Jump to content

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்


Recommended Posts

  • Replies 225
  • Created
  • Last Reply

 

தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் தோல்வியடைந்த இனமாக இருப்பதற்கு இந்த திரியில் நம்மால்  தெரிவிக்கபட்ட கருத்துக்கள் ஒரு சிறிய எடுத்துக்காட்டு. நீண்ட காலமாக இழுபட்டு செல்லும் ஒரு போராட்டத்தில் நமது பக்கத்தில் உள்ள பலவீனங்களை நிவர்த்தி செய்து எமது யுக்திகளை மாற்றி  எமது இறுதி இலக்கை அடைவதற்கான தற்காலிக நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை (தரிப்பிடங்களை) வரையறுத்து அதன்படி செல்வதே முறையானது. அதற்கு பல்வேறு தரப்பபுகளாக இன்று இருக்கும் தமிழ் அரசியல் அமைப்புகள் குறைந்தது ஒருவரை திட்டி கொள்ளாமலாவது இருப்பது அவசியம்.  

அதை விடுத்து 2004 ம் ஆண்டு இயக்கத்தை விட்டு வெளியேறி ஒரு சாதாரண அரசியல்வாதியாகிவிட்ட ஒருவரின் தேர்தல் கூற்றை அப்படியே விட்டுவிட்டு கடந்து செல்லுவதை விடுத்து, அவரை திட்டித்தீர்ப்பதிலேயே எமது நேரத்தையும் எனேர்ஜியையும் செலவழிப்பதில் என்ன பிரயோசனம். 17 வயதில் தனது ரீன்ஏஜ் வயதில் இயக்கத்திற்குள் வந்த ஒருவரை இப்படி மிக மோசமாக திட்டித்தீர்ப்பது  அவரை வளர்த்தெடுத்த அமைப்பையும் சேர்த்து திட்டுவதற்கு நிகராகாதா?  சிறு வயதில் இயக்கத்திற்குள் வந்த  அவருக்கு சரியான அரசியல் அறிவையும் தெளிவையும் சமூக ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்காமல் இராணுவத்தேவைக்கு மட்டும் அவரைப் பயன்படத்தினோம்  என்று ஆகிவிடாதா?

 விடுதலை போராட்டத்தின் தோல்விக்கு இன்னும் எவ்வளவோ காரணங்கள் எமக்குள்ளையே  இருக்கையில் அதை விடுத்து ஒருவர் மீது முழுப்பழியையும் சுமத்தி உண்மையான காரணங்களை மறைப்பது எமது போராட்டத்தை திருப்ப தேக்கநிலையிலேயே வைத்திருக்கும். ஒருவரை துரோகி என்று திட்டி தீர்ப்பது தான் எனது தேசிய பக்தியை நிரூப்பிப்பதற்கான வழி என்ற கடந்த 60 வருட நடைமுறையின் தொடர்ச்சியே இந்த திரி. என்ன, திட்டுபவரும் திட்டபடுவரும் இன்னும் 20 – 30 வருட காலத்தில் மண்டையைப் போட்டுவிடுவார்கள் அதன் பின்னர் புதிய தலைமுறை வந்து புதியவர்களை துரோகிகள் என்று திட்டி அதை அடுத்த தலைமுறையிடம் கொடுப்போர்கள். அதற்கடுத்த தலைமுறைக்கு யாரையும் திட்டவேண்டிய அவசியமே இருக்காது. ஏனென்றால் இந்த பிரச்சனை தமிழர்களான நாம் விரும்பாத முறையில் தீர்வு காணப்பட்டிருக்கும். அது பற்றி இன்று வாழ்பவர்கள் கவலைப்பட மாட்டார்கள். எனக்கு பிடிக்காதவனை எல்லாம் துரோகி என்று திட்டி அதில் சுகம் கண்டுவிட்டு செத்து போய்விடுவோம். அந்த அற்ப சுகம் போதும் எமக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ரதி அக்கைக்கும் மீரா ஐயனுக்கும் முக்கியமான டிபிஎஸ் ஜெயராஜின் கட்டுரை.

சில இடங்களில் தடித்த எழுத்துகளில் உள்ளது.

 

நன்றி ஜி, 

ஆனால் ஏனோ “கைப் பூணிற்கு கண்ணாடி எதற்கு” என்பது தான் ஞாபகம் வருகிறது.

5 hours ago, ரதி said:

வாசித்து முடித்தேன் ...இவருடைய வழக்கமான பாணியில் எதோ எழுதி உள்ளார்...ஆனையிறவில் நடந்த முதலாவதோ அல்லது இரண்டாவதோ நினைவில் இல்லை ...நிறைய மட்டுப் போராளிகளை கொண்டு போய் இச் சண்டையில் விட்டு நிறைய போராளிகள் மரணமாகினர் ...அந்த நேரத்தில் அங்கிருந்த சனம் இவரை கடுமையாய் பேசினார்கள்...இடம் தெரியாத இடத்தில் கொண்டு போய் முன்னுக்கு விட்டதால் தான் அவர்கள் இறந்தார்கள் என்று ...இந்த ஆனையிறவு தாக்குதல்கள்  பற்றி நந்தனுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ...உண்மையை தெளிவுபடுத்தினால் நல்லது 

அடுத்து ,கொழும்பில் நடந்த புலனாய்வு தாக்குதல்கள் எல்லாம் கருணா குழு காட்டிக் கொடுத்தது என்பது ...புலிகளது புலனாய்வு என்பது புலனாய்வில் இருக்கும் ஒருவருக்கே மற்றவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாத போது புலனாய்வில் சம்மந்தப்படாத கருணாவிற்கு எங்கே தெரியப் போகிறது ?... புலனாய்வு ரகசியங்கள் தலைவருக்கும் ,பொட்டுக்கும் மட்டும் தெரிந்த விடயமாய் இருக்கும் ...இப்படி இருக்கும் போது கருணா குழு காட்டிக் கொடுக்க என்ன இருக்கு 

இவருடைய கட்டுரையை மினக்கெட்டு கொண்டு வந்து இணைக்கும் கிருபனை கிணத்துக்குள் தள்ளி விடோணும் tw_lol:

அக்கோய் நீங்கள் மீண்டும் கேள்விப்பட்டதை தான் எழுதுகிறீர்கள்.

