Jump to content

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெய்ஜிங் சார்பு சமூக ஊடக கணக்குகள் அண்மையில் இமயமலை எல்லையில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் ஒரு ஏரியின் கரையில் இந்திய துருப்புக்கள் இடிந்து கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைக் காட்டும் படங்களை வெளியிட்டன.

பெய்ஜிங் சார்பு சமூக ஊடக கணக்குகள் அண்மையில் இமயமலை எல்லையில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் ஒரு ஏரியின் கரையில் இந்திய துருப்புக்களை   கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைக் காட்டும் படங்களை வெளியிட்டன.

https://www.dailymail.co.uk/news/article-8425875/Three-Indian-soldiers-killed-fighting-Chinese-forces-disputed-Himalayan-border.html

Link to comment
Share on other sites

  • Replies 131
  • Created
  • Last Reply

சமூக வலைத்தளங்களில் சிங்கள சிறிலங்காவும் சீனாவின் ஒரு முகவர் என்றும் 

சிங்கள சிறிலங்கா இந்தியாவிற்கு எதிரானது என்ற உண்மையை 

ஆங்கில மற்றும் முடிந்த ஹிந்திய ஊடகங்களிலும் பதியவேண்டும். 

  • Sri Lanka too a close ally of China 
  • The leaders of Sri Lanka too like Pakistani leaders 
  • China has a strong presence in Sri Lanka. Should India worry there too? 
  • In the south, in Sri Lanka and Maldives, China has built ports to convert as military installations 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

 

 

Vfhj.jpg

கிந்தியனுக்கு அடி அகோரமாம் தோழர்.! இங்க மிலிட்டரிமார் கதைக்கினம் .. 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Vfhj.jpg

கிந்தியனுக்கு அடி அகோரமாம் தோழர்.! இங்க மிலிட்டரிமார் கதைக்கினம் .. 😄

புரட்சி, உங்களால் எப்படி முடிகிறது?

நீங்கள் இந்தியாவில் வாழும் தமிழர். ஒரு சிறு அளவிலாவது உங்களுக்கு உங்கள் ராணுவம் மீது அபிமானம் இருக்கலாம். அப்படியிருக்க, நீங்களும் எங்களைப்போல இந்திய ராணுவத்திற்கு ஏற்படும் அழிவினை எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது? 

எங்களைப்பொறுத்தவரை அது மகிழ்ச்சியான விடயம். ஏனென்றால், இந்தியாவினால் நாம் அழிக்கப்பட்டிருக்கிறோம். அவர்களின் ராணுவம் நேரடியாகவே எம்மக்களில் குறைந்தது 20,000 பேரை 1987 இலிருந்து 1990 இற்கிடையில் கொன்றது. ஆகவே, எம்மை அழித்தவர்கள் ஆகவே எம்மை அழித்தவர்கள் அழிக்கப்படும்போது எமக்கு அது மகிழ்ச்சியைத் தருகிறது. 

உங்களுக்குமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

புரட்சி, உங்களால் எப்படி முடிகிறது?

நீங்கள் இந்தியாவில் வாழும் தமிழர். ஒரு சிறு அளவிலாவது உங்களுக்கு உங்கள் ராணுவம் மீது அபிமானம் இருக்கலாம். அப்படியிருக்க, நீங்களும் எங்களைப்போல இந்திய ராணுவத்திற்கு ஏற்படும் அழிவினை எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது? 

எங்களைப்பொறுத்தவரை அது மகிழ்ச்சியான விடயம். ஏனென்றால், இந்தியாவினால் நாம் அழிக்கப்பட்டிருக்கிறோம். அவர்களின் ராணுவம் நேரடியாகவே எம்மக்களில் குறைந்தது 20,000 பேரை 1987 இலிருந்து 1990 இற்கிடையில் கொன்றது. ஆகவே, எம்மை அழித்தவர்கள் ஆகவே எம்மை அழித்தவர்கள் அழிக்கப்படும்போது எமக்கு அது மகிழ்ச்சியைத் தருகிறது. 

உங்களுக்குமா? 

அதென்ன .. கர்நாடகாவில் நானும் உதை வாங்கி இருக்கேன் தோழர்.. 2009 க்கு பிறகு தமிழ் நாட்டிலே ஒரு தினுசாத்தான் இளைஞர்கள் திரியினம்..☺️

டிஸ்கி 

இவ்வளவு தான் பூமி பாரம் தாங்குவது.? இயற்கை.. குறைக்கட்டும் என்ட மனநிலைக் கு வந்துட்டேன் தோழர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அதென்ன .. கர்நாடகாவில் நானும் உதை வாங்கி இருக்கேன் தோழர்.. 2009 க்கு பிறகு தமிழ் நாட்டிலே ஒரு தினுசாத்தான் இளைஞர்கள் திரியினம்..☺️

ஓ..அப்படியா? நீங்களும் எங்கள் ரகம்தான்.

ஒரு மானமுள்ள  தமிழனை தமிழ்நாட்டில் அதிகாரத்தில் ஏற்றுங்கள் தோழர். சிலவிடயங்கள் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

பெய்ஜிங் சார்பு சமூக ஊடக கணக்குகள் அண்மையில் இமயமலை எல்லையில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் ஒரு ஏரியின் கரையில் இந்திய துருப்புக்கள் இடிந்து கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைக் காட்டும் படங்களை வெளியிட்டன.

பெய்ஜிங் சார்பு சமூக ஊடக கணக்குகள் அண்மையில் இமயமலை எல்லையில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் ஒரு ஏரியின் கரையில் இந்திய துருப்புக்களை   கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைக் காட்டும் படங்களை வெளியிட்டன.

