Jump to content

கலாச்சாரம் என்ற பெயரில் அடி முட்டாள்தனம்


Recommended Posts

 

அப்ப்பா….., நல்ல மீன் பட்டிருக்கு வலையில. ஒவ்வொன்டாக் கழட்ட வேணும்.

முதலில், விடயத்தை சொல்பவரைத் தாக்காமல், சொல்லப்படும் விடயத்தைத் தாக்க முயற்சி செய்வோம். இதைத் தான் சொல்வது: மாட் டைப் பற்றி எழுதச்சொன்னால், எழுத வராட்டி, மாட்டைக் கொண்டுபோய் மரத்தில் கட்டிப்போட்டு, மரத்தைப் பற் றி எழுதுவது என்று.

தமிழர் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று பேர் குத்தப்பட்டதை ஏற்றுக் கொள்வோமா? நியாயமா? மனம் பதைக்குதில்லையா? அப்படித்தான் இருக்குது, நான் மூடப்பழக்கத்தை ஆதரித்து வக்காலத்து வாங்குகிறேன் என்று முத்திரை குத்துவது. நான் என்ன செய்யலாம், அது உங்கள் பிரச்சினை, பானையிலுள்ளது தானே அகப்பையில் வரும்.

வரலாற்றில் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு சமூகம் சிறந்து விளங்கும். ஒரு சமூகத் தின் அறிவிலும் அநுபவத் திலுமிருந்தே இன்னொரு சமூகம் கட் டியெழுப்பப் படுகிறது.தற்போது ஐரோப்பா சிறந்து நிற்கிறது. அதை நான் குறை கூறியதாக, உங்கள் உணர்ச்சி வசப்பட்ட வசதிக்கேற்ப, ஏன் எடுத்தீர்கள். நாளைக்கு வேறொரு சமூகம் முன்னிற்கும்.

ஒரு விடயத்தை முன்வைக்கும் போது உங்களையோ உங்களது அறிவையோ தாக்குவதாக ஏன் நினைக் கிறீர்கள். உணர்ச்சிவசப்பட்டால் விடயம் வராது ஆத்திரம் தான் ஐயா வரும். அதன் வெளிப்பாடே “Stupidness” எனும் வார்த்தைகள்.

Kapithan:

"""அறிவியலில் இவ்வளவு முன்னேற்றம் கண்ட தமிழர், எவ்வாறு எல்லாவற்றையும் இழந்து தாழ்வுற்றார்கள். அதற்கு என்ன காரணம் ?"""

இலங்கையில் தமிழர்  கல்வி, கலாச்சாரம், அபிவிருத்தி பின்னடைந்ததற்கு என்ன காரணம். தினமுந்தான் யாழில் செய்தி வருகிறதே கலாச்சாரச் சீரழிவு என்று. எதனால்? ஆளப்படுகிறோம் என்பதே காரணம். அவ்வளவு பேரும் கம்பி வேலிக்குள் நின்று அழுததை மறந்து விட் டீர்களா?  அத்தனை சர்வதேசமும் UN உம் இருந்தே இந்தக் கதியென்றால் 2000, 3000 வருசத்துக்கு முன் எப்படியிருந்திருக்கும். காதுக்குள்ள ஈயம் ஊற் றுவது எல்லாம் ஜுஜுபி. ஒரு பத்து வருசத்துக்கே இந்த சீரழிவு என்றால், ஒரு மூவாயிரம் வருட சீரழிவை எண்ணிப்பாருங்கள். நித் திரை கொள்பவனைத்தான் ஐயா எழுப்பலாம்.

“நவக் கிரகங்கள், பாம்பு விழுங்குதல் போன்ற கதைகளுக்கு விளக்கங்கள் கூறி எம்மை நாமே பாராட்டலாமே தவிர எமது பிள்ளைகளுக்கு விஞ்ஞானரீதியிலான விளக்கமாக படிப்பிக்கவோ விளங்கப்படுத்தவோ முடியாது.”

கபிதன், இதுக்குப் பின்னாலுள்ள Physics பற்றி ஏன் விவாதிக்கவில்லை. மூடப் பழக்கமென்று எள்ளி நகையாடாமல் அதற்குப் பின்னாலுள்ள விஞ்ஞானரீதியிலான விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் என்றுதான் சொன்னேன், தவிர அதைப் பாடமாகப் புகட்டச் சொல்லவில்லை.

“தமிழர் அறிவியல் தொடர்பாக துல்பன் எதனுடனும் (இந்தத் திரியில்)  முரண்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.

- முரண்பட்டதாக சொன்னேனா. மூடப்பழக்கம் என்று சொன்னதைத்தான் விவாதித்தேன்.

 

இணையவன்:  நீங்கள் குறிப்பிட்ட தமிழரின் கண்டுபிடிப்புகள் அனைவரும் அறிந்ததுதான்”.

Tulpen: “ அகத்தான், நீங்கள் எதுவும் புதுமையாக கூறிவிடவில்லை.”

ஒரு விடயத்தை முன்வைக்கும் போது உங்களையோ உங்களது அறிவையோ தாக்குவதாக ஏன் நினைக் கிறீர்கள். உங்களுக்கு இது தெரியாது என்றோ, புதிய விடயம் என்றோ யார் சொன்னார். இது psychological பிரச்சினையா?

 

Tulpen: “ பார்பனர்களின்  நவகிரகங்கள் வழிபாட்டுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்”

நவக்கிரகங்கள் தமிழரின் அறிவியல், கதை கட்டியது வந்தேறிகள். நான் சொன்னது அதிலிருக்கும் தமிழரின் அறிவியலைப்பற்றி.

Tulpen: “இது உங்களுக்கே முரண்பாடாக தெரியவில்லையா?” - இதிலே நான் எங்கே முரண்பட் டேன். அதிலிருக்கும் அறிவியலைப்பற்றி ஏன் விவாதிக்கவில்லை. மாட் டைப் பற்றி எழுதாமல் ஏன் மரத்தைப் பற்றி எழுதுகிறீர்கள்.

 

Tulpen: “இன்றைய அறிவியல் வளர்ச்சியடைந்த காலத்தில் நவகிரகங்கள், கிரகதோஷம் என்ற அறிவுக்கு ஒவ்வாத வழிபாடுகள் மூட நம்பிக்கைகளே”

அறிவியல் என்றால் என்ன என்று விளங்கி வைத்திருக்கிறீர்கள். ஒரு விடயத்தை அறிவதுதானே அறிவியல். வழிபாடு என்றால் அதன் வழி செல்லுதல்.