ஆனையிறவு தாக்குதல் 

1) அணிகள் திரட்டப்பட்ட போது பிரிகேடியர் பால்ராஜ் சொன்னது மட்டக்களப்பு போராளிகள் தனக்கு வேண்டாம் என்று

2) கட்டளைத் தளபதியாக இருந்த கும்மான் நீக்கப்பட்டு தளபதி பாணு நியமிக்கப்பட்டார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா மீண்டும் சொல்கிறேன் கும்மான் எப்படி மட்டு.அம்பாறையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார் என்று உங்களுக்கு தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, MEERA said:

நன்றி ஜி, 

ஆனால் ஏனோ “கைப் பூணிற்கு கண்ணாடி எதற்கு” என்பது தான் ஞாபகம் வருகிறது.

அக்கோய் நீங்கள் மீண்டும் கேள்விப்பட்டதை தான் எழுதுகிறீர்கள்.

ஆனையிறவு தாக்குதல் 

1) அணிகள் திரட்டப்பட்ட போது பிரிகேடியர் பால்ராஜ் சொன்னது மட்டக்களப்பு போராளிகள் தனக்கு வேண்டாம் என்று

2) கட்டளைத் தளபதியாக இருந்த கும்மான் நீக்கப்பட்டு தளபதி பாணு நியமிக்கப்பட்டார்.

 

 

38 minutes ago, MEERA said:

ரதி அக்கா மீண்டும் சொல்கிறேன் கும்மான் எப்படி மட்டு.அம்பாறையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார் என்று உங்களுக்கு தெரியாது.

உங்களுக்கு கணக்கத் தெரியுமாக்கும் ...மூன்றாவது தாக்குதலில் தான் ஆனையிறவு பிடிபட்டது. அந்த தாக்குதலிற்கு தான் பானு தலைமை தாங்க ,பால்ராஜ் அண்ணா ஊடறுத்து போய் ஆனையிறவு பிடிபட்டு பானு கொடியேற்றியது...நான் சொல்வது அதற்கு முன் நடந்த இரு தாக்குதல்களையும் சேர்த்து  தான்.
நான் திரும்பவும் சொல்றன் மீரா, கருணா பற்றி உங்களுக்கு உருப்படியான விஷயங்கள் தெரியும் என்றால் அதை வெளிப்படையாய் எழுதுங்கோ ...இந்த அரை,குறை கோக்குமாக்கு கதைகளை எழுதி உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.
சின்ன பிள்ளைகள் தங்களுக்குள் சண்டையை பிடித்து போட்டு போய் பெற்றோரிடம் முறையிடுவது மாதிரி இருக்குது  உங்கள் கதைகள்...
அவர் மேல் ஒழுங்காய் உங்களால் குற்ற சாட்டுக்கள் வைக்க முடியவில்லை ..அவர் அப்படி செய்தவர் ,இப்படி செய்தவர் என்று எழுதிக் கொண்டு ...அப்படி என்ன செய்தவர் என்றால் அதற்கு பதில் இல்லை ...எழுதும் போது உங்களுக்கே   சின்ன பிள்ளைத் தனமாய் இல்லை .
ஒராளை பிடிக்கேல்ல என்றால் விட்டு விடுங்கோ ...தன்ர பாட்டில போய் எண்ணத்தையும் செய்யட்டும் ...20,30 வருசத்துக்கு முந்தி அவர் இயக்கத்தில் இருக்கும் போது நடந்ததை கதைத்து என்ன பிரயோசனம் ? இப்ப இயக்கமும் இல்லை ...அவரும் இயக்கத்தில் இல்லை 
இப்படி ஆயிரம் கதைகளை என்னால்  புலிகள்  மேலும் சுமத்த முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொளி அகஸ்தியனால் வேறொரு திரியில் கொண்டு வந்து இணைக்கப்பட்டது ...ஒருவரும் பார்க்கவில்லையா அல்லது பார்த்து விட்டு பேசாமல் இருக்கினமோ தெரியவில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஓயாத அலைகள் 3 இன் யாழ்ப்பாண முனைக்கான சமரில் கிழக்கு படையணிகளின் பங்கு மிக குறைவு. வடக்கை சேர்ந்தவர்கள்தான் இந்த சமரில் ஈடுபட்டனர். இந்த சமர் தொடங்க முன்னர் தளபதிகள் மட்டத்திலான கலந்துரையாடலில் பிரபாகரன் சொன்ன விசயத்தை கவனிக்க வேண்டும். “யாழ்ப்பாணத்திற்கான சமரை யாழ்ப்பாணத்தவர்களே செய்யட்டும். கிழக்கு போராளிகளை எல்லா முனைகளிலும் களமிறக்குவது சரியல்ல. அவர்களிற்கு தமது பிரதேசங்களை மீட்க வேண்டிய தேவையும் உள்ளது“.


 

Quote

ஓயாத அலைகள் மூன்றின்போது பால்ராஜின் கட்டளையை ஏற்க மறுத்த அக்கினோவை பற்றிய தகவல் புலிகளின் தலைமைக்கு போனபோது, அவர் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையென தீர்மானித்தார்கள். இன்னொருமுறை தலைமையின் கட்டளையை கருணா மீறும் சூழலை ஏற்படுத்தாமல் இருப்போம், கருணா விடயத்தில் விரைவாக ஒரு முடிவெடுக்கலாம் என்பதே புலிகளின் எண்ணம்.

 

கிழக்கு தளபதிகளில்- தனது சிஷ்யர்களாக, நம்பிக்கையானவர்களாக- கருணா கருதும் ஒரு சிலர் கட்டுப்பாடுகளை மீறி நடப்பதும், கருணா அதை கண்டும் காணாமலுமிருப்பதையும் புலிகள் அவதானித்திருந்தனர். அக்கினோ விசயத்திலும், பிரச்சனையை உடைக்கும் வரை செல்லாமல், வளைந்து கொடுத்து செல்வோம், நேரம் வரும்போது கவனிப்போம் என புலிகள் நினைத்தார்கள்.

