Jump to content

40 வருடங்களில் நலிந்த தமிழ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

40 வருடங்களில் நலிந்த தமிழ்

[30 - May - 2007]

* `ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே' என்ற மனப்பான்மையால் ஏற்பட்ட பின்னடைவு

தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு விழாவில் பேசும்போது, தமிழ் வானொலி, தொலைக்காட்சிகளில் செய்தி படிப்பவர்கள் எப்படித் தமிழை உச்சரிக்கிறார்கள் என்பதைத் தனக்கே உரிய தனி முத்திரையோடு, `வல்லுவர், சொள்ளுவர்" என்பன போன்ற எடுத்துக்காட்டுகளைக் கூறி விளக்கினார்.

தமிழகத்தில், "நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், இளங்கோ, இளம்பரிதி, தொல்காப்பியன், தமிழரசி, வளர்மதி, மங்கையற்கரசி, அருள்மொழி, மான்விழி, தேன்மொழி, கனிமொழி போன்ற பெயர் கொண்டவர்களை இன்று நீங்கள் பார்த்தால், அவர்கள் அனைவரும் 99 விழுக்காடு, குறைந்தது 40 வயதைத் தாண்டியவர்களாகவே இருப்பார்கள்.

"மகா கனம் பொருந்திய, அக்ராசனர் ஷ்ரீமான்.. அவர்களே" என்று பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்ததை, "இன்றைய கூட்டத்தின் தலைவர் மதிப்பிற்குரிய.... அவர்களே" என்று நல்ல தமிழில் மாற்றிக்காட்டிய தமிழ்ப்பற்றாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, மேற்கூறிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார்கள்.

தமிழ்ப் பெயரை மட்டும் சூட்டி, அவர்களை ஆங்கிலக் கல்வி வழியில் படிக்க, "கான்வென்டுகளுக்கு" அனுப்பி விட்டார்கள்.

ஆதலினால், நல்ல தமிழ்ப் பெயரை வைத்திருக்கும் பெற்றோர், தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஆர்த்தி, ராஜேஷ், ஆதித்யா, அபிஷேக், தயாநிதி, அர்ச்சனா, உதயநிதி, அம்ரீதா, ப்ரீதி" போன்ற வடமொழிப் பெயர்களை வைத்தார்கள்.

தலைவர்கள் ஊரெங்கும் சென்று நல்ல தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்கு சூட்டுங்கள் என்று பிரசாரம் செய்தார்களே தவிர, தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழி உணர்வை ஊட்டவில்லை. ஒருவேளை நேரமில்லாமல் போயிருக்கலாம்.

நாற்பதாண்டுகளுக்கு முன் நல்ல தமிழை, அழகு நடையில், அடுக்கு மொழியில் நானிலமெங்கும் பேசியவர்கள்,திரைப்படம் போன்ற அறிவியல் அற்புதங்களின் மூலம் தமிழ் பரப்பி நல்ல பொருள் ஈட்டினார்கள்.

பின்னர், தொலைக்காட்சிகளின் மூலம் பொருளீட்ட எண்ணி, தமிழை விற்கத் தொடங்கினார்கள். இங்கேதான் விளைந்தது பெருந்தீமை. ஒரு நிறுவனத்தின், தொலைக்காட்சி வணிக வளத்தைப் பார்த்து, அவர்களைப் போலவே தமிழை மூலதனமாக்கிப் பொருளீட்டியவர்கள் போட்டிக்கடையைத் திறந்தார்கள்.

இரண்டு தமிழ் வியாபார நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு, தமிழை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, ஏறத்தாழ தமிழ்த்தாயை பக்கவாத நோய்க்கு உள்ளாக்கி விட்டார்கள்.

இந்த ஆங்கிலச் சொற்றொடரில் "நான் அடுத்த முறை மிகச் சிறப்பாக ஒரு பாடலைப் பாடுவேன்" என்று இவர் கூற வருகிறார். ஆனால், இந்தத் தமிழ்ச் சொற்றொடரை எப்படி ஆங்கிலத்தில் கூறுவது என்று இவருக்குத் தெரியவில்லை என்பதுதான் இதில் உள்ள பரிதாபம்.

நம்முடைய வினாவெல்லாம், நமக்கு நன்கு தெரியாத ஒரு மொழியில் பேசி `நம்முடைய முட்டாள்தனத்தை நாமே ஏன் உலகிற்குப் பறைசாற்ற வேண்டும்" என்பதோடு, "வீணாக, ஆங்கிலத்தை தவறாகப் பேசி ஆங்கிலேயர்களின் கோபத்திற்கும், தமிழை தப்பும் தவறுமாகப் பேசி, தமிழர்களின் கோபத்திற்கும்" இந்தச் சின்னப்பிள்ளைகள் ஆளாகும் வண்ணம் ஏன் இவர்களின் பெற்றோர் இவர்களை வளர்க்கிறார்கள் என்பதும்தான்.

எந்த மொழியையும் உருப்படியாக கற்காமல் "நாய் என்று என்னை அழைத்தாலும் அதையும் அழகாக ஆங்கிலத்தில் அழையுங்கள். `மம்மி' என்றும் `டாடி' என்றும் அழைப்பதைப்போல" என்று எழுத வேண்டிய நிலைக்கு "இவள் என்று பிறந்தனள் என்றுணரா" நிலையைக் கொண்ட தமிழும் தமிழ்ச் சமுதாயமும் இந்த நாற்பதாண்டுகளில் தள்ளப்பட்டு விட்டன.

தினமணி

தினக்குரல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

40 வருடங்களில் நலிந்த தமிழ்

ஆதலினால், நல்ல தமிழ்ப் பெயரை வைத்திருக்கும் பெற்றோர், தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஆர்த்தி, ராஜேஷ், ஆதித்யா, அபிஷேக், தயாநிதி, அர்ச்சனா, உதயநிதி, அம்ரீதா, ப்ரீதி" போன்ற வடமொழிப் பெயர்களை வைத்தார்கள்.

மாறனின் பிள்ளைகளுக்கு வடமொழிப் பெயர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் என்னமும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பெயர் என்பது மதத்தின் அடையாளம் என்று. அதனால் தான் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கப்பெயர்களையும், இசுலாமியர் இஸ்லாமியப் பெயர்களையும், இந்துக்கள் வடமொழிப் பெயர்களையும் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலை மாறவேண்டுமானால் ஒட்டுமொத்த மாற்றம் அனைவரும் செய்ய வேண்டும். அதைத் தூண்டவேண்டும். ஆனால் வெறுமனே, ஒரு தரப்பை மட்டும் மாறச் சொல்லிக் கொண்டிருப்பது என்பது மதம் மீதனான வக்கிரமாகத் தான் இருக்கக் கூடும்.