எத்தனை தரமும்.... ஆசையுடன் பார்க்கக் கூடிய அழகான படம். 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லடாக்கில் மோதல் எதிரொலி: முப்படைகளும் உஷார் நிலை - எல்லையில் கூடுதல் படைகள் குவிப்பு

லடாக்கில் மோதல் எதிரொலி: முப்படைகளும் உஷார் நிலை - எல்லையில் கூடுதல் படைகள் குவிப்பு

 

லடாக் எல்லையில் இந்தியா-சீனா படையினர் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து முப்படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பதிவு: ஜூன் 18,  2020 05:30 AM
புதுடெல்லி, 
 
லடாக்கின் கிழக்கே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந்தேதி இரவு இந்தியா-சீனா படையினருக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனா தரப்பிலும் 35 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்தியா, சீனா இடையே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடந்துள்ள மிகப்பெரிய இந்த மோதலால் எல்லையில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த இருநாடுகளும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதேநேரம் எல்லையில் எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்கவும் இந்தியா தயாராகி வருகிறது.
 
இதற்காக முப்படை தலைவர் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதில் முப்படைகளையும் தயார் நிலையில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தியா-சீனா எல்லை நெடுகிலும் படைகள் உஷார் படுத்தப்பட்டு உள்ளன.
 
குறிப்பாக மோதல் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தோ-திபெத் படை வீரர்கள் அதிகபட்ச உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். மலைப்பாங்கான பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் லடாக்கில் ராணுவத்துடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
அத்துடன் எத்தகைய சூழலையும் எதிர்கொள்வதற்காக லடாக், அருணாசல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பதற்ற சூழல் நிலை நிறைந்த எல்லைப்பகுதிகளில் கூடுதல் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
 
இதைப்போல சீனாவுடனான எல்லைப்பகுதிகளை விழிப்புடன் கண்காணிக்குமாறு முன்வரிசை விமானப்படை தளங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி அவர்களும் பலத்த உஷார் நிலையை அறிவித்துள்ளனர்.
 
மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்கள் அடிக்கடி உலவும் என்பதால் கடற்படையும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்திய கடல் எல்லையில் கூடுதல் போர்க்கப்பல்கள் மூலம் ரோந்து பணிகளை கடற்படை தீவிரப்படுத்தி இருக்கிறது.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கிந்தியனுக்கு அடி அகோரமாம் தோழர்.! இங்க மிலிட்டரிமார் கதைக்கினம் ..

இலங்கையர்கள் இந்தியாவை மிகவும் வெறுக்கிறார்கள் ஆனால் நீங்கள் சொல்வதை தான் என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை :rolleyes:
ஈழத்தமிழர்களே தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்கள் அந்த நாடுகள் தவறு செய்தால் கூட சரி என்று இலவசமாக பிரசாரம் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையர்கள் இந்தியாவை மிகவும் வெறுக்கிறார்கள் ஆனால் நீங்கள் சொல்வதை தான் என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை :rolleyes:
ஈழத்தமிழர்களே தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்கள் அந்த நாடுகள் தவறு செய்தால் கூட சரி என்று இலவசமாக பிரசாரம் செய்கிறார்கள்.

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது.

எங்கேயே நல்ல சூடு வாங்கியிருக்கிறார்.காயம் ஆறட்டும் கொஞ்சம் விடுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லடாக் எல்லை மோதலுக்கு காரணமான சீன கூடாரம்

chinese-tent  

புதுடெல்லி

லடாக் எல்லையில் சீன ராணுவம் அமைத்திருந்த கூடாரமே இருதரப்பு மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அந்த கூடாரத்தை இந்திய ராணுவ வீரர்கள் அகற்றிய போது இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்துள்ளது.

கடந்த மே மாத தொடக்கத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சாக், கோக்ரா, டவ்லத் பெக் ஒல்டி, பான்கோங் ஏரி பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. கடந்த 6-ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி எல்லையில் இருந்து சீனப் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வந்தன. ஆனால் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் தொடர்ந்து முகாமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கர்னல் சந்தோஷ் பாபு, இந்திய எல்லைக்கு உட்பட்ட 'பி 14' பகுதியில் சீன ராணுவ வீரர்கள் கூடாரம் அமைத்து தங்கியிருப்பதை கண்டறிந்தார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது கூடாரத்தை அகற்ற சீன ராணுவம் ஒப்புக் கொண்டிருந்தது.

கடந்த 15-ம் தேதி மாலையில் சம்பவ பகுதிக்கு துணிச்சலாக சென்ற கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி, ஜார்கண்டை சேர்ந்த வீரர் குண்டன் ஓஜா ஆகியோர் அந்த கூடாரத்தை அகற்ற கோரினர். இந்திய ராணுவ படை சற்று தொலைவில் முகாமிட்டிருந்தது.

அப்போது கூடாரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த சீன வீரர்கள், இரும்பு கம்பி, உருட்டுக்கட்டையால் கர்னல் சந்தோஷ் பாபுவையும் 2 இந்திய வீரர்களையும் கடுமையாக தாக்கினர். எல்லை ஒப்பந்த நடைமுறைகளின்படி இந்திய வீரர்கள் ஆயுதங்களை வைத்திருக்கவில்லை. பெரும் எண்ணிக்கையில் திரண்ட சீன வீரர்களை, 3 பேரால் சமாளிக்க முடியவில்லை. இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ் பாபு உட்பட 3 பேரும் உயிரிழந்தனர்.

சற்று தொலைவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், சக வீரர்கள் உயிரிழந்த தகவல் அறிந்து ஆவேசம் அடைந்தனர். இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. 900-க்கும் மேற்பட்ட வீரர்கள் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 6 மணி நேரம், அதாவது நள்ளிரவு வரை மோதல் நீடித்தது.

கல்வான் பள்ளத்தாக்கு மலைச்சரிவு பகுதியாகும். சண்டையின் போது இருதரப்பு வீரர்களும் மலையில் இருந்து தவறி விழுந்தனர். இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 16 பேர் கொடூர தாக்குதலிலும் 4 பேர் மலையில் இருந்து கீழே விழுந்தும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன

https://www.hindutamil.in/news/india/559934-chinese-tent-1.html

 

Link to comment
Share on other sites

 

 

 

 

வறுமை காரணமாக இராணுவத்தில் இணைந்தார் 😞 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

modi-3.jpg

அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் – சீனாவுக்கு பிரதமர் எச்சரிக்கை

இந்தியா, அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கும் என சீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மஹாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

கூட்டத்தின் தொடக்கத்தில் லடாக் எல்லையில் அத்துமீறிய சீன இராணுவத்தினர் உடனான தாக்குதலில் வீர மரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதல்வர்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த மோடி, “எல்லையை காக்கும் முயற்சியில் இந்திய இராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடுதான். அதேநேரத்தில் அத்துமீறினால் எந்தவொரு சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கும் பலம்வாய்ந்த நாடாகும்.