அக்கினோ விசயத்தை பெரிதுபடுத்தாததைபோல அப்போது புலிகள் நடந்து கொண்டார்கள். ஆனையிறவை வீழ்த்தும் உக்கிர சண்டையும் நடந்து கொண்டிருந்தது. இந்த சூழலில் அக்கினோ என்ற ஒருவரின் சிக்கலை முதன்மைப்படுத்தவில்லை. ஆனால் அக்கினோ விசயம் புலிகளின் “கையாளப்பட வேண்டிய விசயங்கள்“ பட்டியலிற்கு போனது. அத்துடன், ஓயாத அலைகள் மூன்றில் அதன்பின்னர் ஜெயந்தன் படையணியை களமிறக்குவதையும் தவிர்த்துக் கொண்டனர். உப படையணியொன்றை போலவே பயன்படுத்தினார்கள். ஓயாத அலைகள் மூன்று, நான்கில் வடக்கை சேர்ந்த படையணிகள்தான் மிகப்பெரும் பங்கு வகித்தன. கிழக்கு படையணிகள் உப படையணிகளாகவும், ஓய்விலும் இருந்தன.

புலிகள் படையணிகளிற்குள் பேதம் காட்டுவதில்லை. ஆனால் ஜெயந்தன் படையணி விசயத்தில் இப்படியான முடிவெடுத்ததற்கு காரணமிருக்கிறது. அக்கினோ விசயத்தை தளபதி தீபன் உடனடியாக கருணாவிற்கு அறிவித்தார். ஆனால் கருணா அதை பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளவில்லை. “அவர்கள் அப்படி நடப்பதில் தவறில்லை“ என்பதை போன்ற பதிலொன்றையும் சொல்லியிருக்கிறார். கிழக்கு இளநிலை தளபதிகளின் முறுகலின் பின்னணி என்னவென்பதை புலிகள் சரியாக கணித்ததால், தொடர்ந்து நிலைமைய சிக்கலாக்காமல் விடுவோம் என்றுதான் ஜெயந்தன் படையணியை அவ்வளவாக களமிறக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

 

உங்களுக்கு கணக்கத் தெரியுமாக்கும் ...மூன்றாவது தாக்குதலில் தான் ஆனையிறவு பிடிபட்டது. அந்த தாக்குதலிற்கு தான் பானு தலைமை தாங்க ,பால்ராஜ் அண்ணா ஊடறுத்து போய் ஆனையிறவு பிடிபட்டு பானு கொடியேற்றியது...நான் சொல்வது அதற்கு முன் நடந்த இரு தாக்குதல்களையும் சேர்த்து  தான்.
நான் திரும்பவும் சொல்றன் மீரா, கருணா பற்றி உங்களுக்கு உருப்படியான விஷயங்கள் தெரியும் என்றால் அதை வெளிப்படையாய் எழுதுங்கோ ...இந்த அரை,குறை கோக்குமாக்கு கதைகளை எழுதி உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.
சின்ன பிள்ளைகள் தங்களுக்குள் சண்டையை பிடித்து போட்டு போய் பெற்றோரிடம் முறையிடுவது மாதிரி இருக்குது  உங்கள் கதைகள்...
அவர் மேல் ஒழுங்காய் உங்களால் குற்ற சாட்டுக்கள் வைக்க முடியவில்லை ..அவர் அப்படி செய்தவர் ,இப்படி செய்தவர் என்று எழுதிக் கொண்டு ...அப்படி என்ன செய்தவர் என்றால் அதற்கு பதில் இல்லை ...எழுதும் போது உங்களுக்கே   சின்ன பிள்ளைத் தனமாய் இல்லை .
ஒராளை பிடிக்கேல்ல என்றால் விட்டு விடுங்கோ ...தன்ர பாட்டில போய் எண்ணத்தையும் செய்யட்டும் ...20,30 வருசத்துக்கு முந்தி அவர் இயக்கத்தில் இருக்கும் போது நடந்ததை கதைத்து என்ன பிரயோசனம் ? இப்ப இயக்கமும் இல்லை ...அவரும் இயக்கத்தில் இல்லை 
இப்படி ஆயிரம் கதைகளை என்னால்  புலிகள்  மேலும் சுமத்த முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்  

உண்மையை சொன்னால் இப்படிதான் நடக்கும்.

கிருபன் இணைத்த பிறகுதான் ஆனையிறவில் 3 தாக்குதல் கதையே உங்களுடமிருந்து வெளிவருகிறது. நேற்றுவரை தெரியாதோ???

ஏற்கனவே இந்த திரிக்கு தேவையான அளவு எழுதியாச்சு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jun 20 இல் எழுதியது..

On 21/6/2020 at 11:17, ரதி said:

நீங்கள் சொல்றது எனக்கு விலங்குது அண்ணா.நன்றி  ...நான் அடுத்தவரின் தனிப்பட்ட விசயத்தில் மூக்கை நுழைப்பதில்லை...அது பற்றி எனக்கு அக்கறையுமில்லை .

 

மீரா, என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை ஆனையிறவு சண்டையில் பெரும்பாலும் எல்லாத் தளபதிகளும் பங்கு பற்றியிருந்தார்கள் ... சூசை  ,பானு , தீபன் ,  துர்க்கா போன்றவர்களோடு கருணாவும் தன்  படையணியை வழி நடத்தினார்...இவர்கள் எல்லோரும் ஒவ்வொரு பக்கத்தால் வழி நடத்தினார்கள்... ஆனால் சண்டையை தலைமை தாங்கி ஊடறுத்து வழி நடத்தியது பால்ராஜ்  அண்ணா...அவர் மூலம் தான் ஆனையிறவு பிடிப்பட்ட்து ...ஆனால் கொடியேற்றியது பானு..இது பற்றி நன்கு தெரிந்தவர்கள் தங்கள் நியாயமான கருத்தை சொல்லலாம்  

இது எப்ப?