பழந்தமிழர்கள் காட்டுமிராண்டிகள், புதுத் தமிழ் சாதனை செய்வோம் என்று புறப்பட்டவர்களே தங்களின் பிள்ளைகளின் பெயர்களை பிறமொழிகளில் வைக்கின்றபோது இந்த நிலையை எவ்வாறு சொல்வது? மற்றவர்கள் எல்லோரும் திருந்த வேண்டும். இவர்கள் திருந்தமாட்டார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் என்னமும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பெயர் என்பது மதத்தின் அடையாளம் என்று. அதனால் தான் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கப்பெயர்களையும், இசுலாமியர் இஸ்லாமியப் பெயர்களையும், இந்துக்கள் வடமொழிப் பெயர்களையும் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மதத்தின் பேரிலும் தூய தமிழ்ப் பெயர்களை வைக்கலாம். முருகனை விரும்புபவர்கள் சேயோன், சேந்தன் என்ற பெயரையும், அம்மனை விரும்புபவர்கள் உமையாள், உமை என்ற பெயர்களையும், சிவனை விரும்புபவர்கள் மாதுளன் என்ற அழகிய தமிழ்ப்பெயர்களையும், கத்தொலிக்கர்கள் சூசை, அருளப்பர் என்ற தமிழ்ப்பெயர்களையும் இடலாம். முன்பு பழைய யாழ்களத்தில் குளக்காட்டன் அவர்களின் கருத்தினை வாசித்துப் பார்க்க

http://www.yarl.com/forum/index.php?showtopic=5041

Link to comment
Share on other sites

எனது சகோதரனின் பெயர் 'கஜன்". இது தமிழ்ப்பெயரா அல்லது வடமொழிப்பெயரா ?

வடமொழி,

தங்கள் பெயர் கூட தமிழ் கிடையாது.

Link to comment
Share on other sites

மாறனின் பிள்ளைகளுக்கு வடமொழிப் பெயர்கள்

கந்தப்பு

தயாநிதி என்பது மாறனின் பிள்ளையின் பெயர் மாத்திரமல்ல, கருணாநிதியின் மகன் அழகிரியின் மகனின் பெயரும் கூட. அதேபோல கருணாநிதி கூறியுள்ள பெயர்களில் உள்ள உதயநிதியும் ஸ்ராலின் மகனின் பெயர்தான்.

Link to comment
Share on other sites

எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன.

வரலாற்று ஆய்வாளர்் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது.

நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அழகான தமிழ்ப்பெயர்கள் பண்டைத் தமிழ் மன்னரின்் பெயர்களாக இருந்தன.

பிற்காலத்தில் ஆரியச் செல்வாக்கிற்குட்பட்டிருந்த தமிழ் மன்னர் இராசராசன், இராசேந்திரன், குலசேகரன், இராசராசேந்திரன், சுந்தரபாண்டியன் என்பன போன்ற வடமொழிப்பெயர்களைக் கொண்டிருந்தனர். இக்காலத்திலுங்கூடத் தமிழர் இட்டு வழங்கும் பெயர்களை வைத்து அவர்் தமிழரா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது.

எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும். தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு நூற்றுக்கூறுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை உணர்ந்திலர்.

அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவதுங் காண்க.

(1) அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.

(2) தூஷpகை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும். தூஷpத்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷpகை, தூஷpத்தல், தூஷணம் ஆகிய சொற்களில் ஒன்றின் வழியாகவே தூஷpகா (தூசிகா) என்ற சொல் பிறக்கிறது.

(3) வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்) கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும் இதனைக்கொள்ளலாம். அவ்விடத்துப் பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக் காணலாம்.

(4) மகிஷம் என்ற சொல்லின் வழியாக வருவதே மகிசன் என்ற பெயராகும். மகிஷம் என்பது எருமை எனப்பொருள்படும்.

(5) லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர். அமிர்தலிங்கம், சொர்ணலிங்கம், சொக்கலிங்கம், மகாலிங்கம், அன்னலிங்கம், கணேசலிங்கம் என்பன அவற்றுட் சிலவாம்.

பொருளை விளங்கிக் கொள்ளாது பெயரிடுதல். (எ.கா.) கறுப்பன், அடியான் எனத் தமிழிற் பெயரிடப்பின்னிற்பவர்் அதே பொருள் தரும் கிருஸ்ணன், தாஸ் என்ற வடமொழிப்பெயர்களை விரும்பி இடுவதோடு தமிழ் எழுத்தொலி மரபுகளையும் மதிக்கத் தவறிவிடுகின்றனர்.

தமிழ் வடமொழி

கருங்குழலி கிருஸ்ணவேணி

காரரசி கிருஸ்ணராணி

காரரசன் கிருஸ்ணராசா

பொன்னடியான் கனகதாஸ்

ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதித் தமிழொலி மரபை அழிக்கின்ற பெயர்களை வைப்பவரும் உளர். (எ. கா.) ஜனகன், ஜனா, ரமேஸ், ரதி, லஷ்மன், றஞ்சன், றஞ்ஜினி, ஸ்ரெலா, ஸ்கந்தராசா, ஹம்ஷன், லஷ்மி, புஸ்பா, சதீஸ்.

ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதியும் தமிழரென இனங் காட்டக் கூடாதெனவேண்டியுஞ் சிலர் பெயர் வைப்பதுண்டு. (எ. கா.) டிவகலாலா, கனகரட்ண, இந்திரபாலா, ஹரிச்சந்திரா,

ஒலிப்பு நயமுள்ளவையெனக்கருதியோ ஆகூழெண் (அதிட்ட எண்) நயம் கருதியோ எம்மவரால் இடப்படும் பொருளற்ற பெயர்களிற் சில: சுவீறஜன், லிபீசன், கரிஸ், டிலக்ஷன், டிலான், டிலானி.

பொருள்களையோ தொழில்களையோ அடிப்படையாகக் கொண்ட பெயர்களைச் சூட உளங்கொள்ளாதவரும் பிறமொழி நயப்பாளரும், பொருளற்ற பெயர்களைச் சூடிக்கொள்பவராயுமுள்ள தமிழர், பிறமொழியாளர் பலர் தமது பெயர்களைப் பின்வருமாறு இட்டு வழங்குதலைக் காண்கிலர் போலும்.

CHRIS SILVERWOOD - (SILVER- வெள்ளி. WOOD- மரம்)

இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் -1996 - 97.

TIGER WOOD - (TIGER - புலி. WOOD - மரம்)

அமெரிக்கக் கோல்வ் விளையாட்டு வீரர் -1997.

