Jump to content

கலாச்சாரம் என்ற பெயரில் அடி முட்டாள்தனம்


Recommended Posts

எமது முன்னோர் காட்டிய சாஸ்திர சம்பிரதாயங்கள் புனிதமானவை என்று புலம்பித்திரிபவர்கள் இந்த வீடியோவை பாரக்கவும். 

பெண்களின் காதல் உணர்வை  மதிக்காது அவர்களை வளர்தது தமது ஜாதி கோத்திர பெருமைக்காக சடப் பொருள் போல  கல்யாணம் என்ற பெயரில்  தானம் செய்யவேண்டும் என்றும்,  பெண் குழந்தைகளுக்கு  அவர்களின் சிறு வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் மனித கலாச்சாரத்துக்கு எதிரான கிறிமினல் காட்டுமிராண்டி  இந்து கலாச்சாரத்தை வலியுறுத்தும் இந்து மத குருவின் பிரசங்கம்.   

கேட்டால் நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள். ஆனால் சைவம் என்பது இன்று நடைமுறையில் எல்லா இந்து பத்தாம் பசலித்தனங்களை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் நிலையில் தான் உள்ளது 

அதை விட பெண்கள் சுதந்திரமாக இருக்க விடக்கூடாது என்று வேறு புலம்பல் வேறு. இதற்கும்  ஆமாம் சாமி  போடும் மூடர்களும்   இருப்பார்கள். 

 

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியாவனவர்களின் பேச்சை என்னைப் போன்ற இலங்கை சைவர்கள் கேட்பதில்லை,

ஆனால் நீங்கள் பொறுமையாக கேட்டது சந்தோசம்...👏👏👏👏👏👏👏

 

4 hours ago, tulpen said:

எமது முன்னோர் காட்டிய சாஸ்திர சம்பிரதாயங்கள் புனிதமானவை என்று புலம்பித்திரிபவர்கள் இந்த வீடியோவை பாரக்கவும். 

பெண்களின் காதல் உணர்வை  மதிக்காது அவர்களை வளர்தது தமது ஜாதி கோத்திர பெருமைக்காக சடப் பொருள் போல  கல்யாணம் என்ற பெயரில்  தானம் செய்யவேண்டும் என்றும்,  பெண் குழந்தைகளுக்கு  அவர்களின் சிறு வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் மனித கலாச்சாரத்துக்கு எதிரான கிறிமினல் காட்டுமிராண்டி  இந்து கலாச்சாரத்தை வலியுறுத்தும் இந்து மத குருவின் பிரசங்கம்.   

கேட்டால் நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள். ஆனால் சைவம் என்பது இன்று நடைமுறையில் எல்லா இந்து பத்தாம் பசலித்தனங்களை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் நிலையில் தான் உள்ளது 

அதை விட பெண்கள் சுதந்திரமாக இருக்க விடக்கூடாது என்று வேறு புலம்பல் வேறு. இதற்கும்  ஆமாம் சாமி  போடும் மூடர்களும்   இருப்பார்கள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tulpen said:

நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள்.

வெள்ளைகாரர்களிடம் சொல்லும்போது நாங்கள் இந்து என்று தான் சொல்கிறவர்கள். இப்படியான வீடியோ மாதிரி தமிழில் வந்து சங்கடம் கொடுக்போது மட்டும் நாங்கள் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுகிறவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

இப்படியாவனவர்களின் பேச்சை என்னைப் போன்ற இலங்கை சைவர்கள் கேட்பதில்லை,

ஆனால் நீங்கள் பொறுமையாக கேட்டது சந்தோசம்...👏👏👏👏👏👏👏

 

 