Tulpen: “வளர்ந்து வரும் புதிய அறிவியல் காலத்தின் நிஜத்தை ஏற்றுக்கொள்வதால் நாம் ஒன்றும் தாழ்ந்து போய்விடப்போவதில்லை.” - இதை யார் மறுத் தார்கள்.

Tulpen: “உங்களை போல் பேசுவர்கள் எல்லோருமே எம் முன்னோர்கள் தான் உலகில் மிக சிறந்தவர்கள், உலகில் அத்தனை அறிவியலும் அவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தது என்பது போல் கதை விடுவது.” ---

இது உங்கள் கற்பனை. ஏற்கெனவே உங்கள் மனதில் புரையோடிப் போன ஒரு காயம், இதை எல்லா இடத்திலும் எடுத்து விடுவது.

 

“பின்னர் அப்படியான வல்லமை பெற்ற எமது முன்னோர்கள் எப்படி வந்த அந்நியருக்கெல்லாம் அடிமைப்பட்டார்கள் என்று கேட்டால் அதற்கு சரியான பதிலை கொடுப்பதில்லை.”

- தற்போது இலங்கையில் தமிழின், தமிழரின் நிலை எப்படியிருக்குது.  முப்பது வருசத்திலே இந்த அழிவு என்றால்,  2000, 3000 வருசத்தை எண் ணிப் பாருங்கள் கைப்புண்ணுக்கு கண்ணாடி கேட்கிறிர்களே.

 

Tulpen: நிபுணத்துவம் இல்லாத நானோ நீங்களோ அதை செய்ய முடியாது என்பது எனது கருத்து.

உங்களுக்கு நிபுணத்துவம் இல்லை என்று சொல்ல உங்களுக்கு சகல தகுதியும் உரிமையும் இருக்கு. எனக்கு இல்லை என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்.

 

Tulpen: “வடிவேலு பாணியில் கூட ஒருவர் இதற்கு யாழ்களத்தில் பதிலளித்திருந்தார்”.

நீங்கள் விடயத்தை எழுதுபவரைப் பற்றி எழுதுகிறீர்கள். விடயத்தைப்பற்றி மட்டுமே எழுத முயற்சி செய்யுங்கள்.  விடயத் திலிருந்து திசை திருப்பும் முயற்சி.

 

Tulpen: “வீண் பழம் பெருமை பேசுவதால் அதுவும் எமக்குள் மட்டும் இதைப் பேசி சுய இன்பம் அடைவதால் தமிழருக்கு  ஆகப்போவது ஒன்றும் இல்லை”.

மூடப் பழக்கம் என்று எங்களை நாங்களே தாழ்த்தவேண்டாம் என்றே சொன்னேன். பெருமைப்படுவது உங்கள் பிரச்சினை.

 

இணையவன்: “வான சாஸ்திரத்தையும் சாத்திரத்தையும் ஒன்றாகக் குழப்பியுள்ளீர்கள்”.

Justin: “Astrology ஐயும் Astronomy ஐயும் கலந்து கூழாக்கி…”

“குழப்பியுள்ளீர்கள், கூழாக்கி : நுனிப்புல் மேயாதீர்கள், Astrology இலிருந்துதான் Astronomy கிளைவிட்டது, தேடி அறிந்து கொள்ளுங்கள். அறிந்துபின் எனக்கு சொல்லுங்கள்.

 

நான் சொன்ன விடயம் இதுதான். “மாட்டைப் பற்றி” மட்டும் விவாதியுங்கள். இதிலுள்ள பிழையைச் சுட்டிக் காட்டுங்கள்

நவகிரகங்கள்:

கிரகம்: கர அகம் = கரகம் = கிரகம். அதாவது, தன்னை நோக்கி இழுத்து கர அகப்படுத்த முயலும் எதுவாகிலும் அது ஒரு கிரகம். இங்கே gravity பற்றி பேசப்படுகிறது. நம் முன்னோர் அன்றே இது பற்றி அறிந்திருக்கிறார்கள், இதை அறியாதவர்களுக்கே இதை எழுதினேன்.

Grakam:Anything that atracts towards itself. The word “gravity“ was derived from “gra” . கர அகப்படுத்தல்.

கோயிலுள்ள நவக் கிரகங்கள் ஒரு musium மாதிரி. அங்கு அறிவு சேர்த்து வைக்கப்பட்டிருக்குது. Smithsonian Institution இல் சேர்த்து வைக்கப்பட்டிருந்தால் அதைப் போய் பார்த்து ஆகா, ஓகோ என்போம்.

 

கிரகதோஷம்:

தோசம் என்பது தோய்ந்து இருக்கும் தன்மை. ஆடை தோய்த்தல், ஆளே தோய்தல் எல்லாம் தோசமே.

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ gravitational field க்குள்ள நாமெல்லாம் தோய்ந்து தானிருக்கிறோம். ஒவ்வொரு கிரகமும் சுற்றிவரும் போது எங்களைச் சூழ்ந்துள்ள gravitational field மட்டுமல்ல, electromagnetic field மின்காந்தப் புலமும் மாறும்.

இந்த மாற்றம் எங்களது இயக்கத்தில், சிந்தனையில் சிறிதாகவோ பெரிதாகவோ மாற்றத்தையுண்டுபண்ணும். உதாணத்துக்கு TV antenna க்குப் பக்கத்திலை போய் நில்லுங்கள் திரையில் படத்தில் அதிர்வு ஏற்படும்.

Cell போனைக் காதுக்குப் பக்கத்தில் வைத்திருந்தால் மூளையைப் பாதிக்கும், இதுவும் அறிவியல்தான்.

Simply, இதுதான் கிரக தோசம். இதைச் சொல்வது மூடப்பழக்கமா? அறிவியலா?

ஐயாமாரேதில்” இருந்தால் இதுபற்றி விவாதியுங்கள்.

இப்ப திரும்ப ஒருக்கால் எனது பதிவை வாசித்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இப்படியான பல்லவிகள் இப்போது இந்திய பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களினால் வலைதளங்களில் எழுதபடுவதை காணலாம். அர்த்தமற்ற கைவிடபடி வேண்டியவைகள புகழ்ந்து அறிவியல் பெயின்ற் அடித்து பாதுகாப்பதில் இலங்கையில்  உள்ளவர்களை விட முன்னேறிய மக்களோடு வெளிநாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் பலர் தான் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

wow,

gravity என்றால் என்ன என்று சொல்லுவீங்களா?

