Jump to content

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இருபுறமும் ராணுவ குவிப்பால் பதற்றமான சூழலில் இந்திய - சீனா எல்லை பகுதி!

இருபுறமும் ராணுவ குவிப்பால் பதற்றமான சூழலில் இந்திய - சீனா எல்லை பகுதி!

 

இருபுறமும் ராணுவ குவிக்கப்பட்டு இருப்பதால் எல்லை பகுதியில் நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதிவு: ஜூன் 22,  2020 08:10 AM
புதுடெல்லி

லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந் தேதி இரவு திடீரென்று இந்திய-சீன படைகள் மீண்டும் மோதலில் ஈடுபட்டன. சீன வீரர்கள் கற்கள் மற்றும் கம்பிகளால் தாக்கினார்கள். பதிலுக்கு இந்திய வீரர்களும் தாக்குதல் நடத்தினார்கள்.


இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 35 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த மோதல் விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இருந்தாலும் குறிப்பாக சீனா ஆக்கிரமிப்பு மனநிலையுடன் எல்லையில் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

3,488 கி.மீ நீளமுள்ள உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் நிலைமை தொடர்ந்து பதற்றமாகவே உள்ளது, இந்திய மற்றும் சீனப் படைகள் அங்கு முழுமையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன, விமான தளங்கள் செயல்பாடுகளை தொடங்கி உள்ளன. மற்றும் கடற்படை உத்தரவுக்காக தயார் நிலையில் உள்ளன.

இராணுவ பார்வையாளர்கள் சமூக ஊடகங்களில் - எல்லையின் இருபுறமும் - ஆக்கிரமிப்பின் அளவைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டு வருகின்றனர் - பலரும் அந்தந்தப் படைகளை பழிவாங்குமாறு கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து  இந்திய ராணுவ முன்னாள் அதிகாரி வர் ஒரு கூறுகையில்., "பழிவாங்கக் கேட்பவர்கள் அனைவரும் போர்க்குணமிக்கவர்கள், இரு அணுசக்தி நாடுகளுக்கிடையேயான ஒரு போர் ஏற்படுத்தக்கூடிய அழிவு பற்றிய எந்த சிந்தனையும் இல்லாதவர்கள்.

ஜூன் 15 அன்று இந்திய அல்லது சீன வீரர்கள் இராணுவ நெறிமுறைக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருந்தால், அருகிலுள்ள ரோந்துப் புள்ளி 15 மற்றும் 17 இல் அதிக வன்முறையுடன் எல்லை முழுவதும்  ஒரு மிகப்பெரிய  போர் நிலை ஏற்பட்டிருக்கும் என்று கூறினார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/22081045/Situation-along-LAC-tense-with-full-army-deployment.vpf

 

 

Link to comment
Share on other sites

  • Replies 131
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

எல்லை பதற்றம்: ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதற்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி அதிகாரம்

எல்லை பதற்றம்: ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதற்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி அதிகாரம்

சீனாவுடனான எல்லை பதற்றம் ஆயுதங்கள் வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கும் கொள்முதல் திட்டத்திற்கு ரூ.500 கோடி வரை சிறப்பு நிதி அதிகாரங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
பதிவு: ஜூன் 22,  2020 06:32 AM
புதுடெல்லி

லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந் தேதி இரவு திடீரென்று இந்திய-சீன படைகள் மீண்டும் மோதலில் ஈடுபட்டன. சீன வீரர்கள் கற்கள் மற்றும் கம்பிகளால் தாக்கினார்கள். பதிலுக்கு இந்திய வீரர்களும் தாக்குதல் நடத்தினார்கள்.


இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 35 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த மோதல் விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இருந்தாலும் குறிப்பாக சீனா ஆக்கிரமிப்பு மனநிலையுடன் எல்லையில் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

சீனாவுடனான எல்லை பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புப் படையினரின் ஆயுத அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில், வெடிமருந்துகளையும் ஆயுதங்களையும் வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கும் கொள்முதல் திட்டத்திற்கு ரூ.500 கோடி வரை சிறப்பு நிதி அதிகாரங்களை அரசாங்கம் வழங்கியுள்ளது.

குறுகிய கால அறிவிப்பில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ பொருட்களை வாங்குவதற்கும், எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு மோதலுக்கும் அல்லது தற்செயலுக்கும் அவர்களின் செயல்பாட்டுத் தயாரிப்பை அதிகரிப்பதற்கும் பாதுகாப்புப் படைகளுக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

மூன்று படைகளின் துணைத் தலைவர்களுக்கு  ரூ .500 கோடி வரை நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன, இதில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது தேவைகள் ஏற்பட்டால் அவற்றை பூர்த்தி செய்ய தேவையான விரைவான  நடைமுறைகளின் கீழ் தேவையான ஆயுத அமைப்புகளைப் பெறலாம்" என்று மூத்த அரசாங்க அதிகாரி கூறி உள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/22063210/After-violent-faceoff-with-China-armed-forces-granted.vpf

 

 

நாற்பது தொடக்கம் அறுபது விகித கொமிசன் போனால் சராசரியாக இருனூற்றைம்பது கோடியில்தானே ஆயுதம் வேண்டுவார்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D--720x450.jpg

போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் கல்வான் பள்ளத்தாக்கின் அருகில் பாலம் அமைத்தது இந்தியா!

