பிரச்சணை. 😂

வீட்ட இரூங்கோ காசு தாறம் எண்டு அரசாங்கமே சொல்லும் போது நீங்கள் நேர்முக தேர்வொடு வாறீங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) பூட்டுக்கிற கேஸ் ஒண்டு. அதனை கவனத்திலே கொள்ளத்தேவையில்லை. 

2) முன்பு எனக்கு உதவியவர். எவரிடம் அதிகூடிய பலனை அடைந்தாயிற்று. எனவே அவரைக் காணாதது போல போக வேண்டியதுதான்

3) பொண்ணுங்களுக்கா பஞ்சம். சக்கலக்க பேபி சக்கலக்க பேபி பாட்டில சுஸ்மிதா சென் ஆடுற (😜) பாட்டில வாறதுபோல , காசிருந்தா அழகான பொண்ணுங்க தானா வந்து விழுவாங்க. எனவே என்பாட்டுக்கு சிரிச்சுக்கொண்டு வேலைக்குப் போவேன்.

(எல்லோரும் போல நான் சிந்திக்க வேண்டுமா ? 😏 Ah. அதனால் இடக்கு மடக்கா யோசித்துப் பார்த்தேன். 😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இதை எவ்வளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.

ஓர் உதாரணம்.. வைத்தியத்துறை சார்ந்து படிக்க ஒரு மாணவி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால்.. அதே மாணவி.. இரண்டாம் வருடப் படிப்பின் இடைநடுவில்.. அதனை தொடர முடியாது கைவிடுகிறார். 

 

2 hours ago, nedukkalapoovan said:

இதை எவ்வளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.

ஓர் உதாரணம்.. வைத்தியத்துறை சார்ந்து படிக்க ஒரு மாணவி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால்.. அதே மாணவி.. இரண்டாம் வருடப் படிப்பின் இடைநடுவில்.. அதனை தொடர முடியாது கைவிடுகிறார். 

இது கற்பனை அல்ல. நிஜச் சம்பவம்.  இதில் அந்த விற்பன்னர்களின் வடிகட்டல் பொறிமுறை எங்கே பிழைத்தது..???!

ஏன் மருத்துவம் படித்து முடித்த பலர் investment banking க்கு பணம் விரும்பி (emotional intelligence மாற்றம்) வருவதை கண்டு உள்ளேன்.  

emotional intelligence என்பது குறிப்பிட்ட நேரம் வரைக்கும்  (நேர்முகத் தேர்வு) உள்ள உண்மையான விருப்பு, வெறுப்பு, பொதுவாக natural disposition ஐ காட்டுவது என்பதும், மற்றும் emotional intelligence ஐ பயிற்றுவிப்பது முடியாதது கடந்த கால அனுபவங்களை நேரடியா அனுபவிக்காமல் என்பது  பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

அதனால், ஓர் குறிப்பிட்ட துறைக்கு emotional intelligence ஐ கொண்டவர்கள் அந்த துறையில் நின்று பிடிப்பதற்கு சாத்ய கூறுகள் அதிகம்.

ஆனால், emotional intelligence மாறலாம் ஏனெனில் அது வாழ்க்கையில் ஏற்றப்படும் அனுபவங்கள், அதனால் வரும் உணர்வுகளின் அடிப்படையில் விருத்தி அடைவது.

HR emotional intelligence ஐ ஓர் skill ஆக பார்க்கிறது; ஆனால் அது  உண்மையில் language of emotional intelligence.

 

2 hours ago, nedukkalapoovan said:

அதே நோயாளியை அம்புலன்ஸ் வந்து தான் காப்பாற்றிச் செல்ல வேண்டும் என்று நினைத்தால்..

அம்புலன்ஸ் வந்து தான் நோயாளி செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. அந்த முடிவை மருத்துவ துறையே  எடுக்க முடியும். உரிய முறையில் patient ஐ கையாள  பயிற்றுவிக்கப்படாதவர்களால் மற்றும் வசதி இல்லாத வாகனம்  நோயாளியின் நிலையை மோசமடைய வைக்கலாம், சில வேளைகளில் அது  நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது . இதில் எனது நேரடி அனுபவமும் உள்ளது.

இந்த direction ஐ, தான காரில் கொண்டு சேர்பதா அல்லது ஆம்புலன்ஸ் இற்கு காத்திருப்பதா, நோயாளியின் நோயை குணப்படுவதை இயலுமானவரை வேகமாகவும், இந்த முடிவினால் ஏற்படும் விளைவுகள் மிகவும் குறைவாகவும் இருபதற்கு எது பொருத்தமானது என்பதை சாதாரணமான ஒருவர் எடுக்கவும் கூடாது.  அந்த முடிவை மருத்துவ துறையே  எடுக்க வேண்டும். இதில் எனது நேரடி அனுபவமும் உள்ளது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

அண்மையில் ஒரு interview இல் என்னுடன் கூட இருந்தவர் உன்னுடைய வீட்டு garden க்குள் ஒட்டகச் சிவிங்கி வந்தால் என்ன செய்வாய் என்று கடைசிக்கேள்வியைக் கேட்டார்.

