Jump to content

ஜப்பான் வழங்கவிருந்த கடன் திட்டம் இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணத்தை தெரிவிக்கிறார் சம்பிக


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

 

கொவிட் தொற்றின் பின்னர் நாட்டிலுள்ள பிரஜைகள் மாத்திரமின்றி அரசாங்கமும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரம் தொடர்பில் ஏற்பட்ட அவநம்பிக்கையின் காரணமாக ஜப்பான் வழங்கவிருந்த கடன் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் தொற்றுக்கு பின்னர் நாட்டில் அனைத்து பிரஜைகளும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அனைவருக்கும் வருமானம் அற்றுப் போயுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு தொழில் அற்றுப்போயுள்ளது. தேவையான உணவு பொருட்களை வாங்குவதில் கூட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு மத்தியில் நாட்டில் மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்தேனும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.

அதே போன்று வங்கிகளிலும் லீசிங் கம்பனிகளிலும் பல்வேறு தேவைகளுக்காக கடன் பெற்றவர்கள் பெரும் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவற்றினடிப்படையிலான மிக மோசமான சம்பவமாக சுனில் ஜயரத்னவின் மரணத்தை நாம் பார்க்கின்றோம். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதில்லை. ஆனால் அரச அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனால் அரசாங்கத்தின் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி அற்றுப் போயுள்ளது.

தனிநபர்கள் இவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது ஒரு புறமிருக்க நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்த போது கடனை மீள செலுத்துவதற்கு மூன்று வருட கால அவகாசம் கோரியிருந்தார். நாட்டுக்கு கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் சுமார் 70 வருடங்கள் இலங்கைக்கு பெருமளவிலான  உதவிகளைச் செய்துள்ள ஜப்பான் இம்முறை வழங்கவிருந்த கடனை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

கடந்த மே மாதம் 7 ஆம் திகதி இது தொடர்பில் உத்தியோகபூர்வ கடிதமும் பிரமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அரசாங்கத்தின் பொது நிதி பற்றி தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஜப்பான் இராஜதந்திய மொழியில் கூறியிருக்கிறது.

https://www.virakesari.lk/article/84017

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.