இந்தியா – சீனாவிற்கு இடையிலான எல்லைப்பிரச்சினை போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய இராணுவம் கல்வான் பள்ளத்தாக்கின் அருகே பாலம் ஒன்றை அமைத்துள்ளது.

சுமார் 60 மீட்டர் நீளமுள்ள குறித்த பாலம் சீமந்து மற்றும் இரும்பால் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்மூலம் போர் பதற்றம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாலத்தின் மூலம் கல்வான் ஆறு மற்றும் ஷையோக் ஆறு சங்கமிக்கும் முக்கிய பகுதியை எளிதில் அடையலாம் என்பதுடன் இராணுவ தளப்பாடங்களை கொண்டு செல்வதற்கு இலகுவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷையோக் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்த இரும்பு பாலம் இந்திய-சீன உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் (எல்ஒசி) இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மேலும்  இந்திய-சீன படைகள் சண்டையிட்ட இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எல்லையில் மோதல் நடைபெற்றதையடுத்து பாலத்தின் கட்டுமானப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 72 மணி நேரத்தில் குறித்த பாலம் கட்டிமுடிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவுடன் மோதல் அதிகரித்து வரும் நிலையில் எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவது பாதுகாப்பை உறுதிசெய்ய எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/போர்-பதற்றம்-நீடிக்கும்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்த பாலத்தின் மூலம் கல்வான் ஆறு மற்றும் ஷையோக் ஆறு சங்கமிக்கும் முக்கிய பகுதியை எளிதில் அடையலாம் என்பதுடன் இராணுவ தளப்பாடங்களை கொண்டு செல்வதற்கு இலகுவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வான் - நல்ல பெயர் அதற்கு ஏற்பதான் அடித்து கொள்ள ஒப்பந்தம் போட்டு இருக்கினம் போல.. 👍

hqdefault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

56 minutes ago, ஏராளன் said:

 

நல்லா படம் காட்டிவிட்டு அமைதியாகிவிட்டான் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

104597341_310931469931647_7760196404447679363_o.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeFUqkfhmn9B40gqxZV4lBARr4wyGHn6tLavjDIYefq0tliPqA3z1fZBAxeuKAP86sQpaxSknlOx_7OEDffICxVp&_nc_ohc=A5mYW9w4D0cAX9myeCF&_nc_ht=scontent-frt3-2.xx&oh=bec4953971fb0cba8341c397c27055ce&oe=5F172826

இந்திய ராணுவத்திரை, கொலை செய்ய... சீனா பயன்படுத்திய ஆயுதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

104597341_310931469931647_7760196404447679363_o.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeFUqkfhmn9B40gqxZV4lBARr4wyGHn6tLavjDIYefq0tliPqA3z1fZBAxeuKAP86sQpaxSknlOx_7OEDffICxVp&_nc_ohc=A5mYW9w4D0cAX9myeCF&_nc_ht=scontent-frt3-2.xx&oh=bec4953971fb0cba8341c397c27055ce&oe=5F172826

இந்திய ராணுவத்திரை, கொலை செய்ய... சீனா பயன்படுத்திய ஆயுதம்.

இப்ப இந்தியாவின் பாதுகாப்பில் மியூசியத்திலிருக்கு 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11 மணிநேரம் பேச்சில் இந்தியா, சீன ராணுவம் இடையே உடன்பாடு: கிழக்கு லடாக் எல்லையில் பதற்றமான இடங்களில் இருந்து படைகளை விலக்க முடிவு

indian-chinese-militaries-agree-to-disengage-from-friction-points-in-eastern-ladakh-sources கோப்புப்படம்

புதுடெல்லி

கிழக்கு லடாக் எல்லையில் பதற்றமான இடங்களில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா, சீனா ராணுவத்தின் கமாண்டர் அளவில் 11 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

கல்வான் எல்லைப்பகுதி எங்களுக்குச் சொந்தமானது. அதில் இறையாண்மை இருக்கிறது" என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய அரசு, சீனாவின் பேச்சை ஏற்க முடியாது. அது மிகைப்படுத்தப்பட்டது என்று மறுப்புத் தெரிவித்தது.

1592901248756.jpg

மேலும், சீனாவின் அத்துமீறல் நடவடிக்கை, இரு நாட்டு உறவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு சீன ராணுவம் நேரடியாகவே பொறுப்பேற்க வேண்டும் என இந்தியா சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த பிரதமர் மோடி, “இந்தியாவின் எந்தப் பகுதியையும், எந்த எல்லையையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை. இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாக்க ராணுவம் எந்த நேரத்திலும் தகுந்த பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் சீனா அத்துமீறலில் ஈடுபட்டால் ஆயுதங்களைக் கொண்டு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், ஆயுதங்கள் வாங்குவதற்காக அவசரநிதியாக முப்படைக்கும் ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் மத்திய அரசு வட்டரங்கள் தெரிவித்தன

இந்த சூழலில் எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்திய ராணுவம் தரப்பில் லெப்டினனெட் ஜெனரல் ஹரிந்தர் சிங், சீனாவின் திபெத் ராணுவம் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இடையே இந்த பேச்சு கடந்த இரு நாட்களாக நடந்தது.

