Jump to content

கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியுமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இ.கதிர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஆரம்ப காலத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவஞானம் வலியுறுத்தி வந்தார்.

அவ்வாறான நிலையில் எமது கட்சி உருவாக்கம் பெற்ற பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். இன்றுவரை எம்மை இணைத்துச் செயற்படவேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எமக்கும் முரண்பட்ட கருத்துக்கள் எவையும் இல்லை. நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியா? எம்மைப் பயன்படுத்துகின்றனரா என வெளியில் பலர் கேள்வி கேட்கின்றனர்.

எம்மை யாரும் பயன்படுத்த முடியாது. தமிழரசுக் கட்சியின் மீது நம்பிக்கையான தொடர்பினை நாம் வைத்துள்ளோம்.

நாம் பங்காளிக் கட்சிகளாக இருந்ததில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பக்கபலமாக இருப்போம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க பல சக்திகள் செயற்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வட.கிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்.

எனவே நடைபெறவுள்ள பொதுத்தேர்தலிலும் நாம் வட.கிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை வெற்றியடையச் செய்யவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் ஊடாகவே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். நாம் ஒவ்வொரு பிரிவுகளாக பிரிந்து நின்று எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது.

எனவே நாம் தாயகத்தில் பாதுகாப்பாக சுதந்திரமாக இருக்க ஒரே வழி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதே ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.

https://newuthayan.com/கூட்டமைப்பினை-பலப்படுத்/

Link to comment
Share on other sites

1 hour ago, பிழம்பு said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியுமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

இந்தியாட இனப்படுகொலை உரிமைகளை பலப்படுத்த இவங்களுக்கு உள்ள அக்கறையில ஒரு துளி கூட சொந்த தமிழ் மக்கள் மேல இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு கதிர் அவர்களே கூட்டமைப்பிடம் கேளுங்களேன் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்க்கான அட்டவணையில் முதல் மூன்று இலக்கத்துக்குள் முன்னால் போராளிகளில் ஒருவரது பெயரை முதன்மை வேட்பாளராகவும் அதே வேளை ஆகக்குறைந்தது ஒருவரையாவது தேசியப்பட்டியலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்ய உங்களால் முடியுமா என.

ஆக மிஞ்சிப்போனால் முன்னால் போராளிகளுக்கு ஒரு ஜே பி பதவிதான் கிடைக்கும், அதற்கும் சுமந்திரனுக்கு வேட்டி தோச்சுக்கொடுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை இந்த முறை எல்லாரும் சேர்ந்து குத்தமைக்கு வாக்குகள் முலம் பதில் கொடுப்போம்.வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

திரு கதிர் அவர்களே கூட்டமைப்பிடம் கேளுங்களேன் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்க்கான அட்டவணையில் முதல் மூன்று இலக்கத்துக்குள் முன்னால் போராளிகளில் ஒருவரது பெயரை முதன்மை வேட்பாளராகவும் அதே வேளை ஆகக்குறைந்தது ஒருவரையாவது தேசியப்பட்டியலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்ய உங்களால் முடியுமா என.

ஆக மிஞ்சிப்போனால் முன்னால் போராளிகளுக்கு ஒரு ஜே பி பதவிதான் கிடைக்கும், அதற்கும் சுமந்திரனுக்கு வேட்டி தோச்சுக்கொடுக்கவேண்டும்.

 

3 hours ago, Kali said:

இந்தியாட இனப்படுகொலை உரிமைகளை பலப்படுத்த இவங்களுக்கு உள்ள அக்கறையில ஒரு துளி கூட சொந்த தமிழ் மக்கள் மேல இல்லை. 

உண்மை.

இந்த சனநாயகப் போராளிகளிடம்(?) ஒரு வினா. இவளவு வெளிப்படையாக இயங்கும் நீங்கள் ஏன் சிறையிலுள்ள கைதிகளின் விடுதலைக்கான ஒரு சனநாயகப் போராட்டத்தைச் செய்யவில்லை. காணாமற்போன உறவுகளின் போராட்டத்தோடு இணையவேண்டாம், ஒரு அடையாளப்போராட்டத்தையாவது செய்யவில்லை ஏன்? புலிகளின் விலைபோன முன்னணித் தலைவர்கள் அரசியல் செய்யவும் சுகபோகமாக இருக்கவும் நீங்கள் அரசியல் பேசவும் (யாருக்கான அரசியல்  செய்கிறீர்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம் என்பது வேறுகதை) முடிகிறதென்றால்; ஏன் இன்னும் சிறையிலே அரசியல் கைதிகளை வைத்துள்ளீர்கள் என்று அரசையோ ஏன் விடுவிக்க முயலவில்லையென்று உங்கள் சகபாடிகளான த.தே.கூட்டமைப்பையோ கேட்கவில்லை. இவைபோன்ற விடயங்களே  நீங்கள் யாரென்பதைக் காட்டுவதற்கு போதுமானது.