2 hours ago, ரதி said:

 

உங்களுக்கு கணக்கத் தெரியுமாக்கும் ...மூன்றாவது தாக்குதலில் தான் ஆனையிறவு பிடிபட்டது. அந்த தாக்குதலிற்கு தான் பானு தலைமை தாங்க ,பால்ராஜ் அண்ணா ஊடறுத்து போய் ஆனையிறவு பிடிபட்டு பானு கொடியேற்றியது...நான் சொல்வது அதற்கு முன் நடந்த இரு தாக்குதல்களையும் சேர்த்து  தான்.
நான் திரும்பவும் சொல்றன் மீரா, கருணா பற்றி உங்களுக்கு உருப்படியான விஷயங்கள் தெரியும் என்றால் அதை வெளிப்படையாய் எழுதுங்கோ ...இந்த அரை,குறை கோக்குமாக்கு கதைகளை எழுதி உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.
சின்ன பிள்ளைகள் தங்களுக்குள் சண்டையை பிடித்து போட்டு போய் பெற்றோரிடம் முறையிடுவது மாதிரி இருக்குது  உங்கள் கதைகள்...
அவர் மேல் ஒழுங்காய் உங்களால் குற்ற சாட்டுக்கள் வைக்க முடியவில்லை ..அவர் அப்படி செய்தவர் ,இப்படி செய்தவர் என்று எழுதிக் கொண்டு ...அப்படி என்ன செய்தவர் என்றால் அதற்கு பதில் இல்லை ...எழுதும் போது உங்களுக்கே   சின்ன பிள்ளைத் தனமாய் இல்லை .
ஒராளை பிடிக்கேல்ல என்றால் விட்டு விடுங்கோ ...தன்ர பாட்டில போய் எண்ணத்தையும் செய்யட்டும் ...20,30 வருசத்துக்கு முந்தி அவர் இயக்கத்தில் இருக்கும் போது நடந்ததை கதைத்து என்ன பிரயோசனம் ? இப்ப இயக்கமும் இல்லை ...அவரும் இயக்கத்தில் இல்லை 
இப்படி ஆயிரம் கதைகளை என்னால்  புலிகள்  மேலும் சுமத்த முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 11:17, ரதி said:

மீரா, என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை ஆனையிறவு சண்டையில் பெரும்பாலும் எல்லாத் தளபதிகளும் பங்கு பற்றியிருந்தார்கள் ... சூசை  ,பானு , தீபன் ,  துர்க்கா போன்றவர்களோடு கருணாவும் தன்  படையணியை வழி நடத்தினார்...இவர்கள் எல்லோரும் ஒவ்வொரு பக்கத்தால் வழி நடத்தினார்கள்... ஆனால் சண்டையை தலைமை தாங்கி ஊடறுத்து வழி நடத்தியது பால்ராஜ்  அண்ணா...அவர் மூலம் தான் ஆனையிறவு பிடிப்பட்ட்து ...ஆனால் கொடியேற்றியது பானு..இது பற்றி நன்கு தெரிந்தவர்கள் தங்கள் நியாயமான கருத்தை சொல்லலாம்  

சரி ஆனையிறவு 3 கட்ட தாக்குதலில், நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் எப்போ நடைபெற்றது?

ஆனையிறவு சண்டையின் கட்டளைத் தளபதி  பால்ராஜ் அல்ல பானு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

உண்மையை சொன்னால் இப்படிதான் நடக்கும்.

கிருபன் இணைத்த பிறகுதான் ஆனையிறவில் 3 தாக்குதல் கதையே உங்களுடமிருந்து வெளிவருகிறது. நேற்றுவரை தெரியாதோ???

ஏற்கனவே இந்த திரிக்கு தேவையான அளவு எழுதியாச்சு..

 

3 hours ago, ரதி said:

 

உங்களுக்கு கணக்கத் தெரியுமாக்கும் ...மூன்றாவது தாக்குதலில் தான் ஆனையிறவு பிடிபட்டது. அந்த தாக்குதலிற்கு தான் பானு தலைமை தாங்க ,பால்ராஜ் அண்ணா ஊடறுத்து போய் ஆனையிறவு பிடிபட்டு பானு கொடியேற்றியது...நான் சொல்வது அதற்கு முன் நடந்த இரு தாக்குதல்களையும் சேர்த்து  தான்.
நான் திரும்பவும் சொல்றன் மீரா, கருணா பற்றி உங்களுக்கு உருப்படியான விஷயங்கள் தெரியும் என்றால் அதை வெளிப்படையாய் எழுதுங்கோ ...இந்த அரை,குறை கோக்குமாக்கு கதைகளை எழுதி உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.
சின்ன பிள்ளைகள் தங்களுக்குள் சண்டையை பிடித்து போட்டு போய் பெற்றோரிடம் முறையிடுவது மாதிரி இருக்குது  உங்கள் கதைகள்...
அவர் மேல் ஒழுங்காய் உங்களால் குற்ற சாட்டுக்கள் வைக்க முடியவில்லை ..அவர் அப்படி செய்தவர் ,இப்படி செய்தவர் என்று எழுதிக் கொண்டு ...அப்படி என்ன செய்தவர் என்றால் அதற்கு பதில் இல்லை ...எழுதும் போது உங்களுக்கே   சின்ன பிள்ளைத் தனமாய் இல்லை .
ஒராளை பிடிக்கேல்ல என்றால் விட்டு விடுங்கோ ...தன்ர பாட்டில போய் எண்ணத்தையும் செய்யட்டும் ...20,30 வருசத்துக்கு முந்தி அவர் இயக்கத்தில் இருக்கும் போது நடந்ததை கதைத்து என்ன பிரயோசனம் ? இப்ப இயக்கமும் இல்லை ...அவரும் இயக்கத்தில் இல்லை 
இப்படி ஆயிரம் கதைகளை என்னால்  புலிகள்  மேலும் சுமத்த முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்  

கருணா என்று ஒருவரே இல்லை ...அவர் புலியிலும் .இருக்கவில்லை ....ஆளை விடுங்கள் சாமி ...இது தான் உங்களோடு இத்  திரியில் எழுதும் கடைசி உரையாடல் ...இது திரியில் எழுதியதன் மூலம் நேரம் போனதை தவிர வேறு உருப்படியாய் ஒன்றும் எழுதவில்லை .
தேவையான அளவு என்னத்தை எழுதினீங்கள்?
உண்மையை சொன்னால் எப்படி நடக்கும்?
நான் போவதற்கு முன் ஒரு விண்ணப்பம் ஒரு நாளும் கோபத்தில் எழுத வேண்டாம்.  இங்கு கிருபன் கொண்டு வந்து இணைக்கும் முதல் நான் என் கருத்தை எழுதி விட்டேன்  ...ஆனையிறவு மூன்றாவது நடந்த சண்டையின் போது நான் மட்டுவில் இல்லை...முதல் இரு சண்டைகளை தான் கடைசி சண்டையோடு சேர்த்து முதற் பதிவுகளில்   குழம்பி விட்டேன்...அதற்காக மன்னிப்பு  கேட்கிறேன்... நன்றி வணக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 11:17, ரதி said:

