Jump to content

மியன்மா (பர்மா) நாட்டுத் தமிழர்கள் - ரெ.மாரிமுத்து


Recommended Posts

miyanmartamil.jpg
1992 இல் சிட்னியில் நடத்தப்பட்ட 5வது  உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டின் மலரிலிருந்து நன்றியுடன் பகிர்கிறோம்
கி.மு. 200 - 300 ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் அசோக மன்னர் இந்திய நாட்டில் தென்னகம் இலங்கை ஆகிய நாடுகளுக்கு பௌத்த குருமார்களை அனுப்பிப் பௌத்த மதத்தை பரப்பிய காலத்தில், பர்மிய நாட்டிற்கும் ஒரு குழுவினர் வந்தனர். இங்கே வந்த பௌத்த மதத்தோடு காஞ்சிபுரத்திலிருந்து பல்லவ எழுத்து, பண்பாடு, நாகரீகம் ஆகியவைகளும் தற்போது தட்டோன் எனப்படும் "சுவர்ண பூமி" நாட்டில் பரவியதாக "பர்மிய கலாச்சார வரலாறு" என்ற நூல் கூறுகின்றது.
 
"ரோம் நகரத்தின் தெற்குப் பகுதியான "மோசா" என்ற கிராமத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொன் தகட்டில் காணப்படும் பௌத்த சாசனம் பல்லவலிபியால் எழுதப்பட்டுள்ளது. அக்காலத்தில் பர்மாவை அரசு புரிந்த மன்னர்களின் பெயர்கள் சூரியவிக்ரமன், சிம்ம விக்ரமன் என்றெல்லாம் சூட்டப்பட்டுள்ளன. சிறீகேத்திரம், வைணவ நகரம் என்ற நகரங்கள் புகழ் பெற்று விளங்கியுள்ளன.
 
பர்மாவின் நாதசுவரமும் தோல் கருவியும் இந்தியாவிலிருந்து கிடைத்ததாகவும் ஆடற்கலையே தென் இந்திய பரத நாட்டியத்தின் அடிப்படையாகக் கொண்டதெனவும் சான்றுடன் விளக்கப்பட்டுள்ளன.
 
பர்மிய மன்னர் சோழர் தொடர்பு
சான்சீத்தா என்ற பர்மிய மன்னன்'பகான்' நகரத்திற்கு வந்த சோழ வேந்தனுக்கு புத்தம், தர்மம், சங்கம் என்ற முப்பெரும் தத்துவங்களை பொன்னேட்டில் சிவப்பு மையால் எழுதி அறிவித்ததற்கிணங்க சோழ மன்னன் பௌத்த மதத்தை தழுவி ஏற்றுக்கொண்டான் என்பதாக கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இவைகளினால் பர்மிய நாட்டுடன் தமிழகம் தொன்றுதொட்டே தொடர்பும் நல்லுறவும் கொண்டு வந்துள்ளது என்பது பெறப்படுகிறது.
 
பர்மிய நாட்டில் தமிழர் குடியேற்றம்
பிற்காலத்தில் கீழ் பர்மா பிரிட்டனின் ஆட்சிப் பிடியில் இருந்தபோது 1852ம் ஆண்டு முதல் இந்தியர்கள் (தமிழர்கள்) பெரும் எண்ணிக்கையில் பர்மாவுக்கு வரத்தொடங்கினர்.
 
1931ம் ஆண்டின் கணக்கெடுப்பு
miyanmartamilst.JPG
இவர்கள் பல வகையான தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனராயினும் விவசாயத் துறையிலேயே பெருமளவில் பங்கேற்றனர். அரிசி ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி பெருமளவில் பெற்று வந்த பர்மா நாட்டின் அப்போதைய விளை நிலத்தின் பரப்பு ஆறு இலட்சம் ஏக்கராக இருந்தது. 1876ம் ஆண்டு முதல் தமிழக விவசாயத் தொழிலாளர்கள் தீவிரமாகத் தொழிலில் ஈடுபட்டதின் காரணமாக விளை நிலத்தின் பரப்பு 9,85,252 ஏக்கராக எல்லாரும் வியக்கத் தக்க அளவு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
 
இதையே,
"பர்மா நிலத்தில் பச்சைவயல் முகங்காட்ட
பச்சை வயலிடையே பச்சரிசி சிரித்திருக்க
அத்தனையும் பொன்னாக ஆக்கிப் படைத்தவர்கள்
நம்மவரே என்றால் நாட்டோர் மறுப்பதில்லை"
என்றார் கவியரசு கண்ண தாசன் அவர்கள்.
 
