Jump to content

நான் ஒரு சாதாரண கூத்தாடி..எனக்கு நம்பர் - 2 பிஸினஸ் இல்லை.! - கருணாஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு சாதாரண கூத்தாடி..எனக்கு நம்பர் - 2 பிஸினஸ் இல்லை - கருணாஸ்

karunas5-1592290561.jpg

ராமநாதபுரம்: நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தான் ஒரு சாதாரண கூத்தாடி என்றும், தொகுதி மக்கள் அனைவருக்கும் உதவி செய்யும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், பெட்ரோல் பங்குகளோ, மணல் குவாரிகளோ, தன்னிடம் இல்லை என்றும், 2-ம் நம்பர் பிஸினஸ் தனக்கு கிடையாது எனவும் அவர் கூறியிருக்கிறார்.

முக சுளிப்பு

கருணாஸின் இத்தகைய கருத்து திருவாடானை தொகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நடிகர் கருணாஸ் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகர் கருணாஸ். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த அவர், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார். இந்நிலையில் பெரும்பாலும் கருணாஸ் சென்னையிலேயே தங்கியிருப்பதாகவும், தொகுதியை எட்டிக்கூட பார்ப்பதில்லை எனவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே குற்றச்சாட்டு உள்ளது.

நான் ஒரு கூத்தாடி

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது திருவாடானை தொகுதியில் ரூ.53 லட்சம் திட்ட மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைக்க வந்த அவர், தொகுதியில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கும் கொரோனா நிவாரண உதவிகள் வழங்க தன்னிடம் பணம் இல்லை எனக் கூறினார். மேலும், நான் "ஒரு சாதாரண கூத்தாடி " என்றும், தனக்கு இரண்டாம் பிஸினஸ் கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார்.

நடிக்க போய்விடுவேன்

தற்போது ஒரு இடத்தில் வட்டிக்கு கடன் கேட்டுள்ளதாகவும், பணம் கிடைத்தவுடன் பிக் பாஸ் நடிகை ரித்விகாவுடன் புதிய திரைப்படத்தில் நடிக்க சென்றுவிடுவேன் எனவும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். திமுக, அதிமுக, என அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்களால் இயன்ற உதவிகளை இந்த கொரோனா பேரிடர் காலத்தில் உதவி செய்து வரும் நிலையில் கருணாஸின் இத்தகைய பேட்டி திருவாடானை தொகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அரசிடம் இருந்து இவர் பெறும் மாத ஊதியம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது.

என்னிடம் பணம் இல்லை

மேலும் தன்னால் முடிந்தவரை திரையுலக கலைஞர்களுக்கு ரூ.15 லட்சம் வரை உதவி செய்துள்ளதாக கருணாஸ் கூறினார்.

வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த மக்களுக்கு உதவ பணமில்லை எனக் கூறும் கருணாஸ், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் ஒரு நாளைக்கு சரக்கிற்கே ஒரு லட்ச ரூபாய் செலவழிப்போம் என பேசியது குறிப்பிடத்தக்கது.

https://tamil.oneindia.com/news/ramanathapuram/actor-and-politician-karunas-mla-says-i-don-t-have-a-second-number-business-388434.html

டிஸ்கி :

ஒட்டு போடுறான்/போடுல .. 5 புரியாணி பொர்சலை வைத்து கொண்டு சீன் போடாமல் உண்மைய கதைக்க தில் வேண்டும் ! வாழ்த்துக்கள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நான் ஒரு சாதாரண கூத்தாடி..எனக்கு நம்பர் - 2 பிஸினஸ் இல்லை - கருணாஸ்

 

டிஸ்கி :

ஒட்டு போடுறான்/போடுல .. 5 புரியாணி பொர்சலை வைத்து கொண்டு சீன் போடாமல் உண்மைய கதைக்க தில் வேண்டும் ! வாழ்த்துக்கள்..👍

சரியாக சொன்னீர்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.