இரு நாட்டு ராணுவ கமாண்டர்களுக்கு இடையிலான இந்தப ேபச்சுவார்த்தை நேற்று 11 மணிநேரம் நடந்து, நள்ளிரவுவரை நீடித்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தை சீனப்பகுதியான சூசுல் எனுமிடத்தில் உள்ள மோல்டோ பகுதியில் நடந்துள்ளது

1592901258756.jpg

இந்த பேச்சின் முடிவில் கிழக்கு லடாக் எல்லையில் பதற்றமான பகுதிகளில் இருநாட்டு ராணுவமும் நிறுத்தியுள்ளபடைகள் அனைத்தையும் திரும்பப்பெற்று, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாகவும், சாதகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடந்தது. இருதரப்பு படைகளும் பரஸ்பரத்துடன் திரும்பப்பெற ஒப்புக்கொண்டன. பதற்றான இடங்களில் இருந்து படைகள் திரும்பிச் செல்வார்கள், இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

https://www.hindutamil.in/news/india/560749-indian-chinese-militaries-agree-to-disengage-from-friction-points-in-eastern-ladakh-sources-2.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லடாக் மோதல் விவகாரம்; எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்

லடாக் மோதல் விவகாரம்; எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்

 

லடாக் எல்லையில் இருந்து படை களை வாபஸ் பெற இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இருநாட்டு ராணுவஅதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
பதிவு: ஜூன் 24,  2020 05:45 AM
புதுடெல்லி,

லடாக்கின் கிழக்கே உள்ள பங்கோங் சோ ஏரி, டெம்சோக், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் சீன ராணுவம் ஊடுருவியது. இதனால் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த மாதம் 5 மற்றும் 6-ந் தேதிகளில் மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து எல்லையில் நிலவிய பதற்றத்தை தணிக்க இருதரப்பும் முதலில் கீழ்மட்ட ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தின. பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கடந்த 6-ந்தேதி ஒருமித்த முடிவு எட்டப்பட்டது.

மோதல் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்குவது என இருதரப்பும் ஒப்புக்கொண்டன. அதன்படி கல்வான் பள்ளத்தாக்கு, பங்கோங் சோ உள்ளிட்ட பகுதிகளில் பதற்ற தணிப்பு பணிகளில் இந்திய வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பணிகளின்போது கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந்தேதி இரவில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பு வீரர்களும் கற்கள், கம்பிகள் மூலம் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
பல மணி நேரம் நீடித்த இந்த பயங்கர மோதலில் இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உள்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் பலி எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அங்கும் 35 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆசியாவின் இருபெரும் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதல் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதலை தொடர்ந்து எல்லையில் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா படைகளை குவித்துள்ளது.

மேலும் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் சீனா மீண்டும் வாலாட்டினால் தகுந்த பதிலடி கொடுக்க படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த இருதரப்பும் ஆர்வம் காட்டின. அந்தவகையில் மோதல் நடந்த மறுநாளே இருதரப்பு ராணுவத்திலும் மேஜர் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்தது. 3 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. லடாக் எல்லையில் அமைந்துள்ள மோல்டோ எல்லைப்படை சந்திப்பு முனையின் சீன பகுதிக்குள் காலை 11.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை என 11 மணி நேரம் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதில் இந்தியா தரப்பில் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணிகளை கவனித்து வரும் 14-வது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். சீனா தரப்பில் தெற்கு சின்ஜியாங் மிலிட்டரி மாவட்ட கமாண்டர் மேஜர் ஜெனரல் லின் லியு தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

லடாக்கில் சீனா ஊடுருவலுக்குப்பின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடந்த 2-வது பேச்சுவார்தை இதுவாகும். மேலும் இருதரப்பிலும் உயிரிழப்பை ஏற்படுத்திய கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப்பின் நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தையும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கு இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு உள்ளது. குறிப்பாக எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

இது குறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:-

லடாக்கில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை சிறந்த, நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலில் நடந்தது. பேச்சுவார்த்தையின்போது கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கி கொள்ள வேண்டும் என்ற கருத்து இரு தரப்பிலும் இருந்தது. எனவே அதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த படை விலக்கும் நடவடிக்கை முன்னெடுத்து செல்லப்படும்.

இந்த நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படும். அனைத்து சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்தும் இருதரப்பு படைகளும் குறிப்பிட்ட தூரத்துக்கு பின்வாங்கி செல்லும். இந்த தொலைவு ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறாக இருக்கும்.