 

மீரா, என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை ஆனையிறவு சண்டையில் பெரும்பாலும் எல்லாத் தளபதிகளும் பங்கு பற்றியிருந்தார்கள் ... சூசை  ,பானு , தீபன் ,  துர்க்கா போன்றவர்களோடு கருணாவும் தன்  படையணியை வழி நடத்தினார்...இவர்கள் எல்லோரும் ஒவ்வொரு பக்கத்தால் வழி நடத்தினார்கள்... ஆனால் சண்டையை தலைமை தாங்கி ஊடறுத்து வழி நடத்தியது பால்ராஜ்  அண்ணா...அவர் மூலம் தான் ஆனையிறவு பிடிப்பட்ட்து ...ஆனால் கொடியேற்றியது பானு..இது பற்றி நன்கு தெரிந்தவர்கள் தங்கள் நியாயமான கருத்தை சொல்லலாம்  

 

4 hours ago, ரதி said:

 

உங்களுக்கு கணக்கத் தெரியுமாக்கும் ...மூன்றாவது தாக்குதலில் தான் ஆனையிறவு பிடிபட்டது. அந்த தாக்குதலிற்கு தான் பானு தலைமை தாங்க ,பால்ராஜ் அண்ணா ஊடறுத்து போய் ஆனையிறவு பிடிபட்டு பானு கொடியேற்றியது...நான் சொல்வது அதற்கு முன் நடந்த இரு தாக்குதல்களையும் சேர்த்து  தான்.
நான் திரும்பவும் சொல்றன் மீரா, கருணா பற்றி உங்களுக்கு உருப்படியான விஷயங்கள் தெரியும் என்றால் அதை வெளிப்படையாய் எழுதுங்கோ ...இந்த அரை,குறை கோக்குமாக்கு கதைகளை எழுதி உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.
சின்ன பிள்ளைகள் தங்களுக்குள் சண்டையை பிடித்து போட்டு போய் பெற்றோரிடம் முறையிடுவது மாதிரி இருக்குது  உங்கள் கதைகள்...
அவர் மேல் ஒழுங்காய் உங்களால் குற்ற சாட்டுக்கள் வைக்க முடியவில்லை ..அவர் அப்படி செய்தவர் ,இப்படி செய்தவர் என்று எழுதிக் கொண்டு ...அப்படி என்ன செய்தவர் என்றால் அதற்கு பதில் இல்லை ...எழுதும் போது உங்களுக்கே   சின்ன பிள்ளைத் தனமாய் இல்லை .
ஒராளை பிடிக்கேல்ல என்றால் விட்டு விடுங்கோ ...தன்ர பாட்டில போய் எண்ணத்தையும் செய்யட்டும் ...20,30 வருசத்துக்கு முந்தி அவர் இயக்கத்தில் இருக்கும் போது நடந்ததை கதைத்து என்ன பிரயோசனம் ? இப்ப இயக்கமும் இல்லை ...அவரும் இயக்கத்தில் இல்லை 
இப்படி ஆயிரம் கதைகளை என்னால்  புலிகள்  மேலும் சுமத்த முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்  

 

இதில் எது உண்மை

பி.கு: “கை பூண்ணிற்கு கண்ணாடி எதற்கு”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்டு கை காட்டுங்ஙகள்.எனக்கு வாக்குரிமை இலங்கையில் இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்டு கை காட்டுங்ஙகள்.எனக்கு வாக்குரிமை இலங்கையில் இருக்குது.

டக்கி அங்கிளுக்கு போடுங்கோ அல்லது அங்கயனுக்கு போடுங்கோ

Link to comment
Share on other sites

11 hours ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்டு கை காட்டுங்ஙகள்.எனக்கு வாக்குரிமை இலங்கையில் இருக்குது.

தேர்தலில் வேட்பாளராக நின்றிருக்கலாமே? மற்றவர்கள் யாரும் பொருத்தமாக தெரியவில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூக்கு முட்டிப்போச்சுது என்று நினைக்கிறன். 

போராட்டம் நசுக்கப்பட்டு பத்து வருடம் கழிந்துவிட்டது, தலைவரும் இப்போது  இல்லை. தாறோம் என்று வாக்களித்த   சமஷ்டியை ஏன் இன்னும் வி. முரளிதரன் பெற்றுத்தரவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா மீது நடவடிக்கை எடுங்கள் – பல இடங்களில் முறையிட்ட தேரர்

1515750907-Omalpe_Sobitha_3.jpg?189db0&189db0

 

கருணா பிள்ளையான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் ஓமல்லபே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் இன்று (30) அவரால் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.

புலிகளுடன் இருந்த போது ஆணையிறவு மோதலில் 3000 இராணுவ வீரர்களை கொன்றதாக அண்மையில் கருணா தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன் பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிஐடியிடமும் ஓமல்லபே தேரர் முறைப்பாடு செய்துள்ளார்.

https://newuthayan.com/கருணா-மீது-நடவடிக்கை-எடு/

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான் வெளியிட்ட கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது – பிரதமர் மஹிந்த

கருணா அம்மான் வெளியிட்ட கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் தவறு உள்ளது. அது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன.அவருக்கு பிரத்தியேகமாக பொதுமன்னிப்பு வழங்கப்படாதபோதும் பொதுவாக முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் அவரும் உள்ளடங்குவார் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.இதன்போது, கருணா அம்மானுக்கு அரச பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என, அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் ஏன் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.இதற்க பதிலளித்த பிரதமர், விடுவிக்க முடியாத குற்றவியல் தொடர்புடைய பலர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுள் உள்ளடங்குவதால் அவர்களை உடனடியாக பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.அத்துடன் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு பிரத்தியேகமாக பொதுமன்னிப்பு வழங்கப்படாதபோதும் பொதுவாக முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் அவரும் உள்ளடங்குவார் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/கருணா-அம்மான்-வெளியிட்ட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

unnamed.jpg

கருணாவுக்கு அரச பொது மன்னிப்பு – மஹிந்த

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு பிரத்தியேகமாக பொதுமன்னிப்பு வழங்கப்படாதபோதும் பொதுவாக முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் அவரும் உள்ளடங்குவார் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (புதன்கிழமை) தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, கருணா அம்மானுக்கு அரச பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என, அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதமர், “கருணா அம்மான் வெளியிட்ட கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் தவறு உள்ளது. அது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

அவருக்கு பிரத்தியேகமாக பொதுமன்னிப்பு வழங்கப்படாதபோதும் பொதுவாக முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் அவரும் உள்ளடங்குவார்” என தெரிவித்துள்ளார்.