இது ஒன்றும் பெரிய கேள்வி அல்ல. கனவிலும் எதிர்பார்க்காத நிகழ்வை எதிர்நோக்கிகிறீர்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் உள்ளாகுபவர், cool ஆக calm, breathing normal ஆக இருக்க வேண்டும். ஒரு போதுமே, எந்த விலங்கு என்றாலும் மனித வாடையும், சஞ்சரமும் அதை அச்சுறுத்தும். இதில் அதுவும் தெரியாத ஒட்டகச் சிவிங்கி.  


வீட்டில் இருந்து சத்தம் சந்தடி இல்லாமல் வெளியேற வேண்டும் மனித சஞ்சாரத்தை அகற்றுவதத்திற்காக .

அயலவருக்கும்  அமைதியாக, மிகவும் மெதுவான தொனியில்  தெரியப்படுத்தவும்,   சத்தம் சந்தடி இல்லாமல் வெளியேறுமாறு வேண்டவும்.   

இவை எல்லாமே ஒட்டகச் சிவிங்கியை கூல் ஆக வைத்திருக்கும் முயற்சி.  

ஓரளவு தூரச் சென்று, முதலில் RSPCA ஐ  தொடர்பு கொண்டே, RSPCA  அறிவுறுத்தலின் படி அடுத்த நகர்வு.  

உடனடியாக அவசர சேவைகளை அழைப்பது தவிர்க்கப்பட வேண்டும், அவர்களின் siren சத்தம் மற்றும் flash ஒட்டகசிவிங்கியை அச்சுறுத்தும் என்பதால். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

ஓரளவு தூரச் சென்று, முதலில் RSPCA ஐ  தொடர்பு கொண்டே, RSPCA  அறிவுறுத்தலின் படி அடுத்த நகர்வு.  

உடனடியாக அவசர சேவைகளை அழைப்பது தவிர்க்கப்பட வேண்டும், அவர்களின் siren சத்தம் மற்றும் flash ஒட்டகசிவிங்கியை அச்சுறுத்தும் என்பதால். 

இப்படியான பதில் வரவில்லை. 

I’ll admire the beauty and size of the giraffe 🦒 என்ற பதில் வந்தது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

I’ll admire the beauty and size of the giraffe

அப்படி செய்யும் போது, when the giraffe capture the glance of the admirer,  giraffe இன் reaction, சாதாரணமான துள்ளல், அநேகமாக அவர் தலையை அல்லது கழுத்தை பிளக்கும் வலிமை கொண்டது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தக் கேள்வியை பல வருடங்களுக்கு முன்னர் எங்கோ படித்த நினைவு. இங்கு கருத்தெழுதிய சிலரும் கட்டாயம் பார்த்திருப்பார்கள்☺️

இப்போதெல்லாம் பல ஒன்லைன் சோதனைகள் மூலம் துறை சம்பந்தமான அறிவையும், behavioural சம்பந்தமான psychoanalysis சோதனைகளையும் தாண்டியபின்னர்தான் ஒருவரின் CV hiring manager இடம் வருகின்றது. Programming என்றால் கட்டாயம் இரண்டுநாள் மெனக்கெட்டு செய்யவேண்டிய ஒரு task கொடுத்து, அதைப் பார்த்துத்தான் நமது ரீமில் interview க்கு கூப்பிடுவார்கள். அதில்தான் அதிக கேள்விகள் இருக்கும்.

அதன் பின்னர் ஒரு Skype video call மூலம் ஆரம்பக்கேள்விகளைக் கேட்டு திருப்தியான பின்னர்தான் நேரடியான interview நடக்கும். வேலை முன் அனுபவமில்லாத பல்கலைக்கழக மாணவர்கள் எனில் அவர்கள் செய்த ஆராய்ச்சிகளிலும், படிப்புக்கு வெளியே செய்யும் விடயங்களிலும் கேள்விகள் கேட்கப்படும். அனுபவம் உள்ளவர்களிடம் அநேகமாக அவர்களின் வேலையை எப்படிச் செய்தார்கள் என்ற கேள்வியே திரும்பத் திரும்ப வரும். Team க்கு எடுக்கலாமா என்பதுதான் முக்கியம். தானும் தன்பாடுமாக வேலை செய்பவரை, அடுத்தவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய  விருப்பமில்லாதவரை மூன்று, நான்கு கேள்விகளில் அடையாளம் காணலாம்.

அண்மையில் ஒரு interview இல் என்னுடன் கூட இருந்தவர் உன்னுடைய வீட்டு garden க்குள் ஒட்டகச் சிவிங்கி வந்தால் என்ன செய்வாய் என்று கடைசிக்கேள்வியைக் கேட்டார். 😮

எனக்கு வாசித்த நினைவு இல்லை ...யாழில் இணைத்தீர்களா?
உங்களிடம் எரிச்சலும் ,தற்பெருமையும் அதிகமாயுள்ளது குறைக்க பாருங்கோ,  இல்லாட்டில் 
உடம்பு பிட்டாய் இருந்தாலும் பிரஷர் வந்திடும்  😂🤩🤩

என்னைக் கேட்டால் நான் அதனோடு நின்று செல்பி எடுப்பேன் என்று சொல்லியிருப்பேன் tw_lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

உங்களிடம் எரிச்சலும் ,தற்பெருமையும் அதிகமாயுள்ளது குறைக்க பாருங்கோ

எரிச்சல் கட்டாயம் இல்லை🤪

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.