LIANE WINTER - (WINTER - குளிர்காலம்)

செர்மனிய மரதன் ஓட்ட வீராங்கனை -1975.்

DR. LE. DE. FOREST - (FOREST - காடு)

FILL எனப்படும் இசை ஒலியை கண்டுபிடித்த அமெரிக்கர். 1923

ALEXANDER GRAHAM BELL - (BELL - மணி)

தொலைபேசியைக் கண்டு பிடித்த அமெரிக்கர் - 1876.

COLT - (COLT - ஆண்குதிரைக்குட்டி)

ஒரு வகை றிவோல்வரைக் கண்டுபிடித்த அமெரிக்கர் - 1837.

ADAM SMITH - (SMITH - கொற்றொழிலாளி)

பழம் பெரும் பொருளியலறிஞர்.

GARY BECKER - (BECK - மலையருவி)

1992 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.

SIR RICHARD STONE - (STONE - கல்)

1984 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர்.

FREDERICK NORTH - (NORTH - வடக்கு)

இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1798-1805.

SIR ROBERT BROWNRIG - (BROWN - மண்நிறம்)

இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1812-1820

STERN SCOT GORDON BROWN -( BROWN- மண்நிறம்)

இங்கிலாந்தின் நிதியமைச்சர் - 1997.

ROBIN COOK - (ROBIN - ஒருவகைப் பறவை.

COOK - சமையலாளர்) - இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் - 1997.

DR. LIAM FOX - (FOX - நரி)

இங்கிலாந்தின் வெளியுறவுத் துறைத் துணைச்செயலர் - 1997.

மேலும் சில பெயர்கள் :-

ONION, SANDS, FIELD, BLACK, JUNGLE, BEANS, BRIDGE, BAMBOO, HOLDER

பொருள்புரியாது வேற்று மொழிச் சொற்களைப் பெயராகக் கொள்ளும்போது எழும் இடர்களை விளக்க மிகச் சில பெயர்களையே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். தமிழரால் இட்டு வழங்கப்படும் பெயர்களில் உள்ள இத்தகைய வழுக்களை வரிசைப்படுத்தின் அதுவே ஒரு நூலாக விரியும்.

தமிழர் தமிழ்மொழியிலே தம் பெயர்களைச் சூட்டிக்கொள்வதற்கு வேண்டிய தமிழ்ப்பெயர்கள் போதா என்ற குறையைப் போக்கும் பொருட்டும் அறியாமையினாலே பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களென மயங்கிச் சூட்டிக்கொள்ளும் எம்மவர்க்குத் தமிழ்ப்பெயர்களை அடையாளங்காட்டும் பொருட்்டும் தமிழ்ப் பெயர்ப்பட்டியலை ஆக்கும் முயற்சியில் இறங்கினோம்.

சங்க இலக்கியங்களிலும், நடைமுறைவழக்கிலும் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்ப்பெயர்களையும் வழக்கிழந்துள்ள தமிழ்ப்பெயர்களையும் சங்க இலக்கியங்களிலிருந்தும் பல்வேறு அகரமுதலிகளிலிருந்தும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளோம். மேலும், கூடுதலான பெயர்களை ஆக்கும் பொருட்டு, பொருள் பொதிந்த பொருத்தமான சொற்களை முன்னும் பின்னும் ஒட்டிப் பல பெயர்களை ஆக்கியுள்ளோம்.

முன்னொட்டுகளாகக் கையாளப்பட்ட சொற்களை அகர வரிசை ஒழுங்கில் நிறுத்தியும் அவற்றுக்கான பொருள்களை அவ்வவ்விடங்களிற் குறித்தும் அவற்றின் கீழ், பெயர்களை அகரவரிசை ஒழுங்கில் அமைத்துமுள்ளோம்.

பின் மொழிகளாயுள்ள சொற்களுக்கான பொருள்களைப் பட்டியலாக்கி அவ்வப்பாற் பெயர்ப்பட்டியலின் இறுதியில் இணைத்துள்ளோம்.

மக்கட்பெயர் அகரவரிசை, நடைமுறைத் தமிழ் வழிகாட்டி, தொடரியங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவதாக, ' தமிழ்ப்பெயர்க் கையேடு" - மக்கட்பெயர் 46இ000 - என்ற இக்கையேட்டை வெளியிடுகிறோம். இவ்வேடு 25இ000 பெண்பாற் பெயர்களையும் 21இ000 ஆண்பாற் பெயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இக் கையேட்டிற்கொடுக்கப்பட்டுள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக் குழந்தைகளுக்கு வண்ணத் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்.

'அந்தப் பெண்ணைப் பார்த்தால் தமிழ் பெண்ணைப் போல இருக்கிறதே' என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழ்ப் பெண்தான் என உறுதி செய்கிறோம். நமது மொழி, நமது உணவு, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள் இவையாவும் தமிழ்ப் பண்பாடு நாகரிகம் தேசியம் இவற்றின் குறியீடுகள் ஆகும்... நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்.நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்! "

சின்னக் குழந்தைகளுக்கு வண்ணத் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்.

நாகரிகம் அடைந்த காலம்தொட்டு மக்கள் தாங்கள் விரும்பிய பெயர்களைப் பொருட்களுக்கும் இடங்களுக்கும் குழந்தைகளுக்கும் இட்டு வருகின்றனர்.

'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தே' என தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார்.

தமிழில் பேரளவானவை காரணப் பெயர்களே. பிற்காலத்தில் காரணம் தெரியாத சொற்கள் இடுகுறிப் பெயர்கள் என அழைக்கப்பட்டன.

'அந்தப் பெண்ணைப் பார்த்தால் தமிழ் பெண்ணைப் போல இருக்கிறதே' என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழ்ப் பெண்தான் என உறுதி செய்கிறோம்.

நமது மொழி, நமது உணவு, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள் இவையாவும் தமிழ்ப் பண்பாடு நாகரிகம் தேசியம் இவற்றின் குறியீடுகள் ஆகும்.

முக்கியமாகப் பெயர்கள் தமிழர்களது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் குறியீடுகள்.

தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கின்றன. சங்க காலத்தில் பெயர்கள் தூய தமிழில் இருந்தன. பின்னர் வடமொழி ஆதிக்கத்தின் காரணமாக மன்னர்கள், புலவர்கள், குடிமக்கள், இடப்பெயர் ஆகியன ஆரியமயப் படுத்தப் பட்டன.

கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற தூய தமிழ்ப் பெயர்கள் பின்னர் மகேந்திரவர்மன், ராஜவர்மன், இராசராசன், குலோதுங்கன், வரகுணபாண்டியன் என வடமொழிப் பெயர்கன் ஆகின.

