Jump to content

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படமாட்டாது - கெஹலிய


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

 

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான  தீர்வு அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படமாட்டாது. பொது காரணிகளின் நிமித்தம் தீர்வு  வழங்கப்படும். 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம்  புதிய அரசாங்கத்தில் பரிசீலனை  செய்யப்படும். அனைத்து இன மக்களும் புதிய  அரசாங்கத்தில் உரிமைக் கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நிகழ்கால அரசியல் நிலவரம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



keheliya_rambukwella.jpg

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமோக வெற்றிப் பெறும் என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும். ஆளும் தரப்பினர் பெரும்பான்மை  பலத்தை பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூட்டமைப்பினர் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். இவர்களின் கருத்தும்  வரவேற்கத்தக்கது.

அரசியலமைப்பு திருத்தம், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு   ஆகியவற்றை குறிப்பிட்டக் கொண்டு கூட்டமைப்பினர் அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் . தமிழ் மக்களின் குறிப்பாக வடக்கு , கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூட்டமைப்பினர் எக்காலங்களிலும் உரிய நடவடிக்கைகளை  முன்னெடுக்கவில்லை.  இதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினை ஒரு  உதாரணமாக குறிப்பிடலாம்.

முரண்பாடுகளை  தோற்றுவிக்கும்  காரணிகளை அடிப்படையாகக் கொண்டு  அரசியலமைப்பினை திருத்தவும், நாட்டின்  இறையாண்மைக்கு  பங்கம் விளைவிக்கும் விதத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வையும் கூட்டமைப்பினர் கோருகிறார்கள். இதனை ஒருபோதும்   செயற்படுத்த முடியாது. அரசியலமைப்பின் 19வது திருத்தம் திருத்தியமைக்கப்பட வேண்டும்,  அல்லது  முழுமையாக மாற்றியமைக்கப்பட  வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பின் 19வது திருத்தம்  தொடர்பில் எழுந்துள்ள  யோசனைகள் முழுமையாக பரிசீலனை  செய்யப்படும். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு  தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். இந்த தீர்வு அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டதாக அமையாது. அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ளும் விதத்தில்  தீர்வு  முன்வைக்கப்படும்.

புதிய அரசாங்கம் அனைத்து இன மக்களையும்  ஒன்றுப்படுத்தியதாக அமைய வேண்டும் எனவும், அதற்கான செயற்திட்டங்களை செயற்படுத்துமாறும் ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை  வழங்கியுள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அனைத்து இன மக்களும் உரிமை கொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு  என்றார்.

https://www.virakesari.lk/article/84127

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

        14 மன்வந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.
        15 சந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 ஆண்டுகள் = 6 x 43,20,000 ஆண்டுகள் = 6 மகாயுகங்கள்.

* பிரம்மனின் ஒரு பகலில் ஆயிரம் மகாயுகங்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.