Jump to content

கலட்டியில் பெண்களுடன் சேட்டைவிட்ட நால்வர் நையப்புடைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலட்டியில் பெண்களுடன் சேட்டைவிட்ட நால்வர் நையப்புடைப்பு

201912271234282124_real-estate-owner-attack_SECVPF.jpg?189db0&189db0

 

 

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் வீதியால்  செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளளது.

கலட்டி வீதியால் செல்லும் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்களின் தொல்லை தாங்காமல், குறித்த பெண்கள் தமது உறவினர்களிடம் விடயத்தை தெரிவித்ததை அடுத்து குறித்த பெண்களின் உறவுக்காரர்களால்  சம்பந்தப்பட்ட இளைஞர்கள் நையப்புடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://newuthayan.com/கலட்டியில்-பெண்களுடன்-சே/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்ப பெடியள்... வயதுக்  கோளாறில் செய்திருக்கலாம்.

நாலு தட்டு, தட்டி... வெருட்டிப் போட்டு விட்டிருக்கலாம்.
ஆஸ்பத்திரியில்... அனுமதிக்கும் அளவிற்கு, அடித்தது சரியல்ல.

Link to comment
Share on other sites

தொடர்ச்சியாகச் சேட்டையில் ஈடுபட்டவர்களாம். கொடுக்கத்தான் வேண்டும். மற்றவர்களும் பிரச்சனை. இப்போ நம்மவர்களாலும் பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சின்னப்ப பெடியள்... வயதுக்  கோளாறில் செய்திருக்கலாம்.

நாலு தட்டு, தட்டி... வெருட்டிப் போட்டு விட்டிருக்கலாம்.
ஆஸ்பத்திரியில்... அனுமதிக்கும் அளவிற்கு, அடித்தது சரியல்ல.

அது தானே பாஸ், நாம பார்க்காததா?

ஓரேயடியா ஒன்றை மட்டுமே ராகட் பண்ணப்படாது எண்டு தெரியாட்டி, ஆஸ்பத்திரில படுத்து எழும்பத்தான் வேணும்.

கூட்டமா, பரந்து பட்டு கவர் பண்ணணும். நாம தணிய போகேக்க, முன்பின் பார்காதது போல போயிர வேணும்.

பிள்ளை கன்பீயூஸ் ஆயிரும். இவங்க எப்ப லேன்ர்ன் பண்ணி, எப்ப திருந்தப் போறாங்கப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் வீதியால் செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேஷ்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் காயமடைந்த இளைஞர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளளது.

கலட்டி வீதியால் செல்லும் பெண்களுடன் தொடர்ச்சியாக சேஷ்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்களின் தொல்லை தாங்காமல், குறித்த பெண்கள் தமது உறவினர்களிடம் விடயத்தை தெரிவித்ததை அடுத்து குறித்த பெண்களின் உறவுக்காரர்களால் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் நையப்புடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://ilakkiyainfo.com/யாழில்-பெண்களுடன்-சேஷ்டை/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.