தமிழினம் தலைமையற்ற பெருவெளியில் அவலத்தோடு நிலைதடுமாறி நிற்கிறது.அந்தத்  தடுமாற்றத்தை  அரசியற்காட்சிகள் தமக்கான பிழைப்புக்கு அவியல் செய்ய முனைவது எத்துணை கேவலம். இதற்குத் துணைபோகும் நீங்கள் முன்னாள் போராளிகள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஒரே கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பே – கதிர் தெரிவிப்பு!

20200616_111557-960x444.jpg?189db0&189db0

 

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (16) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலதுகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இ.கதிர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

‘இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்த பின்னர் கடந்த 2015ம் ஆண்டு ஜனநாயகப் போராளிகள் கட்சி உருவாக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளை அரசியலுக்குக் கொண்டுவரவே தனித்துவமாக எமது கட்சி உருவாகியது. ஆரம்ப காலத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டபோராளிகள் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவஞானம் வலியுறுத்தி வந்தார்.

அவ்வாறான நிலையில் எமது கட்சி உருவாக்கம் பெற்ற பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைபபுடன் இணைந்து செயற்படவேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். இன்றுவரை எம்மை இணைத்துச் செயற்பட வேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எமக்கும் முரண்பட்ட கருத்துக்கள் எவையும் இல்லை நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியா? எம்மைப் பயன்படுத்துகின்றனரா என வெளியில் பலர் கேள்வி கேட்கின்றனர்.

எம்மை யாரும் பயன்படுத்த முடியாது தமிழரசுக் கட்சியின் மீது நம்பிக்கையான தொடர்பினை நாம் வைத்துள்ளோம். தமிழரசுக் கட்சியலுள்ள சுமந்திரனுடன் கூட எமக்கு எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை. நாம் பங்காளிக் கட்சிகளாக இருந்ததில்லை ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பக்கபலமாக அனுசரணையாக இருப்போம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க பல சக்திகள் செயற்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வடகிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலிலும் நாம் வடகிழக்கி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை வெற்றியடையச் செய்யவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் ஊடாகவே எமதுஉரிமைகளை வென்றெடுக்க முடியும். நாம் ஒவ்வொரு பிரிவுகளாக பிரிந்து நின்று .எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது. ஆரம்ப காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தியது தவறு அவர்கள் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பதால் எம்மால் பேச முடியவில்லை என்று குற்றம் சாட்டினார்கள் இப்போது அந்த நிலைமாறி பேசுவதில் பயனில்லை போராட வேண்டும் என்கிறார்கள்.

நாம் ஆயுதம் ஏந்தியது அரசியல் தந்துரோபாயமே எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தலில் பல அணிகளாக பூதங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மணல் கொள்ளையர்கள் கிறீஸ் பூதங்கள் பெண்களை சீரழித்த குழுக்கள் இன்று மக்கள் முன்னிலையில் வாக்குக் கேட்கத் தெடங்கியுள்ளனர். எனவே நாம் தாயகத்தில் பாதுகாப்பாக சுதந்திரமாக இருக்க ஒரே வழி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சிலவிமர்சனங்கள் இருக்கலாம்ஆனால் அவற்றை இப்போது கதைப்பதற்கான நேரம் அல்ல.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஜனநாயக அரசியல் போராட்டத்தை ஆரம்பிப்பதற்காகவே பல வருங்களுக்கு முன்பாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கினார். ஆயுதப்போராட்டத்தில் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்று எண்ணியதாலும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான திட்டமிடல்களை வைத்திருந்தமையினாலேயே பல வருடங்களுக்கு முன்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தற்போது முன்னாள் போராளிகள் என்ற பெயரில் பல கட்சிகள் உருவாகின்றன. அவ்வாறான கட்சிகளில் இருப்பவர்கள் திராணி இருந்தால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எந்தப் படையணியில் எந்த இலக்கத்துடன் இருந்தார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும். எனவே போராளிகளின் பெயரில் உருவாகும் கட்சிகள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்’ – என தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/தலைவர்-பிரபாகரனால்-உருவா/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கரை வருடத்தில் த.தே.கூ எதையும் சாதிக்கவில்லை’