இலங்கையில் உள்ள சைவர்கள் இவர்களைப் போன்றவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.இவர்கள் பற்றி சிந்திப்பதும் இல்லை. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் இதில் ஈடுபாடு உள்ளதாகவும் தெரியவில்லை.அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ளது போல் இலங்கையில் பார்ப்பனியம் என்ற கெடுபிடிகளும் இல்லை. மக்களும் அவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.
எனது பார்வையில் சொல்லப்போனால் இலங்கையில் ஐய்யர்மார் கிட்டத்தட்ட கூலித்தொழிலாளர் போன்றே வாழ்கின்றார்கள்.இந்தியாவில் இருப்பது போல் பார்ப்பனிய திமிரும் அவர்களிடம் அறவேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெள்ளைகாரர்களிடம் சொல்லும்போது நாங்கள் இந்து என்று தான் சொல்கிறவர்கள். இப்படியான வீடியோ மாதிரி தமிழில் வந்து சங்கடம் கொடுக்போது மட்டும் நாங்கள் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுகிறவர்கள். 

வெள்ளைக்காரர்களுக்கு  நான் சைவம் என்றால் அதுபற்றி ஏன் எப்படி என விளக்கம் கேட்பார்கள். அந்த சுகத்துக்காக இந்து என்று விட்டால் பிரச்சனை முடிஞ்சுது.  வெள்ளையளோடை தேவையில்லாமல் அலட்டத் தேவையில்லை.

சும்மா விண்ணாண விளக்கம் குடுக்க   நாங்கள் மதம் மாத்துற கோஷ்டியள் இல்லையெல்லோ.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இலங்கையில் உள்ள சைவர்கள் இவர்களைப் போன்றவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.இவர்கள் பற்றி சிந்திப்பதும் இல்லை. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் இதில் ஈடுபாடு உள்ளதாகவும் தெரியவில்லை.அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ளது போல் இலங்கையில் பார்ப்பனியம் என்ற கெடுபிடிகளும் இல்லை. மக்களும் அவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.
எனது பார்வையில் சொல்லப்போனால் இலங்கையில் ஐய்யர்மார் கிட்டத்தட்ட கூலித்தொழிலாளர் போன்றே வாழ்கின்றார்கள்.இந்தியாவில் இருப்பது போல் பார்ப்பனிய திமிரும் அவர்களிடம் அறவேயில்லை.

இவர்களை கெளரவமாக வைத்திருக்க வேண்டியது எமது கடமை என நம்புகிறேன். 🙂

Link to comment
Share on other sites

17 hours ago, Kapithan said:

இவர்களை கெளரவமாக வைத்திருக்க வேண்டியது எமது கடமை என நம்புகிறேன். 🙂

 மக்களுக்கு உண்மையான ஆன்மீகத்தை பரப்பும் உண்மையான ஆன்மீக வாதிகளாக இருந்தால் நிச்சயமாக  கெளரவமாக வைத்திருக்கவேண்டும். ஆனால் மக்களிடையே காலத்துக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களை புகுத்தி அதில் பணம் உழைக்கும் இவ்வாறானவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கபடவேண்டியவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

 மக்களுக்கு உண்மையான ஆன்மீகத்தை பரப்பும் உண்மையான ஆன்மீக வாதிகளாக இருந்தால் நிச்சயமாக  கெளரவமாக வைத்திருக்கவேண்டும். ஆனால் மக்களிடையே காலத்துக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களை புகுத்தி அதில் பணம் உழைக்கும் இவ்வாறானவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கபடவேண்டியவர்கள். 

இலங்கையிலுள்ள எமது குருக்களைக் குறிப்பிட்டேன். இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள குருக்களைக் குறிப்பிடவில்லை. 👍

இது எனக்கு நடந்தது; 

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

அது தொழிற்சாலைகளுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட கட்டடத் தொகுதி (Industrial zoning ).

உள்ளே சென்ற போது குருக்கள் மட்டுமே அங்கிருந்தார். சிறிய புன்முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு அவரது அலுவலகத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றேன். 

ஒவ்வொரு கடவுளரையும் (விக்கிரகங்கள்) தரிசித்துக்கொண்டு வரும்போது என்னை யாரோ பின்புறமாக அவதானிப்பதுபோல ஓர் உணர்வு.  

திடீரென திரும்பிப் பார்த்தேன். 