1850ம் ஆண்டு முதல் பர்மா நாட்டில் பொருள்வளம் ஈட்ட நகரத்தார்கள் வரத்தொடங்கினார்கள். ஆரம்ப காலத்தில் மூன் மாநிலம் மொப்மேனில் பரவலாக வாழ்ந்த இவர்கள் 1930ம் ஆண்டுக்குள் பர்மா முழுவதும் நிலை கொண்டுவிட்டார்கள். இந்த நகரத்தார்கள் வசம் மலாயாவில் 700 கடைகளும், இலங்கையில் 450 கடைகளும், இந்தோனேசியாவில் 105 கடைகளும் இருந்த வேளையில் பர்மாவில் மட்டும் 1655 கடைகள் 56, 000, 00 ஸ்டர்லிங் பவுன் மூலதனத்துடன் இயங்கி வந்ததுடன் 1941ம் ஆண்டளவில் மூன்று இலட்சம் ஏக்கர் விளை நிலமும் இவர்கள் கைவசம் இருந்தன. 1931ம் ஆண்டு பர்மாவில் இந்தியரின் எண்ணிக்கை 10 இலட்சமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
இந்தியர் (தமிழர்) வெளியேற்றம்
1930ல் ஏற்பட்ட இந்தியர் பர்மியர் இனக் கலவரத்தினாலும் பிறகு பர்மியர்களின் தேசிய விடுதலை உணர்ச்சியாலும் அதுவரை இந்தியாவின் ஒரு மாநிலமாக கருதப்பட்ட பர்மா தனி நாடாக பிரிந்ததாலும் 5 லட்சம் இந்தியர்கள இந்நாட்டைவிட்டு அவல நிலையில் வெளியேறி விட்டனர். எஞ்சிய தமிழர்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தார்கள். அதன் பின்னர் 1962ம் ஆண்டில் ஏற்பட்ட அரசு மாற்றத்தினால் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக 2 இலடசம்பேர் தாயகத்திற்கு சென்று விட்டனர்.
 
இனக்கலவரம், 1962ம் ஆண்டுக்குப்பின் ஏற்பட்ட சோசலிசம் போன்ற கொள்கைகளால் பெருந்தொழில்கள் தேசிய உடமையாக்கப்பட்டு கொடுக்கல் வாங்கல் தொழிலும் தடை செய்யப்பட்டு விட்டதால் நகரத்தார்களும் பெரும்பாலானோர் தாயகம் சென்று விட்டார்கள். இவர்கள் கைவசம் இருந்த நிலங்களும் பொது உடமையாக்கப் பெற்றுவிட்டன.
 
வதந்தியை நம்பிச் சென்றவர்கள்
நாட்டில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்போது சிக்கலும் சிரமமும் ஏற்படுதல் இயற்கையே. ஆனால் அதை ஒற்றுமையுடன் சமாளித்து வாழ வேண்டும். அதை விடுத்து வதந்திகளையும் ஒரு சில விஷமக்காரர்களின் பேச்சைக் கேட்டும் தங்கள் சொத்து சுகங்களை விட்டுச் சென்றவர்கள் ஏராளம். இப்படிச் சென்றவர்கள் இங்கே நல்ல நிலையில் வாழ்ந்தவர்கள். அக்கால கட்டத்தில் இந்தியாவும் நன்றாக ஆராயாமல் கப்பலை அனுப்பி தேவை இல்லாமல் பல இந்தியரை திரும்பவும் அழைத்துக்கொண்டது. தாக்குப்பிடித்துக் கொண்டு இருந்த எஞ்சிய தமிழர்கள் இங்கே நல்லவிதமாக வாழ்க்கை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
 