Link to comment
Share on other sites

16 hours ago, Kapithan said:

கொப்பநிக்கல்ஸ் தொடர்பாக எனக்கு பெரிய அளவு ஏதும் தெரியாது (நினைவில் இல்லை)

 

🤔🤔🤔

 

 

அப்ப, ஏனையா கால விட்டீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தான்,

இந்த யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அறிவோடு என்னால் வாதாட முடியாது!

"அன்ரனாவுக்குப் பக்கத்தில் நின்றால் ரிவியில் படம் ஆடும், எனவே கிரகம் மாறினால் எங்கள் உடலும் மனமும் மாறும்" என்கிற reasoning ஐ எதிர்த்து விவாதிக்கும் அளவுக்கு நான் படிக்கவில்லை! 😎 

Link to comment
Share on other sites

10 minutes ago, Justin said:

அகத்தான்,

இந்த யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அறிவோடு என்னால் வாதாட முடியாது!

 😎 

Astrology ஐயும் Astronomy ஐயும் கலந்து கூழாக்கி…" என்று சொன்னது யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து சேர்த்து வைத்திருக்கும் அறிவினாலா.

அப்போ, பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இங்கு இல்லையா.

3 minutes ago, அகத்தான் said:

Astrology ஐயும் Astronomy ஐயும் கலந்து கூழாக்கி…" என்று சொன்னது யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து சேர்த்து வைத்திருக்கும் அறிவினாலா.

அப்போ, பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இங்கு இல்லையா.

"Cell போனைக் காதுக்குப் பக்கத்தில் வைத்திருந்தால் மூளையைப் பாதிக்கும், இதுவும் அறிவியல்தான்".

யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில்  இதைக் காணவில்லையா. selective blindஆ நீங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அகத்தான் said:

 

அப்ப, ஏனையா கால விட்டீர்கள்.

 

நான் கொப்பணிக்கல்ஸ் தொடர்பாக வாதாடவில்லை. ஆனால் தMழர்களின் மேம்பட்ட அறிவியல் தொடர்பில் ஆதாரங்கள் நிரூபிக்கப்பட வேண்டும் என்கிறேன். 🙂

நீங்கள் கூறும் நவக்கிரகங்கள் பாம்பு விழுங்குதல் போன்ற கதைகள் எமக்கு வேண்டுமானால் புரிந்துகொள்ளளவோ, வேண்டுமானால் எம்மைத் திருப்திப்படுத்தவவோ உதவக்கூடும். 👍

ஆனால் எனது பிளளைகள் ""நீங்கள் கூறுவதெல்லாம் சரியப்பா. ஆனால் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகள் என்று நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே"" என்று கேட்டால் என்னிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் விடயம் 🤥

 

Link to comment
Share on other sites

கிரக தோசத்திற்கு ரிவி அன்ரனாவையும், போனையும் உதாரணம் காட்டினீர்கள். சரி அதெப்படி சனி தோசம் அல்லது செவ்வாய் தோசம் குறிப்பிட ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கு மட்டம் தேடிவந்து தாக்கி அவருக்கு பக்கத்தில் நிற்கும் வேறு திகதியில் பிறந்தவரை தாக்காமல் வேடிக்கை பார்க்கும்?

சுற்றி வரும் கிரகங்கள் மனிதரை தாக்குவது உங்கள் அறிவியல் என்றால் அது எப்படி இவருக்கு ஏழரை சனி என்று வகுத்து  வைத்த மனிதரை மட்டும் தேடி வந்து தாக்கும்? பக்கதில் நிற்கும் ஏழரைச்சனி இல்லாதவரை ஒன்றும் செய்வதில்லையே? ஏன்?

நீங்கள் கூறிய எலெக்ரோனிக் மின்காந்த அலைகள் ஒட்டு மொத்தமாக எல்லோர் மீதும் தாக்கத்தை செலுத்தவேண்டுமே அதெப்படி பிறந்த திகதி பார்த்து யாருக்கு செவ்வாய் தோசம் என்று பார்த்து செவ்வாய் அவரை  தாக்க வழி விட்டு விட்டு, யாருக்கு சனி தோசம் என்று பார்த்து அந்த சனி கிரகம் அவரை தேடி வந்து தாக்கும்?

அப்படியே அந்த கிரக தோசத்திற்கு கோவிலுக்கு சென்று  பரிகாரம் செய்யதவுடன் அந்த கிரகத்திற்கு அது தெரிந்து அவரை தாக்குவதை எப்படி நிறுத்தும்?

கிரகங்களை கண்டு பிடித்தது தமிழ் முன்னோர் அறிவியல் என்று கதை விட்டிருந்தீர்கள். அதை கண்டு பிடித்த அந்த தமிழர் பெயர் என்ன? அவர் எந்த காலப்பகுதியில் வாழ்ந்தார்? ஒருவரா அல்லது பலரா? அவரகள் எந்த காலபபகுதியில் வாழ்ந்தார்கள்?

நீங்கள் வானவியல் தொடர்பாக எழுதிய கருத்துகளை பார்க்கும் போது நீங்கள் நிபுணத்துவம் அற்றவர் என்பது வெளிப்படையாக தெரிவதால் அப்படி எழுதினேன். அப்படி நிபுணத்துவம் அடைந்தவரானால் நிபுணத்துவம் அற்ற எங்களிடம் வந்து கதை விடாமல் உலக விஞ்ஞானிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களிடன்  விவாதித்திப்பீர்களே!

 

 

Link to comment
Share on other sites

3 minutes ago, tulpen said:

கிரக தோசத்திற்கு ரிவி அன்ரனாவையும், போனையும் உதாரணம் காட்டினீர்கள். சரி அதெப்படி சனி தோசம் அல்லது செவ்வாய் தோசம் குறிப்பிட ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கு மட்டம் தேடிவந்து தாக்கி அவருக்கு பக்கத்தில் நிற்கும் வேறு திகதியில் பிறந்தவரை தாக்காமல் வேடிக்கை பார்க்கும்?

