Jump to content

இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் யார் பக்கம் நிற்கப் போகிறது இலங்கை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் யார் பக்கம் நிற்கப் போகிறது இலங்கை?

விமலநாதன் விமலாதித்தன் ஊடகவியலாளர் - சர்வதேச விவகாரங்கள்
மகிந்த, கோட்டபய, மோதிGetty Images

(இதில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் கருத்துகள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)

ஆசியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்திகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், இருந்த எல்லைப்பூசலானது உயிர்ச்சேதம் மிக்க மோதலாக உருமாற்றம் கண்டுள்ள வேளையில், ஆசியாவின் பிற நாடுகள் இந்தப் பிரச்சனையை எந்தக் கோணத்தில் அணுகப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தெற்காசியப் புவியியலில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாய் அமைந்துள்ள இலங்கை, இன்று வரை அந்த இரு நாடுகளுடனும் மிகச்சிறந்த உறவைப் பேணி வருகின்றது. 

இந்தியாவின் செல்வாக்கு இலங்கை அரசியல் தளத்தில் பலகாலமாக இருந்து வந்த போதும், 2015ஆம் ஆண்டுக்கு முற்பட்ட மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்திலேயே சீனாவின் கை இலங்கையில் மேலோங்கியது. 

சீனாவின் நிதியுதவியுடன் பல்வேறு கட்டுமானத்திட்டங்கள் இலங்கையின் பல பாகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டன. 

வருமான மீட்டுவதற்கு பொருத்தமற்ற திட்டங்கள் என அவற்றின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதும், சீனாவின் கால் அந்தக் காலப்பகுதியிலேயே மிக நன்றாக ஊன்றப்பட்டது.

2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னால், இந்தியாவின் கை உள்ளதென்றும் ஒரு கருத்து நிலவுகின்றது. 

மைத்ரிபால சிரிசேனGetty Images மைத்ரிபால சிரிசேன

அந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷவின் கட்சியைப் பிளந்து கொண்டு எதிர்த்தரப்புக்குச் சென்ற மைத்ரிபால சிரிசேனவின் செயற்பாடுகளின் பின்னால், இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் அதிகாரி ஒருவர் இருந்ததாக, மகிந்தவின் தரப்பு விமர்சித்திருந்தது.

எவ்வாறாயினும் சீன சார்பு கொண்டிருந்த இலங்கையின் முன்னைய ஆட்சியாளர் தூக்கியெறியப்பட்டமையானது, இந்தியாவுக்கு மிகுந்த சாதகமாகவே அமைந்தது.

இலங்கை ஜனாதிபதிப் பதவியில் அடுத்து அமர்ந்த மைத்ரிபால சிரிசேனவும், பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவும் தமக்குள் முரண்நிலை கொண்டிருந்த போதும், இந்தியாவின் நட்புக்கரத்தை மிக உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தனர். 

இந்நிலையில், ஏற்கனவே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த சீனாவின் கட்டுமானத் திட்டங்களில், ஒரு தேக்கநிலை ஏற்படவே செய்தது. 

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பயங்கரவாதக் குண்டுவெடிப்புகளின் பின்னான விசாரணைகளுக்கு, இந்தியாவின் உறுதுணை விரைவாகக் கிட்டியதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது. 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது இரண்டாவது பதவியேற்பின் பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயத்தில் இலங்கை உள்ளடக்கப்பட்டதும், இந்தக் கோணத்தில் நோக்கப்பட வேண்டிய ஒன்றே.

இந்தக் காலப்பகுதியில், பதவியிறக்கப்பட்ட மகிந்த ராஜபக்‌ஷ தமது இந்தியத்தொடர்புகளூடாக இந்திய ஆட்சியாளார்கள் தம் மீது வைத்திருந்த பார்வையை மாற்றுவதில் வெற்றிகண்டார் என்றே சொல்லவேண்டும். 

மகிந்தGetty Images

இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் முக்கியஸ்தரும் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமிக்கும் மகிந்தவுக்கும் இடையில் ஏற்கனவே நிலவிவந்த நட்பு, இந்த முயற்சியில் வெற்றியடைய பெரிதும் உதவியிருந்தது. 

அதேவேளை மகிந்த தமது சீன நண்பனையும் கைகழுவி விடாது இறுகப் பற்றியிருந்தார்.

அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த ஜனாதிபதித்தேர்தலில் பெற்ற அபார வெற்றிக்குப் பின்னால், ஈஸ்டர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் நிலவிய போதும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் ஆசீர்வாதம் உறுதியாக இருந்தது. 

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு புதுடெல்லி வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பிதழ் வைக்கப்பட்டமையும், அதை ஏற்று தனது முதலாவது அயல்நாட்டு விஜயமாக அவர் அங்கு சென்றமையும் பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றன.

கடந்த ஆண்டு இறுதியில் இந்திய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினூடாக, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக, இந்தியா செயற்பட்டிருந்தது. 

இதன் மூலம் அந்த நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியத் தலையீடு ஏற்பட்டது. 

இலங்கையில் பல காலமாக, பெரும்பான்மை - சிறுபான்மை முரண்நிலை காணப்பட்டு வருகின்ற போதிலும், சிறுபான்மை மக்கள் தொடர்பில் இந்தியா தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வந்த போதும், இந்தச் சட்டத்திருத்தத்தில் இலங்கையை இந்திய ஆட்சியாளர்கள் உள்ளடக்காமல் விட்டமை, சுட்டிக்காட்டத்தக்கது. 

கோட்டாபயGetty Images

இலங்கையின் புதிய ஜனாதிபதியான கோட்டாபயவுடனான நல்லுறவை முறித்துக் கொள்வதற்கும் அதன் மூலம் அவர் முற்றிலுமாக சீனச் சார்பு கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுவதற்கும், இந்திய அரசாங்கம் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. 

இலங்கையின் சிறுபான்மை இன மக்களான தமிழர்கள், பல ஆண்டுகளாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் நிலை காணப்படுகின்றது. 

இந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டே வந்திருக்கின்றது. 

தமிழ்நாடு மாநிலத்தில் வலுவாக காலூன்ற முனைந்து கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி, இந்தப் பிரச்சினையை தமிழ் அகதிகளுக்குச் சாதகமாகக் கையாண்டு, அந்தச் சட்டத்திருத்தத்தில் இலங்கையையும் உள்ளடக்கியிருக்க முடியும். 

அதன் மூலம், தமிழ்நாட்டு அரசியலில் தன் மீது சாதகமான அலையொன்றையும் கிளப்பியிருக்க, இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியால் முடிந்திருக்கும். எனினும், இலங்கை அரசினுடனான நல்லுறவை, தனது கட்சியின் எதிர்காலத்தை விடவும் முக்கியமாகப் பார்த்தது இந்திய ஆளுந்தரப்பு.

இந்தியாவுடன் பலகாலமாக நட்புப்பேணி வந்த நேபாளம், தற்போது சீனச்சார்பு நிலையை எடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவின் வெளியுறவுச் செயற்பாட்டில், இது குறிப்பிடத்தக்க ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகின் பல நாடுகளும் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீள்வதற்குப் போராடி வருகின்ற இச்சுழலில், இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட தாக்குதலில், இருநாட்டுப் படைகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 

இந்த நிலையில், இலங்கை இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவு பேணிவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசு, அணிசாரா கொள்கையைப் பின்பற்றவே அதிக சாத்தியங்கள் உள்ளன. 

விமலநாதன் விமலாதித்தன் விமலநாதன் விமலாதித்தன்

இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கின்ற சூழலில், அதில் பாரிய வெற்றி பெறுவதனூடாக, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்வதையே ஒரே இலக்காகக் கொண்டு செயற்படும் இலங்கையின் ஆளும்தரப்பு, இந்திய - சீன முரண்நிலைக்குள் ஒருதரப்பை மட்டும் சார்ந்து ஆதரவளித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. 

மேலும், இந்த இந்திய - சீன மோதலானது, பாரிய போராக வெடிக்கும் நிலையும் இல்லாத காரணத்தால், இருதரப்பில் ஒன்றை மட்டும் இலங்கை சார்ந்து நிற்பது, தமக்கு உகந்தது அல்ல என்பதை, இலங்கை ஆளும் தரப்பு தெளிவாக உணர்ந்திருக்கின்றது. 