நடுவில் அமைக்கப்பட்டிருந்த கர்ப்பக்கிரகத்திற்குப் (?) பின்புறமாக குருக்கள் மறைந்திருந்து என்னை அவதானிப்பது தெரிந்தது. சிறிய குழப்பம், மனதில்.

தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பவும் வந்த வழியால் நடக்கத் தொடங்கியதுபோது குருக்கள்  ""தம்பி நீங்கள் தூரத்திலேயோ இருக்கிற நீங்கள் "" என்றார். 

இல்லை ஐயா, பக்கத்திலதான் இருக்கிறன் ஏன் கேட்கிறீங்கள் என்றேன்.

அதற்கு அவர் "" நான் உங்கள அடிக்கடி பார்த்தமாதிரி ஞாபகம் இல்ல. அதுதான் கேட்டனான் என்றார். 

நானும்""இல்லை ஐயா. நான் வேதக்காறன். இதால நடந்துபோகேக்க ஒருக்கா உள்ள வந்தனான். எனக்கு கோவிலுக்குள்ள இருக்கிற அமைதி நல்லாப் பிடிக்கும்""

குருக்களுக்கு சந்தோசமாகப் போய்விட்டது. உடனே உள்ளே வைத்திருந்த பொங்கல் கொஞ்சம் ஒரு பிளேற்றில போட்டுக்கொண்டு வந்து தந்தார். நானும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு விட்டேன்.

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂

அதுவல்ல விடையம்....புலம் பெயர் கோவில்களில் தட்டில் போட்டால்தான் நீங்கள்  பக்தர்...இல்லையோ கஞ்சா கேசுதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

இலங்கையிலுள்ள எமது குருக்களைக் குறிப்பிட்டேன். இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள குருக்களைக் குறிப்பிடவில்லை. 👍

இது எனக்கு நடந்தது; 

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

அது தொழிற்சாலைகளுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட கட்டடத் தொகுதி (Industrial zoning ).

உள்ளே சென்ற போது குருக்கள் மட்டுமே அங்கிருந்தார். சிறிய புன்முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு அவரது அலுவலகத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றேன். 

ஒவ்வொரு கடவுளரையும் (விக்கிரகங்கள்) தரிசித்துக்கொண்டு வரும்போது என்னை யாரோ பின்புறமாக அவதானிப்பதுபோல ஓர் உணர்வு.  

திடீரென திரும்பிப் பார்த்தேன். 

நடுவில் அமைக்கப்பட்டிருந்த கர்ப்பக்கிரகத்திற்குப் (?) பின்புறமாக குருக்கள் மறைந்திருந்து என்னை அவதானிப்பது தெரிந்தது. சிறிய குழப்பம், மனதில்.

தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பவும் வந்த வழியால் நடக்கத் தொடங்கியதுபோது குருக்கள்  ""தம்பி நீங்கள் தூரத்திலேயோ இருக்கிற நீங்கள் "" என்றார். 

இல்லை ஐயா, பக்கத்திலதான் இருக்கிறன் ஏன் கேட்கிறீங்கள் என்றேன்.

அதற்கு அவர் "" நான் உங்கள அடிக்கடி பார்த்தமாதிரி ஞாபகம் இல்ல. அதுதான் கேட்டனான் என்றார். 

நானும்""இல்லை ஐயா. நான் வேதக்காறன். இதால நடந்துபோகேக்க ஒருக்கா உள்ள வந்தனான். எனக்கு கோவிலுக்குள்ள இருக்கிற அமைதி நல்லாப் பிடிக்கும்""

குருக்களுக்கு சந்தோசமாகப் போய்விட்டது. உடனே உள்ளே வைத்திருந்த பொங்கல் கொஞ்சம் ஒரு பிளேற்றில போட்டுக்கொண்டு வந்து தந்தார். நானும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு விட்டேன்.