இந்தியாவின் துணிச்சல் மற்றும் வீரத்தை பற்றி உலகிற்கே தெரியும். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவை கோபப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். ஆத்திரமூட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது” என மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/அத்துமீறினால்-இந்தியா-தக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் யார் பக்கம் நிற்கப் போகிறது இலங்கை?

விமலநாதன் விமலாதித்தன்ஊடகவியலாளர் - சர்வதேச விவகாரங்கள்
மகிந்த, கோட்டபய, மோதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

(இதில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் கருத்துகள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)

ஆசியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்திகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், இருந்த எல்லைப்பூசலானது உயிர்ச்சேதம் மிக்க மோதலாக உருமாற்றம் கண்டுள்ள வேளையில், ஆசியாவின் பிற நாடுகள் இந்தப் பிரச்சனையை எந்தக் கோணத்தில் அணுகப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெற்காசியப் புவியியலில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாய் அமைந்துள்ள இலங்கை, இன்று வரை அந்த இரு நாடுகளுடனும் மிகச்சிறந்த உறவைப் பேணி வருகின்றது.

இந்தியாவின் செல்வாக்கு இலங்கை அரசியல் தளத்தில் பலகாலமாக இருந்து வந்த போதும், 2015ஆம் ஆண்டுக்கு முற்பட்ட மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்திலேயே சீனாவின் கை இலங்கையில் மேலோங்கியது.

சீனாவின் நிதியுதவியுடன் பல்வேறு கட்டுமானத்திட்டங்கள் இலங்கையின் பல பாகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டன.

வருமான மீட்டுவதற்கு பொருத்தமற்ற திட்டங்கள் என அவற்றின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதும், சீனாவின் கால் அந்தக் காலப்பகுதியிலேயே மிக நன்றாக ஊன்றப்பட்டது.

2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னால், இந்தியாவின் கை உள்ளதென்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.

மைத்ரிபால சிரிசேனபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமைத்ரிபால சிரிசேன

அந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷவின் கட்சியைப் பிளந்து கொண்டு எதிர்த்தரப்புக்குச் சென்ற மைத்ரிபால சிரிசேனவின் செயற்பாடுகளின் பின்னால், இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் அதிகாரி ஒருவர் இருந்ததாக, மகிந்தவின் தரப்பு விமர்சித்திருந்தது.

எவ்வாறாயினும் சீன சார்பு கொண்டிருந்த இலங்கையின் முன்னைய ஆட்சியாளர் தூக்கியெறியப்பட்டமையானது, இந்தியாவுக்கு மிகுந்த சாதகமாகவே அமைந்தது.

இலங்கை ஜனாதிபதிப் பதவியில் அடுத்து அமர்ந்த மைத்ரிபால சிரிசேனவும், பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவும் தமக்குள் முரண்நிலை கொண்டிருந்த போதும், இந்தியாவின் நட்புக்கரத்தை மிக உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஏற்கனவே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த சீனாவின் கட்டுமானத் திட்டங்களில், ஒரு தேக்கநிலை ஏற்படவே செய்தது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பயங்கரவாதக் குண்டுவெடிப்புகளின் பின்னான விசாரணைகளுக்கு, இந்தியாவின் உறுதுணை விரைவாகக் கிட்டியதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது இரண்டாவது பதவியேற்பின் பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயத்தில் இலங்கை உள்ளடக்கப்பட்டதும், இந்தக் கோணத்தில் நோக்கப்பட வேண்டிய ஒன்றே.

இந்தக் காலப்பகுதியில், பதவியிறக்கப்பட்ட மகிந்த ராஜபக்‌ஷ தமது இந்தியத்தொடர்புகளூடாக இந்திய ஆட்சியாளார்கள் தம் மீது வைத்திருந்த பார்வையை மாற்றுவதில் வெற்றிகண்டார் என்றே சொல்லவேண்டும்.

மகிந்தபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் முக்கியஸ்தரும் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமிக்கும் மகிந்தவுக்கும் இடையில் ஏற்கனவே நிலவிவந்த நட்பு, இந்த முயற்சியில் வெற்றியடைய பெரிதும் உதவியிருந்தது.

அதேவேளை மகிந்த தமது சீன நண்பனையும் கைகழுவி விடாது இறுகப் பற்றியிருந்தார்.

அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த ஜனாதிபதித்தேர்தலில் பெற்ற அபார வெற்றிக்குப் பின்னால், ஈஸ்டர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் நிலவிய போதும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் ஆசீர்வாதம் உறுதியாக இருந்தது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு புதுடெல்லி வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பிதழ் வைக்கப்பட்டமையும், அதை ஏற்று தனது முதலாவது அயல்நாட்டு விஜயமாக அவர் அங்கு சென்றமையும் பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றன.

கடந்த ஆண்டு இறுதியில் இந்திய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினூடாக, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக, இந்தியா செயற்பட்டிருந்தது.

இதன் மூலம் அந்த நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியத் தலையீடு ஏற்பட்டது.

இலங்கையில் பல காலமாக, பெரும்பான்மை - சிறுபான்மை முரண்நிலை காணப்பட்டு வருகின்ற போதிலும், சிறுபான்மை மக்கள் தொடர்பில் இந்தியா தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வந்த போதும், இந்தச் சட்டத்திருத்தத்தில் இலங்கையை இந்திய ஆட்சியாளர்கள் உள்ளடக்காமல் விட்டமை, சுட்டிக்காட்டத்தக்கது.

கோட்டாபயபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையின் புதிய ஜனாதிபதியான கோட்டாபயவுடனான நல்லுறவை முறித்துக் கொள்வதற்கும் அதன் மூலம் அவர் முற்றிலுமாக சீனச் சார்பு கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுவதற்கும், இந்திய அரசாங்கம் சந்தர்ப்பம் அளிக்கவில்லை.