எஸ். நிதர்ஷன்

 

தமிழ் அரசியல் கைதிகள் எவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளினூடாக விடுவிக்கப்படவில்லை என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

யாழ்.ஊடக அமையத்தில், நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பை, அதிகபட்ச ஆசனங்களுடன், மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் மாற்று அணியோ, மாற்றுத் தலைமையோ தேவையில்லை என்றும், சில நாள்களுக்கு முன்னர், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில், த.தே.கூ பேச்சாளர் சுமந்திரன், மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தனர் எனக் கூறினார்.

நாட்டில் ஒரு இராணுவ ஆட்சி வரவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி பிளவடைந்துள்ள நிலையில், தாங்கள் மீண்டும் நாடாளுமன்றத்துக்குச் சென்றால், மீண்டும் தாங்கள் எதிர்க்கட்சியாக வந்து, பல விடயங்களைச் சாதிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்கள் என்பதை அவர் குறிப்பிட்டார்.

ஆனால், நான்கரை வருடங்களாக எதிர்க்கட்சியாக இருந்து, த.தே.கூ எதைச் சாதித்தது என்று வினவிய அவர், காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், புதிய அரசியல் சாசனம் ஆகிய எதிலும் அவர்கள் வெற்றிகொள்ளவில்லை என்பதே உண்மை என்றும் அவர் கூறினார்.

91 அரசியல் கைதிகளுக்கு மேலான வழக்குகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தாங்கள் சில அரசியல் கைதிகளை விடுவித்துள்ளோம் என்று த.தே.கூ கூறுவது, அப்பட்டமான பொய் என்றும் அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/நனகர-வரடததல-த-த-க-எதயம-சதககவலல/71-252007

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தல் காலத்தில் யாரோ கதிர் அண்ணாவை குழப்பி விட்டுள்ளார்கள். அல்லது அவர்தான் தப்பாக புரிந்துகொண்டாரோ தெரியவில்லை.

ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனித்த கட்சி கிடையாது அது பல பங்காளிக் கட்சிகளின்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட ஒரு  அரசியல் கூட்டணி என்பது ஞாபகமிருக்கட்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பலப்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் அதில் உள்ள ஒரு பங்காளிக்கட்சியை பலப்படுத்துவதன் ஊடாககத்தான் அதை செய்யமுடியும்.

அது போக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவுமில்லை. எனவே அதை கட்சி என்று அழைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. 

பங்காளிக் கட்சிகள் என்று சொல்லப்போனால் இப்போது கூட்டணியில் அங்கம் வகிப்பவை இலங்கை தமிழரசு கட்சி(ITAK), EPRLF, PLOT, TELO. இப்போது சொல்லுங்கள் நீங்கள் இதில் எந்த கட்சி?

மதிப்புக்குரிய முன்னாள் போராளிகளின் கவனத்திற்கு: நீங்கள் அரசியலில் ஏதாவது செய்ய நினைத்தால் அதை தேர்தல் வரும்போதுதான் செய்ய வேண்டும் என்பதில்லை. அடுத்து வரும் தேர்தலில் கூட்டணியை பலப்படுத்தும்படி உங்களை யாராவது கேட்டிருந்தால் அதனால் அவர்கள் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு அதிகமாகும் என்பதை விட தமிழினத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது அர்த்தமில்லை. அப்படி ஒரு தீர்வை கொண்டுவருவதற்கு எந்த தமிழ் அரசியல்வாதிக்கும் திராணியில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் முன்னாள் நீதிபதியின் இன்றைய நிலையை யோசித்துப் பார்த்தபின் முடிவை எடுங்கள். வெறும் கறிவேப்பிலையாய் ஆகிவிடாதீர்கள். சிங்கள கட்சிக்கு கோத்தா போல் இங்கு ஒரு சுமந்திரன். போனதடவை புலிகளை முன்னிலைப்படுத்தி  பிரச்சாரம் செய்து தான் வாக்கு கேட்கவில்லை என்று இந்த முந்திரிக்கொட்டை சொன்னது. இந்தமுறை சொன்னதையும் காதாரக் கேட்டிருப்பீர்கள். உங்களை வேண்டாம் என்று ஒதுக்குமுன் நீங்களாய் ஒதுங்குவது நல்லது. இவரை கொலை செய்ய முயற்சித்தார்கள், என்று உங்களில் சிலரை பிடித்தடைத்தார்கள். அந்தக் கூட்டை நீங்களாகவே போய் அடையப்போகிறீர்களா? உங்களை நீங்களே கொச்சைப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  