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂😂😂

கோயில் நகைகளை திருட வந்தவர் என்று நினைத்திருக்க கூடும் 😍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

கோயில் நகைகளை திருட வந்தவர் என்று நினைத்திருக்க கூடும் 😍

 

கொஞ்சம் கெளரவமான கள்ளன் என்கிறீர்கள்.  😂😂

40 minutes ago, alvayan said:

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂

அதுவல்ல விடையம்....புலம் பெயர் கோவில்களில் தட்டில் போட்டால்தான் நீங்கள்  பக்தர்...இல்லையோ கஞ்சா கேசுதான்...

அப்படியென்றால் கத்தோலிக்க திருச்சபைக்கும் நான் கஞ்சாக் கேஸ் தான். 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

சகலவல்லமை பொருந்திய கடவுளாரின் நிலை இப்படி உள்ளதே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துல்பனின் கலாச்சாரம் இப்போ கப்பிதனின் ஆலய விஜயத்தில் நிற்கிறது, தொடருங்கள் .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

துல்பனின் கலாச்சாரம் இப்போ கப்பிதனின் ஆலய விஜயத்தில் நிற்கிறது,

கப்பிதன் இந்து கலாச்சாரத்தை மதித்து இந்து மத வழிபாட்டு தலங்களுக்கு விஜயம் செய்கிறர் என்று எடுக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

சைவக் கோயில்களுக்கு போகும் போது குளித்து முழுகி தோய்த்துலர்ந்த உடுப்புடன் போக வேண்டும்.
இது நீங்கள் நடந்து போட்டு வரும் போது வேர்த்து களைத்து வெய்யிலில் முழி பிதுங்கி வர உங்களைப் பார்த்ததும் ஒரு பக்தனாக எப்படி அதுவும் எந்த நாளும் பக்தர்களை பார்க்கும் ஒரு ஐயரைப் பார்த்து கேட்பீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சைவக் கோயில்களுக்கு போகும் போது குளித்து முழுகி தோய்த்துலர்ந்த உடுப்புடன் போக வேண்டும்.
இது நீங்கள் நடந்து போட்டு வரும் போது வேர்த்து களைத்து வெய்யிலில் முழி பிதுங்கி வர உங்களைப் பார்த்ததும் ஒரு பக்தனாக எப்படி அதுவும் எந்த நாளும் பக்தர்களை பார்க்கும் ஒரு ஐயரைப் பார்த்து கேட்பீர்கள்?

உங்கள் பிரச்சனை என்ன ? நான் நாளாந்தம் குளிப்பேனா என்று கேட்கிறீர்களா ? 😀

பயப்படாதீர்கள் ஈழப்பிரியன். நான் A/L எடுக்கும் காலம் தொட்டே இரு வேளையும் குளிபவனல்ல தலைக்கு முழுகுகிறவன்.Sportsman 👍

 கோவிலுக்குப் போகும்போது வேர்த்துக் களைத்துப் போகவில்லை. காலாற நடக்கப் போனவன். ஒரு அமைதிக்காக கோவிலுக்குப் போனேன். அவ்வளவும்தான்.  😀

கடவுள் வரம் கோடுத்தாலும் ஈழப்பிரியன் விடமாட்டார் போல 😜😜

(முட்டையில் மயிர் பிடுங்குதல் என்பது இதுதானோ 😂

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

சகலவல்லமை பொருந்திய கடவுளாரின் நிலை இப்படி உள்ளதே😂

கலியுகத்திலல்லவா இருக்கிறோம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

கோவிலுக்குப் போகும்போது வேர்த்துக் களைத்துப் போகவில்லை. காலாற நடக்கப் போனவன். ஒரு அமைதிக்காக கோவிலுக்குப் போனேன். அவ்வளவும்தான்.  😀

சரி போய் எந்த தெய்வத்தை முதலில் வழிபட்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

கப்பிதன் இந்து கலாச்சாரத்தை மதித்து இந்து மத வழிபாட்டு தலங்களுக்கு விஜயம் செய்கிறர் என்று எடுக்கலாம்