முதுகுன்றம் - விருத்தாசலம் ஆனது. மரைக்காடு - வேதாரணியம் ஆனது. மாமல்லபுரம் மாபலிபுரம் ஆனது. மயிலாடுதுறை என்ற அழகான பெயர் மாயூரம் ஆனது. கீரிமலை நகுலேஸ்வரம் ஆனது.

சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள் தொடக்கிய தனித் தமிழ் இயக்கம் காரணமாக வட மொழிப்பெயர்களை நீக்கி தனித் தமிழில் பெயர்கள் வைக்கும் பழக்கம் செல்வாக்குப்பெற்றது.

குழந்தைகளது பெயர்கள் மட்டும் அல்லாது வயது வந்தவர்களுடைய வடமொழிப் பெயர்களும் தமிழாக்கப்பட்டன.

சுவாமி வேதாசலம் அவர்கள் மறைமலை அடிகள் (சுவாமி-அடிகள், வேதம் - மறை, அசலம் - மலை) எனவும் சூரியநாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞர் (சூரியன்- பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி-கலைஞர்) எனவும் நாராயணசாமி நெடுஞ்செழியன் எனவும் கிருட்டிணன் நெடுமாறன் எனவும் சாத்தையா தமிழ்க்குடிமகன் எனவும் இராமையா அன்பழகன் எனவும் சோமசுந்தரம் மதியழகன் எனவும் தங்கள் பெயர்களை சங்க காலப் புலவர்கள் மன்னர்கள் பெயர்போன்று மாற்றிக் கொண்டனர்.

மிக அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் தனது இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களது வடமொழிப் பெயர்களை நீக்கிவிட்டுத் தனித் தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். தனது தந்தை இராமசாமியின் பெயரை தொல்காப்பியன் என மாற்றினார்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருமண அழைப்பிதழ்களில் விவாகம், சுப முகூர்த்தம், பத்திரிகை, ஸ்ரீ, வருஷம், மாஸம், தேதி, சிரஞ்சீவி, சௌபாக்கியவதி, கனிஷ்ட, சிரோஷ்ட, நிச்சயம், இஷ்டமித்திர, பந்து, ஜன சமேதராக விஜயம் செய்து தம்பதிகளை ஆசீர்வதித்து ஏகுமாறு பிரார்த்திக்கின்றேன் என்றுதான் எழுதப்பட்டது.

தனித்தமிழ் இயக்கம் காரணமாக இன்று திருமணம், நல்வேளை, அழைப்பிதழ், ஆண்டு, திங்கள், நாள், திருநிறைச் செல்வன், திருநிறைச் செல்வி, தலைமகன், தலைமகள், உறுதி, உற்றார் உறவினர், வந்திருந்து, மணமக்களை வாழ்த்தியருளும்படி வேண்டுகிறோம் என மாற்றப்பட்டு விட்டது.

அண்மைக் காலமாகத் தமிழ்ப் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் அல்லாத பெயர்களை வைக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. இந்தப் பெயர்கள் தமிழ் அல்லாதன மட்டுமல்ல, அவை பொருளற்றதாகவும் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக கஜன், டிலஷ்சனா, டில்ஷான், டிலக்ஷன், சாதனா, ரதிஷா, ஷாரா, ஷிரோமி, யூரேனியா, ஜெனாத், தர்ஷா, ஜசோன், ஆசா, கோசா, வவியன், லட்சிகா, நிருஜா, நிஷானி, நிருபிகா, அபிஷா, சுஜுதா, ஜீவிதன், நிரோஜன், நிரோஜி, வர்ஷன்போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.

தமிழர்களது பெயர் அவர்களது தேசிய அடையாளத்தின் குறியீடாகும். தமிழ்ப் பெயர்களைப் புறக்கணித்து விட்டு வடமொழிப் பெயர்களை வைப்பது தமிழர் பண்பாட்டை சீரழிப்பதாகும். தமிழ்த் தேசியத்தை சிதைப்பதாகும்.

ஒரு யூதனை அல்லது ஒர் ஆங்கிலேயனை அவனது பெயரை வைத்துக் கொண்டே கண்டு பிடிக்கலாம். தமிழர்களை அப்படிக் கண்டு பிடிக்க முடியாது.

பெற்றோர்கள் தமிழ் அல்லாத பெயர்களை வைப்பதற்கு அவர்களுக்கு தமிழின் தொன்மை, வண்மை, இளமை இனிமை, நீர்மை தெரியாததே காரணமாகும்.

தமிழ்மொழி பற்றிய அறியாமை காரணமாகவே வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். தமிழ் எது வடமொழி எது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. குறிப்பாக பஞ்சாங்கத்தைப் பார்த்து அல்லது அர்ச்சகர் சொல்வதைக் கேட்டு நடப்பதாலும் இந்தக் கேடு நடக்கிறது. புதிதாக முளைத்துள்ள எண்சாத்திரம் இன்னொரு காரணம் ஆகும்.

நிரோஜன் நிரோஜினி என்றால் முறையே மானம் அற்றவன் மானம் அற்றவள் என்று பொருள். அது தெரியாமல் அந்தப் பெயர்களைப் பெற்றோர்கள் வைக்கிறார்கள்.

தமிழில் மொழிமுதல் வராத எழுத்துக்கள் இருக்கின்றன. ட,ண ற,ண,ன,ர,ல,ழ,ள என்ற எட்டும் மொழிமுதல் வாரா. ஆனால் பெற்றோர்கள் இந்த அடிப்படை இலக்கண விதியை அறியாதவராய் எண்சாத்திரம் அல்லது பஞ்சாங்கம் பார்த்து இந்த எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்களை வைக்கிறார்கள். எண்சாத்திரம் பஞ்சாங்கம் பார்ப்பது மூடநம்பிக்கையாகும்.

தமிழில் அல்லி, அருள்மொழி, அன்பரசி, கலைமகள், கலையரசி, கோதை, நங்கை, நாமகள், நிலா, திருமகள், தமிழ்ச்செல்வி, பூங்கோதை, பூமகள், மங்கை, மலர், மலர்விழி, வள்ளி, அன்பரசன், இளங்கோ, கண்ணன், செந்தில், செந்தூரன், சேரன், பாரி, மாறன், முருகன், வேலன், போன்ற இனிமையான, அழகான, சின்னச் சின்னச் பெயர்கள் ஏராளமாக இருக்கின்றன.

