Jump to content

கேரளத்தைக் கலக்கும் கொரோனா தேவி வழிபாடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேரளத்தைக் கலக்கும் கொரோனா தேவி வழிபாடு!

spacer.png

 

கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது. அங்கு கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தப்படுகிரது.

கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் படிப்படியாக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் கொரோனாவுக்கு பயந்து சமூக இடைவெளியுடன்தான் கடவுளை கும்பிட வேண்டியுள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் நகரில் இருந்து 44 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.

இந்த ஆலயத்தை அனிலன் என்பவர் கட்டி உள்ளார். கொரோனா வைரஸ் தோற்றத்தைத் சிலையாக நிறுவி அதற்கு பூஜை செய்து வருகிறார்.

இது குறித்து பேசியுள்ள அனிலன், “வைரஸ் நோய்களை கடவுளாக பாவிக்கும் தன்மை இந்தியாவில் உண்டு. சிக்கன் பாக்ஸ் நோயை அம்மை நோய் எனவும் அம்மை போட்டிருக்கிறது எனவும் தமிழ்நாட்டில் கூறுகிறார்கள். அம்மனுக்குக் கோபம் வந்தால் அதுபோன்ற நோய் வரும் எனக் கூறுவார்கள்.

கேரளத்தில் சிக்கன் பாக்ஸ் நோயை வசூரி என அழைப்பார்கள். கொல்லத்தில்கூட பல ஆலயங்களில் வசூரிக்கு எனத் தனிப் பீடங்கள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்துவருகிறது. கொரோனா தேவியை வழிபட வேண்டும் என நான் யாரையும் அழைக்கவில்லை. என் வீட்டில் நான் வழிபடுவது எனது தனிப்பட்ட நம்பிக்கை. இங்கு வழிபாடு செய்ய வருபவர்கள் காணிக்கை வழங்க வேண்டும் எனவும் நான் கேட்கவில்லை. எனது வருமானத்துக்காக காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன்.

இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி கடவுள்கள் உள்ளனர். அதில் கொரோனா தேவி என்ற கடவுளை வணங்குவதில் தவறு இல்லை. நாம் பாம்பை வழிபடுகிறோம். யானை, எலி உள்ளிட்டவற்றை வழிபடுகிறோம். அதன் ஒரு பகுதியாக கொரோனா தேவியை வழிபடுகிறேன்" என்றவர் சூடம் ஏற்றிக் கொரோனா தேவியாக அவர் பாவிக்கும் ரூபத்துக்கு ஆரத்தி எடுக்கிறார்.

கொரோனா தேவி வழிபாடு காரணமாக உங்களை மனநலம் சரியில்லாதவர் எனக் கூறுகிறார்களே என அவரிடம் கேட்டதற்குக் கோபப்படாமல் பதில் சொல்கிறார். “இப்போது அல்ல எப்போதே என்னை அப்படி சொல்லிவிட்டார்கள். இங்கு மனநலத்துடன் இருப்பவர்கள் யார் என மனநல மருத்துவர்கள் அடையாளம் காட்டட்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இங்கு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் வழிபாட்டு முறைக்கான உரிமை உள்ளது. இது எனது வழிபாட்டு முறை" என்கிறார்.
 

https://minnambalam.com/public/2020/06/15/12/kerala-corona-devi-poojas

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி கடவுள்கள் உள்ளனர். அதில் கொரோனா தேவி என்ற கடவுளை வணங்குவதில் தவறு இல்லை. நாம் பாம்பை வழிபடுகிறோம். யானை, எலி உள்ளிட்டவற்றை வழிபடுகிறோம். அதன் ஒரு பகுதியாக கொரோனா தேவியை வழிபடுகிறேன்" என்றவர் சூடம் ஏற்றிக் கொரோனா தேவியாக அவர் பாவிக்கும் ரூபத்துக்கு ஆரத்தி எடுக்கிறார்.

படித்து படித்து ஆன்மீக இன்பம் பெற்றேன் தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எதையெல்லாம் கண்டு பயந்தார்களோ, அதையெல்லாம் தெய்வமாக்குவர். பேய்ச்சி, முண்டக்கண்ணி இவையெல்லாம் அப்படித்தான் வந்தன. சின்னம்மை, பெரியம்மை நோய்கள் பெரியளவில் தாக்கியபோது, அம்மன் என்று வழிபட்டார்கள். அந்நோய் தாக்கிய வீட்டிலிருந்து யாரும் பிறர் வீட்டிற்குச் செல்வதில்லை; பிறரும் நோய்கண்ட வீட்டிற்கு வருவதில்லை. தெய்வ குற்றம் ஆகிவிடும் என்ற (மூட) நம்பிக்கையைப் பரப்பியதால், அத்தொற்றுக்கு அக்காலத்திலேயே சமூக விலகல் சாத்தியமாயிற்று. இப்போது அறிவியல் பூர்வமாக கொரோனா தொற்று பற்றி விளக்கினால், அதெல்லாம் நமக்கு வராது என்ற  தொனியில் நடந்து கொள்கிறார்கள் பெருவாரியான மக்கள்.  முகக் கவசம் அணிந்தால் உறுதியாக தொற்று ஏற்படாது என்றெல்லாம் நம்புகிறார்கள். எனவே மக்களிடம் பகுத்தறிவும் பொறுப்புணர்வும் ஏற்படும் வரை (ஏற்படும் என நம்புவோம்), கொரோனாவைக் கடவுளாக்கி மக்களை மிரட்டிப் பணிய வைப்பது சிறந்த வழிதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நம் முன்னோர் இப்படித்தான் தெரிந்தே மூட நம்பிக்கைகளைப் பரப்பிய புத்திசாலிகளோ என்னவோ ! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.