இலங்கையின் சிறுபான்மை இன மக்களான தமிழர்கள், பல ஆண்டுகளாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் நிலை காணப்படுகின்றது.

இந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டே வந்திருக்கின்றது.

தமிழ்நாடு மாநிலத்தில் வலுவாக காலூன்ற முனைந்து கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி, இந்தப் பிரச்சினையை தமிழ் அகதிகளுக்குச் சாதகமாகக் கையாண்டு, அந்தச் சட்டத்திருத்தத்தில் இலங்கையையும் உள்ளடக்கியிருக்க முடியும்.

அதன் மூலம், தமிழ்நாட்டு அரசியலில் தன் மீது சாதகமான அலையொன்றையும் கிளப்பியிருக்க, இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியால் முடிந்திருக்கும். எனினும், இலங்கை அரசினுடனான நல்லுறவை, தனது கட்சியின் எதிர்காலத்தை விடவும் முக்கியமாகப் பார்த்தது இந்திய ஆளுந்தரப்பு.

இந்தியாவுடன் பலகாலமாக நட்புப்பேணி வந்த நேபாளம், தற்போது சீனச்சார்பு நிலையை எடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவின் வெளியுறவுச் செயற்பாட்டில், இது குறிப்பிடத்தக்க ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகின் பல நாடுகளும் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீள்வதற்குப் போராடி வருகின்ற இச்சுழலில், இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட தாக்குதலில், இருநாட்டுப் படைகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், இலங்கை இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவு பேணிவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசு, அணிசாரா கொள்கையைப் பின்பற்றவே அதிக சாத்தியங்கள் உள்ளன.

விமலநாதன் விமலாதித்தன் Image captionவிமலநாதன் விமலாதித்தன்

இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கின்ற சூழலில், அதில் பாரிய வெற்றி பெறுவதனூடாக, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்வதையே ஒரே இலக்காகக் கொண்டு செயற்படும் இலங்கையின் ஆளும்தரப்பு, இந்திய - சீன முரண்நிலைக்குள் ஒருதரப்பை மட்டும் சார்ந்து ஆதரவளித்துக் கொண்டிருக்கப் போவதில்லை.

மேலும், இந்த இந்திய - சீன மோதலானது, பாரிய போராக வெடிக்கும் நிலையும் இல்லாத காரணத்தால், இருதரப்பில் ஒன்றை மட்டும் இலங்கை சார்ந்து நிற்பது, தமக்கு உகந்தது அல்ல என்பதை, இலங்கை ஆளும் தரப்பு தெளிவாக உணர்ந்திருக்கின்றது.

கடந்த காலத்தில் விட்ட பிழையை, ராஜபக்‌ஷ சகோதரர்கள் மீண்டுமொருமுறை விடப்போவதில்லை என்பதையே, அண்மைய அரசியல் நகர்வுகள் காண்பிக்கின்றன.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், கடந்த 45 ஆண்டுகளில் இந்திய - சீன இராணுவப் படைகளுக்கு இடையே இடம்பெற்ற மிக மோசமான தாக்குதலாக இது அமைந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளார் நாயகமான அண்டனியோ குட்டெரெஸ், லடாக் பகுதியிலிருந்து இருநாட்டுப் படையினரும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல், வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த இரு நாடுகளின் சிறந்த நண்பனாகத் திகழும் இலங்கையின் ஜனாதிபதி செயலகமோ அல்லது வெளிவிவகார அமைச்சோ, இது தொடர்பாக எக்கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.

பிராந்திய வல்லாதிக்க சக்திகளுடனான இந்தப் பிரச்சினையில் தலையிடாது, நகர்வதற்கு இலங்கை தற்போதைக்கு, மௌனம் என்ற ஆயுதத்தையே கையிலேந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-53088301

Link to comment
Share on other sites

இந்திய சீன மோதலைத் தடுக்கும் ஆற்றல்...சிறீலங்கா என்ற அழகிக்கு மட்டுமே உள்ளது. ஈழத்தமிழரை அழிக்கும்போது இந்திய, சீன, பாக்கி நாடுகளை தனது மடியில் கிடத்தி, ஒன்றிணைத்து நண்பர்களாக்கிய வரலாற்றுப் பெருமை அதற்கு உள்ளது. 😆

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

எனினும், இந்த இரு நாடுகளின் சிறந்த நண்பனாகத் திகழும் இலங்கையின் ஜனாதிபதி செயலகமோ அல்லது வெளிவிவகார அமைச்சோ, இது தொடர்பாக எக்கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.

அணி சேரா கொள்கை ?

1 hour ago, ஏராளன் said:

தெற்காசியப் புவியியலில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாய் அமைந்துள்ள இலங்கை, இன்று வரை அந்த இரு நாடுகளுடனும் மிகச்சிறந்த உறவைப் பேணி வருகின்றது.

உண்மை அதுவல்ல. சீனாவே சிங்களத்தின் நண்பன் 

ஆனால், அந்த கசப்பான உண்மையை இந்திய கொள்கை வகுப்பாளர்களும், தமிழின விரோதிகளும் திட்டமிட்டு மறைக்கிறார்கள். 

விமலநாதன் விமலாதித்தன் யார் என்றே தெரியவில்லை. இந்த கட்டுரை கூட சிங்களத்தின் ஊடக பரப்புரையில் அங்கமோ என எண்ணத்தோன்றுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடனான மோதலில் 35 சீனப்படை வீரர்கள் பலியாகினர்?

B408-1-960x640.jpg?189db0&189db0

 

இந்திய – சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் சீன இராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்தனர் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்திய – சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய இராணுவத்தின் கேணல் உட்பட இராணுவத்தினா் 20 பேர் உயிரிழந்தனர்.

இத்தகவலை இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வௌியிட்டுள்ளது.