முடிந்த மட்டும் அன் விகுதியில் முடியும் பெயர்களை வைத்தால் சந்த இனிமை மிகும். அதேபோல முடிந்த மட்டும் பெயர்களில் வல்லின எழுத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தனித் தமிழ்ப் பெயர்ப் பட்டியல் ஒன்று இத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறது. இதனை உங்கள் உறவினர்கள் நண்பர்கள் எல்லோருக்கும் கொடுத்துத் தனித் தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்ட ஊக்குவியுங்கள்.

ஏற்கனவே அறிவித்தபடி 1999-2004 ஆண்டு காலப் பகுதியில் தனித் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு இரண்டாயிரம் வெள்ளி (கூ2,000) பரிசு அடுத்த ஆண்டு பொங்கல் நன்னாளில் (தை 14, 2005) வழங்கப்படும்.

இந்தப் பரிசுத் தொகை தமிழீழம், இலங்கை, கனடா உட்பட புலம் பெயர்ந்த நாடுகளுக்கு பங்கிட்டுக் கொடுக்கப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் தகுதி பெற்றால் குடவோலை முறையில் பரிசுக்குரிய பெயர் தேர்ந்தெடுக்கப்படும்.

கழகத்தின் முடிவே இறுதியானது. கழக உறுப்பினர்கள் இதில்பங்கு கொள்ள முடியாது.

நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்

நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்!