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 வீரர்கள் கொல்லப்பட்டு, ஏராளமான வீரர்கள் காயமடைந்த விவகாரத்தை இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா தரப்பில் எழுப்பப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய இருதரப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது" இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்த இருதரப்பும் உறுதியேற்று இருப்பதாக சீனாவும் குறிப்பிட்டு உள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

லடாக்கில் பதற்றத்தை குறைப்பதற்காக ஜூன் 22-ந்தேதி (நேற்று முன்தினம்) இருதரப்பிலும் கமாண்டர் மட்டத்திலான 2-வது பேச்சுவார்த்தை நடந்தது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப்பின் கமாண்டர் மட்டத்தில் நடந்த முதல் பேச்சுவார்த்தை இதுவாகும். எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த இருதரப்பும் விரும்பியதன் பேரில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது

கமாண்டர் மட்டத்தில் நடந்த முதல் கூட்டத்தில் (ஜூன் 6-ந்தேதி) எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவு அடிப்படையில் இந்த முக்கிய பிரச்சினை குறித்து இரு தரப்பும் தங்கள் கருத்துகளை பரிமாறின. எல்லையில் பதற்றத்தை தணிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருதரப்பும் ஒப்புக்கொண்டன. மேலும் எல்லையில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த இணைந்து உழைக்கவும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன" இவ்வாறு ஜாவோ லிஜியான் கூறினார்.

சீனாவில் பலி எவ்வளவு?

லடாக் எல்லையில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்க ஒப்புக்கொண்டிருப்பதாக இந்தியா கூறியிருக்கிறதே? என்ற கேள்விக்கு பதிலளித்த லிஜியான், ‘இந்த விவகாரம் குறித்து இருதரப்பிலும் கள வீரர்கள் இடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர வேறு எந்த தகவலும் என்னிடம் இல்லை’ என்று தெரிவித்தார்.

இதைப்போல கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனா தரப்பில் எவ்வளவு வீரர்கள் இறந்தனர்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘இந்த மோதல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இந்தியாவும் சீனாவும் தூதரக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளன. ஊடகங்களில் நீங்கள் பார்த்ததை (பலி எண்ணிக்கை) பொறுத்தவரை, உதாரணத்துக்கு சீனாவில் 40 பேர் இறந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால் இது பொய்யான செய்தி என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்’ என்று தெரிவித்தார்.

சீனா தரப்பு உயிரிழப்பு குறித்து முதல் முறையாக அந்தநாடு கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளுக்கு இடையே ஒருமித்த முடிவு எட்டப்பட்டு இருப்பதன் மூலம் எல்லையில் நிலவும் போர் பதற்றம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/24045345/India-China-agree-on-gradual-verifiable-disengagement.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைக்கு பிறகும் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குவிக்கும் சீனா...?

பேச்சுவார்த்தைக்கு பிறகும் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குவிக்கும் சீனா...?

 

கல்வான் பள்ளத்தாக்கில் புதிய செயற்கைக்கோள் படங்கள் காட்டும் சீன கட்டமைப்புகள், குவிக்கப்பட்டு உள்ள சீன வீரர்கள்
பதிவு: ஜூன் 25,  2020 06:34 AM
புதுடெல்லி
 
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ந் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேரும், சீன தரப்பில் 35 பேரும் உயிர் இழந்தனர்.
 
 
இது தொடர்பாக இரு நாட்டு ராணு வ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லை யில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. 
 
ஆனால்பேசுவார்த்தை நடந்து ஒரு நாளுக்கு பிறகு  கல்வான் ஆற்றில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் சீன கட்டமைப்புகள் இருப்பதைக் காட்டும செயற்கை கோள் படங்கள் வெளியாகி உள்ளது.
 
இந்த் படங்கள் மோதல் நடந்த ரோந்து புள்ளி 14 க்கு அருகில் உள்ளது. மே 22  முந்தைய செயற்கைக்கோள் படங்கள் இந்த இடத்தில் ஒரு கூடாரம் இருப்பதைக் காட்டியது. இருப்பினும், புதிய படங்கள் தளத்தில் சாத்தியமான தற்காப்பு சீன முகாம்களை  காட்டுகின்றன. புதிய படங்களில்  தங்குமிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை முன்பு இல்லை.
 
ரோந்து புள்ளி 14 ஐச் சுற்றி ஒரு ஊடுருவலின் தெளிவான அறிகுறிகள் உள்ளன. இவை எமது பக்கத்திலுள்ள தற்காப்பு அமைப்புகளாகத் தோன்றுகின்றன, ”என்கிறார் இந்தியாவின் முன்னணி கார்ட்டோகிராஃபர்களில் ஒருவரான முன்னாள் மேஜர் ஜெனரல் ரமேஷ் பாத்தி. இவர் இந்தியாவின் கூடுதல் சர்வேயர் ஜெனரலாக ஓய்வு பெற்றவர் ஆவார். "படங்கள் கனரக வாகனங்களின் தெளிவான போக்குவரத்தை காட்டுகின்றன, அவை அந்தப் பகுதியில் நிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதைக் குறிக்கிறது."
 
இதுகுறித்து கருத்து தெரிவிக்க என்.டி.டி.வி  ராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தை அணுகியுள்ளது.  "நாங்கள் அதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்," என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
 

காணொலியில் முத்தரப்பு கூட்டம்: சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும்- சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு

india-china-clash  

புதுடெல்லி

சர்வதேச சட்டங்களை சீனா மதித்து நடக்க வேண்டும் என்று காணொலி காட்சி மூலம் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டித்துள்ளார்.