எனினும், சீன வீரர்கள் உயிரிழந்தமை குறித்து அந்நாடு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

 

https://newuthayan.com/இந்தியாவுடனான-மோதலில்-35-ச/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர் பயிற்சியில் ஈடுபட்டு ஆயுத பலத்தை காட்டும் சீனா; ரோபோக்களை வைத்தும் சோதனை

போர் பயிற்சியில் ஈடுபட்டு ஆயுத பலத்தை காட்டும் சீனா; ரோபோக்களை வைத்தும் சோதனை

இந்தியாவுடனான மோதலுக்கு பிறகு போர் பயிற்சியில் ஈடுபட்டு ஆயுத பலத்தை காட்டும் சீனா; ரோபோக்களை வைத்தும் சோதனை நடத்துகிறது.
பதிவு: ஜூன் 18,  2020 14:43 PM

புதுடெல்லி

இந்திய- சீனா எல்லையில் கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் கர்னல் உட்பட 20 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில்,தற்போது சீனாவும் தங்கள் தரப்பில் 43 பேர் பலியானதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இது திங்களன்று நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களா என்ற தகவலை சீனா ராணுவம் உறுதி செய்ய மறுத்துள்ளது.


இந்த மோதலில் இரு தரப்பினரும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை, ஏனெனில் சமாதான உடன்படிக்கையின் கீழ் இரு தரப்பினரும் சர்ச்சைக்குரிய எல்லையிலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதனால் கொல்லப்பட்ட ராணுவத்தினர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளதும், பலர் கால்வன் ஆற்றில் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.கால்வன் ஆற்றில் விழுந்தவர்கள் உயிர் தப்புவது கடினம் என்பதால், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இதனிடையே டெல்லியில் அதிகாரிகள் தரப்பு இந்த மோதலுக்கு பழிவாங்க வேண்டும் என்று கோரியதால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'வீரர்களின் தியாகம் வீணாகாது என்று எச்சரித்துள்ளார்.

மேலும், இந்தியா சமாதானத்தையே விரும்புகிறது, ஆனால் மோதல் போக்கு நீடித்தால் அது நிலைமை எதுவாக இருந்தாலும் பொருத்தமான பதிலை அளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சீனா நாட்டின் சக்தி வாய்ந்த ஆயுதங்களை போர் பயிற்சிக்கு உட்படுத்தியுள்ள வீடியோ காட்சிகளை சீனா வெளியிட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவுடனான கொடிய எல்லை மோதலில்  ஈடு பட்ட சீனா மோதல் நடந்த அதே இடத்தில் ஒரு பெரிய இராணுவப் பயிற்சி நடத்தி வருகிறது. இந்த வீடியோவை சீன அரசு தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது. அதில் சுமார் 7,000 சீன ராணுவத்தினர் போர் பயிற்சியில் கலந்து கொள்வதும், ஆயுத பலத்தை காட்டுவதாகவும் அமைந்துள்ளது.

தீவிரவாதத் தாக்குதல் மற்றும் போர்களில் ஏற்படும் ராணுவத்தினரின் உயிரிழப்பைத் தடுக்க போர்முனை ரோபோவை சீனா மீண்டும் சோதனை செய்துள்ளது. மணிக்கு 10 கிலோ மீட்டர் வரை வேகமாகச் செல்லும் இந்த ரோபோ முழுவதும் ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது.

இரவிலும் தெளிவாகப் பார்க்ககூடிய நவீன வசதிகளும், இயந்திரத் துப்பாக்கியும் இந்த ரோபோவில் பொருத்தப்பட்டுள்ளன.

செங்குத்தாக ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதில், கேமராவும் அடக்கம். ரோபா வாரியர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபாபோ மூலம் எந்த காலச்சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் சண்டையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/18144304/Chinas-state-broadcaster-reported-on-a-large-military.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இந்த மோதலில் இரு தரப்பினரும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை, ஏனெனில் சமாதான உடன்படிக்கையின் கீழ் இரு தரப்பினரும் சர்ச்சைக்குரிய எல்லையிலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

arjuna.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா-சீனா மோதலுக்கான காரணம் என்ன...? சீனா தனது தரப்பு உயிர் இழப்பை மறைப்பது ஏன்..?

இந்தியா-சீனா மோதலுக்கான காரணம் என்ன...? சீனா தனது தரப்பு உயிர் இழப்பை மறைப்பது ஏன்..?

இந்தியா-சீனா மோதலுக்கான காரணம் என்ன சீனா தனது தரப்பு உயிர் இழப்பை மறைப்பதற்கான காரணம் என்ன எனதகவல் வெளியாகி உள்ளது.
பதிவு: ஜூன் 18,  2020 16:13 PM
புதுடெல்லி

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது பதற்றமான சூழ்நிலை உருவாகி வரும் நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

திங்கட்கிழமை நள்ளிரவில் இந்தியா மற்றும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில், சுமார் 20-க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.இந்தியா கொடுத்த பதிலடி தாக்குதலில் சீனா தரப்பில் பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 -க்கும் மேல் இருக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.


எங்கள் தரப்பில் உயிரிழப்புகளை குறித்து தகவலை வெளியிடப்போவது இல்லை என  சீனா கூறியது. சீனா ஏன் தனது கொல்லப்பட்ட வீரர்களின் விவரங்களை மறைக்கிறது என சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. இதற்கிடையில், சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து ஒரு பெரிய உண்மை வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கு பயந்து சீனா தனது துருப்புக்களின் எண்ணிக்கையை மறைத்ததாக கூறப்படுகிறது.

தென் சீனா மார்னிங் போஸ்டின் அறிக்கையின்படி, சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு முக்கியமான சந்திப்பு இருக்க வேண்டும். சீனா முழு சம்பவத்தையும் குறைத்து மதிப்பிட முயன்றதைக் கண்டேன். இந்த மூலோபாயத்தின் கீழ், சீனா தனது உயிரிழப்புகளின் எண்ணிக்கையை வெளியிடவில்லை மற்றும் முழு விஷயத்திலும் அமைதியாக இருந்தது. இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களும் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் துருப்புக்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை.

சமீபத்திய ஆண்டுகளில் இந்திய - சீனா இடையே எல்லைப்பகுதியில் அவ்வப்போது மோதல், பிரச்சினை இருந்தாலும் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதில்லை.