பெண் குழந்தைகள்

அங்கயற்கண்ணி

அஞ்சலை

அங்கவை

அவ்வை

அவ்வையார்

அம்மை

அம்மையார்

அம்மைச்சி

அரசி

அரசியார்

அரிவை

அருவி

அருள்நங்கை

அருள்மங்கை

அருள்மொழி

அருளம்மை

அருளரசி

அருட்செல்வி

அல்லி

அல்லியரசி

அலர்மேல்மங்கை

அலைமகள்

அழகம்மை

அழகம்மா

அழகரசி

அழகி

அறிவு

அறிவரசி

அன்பரசி

அன்பழகி

அன்னக்கிளி

அன்னம்

அனிச்சம்

ஆண்டாள்

ஆட்டநத்தி

ஆடலரசி

ஆடலழகி

ஆடற்செல்வி

இசை

இசைச்செல்வி

இசையரசி

இசைவாணி

இளநிலா

இளமதி

இளவழகி

இளவரசி

இளவேணி

இளவேனில்

இன்பவல்லி

இனியவள்

இனியாள்

ஈழச்செல்வி

உமை

உமையம்மை

உமையரசி

உமையாள்

உலகம்மை

எழிலரசி

எழினி

எழில்

எழில்மங்கை

எழிலி

எழில்விழி

ஏழிசை

ஏழிசைச்செல்வி

ஏழிசைவல்லி

ஒளவை

ஓவியம்

ஓவியா

கண்ணகி

கண்ணம்மா

கண்மணி

கதிர்ச்செல்வி

கயல்விழி

கலைச்செல்வி

கலைமகள்

கலைமதி

கலையரசி

கலையழகி

கலைவாணி

கலைவிழி

கனிமொழி

காமவல்லி

காவிரி

கிளி

கிளிமொழி

குயிலி

குயிலினி

குரவை

குமரி

குமாரி

குணமாலை

குந்தவி

குந்தவை

குலக்கொடி

குலமகள்

குலப்பாவை

குழலி

குறமகள்

குறிஞ்சி

குறிஞ்சிமலர்

கொற்றவை

கொற்றவைச்செல்வி

கோதை

கோப்பெருந்தேவி

கோமகள்

கோமளம்

கோமளவல்லி

கோலமயில்

சுடர்

சுடர்க்கொடி

சுடரொளி

சுடர்விழி

செங்கமலம்

செந்தமிழ்

செந்தாமரை

செந்தினி

செம்பருத்தி

செண்பகம்

செல்லம்

செல்லக்கிளி

செல்வி

செவ்வந்தி

சேரன்மாதேவி

சேல்விழி

சூடாமணி

சோழன்மாதேவி

தங்கம்

தங்கம்மா

தணிகைச்செல்வி

தமிழ்

தமிழ்த்தென்றல்

தமிழ்நங்கை

தமிழ்மகள்

தமிழ்வாணி

தமிழ்ச்செல்வி

தமிழரசி

தமிழழகி

தமிழிசை

தமிழினி

தாமரை

தாமரை

தாமரைச்செல்வி

தாயம்மா

திருமகள்

திருமங்கை

திருமலர்

திருமொழி

திருப்பாவை

திருச்செல்வி

திருவாட்டி

தில்லை

தென்றல்

தேன்மொழி

துளசி

நங்கை

நடவரசி

நப்பசலையார்

நல்லிசை

நன்முத்து

நன்மொழி

நாச்சியார்

நாகம்மை

நாமகள்

நாவரசி

நிறைமதி

நிலமகள்

நிலா

நிலாவரசி

நிலாவழகி

பதுமை

பவளம்

பாவரசி

பாவை

பாரதி

பாரிமகள்

பூங்குழலி

பூங்கொடி

பூங்கோதை

பூதநாச்சியார்

பூம்பாவை

பூமகள்

பூமணி

பூமலர்

பூவரசி

பூவிழி

பூவை

பெண்ணரசி

பேரழகி

பொற்கொடி

பொற்செல்வி

பொற்பாவை

பொன்நகை

பொன்மகள்

பொன்மணி

பொன்மலர்

பொன்னம்மா

பொன்னி

மங்கை

மங்கையர்க்கரசி

மதிமலர்

மதியழகி

மண்டோதரி

மணவழகி

மணி

மணிமேகலை

மணியம்மை

மரகதம்

மரகதவல்லி

மல்லிகை

மலர்

மலர்க்கொடி

மலர்ச்செல்வி

மலர்மகள்

மலர்மங்கை

மலர்விழி

மலைமகள்

மலையரசி

மாசாத்தியார்

மாதவி

மாதேவி

மான்விழி

மீனாட்சி

முத்தமிழ்

முத்தழகி

முத்துவேணி

முல்லை

மெய்மொழி

மேகலை

யாழரசி

யாழினி

யாழ்நங்கை

வஞ்சி

வஞ்சிக்கொடி

வடிவரசி

வடிவழகி

வடிவு

வடிவுக்கரசி

வண்டார்குழலி

வண்ணமதி

வள்ளி

வள்ளியம்மை

வளர்மதி

வாணி

வான்மதி

வானதி

வானவன்மாதேவி

வெண்ணிலா

வெண்மதி

வெற்றிச்செல்வி

வெற்றியரசி

வேணி

ஆண் குழந்தைகள்

அண்ணா

அண்ணாத்துரை

அதியமான்

அய்யன்

அரங்கண்ணல்

அரசன்

அரசு

அரிசில்கிழான்

அரிசில்கிழார்

அருமை

அருள்

அருள்குமரன்

அருளரசன்

அருளரசு

அருட்குமரன்

அருட்செல்வர்

அருட்செல்வன்

அருண்

அருண்மொழி

அருள்மொழி

அருமை

அருள்

அருளம்பலம்

அழகு

அழகன்

அழகப்பன்

அழகப்பர்

அழகரசன்

அழகரசு

அழகியநம்பி

அறவாணன்

அறவாழி

அறவேந்தன்

அறிவன்

அறிவரசு

அறிவரசன்

அறிவழகன்

அறிவாளி

அறிவு

அறிவுக்கரசன்

அறிவுக்கரசு

அறிவுச்செல்வன்

அறிவுடைநம்பி

அறிவுமதி

அறிவுமணி

அறிவொளி

அன்பழகன்

அன்பரசு

அன்பரசன்

அன்பு

அன்புச்செல்வன்

அன்புமணி

அன்புமொழி

ஆசைத்தம்பி

ஆட்டனத்தி

ஆடலரசன்

ஆடலரசு

ஆய்

ஆரூரன்

ஆவூர்க்கிழார்

ஆழ்வார்

ஆற்றலரசு

ஆறுமுகம்

ஆனைமுகன்

இசைமணி

இசைவாணன்

இடைக்காடன்

இடைக்காடர்

இமயவரம்பன்

இராவணன்

இருங்கோ

இருங்கோவேள்

இலக்கியப்பித்தன்

இரும்பொறை

இலக்கியன்

இலங்கையர்க்கோன்

இலங்கையன்

இழஞ்சேரல்

இளஞ்;சேரலாதன்

இளங்கண்ணர்

இளங்கீரன்

இளங்கீரனார்

இளங்குமரன்

இளங்கோ

இளங்கோவன்

இளங்கோவேள்

இளஞ்செழியன்

இளஞ்சேட்சென்னி

இளஞ்சேரலாதன்

இளந்திருமாறன்

இளந்திரையன்

இளந்தேவனார்

இளநாகனார்

இளம்பரிதி

இளம்பாரதி

இளம்பாரி

இளம்பூதனார்

இளம்பூரணர்

இளம்பூரணன்

இளம்வழுதி

இளமுருகு

இளமுருகன்

இளமைப்பித்தன்

இளம்வழுதி

இளமுருகன்

இளஞ்சித்திரனார்

இளஞ்செழியன்

இளஞ்சேரல்

இளஞ்சேரலாதன்

இளந்திரையன்

இளவழகன்

இளவரசன்

இளவரசு

இறையன்

இறைவன்

இறையனார்

இன்பம்

இன்பன்

இனியன்

இனியவன்

ஈழவன்

ஈழவேந்தன்

உதியஞ்சேரல்

எழில்

எழில்வேந்தன்

எழிலன்

எழிலரசன்

எழிலழகன்

எழினி

ஒட்டக்கூத்தன்

ஓரி

கண்ணன்

கண்ணப்பன்

கண்ணையன்

கண்ணதாசன்

கமலக்கண்ணன்

கதிரவன்

கலைக்கோ

கலைச்செல்வன்

கலைப்புலி

கலைமதி

காரிகிழார்

கிள்ளி

கிள்ளிவளவன்

கீரன்

கீரனார்

குகன்

குட்டுவன்

குயிலன்

குணாளன்

குமணன்

குமரன்

குமரவேள்

குமாரவேல்

குயிலன்

கூத்தபிரான்

கூத்தரசு

கூத்தரசன்

கூத்தன்

கூத்தனார்

கூடலரசன்

கொற்றவன்

கோப்பெருஞ்சேரல்

கோமகன்

கோவலன்

கோவேந்தன்

கோவைக்கிழார்

கோவூர்

கோவூர்கிழார்

சங்கிலி

சாத்தன்

சாத்தனார்

சிலம்பரசன்

சிவன்

சிவனடியான்

சிற்றம்பலம்

சின்னத்தம்பி

சுடரோன்

செங்கையாழியான்

செங்குட்டுவன்

செந்தமிழ்

செந்தமிழன்

செந்தாமரை

செந்தில்

செந்தில்குமரன்

செந்தூரன்

செந்தில்சேரன்

செந்தூர்முருகன்

செந்தில்நாதன்