கடந்த காலத்தில் விட்ட பிழையை, ராஜபக்‌ஷ சகோதரர்கள் மீண்டுமொருமுறை விடப்போவதில்லை என்பதையே, அண்மைய அரசியல் நகர்வுகள் காண்பிக்கின்றன.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், கடந்த 45 ஆண்டுகளில் இந்திய - சீன இராணுவப் படைகளுக்கு இடையே இடம்பெற்ற மிக மோசமான தாக்குதலாக இது அமைந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளார் நாயகமான அண்டனியோ குட்டெரெஸ், லடாக் பகுதியிலிருந்து இருநாட்டுப் படையினரும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல், வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த இரு நாடுகளின் சிறந்த நண்பனாகத் திகழும் இலங்கையின் ஜனாதிபதி செயலகமோ அல்லது வெளிவிவகார அமைச்சோ, இது தொடர்பாக எக்கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. 

பிராந்திய வல்லாதிக்க சக்திகளுடனான இந்தப் பிரச்சினையில் தலையிடாது, நகர்வதற்கு இலங்கை தற்போதைக்கு, மௌனம் என்ற ஆயுதத்தையே கையிலேந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.bbc.com/tamil/sri-lanka-53088301

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dailymirror.lk/breaking_news/Another-US-140-Mn-loan-from-China/108-190202

இண்டைக்கு, 150மில்லியன் டொலரை சீனாக்காரன் தூக்கி தந்திருக்கிறான். மோடியிடம் இருந்து ஒரு தேத்தண்ணியும் வராது.

நாங்கள், வெட்டி ஆடி, காசு தேத்தப்போறம்...

இதுதான் மகிந்தா நிலைமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, தனது பக்கத்தில் உள்ள நாடுகள் எதனுடனும் நல்ல உறவில் இல்லை.

இலங்கையில் முழு தீவு மக்களும் ஒரே ஒரு விசயத்தில் ஒற்றுமையாக நம்புவது, எக்காலத்திலும், இந்தியாவை நம்ப முடியாது என்பதனை.

நேபால் அதேநிலை. பங்களாதேஷ் அப்படி தான் நிலைமை. பாகிஸ்தான் சொல்ல வேண்டியதில்லை. பூட்டான் மதில் மேல் பூனை.

மாலைதீவு, இந்திய ஆதரவு என்று சொன்னாலும், அளவில் மிக சிறியதுடன், அண்மைக்காலம் வரை சீன ஆதரவு நாடாக இருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா ப‌க்க‌ம் தான் நிப்பார்க‌ள் , இது அர‌சிய‌ல் புரித‌ல் உள்ள‌ அனைவ‌ருக்கும் தெரியும் ,

இந்தியாவை சுற்றி இருக்கும் நாடுக‌ள் சீனாவின் ப‌க்க‌ம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

http://www.dailymirror.lk/breaking_news/Another-US-140-Mn-loan-from-China/108-190202

இண்டைக்கு, 150மில்லியன் டொலரை சீனாக்காரன் தூக்கி தந்திருக்கிறான். மோடியிடம் இருந்து ஒரு தேத்தண்ணியும் வராது.

நாங்கள், வெட்டி ஆடி, காசு தேத்தப்போறம்...

இதுதான் மகிந்தா நிலைமை.

2 minutes ago, பையன்26 said:

சீனா ப‌க்க‌ம் தான் நிப்பார்க‌ள் , இது அர‌சிய‌ல் புரித‌ல் உள்ள‌ அனைவ‌ருக்கும் தெரியும் ,

இந்தியாவை சுற்றி இருக்கும் நாடுக‌ள் சீனாவின் ப‌க்க‌ம் 
 

எண்டாலும் கோத்தபாய அமெரிக்கா ஓதி அனுப்பின ஆளெல்லோ......?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

எண்டாலும் கோத்தபாய அமெரிக்கா ஓதி அனுப்பின ஆளெல்லோ......?

இப்ப பிரச்சணை அமேரிக்கா சம்பந்தப்பட்டதில்லை. இந்தியா கொஞ்சம் பலவீனமடைவது, அமேரிக்காவுக்கு நல்லது என்று நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் , 

பாண்டே என்ன முழு உலகமும் கிந்தியனுக்கு சப்போற் போல கதைக்கிறார்..☺️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.