ஆனால், சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இந்த உயிரிழப்பானது பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

சுமார் 4056 கி.மீட்டர் அளவுக்கு இந்தியாவும் சீனாவும் எல்லையைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. இந்தியா-சீனா எல்லை ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தராகாண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் வரை நீள்கிறது.இந்திய - சீனா எல்லைப் பகுதியானது கிழக்கு, மேற்கு, மத்திய என்று மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது.

இவற்றில் மேற்கு எல்லையான லடாக், மத்திய எல்லையான சிக்கிம், கிழக்கு எல்லைப் பகுதியான அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் தான் இரு தரப்புக்கும் பிரச்சினை அதிகமாகிவருகிறது.மேற்கே, உள்ள அக்சாய் சின் பகுதி தனக்குச் சொந்தமானது என்று இந்தியாவும் கிழக்கே உள்ள அருணாச்சலப் பிரதேசம் தனக்குச் சொந்தமானது என்று சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன.

கடந்த 1962-ஆம் ஆண்டு ஏற்பட்ட போரில் அக்சாய் சின் பகுதியைச் சீனா அடாவடியாக ஆக்கிரமித்துக்கொண்டது. அதன்பிறகு பின்வாங்கவே இல்லை. அக்சாய் சின் மீதான இந்தியாவின் உரிமையை நிராகரித்துவிட்டது சீனா.அதுமட்டுமின்றி, அருணாச்சலப் பிரதேசத்தை திபெத்தின் ஒரு அங்கம் என்றும் சீனா உரிமை கோரி வருகிறது.அருணாச்சலப் பிரதேச விவகாரத்தில் 1914-ல் பிரித்தானியா இந்தியா மற்றும் திபெத் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட மக்மோஹன் கோடு ஒப்பந்தத்தை இன்றுவரை சீனா ஏற்க மறுக்கிறது.

1914-ல் திபெத் தனி நாடாக இருந்தது. அதன்பிறகு 1950-ஆம் ஆண்டு சீனா திபெத்தை முழுவதுமாக கபளீகரம் செய்துவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையே இன்றுவரை சரியான எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு இறுதி செய்யப்படவில்லை. 1965- ல் நடந்த போருக்குப் பிறகு இந்திய ராணுவம், சீன இராணுவம் எந்த பகுதிகளில் நிலை கொண்டிருந்தார்களே அதை எல்லைக் கட்டுப்பாடு பகுதியாக இரு நாடுகளும் பின்பற்றி வருகின்றன.இந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையும் சீன வீரர்கள் மதிக்காமல் அவ்வப்போது அத்துமீறி நுழைவதே பிரச்சனைக்கு காரணமாக அமைகின்றன.

இந்தியா - சீனா இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடானது மலைகள், ஆறுகள், பனிப்பாறைகள், பனிப் பாலைவனங்கள், புல்வெளிகள் ஊடாகப் பணிக்கிறது.இந்தப் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட இடங்களை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும்போது பிரச்சினை ஏற்படுகிறது.

தங்களது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வரை இரு நாடுகளும் சாலை, பாலங்கள், முகாம்கள் அமைக்கின்றன. சீனா ஏற்கெனவே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு விரைவாக செல்லும் வகையில் சாலைகள், பாலங்களை ஏற்படுத்திவிட்டது.

அதற்குப் பதிலடி அளிக்கும் இந்தியாவும் தற்போது எல்லைப் பகுதியில் தளவாடங்களை விரைவில் கொண்டுசெல்லும் வகையில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கட்டுமானத்துக்குச் சீன எதிர்ப்பு தெரிவித்துசண்டையிட்டு வருகிறது.

இந்தியா 255 கி.மீட்டர் தொலைவிலான சாலையை லடாக் லே நகரிலிருந்து டர்புக், ஷியோக் வழியாக தவ்லத் பேக் ஓல்டி எனும் சீன எல்லையை ஓட்டிய பகுதி வரை அமைத்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவால் மிக எளிதாக இராணுவத் தளவாடங்களை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வரை நகர்த்தமுடியும்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/18161321/How-India-and-Chinas-deadliest-clash-in-decades-came.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

இந்தியாவுடனான மோதலில் 35 சீனப்படை வீரர்கள் பலியாகினர்?

B408-1-960x640.jpg?189db0&189db0

 

இந்திய – சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் சீன இராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்தனர் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்திய – சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய இராணுவத்தின் கேணல் உட்பட இராணுவத்தினா் 20 பேர் உயிரிழந்தனர்.

இத்தகவலை இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வௌியிட்டுள்ளது.

எனினும், சீன வீரர்கள் உயிரிழந்தமை குறித்து அந்நாடு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

 

https://newuthayan.com/இந்தியாவுடனான-மோதலில்-35-ச/

அட அதையும் நீங்கள்தானா சொல்வது 😂😂

நம்பீட்டோம் 😏

2 minutes ago, உடையார் said:

இந்தியா-சீனா மோதலுக்கான காரணம் என்ன...? சீனா தனது தரப்பு உயிர் இழப்பை மறைப்பது ஏன்..?

இந்தியா-சீனா மோதலுக்கான காரணம் என்ன...? சீனா தனது தரப்பு உயிர் இழப்பை மறைப்பது ஏன்..? சீனா ஏன் தனது கொல்லப்பட்ட வீரர்களின் விவரங்களை மறைக்கிறது என சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. இதற்கிடையில், சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து ஒரு பெரிய உண்மை வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கு பயந்து சீனா தனது துருப்புக்களின் எண்ணிக்கையை மறைத்ததாக கூறப்படுகிறது.

சொல்லும் பொய்யைக்கூட திறம்படக் கூற முடியாத இந்தியா 😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீண்டிய சீனா, பதிலடி தந்த இந்தியா

சீண்டிய சீனா, பதிலடி தந்த இந்தியா

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனாவுக்கு, இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
பதிவு: ஜூன் 19,  2020 05:00 AM
இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில்மிகப்பெரிய மோதல் நடந்து உள்ளது. நமது தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.
 
கடந்த 1962-ம் ஆண்டு நடந்த இந்தியா-சீனா போருக்கு பின் நடந்த மிகப்பெரிய மோதலாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும் சீனாவின் அத்துமீறலுக்கு முதல் முறையாக இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது.
 