செந்தில்வேலன்

செந்திலரசன்

செம்பியன்

செம்பியன்செல்வன்

செம்மணன்

செம்மலை

செம்பரிதி

செல்லப்பன்

செல்லையா

செல்வம்

செல்வன்

செல்வமணி

செல்வக்கடுங்கோ

செல்வக்கோன்

செல்லையா

செழியன்

சேக்கிழார்

சேந்தன்

சேந்தன்கீரனார்

சேந்தன்பூதனார்

சேரமான்

சேரல்

சேரல்இரும்பொறை

சேரன்

சேரலன்

சேரலாதன்

சேயோன்

சோழன்

தங்கவேல்

தங்கவேலன்

தங்கவேலு

தணி;சேரன்

தணிகைமுருகன்

தணிகைவேலன்

தமிழ்

தமிழ்க்குடிமகன்

தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செழியன்

தமிழ்ச்சேரல்

தமிழ்ச்சேரன்

தமிழ்நாடன்

தமிழ்ப்பித்தன்

தமிழ்மணி

தமிழ்மாறன்

தமிழ்முடி

தமிழ்வண்ணன்

தமிழ்வாணன்

தமிழ்வேந்தன்

தமிழண்ணல்

தமிழப்பன்

தமிழரசன்

தமிழரசு

தமிழவன்

தமிழவேள்

தமிழன்

தமிழன்பன்

தமிழினியன்

தமிழேந்தல்

தமிழேந்தி

தணிகைவேலன்

தமிழ்மணி

தமிழ்மாறன்

தமிழ்வளவன்

தமிழன்பன்

தாமரைச்செல்வன்

தாமரைக்கண்ணன்

தாமரைமணாளன்

திரு

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசன்

திருநாவுக்கரசு

திருச்செல்வம்

திருமாவளவன்

திருமாவேலன்

திருமாறன்

திருமுருகன்

திருமூலர்

திருமூலன்

திருவரசன்

திருவள்ளுவர்

திருவள்ளுவன்

தில்லை

தில்லைக்கூத்தன்

தில்லைச்சிவன்

தில்லைச்செல்வன்

தில்லையம்பலம்

தில்லைவில்லாளன்

துரைமுருகன்

தூயவன்

தென்னவன்

தென்னரசு

தேவன்

தொண்டைமான்

தொல்காப்பியர்

தொல்காப்பியன்

நக்கீரர்

நக்கீரன்

நச்சினார்க்கினியர்

நச்சினார்க்கினியன்

நடவரசன்

நந்தன்

நம்பி

நம்பியூரான்

நலங்கிள்ளி

நற்கிள்ளி

நன்னன்

நன்மாறன்

நன்னன்

நன்னி

நாகநாதர்

நாகநாதன்

நாகனார்

நாவேந்தன்

நாவரசு

நாவலன்

நாவுக்கரசன்

நாவுக்கரசர்

நாவுக்கரசு

நாவேந்தன்

நிலவன்

நிலவரசன்

நிலாவன்

நீலவாணன்

நீலன்

நெடியவன்

நெடியோன்

நெடுஞ்சேரலாதன்

நெடுங்கண்ணன்

நெடுங்கிள்ளி

நெடுங்கோ

நெடுமால்

நெடுமாறன்

நெடுமான்

நெடுமானஞ்சி

நெடுமாலவன்

நெடுஞ்செழியன்

நெடுஞ்சேரலாதன்

பதுமனார்

பச்சையப்பன்

பரணர்

பரணன்

பரிதி

பரிதிவாணன்

பல்லவன்

பழனி

பழனியப்பன்

பழனிவேல்

பனம்பாரனார்

பாண்டியன்

பாணன்

பாரதி

பாரதிதாசன்

பாரதியார்

பாரி

பாவலன்

பாவாணன்

புகழ்

புகழேந்தி

புதுமைப்பித்தன்

பாடினியார்

பூதப்பாண்டியன்

பூதன்தேவனார்

பூங்குன்றன்

பூங்கவி

பூவண்ணன்

பெருங்கண்ணர்

பெருந்தேவனார்

பெருங்கடுங்கோ

பெருஞ்சேரல்

பெருஞ்சாத்தனார்

பெருஞ்சித்திரனார்

பெருந்தேவனார்

பெருநற்கிள்ளி

பெருமாள்

பெருவழுதி

பேகன்

பேரரசு

பேராசிரியர்

பேராசிரியன்

பேரறிவாளன்

பொருநன்

பொற்கோ

பொன்மணியார்

பொன்முடி

பொன்முடியார்

பொன்னிவளவன்

பொன்னையன்

மகிழ்நன்

மதி

மதியழகன்

மதிவாணன்

மணவழகன்

மணவாளன்

மணி

மணிமாறன்

மணிமுத்து

மணிமொழியன்

மணியன்

மணிவண்ணன்

மணியரசன்

மலர்மன்னன்

மலரவன்

மருதன்

மருதனார்

மருதபாண்டியன்

மருதமுத்து

மறைமலை

மறைமலையான்

மன்னர்மன்னன்

மன்னன்

மாங்குடிக்கிழார்

மாங்குடிமருதன்

மாசாத்தன்

மாசாத்தனார்

மாந்தரஞ்சேரல்

மாணிக்கம்

மாமணி

மாமல்லன்

மாமூலன்

மாமூலனார்

மாயவன்

மாயோன்

மாரிமுத்து

மாலவன்

மாறன்

மாறனார்

மாறன்வழுதி

முக்கண்ணன்

முகில்வண்ணன்

முகிலன்

முத்தரசன்

முத்து

முத்துக்குமரன்

முத்துவேல்

முத்தமிழ்

முத்தழகன்

முத்துக்கருப்பன்

முத்துக்குமரன்

முடியரசன்

முடிவேந்தன்

முருகப்பன்

முருகன்

முருகவேல்

முருகவேள்

முருகு

முருகையன்

முருகவேல்

முருகவேள்

மூவேந்தன்

மூலங்கிழார்

மேகநாதன்

மோசிகீரனார்

மோசிகொற்றனார்

மோசியார்

மோசுகீரன்

யாழரசன்

யாழ்பாடி

யாழ்ப்பாணன்

யாழ்வாணன்

வடிவேல்

வடிவேலன்

வடிவேற்கரசன்

வடிவேல்முருகன்

வண்ணநிலவன்

வணங்காமுடி

வல்லவன்

வல்லரசு

வழுதி

வள்ளல்

வள்ளிமணாளன்

வள்ளுவர்

வள்ளுவன்

வளவர்;கோன்

வளவன்

வாணன்

வானமாமலை

வில்லவன்

வில்லவன்கோதை

வெற்றி

வெற்றிக்குமரன்

வெற்றிச்செல்வன்

வெற்றியரசன்

வெற்றியழகன்

வெற்றிவேல்

வேங்கை

வேந்தன்

வேந்தனார்

வேயோன்

வேல்முருகன்

வேல்முருகு

வேலன்

வேலவன்

வேலுப்பிள்ளை

வேள்

வேழவேந்தன்

வைகறை

வைரமுத்து

http://www.tamilnation.org/forum/thangavelu/tamilnames.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எப்போதும் மலிந்து போய்த் தான் இருக்கின்றது. ஏனென்றால் சுயமான கலைச்சொற் கூட்டத்தை உருவாக்குவதை விட்டுவிட்டு, வடமொழி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, ஆங்கில எதிர்ப்பு என்று கத்திக் கொண்டு மட்டும் தானே நிற்கின்றோம். கடந்த 40 ஆண்டுகளில் அதிகம் மலிந்து போய் உள்ளது என்பது உண்மை.

முதலில் அரைகுறைத் தமிழில் பேசுகின்ற தொலைக்காட்சிகளை முதலில் தடை செய்ய வேண்டும். ஒன்று ஆங்கிலத்தில் நிகழ்ச்சி செய்யச் சொல்ல வேண்டும். இல்லை.. தமிழில் செய்யச் சொல்ல வேண்டும். ஆனால் இவர்களின் அரைகுறைத் தமிழ் என்பது மக்களுக்குள் இப்படி பேசுவது தான் நாகரீகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது.

இது தான் எல்லாவற்றையும் விட, மிகப்பெரிய குற்றமாகும்.

தமிழ் தேசியத்தை வளர்க்கப் புறப்பட்டவர் என்று பகுத்தறிவின்(??) தந்தைக்குக் கட்டுரை எல்லாம் எழுதுகின்றார்கள். ஆனால் அவரின் பெயரையும் பாருங்கள். அது கூடத் தமிழே இல்லை.

காதில் பூச்சுத்தலாம் என்று வெளிக்கிட்டார்கள் போல

Link to comment
Share on other sites

கலைவாணர் சம்பந்தப்பட்ட சம்பவம் ஒன்று. தலையங்கத்துடன் சம்மந்தப்படாது.