சுற்றி வரும் கிரகங்கள் மனிதரை தாக்குவது உங்கள் அறிவியல் என்றால் அது எப்படி இவருக்கு ஏழரை சனி என்று வகுத்து  வைத்த மனிதரை மட்டும் தேடி வந்து தாக்கும்? பக்கதில் நிற்கும் ஏழரைச்சனி இல்லாதவரை ஒன்றும் செய்வதில்லையே? ஏன்?

நீங்கள் கூறிய எலெக்ரோனிக் மின்காந்த அலைகள் ஒட்டு மொத்தமாக எல்லோர் மீதும் தாக்கத்தை செலுத்தவேண்டுமே அதெப்படி பிறந்த திகதி பார்த்து யாருக்கு செவ்வாய் தோசம் என்று பார்த்து செவ்வாய் அவரை  தாக்க வழி விட்டு விட்டு, யாருக்கு சனி தோசம் என்று பார்த்து அந்த சனி கிரகம் அவரை தேடி வந்து தாக்கும்?

அப்படியே அந்த கிரக தோசத்திற்கு கோவிலுக்கு சென்று  பரிகாரம் செய்யதவுடன் அந்த கிரகத்திற்கு அது தெரிந்து அவரை தாக்குவதை எப்படி நிறுத்தும்?

கிரகங்களை கண்டு பிடித்தது தமிழ் முன்னோர் அறிவியல் என்று கதை விட்டிருந்தீர்கள். அதை கண்டு பிடித்த அந்த தமிழர் பெயர் என்ன? அவர் எந்த காலப்பகுதியில் வாழ்ந்தார்? ஒருவரா அல்லது பலரா? அவரகள் எந்த காலபபகுதியில் வாழ்ந்தார்கள்?

நீங்கள் வானவியல் தொடர்பாக எழுதிய கருத்துகளை பார்க்கும் போது நீங்கள் நிபுணத்துவம் அற்றவர் என்பது வெளிப்படையாக தெரிவதால் அப்படி எழுதினேன். அப்படி நிபுணத்துவம் அடைந்தவரானால் நிபுணத்துவம் அற்ற எங்களிடம் வந்து கதை விடாமல் உலக விஞ்ஞானிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களிடன்  விவாதித்திப்பீர்களே!

 

 

திரும்பவும் ஆளைத்தாக்குகிறீர்கள். நீங்கள் குழம்பிப் போயிருக்கிறீர்கள்.

"நீங்கள் வானவியல் தொடர்பாக எழுதிய கருத்துகளை பார்க்கும் போது நீங்கள் நிபுணத்துவம் அற்றவர் என்பது வெளிப்படையாக தெரிவதால் அப்படி எழுதினேன். அப்படி நிபுணத்துவம் அடைந்தவரானால் நிபுணத்துவம் அற்ற எங்களிடம்.."

நிபுணத் துவம் அற்ற உங்களுக்கு, எப்படி "நிபுணத்துவம் அற்றவர் என்பது வெளிப்படையாக"  தெரிந்தது?  இதிலே உங்களைக் காட்டிக் கொடுத்து விட்டீர்களே

"எங்களிடம் வந்து கதை விடாமல் உலக விஞ்ஞானிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களிடன்  விவாதித்திப்பீர்களே! "...

அப்ப உங்களால சினிமாபாட்டும் காதலைப் பற்றி மட் டும் தான் அரட் டை அடிக்கும் முடியும் என்று நினைக்கிறீர்களா.  உங்களுக்கு இது பொருத்தமில்லாட்டி ஏனையா காலைவிட்டீர்கள். ஓரமாக இருந்து வேடிக்கை பார்த்திருக்கலாமே.

இது உங்களுக்கு என்று தனியாக address பண்ணவில்லையே.

"கிரக தோசத்திற்கு ரிவி அன்ரனாவையும், போனையும் உதாரணம் காட்டினீர்கள். சரி அதெப்படி சனி தோசம் அல்லது செவ்வாய் தோசம் குறிப்பிட ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கு மட்டம் தேடிவந்து தாக்கி அவருக்கு பக்கத்தில் நிற்கும் வேறு திகதியில் பிறந்தவரை தாக்காமல் வேடிக்கை பார்க்கும்? "

உங்களுக்கு உதாரணம் கூட விளங்கவில்லையே.

நான் பரிகாரத்தைப் பற்றி ஏதும் சொன்னேனா. ஏன் அவதிப்பட் டு புழுங்குகிறீர்கள்.

"அப்படியே அந்த கிரக தோசத்திற்கு கோவிலுக்கு சென்று  பரிகாரம் செய்யதவுடன் அந்த கிரகத்திற்கு அது தெரிந்து அவரை தாக்குவதை எப்படி நிறுத்தும்?"   -- இது தான் வந்தேறிகளின் பிழைப்பு.

 

சரி, விடயத் துக்கு வருவோம்.

முதலில் "மாட்டைப்" பற்றி மட் டும் எழுதப் பழகுங்கள்

கிரகம், தோசம் என்பதை முதலில் விளங்கிக் கொண்டீர்களா? அதற்கு என்ன சொல்கிறீர்கள். ஒவொன்றாய்ப் பார்ப்போம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தான்...  உங்கள் வருகைக்கும், ✍️ கருத்திற்கும்.. நன்றி.  :)

Link to comment
Share on other sites

40 minutes ago, Kapithan said:

நான் கொப்பணிக்கல்ஸ் தொடர்பாக வாதாடவில்லை. ஆனால் தMழர்களின் மேம்பட்ட அறிவியல் தொடர்பில் ஆதாரங்கள் நிரூபிக்கப்பட வேண்டும் என்கிறேன். 🙂

நீங்கள் கூறும் நவக்கிரகங்கள் பாம்பு விழுங்குதல் போன்ற கதைகள் எமக்கு வேண்டுமானால் புரிந்துகொள்ளளவோ, வேண்டுமானால் எம்மைத் திருப்திப்படுத்தவவோ உதவக்கூடும். 👍

ஆனால் எனது பிளளைகள் ""நீங்கள் கூறுவதெல்லாம் சரியப்பா. ஆனால் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகள் என்று நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே"" என்று கேட்டால் என்னிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் விடயம் 🤥

 

தொல்பொருள் ஆய்வு என்று ஒன்று உங்களுக்கு தெரியும் என்று எடுத்துக்கொள்கிறேன்.

தொல்பொருள்களில் "சொல்பொருள்" என்று வகை ஒன்று இருக்குது தெரியுமா? அதுதான் ஆதாரம்.

