Jump to content

கலாச்சாரம் என்ற பெயரில் அடி முட்டாள்தனம்


Recommended Posts

 

அப்ப்பா….., நல்ல மீன் பட்டிருக்கு வலையில. ஒவ்வொன்டாக் கழட்ட வேணும்.

முதலில், விடயத்தை சொல்பவரைத் தாக்காமல், சொல்லப்படும் விடயத்தைத் தாக்க முயற்சி செய்வோம். இதைத் தான் சொல்வது: மாட் டைப் பற்றி எழுதச்சொன்னால், எழுத வராட்டி, மாட்டைக் கொண்டுபோய் மரத்தில் கட்டிப்போட்டு, மரத்தைப் பற் றி எழுதுவது என்று.

தமிழர் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று பேர் குத்தப்பட்டதை ஏற்றுக் கொள்வோமா? நியாயமா? மனம் பதைக்குதில்லையா? அப்படித்தான் இருக்குது, நான் மூடப்பழக்கத்தை ஆதரித்து வக்காலத்து வாங்குகிறேன் என்று முத்திரை குத்துவது. நான் என்ன செய்யலாம், அது உங்கள் பிரச்சினை, பானையிலுள்ளது தானே அகப்பையில் வரும்.

வரலாற்றில் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு சமூகம் சிறந்து விளங்கும். ஒரு சமூகத் தின் அறிவிலும் அநுபவத் திலுமிருந்தே இன்னொரு சமூகம் கட் டியெழுப்பப் படுகிறது.தற்போது ஐரோப்பா சிறந்து நிற்கிறது. அதை நான் குறை கூறியதாக, உங்கள் உணர்ச்சி வசப்பட்ட வசதிக்கேற்ப, ஏன் எடுத்தீர்கள். நாளைக்கு வேறொரு சமூகம் முன்னிற்கும்.

ஒரு விடயத்தை முன்வைக்கும் போது உங்களையோ உங்களது அறிவையோ தாக்குவதாக ஏன் நினைக் கிறீர்கள். உணர்ச்சிவசப்பட்டால் விடயம் வராது ஆத்திரம் தான் ஐயா வரும். அதன் வெளிப்பாடே “Stupidness” எனும் வார்த்தைகள்.

Kapithan:

"""அறிவியலில் இவ்வளவு முன்னேற்றம் கண்ட தமிழர், எவ்வாறு எல்லாவற்றையும் இழந்து தாழ்வுற்றார்கள். அதற்கு என்ன காரணம் ?"""

இலங்கையில் தமிழர்  கல்வி, கலாச்சாரம், அபிவிருத்தி பின்னடைந்ததற்கு என்ன காரணம். தினமுந்தான் யாழில் செய்தி வருகிறதே கலாச்சாரச் சீரழிவு என்று. எதனால்? ஆளப்படுகிறோம் என்பதே காரணம். அவ்வளவு பேரும் கம்பி வேலிக்குள் நின்று அழுததை மறந்து விட் டீர்களா?  அத்தனை சர்வதேசமும் UN உம் இருந்தே இந்தக் கதியென்றால் 2000, 3000 வருசத்துக்கு முன் எப்படியிருந்திருக்கும். காதுக்குள்ள ஈயம் ஊற் றுவது எல்லாம் ஜுஜுபி. ஒரு பத்து வருசத்துக்கே இந்த சீரழிவு என்றால், ஒரு மூவாயிரம் வருட சீரழிவை எண்ணிப்பாருங்கள். நித் திரை கொள்பவனைத்தான் ஐயா எழுப்பலாம்.

“நவக் கிரகங்கள், பாம்பு விழுங்குதல் போன்ற கதைகளுக்கு விளக்கங்கள் கூறி எம்மை நாமே பாராட்டலாமே தவிர எமது பிள்ளைகளுக்கு விஞ்ஞானரீதியிலான விளக்கமாக படிப்பிக்கவோ விளங்கப்படுத்தவோ முடியாது.”

கபிதன், இதுக்குப் பின்னாலுள்ள Physics பற்றி ஏன் விவாதிக்கவில்லை. மூடப் பழக்கமென்று எள்ளி நகையாடாமல் அதற்குப் பின்னாலுள்ள விஞ்ஞானரீதியிலான விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் என்றுதான் சொன்னேன், தவிர அதைப் பாடமாகப் புகட்டச் சொல்லவில்லை.

“தமிழர் அறிவியல் தொடர்பாக துல்பன் எதனுடனும் (இந்தத் திரியில்)  முரண்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.

- முரண்பட்டதாக சொன்னேனா. மூடப்பழக்கம் என்று சொன்னதைத்தான் விவாதித்தேன்.

 

இணையவன்:  நீங்கள் குறிப்பிட்ட தமிழரின் கண்டுபிடிப்புகள் அனைவரும் அறிந்ததுதான்”.

Tulpen: “ அகத்தான், நீங்கள் எதுவும் புதுமையாக கூறிவிடவில்லை.”

ஒரு விடயத்தை முன்வைக்கும் போது உங்களையோ உங்களது அறிவையோ தாக்குவதாக ஏன் நினைக் கிறீர்கள். உங்களுக்கு இது தெரியாது என்றோ, புதிய விடயம் என்றோ யார் சொன்னார். இது psychological பிரச்சினையா?

 

Tulpen: “ பார்பனர்களின்  நவகிரகங்கள் வழிபாட்டுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்”

நவக்கிரகங்கள் தமிழரின் அறிவியல், கதை கட்டியது வந்தேறிகள். நான் சொன்னது அதிலிருக்கும் தமிழரின் அறிவியலைப்பற்றி.

Tulpen: “இது உங்களுக்கே முரண்பாடாக தெரியவில்லையா?” - இதிலே நான் எங்கே முரண்பட் டேன். அதிலிருக்கும் அறிவியலைப்பற்றி ஏன் விவாதிக்கவில்லை. மாட் டைப் பற்றி எழுதாமல் ஏன் மரத்தைப் பற்றி எழுதுகிறீர்கள்.

 

Tulpen: “இன்றைய அறிவியல் வளர்ச்சியடைந்த காலத்தில் நவகிரகங்கள், கிரகதோஷம் என்ற அறிவுக்கு ஒவ்வாத வழிபாடுகள் மூட நம்பிக்கைகளே”

அறிவியல் என்றால் என்ன என்று விளங்கி வைத்திருக்கிறீர்கள். ஒரு விடயத்தை அறிவதுதானே அறிவியல். வழிபாடு என்றால் அதன் வழி செல்லுதல்.

Tulpen: “வளர்ந்து வரும் புதிய அறிவியல் காலத்தின் நிஜத்தை ஏற்றுக்கொள்வதால் நாம் ஒன்றும் தாழ்ந்து போய்விடப்போவதில்லை.” - இதை யார் மறுத் தார்கள்.

Tulpen: “உங்களை போல் பேசுவர்கள் எல்லோருமே எம் முன்னோர்கள் தான் உலகில் மிக சிறந்தவர்கள், உலகில் அத்தனை அறிவியலும் அவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தது என்பது போல் கதை விடுவது.” ---

இது உங்கள் கற்பனை. ஏற்கெனவே உங்கள் மனதில் புரையோடிப் போன ஒரு காயம், இதை எல்லா இடத்திலும் எடுத்து விடுவது.

 

“பின்னர் அப்படியான வல்லமை பெற்ற எமது முன்னோர்கள் எப்படி வந்த அந்நியருக்கெல்லாம் அடிமைப்பட்டார்கள் என்று கேட்டால் அதற்கு சரியான பதிலை கொடுப்பதில்லை.”

- தற்போது இலங்கையில் தமிழின், தமிழரின் நிலை எப்படியிருக்குது.  முப்பது வருசத்திலே இந்த அழிவு என்றால்,  2000, 3000 வருசத்தை எண் ணிப் பாருங்கள் கைப்புண்ணுக்கு கண்ணாடி கேட்கிறிர்களே.

 

Tulpen: நிபுணத்துவம் இல்லாத நானோ நீங்களோ அதை செய்ய முடியாது என்பது எனது கருத்து.

உங்களுக்கு நிபுணத்துவம் இல்லை என்று சொல்ல உங்களுக்கு சகல தகுதியும் உரிமையும் இருக்கு. எனக்கு இல்லை என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்.

 

Tulpen: “வடிவேலு பாணியில் கூட ஒருவர் இதற்கு யாழ்களத்தில் பதிலளித்திருந்தார்”.