போருக்கு பின் சீனா இதுவரை பல நூறு முறை இந்திய எல்லைக்குள் வந்து நமது வீரர்களை சீண்டி சென்று உள்ளது. இந்த சீண்டலுக்கு காரணம், இந்திய வீரர்களை அவர்கள் பலவீனமாக நினைத்தது தான். ஆனால் இந்த முறை இந்தியா தந்த பதிலடியால் சீனா தற்போது திகைத்து நிற்கிறது.
 
சீனா ஏன் தொடர்ந்து எல்லை தாண்டி வந்து இந்தியாவை சீண்டி வருகிறது என்பதனை பார்ப்பதற்கு முன்பு நமக்கும், சீனாவிற்கும் உள்ள எல்லை பிரச்சினைகளை தெரிந்து கொள்வது அவசியம்.
 
பண்டைய காலம் முதல் சீனாவிற்கு மிகுந்த நட்பு நாடாகத்தான் இந்தியா விளங்கி வந்தது. இருநாடுகள் இடையே போர் நடந்ததாக வரலாற்று தரவுகள் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இருநாடுகளும் வணிகத்தில் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டன. காலம், காலமாக எல்லைதாண்டி நீடித்து வந்த இந்த நட்பு, 19-ம் நூற்றாண்டு முதல் எல்லை பிரச்சினை மூலம் விரிசல் விழ தொடங்கியது.
 
இந்தியாவும்-சீனாவும் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் தூரமுள்ள எல்லையை தற்போது பகிர்ந்து உள்ளன. யூனியன் பிரதேசமான லடாக், மற்றும் இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த எல்லைகள் உள்ளன. அதில் இமாசல் மற்றும் உத்தரகாண்ட் தவிர மற்ற பகுதிகளில் உள்ள எல்லைகளில் சீனா தொடர்ந்து பிரச்சினை செய்கிறது. கடந்த 1914-ம் ஆண்டு திபெத்தும்-ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவும் எல்லை தொடர்பாக மெக்மோகன் கோடு உடன்படிக்கை ஒன்றை செய்தன. இந்த உடன்படிக்கை தான் அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகியவற்றில் இந்தியாவின் எல்லை எதுவரை என்பதனை உறுதி செய்தது.
 
ஆனால் திபெத், சீனாவின் ஒரு அங்கமாக உள்ளது. இந்த ஒப்பந்தம் போட திபெத் நிர்வாகத்திற்கு அதிகாரம் கிடையாது. எனவே திபெத்தின் பகுதியான சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் எங்களுக்கே சொந்தம் என்று சீனா இப்போது வரை சொல்லி வருகிறது.
 
அடுத்ததாக லடாக் பகுதி. சுதந்திரம் பெற்ற பிறகு ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஜம்முவின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்தது. அது தான் தற்போதைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று சொல்கிறோம்.
 
அதே போல் சீனாவும், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. அது தான் அக்சய்சின். இந்த இடம் தான், கடந்த 1962-ம் ஆண்டு நடந்த இந்திய-சீனா போருக்கு அடித்தளம் அமைத்தது. போருக்கு பின் அக்சய்சின், முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது.
 
எனவே தான் அக்சய்சின் அருகில் உள்ள இந்த பகுதிகளில் தொடர்ந்து எல்லை பிரச்சினை ஏற்படுகிறது. எல்லை பிரச்சினைக்கு மிக மற்றொரு காரணம் எல்லை என்று வரையறுக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் பனி மலைகள் மற்றும் ஆறுகளாக உள்ளன. இது சீனாவின் அத்துமீறலுக்கு மிகுந்த வசதியாக உள்ளது. அடிக்கடி இந்திய எல்லைக்குள் நுழையும் சீன வீரர்களை இந்திய படையினர் தடுத்தி நிறுத்தி அனுப்பி விடுவார்கள்.
 
இந்திய-சீன எல்லை பகுதிகளில் சீனா பல்வேறு கட்டுமானப்பணிகளை முடித்து உள்ளது. இதுவரை எல்லைப்பகுதிகளில் மட்டும் 42 விமான நிலையங்களை கட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக திபெத் எல்லை அருகே மிகப்பெரும் விமான நிலையத்தை சீனா கட்டி உள்ளதாகவும், அது அனைத்து வானிலையின் போதும் செயல்படும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இதுதவிர எல்லைகளில் சாலை போக்குவரத்தையும் சீனா நன்றாக மேம்படுத்தி உள்ளது.
 
இந்தியாவை பொறுத்தவரை தற்போது அதிக அளவில் சாலை பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன்காரணமாக டோக்லாம் மற்றும் கல்வான் பகுதிகளில் பிரச்சினை ஏற்பட்டது. அதாவது தனது எல்லை பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்திய சீனா கூறுவது என்னவென்றால், இந்தியா தனது எல்லை பகுதியில் எந்த பணியும் எல்லையில் மேற்கொள்ள கூடாது என்பதுதான்.
 
ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அனைத்து பணிகளும் இந்திய எல்லைக்குள் நடக்கிறது. எனவே இதில் சீனா தலையிடக்கூடாது என்பது இந்தியாவின் வாதமாக உள்ளது. இதனை சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் எல்லை தாண்டி வந்து இந்தியாவிற்கு தொல்லை கொடுக்கிறது.
 
இந்த தொல்லைக்கு இந்தியா கொடுத்த பதிலடியால் தற்போது சீனா மவுனம் காக்கிறது. கொரோனா விவகாரத்தில் உலக நாடுகளின் நம்பிக்கையை இழந்த சீனா, இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் அடுத்த என்ன செய்யப்போகிறது என்பதை அறிய அனைத்து நாடுகளின் புருவத்தை உயர்த்தி உள்ளன. தற்போதைய நிலையில் சீனா, இந்தியாவுடன் எந்த மோதல் போக்கையும் கடைப்பிடிக்காது என்றே வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் சீனா ஏதாவது சில்மிஷம் செய்தால் அதனை முறியடிக்கும் திறன் இந்தியாவிற்கு இருக்கிறதும் என்றும் அவர்கள் சொல்கின்றனர்.
 
