Jump to content

சுமந்திரனால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 20 பேருக்கு நேர்ந்த கதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டில் இதுவரையில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராலும் பிரதமரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் 91 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போதுவரையில் மொத்தமாக 106 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 15 முன்னாள் போராளிகள் கைது செய்யபப்ட்டு பயங்கரவாதத்தடைப்பிரிவுப் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ் பத்திரிகை ஒன்று தகவல்கள் வெளியிட்டுள்ளது.

மொத்தமாக சிறையிலும் தடுப்புக்காவலிலும் தடுத்தும் அடைத்தும் வைக்கப்பட்டிருக்கும் தண்டனை விதிக்கப்பட்ட, வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் மற்றும் விளக்கமறியல் கைதிகளுமாக 91 அரசியல் கைதிகளாகயிருந்தயிருந்த 91 அரசியல் கைதிகளுடன் கொரோனா காலத்தில் கைது செய்யப்பட்ட சுமந்திரன் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 15 கைதிகளுடன் தற்பொழுது மொத்தமாக 106 பேர் அரசியல் கைதிகளாக அடையாளப்பப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுமந்திரன் மீது தாக்குதல் நடத்த சதியில் ஈடுபட்டதாக 2017 ஆம் ஆண்டு தை மாதம் 13ம் திகதி 5 போராளிகள் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் சேர்த்து மொத்தமாக 20 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் கால்கள் மற்றும் கைகள் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

https://www.tamilwin.com/politics/01/248546?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 20 பேருக்கு நேர்ந்த கதி

தலைப்பிற்கும் செய்திக்கும் தொடர்பில்லையே. 

(மகிந்தானந்த அழகாக தமிழ் பேசுகிறார் 😀👍)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஐ.பீ.சி தமிழ் இப்படித்தான் இருக்கும்..செய்திகளே...இப்படிக் குழறுபடி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

collage.jpg

பாறுக் ஷிஹான்-
சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் கட்சி வேட்பாளர்களை திங்கட்கிழமை (15) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கல்முனை கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

சுமந்திரன் பற்றி நான் பெரிதாக எடுத்துக்கெள்வதில்லை அவருக்கு வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது. அவர் கொழும்பிலே பிறந்து வாழ்ந்தவர். சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர்
கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடையும் என்பதை உணர்ந்து கொண்டுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இங்கு வந்து மக்களை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எங்களுடன் ஒப்பிடும் போது சுமந்திரன்அரசியல் கத்துக்குட்டி தான். என்றார்.

http://www.importmirror.com/2020/06/15.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

தலைப்பிற்கும் செய்திக்கும் தொடர்பில்லையே. 

சுமந்திரனும் தாங்களும் ஒன்றில்லை, எதிரிகள்  என்று காட்டுவதன் மூலம் தமிழ் மக்களின் மனங்களில் சுமந்திரனுக்கு ஒரு அனுதாப அலையை ஏற்படுத்த முயற்சிக்கிற மாதிரி தெரியுது. அப்படிப்பட்டவருக்கு இராணுவ பாதுகாப்பு. வேடிக்கை ... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.