இதேநேரம், முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் ஏன் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்க பதிலளித்த பிரதமர், விடுவிக்க முடியாத குற்றவியல் தொடர்புடைய பலர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுள் உள்ளடங்குவதால் அவர்களை உடனடியாக பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/கருணாவுக்கு-அரசு-பொது-மன/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை விட மோசமானவர்கள் நல்லாட்சிக்காரர்: சாடுகின்றார் மஹிந்த.!

karuna_makintha.jpg

கருணா கொலைகளைச் செய்த காலத்திலும், அதன் பின்பும், இன்று வரையும் நல்லாட்சித் தரப்பினரின் நிகழ்ச்சி நிரல் நாட்டைப் பிளவுபடுத்துவதாகும். கருணா கொலைகளைச் செய்வதைக் கைவிட்டுள்ள போதிலும், நல்லாட்சியாளர்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதைக் கைவிடவில்லை. அதனையே நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும்."

- இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

'இலங்கைக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம்' எனும் தலைப்பில் ஆற்றிய உரையின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இந்த நாட்டில் 1970ஆம் ஆண்டு சோஷலிச அரசொன்று ஆட்சிக்கு வந்தபோது அது ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட அரசு என யாரும் கூறவில்லை. அதேபோன்று 1977ஆம் ஆண்டு முதலாளித்துவ அரசொன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டபோது அது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட அரசு என நாம் கூறவில்லை. எனினும், 2015 ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது வரலாற்றில் நாம் ஒருபோதும் காணாத அளவில் வெளிநாட்டுத் தலையீடுகள் காணப்பட்டன.

2009ஆம் ஆண்டு நாம் போரை வெற்றிகொண்ட பின்பு இந்த நாட்டு அரசியலில் வெளிநாடுகள் கடுமையாகத் தலையீடு செய்யத் தொடங்கின. எமது நாட்டுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகள் நாம் அந்தப் போரை வெற்றிகொள்வோம் என ஒருபோதும் நினைக்கவில்லை.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போதுதான் முதலாவதாக இந்தத் தலையீடு இடம்பெற்றது. எனினும், இந்த நாட்டு மக்கள் அந்த முயற்சியை தீர்மானமிக்க வகையில் தோற்கடித்தனர். எனினும், 2015 வரை தொடர்ச்சியாக அந்தச் சூழ்ச்சி செயற்பட்டது. 2015இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதிப் போட்டியிலிருந்து விலகி பொது வேட்பாளர் ஒருவரைப் போட்டியிடச் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தது யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

2015 இல் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு எதிரி இராணுவமொன்று இலங்கையை ஆக்கிரமித்து அதிகாரத்தைப் பிடித்துக்கொண்டது போன்ற ஒரு நிலைமையே ஏற்பட்டது.

நாட்டைப் பிரிப்பதற்கு எதிரான மொத்த தேசியவாத முகாமையும் அவர்கள் தாக்கினர். இந்த நாட்டையும், நாட்டினரையும் பாதுகாக்கின்ற மகா சங்கத்தினரை அடிபணியச் செய்வதற்காக பிரதான பிக்குமாரைப் பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறையிலடைத்தனர். விகாரைகளில் உள்ள யானைகளின் பின்னாலேய அவர்கள் அதிகம் துரத்திச் சென்றனர்.

பௌத்தர்களின் பெரஹரா கலாசாரத்தை அகற்றுவதே அதன் நோக்கமாகும். தீவிரவாதத்தைத் தோற்கடித்து நாட்டைக் காத்த இராணுவப் படையைச் செயலிழக்கச் செய்வதற்காகக் கீழ்மட்ட இராணுவ வீரன் முதல் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி வரை தெரிவுசெய்யப்பட்ட முப்படை அங்கத்தவர்களைக் கைதுசெய்து, பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பல வாரங்களாக, பல மாதங்களாக, பல வருடங்களாக சிறையில் அடைத்து பொய்யாக வழக்குகளைத் தொடர்ந்தனர். இவர்கள் படைவீரர்கள் அல்லர், இவர்கள் திருடர்கள், கொலைகாரர்கள் என்ற கருத்தை இலங்கை மக்களின் உள்ளங்களில் பதித்து, உலகம் முழுவதும் அதனைப் பிரசாரம் செய்வதற்காகவே அவர்கள் அவவாறு செய்தனர்.

தேசியவாத முகாமைச் சார்ந்த அரசியல்வாதிகளுக்கு வழங்க முடியுமான சகல தண்டனைகளையும் வழங்கினர். விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்தனர். பொலிஸுக்கு வரவழைத்தனர். பல மாதங்கள் விளக்கமறியலில் வைத்தனர். பொய்யாக வழக்குகளைத் தொடர்ந்தனர். இந்த நாட்டின் தேசியவாத முகாமை முழுமையாக அழித்து, புதிய அரசமைப்பொன்றை நிறைவேற்றி, நாட்டைப் பிரித்து ஒரு முடிவைக் காண்பதற்காகவே இந்த அனைத்தையும் செய்தனர். போரால் செய்ய முடியாமல் போனதை இவ்வாறு அரசியல் நடவடிக்கைகள் மூலம் செய்ய முயற்சித்தனர்.

2019 நவம்பர் மாதம் நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றமையால், அந்தத் திட்டத்தை இறுதி வரை நிறைவேற்ற முடியாமல் போனது. எனினும், உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சியாளர்கள் தமது வேலையைக் கைவிடவில்லை. புதிய ஜனாதிபதி பதவியேற்று சில நாட்களினுள் மேற்கத்தேய தூதரகமொன்றில் பணியாற்றும் பெண்ணொருவர் கடத்தப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என அரங்கேற்றப்பட்ட பொய்யான நாடகத்தை நாம் அனைவரும் கண்டோம். புதிய அரசுக்கு மூச்சு விடுவதற்குக்கூட இடமளிக்க இந்தச் சூழ்ச்சியாளர்கள் தயாரில்லை என்பது அதன் மூலம் தெளிவானது.