202006190453406932_gun-india._L_styvpf.g
துப்பாக்கி பயன்படுத்தாதது ஏன்?
 
சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நமது ராணுவ வீரர் ஒருவர் கூறியதாவது:-
 
எல்லையில் சீன வீரர்கள் அடிக்கடி அத்துமீறுவது வழக்கம். ஆனால் அப்போது அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் வரிசையில் நின்று, இது எங்கள் பகுதி, உள்ளே வரக்கூடாது என்று தடுப்பார்கள். அப்போது வாக்குவாதம் ஏற்படும். அதன்பின் சீன வீரர்கள் திரும்பி சென்று விடுவார்கள். அன்றைய தினம் கல்வான் பகுதியில் முகாமிட்டுள்ள இருநாட்டு படைகளும் திரும்பி செல்வது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இது போன்று உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் இருநாட்டு வீரர்களும் திரும்பி செல்ல வேண்டும். ஆனால் அன்று சீன வீரர்களில் 10 சதவீதம் பேர் முகாம் அமைத்தனர். உடனே இந்திய வீரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முதலில் சீன வீரர்கள் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் தொடங்கினர். ஒருவருக்கு ஒருவர் பலமாக கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கினர். அருகில் ஆறு இருந்ததால் சிலர் ஆற்றில் தள்ளிவிடப்பட்டனர். சுமார் 6 மணி மோதலுக்கு பின் அங்கு அமைதி நிலவியது. இருநாட்டு ஒப்பந்தப்படி எல்லைக்கோடு அருகே ஆயுதம் பயன்படுத்தக்கூடாது என்பதால் வீரர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதத்தை பயன்படுத்தாமல் சண்டையிட்டனர். ஒருவேளை சீன வீரர்கள் ஆத்திரத்தில் துப்பாக்கி எடுத்து இருந்தால், அதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து இருக்கும் என்று அவர் கூறினார்.
 
கல்வான் பள்ளத்தாக்கும், பட்டுச்சாலையும்...
 
பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரிகட்டும் என்பார்கள். அது போல இந்தியா நமது நாட்டில் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் சீனாவை எரிச்சலைடைய செய்கிறது. மிக முக்கியமாக சீனா ஆக்கிரமித்துள்ள நமது அக்சய் சின் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் மீட்கப்படும் என்று இந்தியாவின் குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. இது சீனாவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதே போல் காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கி லடாக் பகுதியை யூனியன் பிரதேமாக அறிவித்ததை சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 
சீனா தனது பொருட்களை உலக அளவில் எளிதில் சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பட்டுச்சாலை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது சீன அதிபர் ஜின்பிங்கின் கனவு திட்டமாகும். சீனாவை ஆப்பிரிக்கா, அரேபியா, ஐரோப்பிய நாடுகளுடன் இணைப்பது தான் இந்த வழித்தடம். பண்டைய சீனர்கள் பட்டு வணிகத்திற்காக பயன்படுத்திய பாதைக்கு தற்போது சீனா உயிர் கொடுத்து வருகிறது. திபெத்தில் தொடங்கும் இந்த சாலை கல்வான் பள்ளதாக்கு வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீருக்கு செல்கிறது. எனவே கல்வான் பகுதி சீனாவிற்கு மிகவும் முக்கியமாக தெரிகிறது. எனவே தான் அந்த பகுதியை முழு அளவில் ஆக்கிரமிக்க இந்தியாவுடன் பிரச்சினை செய்கிறது. ஆனால் கல்வான் பகுதி முழுவதும் இந்தியாவிற்கு சொந்தம் என்பதால் அங்கு எந்த பணியும் மேற்கொள்ள கூடாது என்று இந்தியா சொல்கிறது. இந்தியாவின் இந்த தடையால் பட்டுச்சாலை திட்டத்தில் சீனாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
202006190453406932_modi-china._L_styvpf.
 
 
 
சீனாவின் குள்ளநரித்தனமும், இந்தியாவின் ராஜதந்திரமும்...
 
ஆசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. தன்னுடைய வளர்ச்சி மட்டும் போதும், இந்தியா வளரக்கூடாது என்பதில் சீனா முனைப்போடு செயல்படுகிறது. இந்தியாவிற்கு எதிராக தீவிரவாத தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு சீனா பக்கபலமாக உள்ளது. ஐ.நா. சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு எந்த காரணமுமின்றி தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
 
காஷ்மீர் மக்கள் சீனா விசா கேட்டு விண்ணப்பித்தால் அவர்களை இந்தியர்கள் என்று சீனா அங்கீகரிக்க மறுக்கிறது. அருணாசல பிரதேசத்திற்கு நமது பிரதமர் சென்றால் கூட அது தவறு என்று அறிக்கை கொடுக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, பட்டுச்சாலை திட்டத்திற்காக சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.
 
சீனாவின் இது போன்ற குள்ளநரி நடவடிக்கைகளுக்கு இந்தியாவும் ராஜதந்திரமாக தொடர்ந்து பதிலடி தருகிறது. சீனாவின் பிடியில் உள்ள திபெத்தின் சுதந்திரத்திற்காக போராடும் தலாய்லாமை இந்தியா தொடர்ந்து கவுரப்படுத்தி சீனாவுக்கு தலைவலி தருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா மேற்கொள்ளும் சாலை பணிகளுக்கு பதிலடியாக, தென்சீன கடல் பகுதியில் சீனா-வியட்நாம் இடையே பிரச்சினை உள்ள கடல் பகுதியில் இந்தியா தனது எண்ணெய் கிணறுகளை அமைக்கிறது.
 
அருணாசல பிரதேசம் இந்தியாவின் அங்கம் என்பதனை உறுதிப்படுத்தி கொள்ள முன்பு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தொடர்ந்து அருணாசல பிரதேச மேல்சபையில் இருந்து மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். சீனாவின் எதிரிகளான ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகளுடன் இந்தியா இணக்கமான நட்பை பேணி வருகிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீரியல் மாதிரி போகும் என்று பார்த்தால் குறும்படம் மாதிரி முடிந்திட்டுதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                     மிகவும் சுவாரிசமான கலந்துரையாடல்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.