உதாரணமாக GRAVITY என்பதற்கு எந்த மொழியிலும் பொருளில்லை, தமிழைத் தவிர.

கரவு எனும் தமிழ் மூலத்திலிருந்தே கிரவ் என்று திரிபடைந்தது. 

"சொல்பொருள்" - இது பற்றி எனது வீடியோவிலே பார்த்திருக்கிறீர்கள். பிடித்திருக்கு என்றும் ( பொய் ) சொல்லியிருக்கிறீர்கள்.

இன்னுமொன்று சின்ன உதாரணம்: Wootz steel என்று Wikipedia வில் தேடிப்பாருங்கள்.

""நீங்கள் கூறுவதெல்லாம் சரியப்பா. ஆனால் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகள் என்று நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே"" என்று கேட்டால் என்னிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் விடயம்.

உங்களிடம் பதில் இல்லாததற்காக பதிலே இல்லையென்றாகிவிடுமா என்னையா கதை இது.

உங்களுக்கு Quantum Theory என்று ஒன்று தெரியாவிட்டால் அப்படியொன்று இல்லையென்றாகிவிடுமா?

அது உங்களது அறிவு சார்ந்த பிரச்சனை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அகத்தான் said:

Cell போனைக் காதுக்குப் பக்கத்தில் வைத்திருந்தால் மூளையைப் பாதிக்கும், இதுவும் அறிவியல்தான்.

அகத்தான்,

உலகத்தில் mobile phone வைத்திருப்பவர்கள் அநேகமாக எல்லோரும் காதுக்குப் பக்கத்தில் வைத்துத்தான் தொலைபேசுவார்கள். அவர்களில் எத்தனை சதவிகிதம் மூளை பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அறிவியல் தரவு இருந்தால் தாருங்கள். யூரியூப் வீடியோ வேண்டாம்.

மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது pseudosciences பற்றியும் யாழில் ஒரு திரி திறந்து எழுதுங்கள்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

அகத்தான்,

இந்த யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அறிவோடு என்னால் வாதாட முடியாது!

"அன்ரனாவுக்குப் பக்கத்தில் நின்றால் ரிவியில் படம் ஆடும், எனவே கிரகம் மாறினால் எங்கள் உடலும் மனமும் மாறும்" என்கிற reasoning ஐ எதிர்த்து விவாதிக்கும் அளவுக்கு நான் படிக்கவில்லை! 😎 

 

1 hour ago, tulpen said:

 

கிரகங்களை கண்டு பிடித்தது தமிழ் முன்னோர் அறிவியல் என்று கதை விட்டிருந்தீர்கள். அதை கண்டு பிடித்த அந்த தமிழர் பெயர் என்ன? அவர் எந்த காலப்பகுதியில் வாழ்ந்தார்? ஒருவரா அல்லது பலரா? அவரகள் எந்த காலபபகுதியில் வாழ்ந்தார்கள்? 

 

கிரகங்களின் பெயரே தமிழ் தானய்யா.

Example:

Orion: ஓரையன் என்பதே orion என்று மாறியது. இதற்கு அங்கு கருத்தே இல்லையே, தேடிப்பாருங்கள். தமிழில் ஓரை என்பது ஒரு நட்சத் திரம் அந்த நட்சத் திரங்களின் கூட் டம் ஓரையன்.

நீங்கள்  உண்மையைத் தேடுகிற ஆளெண்டால், குழப்பமடையாத உணர்ச்சிவசப்படாதவராயிருக்க வேண்டும்.

உங்களுக்கு மேலும் விளக்கம் தேவையெண்டால் எனது விடியோவைப் பாருங்கள், பார்த்து விமர்சனம் செய்யுங்கள். இதில ஒருவர் மேல் ஒருவர் கோபப்பட என்ன இருக்கு.

ஆத்திரகானுக்கு புத்தி மட்டு - பழமொழி.

Link to comment
Share on other sites

16 minutes ago, கிருபன் said:

அகத்தான்,

உலகத்தில் mobile phone வைத்திருப்பவர்கள் அநேகமாக எல்லோரும் காதுக்குப் பக்கத்தில் வைத்துத்தான் தொலைபேசுவார்கள். அவர்களில் எத்தனை சதவிகிதம் மூளை பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அறிவியல் தரவு இருந்தால் தாருங்கள். யூரியூப் வீடியோ வேண்டாம்.

மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது pseudosciences பற்றியும் யாழில் ஒரு திரி திறந்து எழுதுங்கள்.

 

 

cell phone பாதிப்பு என்பது medical community எல்லாருக்கும் தெரிந்த பழைய விடயம்.

https://draxe.com/health/cell-phone-health/

 

2017-11-11 · The World Health Organization listed cell phone radiation as a 2B carcinogen in 2011. That classification means cell phone radiation is “possibly carcinogenic to humans.” (4) Medical literature does suggest that beginning cell phone use during teenage years results in a four-to-five times higher risk of a brain cancer diagnosis.

Brain Cancer

Cell phones emit non-ionizing radiation, which are radio waves known as a type of electromagnetic radiation. We do know that human tissue closest to cell phone antennas absorb some of this energy.

Studies linking cell phones to cancer, particularly brain cancer, are mixed. But several recent well-designed studies suggests cell phone use could slightly increase the risk of certain types of brain cancers.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, அகத்தான் said:

உதாரணமாக GRAVITY என்பதற்கு எந்த மொழியிலும் பொருளில்லை, தமிழைத் தவிர.

கரவு எனும் தமிழ் மூலத்திலிருந்தே கிரவ் என்று திரிபடைந்தது. 

 

மனசில கரவு உள்ள ஆள் என்றுதான் நமக்குத் தெரிந்தது. இப்படி gravity க்கே மூலம் கரவு என்ற தமிழ்ச்சொல் என்று தெரியாது. Gravity என்றாலே எப்பவும் குழப்பம். அது விசையா அல்லது விசையைத் தூண்டும் ஒன்றா, பொருளா அல்லது அலையா என்ற குழப்பம் தீரவில்லை. தீர்த்து வைத்தால் உபகாரமாக இருக்கும்.

அத்தோடு இந்தப் பிரபஞ்சத்தில் 85% dark matter ( தமிழ் தெரியாது) என்று சொல்லுகின்றார்களே. அது முதலில் உண்மையா? பிரபஞ்சமே அளவிடமுடியாத ஒன்று என்றால்  எப்படி 85% என்று அறுதியாகச் சொல்லமுடியும்? இதைப் பற்றி நம் முன்னோர்கள் கணித்தவை என்ன? 