லடாக் எல்லைப் பிரச்சினை யால் இந்தியா, சீனா இடையே மோதல் நீடிக்கிறது. கடந்த 15-ம் தேதி எல்லையில் நடந்த மோத லில் தமிழக வீரர் உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் உயி ரிழந்தனர். சீன தரப்பிலும் 40-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல்கள் வெளியாயின. இதை யடுத்து, எல்லையில் இரு நாடு களும் வீரர்களை குவித்ததால் பதற்றம் நிலவியது. பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்

இந்நிலையில் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய தாவது:

சர்வதேச சட்டங்களை அனைத்து நாடுகளும் மதித்து நடக்க வேண்டியது அவசியம். கூட்டாளிகளின் நியாயமான கோரிக்கை, விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். பன்முகத் தன்மைக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பொது நன்மைக்காக பாடுபட வேண்டும். அப்போதுதான் உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடந்த காலங் களில் உலக அமைதிக்கு இந்தியா ஆற்றிய பங்களிப்பை உலக நாடுகள் நினைவுகூர வேண்டும்.

ஐ.நா. சபை தொடங்கப்பட் டபோது 53 நாடுகள் உறுப்பினர் களாக இருந்தன. தற்போது ஐ.நா. சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன. இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந் தியாவின் விருப்பத்துக்கு ரஷ்யா பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

மேலும், லடாக் எல்லைப் பிரச் சினையை மனதில் வைத்தே, சர்வதேச சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என சீனாவை அமைச்சர் ஜெய்சங்கர் மறை முகமாக கண்டித்துள்ளார்.

முத்தரப்பு கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசும்போது, ‘‘சிக்கலான விவகாரங்களை பொறுப்புடன் கையாள வேண்டும். அப்போது தான் நல்லுறவை பேண முடியும்’’ என்று தெரிவித்தார்.

சுமுக தீர்வு

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ் கூறும்போது, ‘‘லடாக் எல்லைப் பிரச்சினையில் ரஷ்யா உள்பட வேறு எந்த நாடும் தலையிடத் தேவையில்லை. இந்தியாவும் சீனாவும் இணைந்து எல்லைப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

https://www.hindutamil.in/news/india/561018-india-china-clash-2.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியா இழந்ததாக ஏற்றுக் கொள்ளும் 20 வீரர்களில் இழப்பில், 17 குளிரில் விரைத்த இறந்ததனர் என்று இப்பொது வாய்வழி ஊடாக தெரிகிறது.

ஆயுதமற்றவர்களையும் சீன பிடித்து அடித்து கொன்றதாக கிந்தியா ஆரம்பத்தில் கதை   விட்டது.    

இரு பகுதியுமே ஆயுத்தமாகதான்  இருந்து இருக்கிறது. ஏனெனில், சீன தரப்பு அகற்றுவதற்கு இணங்கிய கூடாரத்தை ஹிந்தியை தரப்பு பிடுங்கி எறிந்ததிலே இந்த மோதல் தொடங்கியது.   

எனவே ஆயுதமற்ற இந்திய தரப்பு என்பது அனுதாபத்தை கிளப்பும் கதை.

இது முற்றாக கிந்தியா தரப்பு முறியடிக்கப்பட்டதேயே காட்டுகிறது, மோதலுக்கு ஆயுத்தமாக இருந்தும். 


சீன தரப்பு உயிருடன் இந்திய தரப்பை பிடித்ததின் காரணமும் இது ஆகும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தனது சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை எல்லைக்கு நகர்த்தியது

இந்தியா தனது சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை எல்லைக்கு நகர்த்தியது

6 கிலோமீட்டர் தூரம் வரை எதிரியின் இலக்கை தாக்கும் சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை எல்லைக்கு நகர்த்தி வரும் இந்தியா
பதிவு: ஜூன் 25,  2020 07:50 AM
புதுடெல்லி

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ந் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேரும், சீன தரப்பில் 35 பேரும் உயிர் இழந்தனர்.

இது தொடர்பாக இரு நாட்டு ராணு வ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. 

இதனிடையே கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ள காட்சிகள் செயற்கைக் கோள் மூலமாக படமாக்கப்பட்டு வெளியாகி உள்ளன.

இந்தியா சீனா இடையே சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும் இருநாடுகளும் படைகளைக் குவித்த வண்ணம் உள்ளன.

இந்தியா தனது சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லைக்கு நகர்த்தியுள்ளது. துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் மிக்கது.

ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டதாகும்.

6 கிலோமீட்டர் தூரம் வரை எதிரியின் இலக்கை தாக்கக்கூடியதுமாகும். சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கையாக இந்த மாதத்தின் தொடக்கம் முதலே இந்த பீரங்கியை எல்லைக்கு அருகே நிறுத்தியுள்ள இந்திய ராணுவம் எல்லையில் எந்த அத்துமீறலையும் சகித்துக் கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ளது.