2015 இல் இந்த நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிய நல்லாட்சி சூழ்ச்சியாளர்கள் தமது வெளிநாட்டு முதலாளிமாருக்கு வழங்கிய வாக்குறுதிப் பத்திரமே 2015 ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 தீர்மானமாகும்.

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களைச் செய்தனர் என்பதை ஏற்றுக்கொள்வதையே அதன் மூலம் முதலில் செய்தனர். அதன் பின்னர் அந்தப் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களை உள்ளடக்கிய விசேட நீதிமன்றமொன்றை அமைப்பதற்கு உடன்பட்டனர்.

நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்வதற்குப் போதிய சான்றுகள் இல்லாத போதிலும், மனித உரிமை மீறல் மேற்கொள்ளப்பட்டது எனச் சந்தேகிக்கப்படும் இராணுவ அங்கத்தவர்களை நிர்வாக ரீதியான செயல்முறையொன்று மூலம் சேவையிலிருந்து அகற்றும் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இலங்கை முப்படையினரின் உயிர்ப்பினை மழுங்கடித்து, செயலிழக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

30ஃ1 தீர்மானத்தின் பிரதான வாக்குறுதிகளைக் கூறியது போன்றே செயற்படுத்த முடியாமல் போயினும், அவற்றை வேறு வழிமுறையில் செயற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசு புதிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கேனும் இடமளிக்காது, நல்லாட்சியாளர்கள் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகச் சட்டத்தைப் பலாத்காரமாக நிறைவேற்றினர். 'அலுவலகம்' எனக் கூறினாலும் உண்மையில் அது, அழைப்பாணையிடுவதற்கு, சாட்சியாளர்களை அழைப்பதற்கு, விசாரணைகளை நடத்துவதற்கு அதிகாரமுடைய நியாயதிக்க சபையாகும். அதன் அதிகாரிகளுக்கு எந்தவொரு இராணுவ முகாம், பொலிஸ் நிலையம், சிறைச்சாலையையும் ஆணைப்பத்திரமின்றி சோதனை செய்து எந்தவொரு ஆவணத்தையும் அல்லது பொருளையும் தமது பொறுப்பிலெடுக்க முடியும்.

அரச இரகசியங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்குப் புறம்பாயினும், உளவுப் பிரிவினர், இராணுவத்தினர் உட்பட அனைத்து அரச நிறுவனங்களும் இந்தக் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது சட்டப்படி கடமையாகும்.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகா சங்கத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் கருத்தில்கொள்ளாது காணாமல்போகச் செய்வதற்கு எதிரான சர்வதேச சாசனத்தை இலங்கையில் வலுப்பெறச் செய்வதற்காக 2018 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க சட்டத்தை நல்லாட்சியாளர்கள் நிறைவேற்றினர். உண்மையில் இதன் மூலம் காணாமல்போனவர்களைத் தேடுவது இடம்பெறுவதில்லை. இலங்கை இராணுவ அங்கத்தவர்களை வேட்டையாடும் பணியே இதன் மூலம் செய்யப்படுகின்றது.

இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கையினுள் காணாமல் ஆக்குதலொன்றைச் செய்தார் எனச் சந்தேகிக்கப்படும் நபரொருவரை வெளிநாடொன்றுக்கு நாடு கடத்தி, அவருக்கு எதிராக அந்த நாட்டில் வழக்குத் தொடர முடியும். அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியும்.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், குற்றவியல் செயற்பாடுகளில் பரஸ்பர உதவிகளை வழங்கும் சட்டத்தில் நல்லாட்சி அரசு கொண்டு வந்த 24ஆம் இலக்கத் திருத்தச் சட்டம் மூலம் வெளிநாடொன்றுக்கு அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையினுள் அவர்களுக்குத் தேவையான சந்தேகநபர்களை அல்லது சாட்சியாளர்களைக் கண்டறிய முடியும். அந்த வழக்குகளுக்குத் தேவையான சாட்சிகளை இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை உருவாக்கலாம்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையில் போர்க் குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கும் இராணுவ அங்கத்தவர்களுக்கு எதிராக தத்தமது நாடுகளில் வழக்குத் தொடருமாறு மேற்கத்தேய நாடுகளிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சியாளர்கள் வெற்றி பெற்றிருப்பின், இந்த அனைத்தையும் செயற்படுத்தி இலங்கையைத் தீர்த்துக் கட்டியிருப்பார்கள். இந்த உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தீர்மானமான முறையில் தோற்கடிக்க எமக்கு மிகவும் பலமான மக்கள் ஆணையொன்று தேவைப்படுகின்து.

2018 இன் இறுதியில் நல்லாட்சி அரசு இரண்டாகப் பிளவுற்று வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது தாம் உருவாக்கிய அந்த அரசைப் பாதுகாப்பதற்காக மேற்கத்தேய தூதரகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் நாடாளுமன்றத்தில் அதிதிகள் மாடத்தில் அமர்ந்தவாறு, நல்லாட்சியின் சபாநாயகர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குத் கைதட்டி, ஆரவாரத்துடன் உற்சாகமூட்டி ஒத்துழைப்பு வழங்கியமை உங்களுக்கு நினைவிருக்கும். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் சூழ்ச்சியாளர்கள் தமது வேலையைக் கைவிடவில்லை என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

அரசியல் விடயங்களின்போது எப்போதும் பெரிய பிம்பத்தை மனதில் இருத்திக் கொள்ளுமாறு நான் பொதுமக்களின் வேண்டிக் கொள்கிறேன். நாம் நாடு என்ற வகையில் எதிர்நோக்கியுள்ள சவாலுக்கு அமைவாக அரசியல் ரீதியாக முக்கிய விடயங்கள் யாவை, முக்கியமல்லாத விடயங்கள் யாவை என்பதைப் பிரித்தறிய முடியாவிடின் நாம் அழிந்து விடுவோம்.