நீங்கள் விடயத்தை எழுதுபவரைப் பற்றி எழுதுகிறீர்கள். விடயத்தைப்பற்றி மட்டுமே எழுத முயற்சி செய்யுங்கள்.  விடயத் திலிருந்து திசை திருப்பும் முயற்சி.

 

Tulpen: “வீண் பழம் பெருமை பேசுவதால் அதுவும் எமக்குள் மட்டும் இதைப் பேசி சுய இன்பம் அடைவதால் தமிழருக்கு  ஆகப்போவது ஒன்றும் இல்லை”.

மூடப் பழக்கம் என்று எங்களை நாங்களே தாழ்த்தவேண்டாம் என்றே சொன்னேன். பெருமைப்படுவது உங்கள் பிரச்சினை.

 

இணையவன்: “வான சாஸ்திரத்தையும் சாத்திரத்தையும் ஒன்றாகக் குழப்பியுள்ளீர்கள்”.

Justin: “Astrology ஐயும் Astronomy ஐயும் கலந்து கூழாக்கி…”

“குழப்பியுள்ளீர்கள், கூழாக்கி : நுனிப்புல் மேயாதீர்கள், Astrology இலிருந்துதான் Astronomy கிளைவிட்டது, தேடி அறிந்து கொள்ளுங்கள். அறிந்துபின் எனக்கு சொல்லுங்கள்.

 

நான் சொன்ன விடயம் இதுதான். “மாட்டைப் பற்றி” மட்டும் விவாதியுங்கள். இதிலுள்ள பிழையைச் சுட்டிக் காட்டுங்கள்

நவகிரகங்கள்:

கிரகம்: கர அகம் = கரகம் = கிரகம். அதாவது, தன்னை நோக்கி இழுத்து கர அகப்படுத்த முயலும் எதுவாகிலும் அது ஒரு கிரகம். இங்கே gravity பற்றி பேசப்படுகிறது. நம் முன்னோர் அன்றே இது பற்றி அறிந்திருக்கிறார்கள், இதை அறியாதவர்களுக்கே இதை எழுதினேன்.

Grakam:Anything that atracts towards itself. The word “gravity“ was derived from “gra” . கர அகப்படுத்தல்.

கோயிலுள்ள நவக் கிரகங்கள் ஒரு musium மாதிரி. அங்கு அறிவு சேர்த்து வைக்கப்பட்டிருக்குது. Smithsonian Institution இல் சேர்த்து வைக்கப்பட்டிருந்தால் அதைப் போய் பார்த்து ஆகா, ஓகோ என்போம்.

 

கிரகதோஷம்:

தோசம் என்பது தோய்ந்து இருக்கும் தன்மை. ஆடை தோய்த்தல், ஆளே தோய்தல் எல்லாம் தோசமே.

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ gravitational field க்குள்ள நாமெல்லாம் தோய்ந்து தானிருக்கிறோம். ஒவ்வொரு கிரகமும் சுற்றிவரும் போது எங்களைச் சூழ்ந்துள்ள gravitational field மட்டுமல்ல, electromagnetic field மின்காந்தப் புலமும் மாறும்.

இந்த மாற்றம் எங்களது இயக்கத்தில், சிந்தனையில் சிறிதாகவோ பெரிதாகவோ மாற்றத்தையுண்டுபண்ணும். உதாணத்துக்கு TV antenna க்குப் பக்கத்திலை போய் நில்லுங்கள் திரையில் படத்தில் அதிர்வு ஏற்படும்.

Cell போனைக் காதுக்குப் பக்கத்தில் வைத்திருந்தால் மூளையைப் பாதிக்கும், இதுவும் அறிவியல்தான்.

Simply, இதுதான் கிரக தோசம். இதைச் சொல்வது மூடப்பழக்கமா? அறிவியலா?

ஐயாமாரேதில்” இருந்தால் இதுபற்றி விவாதியுங்கள்.

இப்ப திரும்ப ஒருக்கால் எனது பதிவை வாசித்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இப்படியான பல்லவிகள் இப்போது இந்திய பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களினால் வலைதளங்களில் எழுதபடுவதை காணலாம். அர்த்தமற்ற கைவிடபடி வேண்டியவைகள புகழ்ந்து அறிவியல் பெயின்ற் அடித்து பாதுகாப்பதில் இலங்கையில்  உள்ளவர்களை விட முன்னேறிய மக்களோடு வெளிநாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் பலர் தான் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

wow,

gravity என்றால் என்ன என்று சொல்லுவீங்களா?

Link to comment
Share on other sites

16 hours ago, Kapithan said:

கொப்பநிக்கல்ஸ் தொடர்பாக எனக்கு பெரிய அளவு ஏதும் தெரியாது (நினைவில் இல்லை)

 

🤔🤔🤔

 

 

அப்ப, ஏனையா கால விட்டீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தான்,

இந்த யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அறிவோடு என்னால் வாதாட முடியாது!

"அன்ரனாவுக்குப் பக்கத்தில் நின்றால் ரிவியில் படம் ஆடும், எனவே கிரகம் மாறினால் எங்கள் உடலும் மனமும் மாறும்" என்கிற reasoning ஐ எதிர்த்து விவாதிக்கும் அளவுக்கு நான் படிக்கவில்லை! 😎 

Link to comment
Share on other sites

10 minutes ago, Justin said:

அகத்தான்,

இந்த யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அறிவோடு என்னால் வாதாட முடியாது!

 😎 

Astrology ஐயும் Astronomy ஐயும் கலந்து கூழாக்கி…" என்று சொன்னது யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து சேர்த்து வைத்திருக்கும் அறிவினாலா.

அப்போ, பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இங்கு இல்லையா.

3 minutes ago, அகத்தான் said:

Astrology ஐயும் Astronomy ஐயும் கலந்து கூழாக்கி…" என்று சொன்னது யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து சேர்த்து வைத்திருக்கும் அறிவினாலா.

அப்போ, பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இங்கு இல்லையா.

"Cell போனைக் காதுக்குப் பக்கத்தில் வைத்திருந்தால் மூளையைப் பாதிக்கும், இதுவும் அறிவியல்தான்".

யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில்  இதைக் காணவில்லையா. selective blindஆ நீங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அகத்தான் said:

 

அப்ப, ஏனையா கால விட்டீர்கள்.

 

நான் கொப்பணிக்கல்ஸ் தொடர்பாக வாதாடவில்லை. ஆனால் தMழர்களின் மேம்பட்ட அறிவியல் தொடர்பில் ஆதாரங்கள் நிரூபிக்கப்பட வேண்டும் என்கிறேன். 🙂

நீங்கள் கூறும் நவக்கிரகங்கள் பாம்பு விழுங்குதல் போன்ற கதைகள் எமக்கு வேண்டுமானால் புரிந்துகொள்ளளவோ, வேண்டுமானால் எம்மைத் திருப்திப்படுத்தவவோ உதவக்கூடும். 👍

ஆனால் எனது பிளளைகள் ""நீங்கள் கூறுவதெல்லாம் சரியப்பா. ஆனால் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகள் என்று நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே"" என்று கேட்டால் என்னிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் விடயம் 🤥

 

Link to comment
Share on other sites

கிரக தோசத்திற்கு ரிவி அன்ரனாவையும், போனையும் உதாரணம் காட்டினீர்கள். சரி அதெப்படி சனி தோசம் அல்லது செவ்வாய் தோசம் குறிப்பிட ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கு மட்டம் தேடிவந்து தாக்கி அவருக்கு பக்கத்தில் நிற்கும் வேறு திகதியில் பிறந்தவரை தாக்காமல் வேடிக்கை பார்க்கும்?

சுற்றி வரும் கிரகங்கள் மனிதரை தாக்குவது உங்கள் அறிவியல் என்றால் அது எப்படி இவருக்கு ஏழரை சனி என்று வகுத்து  வைத்த மனிதரை மட்டும் தேடி வந்து தாக்கும்? பக்கதில் நிற்கும் ஏழரைச்சனி இல்லாதவரை ஒன்றும் செய்வதில்லையே? ஏன்?

நீங்கள் கூறிய எலெக்ரோனிக் மின்காந்த அலைகள் ஒட்டு மொத்தமாக எல்லோர் மீதும் தாக்கத்தை செலுத்தவேண்டுமே அதெப்படி பிறந்த திகதி பார்த்து யாருக்கு செவ்வாய் தோசம் என்று பார்த்து செவ்வாய் அவரை  தாக்க வழி விட்டு விட்டு, யாருக்கு சனி தோசம் என்று பார்த்து அந்த சனி கிரகம் அவரை தேடி வந்து தாக்கும்?