இவை பற்றியும் எழுதுங்கள்.

கம்பனின் கம்பராமாயணப் படல் ஒன்றை அண்மையில் படித்தேன்.  அதன் தரிசனம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. இந்தத் திரியைப் படித்தபோது நினைவுக்கு வந்தது.

 

“ஒன்றே என்னின் ஒன்றே ஆம்

பல என்று உரைக்கின் பலவே ஆம்

அன்றே என்னின் அன்றே ஆம்

ஆமே என்னின் ஆமே ஆம்

இன்றே என்னின் இன்றே ஆம்

உளது என்று உரைக்கின் உளதே ஆம்

நன்றே நம்பி குடிவாழ்க்கை

நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அகத்தான் said:

2017-11-11 · The World Health Organization listed cell phone radiation as a 2B carcinogen in 2011. That classification means cell phone radiation is “possibly carcinogenic to humans.” (4) Medical literature does suggest that beginning cell phone use during teenage years results in a four-to-five times higher risk of a brain cancer diagnosis.

நல்லது. நான் பிரித்தானியாவில் இருக்கின்றேன். இங்குள்ள தேசிய சுகாதார சேவைகள் நிறுவனம் தெளிவாக சொல்லுவது பின்வருமாறு உள்ளது.

 

https://www.nhs.uk/news/cancer/mobile-phones-a-possible-carcinogen/

  • Group 2b: an agent is ‘possibly carcinogenic to humans’. There is limited evidence in humans that it causes cancer and the evidence from animal studies is ‘less than sufficient’. This is the new classification for mobile phones. Cancer Research UK consider Group 2B to mean that, ‘there is some evidence for a risk but it’s not that convincing’.

 

மூளையைப் பாதிக்கும் என்று அறிவியல் திட்டவட்டமாகச் சொன்னால் இப்படி classify பண்ணியிருக்கமாட்டார்கள். 

 

 

16 minutes ago, அகத்தான் said:

cell phone பாதிப்பு என்பது medical community எல்லாருக்கும் தெரிந்த பழைய விடயம்.

https://draxe.com/health/cell-phone-health/

Dr Axe இயற்கை வைத்தியம், உணவு என்று பிரபலமாக உள்ளவர் என்று கூகிள் ஆண்டவர் சொல்லுகின்றார். அவருக்கு அப்படிச் சொல்லவேண்டிய தேவையைப் புரிந்துகொள்ளமுடிகின்றது.

Link to comment
Share on other sites

Just now, கிருபன் said:

மனசில கரவு உள்ள ஆள் என்றுதான் நமக்குத் தெரிந்தது. இப்படி gravity க்கே மூலம் கரவு என்ற தமிழ்ச்சொல் என்று தெரியாது. Gravity என்றாலே எப்பவும் குழப்பம். அது விசையா அல்லது விசையைத் தூண்டும் ஒன்றா, பொருளா அல்லது அலையா என்ற குழப்பம் தீரவில்லை. தீர்த்து வைத்தால் உபகாரமாக இருக்கும்.

அத்தோடு இந்தப் பிரபஞ்சத்தில் 85% dark matter ( தமிழ் தெரியாது) என்று சொல்லுகின்றார்களே. அது முதலில் உண்மையா? பிரபஞ்சமே அளவிடமுடியாத ஒன்று என்றால்  எப்படி 85% என்று அறுதியாகச் சொல்லமுடியும்? இதைப் பற்றி நம் முன்னோர்கள் கணித்தவை என்ன? 

இவை பற்றியும் எழுதுங்கள்.

கம்பனின் கம்பராமாயணப் படல் ஒன்றை அண்மையில் படித்தேன்.  அதன் தரிசனம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. இந்தத் திரியைப் படித்தபோது நினைவுக்கு வந்தது.

 

“ஒன்றே என்னின் ஒன்றே ஆம்

பல என்று உரைக்கின் பலவே ஆம்

அன்றே என்னின் அன்றே ஆம்

ஆமே என்னின் ஆமே ஆம்

இன்றே என்னின் இன்றே ஆம்

உளது என்று உரைக்கின் உளதே ஆம்

நன்றே நம்பி குடிவாழ்க்கை

நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!”

நீங்கள் எனது வீடியோ பார்க்கிறீங்களா, தயவு செய்து பார்த்து கருத் து கூறவும். அங்கு விளக்கமான பதில் உள்ளது.

"அத்தோடு இந்தப் பிரபஞ்சத்தில் 85% dark matter ( தமிழ் தெரியாது) என்று சொல்லுகின்றார்களே. அது முதலில் உண்மையா? பிரபஞ்சமே அளவிடமுடியாத ஒன்று என்றால்  எப்படி 85% என்று அறுதியாகச் சொல்லமுடியும்? இதைப் பற்றி நம் முன்னோர்கள் கணித்தவை என்ன? "

Physicistஏ room போட்டு அது பற்றி ஆராய்ந்து கொண்திருக்கிறார்கள். உண்மையா என்று கேட்பது என்ன நியாயம்.

 

மனசில கரவு: கரவு என்பது ஒரு  set ( set theory).இடத்துக்கேற்ப கருத்து எடுக்கும்.

basic கருத்து:  கர - கொள் என்பது. இங்கு மனதில் கொண்டது.இது ஒரு set என்றால் மனதில் கொண்ட வேறு வேறு விடயங்கள் subset. அதில் ஒன்று தான் மனதில் கரவு, இதிலும் இன்னும் subset இருக்கு, நல் லது, பொல்லாதது என்று.ஆனால் நாம் பொல்லாததை மட்டுமே கரவு என்று வைத்துக்கொண்டோம்.

Link to comment
Share on other sites

அகத்தான் 

முன்னோர்கள் கணித்தவை என்று சொல்லுகிறீர்களே? யார் அந்த  முன்னோர்கள். ஒருவரா? அல்லது ஒரு கும்பலா? அந்த கும்பலில் எத்தனை பேர் இருப்பார்கள்? எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்கள்?  அதற்கான ஆதாரம் என்ன? அவர்களின் வழிதோன்றல்கள் யார்?

 

Link to comment
Share on other sites

4 minutes ago, கிருபன் said:

 

மூளையைப் பாதிக்கும் என்று அறிவியல் திட்டவட்டமாகச் சொன்னால் இப்படி classify பண்ணியிருக்கமாட்டார்கள். 