Link to comment
Share on other sites

10 hours ago, பிழம்பு said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியுமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

சிங்கள இனப்படுகொலைகாரர்களுக்கு கடந்த 11 வருடங்களாக எடுபிடிகளாக இயங்கும் சம்மந்தன்-சுமந்திரன் கும்பலினால் தமிழினத்துக்கு விடுதலை என இன்னமும் கூற கைக்கூலிகளாகள் மட்டுமே முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

நான்கரை வருடங்களாக எதிர்க்கட்சியாக இருந்து, த.தே.கூ எதைச் சாதித்தது

 எஜமானைக் காப்பாற்றப்போய் எதிர்கட்சி ஆசனத்தை இழந்தார்கள். அது சாதனையில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு கதிர் அவர்களே தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என நீங்கள் கூறுகிறீர்கள் அக்கட்சியை இப்போ சம்பந்தனும் சுமந்திரனும் அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள் அப்படியே இருக்கட்டும் ஒருக்கால் சம்பந்தனது திருவாயால் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்தேசியக் கூட்டமைப்பு எனச் சோல்லச்சொல்லுங்கோ பார்க்கலாம்.

அப்படி அவர் சொல்லமுடியாஅது என்றால் 

சம்பந்தன் அவர்களே உங்களதும் உங்கள் சகபாடி சுமந்திரனதும் மாவை வகையறாக்களதும் தலைமத்துஅத்துடனேயே கூட்டமைப்பு இன்றுவரை நிண்டுபிடிக்கிறது என நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஏன் இந்தப்பொல்லாப்பு  புலிகளும் பிரபாகரனும் பயங்கரவாதிகள் கொலையாளிகள் ஜனநாயகவிரோதிகள் ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எல்லோரும் அதே பிரபாகரனாலும் அவர்சார்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தாலுமே தோற்றுவிக்கப்பட்டது எனச்சொல்லுகினம் ஆதலாம் அந்தகட்சியும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் நாங்கள் ஜனநாயக வாதிகள் அதைவிட புலத்திலும் புலம்பெயர்தேசத்திலும் தம்மை மேதாவிகள் எனக்கூறுவோரால் இராஜதந்திரம் மிக்க சாணாக்கியர்கள் மார்க்கியவல்லிகள் எனக் கூறிக்கொள்ளும் தகுதியுடையவர்கள் என்பதை நிரூபிக்க நாங்கள் இப்பவே ஒரு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கப்போகிறோம் என அறிவியுங்கோ என வேண்டுகோள் விடுக்கலாமே.

 

உங்களுக்கு ஏதோ நெருக்கடி அது இந்தியா மூலமாகவோ அல்லது கொத்தா மூலமாகவோ இருக்கலாம் சரி நீங்கள் எல்லோரும் சரியான பாதையில் பயணித்தால் தமிழர்கள் உங்களுக்கு ஆதரவு தரப்போகிறார்களோ இல்லைத்தானே.

இப்போது தாயகத்தில் மக்கள் எல்லோரும் தங்களைத் தாங்கள் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யவேண்டுமோ அதையே செய்து ஒரு பாதுகாப்பான சூழலுக்குள் வாழப்பழகிக்கொண்டார்கள் அப்படியான பாதுகாப்பான சூழல் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதல்தான் தானாக அமையும் அவர்கள்தான் போராட்டம் சத்தியாகிரகம் போர்குற்றம் சர்வதேசம் என எதையும் பேசாது எங்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாது அவர்கள்பாட்டுக்கு ஒரு ஓரமாக நிண்டு அரசியல் என எதாவது செய்வார்கள் நாங்கள் பையப்பைய எங்கட அலுவலைப்பார்ப்பம். அவர்களுக்கும் நாங்கள் வாக்களிபதற்கு விரும்புவதில்லை ஆனால் வாக்களிக்காதுவிட்டால் வேறை ஆக்கள் வந்து விட்டால் இப்போதைய பாதுகாப்பான சூழல் இல்லாதுபோய்விடும் அதுதான் நாங்கள் அவங்களுக்கு வாக்குப்போடுகிறம்.