அப்படியே அந்த கிரக தோசத்திற்கு கோவிலுக்கு சென்று  பரிகாரம் செய்யதவுடன் அந்த கிரகத்திற்கு அது தெரிந்து அவரை தாக்குவதை எப்படி நிறுத்தும்?

கிரகங்களை கண்டு பிடித்தது தமிழ் முன்னோர் அறிவியல் என்று கதை விட்டிருந்தீர்கள். அதை கண்டு பிடித்த அந்த தமிழர் பெயர் என்ன? அவர் எந்த காலப்பகுதியில் வாழ்ந்தார்? ஒருவரா அல்லது பலரா? அவரகள் எந்த காலபபகுதியில் வாழ்ந்தார்கள்?

நீங்கள் வானவியல் தொடர்பாக எழுதிய கருத்துகளை பார்க்கும் போது நீங்கள் நிபுணத்துவம் அற்றவர் என்பது வெளிப்படையாக தெரிவதால் அப்படி எழுதினேன். அப்படி நிபுணத்துவம் அடைந்தவரானால் நிபுணத்துவம் அற்ற எங்களிடம் வந்து கதை விடாமல் உலக விஞ்ஞானிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களிடன்  விவாதித்திப்பீர்களே!

 

 

Link to comment
Share on other sites

3 minutes ago, tulpen said:

கிரக தோசத்திற்கு ரிவி அன்ரனாவையும், போனையும் உதாரணம் காட்டினீர்கள். சரி அதெப்படி சனி தோசம் அல்லது செவ்வாய் தோசம் குறிப்பிட ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கு மட்டம் தேடிவந்து தாக்கி அவருக்கு பக்கத்தில் நிற்கும் வேறு திகதியில் பிறந்தவரை தாக்காமல் வேடிக்கை பார்க்கும்?

சுற்றி வரும் கிரகங்கள் மனிதரை தாக்குவது உங்கள் அறிவியல் என்றால் அது எப்படி இவருக்கு ஏழரை சனி என்று வகுத்து  வைத்த மனிதரை மட்டும் தேடி வந்து தாக்கும்? பக்கதில் நிற்கும் ஏழரைச்சனி இல்லாதவரை ஒன்றும் செய்வதில்லையே? ஏன்?

நீங்கள் கூறிய எலெக்ரோனிக் மின்காந்த அலைகள் ஒட்டு மொத்தமாக எல்லோர் மீதும் தாக்கத்தை செலுத்தவேண்டுமே அதெப்படி பிறந்த திகதி பார்த்து யாருக்கு செவ்வாய் தோசம் என்று பார்த்து செவ்வாய் அவரை  தாக்க வழி விட்டு விட்டு, யாருக்கு சனி தோசம் என்று பார்த்து அந்த சனி கிரகம் அவரை தேடி வந்து தாக்கும்?

அப்படியே அந்த கிரக தோசத்திற்கு கோவிலுக்கு சென்று  பரிகாரம் செய்யதவுடன் அந்த கிரகத்திற்கு அது தெரிந்து அவரை தாக்குவதை எப்படி நிறுத்தும்?

கிரகங்களை கண்டு பிடித்தது தமிழ் முன்னோர் அறிவியல் என்று கதை விட்டிருந்தீர்கள். அதை கண்டு பிடித்த அந்த தமிழர் பெயர் என்ன? அவர் எந்த காலப்பகுதியில் வாழ்ந்தார்? ஒருவரா அல்லது பலரா? அவரகள் எந்த காலபபகுதியில் வாழ்ந்தார்கள்?

நீங்கள் வானவியல் தொடர்பாக எழுதிய கருத்துகளை பார்க்கும் போது நீங்கள் நிபுணத்துவம் அற்றவர் என்பது வெளிப்படையாக தெரிவதால் அப்படி எழுதினேன். அப்படி நிபுணத்துவம் அடைந்தவரானால் நிபுணத்துவம் அற்ற எங்களிடம் வந்து கதை விடாமல் உலக விஞ்ஞானிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களிடன்  விவாதித்திப்பீர்களே!

 

 

திரும்பவும் ஆளைத்தாக்குகிறீர்கள். நீங்கள் குழம்பிப் போயிருக்கிறீர்கள்.

"நீங்கள் வானவியல் தொடர்பாக எழுதிய கருத்துகளை பார்க்கும் போது நீங்கள் நிபுணத்துவம் அற்றவர் என்பது வெளிப்படையாக தெரிவதால் அப்படி எழுதினேன். அப்படி நிபுணத்துவம் அடைந்தவரானால் நிபுணத்துவம் அற்ற எங்களிடம்.."

நிபுணத் துவம் அற்ற உங்களுக்கு, எப்படி "நிபுணத்துவம் அற்றவர் என்பது வெளிப்படையாக"  தெரிந்தது?  இதிலே உங்களைக் காட்டிக் கொடுத்து விட்டீர்களே

"எங்களிடம் வந்து கதை விடாமல் உலக விஞ்ஞானிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களிடன்  விவாதித்திப்பீர்களே! "...

அப்ப உங்களால சினிமாபாட்டும் காதலைப் பற்றி மட் டும் தான் அரட் டை அடிக்கும் முடியும் என்று நினைக்கிறீர்களா.  உங்களுக்கு இது பொருத்தமில்லாட்டி ஏனையா காலைவிட்டீர்கள். ஓரமாக இருந்து வேடிக்கை பார்த்திருக்கலாமே.

இது உங்களுக்கு என்று தனியாக address பண்ணவில்லையே.

"கிரக தோசத்திற்கு ரிவி அன்ரனாவையும், போனையும் உதாரணம் காட்டினீர்கள். சரி அதெப்படி சனி தோசம் அல்லது செவ்வாய் தோசம் குறிப்பிட ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கு மட்டம் தேடிவந்து தாக்கி அவருக்கு பக்கத்தில் நிற்கும் வேறு திகதியில் பிறந்தவரை தாக்காமல் வேடிக்கை பார்க்கும்? "

உங்களுக்கு உதாரணம் கூட விளங்கவில்லையே.

நான் பரிகாரத்தைப் பற்றி ஏதும் சொன்னேனா. ஏன் அவதிப்பட் டு புழுங்குகிறீர்கள்.

"அப்படியே அந்த கிரக தோசத்திற்கு கோவிலுக்கு சென்று  பரிகாரம் செய்யதவுடன் அந்த கிரகத்திற்கு அது தெரிந்து அவரை தாக்குவதை எப்படி நிறுத்தும்?"   -- இது தான் வந்தேறிகளின் பிழைப்பு.

 

சரி, விடயத் துக்கு வருவோம்.

முதலில் "மாட்டைப்" பற்றி மட் டும் எழுதப் பழகுங்கள்

கிரகம், தோசம் என்பதை முதலில் விளங்கிக் கொண்டீர்களா? அதற்கு என்ன சொல்கிறீர்கள். ஒவொன்றாய்ப் பார்ப்போம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தான்...  உங்கள் வருகைக்கும், ✍️ கருத்திற்கும்.. நன்றி.  :)

Link to comment
Share on other sites

40 minutes ago, Kapithan said:

நான் கொப்பணிக்கல்ஸ் தொடர்பாக வாதாடவில்லை. ஆனால் தMழர்களின் மேம்பட்ட அறிவியல் தொடர்பில் ஆதாரங்கள் நிரூபிக்கப்பட வேண்டும் என்கிறேன். 🙂

நீங்கள் கூறும் நவக்கிரகங்கள் பாம்பு விழுங்குதல் போன்ற கதைகள் எமக்கு வேண்டுமானால் புரிந்துகொள்ளளவோ, வேண்டுமானால் எம்மைத் திருப்திப்படுத்தவவோ உதவக்கூடும். 👍

ஆனால் எனது பிளளைகள் ""நீங்கள் கூறுவதெல்லாம் சரியப்பா. ஆனால் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகள் என்று நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே"" என்று கேட்டால் என்னிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் விடயம் 🤥

 

தொல்பொருள் ஆய்வு என்று ஒன்று உங்களுக்கு தெரியும் என்று எடுத்துக்கொள்கிறேன்.

தொல்பொருள்களில் "சொல்பொருள்" என்று வகை ஒன்று இருக்குது தெரியுமா? அதுதான் ஆதாரம்.

உதாரணமாக GRAVITY என்பதற்கு எந்த மொழியிலும் பொருளில்லை, தமிழைத் தவிர.