ஆறுமுகம் தொண்டமானின் மரண வீட்டில் சமூக இடைவெளி சரியாகப் பின்பற்றப்பட்டதா, 2011 இல் யாராவது கிரிக்கட் போட்டி ஆட்ட மோசடியில் ஈடுபட்டார்களா போன்ற விடயங்கள் தொடர்பாக பலர் பலவாறான விடயங்களைக் கூறலாம். எனினும், அவை அரசியல் ரீதியாக முக்கியமானவை அல்ல.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்பு நாம் எதிர்நோக்க வேண்டியேற்பட்ட பாரிய பிரச்சினையே கொரோனா வைரஸ் தொற்று ஆகும். அந்தப் பாரிய பிரச்சினைக்கு சிறப்பாக முகங்கொடுத்தோமா என்பதுதான் இங்கு முக்கியமாகும்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் மத்தியில் நாம் முன்னிலை வகிக்கின்றோம் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றேன். நியூசிலாந்துகூட எமக்குப் பின்னாலேயே உள்ளது.

2003 சார்ஸ் நோயின் பாதிப்பின் மூலமே வியட்நாம், ஹொங்கொங், தாய்வான் போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் போன்ற நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டன.

எமக்கு அவ்வாறான பெரிய அனுபவங்கள் எதுவுமின்றியே நாம் கொரோனா வைரஸ் தொற்றை இந்தளவு கட்டுப்படுத்தியுள்ளோம்.

வெளிநாட்டிலிருந்து வரும் தொற்றுடைய ஒருவர் சமூகத்துக்குச் சென்றால் மாத்திரமே இங்கு கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் ஏற்படும். நல்லாட்சிக் கும்பல் அதிகாரத்தில் இருந்திருப்பின் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றை இவ்வாறு கட்டுப்படுத்தியிருப்பார்களா? நாம் முக்கியமான விடயங்கள் யாவை, முக்கியமற்ற விடயங்கள் யாவை என்பதை சரியாகப் புரிந்துகொண்டு, எப்போதும் பெரிய பிம்பம் தொடர்பாக சிந்தித்தால் மாத்திரமே எமது மக்களுக்கு வெற்றி பெற முடியும்.

கருணா அம்மான் புலிகள் அமைப்பில் இருந்தபோது இராணுவ முகாம்களைத் தாக்கி ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொலை செய்தார் எனக் கூறினார் என்று நல்லாட்சி எதிர்க்கட்சியினர் துள்ளிக் குதிப்பதை நாம் அண்மையில் அவதானித்தோம். பெரிய பிம்பத்தை மறைத்து, வேறு விடயங்களைப் பெருப்பித்துக் காட்டுவது எவ்வளவு இலகு என்பது அதன் மூலம் வெளிப்படுகின்றது.

2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் ஜனாதிபதியான பின்பு, நாம் புலிகள் அமைப்பை முழுமையாக அழித்தொழித்தோம். கருணா அக்காலத்தில் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் கைவிட்டு, புலிகள் அமைப்பிலிருந்து விலகி, இராணுவ உளவுப் பிரிவுக்கு அடிபணிந்தமையால் அவர் புலிகள் அமைப்புடன் அழிந்து போகவில்லை. பிரபாகரனின் சடலத்தை இனங்காண்பதற்கு நாம் கருணாவையே அனுப்பி வைத்தோம்.

'கருணா இவ்வாறு கூறினார். அதனால் உங்களது பெறுமதியான வாக்கை நல்லாட்சித் தரப்பினருக்கு வழங்குங்கள்' என்று கோரும் குழுவினர் செய்தவற்றையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இவர்கள் 1989 இல் பயங்கரவாதிகளின் மனதை வெற்றிகொள்வதற்காக முட்டாள்தனமாக பல ஆயுத லொறிகளையும், பணம் நிரம்பிய பல கோணிப் பைகளையும் புலிகள் அமைப்புக்கு வழங்கினர்.

அதன் பின்பு புலிகள் அந்த ஆயுதங்களைக் கொண்டே எம்மைத் தாக்கினர். 2002 இல் அவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களையும் பிரபாகரனுக்கு எழுதிக் கொடுத்தனர். நல்லாட்சி அரசின் காலத்தில் நாட்டைப் பிரிப்பதற்காக புதிய அரசமைப்பொன்றை வரைவு செய்தனர். அதன் பின்பு அந்தப் பிரிவினைவாத அரசமைப்பின் கோட்பாடுகள் அனைத்தையும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கொள்கைப் பிரகடனத்திலும் உள்ளடக்கினர்.

கருணா கொலைகளைச் செய்த காலத்திலும், அதன் பின்பும், இன்று வரையும் நல்லாட்சித் தரப்பினரின் நிகழ்ச்சி நிரல் நாட்டைப் பிளவுபடுத்துவதாகும். கருணா கொலைகளைச் செய்வதைக் கைவிட்டுள்ள போதிலும், நல்லாட்சியாளர்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதைக் கைவிடவில்லை. அதனையே நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறாயினும் கருணா கூறியவை தொடர்பாக தற்போது சி.ஐ.டியினரால் விசாரணையொன்று நடத்தப்படுகின்றது. எனவே, சிறிய பிம்பத்தை அவதானித்தவாறு, பெரிய பிம்பத்தை நாம் சிறிதளவேனும் மறந்து விடுவோமாயின் அழிவுதான் ஏற்படும். அதனால்தான் எப்போதும் சிறிய பிம்பத்தை நோக்காது, பெரிய பிம்பம் தொடர்பாகவே அவதானம் செலுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகின்றேன்.

சிறிய சில்லறை விடயங்களின் அடிப்படையில் வாக்களிப்போமாயின், எமது நாடு, நாட்டினம், சமயம், கலாசாரம், எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் அனைத்தும் இல்லாமல்போய் விடும். இந்த நாட்டை யாருக்கு சிறப்பாக ஆட்சி செய்ய முடியும், பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் யார், யாருக்கு தீவிரவாதத்தை ஒழித்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தக் கூடியவர்கள் யார், எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமாக வாழ முடியுமான, பெருமையடைய முடியுமான இலங்கையைக் கட்டியெழுப்பக் கூடியவர்கள் யார்? போன்றவை தொடர்பான கேள்விகளையே மக்கள் எப்போதும் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இவற்றுக்கான பதில் யாது என்பதை நான் கூற வேண்டியதில்லை. அதனை சகல இலங்கையரும் அறிவார்கள்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/06/29/13830/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இதுதான் தாயக மக்களின் முக்கிய தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் கர்ணா அம்மான் அவர்கள் நல்ல அரசியல் தளம் ஒன்றை அமைக்கிறார்  ஆனால் மக்கள் கொடுப்பதுதான் தீர்ப்பு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.