Jump to content

ஜனாதிபதி கோத்தாவுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!


Recommended Posts

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வரவிருக்கும் பிறந்தநாளை முன்னிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

Image

மேலும் இலங்கையில், கொரோனா வைரஸ் என்ற கொவிட் 19 ஐ கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கையை முன்னெடுத்தமைக்காகவும் சீன ஜனாதிபதி தமது கடிதத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஹூ வை இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் அவர்கள் அனுப்பி வைத்த கடிதத்தை பதில் தூதுவர் ஜனாதிபதியிடம் வழங்கினார்.

கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு எதிராக இலங்கை முன்னெடுக்கும் விசேட வேலைத்திட்டங்கள் சீன ஜனாதிபதியின் பாராட்டை பெற்றுள்ளதென சீன தூதுக் குழுவினர் தெரிவித்தனர்.

இலங்கையில் வைரசை கட்டுப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்யும் வகையில் சீன அரசு மருத்துவ உதவிப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. அவை சுகாதார அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், நிவாரண உதவிகள் அடங்கிய பட்டியல் பதிற் தூதுவரினால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

நெருக்கடிக்குள்ளான இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவியமை தொடர்பாக கோத்தாபய ராஜபக்ஷவால் ஜனாதிபதி ஷீக்கும் சீன மக்கள் மற்றும் சீன நிறுவனத்திற்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

சீனா மற்றும் இலங்கை கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களை இனங்காணுவதற்காக ஒரே மாதிரியான வழிமுறைகளை பின்பற்றியுள்ளதென சீனத் தூதுக்குழு குறிப்பிட்டது.

இந்நெருக்கடியை சிறப்பாக கட்டுப்படுத்துவதற்கு இரு நாட்டினதும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் அர்ப்பணிப்பே காரணமாகும் என்றும் தூதுக்குழு குறிப்பிட்டது.

உலகளாவிய தொற்று நோயின்முன் இருநாடுகளும் பரஸ்பரம் பாரிய உதவிகளை செய்துகொண்டது. இவ்வருடத்தில் பெப்ரவரி ஆரம்பத்தில் சீனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தபோது இலங்கை ஒரு தொகை கறுப்பு தேயிலையை சீனாவிற்கு அன்பளிப்பு செய்த காரணம், தேயிலையில் உள்ள நோய் நிவாரண குணாம்சத்தை கருத்திற்கொண்டேயாகும்.

அது மட்டுமன்றி சீனாவில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்காக ஆசி வேண்டி நாடு பூராகவும் பிரித் பாராயணம் ஒலிக்கப்பட்டது. கொழும்பு தேவி பாலிக்கா வித்தியாலயத்தின் மாணவர்கள் தமது சகோதரத்துவ உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்ட பல ஓவியங்களை சீன ஜனாதிபதியின் பாரியார் பென்ங் லியுவானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அந்நடவடிக்கை அவரின் பாராட்டைப்பெற்றது.

இந்நாட்களில் பீஜிங் நகரத்தின் நிலை பற்றி தெளிவுபடுத்திய தூதுக்குழு, சுமார் நூறு பேரளவில் தொற்றுக்குள்ளாகியிருந்தபோதும், தற்போது இந்நிலை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டது. நோயின் ஆரம்பத்தை மிக விரைவாக கண்டு பிடிப்பதற்கு சீன அதிகாரிகள் சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.

வைரஸ் பரவியது நபர்களுக்கிடையிலன்றி, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டின் மீனின் மூலமேயாகும். இந்நிலை பற்றி உலக சுகாதார அமைப்பு அவதானத்துடன் இருப்பதாகவும் தூதுக்குழு குறிப்பிட்டது.

இருதரப்பினரும் மேலும் பல துறைசார் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர். சீனாவின் தேயிலை ஏல விற்பனை, உலகின் சிறந்த தேயிலை என பிரசித்தி பெற்றுள்ள இலங்கை தேயிலையை சீனாவில் பிரபல்யப்படுத்துதல் தொடர்பாகவும் அவதானத்தை செலுத்தியது.

இலங்கையில் சீன முதலீடு மற்றும் இருநாடுகளுக்குமிடையிலான நிதியுதவிகளை அதிகப்படுத்துவது பற்றியும் இதன்போது கலந்துரையாடினர்.

https://www.virakesari.lk/article/84197

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1N7A7123-720x410.jpg

கொரோனாவை கட்டுப்படுத்திய ஜனாதிபதிக்கு சீனா பாராட்டு!

இலங்கை சிறப்பாக கொரோனாவை கட்டுப்படுத்தியமைக்கு சீன ஜனாதிபதி ஸீ ஜிங் பின்ங் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீனா தூதுவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பிறந்த தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஸீ ஜிங் பின்ங் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சீன அரசாங்கம் மருத்துவ உதவிகளை அனுப்பியதையும் சீன ஜனாதிபதி நினைவுபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில், இவ்வாறான துரதிஷ்டவசமான நிலையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு சீன அரசாங்கத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கொரோனாவை-கட்டுப்படுத்த-4/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.