கரவு எனும் தமிழ் மூலத்திலிருந்தே கிரவ் என்று திரிபடைந்தது. 

"சொல்பொருள்" - இது பற்றி எனது வீடியோவிலே பார்த்திருக்கிறீர்கள். பிடித்திருக்கு என்றும் ( பொய் ) சொல்லியிருக்கிறீர்கள்.

இன்னுமொன்று சின்ன உதாரணம்: Wootz steel என்று Wikipedia வில் தேடிப்பாருங்கள்.

""நீங்கள் கூறுவதெல்லாம் சரியப்பா. ஆனால் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகள் என்று நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே"" என்று கேட்டால் என்னிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் விடயம்.

உங்களிடம் பதில் இல்லாததற்காக பதிலே இல்லையென்றாகிவிடுமா என்னையா கதை இது.

உங்களுக்கு Quantum Theory என்று ஒன்று தெரியாவிட்டால் அப்படியொன்று இல்லையென்றாகிவிடுமா?

அது உங்களது அறிவு சார்ந்த பிரச்சனை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அகத்தான் said:

Cell போனைக் காதுக்குப் பக்கத்தில் வைத்திருந்தால் மூளையைப் பாதிக்கும், இதுவும் அறிவியல்தான்.

அகத்தான்,

உலகத்தில் mobile phone வைத்திருப்பவர்கள் அநேகமாக எல்லோரும் காதுக்குப் பக்கத்தில் வைத்துத்தான் தொலைபேசுவார்கள். அவர்களில் எத்தனை சதவிகிதம் மூளை பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அறிவியல் தரவு இருந்தால் தாருங்கள். யூரியூப் வீடியோ வேண்டாம்.

மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது pseudosciences பற்றியும் யாழில் ஒரு திரி திறந்து எழுதுங்கள்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

அகத்தான்,

இந்த யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அறிவோடு என்னால் வாதாட முடியாது!

"அன்ரனாவுக்குப் பக்கத்தில் நின்றால் ரிவியில் படம் ஆடும், எனவே கிரகம் மாறினால் எங்கள் உடலும் மனமும் மாறும்" என்கிற reasoning ஐ எதிர்த்து விவாதிக்கும் அளவுக்கு நான் படிக்கவில்லை! 😎 

 

1 hour ago, tulpen said:

 

கிரகங்களை கண்டு பிடித்தது தமிழ் முன்னோர் அறிவியல் என்று கதை விட்டிருந்தீர்கள். அதை கண்டு பிடித்த அந்த தமிழர் பெயர் என்ன? அவர் எந்த காலப்பகுதியில் வாழ்ந்தார்? ஒருவரா அல்லது பலரா? அவரகள் எந்த காலபபகுதியில் வாழ்ந்தார்கள்? 

 

கிரகங்களின் பெயரே தமிழ் தானய்யா.

Example:

Orion: ஓரையன் என்பதே orion என்று மாறியது. இதற்கு அங்கு கருத்தே இல்லையே, தேடிப்பாருங்கள். தமிழில் ஓரை என்பது ஒரு நட்சத் திரம் அந்த நட்சத் திரங்களின் கூட் டம் ஓரையன்.

நீங்கள்  உண்மையைத் தேடுகிற ஆளெண்டால், குழப்பமடையாத உணர்ச்சிவசப்படாதவராயிருக்க வேண்டும்.

உங்களுக்கு மேலும் விளக்கம் தேவையெண்டால் எனது விடியோவைப் பாருங்கள், பார்த்து விமர்சனம் செய்யுங்கள். இதில ஒருவர் மேல் ஒருவர் கோபப்பட என்ன இருக்கு.

ஆத்திரகானுக்கு புத்தி மட்டு - பழமொழி.

Link to comment
Share on other sites

16 minutes ago, கிருபன் said:

அகத்தான்,

உலகத்தில் mobile phone வைத்திருப்பவர்கள் அநேகமாக எல்லோரும் காதுக்குப் பக்கத்தில் வைத்துத்தான் தொலைபேசுவார்கள். அவர்களில் எத்தனை சதவிகிதம் மூளை பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அறிவியல் தரவு இருந்தால் தாருங்கள். யூரியூப் வீடியோ வேண்டாம்.

மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது pseudosciences பற்றியும் யாழில் ஒரு திரி திறந்து எழுதுங்கள்.

 

 

cell phone பாதிப்பு என்பது medical community எல்லாருக்கும் தெரிந்த பழைய விடயம்.

https://draxe.com/health/cell-phone-health/

 

2017-11-11 · The World Health Organization listed cell phone radiation as a 2B carcinogen in 2011. That classification means cell phone radiation is “possibly carcinogenic to humans.” (4) Medical literature does suggest that beginning cell phone use during teenage years results in a four-to-five times higher risk of a brain cancer diagnosis.

Brain Cancer

Cell phones emit non-ionizing radiation, which are radio waves known as a type of electromagnetic radiation. We do know that human tissue closest to cell phone antennas absorb some of this energy.

Studies linking cell phones to cancer, particularly brain cancer, are mixed. But several recent well-designed studies suggests cell phone use could slightly increase the risk of certain types of brain cancers.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, அகத்தான் said:

உதாரணமாக GRAVITY என்பதற்கு எந்த மொழியிலும் பொருளில்லை, தமிழைத் தவிர.

கரவு எனும் தமிழ் மூலத்திலிருந்தே கிரவ் என்று திரிபடைந்தது. 

 

மனசில கரவு உள்ள ஆள் என்றுதான் நமக்குத் தெரிந்தது. இப்படி gravity க்கே மூலம் கரவு என்ற தமிழ்ச்சொல் என்று தெரியாது. Gravity என்றாலே எப்பவும் குழப்பம். அது விசையா அல்லது விசையைத் தூண்டும் ஒன்றா, பொருளா அல்லது அலையா என்ற குழப்பம் தீரவில்லை. தீர்த்து வைத்தால் உபகாரமாக இருக்கும்.

அத்தோடு இந்தப் பிரபஞ்சத்தில் 85% dark matter ( தமிழ் தெரியாது) என்று சொல்லுகின்றார்களே. அது முதலில் உண்மையா? பிரபஞ்சமே அளவிடமுடியாத ஒன்று என்றால்  எப்படி 85% என்று அறுதியாகச் சொல்லமுடியும்? இதைப் பற்றி நம் முன்னோர்கள் கணித்தவை என்ன? 

இவை பற்றியும் எழுதுங்கள்.

கம்பனின் கம்பராமாயணப் படல் ஒன்றை அண்மையில் படித்தேன்.  அதன் தரிசனம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. இந்தத் திரியைப் படித்தபோது நினைவுக்கு வந்தது.

 

“ஒன்றே என்னின் ஒன்றே ஆம்

பல என்று உரைக்கின் பலவே ஆம்

அன்றே என்னின் அன்றே ஆம்

ஆமே என்னின் ஆமே ஆம்

இன்றே என்னின் இன்றே ஆம்

உளது என்று உரைக்கின் உளதே ஆம்

நன்றே நம்பி குடிவாழ்க்கை

நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அகத்தான் said:

2017-11-11 · The World Health Organization listed cell phone radiation as a 2B carcinogen in 2011. That classification means cell phone radiation is “possibly carcinogenic to humans.” (4) Medical literature does suggest that beginning cell phone use during teenage years results in a four-to-five times higher risk of a brain cancer diagnosis.

நல்லது. நான் பிரித்தானியாவில் இருக்கின்றேன். இங்குள்ள தேசிய சுகாதார சேவைகள் நிறுவனம் தெளிவாக சொல்லுவது பின்வருமாறு உள்ளது.

 

https://www.nhs.uk/news/cancer/mobile-phones-a-possible-carcinogen/

  • Group 2b: an agent is ‘possibly carcinogenic to humans’. There is limited evidence in humans that it causes cancer and the evidence from animal studies is ‘less than sufficient’. This is the new classification for mobile phones. Cancer Research UK consider Group 2B to mean that, ‘there is some evidence for a risk but it’s not that convincing’.

 

மூளையைப் பாதிக்கும் என்று அறிவியல் திட்டவட்டமாகச் சொன்னால் இப்படி classify பண்ணியிருக்கமாட்டார்கள். 

