Jump to content

சூரியனுக்கு நெருக்கமான புள்ளியை அடைந்த சோலோ விண்கலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஜொனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர்
 
 
சூரியனுக்கு நெருக்கமான புள்ளியை அடைந்த சோலோ விண்கலன்

'யூரோப்பியன் சோலார் ஆர்பிட்டர்' (சுருக்கமாக 'சோலோ') என்ற சூரிய சுற்றுவட்டக் கலன் இன்று (ஜூன் 15) தனது தற்போதைய சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கு நெருக்கமான புள்ளியை அடைந்தது.

சூரியனில் இருந்து 77மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்தப் புள்ளி.

கடந்த பிப்ரவரி மாதம் ஏவப்பட்ட இந்த சூரிய ஆராய்ச்சிக் கலன் நமது நட்சத்திரமான சூரியனின் இயக்க ஆற்றல் பண்புக்கான காரணம் என்ன என்று ஆராயும்.

வெள்ளி, புதன் ஆகிய இரு கோள்களின் சுற்றுவட்டப் பாதைக்கு நடுவில் இருக்கிறது தற்போது சோலோ கலன் அடைந்திருக்கிற புள்ளி.

இன்னும் சில ஆண்டுகளில் ''சோலோ'' விண்கலம் சூரியனை இன்னும் நெருங்கிச் சென்று ஆராயும். சில நேரங்களில் சூரியனிடம் இருந்து 43 மில்லியன் கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்துக்குள் சோலோ செல்லும்.

தற்போது சோலோ சென்று சேர்ந்திருக்கிற தூரத்தை வைத்துப் பார்க்கும்போது, இதைவிட சூரியனை நெருங்கிச் சென்று ஆராய்ந்தவை மரினர் 10, ஹீலியோஸ் 1 & 2, மெசெஞ்சர், பார்க்கர் சோலார் புரோப் ஆகிய விண்கலன்களே.

சூரியனில் இருந்து சுமார் 149 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் சுற்றுப்பாதை உள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கிய இந்த சோலோ விண்கலத்தின் பாகங்கள் பிரிட்டனில் உள்ள ஏரோஸ்பேஸ் கம்பெனியான ஏர்பஸ் நிறுவனத்தில் ஒன்றாகப் பொருத்தப்பட்டன.

ஐரோப்பாவின் ''சோலோ'': சூரியனுக்கு அருகில் சென்று சேர்ந்தது.படத்தின் காப்புரிமை AIRBUS

சோலோ விண்கலத்தை விண்ணில் ஏவியதில் இருந்து 4 மாதங்களுக்கு இதன் பல்வேறு கருவிகளை சரிபார்ப்பதற்கே செலவிடப்பட்டது. விண்கலத்தின் பொறியமைவுகள் சரியாக இயங்குகின்றனவா என்று சோதிக்கும் பொறியாளர்கள் இந்த விண்கலனில் பொருத்தப்பட்ட 10 அறிவியல் கருவிகளை செயல்படுத்திப்பார்க்கிறார்கள்.

விண்கலன் முழுவீச்சில் சோதனை மேற்கொள்வதற்கு மேலும் ஓர் ஆண்டு ஆகிவிடும். ஆனால் சோலோ விண்கலனின் மேக்னெட்டோமீட்டர் எனப்படும் காந்தவிசைமானி செயல்படத் தொடங்கிவிட்டது.

விண்கலத்தின் பின் பகுதியில் இருக்கும் இந்த மானி, சூரியக் காற்றில் பொதிந்திருக்கும் காந்தப் புலனை உணர்ந்து அறியும். ஆங்கிலத்தில் சோலார் வின்ட் என்று அழைக்கப்படும் சூரியக் காற்று, சூரியனில் இருந்து வெளியேறி விலகிச் செல்லும் மின்னேற்றம் பெற்ற துகள்களின் ஓட்டம் ஆகும்.

வாய்ப்பிருந்தால், இந்த விண்கலன் திரும்பி புதனை நோக்கிச் செல்லும்போது புவியின் வழியாகச் செல்லும். பிறகு சோலோ விண்கலனுக்கான முக்கிய நிகழ்வு வெள்ளிக்கு அருகே பறந்து செல்வதாக இருக்கும். அப்போது வெள்ளியின் மேற்பரப்பில் 5 லட்சம் கி.மீ. தூரத்தை இந்த விண்கலன் நோக்கும்.

https://www.bbc.com/tamil/science-53054815

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என  அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல.... அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள்.  அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.  
    • America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???
    • இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣
    • விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . கணவன் மட்டும் எழுந்து போனான் . கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான் . “யாரது?” என்று மனைவி கேட்டாள் . “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி. கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “ஆமா சார்” “ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?” “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” “எங்கே இருக்கீங்க? “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....” அட நன்னாரிப் பயலே.... Ha ha ha
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.