சீனாவிடமும் இந்த பீரங்கிக்கு நிகராக டி 95 பீரங்கிகள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டி 90 பீரங்கிகள் உள்ளன. சீனாவிடம் 3500 பீரங்கிகள் மட்டுமே உள்ளன. 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/25075037/India-deploys-T90-Bhishma-tank-in-Ladakh-amid-border.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க எல்லையில் ஏவுகணைகளை குவிக்கும் இந்தியா

missiles-in-india-china-border  

புதுடெல்லி

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்க அதிநவீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் குவித்து வருகிறது.

கரோனா வைரஸ் பிரச்சினையால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் சீனாவுக்கு எதிராக திரும்பியுள்ளன. சீனாவில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பக்கம் திரும்பி வருகின்றன. இதை தடுக்க இந்தியஎல்லைகளில் சீன ராணுவம் வேண்டுமென்றே போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதன்படி கடந்த 15-ம் தேதி லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 22-ம் தேதி இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு படைகளை வாபஸ் பெற சீன ராணுவம் ஒப்புக் கொண்டது. எனினும் அண்மையில் எடுக்கப் பட்ட செயற்கைக்கோள் புகைப் படங்களில், சீன வீரர்கள் எல்லையில் முகாமிட்டிருப்பதும் ராணுவ தளவாடங்கள் குவிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

சீனாவின் ஆளில்லாத ‘ஏஆர்500சி' ஹெலிகாப்டர்கள் எல்லையில் அடிக்கடி ரோந்து சுற்றி வருகின்றன. சீனாவின் தூண்டுதலால் எல்லையில் பாகிஸ்தான் உளவு விமானங்களின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. அண்மையில் பாகிஸ்தான் உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதேபோல சீன உளவு விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

எல்லையில் சீன ராணுவம் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுப்பதற்காக கிழக்கு லடாக்எல்லையில் அதிநவீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் குவித்து வருகிறது. ஸ்பைடர் எம்ஆர், பைதான்-5, டெர்பி, ஆகாஷ் ரக ஏவுகணைகள் எல்லையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இவை தரையில் இருந்து வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.

இதுகுறித்து விமானப்படை வட்டாரங்கள் கூறும்போது, "கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள அதிநவீன ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் உளவு விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகளை சில விநாடிகளில் தகர்க்க முடியும். எதிரிகளின் ஏவுகணைகள் எவ்வளவு வேகமாக வந்தாலும் இந்திய ஏவுகணைகள் துல்லியமாக இடைமறித்து தாக்கி அழிக்கும். லே விமானப்படைத் தளத்தில் சுகோய்-30எம்கேஐ உள்ளிட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தன.

அமெரிக்கா, ஜப்பான் வியூகம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் சீனக் கடல் பகுதிக்கு அமெரிக்க கடற்படையின் 3 போர்க் கப்பல்கள் அனுப்பப்பட்டன. இதில் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் போர்க்கப்பல், சீனாவின் அதிநவீன போர்க்கப்பலைவிட 3 மடங்கு பெரிதாகும். அமெரிக்க கடற்படையின் 8 நீர்மூழ்கிகளும் தென்சீனக் கடலில் ரகசியமாக ரோந்து சுற்றி வருகின்றன.

மேலும் சென்காகு தீவு பிரச்சினையால் ஜப்பான் ராணுவமும்சீனாவை குறிவைத்து ஏவுகணைகளை நிறுத்திவைத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பானின் வியூகத்தால் சீன ராணுவத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

https://www.hindutamil.in/news/india/561508-missiles-in-india-china-border-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லடாக் ஏரியில் ரோந்து செல்ல, சீனாவுக்கு பதிலடி கொடுக்க அதிக சக்தி வாய்ந்த படகுகளை எல்லைக்கு இந்தியா அனுப்புகிறது

லடாக் ஏரியில் ரோந்து செல்ல, சீனாவுக்கு பதிலடி கொடுக்க அதிக சக்தி வாய்ந்த படகுகளை எல்லைக்கு இந்தியா அனுப்புகிறது

 

லடாக் ஏரியில் ரோந்து செல்ல சீனா ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கப்பற்படை அதிக சக்தி வாய்ந்த படகுகளை எல்லைக்கு அனுப்புகிறது.
பதிவு: ஜூலை 01,  2020 13:16 PM
புதுடெல்லி

லடாக்கின் கிழக்கே பங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவியது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வந்த நிலையில், கடந்த 15-ந்தேதி மீண்டும் இருதரப்பும் வன்முறையில் ஈடுபட்டன. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த இந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் பலியானார்கள். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இரு தரப்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன. எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த மோதலால் இருநாட்டு எல்லை முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்பும் தொடர் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு உள்ளன. அந்தவகையில் கடந்த 16-ந்தேதி முதல் இருநாட்டு ராணுவத்தின் கீழ்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக இருநாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் கடந்த 22-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்ப பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி எல்லையில் படை விலக்கலுக்கான நடவடிக்கைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவி, இந்திய பகுதிக்குள் முகாமிட்டு உள்ளதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்தன.

கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடுகிறது. ஆனால் இதை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இதனால் இருநாட்டு மோதல் தொடர்ந்து நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் லடாக் மோதல் தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை  நடைபெற்றது. 

ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் இந்திய ராணுவத்தை தூண்டிவிடுவதில் சீன ராணுவம் குறியாக உள்ளது. மேலும் அதிகமான நிலப்பரப்பைக் ஆக்கிரமிக்கவும் எல்லையில் விரிவாக்கத்தை அதிகரிக்கவும் முயற்சிக்கிறது.

இந்த நிலையில் இந்திய கடற்படை ஒரு டஜன் உயர் ஆற்றல் கொண்ட,  கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்ட எஃகு படகுகளை லடாக்கிற்கு அனுப்புகிறது, இதனால் இந்திய இராணுவம் பங்கோங் சோ ஏரியில் ரோந்து செல்லவும், சீன இராணுவ ஏரி கடற்படையின் கனமான வகை 928 பி கப்பல்களுக்கு போட்டியாக செயல்படவும் முடியும். கிழக்கு லடாக்கில்  பங்கோங் சோ  ஏரி பகுதி சீனா ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/01131608/India-sending-highpowered-boats-to-match-heavier-Chinese.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வான் பள்ளதாக்கு மோதல் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் முதல் முறையாக சீனா ஒப்புதல்

கல்வான் பள்ளதாக்கு மோதல் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் முதல் முறையாக சீனா ஒப்புதல்

கல்வான் பள்ளதாக்கு மோதலில் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் தான் என முதல் முறையாக சீனா ஒப்பு கொண்டு உள்ளது.
பதிவு: ஜூலை 02,  2020 12:04 PM
பீஜிங்

இந்திய- சீன இடையேயான எல்லை மோதல் போக்கு கடந்த ஒரு மாதத்திற்கு  மேலாக நீடிக்கின்றன.

லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை


பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தையைத் நடைபெற்றாலும், மறுபுறம் காஷ்மீர் முதல் லடாக் எல்லை வரை இருநாட்டு படைகளும் ஆயுதங்களை குவிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சீன பாதுகாப்புத் துறை முதல்முறையாகஇந்தியாவுடன் தீவிரமாக போரிட்டு வருகிறோம். எல்லையில் இந்திய நிலப்பரப்பை கைப்பற்றி உள்ளோம். எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம்தான் என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சீன பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதுதொடர்பாக தூதரக அலுவலகத்திடம் சீனாவின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். கடுமையான சண்டையில் சீன தரப்புக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போரில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை சீன அரசு பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்கள் என்றவிவரத்தை வெளியிடவில்லை.

எல்லையில் இந்திய வீரர்களுக்கு எதிராக சீன ராணுவம் தாக்குதல் தொடுத்துள்ளது என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் குற்றம் சாட்டியிருப்பது பொய்" என்று சீன பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/02120414/The-Calvanon-Valley-Showdow--death-toll-on-our-side.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது

லடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது

 

லடாக் எல்லையில் சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். இரு தரப்பிலும் கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதிவு: ஜூலை 06,  2020 13:13 PM
புதுடெல்லி
 
கிழக்கு லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன வீரர்களின் அத்துமீறலைத் தடுக்கும் முயற்சியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி மோதல்-வன்முறை வெடித்தது. இதில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். சீன தரப்பில் 45 வீரகள் பலி மற்றும் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த மோதலுக்கு பிறகு, சீனாவுக்கு நிகராக இந்திய தரப்பிலும் பதுங்கு குழிகள், தற்காலிக கட்டுமானங்களை ஏற்படுத்தி நேருக்கு நேர் நிற்கும் நிலை உருவாகியது.
 
எல்லையில் பதற்றமும் அசாதாரண சூழ்நிலையும் உருவானது. இதையடுத்து, இரு தரப்பு ராணுவ லெப்டினென்ட் ஜெனரல்கள் நிலையில், கடந்த 30ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மோதல் போக்கை விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
 
முதலில் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங்சோ ஏரி, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் மோதல் போக்கு உருவான இடங்களில், மோதல் போக்கை விலக்கிக் கொள்வது என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு டெப்சங் சமவெளி உள்ளிட்ட பின்புல பகுதி படைக்குவிப்பு தொடர்பாக கவனம் செலுத்துவது என்றும் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
உடன்பாட்டில் சீன தரப்பு உறுதியளித்தபடி நடந்துகொண்டதா என்பதைக் கண்டறிய நேற்று நேரில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வானில் மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும், இரு தரப்பிலும் கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/6/2020 at 03:28, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

அறவே தரம் இல்லாத அல்லது தரம் குறைந்த ஆய்வு. மிகவும் கீழ் நிலை வாசகர்களை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. 👎

3 hours ago, vasee said:

 

கொசுத் தொல்லை தாங்கமுடியவில்லை. யாராவது கொசுவத்திச் சுருள் இருந்தால் தாங்கோ 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அறவே தரம் இல்லாத அல்லது தரம் குறைந்த ஆய்வு. மிகவும் கீழ் நிலை வாசகர்களை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. 👎

கொசுத் தொல்லை தாங்கமுடியவில்லை. யாராவது கொசுவத்திச் சுருள் இருந்தால் தாங்கோ 😛

MOSQUITO SPIRAL HELD MOSQUITO REPELLANT THAT WE 10 PIECES NEXIS👍

 

இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது மோதல் நடந்த லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கின பதற்றத்தை தணிக்க நடவடிக்கை

இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது மோதல் நடந்த லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கின பதற்றத்தை தணிக்க நடவடிக்கை

 

இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மோதல் நடைபெற்ற லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின் வாங்கின. அங்கு பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பதிவு: ஜூலை 07,  2020 05:45 AM
புதுடெல்லி,

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை தகராறு இருந்து வருகிறது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே கைகலப்பு நடந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ந் தேதி சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சிலர் காயம் அடைந்தார்கள். சீன தரப்பில் 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி ஆனார்கள்.