 

 

16 minutes ago, அகத்தான் said:

cell phone பாதிப்பு என்பது medical community எல்லாருக்கும் தெரிந்த பழைய விடயம்.

https://draxe.com/health/cell-phone-health/

Dr Axe இயற்கை வைத்தியம், உணவு என்று பிரபலமாக உள்ளவர் என்று கூகிள் ஆண்டவர் சொல்லுகின்றார். அவருக்கு அப்படிச் சொல்லவேண்டிய தேவையைப் புரிந்துகொள்ளமுடிகின்றது.

Link to comment
Share on other sites

Just now, கிருபன் said:

மனசில கரவு உள்ள ஆள் என்றுதான் நமக்குத் தெரிந்தது. இப்படி gravity க்கே மூலம் கரவு என்ற தமிழ்ச்சொல் என்று தெரியாது. Gravity என்றாலே எப்பவும் குழப்பம். அது விசையா அல்லது விசையைத் தூண்டும் ஒன்றா, பொருளா அல்லது அலையா என்ற குழப்பம் தீரவில்லை. தீர்த்து வைத்தால் உபகாரமாக இருக்கும்.

அத்தோடு இந்தப் பிரபஞ்சத்தில் 85% dark matter ( தமிழ் தெரியாது) என்று சொல்லுகின்றார்களே. அது முதலில் உண்மையா? பிரபஞ்சமே அளவிடமுடியாத ஒன்று என்றால்  எப்படி 85% என்று அறுதியாகச் சொல்லமுடியும்? இதைப் பற்றி நம் முன்னோர்கள் கணித்தவை என்ன? 

இவை பற்றியும் எழுதுங்கள்.

கம்பனின் கம்பராமாயணப் படல் ஒன்றை அண்மையில் படித்தேன்.  அதன் தரிசனம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. இந்தத் திரியைப் படித்தபோது நினைவுக்கு வந்தது.

 

“ஒன்றே என்னின் ஒன்றே ஆம்

பல என்று உரைக்கின் பலவே ஆம்

அன்றே என்னின் அன்றே ஆம்

ஆமே என்னின் ஆமே ஆம்

இன்றே என்னின் இன்றே ஆம்

உளது என்று உரைக்கின் உளதே ஆம்

நன்றே நம்பி குடிவாழ்க்கை

நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!”

நீங்கள் எனது வீடியோ பார்க்கிறீங்களா, தயவு செய்து பார்த்து கருத் து கூறவும். அங்கு விளக்கமான பதில் உள்ளது.

"அத்தோடு இந்தப் பிரபஞ்சத்தில் 85% dark matter ( தமிழ் தெரியாது) என்று சொல்லுகின்றார்களே. அது முதலில் உண்மையா? பிரபஞ்சமே அளவிடமுடியாத ஒன்று என்றால்  எப்படி 85% என்று அறுதியாகச் சொல்லமுடியும்? இதைப் பற்றி நம் முன்னோர்கள் கணித்தவை என்ன? "

Physicistஏ room போட்டு அது பற்றி ஆராய்ந்து கொண்திருக்கிறார்கள். உண்மையா என்று கேட்பது என்ன நியாயம்.

 

மனசில கரவு: கரவு என்பது ஒரு  set ( set theory).இடத்துக்கேற்ப கருத்து எடுக்கும்.

basic கருத்து:  கர - கொள் என்பது. இங்கு மனதில் கொண்டது.இது ஒரு set என்றால் மனதில் கொண்ட வேறு வேறு விடயங்கள் subset. அதில் ஒன்று தான் மனதில் கரவு, இதிலும் இன்னும் subset இருக்கு, நல் லது, பொல்லாதது என்று.ஆனால் நாம் பொல்லாததை மட்டுமே கரவு என்று வைத்துக்கொண்டோம்.

Link to comment
Share on other sites

அகத்தான் 

முன்னோர்கள் கணித்தவை என்று சொல்லுகிறீர்களே? யார் அந்த  முன்னோர்கள். ஒருவரா? அல்லது ஒரு கும்பலா? அந்த கும்பலில் எத்தனை பேர் இருப்பார்கள்? எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்கள்?  அதற்கான ஆதாரம் என்ன? அவர்களின் வழிதோன்றல்கள் யார்?

 

Link to comment
Share on other sites

4 minutes ago, கிருபன் said:

 

மூளையைப் பாதிக்கும் என்று அறிவியல் திட்டவட்டமாகச் சொன்னால் இப்படி classify பண்ணியிருக்கமாட்டார்கள். 

 

திட்ட வட் டமாக இப்போ சொல்ல முடியாது. ஏனென்றால் போன் வந்து இன்னும் ஒரு தலை முறையாகவில்லை. காலம் எடுக்கும் ஆய்வு செய்து முடிய. Radiation புற்று நோயை தீவிரப்படுத்தும் என்பது வெளிப்படை. அது சிறியதோ பெரியதோ என்பதல்ல முக்கியம்.

சிகரெட்டுக்கும் இப் படித் தான் சொன் னவர்கள். ஆய்வு செய்ய 50+ வருடங்கள் பொறுத்திருக்க வேண்டியிருந்தது. அதுக்கு முதலே புற்று நோய் வந்து விட்டது. 

6 minutes ago, tulpen said:

அகத்தான் 

முன்னோர்கள் கணித்தவை என்று சொல்லுகிறீர்களே? யார் அந்த  முன்னோர்கள். ஒருவரா? அல்லது ஒரு கும்பலா? அந்த கும்பலில் எத்தனை பேர் இருப்பார்கள்? எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்கள்?  அதற்கான ஆதாரம் என்ன? அவர்களின் வழிதோன்றல்கள் யார்?

 

முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் எழுதுங்கள். கிரகம், தோசம் பற்றிய எனது விளக்கத்துக்கு.

Link to comment
Share on other sites

4 minutes ago, அகத்தான் said:

 

முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் எழுதுங்கள். கிரகம், தோசம் பற்றிய எனது விளக்கத்துக்கு.

எந்த விளக்கத்தைப்பற்றி? அந்த லூசுத்தனமான விளக்கத்தை பற்றியா? போங்க சார்.

தூக்கம் வருது இனி உங்களோட விளையாட ஏலாது. 

Link to comment
Share on other sites

7 minutes ago, tulpen said:

எந்த விளக்கத்தைப்பற்றி? அந்த லூசுத்தனமான விளக்கத்தை பற்றியா? போங்க சார்.

தூக்கம் வருது இனி உங்களோட விளையாட ஏலாது. 

அப்ப நீங்கள் ஒரு serius ஆன ஆள் இல்ல. சும்மா இவ்வளவு நாளும் ஆக்களப் பேக்காட்டிக்கொண்டு பொழுது போக்க்காக எழுதியிருக்கிறீர்கள்.

Phsysics விடயம் என்று வரும் போது வாலைச் சுருட்டிக் கொண்டீர்கள். விளங்காட் டி லூசாகத் தானிருக்கும். ஆழமறியமல் ஏனய்யா கால விட்டீங்கள்.

வடிவேல் பகிடி ஏதாவது யாரும் எழுதுவார்கள், நின்று விமர்சியுங்கள். வடிவேலைக் கொச்சைப் படுத் தாமல்.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

அகத்தான்...  உங்கள் வருகைக்கும், ✍️ கருத்திற்கும்.. நன்றி.  :)

நன்றி நன்றி தமிழ் சிறி.

41 minutes ago, tulpen said:

அகத்தான் 

முன்னோர்கள் கணித்தவை என்று சொல்லுகிறீர்களே? யார் அந்த  முன்னோர்கள். ஒருவரா? அல்லது ஒரு கும்பலா? அந்த கும்பலில் எத்தனை பேர் இருப்பார்கள்? எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்கள்?  அதற்கான ஆதாரம் என்ன? அவர்களின் வழிதோன்றல்கள் யார்?

 

Gravity என்பது தமிழிலிருந்து வந்த சொல்லே என்பதே ஆதாரம்!

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

 

அத்தோடு இந்தப் பிரபஞ்சத்தில் 85% dark matter ( தமிழ் தெரியாது) என்று சொல்லுகின்றார்களே. அது முதலில் உண்மையா? பிரபஞ்சமே அளவிடமுடியாத ஒன்று என்றால்  எப்படி 85% என்று அறுதியாகச் சொல்லமுடியும்? இதைப் பற்றி நம் முன்னோர்கள் கணித்தவை என்ன? 

 

dark matter என்றால் ஒளியை தெறிக்காத, அல்லது ஒளியைத் தொலைத்த, அல்லது நமக்கு இன்னும் ஒளியை அனுப்பாத சடப்பொருள்கள்தான். இது மிகச் சிறிய nutrino ஆகவோ, அல்லது மிகத் தொலவிலிருக்கும் galaxy யாகவோ இருக்கலாம்.