 

திட்ட வட் டமாக இப்போ சொல்ல முடியாது. ஏனென்றால் போன் வந்து இன்னும் ஒரு தலை முறையாகவில்லை. காலம் எடுக்கும் ஆய்வு செய்து முடிய. Radiation புற்று நோயை தீவிரப்படுத்தும் என்பது வெளிப்படை. அது சிறியதோ பெரியதோ என்பதல்ல முக்கியம்.

சிகரெட்டுக்கும் இப் படித் தான் சொன் னவர்கள். ஆய்வு செய்ய 50+ வருடங்கள் பொறுத்திருக்க வேண்டியிருந்தது. அதுக்கு முதலே புற்று நோய் வந்து விட்டது. 

6 minutes ago, tulpen said:

அகத்தான் 

முன்னோர்கள் கணித்தவை என்று சொல்லுகிறீர்களே? யார் அந்த  முன்னோர்கள். ஒருவரா? அல்லது ஒரு கும்பலா? அந்த கும்பலில் எத்தனை பேர் இருப்பார்கள்? எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்கள்?  அதற்கான ஆதாரம் என்ன? அவர்களின் வழிதோன்றல்கள் யார்?

 

முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் எழுதுங்கள். கிரகம், தோசம் பற்றிய எனது விளக்கத்துக்கு.

Link to comment
Share on other sites

4 minutes ago, அகத்தான் said:

 

முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் எழுதுங்கள். கிரகம், தோசம் பற்றிய எனது விளக்கத்துக்கு.

எந்த விளக்கத்தைப்பற்றி? அந்த லூசுத்தனமான விளக்கத்தை பற்றியா? போங்க சார்.

தூக்கம் வருது இனி உங்களோட விளையாட ஏலாது. 

Link to comment
Share on other sites

7 minutes ago, tulpen said:

எந்த விளக்கத்தைப்பற்றி? அந்த லூசுத்தனமான விளக்கத்தை பற்றியா? போங்க சார்.

தூக்கம் வருது இனி உங்களோட விளையாட ஏலாது. 

அப்ப நீங்கள் ஒரு serius ஆன ஆள் இல்ல. சும்மா இவ்வளவு நாளும் ஆக்களப் பேக்காட்டிக்கொண்டு பொழுது போக்க்காக எழுதியிருக்கிறீர்கள்.

Phsysics விடயம் என்று வரும் போது வாலைச் சுருட்டிக் கொண்டீர்கள். விளங்காட் டி லூசாகத் தானிருக்கும். ஆழமறியமல் ஏனய்யா கால விட்டீங்கள்.

வடிவேல் பகிடி ஏதாவது யாரும் எழுதுவார்கள், நின்று விமர்சியுங்கள். வடிவேலைக் கொச்சைப் படுத் தாமல்.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

அகத்தான்...  உங்கள் வருகைக்கும், ✍️ கருத்திற்கும்.. நன்றி.  :)

நன்றி நன்றி தமிழ் சிறி.

41 minutes ago, tulpen said:

அகத்தான் 

முன்னோர்கள் கணித்தவை என்று சொல்லுகிறீர்களே? யார் அந்த  முன்னோர்கள். ஒருவரா? அல்லது ஒரு கும்பலா? அந்த கும்பலில் எத்தனை பேர் இருப்பார்கள்? எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்கள்?  அதற்கான ஆதாரம் என்ன? அவர்களின் வழிதோன்றல்கள் யார்?

 

Gravity என்பது தமிழிலிருந்து வந்த சொல்லே என்பதே ஆதாரம்!

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

 

அத்தோடு இந்தப் பிரபஞ்சத்தில் 85% dark matter ( தமிழ் தெரியாது) என்று சொல்லுகின்றார்களே. அது முதலில் உண்மையா? பிரபஞ்சமே அளவிடமுடியாத ஒன்று என்றால்  எப்படி 85% என்று அறுதியாகச் சொல்லமுடியும்? இதைப் பற்றி நம் முன்னோர்கள் கணித்தவை என்ன? 

 

dark matter என்றால் ஒளியை தெறிக்காத, அல்லது ஒளியைத் தொலைத்த, அல்லது நமக்கு இன்னும் ஒளியை அனுப்பாத சடப்பொருள்கள்தான். இது மிகச் சிறிய nutrino ஆகவோ, அல்லது மிகத் தொலவிலிருக்கும் galaxy யாகவோ இருக்கலாம்.

அவர்களுக்கு தெரிந்த பிரபஞ்சத்தில் 85%. இதெல்லாம் ஒரு approximation தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அகத்தான் said:

தொல்பொருள் ஆய்வு என்று ஒன்று உங்களுக்கு தெரியும் என்று எடுத்துக்கொள்கிறேன்.

தொல்பொருள்களில் "சொல்பொருள்" என்று வகை ஒன்று இருக்குது தெரியுமா? அதுதான் ஆதாரம்.

உதாரணமாக GRAVITY என்பதற்கு எந்த மொழியிலும் பொருளில்லை, தமிழைத் தவிர.

கரவு எனும் தமிழ் மூலத்திலிருந்தே கிரவ் என்று திரிபடைந்தது. 

"சொல்பொருள்" - இது பற்றி எனது வீடியோவிலே பார்த்திருக்கிறீர்கள். பிடித்திருக்கு என்றும் ( பொய் ) சொல்லியிருக்கிறீர்கள்.

இன்னுமொன்று சின்ன உதாரணம்: Wootz steel என்று Wikipedia வில் தேடிப்பாருங்கள்.

""நீங்கள் கூறுவதெல்லாம் சரியப்பா. ஆனால் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகள் என்று நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே"" என்று கேட்டால் என்னிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் விடயம்.

உங்களிடம் பதில் இல்லாததற்காக பதிலே இல்லையென்றாகிவிடுமா என்னையா கதை இது.

உங்களுக்கு Quantum Theory என்று ஒன்று தெரியாவிட்டால் அப்படியொன்று இல்லையென்றாகிவிடுமா?

அது உங்களது அறிவு சார்ந்த பிரச்சனை.