இதைத்தொடர்ந்து, எல்லையில் சீனா கூடுதல் படைகளை குவித்தது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் படைபலத்தை அதிகரித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதனால் ராணுவ தளபதி நரவானே சமீபத்தில் லடாக் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆய்வு செய்தார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை லடாக் சென்று எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலவரம் பற்றி தரைப்படை, விமானப்படை, இந்திய-திபெத்திய பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே எல்லையில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் தூதரக மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய-சீன ராணுவ உயர் அதிகாரிகள் இடையே கடந்த ஜூன் 30-ந் தேதி நடைபெற்ற 3-வது சுற்று பேச்சுவார்த்தையின் போது, மோதல் போக்கை விலக்கிக் கொள்வது என்றும், எல்லையில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள முன்னுரிமை அளிப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சீனாவுடனான எல்லை பிரச்சினையை கவனிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், இதேபோல் எல்லை பிரச்சினையை கையாள சீன தரப்பில் நியமிக்கப்பட்டு இருக்கும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி வாங் யியும் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் சுமார் 2 மணி நேரம் பேசினார்கள்.

அப்போது, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையே முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து ஒற்றுமையின் வழிகாட்டுதல்படி எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது என்றும், அந்த வகையில் எல்லையில் பதற்றத்தை தணிக்க இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஒளிமறைவற்ற முறையில் நடைபெற்றது. முழுமையாக கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை துரிதப்படுத்தி விரைவில் முடிப்பது என்று அப்போது இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்திய-சீன எல்லையில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ விரைவில் படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வதை இரு தரப்பும் உறுதி செய்வது அவசியம் என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டது. அத்துடன், எல்லையில் அமைதியை குலைக்கும் வரையில் யாரும் தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், ஏற்கனவே உள்ள நிலையில் எந்த மாற்றமும் செய்ய முயற்சிக்கக்கூடாது என்றும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மதித்து நடக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

எதிர்காலத்தில் எல்லையில் எந்த சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க இரு தரப்பும் இணைந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

படைவிலக்கல் முழுமை அடையும் வரையில் இரு தரப்பு சிறப்பு பிரதிநிதிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் வழிகாட்டு நடைமுறைகளின்படி எல்லையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணி பாதுகாப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்படுவதற்கு எல்லையில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவது அவசியம் என்பதால் கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாற இரு தரப்பும் அனுமதிக்கக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் இருந்து நேற்று படைகளை விலக்கும் நடவடிக்கையை சீன ராணுவம் தொடங்கியது.

கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடைபெற்ற ‘ரோந்து பாயிண்ட் 14, 15 மற்றும் 16’, ‘கோங்ரா ஹாட் ஸ்பிரிங்’ பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முன்னணி நிலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த சீன வீரர்கள் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். தாங்கள் அமைத்து இருந்த கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்களையும் அவர்கள் பிரித்து எடுத்துச் சென்றனர்.

இதனால், லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த பதற்ற நிலை முடிவுக்கு வருகிறது.

சீன படை விலக்கல் பற்றி பீஜிங் நகரில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவோ லிஜியானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முன்னணி நிலையில் உள்ள படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் சீனாவைப் போல் இந்தியாவும் படைகளை விலக்கிக் கொள்ளும் என நம்புவதாகவும், எல்லையில் பதற்றம் ஏற்படுவதை தடுக்க ராணுவ மற்றும் தூதரக மட்டத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/07035106/China-pulls-back-troops-in-Galwan-Valley-by-at-least.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

MOSQUITO SPIRAL HELD MOSQUITO REPELLANT THAT WE 10 PIECES NEXIS👍

 

இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது மோதல் நடந்த லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கின பதற்றத்தை தணிக்க நடவடிக்கை

இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது மோதல் நடந்த லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கின பதற்றத்தை தணிக்க நடவடிக்கை

 

இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மோதல் நடைபெற்ற லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின் வாங்கின. அங்கு பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பதிவு: ஜூலை 07,  2020 05:45 AM
புதுடெல்லி,

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை தகராறு இருந்து வருகிறது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே கைகலப்பு நடந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ந் தேதி சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சிலர் காயம் அடைந்தார்கள். சீன தரப்பில் 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி ஆனார்கள்.

 

தாங்க முடியலையடா சாமியோவ். 

(ஆனாலும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் ☹️)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

தாங்க முடியலையடா சாமியோவ். 

(ஆனாலும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் ☹️)

என்ன செய்ய நாங்க கொடுத்து வைத்தது அவ்வளவுதான், சீனாக்காரன் கையை விட்டுவிட்டானே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.