அவர்களுக்கு தெரிந்த பிரபஞ்சத்தில் 85%. இதெல்லாம் ஒரு approximation தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அகத்தான் said:

தொல்பொருள் ஆய்வு என்று ஒன்று உங்களுக்கு தெரியும் என்று எடுத்துக்கொள்கிறேன்.

தொல்பொருள்களில் "சொல்பொருள்" என்று வகை ஒன்று இருக்குது தெரியுமா? அதுதான் ஆதாரம்.

உதாரணமாக GRAVITY என்பதற்கு எந்த மொழியிலும் பொருளில்லை, தமிழைத் தவிர.

கரவு எனும் தமிழ் மூலத்திலிருந்தே கிரவ் என்று திரிபடைந்தது. 

"சொல்பொருள்" - இது பற்றி எனது வீடியோவிலே பார்த்திருக்கிறீர்கள். பிடித்திருக்கு என்றும் ( பொய் ) சொல்லியிருக்கிறீர்கள்.

இன்னுமொன்று சின்ன உதாரணம்: Wootz steel என்று Wikipedia வில் தேடிப்பாருங்கள்.

""நீங்கள் கூறுவதெல்லாம் சரியப்பா. ஆனால் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகள் என்று நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே"" என்று கேட்டால் என்னிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் விடயம்.

உங்களிடம் பதில் இல்லாததற்காக பதிலே இல்லையென்றாகிவிடுமா என்னையா கதை இது.

உங்களுக்கு Quantum Theory என்று ஒன்று தெரியாவிட்டால் அப்படியொன்று இல்லையென்றாகிவிடுமா?

அது உங்களது அறிவு சார்ந்த பிரச்சனை.

 

அகத்தான்,

சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்

1)  ""அறிவியலின் முன்னோடிகளாக தமிழர் இருந்திருக்கின்றனர்"" என்று நிரூபிக்கப்பட்டால் அதில் மிகவும் பெருமையடைவேன். அதில் இரண்டாவது கேள்விக்கு இடமில்லை. இங்குள்ள மிக மிகப் பெரும்பாலானோரின் நிலைப்பாடும் இதுதான் என்பது எனது பூரண நம்பிக்கை.

2) எங்கள் நம்பிக்கைகளும் விருப்பங்களும் விருப்பங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மட்டுமே இருக்க முடியாது. எமது நம்பிக்கைகள் சரியானதுதான் என நிறுவப்பட வேண்டும். 

3) நிறுவப்படுத்துவோர் அந்தந்தத் துறையில் துறைசார் நிபுணத்துவமுடையவர்களாக இருக்க வேண்டும். அது மட்டும் போதாது. அவர்களின் நிறுவுதல்கள் துறை சார்ந்தவர்களால் அலசி ஆராயப்பட்டு, விமர்சிக்கப்பட்டு இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இதுதான் விஞ்ஞான ரீதியில், உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை.

4) மேற்கூறியவற்றின் அர்த்தம், நான் தமிழர்கள் அறிவியல் முன்னோடிகள் என்கின்ற விடயத்தில் ஐயம் கொண்டவன் என்பதல்ல. எமது முன்னோர் அறிவியலின் முன்னோடிகள் என்பதை நான் நம்புவதுடன் நின்றுவிடமுடியாது அதனை பிறருக்கும் என்னால் கூறப்படுவதற்கு விஞ்ஞான ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட. ஆதாரங்கள் வேண்டும் என்பது மட்டுமே.  

5) விக்கிபீடியாவிலுள்ள விடயங்கள் முளுவதனையும் அப்படியே ஆதாரங்களாகக் காட்ட முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும். இதில் வாதிட எதுமில்லை.

குறிப்பு; நீங்கள் மிகவும் நேரமெடுத்து, கரிசனையுடன் பதிலிறுக்கிறீர்கள். பாராட்டுக்கள். 👏👏

 

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

 Gravity என்றாலே எப்பவும் குழப்பம். அது விசையா அல்லது விசையைத் தூண்டும் ஒன்றா, பொருளா அல்லது அலையா என்ற குழப்பம் தீரவில்லை. தீர்த்து வைத்தால் உபகாரமாக இருக்கும்.

 

Gravity என்பது விசையைத் தூண்டும் ஒன்று.  

பொருளா அல்லது அலையா: பொருளும் இல்லை அலையும் இல்லை.

Gravity ஐ மற்ற மூன்று fundamental force களுடன் ஒன்றாக்குவதிலே தற்போதய விஞ்ஞான முயற்சிகள் நடைபெறுகின்றன.

 

Link to comment
Share on other sites

12 minutes ago, Kapithan said:

அகத்தான்,

சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்

1)  ""அறிவியலின் முன்னோடிகளாக தமிழர் இருந்திருக்கின்றனர்"" என்று நிரூபிக்கப்பட்டால் அதில் மிகவும் பெருமையடைவேன். அதில் இரண்டாவது கேள்விக்கு இடமில்லை. இங்குள்ள மிக மிகப் பெரும்பாலானோரின் நிலைப்பாடும் இதுதான் என்பது எனது பூரண நம்பிக்கை.

2) எங்கள் நம்பிக்கைகளும் விருப்பங்களும் விருப்பங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மட்டுமே இருக்க முடியாது. எமது நம்பிக்கைகள் சரியானதுதான் என நிறுவப்பட வேண்டும். 

3) நிறுவப்படுத்துவோர் அந்தந்தத் துறையில் துறைசார் நிபுணத்துவமுடையவர்களாக இருக்க வேண்டும். அது மட்டும் போதாது. அவர்களின் நிறுவுதல்கள் துறை சார்ந்தவர்களால் அலசி ஆராயப்பட்டு, விமர்சிக்கப்பட்டு இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இதுதான் விஞ்ஞான ரீதியில், உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை.

4) மேற்கூறியவற்றின் அர்த்தம், நான் தமிழர்கள் அறிவியல் முன்னோடிகள் என்கின்ற விடயத்தில் ஐயம் கொண்டவன் என்பதல்ல. எமது முன்னோர் அறிவியலின் முன்னோடிகள் என்பதை நான் நம்புவதுடன் நின்றுவிடமுடியாது அதனை பிறருக்கும் என்னால் கூறப்படுவதற்கு விஞ்ஞான ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட. ஆதாரங்கள் வேண்டும் என்பது மட்டுமே.  

5) விக்கிபீடியாவிலுள்ள விடயங்கள் முளுவதனையும் அப்படியே ஆதாரங்களாகக் காட்ட முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும். இதில் வாதிட எதுமில்லை.

குறிப்பு; நீங்கள் மிகவும் நேரமெடுத்து, கரிசனையுடன் பதிலிறுக்கிறீர்கள். பாராட்டுக்கள். 👏👏

 

1.நாம் நிருபித்தால் யார் ஏற்றுக் கொள்வார். Boson, balckhole க்கு நடந்த கதையை ஆரம்பத் திலே சொல்லியிருந்தேன். நடுநிலையான உலக அமைப்பு ஏதும் உள்ளதா. உலகில் உள்ளது சிறிலங்கா வின் large scale அமைப்புகளே.

2. யார் செய்வது, ஏதாவது பொது அமைப்பு நம்மிடம் இருக்குதா? இருக்குமா?

3. உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை?: உலகம் நடுநிலையானதா?  நம்ம போராட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்களே. இந்த நிலைக்கு வர இன் னும் 1000 வருடங்கள் போகவேணும். சிவா ஐயாத் துரையின் email க்கு என்ன நடந்தது

4.ஆதாரங்கள் வேண்டும் என்பது மட்டுமே: ஆதாரங்கள் இருக்கு.  உதாரணத்துக்கு மொழி தொடர்பான ஆய்வுகள் நிறைய இருக்கு. யார் ஏற்றுக் கொள்வார். நில, கடல் ஆய்வு செய்யும் பலம் நம்மிடமுள்ளதா?

5.விக்கிபீடியாவில் உள்ள எல்லாம் தவறு என்றில்லை, நிறைய information இருக்கு. அதை எடுத்து ஆய்வு செய்யலாம்.