கலைவாணர் ஒருமுறை திருநெல்வேலிக்கு நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கிருந்த வேளையில் நண்பருடைய தாயார் நண்பர் தடுத்தும் கேட்காமல் திருநீறு இட்டுவிட்டார். கலைவாணரும் மிகவும் பணிவண்புடனேயே அதை அணிந்து கொண்டார். அதன் பின் சென்னைக்கு திரும்பும் வழியில் மதுரையை நெருங்கும் போதும் கலைவாணர் திருநீற்று குறியுடனேயே இருப்பதை அவதானித்த நண்பர் கலைவாணரிடம் அதுபற்றி கேட்டார்.

அதற்க்கு கலைவாணர் சொன்ன பதில்: கண்ணால் காணாத தெய்வத்துக்காக எம்முன்னாலேயே வாழும் தெய்வமான தாயை மனம்நோக செய்யக்கூடாது.

பெரியோரை மதிப்பதென்பது பிறப்பில் வருவதா அல்லது வளர்ப்பில் வருவதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னோர் தமிழர்களை மதிக்காமல் மூடர், என்றும் காட்டுமிராண்டிகள் என்று திட்டுகின்றதும், தங்களைப் பெரியவர்கள், எல்லாவற்றையும் பிரித்து அறிபவர்கள் என்றும், தங்களால் தான் எல்லாம் ஆனது என்று தம்பட்டம் அடிப்பதும் கூட பிறப்பின் ஒரு கீழ்தர வகை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எப்போதும் மலிந்து போய்த் தான் இருக்கின்றது. ஏனென்றால் சுயமான கலைச்சொற் கூட்டத்தை உருவாக்குவதை விட்டுவிட்டு, வடமொழி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, ஆங்கில எதிர்ப்பு என்று கத்திக் கொண்டு மட்டும் தானே நிற்கின்றோம். கடந்த 40 ஆண்டுகளில் அதிகம் மலிந்து போய் உள்ளது என்பது உண்மை.

முதலில் அரைகுறைத் தமிழில் பேசுகின்ற தொலைக்காட்சிகளை முதலில் தடை செய்ய வேண்டும். ஒன்று ஆங்கிலத்தில் நிகழ்ச்சி செய்யச் சொல்ல வேண்டும். இல்லை.. தமிழில் செய்யச் சொல்ல வேண்டும். ஆனால் இவர்களின் அரைகுறைத் தமிழ் என்பது மக்களுக்குள் இப்படி பேசுவது தான் நாகரீகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது.

இது தான் எல்லாவற்றையும் விட, மிகப்பெரிய குற்றமாகும்.

தமிழ் தேசியத்தை வளர்க்கப் புறப்பட்டவர் என்று பகுத்தறிவின்(??) தந்தைக்குக் கட்டுரை எல்லாம் எழுதுகின்றார்கள். ஆனால் அவரின் பெயரையும் பாருங்கள். அது கூடத் தமிழே இல்லை.

காதில் பூச்சுத்தலாம் என்று வெளிக்கிட்டார்கள் போல

அவருக்கு பெயர் சூட்டியது அவரது பெற்றோராக இருப்பார்கள் அதற்கு அவர் என்ன செய்ய முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு பெயர் சூட்டியது அவரது பெற்றோராக இருப்பார்கள் அதற்கு அவர் என்ன செய்ய முடியும்?

ஏன் ஐாதி ஊட்டியது அவரது பெற்றோர்கள் தானே, மதத்தை ஊட்டியது அவரது பெற்றோர் தானே! ஏன் அதைப் பெற்றோர்கள் சூட்டியது என்று பேசாமலா இருந்தார்.

சரியோ பிழையோ தப்பு என்று அவர் சொல்லுகின்ற விடயங்களைத் திருத்துகின்றபோது தமிழ் தேசியப் பார்வையில் அவரை அடையாளப்படுத்த முயல்கின்ற இச்சந்தர்ப்பத்தில் பெயரைக் கூட வடமொழியில் அதுவும் வட இந்தியரின் கடவுளான ராமன்+சாமி பெயரோடு அலைந்தால் எப்படித் தமிழ் தேசியத்தின் தலைவனாக முடியும்?

மேல் கட்டுரை போல ஊருக்கு உபதேசம். உனக்கில்லையடி என்ற கதை மாதிரித் தான் கிடக்கு.

Link to comment
Share on other sites

இராமசாமி என்ற பெயர் பெற்றோர் வைத்தது மாத்திரம் அல்லாமல் அது அவரின் அடையாளமாக வேறு போய்விட்டதே... பெயர் அவரை அழைப்பதற்கான அடையாளமே தவிர அவரின் கொள்கையோ நம்பிக்கையோ கிடையாது. இங்கு யாழ்களத்தில் ஒரு நண்பர் அவரின் புனைபடத்தைப் பற்றி விமர்சித்ததற்கு இப்படித்தான் எனக்கு விளக்கம் சொன்னவர்.

ஊருக்கு உபதேசம். உனக்கில்லையடி என்ற கதை மாதிரித் தான் கிடக்கு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நேரடியாக என்னைச் சொல்லலாம்.

ஆனால் நான் தமிழ்தேசியத்தின் தலைவனாகவோ, அல்லது அதற்குத் தலைமை தாங்குபவனாகவோ போக்கிரித்தனம் செய்து கொண்டிருக்கவில்லையே. தங்களின் தலைவரைப் போய், ஒரு சாதாரணமான ஒருத்தனுடன் ஒப்பிடுவது இவர்களின் தலைவரின் தகுதியைக் காட்டுகின்றது.

Link to comment
Share on other sites

என்ர முருகப்பெருமானே நான் எப்போவாவது பெரியாரைப் பின்பற்றுபவன் என்றோ பெரியாரை தலைவர் சொன்னேனா??? எங்க போய் முட்டிக்கிறது. நாமாகவே ஒரு கற்பனையை உருவாக்க வேண்டியது அப்புறம் அதுக்குள்ளேயே வாழவேண்டியது. இதைத்தான் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுறதுனு சொல்லுவாங்களோ??

நாமல் பிடிக்கும் முயலுக்கு மட்டும்தான் 4 கால்லு அடம்பிடிக்கக் கூடாது மற்றவர் பிடிக்கும் முயலுக்கும் 4 கால் இருக்கக் கூடும். :lol:

ஒரு சாதாரணவனுக்கே மாற்ற கடினமாக இருக்கிறது.அதுவும் சில வருடங்கள் அதுவும் நாங்களே நமக்கு சூட்டிக்கொண்டது.

பெரியவருக்கு.... பாவம் அந்த மனிதன் இறந்து வேற போய்டார். இப்படி வேற நாங்கள் சிந்திப்போம் என்று தெரிந்திருந்தால் பெயரை மாற்றினாலும் மாற்றியிருப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.