1988க்குப் பின் ஏற்பட்ட பொருளாதார மாற்றம்
1988ம் ஆண்டுக்குப்பின் ஆட்சி மாறியது. பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட்டு விட்டன. சோசலிசம் வீழ்ந்தது. முயற்சியும் வல்லமையும் வாய்ப்பும் உள்ள தமிழர்கள் நல்ல நிலையில் உள்ளனர். மளிகைக் கடை, மருந்துக்கடை, பெட்டிக்கடைகள் வைத்துள்ளனர். கூலி வேலை செய்வோரும் அதிகம் உள்ளனர். தமிழரில் பெரும் பகுதியினர் விவசாயிகள், உழைப்பாளிகள் ஆதலால் இவர்கள் இப்போது முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். விலை கட்டுப்பாடு இல்லாததால் நெல்லும் நல்ல விலையில் உயர்ந்துள்ளது. வயல் புறங்களிலேயே ஆடுமாடு கோழிகளை வளர்க்கின்றார்கள். சுருங்கச் சொன்னால் பொருளாதாரத் துறையில் ஒளிமயமான எதிர்க்காலம் உண்டு என நம்பலாம்.
 
தமிழர் வாழும் பகுதிகள்
மூன்மாநிலம் மொல்மென், தட்டோன், கரீன் மாநிலம் பாங்கோன், பக்கோ, மாந்தலே போன்ற பகுதிகளில் தமிமர் இருக்கலாம். சரியான புள்ளி விவரம் இல்லை.
 
சைவ வைணவ திருக்கோவில்கள்
தமிழர்களின் சிற்ப எழிலுடன் கூடிய மிகப்பெரிய திருக்கோவில்கள் சமயப் பண்பை வளர்த்து வருகின்றன தமிழர்கள் வாழும் இடமெல்லாம் கோவில்கள் உள்ளன. குறிப்பாக தேன்கருமாபிள்ளை அவர்களின் முயற்சியால் கட்டப்பெற்ற கமாயுட் ஸ்ரீ மாரியம்மன் தேவஸ்தானம் இராமநாதன் ரெட்டியாரால் கட்டப்பட்ட பெற்ற பெருமாள் கோவில், திருக்கம்பை முருகப் பெருமான் ஆலயம். காமாட்சியம்மன் கோவில், காளியம்மா (காளிபாடி) போன்ற கோவில்கள் எல்லாம் தமிழரின் கலைத் திறனையும் சமயவழி பண்பாட்டையும் பக்தி நெறியையும் பறைசாற்றி வருகின்றன. மேலும் பசுண்டான் நகரத்தெண்டாயுதபாணி தட்டோன் ஸ்ரீ தண்டாயுதபாணி, மோல்மென் சிவஸ்தலம் தெண்டாயுதபாணி கோவில்களில் எல்லாம் தைப்பசம் சித்திராபௌர்ணமி விழாக்கள் இன்றும் மிகவிமரிசையுடன் கொண்டாடப்பெற்று வருகின்றன. இங்கெல்லாம் தமிழர்களை பெரும் திரளாக காணலாம். பீலிக்கான் அங்காள ஈஸ்வரி, முனீஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் அதிகம் கூடுகின்றனர்.
 
முருகக் கடவுள் இரதத்தில் ஊர்வலம் வரும்போது அர்ச்சனைத் தட்டுகளை கையில் ஏந்திக்கொண்டு காணிக்கை செலுத்தியும், திருநீற்றை இரு கைகளாலும் வணங்கிப் பெற்றுக்கொண்டு நெற்றியில் பக்தி சிரத்தையுடன் இட்டுக்கொள்ளும் ஏராளமான பர்மிய மக்கள் நம்கோவில் உற்சவங்களில் இரண்டறக் கலந்து விடுகின்றனர்.
 
நம் கோவில் விழாக்களுக்கு தேவையான உதவிகளை பர்மியர்களும் செய்வதுண்டு. கோவில் கட்டும் திருப்பணிகள் இப்போதும் அங்கங்கே சிறப்புற நடந்து வருகின்றன. ஆனால் தற்போதெல்லாம் சிறந்த சிற்பக்கலைஞர்கள் இல்லை இதற்கு பாரத அரசு தங்கள் தூதரகத்தின் மூலம் உதவி செய்ய முன்வரவேண்டும்.
 
கிறித்துவ தமிழர்களும், சோலியா முஸ்லிம் தமிழர்களும் தங்கள் சமயத்துடன் தமிழ்ப் பண்பைப் பேணி வளர்த்து வருகின்றனர்.
 