இந்துக் கல்லூரியில்(எந்தக் கல்லூரி என்று கேட்கப்படாது. அது இரகசியம்)  ஏறக்குறைய மூன்று வருடன்கள் கல்வி கற்றவன். வெள்ளிக் கிழமைகளில் அரைமணித்தியாலத்திற்கும் மேலாக நின்ற நிலையிற்  சொல்லப்படும் நமச் சிவாய வாழ்க நாதன் தாழ் தான் வாழ்க என்கின்ற தேவாரத்தால் கால் நோவெடுத்து வேறு கல்லூரி தேடி ஓடியவனாக்கு இந்த கப்பித்தான் 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி போய் எந்த தெய்வத்தை முதலில் வழிபட்டீர்கள்?

கும்பிடுவதெல்லாம் இல்லை. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் முன்னர் சிறிது நேரம் அமைதியாக நிற்பேன். ஊர்க் கோவில்களென்றால் மண்டபத்தில் தொடர்ச்சியாக அமைதியாக உட்கார்ந்திருப்பேன்.  கத்தோலிக்க தேவாலயங்களிலும் இதுதான் என்னுடைய வழிபாட்டு முறை. அந்த அமைதியில் எனது பாரங்களனைத்தும் குறைந்துவிடும். 👍

(நான் கூறியதில் சந்தேகம் போலும் 😂😂)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

இலங்கையிலுள்ள எமது குருக்களைக் குறிப்பிட்டேன். இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள குருக்களைக் குறிப்பிடவில்லை. 👍

இது எனக்கு நடந்தது; 

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

அது தொழிற்சாலைகளுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட கட்டடத் தொகுதி (Industrial zoning ).

உள்ளே சென்ற போது குருக்கள் மட்டுமே அங்கிருந்தார். சிறிய புன்முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு அவரது அலுவலகத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றேன். 

ஒவ்வொரு கடவுளரையும் (விக்கிரகங்கள்) தரிசித்துக்கொண்டு வரும்போது என்னை யாரோ பின்புறமாக அவதானிப்பதுபோல ஓர் உணர்வு.  

திடீரென திரும்பிப் பார்த்தேன். 

நடுவில் அமைக்கப்பட்டிருந்த கர்ப்பக்கிரகத்திற்குப் (?) பின்புறமாக குருக்கள் மறைந்திருந்து என்னை அவதானிப்பது தெரிந்தது. சிறிய குழப்பம், மனதில்.

தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பவும் வந்த வழியால் நடக்கத் தொடங்கியதுபோது குருக்கள்  ""தம்பி நீங்கள் தூரத்திலேயோ இருக்கிற நீங்கள் "" என்றார். 

இல்லை ஐயா, பக்கத்திலதான் இருக்கிறன் ஏன் கேட்கிறீங்கள் என்றேன்.

அதற்கு அவர் "" நான் உங்கள அடிக்கடி பார்த்தமாதிரி ஞாபகம் இல்ல. அதுதான் கேட்டனான் என்றார். 

நானும்""இல்லை ஐயா. நான் வேதக்காறன். இதால நடந்துபோகேக்க ஒருக்கா உள்ள வந்தனான். எனக்கு கோவிலுக்குள்ள இருக்கிற அமைதி நல்லாப் பிடிக்கும்""

குருக்களுக்கு சந்தோசமாகப் போய்விட்டது. உடனே உள்ளே வைத்திருந்த பொங்கல் கொஞ்சம் ஒரு பிளேற்றில போட்டுக்கொண்டு வந்து தந்தார். நானும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு விட்டேன்.

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂😂😂

நல்ல சிரிப்பான...  கதை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

               இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் ஒரு சைவக்காரன் கோவிலுக்கு போனால் நேராக வினாயகரையே முதலில் வழிபடுவார்கள்.
              அடிதலை மாறி போய் நின்றால் யாராவது குழம்பித்தான் போவார்கள்.