இல்லாதுவிட்டால் எங்களுக்குத் தெரியாதே ஒவ்வொரு நாலு வருடத்துக்கும் ஒரு தேர்தல் வரும் அதில் இப்போது தெரிவுசெய்யப்பட்டவர்கள் தமிழர்கள் உரிமைதொடர்பாக எதுவும் செய்யாதுவிடின் இன்னுமொருவரை ஒரு பயங்காட்டவாவது தெரிவுசெய்வம்தானே.

எங்களுக்குத் தேவையானது சாராயக்கடை தொடர்ந்து திறக்கவேணும் மெகாதொடர் பார்க்க தொடர்ந்து மின்சாரம் கிடைக்கவேணும், கொழும்புக்கு நினைத்தமாத்திரத்தில் போய்வரவேண்டும் படிப்புச் சரிவரவில்லை என்Dஆல் வெளிநாடு போக ஒரு நல்ல ஏஜன்சிக்காரன் கிடைக்கவேணும். இந்தவேலைகளுக்கு மத்தியில் மிஸ்கோலில் மாட்டுற பெட்டையளை ஓரங்கட்டி ஜாலியாக இருக்கவேணும், கொரோணா வாந்திபேதி சுனாமி மழைபெய்யாட்டில் மழைவந்தால் இவைகளைச் சாட்டாக வெளிநாட்டிலிருக்கிறவையளிட்ட காசு வாங்கி கொத்துரொட்டிப் பாட்டி கூழ்பாட்டி இவைகளைச் சாராயப்போத்தலுடன் கொண்டாடவேணும். பராயமாகாத ஆனால் பூப்பெய்திய பெண்களது வீட்டைச் சுற்றி பெட்டைநாயைச் சுற்றும் கடுவன் நாய்களாகத் திரிந்து அதுகளை வசப்படுத்தி "லிவிங் டு கெதர்" வாழ்கை வாழவேண்டும்.  மாலை வேளைகளில் பண்ணைப்பாலம் தாண்டியவுடன் மண்டைதீவு அலுமேனியப் பக்ரறி அண்டிப்போகிற பாதையில் இருக்கும் கன்னாப்பத்தை, வடலிகள் இவைகளுக்கு கிடைக்கும் பெட்டைகளை கூட்டிக்கொண்டு போகவேணும் அதுக்கு ஒரு மோட்டார் சைகிள் வேணும். 

இப்படியானதுக்கு கூட்டமைப்புத்தான் சரி.

மவனே அடுத்தமுறை ஊருக்குப்போகேக்க உடனடியாக ஒரு என்பீல்ட் புல்லட் மோட்டார் சைக்கிளைக் கொழும்பிலையே வாங்கிக்கொண்டு போகவேணும் எங்கட ரேஞ்சுக்கு ஒரு நாறின நெத்தலி மீனாவது கிடைக்காதோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Elugnajiru said:

திரு கதிர் அவர்களே தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என நீங்கள் கூறுகிறீர்கள் அக்கட்சியை இப்போ சம்பந்தனும் சுமந்திரனும் அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள் அப்படியே இருக்கட்டும் ஒருக்கால் சம்பந்தனது திருவாயால் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்தேசியக் கூட்டமைப்பு எனச் சோல்லச்சொல்லுங்கோ பார்க்கலாம்.