தமிழ்ப் பணிகள்
1965ம் ஆண்டுக்கு முன் அ.ப. தமிழர் சங்கம், ரெட்டியார் உயர்நிலைப்பள்ளி, கம்பை கல்விக் கழகம் மற்றும் பல தமிழ் அமைப்புகள் தமிழையும் பண்பாட்டையும் பேணி வளர்த்து வந்துள்ளன. பிறகு கல்விச் சபைகளை அரசு மேற்கொண்ட பர்மியம் ஆங்கிலம் இரண்டை மட்டுமே போதனா மொழியாக அறிவித்து விட்டதால் தமிழ் வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்பட்டன
 
தற்போது நிலைமைகள் மாறி வருகின்றன. கோவில்களிலும் பொது நிறுவனங்களிலும் தமிழ் சொல்லித் தரப்படுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றும் அமைப்பு "தமிழ் இந்து நிதி சேமிப்பு நிறுவம் யாங்கோன்" ஆகும். இவர்கள் குறுகிய காலத்தில் கணிசமான நிதியை சேர்ந்து 25 ஏழைத் தமிழ்ப் பள்ளிகைகளை தத்து எடுத்து மாதம் கியா 500/= ஐ ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கி தமிழ் வாழ பணி செய்கின்றார்கள். திரு.மணி, திரு.முருகன், திரு.மு. நாராயணன் ஆகியோர் அயராது உழைக்கின்றனர். இவர்களின் பகீரத முயற்சி ஆடம்பரம் ஆரவாரம் இல்லாமல் வெற்றி நடை போடுகின்றது. இவர்களின் தொண்டு பர்மா தமிழ் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
 
திரு.முனியாண்டியின் தலைமையில் உள்ள தமிழ் இந்து ஐக்கிய நிதி சேமிப்பு நிறுவனம் தாமுவே தமிழ்த் தொண்டு நிதி சேமிப்பு நிறுவனம், திருவி.எஸ்சாமிநாதன் தலைமையில் உள்ள ஸ்ரீ நடராசப் பெருமான் ஆலயம் தமிழ்ப் பாடசாலை, திருவாளர்கள். இரா. அ. தங்கராசன், எஸ்.பி.சேது, சோலை தியாகராஜன் ஆகியோர்களின் முயற்சியால் இயங்கும் யாங்கோன் திருக்குறள் மன்றம், வள்ளல் பெருமானின் நெறி பரப்பும் ச.சு.ச.சங்கம் ஆகியவைகளும் தமிழ்ப் பணியாற்றி வருகின்றன.
 
மற்றும் மூன்மா நிலத்தில் அறவழி அன்பர் குழு, மெய்வழி அன்பர்கள் ஆகியவை திரு. இரா.கிருட்டினர் பொறுப்பில் செவ்வனே செயல் படுகின்றது.
 
தட்டோனில் தமிழ் இல்லம், வள்ளுவர் கோட்டம், கலைமகள் தமிழ்க் கல்வி நிறுவனம் மொழியும் குறளும் பரப்புகின்றன. திருவாளர்கள். ரெ.மாரிமுத்து, ப.கோ. இராமசாமி, ரா.முனியப்பன். ந.சேகர், வ.க.வல்லமைச்சன், சி.அங்குச்சாமி, த.ரெகுநாதன், பா.சொக்கலிங்கம், மு.நாராயணன், ந.பாலன், ந.சந்தர் ஆகியோர் நற்பணியாற்றுகின்றனர்
 
உ.த.ப.இயக்கம் பர்மாகிளை
இது பாரதிதாசன் நூற்றாண்டு விழாவை ஒருமைப்பாட்டு விழாவாக சிறப்புடன் கொண்டாடியது. திருக்குறள் வகுப்பு நடத்துகின்றது. அங்கங்கே கிராமங்களில் தமிழ்ப் பள்ளிகள் திறக்க ஊக்கமளித்து வருகின்றது. தமிழர்களிடையே உறவை வளர்க்கின்றது.
 
தமிழ் வெளியீடுகள்
1965க்கு முன்னர் "ரசிகரஞ்சனி", "தொண்டன்","பால பர்மா" என்ற நாளேடுகளும் "
 
சினிமா டைம்ஸ்" போன்ற வார ஏடுகளும் வெளியிடப்பட்டன. தமிழக எழுத்தாளர்
 
களுக்கு இணையாக தமிழ்ப் பணியும் இலக்கியப் பணியும் ஆற்றியுள்ளனர். நாழிதழ்கள் தடை செய்யப் பெற்றுவிட்டதும் தமிழ் உலகம் இருண்டு வரண்டு போய்விட்டது.
 