 

அகத்தான்,

சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்

1)  ""அறிவியலின் முன்னோடிகளாக தமிழர் இருந்திருக்கின்றனர்"" என்று நிரூபிக்கப்பட்டால் அதில் மிகவும் பெருமையடைவேன். அதில் இரண்டாவது கேள்விக்கு இடமில்லை. இங்குள்ள மிக மிகப் பெரும்பாலானோரின் நிலைப்பாடும் இதுதான் என்பது எனது பூரண நம்பிக்கை.

2) எங்கள் நம்பிக்கைகளும் விருப்பங்களும் விருப்பங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மட்டுமே இருக்க முடியாது. எமது நம்பிக்கைகள் சரியானதுதான் என நிறுவப்பட வேண்டும். 

3) நிறுவப்படுத்துவோர் அந்தந்தத் துறையில் துறைசார் நிபுணத்துவமுடையவர்களாக இருக்க வேண்டும். அது மட்டும் போதாது. அவர்களின் நிறுவுதல்கள் துறை சார்ந்தவர்களால் அலசி ஆராயப்பட்டு, விமர்சிக்கப்பட்டு இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இதுதான் விஞ்ஞான ரீதியில், உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை.

4) மேற்கூறியவற்றின் அர்த்தம், நான் தமிழர்கள் அறிவியல் முன்னோடிகள் என்கின்ற விடயத்தில் ஐயம் கொண்டவன் என்பதல்ல. எமது முன்னோர் அறிவியலின் முன்னோடிகள் என்பதை நான் நம்புவதுடன் நின்றுவிடமுடியாது அதனை பிறருக்கும் என்னால் கூறப்படுவதற்கு விஞ்ஞான ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட. ஆதாரங்கள் வேண்டும் என்பது மட்டுமே.  

5) விக்கிபீடியாவிலுள்ள விடயங்கள் முளுவதனையும் அப்படியே ஆதாரங்களாகக் காட்ட முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும். இதில் வாதிட எதுமில்லை.

குறிப்பு; நீங்கள் மிகவும் நேரமெடுத்து, கரிசனையுடன் பதிலிறுக்கிறீர்கள். பாராட்டுக்கள். 👏👏

 

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

 Gravity என்றாலே எப்பவும் குழப்பம். அது விசையா அல்லது விசையைத் தூண்டும் ஒன்றா, பொருளா அல்லது அலையா என்ற குழப்பம் தீரவில்லை. தீர்த்து வைத்தால் உபகாரமாக இருக்கும்.

 

Gravity என்பது விசையைத் தூண்டும் ஒன்று.  

பொருளா அல்லது அலையா: பொருளும் இல்லை அலையும் இல்லை.

Gravity ஐ மற்ற மூன்று fundamental force களுடன் ஒன்றாக்குவதிலே தற்போதய விஞ்ஞான முயற்சிகள் நடைபெறுகின்றன.

 

Link to comment
Share on other sites

12 minutes ago, Kapithan said:

அகத்தான்,

சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்

1)  ""அறிவியலின் முன்னோடிகளாக தமிழர் இருந்திருக்கின்றனர்"" என்று நிரூபிக்கப்பட்டால் அதில் மிகவும் பெருமையடைவேன். அதில் இரண்டாவது கேள்விக்கு இடமில்லை. இங்குள்ள மிக மிகப் பெரும்பாலானோரின் நிலைப்பாடும் இதுதான் என்பது எனது பூரண நம்பிக்கை.

2) எங்கள் நம்பிக்கைகளும் விருப்பங்களும் விருப்பங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மட்டுமே இருக்க முடியாது. எமது நம்பிக்கைகள் சரியானதுதான் என நிறுவப்பட வேண்டும். 

3) நிறுவப்படுத்துவோர் அந்தந்தத் துறையில் துறைசார் நிபுணத்துவமுடையவர்களாக இருக்க வேண்டும். அது மட்டும் போதாது. அவர்களின் நிறுவுதல்கள் துறை சார்ந்தவர்களால் அலசி ஆராயப்பட்டு, விமர்சிக்கப்பட்டு இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இதுதான் விஞ்ஞான ரீதியில், உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை.

4) மேற்கூறியவற்றின் அர்த்தம், நான் தமிழர்கள் அறிவியல் முன்னோடிகள் என்கின்ற விடயத்தில் ஐயம் கொண்டவன் என்பதல்ல. எமது முன்னோர் அறிவியலின் முன்னோடிகள் என்பதை நான் நம்புவதுடன் நின்றுவிடமுடியாது அதனை பிறருக்கும் என்னால் கூறப்படுவதற்கு விஞ்ஞான ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட. ஆதாரங்கள் வேண்டும் என்பது மட்டுமே.  

5) விக்கிபீடியாவிலுள்ள விடயங்கள் முளுவதனையும் அப்படியே ஆதாரங்களாகக் காட்ட முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும். இதில் வாதிட எதுமில்லை.

குறிப்பு; நீங்கள் மிகவும் நேரமெடுத்து, கரிசனையுடன் பதிலிறுக்கிறீர்கள். பாராட்டுக்கள். 👏👏

 

1.நாம் நிருபித்தால் யார் ஏற்றுக் கொள்வார். Boson, balckhole க்கு நடந்த கதையை ஆரம்பத் திலே சொல்லியிருந்தேன். நடுநிலையான உலக அமைப்பு ஏதும் உள்ளதா. உலகில் உள்ளது சிறிலங்கா வின் large scale அமைப்புகளே.

2. யார் செய்வது, ஏதாவது பொது அமைப்பு நம்மிடம் இருக்குதா? இருக்குமா?

3. உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை?: உலகம் நடுநிலையானதா?  நம்ம போராட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்களே. இந்த நிலைக்கு வர இன் னும் 1000 வருடங்கள் போகவேணும். சிவா ஐயாத் துரையின் email க்கு என்ன நடந்தது

4.ஆதாரங்கள் வேண்டும் என்பது மட்டுமே: ஆதாரங்கள் இருக்கு.  உதாரணத்துக்கு மொழி தொடர்பான ஆய்வுகள் நிறைய இருக்கு. யார் ஏற்றுக் கொள்வார். நில, கடல் ஆய்வு செய்யும் பலம் நம்மிடமுள்ளதா?

5.விக்கிபீடியாவில் உள்ள எல்லாம் தவறு என்றில்லை, நிறைய information இருக்கு. அதை எடுத்து ஆய்வு செய்யலாம்.

எங்கள் நம்பிக்கைகளும் விருப்பங்களும் விருப்பங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மட்டுமே இருக்கும். எப்பவும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.