Jump to content

தத்துவமும் , தமிழரும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தத்துவமும் , தமிழரும்

நான் யார்? உலகம் தோன்றியது எப்படி போன்ற கேள்விகள்  நாகரீகமடைந்த மனிதனின் சிந்தனையில் தோன்றி போது, அவனுடைய பகுத்தறிவால் சிந்தித்த போது உருவானது தான் தத்துவம். அந்த தத்துவத்தை வணிக நோக்கிலும், அதிகார  நோக்கிலும் உபயோகபடுத்த, அதன் மூலத்தை மறைத்து , தத்துவத்தின் சாராம்சத்தை அழித்து , அதனை சுற்றி மக்களிடம் வணிகப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு தான் மதங்கள். எனவேதான் உண்மையான ஆன்மீகவாதிகளான சித்தர்கள் மதங்களை எதிர்த்தனர்.

"மெய்பொருள் காண்பது அறிவு" என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்ட தமிழர்கள் பழங்காலத்தில் பல்வேறு தத்துவங்களை திறந்த மனதோடு ஆராய்ந்து, வாதிட்டு வந்ததை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் காண்கிறோம்.
ஒரு உதாரணம் மணிமேகலையில் வரும்

"ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் 
பட்டி மண்டபத்துப் பாங்கறிந்தேறுமின்'

முதலில் எந்த ஒரு விடயத்தையும் பற்றி சிந்திக்கும் போது சிந்தனைக்கான கருத்து எதன் அடிப்படையில் பெறப்படுகின்றது என்று பார்க்க வேண்டும். அறிதற்குறிய பொருளை அக்துள்ள படி அறியச்செய்ய உதவுவது அளவைகள். அளவைகள் கீழ் காணும் பத்து வகைப்படும் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சாத்தனார், சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில்  அளவை வாதிகளின் அளவை மற்றும் அனைத்து சமய தத்துவங்களையும் விரிவாக எடுத்துக்கூறி உள்ளார்.

1.காட்சி அளவை - ஐந்து வகைப்படும். மனிதனின் 5 பொறிகளின் மூலம் கிடைப்பது.
2. கருத்தளவை - அனுமானாத்தால் கிடைப்பது. (பொது, எச்சம், முதல் என்று மூன்று வகைப்படும்)
3. உவமை அளவை - ஒப்புகூற்று
4. ஆகம அளவை -ஆகமம் போன்ற பழை நூல்களை ஏற்று கொண்டு அவற்றில் இருப்பது
5. அருந்தாபத்தி அளவை - கிட்டதிட்ட ஆகுபெயர் போன்றது
6. இயல்பளவை -
7. ஐதீக அளவை - செவி வழி செய்திகளை நம்புவது
8.அபாவ அளவை - இல்லாமையை உணர்தல்
9.மீட்சி அளவை- எதிர்மறை கூற்று ஏற்றல்
10. உள்ள நெறி அளவை -

இந்த அளவைகள் மூலம் செய்திகளை பெறும் போது 8 வகை குற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவை
1.கட்டுணர்வு - பொருள், பெயர், இனம், குணம் , செயல் என்ற ஐந்தும் இன்றி அறியப்படல்.
2.திரியக்கோடல் - ஒன்றை பிரிதொன்றாக மயங்கி எண்ணுதல்
3.ஐயம் - உறுதி படுத்தாத மயக்க நிலை
4.தேராது தெளிதல்
5. கண்டுணராமை
6.இல்வழக்கு
7.உணர்ந்ததை உணர்தல்
8. நினைப்பு - முக்கியமானது . பெற்றோர், குரு போன்றோர் கூறியதை அராய்ச்சி இன்றி நம்புதல்.

தமிழர்களின் தத்துவ  அறிவின் எடுத்துக்காட்டாய் இருப்பது மணிமேகலை. நாம் அந்த இலக்கியத்தை படிக்காமல் இருப்பதால் தான் இன்னும் இந்தியாவில் இருந்த 10க்கும் மேற்பட்ட  வைதீக/அவைதீக/நாத்திக தத்துவம்/ சமயங்களின் கருத்துகளை அறிந்து,  அதனிடமிருந்து பயன் பெறாமல், மதங்கள் என்னும் மாயையில் வீழ்ந்து கிடக்கிறோம்.

http://tamilfuser.blogspot.com/2020/06/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட்டு மகாபாரதம், இராமாயனம், இவற்றைதானே படிப்பித்தார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.