அதன் பின்னர் "தமிழ் உள்ளம்" திரு ரெ.மாரிமுத்து முயற்சியாலும் "தமிழ் ஒளி" திரு.பூ.செ.புதியணனை ஆசிரியராகக்கொண்டும் வெளிவந்தன. தற்போது நல்ல காலம் என்ற சமய திங்களிதழ் ஒன்று மட்டும் ஆசிரியர் என்.எம்.நாகரெத்தினம் அவர்களால் வெளியிடப் பெறுகின்றது. இவர் சிறந்த எழுத்தாளர் ஆவார். திரு.பி.சுப்பிரமணியம் அவர்கள் தமிழ்ப்பாட நூல்களையும் சில சமய நூல்களையும் வெளியிடுகிறார். இதுவே இன்று தமிழ் மாணவர்கட்கு வரப்பிரசாதம். ஐயா திரு. ரி.எஸ்.மணி அவர்கள் நடமாடும் நூல் நிலையமாக செயல்படுகின்றார். மொல்மேன் திருகி.சுந்தர் அவர்களும் இவ்வகையில் சிறந்த சேவையாற்றி வருகின்றார்.
 
மியன்மா தமிழர்களின் அடிப்படைத் தேவைகள்
இந்த நாட்டுத்தமிழர்கள் தமிழ்கூறும் நல்லுலகத்துடன் மொழி பண்பாடு ரீதியில் நேரடித் தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளனர். எனவே;
அ) இவர்களின் மொழி வளர்ச்சிக்காக எளிய நடையில் படிப்பதற்கான பாட நூல்கள்

ஆ) படித்த தமிழை அபிவிருத்தி செய்துகொள்வதற்கான அம்புலிமாமா போன்ற வெளியீடுகள்.

இ) ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ் அமைப்புக்களிலும் நூலகங்கள் ஏற்படுத்தி, அதற்குத் தேவையான வார, திங்கள், நாளேடுகள் மற்றும் இலக்கியங்கள் சேர்த்து வைத்தல்.

ஈ) தபால்வழி இலவச பாடம் போதித்தல்.

உ) வீடியோ கெசட்டில் தமிழ் போதிக்கும் புதிய வழி முறைகளை படம்பிடித்து பயன்படுத்தல்.
மேற்கூறியவை அனைத்தும் எங்கள் நாட்டிற்கு அவசிய உடனடித் தேவைகளாகும். இவைகளை தமிழக அரசு சரியாகத் திட்டமிட்டு இந்திய தூதுவரகத்தின் மூலம் கிடைக்குமாறு வழிவகை செய்ய வேண்டும்.
 
தமிழை உயிரெனப் போற்றும் தமிழக அரசு வெளிநாடுகளில் தமிழ் வளர்க்கும் எமது பணிகளுக்கு இந்த உதவியையாவது செய்யக்கூடாதா?
ரெ.மாரிமுத்து - அமைப்பாளர் - உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மியன்மா கிளை
 
Link to comment
Share on other sites

பர்மாவுக்கும் வல்வெட்டித்துறைக்கும் கப்பால் போக்குவரத்து இருந்திருக்கிறது. அருசி இறக்குமதி செய்திருக்கிறார்கள். தண்டையலாக  வெங்கடாசலபதி (தலைவர் பிரபாகரனின்  பூட்டனார் குடும்பம் ) இருந்திருக்கிறார். அவர் அங்கு பர்மாவில் ஒரு கோவிலை நிறுவி இருந்ததாகவும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் ந. அனந்தராஜ் பதிவு செய்திருந்தார்.

http://www.velichaveedu.com/20218-3/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:
 
 
தமிழை உயிரெனப் போற்றும் தமிழக அரசு வெளிநாடுகளில் தமிழ் வளர்க்கும் எமது பணிகளுக்கு இந்த உதவியையாவது செய்யக்கூடாதா?
ரெ.மாரிமுத்து - அமைப்பாளர் - உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மியன்மா கிளை
 

தமிழன் போய் வாழாத இடமில்லை.

தமிழன் தமிழ் நாட்டை எப்ப ஆழ்கின்றானோ அப்பதான் தமிழர்களுக்கு விடிவு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.