அப்படி அவர் சொல்லமுடியாஅது என்றால் 

சம்பந்தன் அவர்களே உங்களதும் உங்கள் சகபாடி சுமந்திரனதும் மாவை வகையறாக்களதும் தலைமத்துஅத்துடனேயே கூட்டமைப்பு இன்றுவரை நிண்டுபிடிக்கிறது என நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஏன் இந்தப்பொல்லாப்பு  புலிகளும் பிரபாகரனும் பயங்கரவாதிகள் கொலையாளிகள் ஜனநாயகவிரோதிகள் ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எல்லோரும் அதே பிரபாகரனாலும் அவர்சார்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தாலுமே தோற்றுவிக்கப்பட்டது எனச்சொல்லுகினம் ஆதலாம் அந்தகட்சியும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் நாங்கள் ஜனநாயக வாதிகள் அதைவிட புலத்திலும் புலம்பெயர்தேசத்திலும் தம்மை மேதாவிகள் எனக்கூறுவோரால் இராஜதந்திரம் மிக்க சாணாக்கியர்கள் மார்க்கியவல்லிகள் எனக் கூறிக்கொள்ளும் தகுதியுடையவர்கள் என்பதை நிரூபிக்க நாங்கள் இப்பவே ஒரு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கப்போகிறோம் என அறிவியுங்கோ என வேண்டுகோள் விடுக்கலாமே.

 

உங்களுக்கு ஏதோ நெருக்கடி அது இந்தியா மூலமாகவோ அல்லது கொத்தா மூலமாகவோ இருக்கலாம் சரி நீங்கள் எல்லோரும் சரியான பாதையில் பயணித்தால் தமிழர்கள் உங்களுக்கு ஆதரவு தரப்போகிறார்களோ இல்லைத்தானே.

இப்போது தாயகத்தில் மக்கள் எல்லோரும் தங்களைத் தாங்கள் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யவேண்டுமோ அதையே செய்து ஒரு பாதுகாப்பான சூழலுக்குள் வாழப்பழகிக்கொண்டார்கள் அப்படியான பாதுகாப்பான சூழல் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதல்தான் தானாக அமையும் அவர்கள்தான் போராட்டம் சத்தியாகிரகம் போர்குற்றம் சர்வதேசம் என எதையும் பேசாது எங்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாது அவர்கள்பாட்டுக்கு ஒரு ஓரமாக நிண்டு அரசியல் என எதாவது செய்வார்கள் நாங்கள் பையப்பைய எங்கட அலுவலைப்பார்ப்பம். அவர்களுக்கும் நாங்கள் வாக்களிபதற்கு விரும்புவதில்லை ஆனால் வாக்களிக்காதுவிட்டால் வேறை ஆக்கள் வந்து விட்டால் இப்போதைய பாதுகாப்பான சூழல் இல்லாதுபோய்விடும் அதுதான் நாங்கள் அவங்களுக்கு வாக்குப்போடுகிறம்.

இல்லாதுவிட்டால் எங்களுக்குத் தெரியாதே ஒவ்வொரு நாலு வருடத்துக்கும் ஒரு தேர்தல் வரும் அதில் இப்போது தெரிவுசெய்யப்பட்டவர்கள் தமிழர்கள் உரிமைதொடர்பாக எதுவும் செய்யாதுவிடின் இன்னுமொருவரை ஒரு பயங்காட்டவாவது தெரிவுசெய்வம்தானே.

எங்களுக்குத் தேவையானது சாராயக்கடை தொடர்ந்து திறக்கவேணும் மெகாதொடர் பார்க்க தொடர்ந்து மின்சாரம் கிடைக்கவேணும், கொழும்புக்கு நினைத்தமாத்திரத்தில் போய்வரவேண்டும் படிப்புச் சரிவரவில்லை என்Dஆல் வெளிநாடு போக ஒரு நல்ல ஏஜன்சிக்காரன் கிடைக்கவேணும். இந்தவேலைகளுக்கு மத்தியில் மிஸ்கோலில் மாட்டுற பெட்டையளை ஓரங்கட்டி ஜாலியாக இருக்கவேணும், கொரோணா வாந்திபேதி சுனாமி மழைபெய்யாட்டில் மழைவந்தால் இவைகளைச் சாட்டாக வெளிநாட்டிலிருக்கிறவையளிட்ட காசு வாங்கி கொத்துரொட்டிப் பாட்டி கூழ்பாட்டி இவைகளைச் சாராயப்போத்தலுடன் கொண்டாடவேணும். பராயமாகாத ஆனால் பூப்பெய்திய பெண்களது வீட்டைச் சுற்றி பெட்டைநாயைச் சுற்றும் கடுவன் நாய்களாகத் திரிந்து அதுகளை வசப்படுத்தி "லிவிங் டு கெதர்" வாழ்கை வாழவேண்டும்.  மாலை வேளைகளில் பண்ணைப்பாலம் தாண்டியவுடன் மண்டைதீவு அலுமேனியப் பக்ரறி அண்டிப்போகிற பாதையில் இருக்கும் கன்னாப்பத்தை, வடலிகள் இவைகளுக்கு கிடைக்கும் பெட்டைகளை கூட்டிக்கொண்டு போகவேணும் அதுக்கு ஒரு மோட்டார் சைகிள் வேணும். 