20 minutes ago, Kapithan said:

கும்பிடுவதெல்லாம் இல்லை. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் முன்னர் சிறிது நேரம் அமைதியாக நிற்பேன். ஊர்க் கோவில்களென்றால் மண்டபத்தில் தொடர்ச்சியாக அமைதியாக உட்கார்ந்திருப்பேன்.  கத்தோலிக்க தேவாலயங்களிலும் இதுதான் என்னுடைய வழிபாட்டு முறை. அந்த அமைதியில் எனது பாரங்களனைத்தும் குறைந்துவிடும். 👍

(நான் கூறியதில் சந்தேகம் போலும் 😂😂)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

               இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் ஒரு சைவக்காரன் கோவிலுக்கு போனால் நேராக வினாயகரையே முதலில் வழிபடுவார்கள்.
              அடிதலை மாறி போய் நின்றால் யாராவது குழம்பித்தான் போவார்கள்.

 

நான் கோவிலுக்குப் போகலாமா அல்லது போகக் கூடாதா ? 

தெழிவாகக் கூறுங்கள் நக்கீரனே 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

நான் கோவிலுக்குப் போகலாமா அல்லது போகக் கூடாதா ? 

தெழிவாகக் கூறுங்கள் நக்கீரனே 🤥

ஐயா கப்பிதான்
இதுவரை ஐயர் சார்பாகவே வாதிட்டேன்.(ஐயர் ஏன் ஒழிந்திருந்து பார்த்தார்)
மற்றும்படி உங்களை கோவிலுக்கு போகக் கூடாதென்று சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஐயா கப்பிதான்
இதுவரை ஐயர் சார்பாகவே வாதிட்டேன்.(ஐயர் ஏன் ஒழிந்திருந்து பார்த்தார்)
மற்றும்படி உங்களை கோவிலுக்கு போகக் கூடாதென்று சொல்லவில்லை.

நான் எந்த ஒரு இடத்திலும் குருக்களைக் குறை கூறவில்லையே. எனது அனுபவத்தை நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தேன். அத்தோடு சரி. இதில் குருக்களை நான் குறை கூற ஏதுமில்லை. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துல்பென் 
உங்களுடைய கருத்துக்கள் எல்லாவற்றோடும் நான் ஏற்றுக்கொண்டும் ஒத்துப்போகாமலும் இருந்தாலும் உங்களை ஒரு "Reasonable person" ஞாயமான கருத்தாளர் இப்படித்தான் பார்க்கிறேன்.
ஆனாலும் மேலே நீங்கள் இணைத்த வீடியோவும் அது சார்ந்த உங்கள் கருத்துக்களும் உங்கள் மீதான பார்வையை சற்றே ஆட்டம் காணச்செய்கிறது.
எனக்கு தெரிந்து.... திரும்பவும் சொல்கிறேன் "எனக்கு தெரிந்து" இலங்கையில் எந்த ஒரு பிராமண குருக்களும்  இப்படியான பேச்சுக்களில் , கதா பிரசங்கத்தில் ஈடு பட்டது கிடையாது.
அதையும் தவிர அவர்கள் தாங்கள் தான் உசத்தி என்று எந்த ஒரு செயலிலும் காட்டியதும் கிடையாது.
என்னுடைய நண்பன், எங்கள் ஊரில் வசிக்கும் ஐயரின் மகளை தான் காதலித்தான். அவர்கள் காதல் மிகவும் ரம்மியமானது. நிறைய வெண்பொங்கல், பஞ்சாமிர்தம், அடை, சீடை , முறுக்கு, இப்படி நிறைய திண் பண்டங்கள் எங்களை தேடி வந்த காலம் அது. 

இந்திய பார்ப்பனிய குப்பைகளை எங்கள் மீது கொட்டி, எங்களையும் அவர்கள் போல் காட்ட முட்படும் உங்கள் செயல் ஞாயம் அற்றது. கண்டிக்கத்தக்கதும் கூட.

எம்மவர் மத்தியில் இந்திய பார்ப்பனர்கள் சார்ந்து ஒரு பாரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு  வரும் நேரத்தில் இது சீண்டிப்பார்க்கும் ஒரு பதிவு மட்டுமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.