Jump to content

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவரை காணவில்லை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவரை காணவில்லை!

Missing.jpg?189db0&189db0

 

பாகிஸ்தான் – இஸ்லாமாபாத்தில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் இன்று (15) காலை முதல் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் அந்நாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் உளவுத்துறையின் பிடியில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் இந்தியாவில் பணிபுரிந்த பாகிஸ்தான் தூதரகத்தின் உயர் ஆணைய அதிகாரிகள் இருவர் உளவு பார்த்தாக குற்றஞ்சாட்டி இந்திய அரசால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து இந்திய தூதரகத்தில் பணிபுரியும் கவுரவ் அலுவாலியா என்ற பொறுப்பதிகாரியை பாகிஸ்தான் உளவுத்துறை (ஐஎஸ்ஐ) பின்தொடர்ந்து அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றது.

இந்நிலையிலேயே தூதரக அதிகாரிகள் காணாமல் போயுள்ளனர்.

https://newuthayan.com/பாகிஸ்தானில்-இந்திய-தூதர/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🇮🇳இந்தியாவுக்கு... தினமும், புது 🎭தலையிடி வந்து கொண்டிருக்குது.

எது நடக்க வேண்டுமோ.... அது நன்றாகவே நடக்கின்றது. 🕉 பகவத் கீதை 🕉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

பாகிஸ்தான் – இஸ்லாமாபாத்தில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் இன்று (15) காலை முதல் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டுத்தள்ளிட்டாங்கள் போலை 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி இந்தியா சும்மா இருக்காதே.சுழன்டு சுழன்டு அடிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலுச்சிஸ்தானில் போய்த்தேடிப்பார்க்கச் சொல்லுங்கோ 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் மாயமான இரு இந்திய தூதரக அதிகாரிகளும் திரும்பினர்

பாகிஸ்தானில் காணாமல் போன இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும் மீண்டும் இஸ்லாமாபாத்திலுள்ள இந்தியத் தூதரகத்திற்க்கு திரும்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

india-pakistan.jpg

குறித்த இரு இந்திய தூதரக அதிகாரிகளும் சென்ற வாகனம் நபரொருவர் மீது மோதியதால் குறித்த இரு அதிகாரிகளையும் மக்கள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/84033

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் திடீர் கைது

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் திடீர் கைது

 

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் நேற்று திடீரென்று கைது செய்யப்பட்டனர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததால், பாகிஸ்தான் பின்னர் அவர்களை விடுதலை செய்தது.
பதிவு: ஜூன் 16,  2020 05:15 AM
புதுடெல்லி, 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான மோதல் போக்கை கடந்த சில மாதங்களாக தீவிரப்படுத்தி உள்ளது.


இந்த நிலையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. நிறுவனத்துக்காக இந்தியாவில் உளவு பார்த்த டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அபித் உசேன், முகமது தாகிர் ஆகியோர் இரு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். மறுநான் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள், இந்திய ராணுவத்தின் இடம் பெயர்தல் தொடர்பான ரகசிய ஆவணங்களை பணம் கொடுத்து இந்தியர் ஒருவரிடம் இருந்து பெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களை மத்திய அரசு வெளியேற்றியது.

இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொல்லை கொடுத்து வந்தது. இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியாவின் காரை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் இரு முறை பின்தொடர்ந்து சென்றனர்.

இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இந்தியா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் 2 பேர் நேற்று திடீரென்று மாயம் ஆனார்கள்.

அந்த இரு அதிகாரிகளும் அலுவலகத்தில் இருந்து நேற்று காலை வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு போய்ச் சேரவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் கதி என்ன? அவர்களை யாராவது கடத்திச் சென்றார்களா? என்பது பற்றி எதுவும் தெரியாமல் இருந்து வந்தது.

2 அதிகாரிகள் மாயமானது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள், இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்திய அரசுக்கும் முதல் கட்ட அறிக்கையை அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்தியதாக கைது

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும் சென்ற சொகுசு கார் காலை 8 மணி அளவில் எம்பசி சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த நடந்த வந்த ஒருவர் மீது மோதியதாகவும், அப்போது அங்கு கூடிய ஏராளமான பேர், காரை தடுத்து நிறுத்தி தப்பி ஓட முயன்ற 2 இந்திய தூதரக அதிகாரிகளையும் பிடித்து இஸ்லாமாபாத் போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. கார் மோதியதில் அந்த நபர் படுகாயம் அடைந்ததாகவும், அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது.

இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போதுதான் அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் என தெரிய வந்தது என்ற தகவலையும் அந்த தொலைக்காட்சி வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அழைத்து, இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவோ, துன்புறுத்தவோ கூடாது என்றும், அவர்களுடைய பாதுகாப்புக்கு பாகிஸ்தான் அரசுதான் பொறுப்பு என்றும் கண்டிப்புடன் கூறினார்கள்.

மேலும் 2 அதிகாரிகளையும் அவர்கள் சென்ற அலுவலக காருடன் இந்திய தூதரகத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் கேட்டுக் கொண்டனர்.

இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரிகள் இருவரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று மாலை விடுதலை செய்தனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் இருவரும் இந்திய தூதரகத்துக்கு வந்தனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/16022851/Two-Indian-embassy-officials-arrested-in-Pakistan.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

ச்சா சப்பென்டு போச்சு.

ஹா...ஹா.... ஹா...... சரியாய் சொன்னீங்கள்.   😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஹா...ஹா.... ஹா...... சரியாய் சொன்னீங்கள்.   😁😂

 

6 hours ago, உடையார் said:

இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும் சென்ற சொகுசு கார் காலை 8 மணி அளவில் எம்பசி சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த நடந்த வந்த ஒருவர் மீது மோதியதாகவும், அப்போது அங்கு கூடிய ஏராளமான பேர், காரை தடுத்து நிறுத்தி தப்பி ஓட முயன்ற 2 இந்திய தூதரக அதிகாரிகளையும் பிடித்து இஸ்லாமாபாத் போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. கார் மோதியதில் அந்த நபர் படுகாயம் அடைந்ததாகவும், அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது.

கோரோனோ சீசன் ஊதி காட்ட ஏலாது சரி ; அதற்கான கிற் இருக்குமெல்லொ..பெரிய இடம் என்பதால் விட்டு போட்டார்களோ தோழர்.? 👍

_83314806_drink_drive_two.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.