இப்படியானதுக்கு கூட்டமைப்புத்தான் சரி.

மவனே அடுத்தமுறை ஊருக்குப்போகேக்க உடனடியாக ஒரு என்பீல்ட் புல்லட் மோட்டார் சைக்கிளைக் கொழும்பிலையே வாங்கிக்கொண்டு போகவேணும் எங்கட ரேஞ்சுக்கு ஒரு நாறின நெத்தலி மீனாவது கிடைக்காதோ.

ரொம்ப கொதித்துப் போயுள்ளீர்கள். காலத்தின் கோலம் தேற்றிக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

நான்கரை வருடங்களாக த.தே.கூ எதைச் சாதித்தது என வாக்களிக்கும் மக்கள் கேட்டு  விடையை கண்டு தெரிவுகளை மேற்கொள்ளவேண்டும் : 

  • காணிகள் விடுவிப்பு
  • அரசியல் கைதிகள் விடுவிப்பு
  • காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்
  • புதிய அரசியல் சாசனம் 
     
Link to comment
Share on other sites

On 16/6/2020 at 17:10, பிழம்பு said:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வட.கிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்.

இதனை முதலில் இன்றைய கூட்டமைப்பின் தலைகளான சம், சுங் காதுகளில் உரக்கச் சொல்லுங்கள், அதன்பின்பு உங்களைப் பக்கபலமாக இணைத்துக் கொள்வதா, இல்லையா என்று அவர்கள் முடிவெடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் நாட்டுக்காக போராட வெளிக்கிட்டு, இன்று எடுப்பார் கை பிள்ளையாய் போனார்கள். ஆதரவு கொடுத்தாலும் தொந்தரவு. கொடுக்காவிட்டாலும் தொந்தரவு. பல்லிழந்த பாம்பாகி விட்டார்கள். அவர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை. சந்தர்ப்ப வாதிகள் மேற்தான் என் கோபமெல்லாம்.   இதுவரையில் அவர்கள் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கவில்லை, நினைக்கவில்லை.  தங்களை தக்க வைக்க, ஒவ்வொருவரையும் காலத்துக்கு காலம் தேடிப்பிடித்து கொண்டுவந்து, காரியம் முடிய நாறடிக்கிற நாத்தல்க் கூட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் திட்டங்களில் ஒன்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின்மீதான மரியாதையுடனான பார்வையை எதிர்காலத்தில் மெல்ல மெல்ல சிதறடிப்பதே இது யாருக்குத் தேவையில்லையோ இந்தியாவுக்கும் சிங்களத்துக்கும் தேவை அந்த நிகழ்சித்திட்டத்தைச் செய்துமுடிக்கவே சுமந்திரன் சம்பந்தன் ஆகியோர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்

இனிமேல் முன்னால் விடுதலைப் புலிப் போராளிகள் என்றால் அனைவர்க்கும் ஆயுதம் ஏந்திய போராட்டத்திலும் ஜனநாயக அரசியல் போராட்டத்திலும் தோல்வியடைந்த ஒரு வரது முகம்தான் தமிழர்கள் எண்ணத்தில் வரவேண்டும் என்பதே அனைவரதும் எண்ணம். அதுக்குத் தக்கதாக இவர்கள் ஆடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி  "பத்தினி தெய்வோ கண்ணகியை வணங்கி  உத்வேகம் கொள்ளும் இலங்கைத் தீவில்  யுத்தமென்ற ஒரு போர்வையை சாட்டாக்கி  கொத்துக் கொத்தாய் பாலியல் வல்லுறவு எத்தனை ?" "பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு  மண்டபம் அதிர சலங்கை உடைத்து  உண்மை நாட்டினாள் அன்று, இன்றோ   கண்ணீர் அபலையாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள் ?"  
    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.