எங்கள் நம்பிக்கைகளும் விருப்பங்களும் விருப்பங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மட்டுமே இருக்கும். எப்பவும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை"     பண்டைய சுமேரியாவில் பொதுவாக பெண்களின் வேலை அல்லது பங்கு வீட்டு பணிகளில் இருந்தே வருகிறது. கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi] ஒன்று "மது" பெண் தெய்வமான நின்காசியையும் [Ninkasi: “வாய் நிரப்பும் பெண்மணி] மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] பாராட்டுகிறது. பொதுவாக மது வடிப்போர் /காய்ச்சுவோர் அங்கு பெண்களாக இருந்தார்கள், அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள். மேலும் முன்பு, துணை உணவாக மது, வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது. எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்த ஒரு வகைச் சாராயத்தை /பீர் மது பானத்தை [beer] விற்கவும் முடியும். அதாவது பெண்கள் தவறணை காப்பாளராகவும் இருக்க முடியும். மேலும் அந்த துதி பாடல் சேர்மானங்களையும் செய்முறையையும் விளக்கமாக கொண்டுள்ளது. உதாரணமாக புளிக்கச் செய்யப் பயன் படும் பொருள் முதல், ஊற வைத்தல், நொதித்தல், வடித்தல் என்பனவற்றின் விபரங்களை தருகிறது.     "நின்காசி, நியே மாவை [dough] ஒரு பெரிய வாரி [shovel] மூலம் குழியில் கலாவுகிறாய்- பார்லி ரொட்டியையும் [bappir] தேனையும் [இந்த தேன் பேரீச்சம் பழம் சாறாக இருக்கலாம்? வாசனை சுவை கொடுப்பதற்கு இங்கு பேரீச்சம் பழம் சேர்க்கப்படுகிறது?]   நின்காசி, நியே பார்லி ரொட்டியை பெரிய சூளையில் வேக வைக் கிறாய்- உமி தானியங்ககளை [hulled grains] ஒரு ஒழுங்காக குவித்து [வடித்தலின் போது "பப்பிர்" [bappir: பார்லி ரொட்டி] ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுகிறது. ஒன்று சர்க்கரை உற்பத்திக்கான மாப்பொருளை தருகிறது. மற்றது அரைத்தலுக்கான புரதங்களையும் சுவைகளையும் தருகிறது]   நியே பார்லி முளை தானியத்திற்கு [malt] தண்ணீர் விடுகிறாய்- பெரும் அதிகாரம் உள்ளவர்களையும் உன் மேன்மை பொருந்திய நாய் காத்து தள்ளி விடுகிறது நின்காசி, நியே பார்லி முளை தானியத்தை சாடியில் ஊற வைக்கிறாய்- அலைகள் ஏறுகின்றன, அலைகள் இறங்கு கின்றன [இந்த அசைவு மறை முகமாக அரைத்தலை குறிக்கலாம் ? அப்பொழுது முளை தானியமும் பப்பிரும் மேல் அதிக பார்லி உடன் சேர்க்கப் படுகிறது? அத்துடன் இந்த மசியல் அதிகமாக சூடாக்கி இருக்கலாம்?]   நின்காசி, நியே சமைத்த கூழாகிய களியை [cooked mash] நாணல் பாயில் பரப்புகிறாய்- சூடு தணிகிறது, குளிர்ச்சி வெற்றி கொள்கிறது [இது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றி இருக்கலாம். ஒன்று பாவித்த தானியத்தின் உமியை அகற்றவும் மற்றது திரவம் வடியவும் இது உதவி இருக்கலாம்? அது மட்டும் அல்ல, சாராயத்துக்கான மாவூறல் நன்கு குளிர்ச்சியாக இருந்தால், நொதித்தல் அல்லது புளித்தல் திறமையாக நடை பெரும். ஏன் என்றால் உயர் வெப்பம் மாவை புளிக்க வைக்க உதவும் பொருளின் [yeast / புளிச்சொண்டியின்] ஆற்றலை குறைத்து விடும் என்பதால்]   நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய் - அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய் [இது உண்மையில் தேனா? அல்லது பேரீச்சம் பழம் சாறா? என்பது ஒரு கேள்விக் குறியே. அது மட்டும் அல்ல, திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையின் தோலில் இயற்கையாகவே "ஈஸ்ட்" ['yeast'] காணப்படுகிறது. ஆனால் ஒயினில் [wine] அப்படி அல்ல. அங்கு "ஈஸ்ட்" இன் செயற்படு அற்று காணப்படுகிறது. ஆகவே இது திராட்சை ரசமாக இருக்க முடியாது. அது அதிகமாக திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையாக இருக்கலாம்?]   நின்காசி, வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது- நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில் [large collector vat] சரியாக வைக்கிறாய்" [இந்த இன்பமான ஒலி அதிகமாக, சொட்டு சொட்டாக மரத் தொட்டிக்குள் வடியும் பீர் மது பானத்தின் சத்தமாக இருக்கலாம்?]   அது மட்டும் அல்ல, இந்த துதி பாடலில் இருந்து நாம் எப்படியான பாராட்டுதலை அல்லது புகழ்ச்சியை ."பீர் மதுபான பெண் தெய்வம்" பெற்றால் என அறிய முடிகிறது. மேலும் நின்காசிக்கும் பீர் மது பானத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் பலமானது என்பதையும் அறிய முடிகிறது. உதாரணமாக மேலும் இரண்டு புகழ்ச்சியை கிழே தருகிறோம்.   "நின்காசியே, நியே, வடித்த பீர் மது பானத்தை மரத் தொட்டியில் இருந்து ஊற்றுகிறாய். அது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆறு மாதிரி வேகமாய்ப் பாய்கிறது [Ninkasi, you are the one who pours out the filtered beer of the collector vat, It is [like] the onrush of Tigris and Euphrates]"   மற்றது   "குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards] [and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என நின்காசியை புகழ்தல் ஆகும்.   மேலும் மெசொப் பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1800 ஆண்டை சேர்ந்த களி மண் பலகை கல் ஒன்று ஒரு பெண் தனது கணவனுடன் ஒன்று கூடும் போது, சாடி ஒன்றில் இருந்து. பீர் மது பானம் குடிப்பதை தெளிவாக வரைந்து காட்டுகிறது.   “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926)   என்று கூறுகிறார் வள்ளுவர்.அதாவது, உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார். என்றாலும் நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது, அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில், ஆண் பெண் இரு பாலாரிடமும், ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது.  துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை, புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார், தனது புறநானுறு 235 இல்,   "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;"   என்று எடுத்து உரைக்கிறார். அதாவது, சிறிதளவு கள்ளைப் பெற்றால் அதியமான நெடுமான் அஞ்சி அதை எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; என்கிறார் ஒளவையார். மேலும் அகநானுறு 336:   "தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்"   என கூறுவதையும் காண்க, அதாவது, தெளிந்த கள்ளினைக் குடித்து, பெண்கள், நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்து விட்டு, தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களை உடைய காஞ்சி மரத்தின் நீழலில் குரவை [கைகோத்து ஆடப்படும்] ஆடுதலைச் செய்யும் மகளிர் என்கிறது. அது மட்டும் அல்ல, பெரும்பாணாற்றுப்படை [275-281] இல், மதுவின் செய்முறை விளக்கப்பட்டு இருப்பதுடன், பட்டிணப் பாலை [106 -110] இல், கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம்.   "அவையா அரிசி அம்களித் துழவை மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை அளைஇ தேம்பட எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி" -பெரும்பாணாற்றுப்படை(275-281)   அதாவது, குற்றாத தவிடெடுபடாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நல்ல வாசனையுள்ள கள் என்கிறது.   "துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்தும் மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்" - பட்டிணப்பாலை[106-110]   அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 18 ஏப்ரல் 2024, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000ஐ கடந்துவிட்டதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யா இரண்டாவது ஆண்டிலும், இறைச்சி அரவை (Meat Grinder) உத்தி என்றழைக்கப்படும் அதன் தாக்குதல் உத்தியின்படி – அதாவது யுக்ரேனிய படைகளை வலுவிழக்கச் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக ராணுவ வீரர்களை களமிறக்கும் ரஷ்யாவின் உத்தி – பல ராணுவ வீரர்களை போருக்கு அனுப்பியது. அதன் விளைவாக ஏற்பட்ட ரஷ்ய வீரர்களின் இறப்புகள் முதல் ஆண்டைவிட தற்போது கிட்டத்தட்ட 25% அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிபிசி ரஷ்ய சேவை, சுயாதீன ஊடக குழுவான மீடியாசோனா மற்றும் தன்னார்வலர்கள், பிப்ரவரி 2022 முதல் இந்த இறப்புகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். புதைவிடங்களில் உருவாக்கப்பட்ட புதிய கல்லறைகளில் இருந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் அவர்களுக்கு இந்தக் கணக்கெடுப்பில் உதவின. அலுவல்ரீதியிலான அறிக்கைகள், செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் ஆகியவை மூலம் திறட்டப்பட்ட தகவல்களையும் எங்கள் குழுக்கள் இதில் பயன்படுத்தின. எங்கள் கண்டுபிடிப்புகளின்படி, ரஷ்ய வீரர்களில் சுமார் 27,300க்கும் மேற்பட்டோர் போரின் இரண்டாவது ஆண்டில் இறந்துள்ளனர். இது, பிராந்தியத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் எவ்வளவு பெரிய மனித இழப்பு ஏற்பட்டுள்ளன என்பதைப் பிரதிபலிக்கிறது. பிபிசியின் செய்திக்கு பதிலளித்திருக்கும் ரஷ்யா, மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம்தான் இதுதொடர்பான தகவல்களைத் தர முடியும் என்று கூறியுள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனிய படைகளை வீழ்த்துவதற்கும், ரஷ்ய பீரங்கிகளுக்கு அவர்களது இருப்பிடங்களை அம்பலப்படுத்துவதற்கும் ரஷ்யா இடைவிடாமல் ராணுவ வீரர்களை முன்னோக்கி அனுப்பும் இந்த உத்தியை விவரிக்க மீட் கிரைண்டர் (meat grinder) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மொத்த ரஷ்ய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை, 50,000க்கும் அதிகமானது. செப்டம்பர் 2022இல் ரஷ்யாவால் இதுவரை வழங்கப்பட்ட இறப்பு எண்ணிக்கைகளின் அதிகாரபூர்வ தரவுகளைவிட இது 8 மடங்கு அதிகம். ரஷ்யா தரப்பில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை உண்மையில் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும். எங்கள் பகுப்பாய்வில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் கிழக்கு யுக்ரேனில் உள்ள லுஹான்ஸ்கில் ஏற்பட்ட வீரர்களின் இறப்புகள் குறித்து எதுவும் சேர்க்கப்படவில்லை. அதுவும் சேர்க்கப்பட்டால், ரஷ்யா தரப்பில் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். "சிறப்பு ராணுவ நடவடிக்கை" அரசு ரகசியங்களை உள்ளடக்கிய சட்டங்கள் மற்றும் தகவல்களைப் கொண்டிருப்பதால், உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை "பாதுகாப்பு அமைச்சகம்தான் வழங்க முடியும்" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். இதற்கிடையில், யுக்ரேன் தனது போர்க்களத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் அளவு குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது. பிப்ரவரியில், அதிபர் வோலொதிமிர் ஸெலென்ஸ்கி, 31,000 யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார். ஆனால், அமெரிக்க உளவுத்துறையின் தரவுகள் அடிப்படையிலான மதிப்பீடுகள், மேலதிக இழப்புகள் இருப்பதாகக் கூறுகின்றன.   ரஷ்யாவின் மீட் கிரைண்டர் உத்தி பிபிசி மற்றும் மீடியாசோனாவிடம் இருக்கும் இறந்த வீரர்களின் சமீபத்திய பட்டியல், ரஷ்யாவின் மாறிவரும் போரின் முன்களத் தாக்குதல் தந்திரங்களில் இருக்கும் அப்பட்டமான மனித இழப்புகளைக் காட்டுகிறது. யுக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் ஒரு பெரியளவிலான தாக்குதலைத் தொடங்கியதால், 2023 ஜனவரியில் ரஷ்ய ராணுவம் தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது. ரஷ்யர்கள், வுஹ்லடேரி நகரத்தைக் கைப்பற்றப் போரிட்டபோது, அது “சாரைசாரையாக வீரர்களை முன்னோக்கி அனுப்பும் பயனற்ற தாக்குதல்களை” பயன்படுத்தியதாக போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது. “சவாலான நிலப்பரப்பு, போர்த்திறன் இல்லாமை, யுக்ரேனிய படைகளுக்கு அதிர்ச்சி அளிக்கத் தவறியது” என இந்தத் தாக்குதல் அதிக போர் இழப்புகளுக்கும் ஆனால் சிறிய அளவிலான ஆதாயங்களுக்கும் வழிவகுத்தது. வரைபடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க உச்சம் 2023 வசந்த காலத்தில் பாக்முத் போரின்போது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். கூலிப்படை குழுவான வாக்னர், ரஷ்யா அந்நகரத்தைக் கைப்பற்ற உதவியது. வாக்னரின் அப்போதைய தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின், அந்த நேரத்தில் அவரது குழுவின் இழப்புகள் 22,000 என மதிப்பிட்டார். கடந்த இலையுதிர்க்காலத்தில் கிழக்கு யுக்ரேனிய நகரமான அஃப்டிஃப்காவை ரஷ்யா கைப்பற்றியது ராணுவ வீரர்களின் இறப்புகள் மீண்டும் அதிகரிக்க வழிவகுத்தது.   கல்லறைகளைக் கணக்கெடுத்தல் பிபிசி மற்றும் மீடியாசோனாவுடன் பணியாற்றும் தன்னார்வலர்கள் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா முழுவதும் 70 புதைவிடங்களில் புதிய ராணுவ கல்லறைகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். இந்தப் புதைவிடங்கள் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டிருப்பதை வான்வழிப் படங்கள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, மாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள ரியாசானில் அமைந்திருக்கும் போகோரோட்ஸ்காய் கல்லறையின் இந்தப் படங்கள், ஒரு புதிய பகுதி அங்கு தோன்றியிருப்பதைக் காட்டுகிறது. தரையில் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள், இந்தப் புதிய கல்லறைகளில் பெரும்பாலானவை யுக்ரேனில் கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் இறந்த வீரர்களில் ஐந்தில் குறைந்தபட்சம் இரண்டு பேர், படையெடுப்புக்கு முன்பு நாட்டின் ராணுவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்தவர்கள் என்று பிபிசி மதிப்பிடுகிறது. “கடந்த 2022ஆம் ஆண்டின் படையெடுப்பின் தொடக்கத்தில், சிக்கலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா தனது தொழில்முறை துருப்புகளைப் பயன்படுத்த முடிந்தது. ஆனால், அந்த அனுபவமிக்க வீரர்கள் பலர் இப்போது இறந்திருக்கக்கூடும் அல்லது காயமடைந்திருக்கலாம்,” ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை ஆய்வாளர் சாமுவேல் க்ரானி-இவான்ஸ் விளக்குகிறார். மேலும், குறைந்த அளவு பயிற்சி அல்லது ராணுவ அனுபவமே உள்ளவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கைதிகள் போன்றவர்கள் அவர்களுக்குப் பதிலாக போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். தொழில்முறை ராணுவ வீரர்கள் செய்யக்கூடியதை இவர்களால் செய்ய முடியாது எனக் கூறும் க்ரானி-இவான்ஸ், “இதன் பொருள், அவர்கள் தந்திரோபாயரீதியாக மிகவும் எளிமையான விஷயங்களைச் செய்ய வேண்டும். அதாவது பொதுவாக பீரங்கிகளின் உதவியோடு யுக்ரேனிய ராணுவ நிலைகள் மீது முன்னோக்கிச் சென்று தாக்குதல் புரிய வேண்டியுள்ளதாகத் தெரிகிறது,” எனக் கூறினார்.   வாக்னர் படையில் சேர்க்கப்பட்ட சிறைக் கைதிகள் சிறைச்சாலையில் செய்யப்படும் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இந்த மீட் கிரைண்டர் உத்திக்கு மிக முக்கியமானது. மேலும் எங்கள் பகுப்பாய்வு அவர்கள் இப்போது முன்வரிசையில் விரைவாகக் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கிறது. ஜூன் 2022 முதல் சிறைச்சாலைகளில் ஆட்சேர்ப்பைத் தொடங்க வாக்னர் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுக்கு ரஷ்யா அனுமதியளித்தது. பின்னர் வீரர்களாக மாறிய கைதிகள், ரஷ்ய அரசின் சார்பாக ஒரு தனியார் ராணுவத்தின் ஒரு பகுதியாகப் போரில் களமிறங்கினர். இடைவிடாத சண்டை உத்திகள், மிருகத்தனமான உள் நடவடிக்கைகளுக்குப் பெயர்போன தனியார் ராணுவமாக வாக்னர் இருந்தது. அவர்கள் உத்தரவின்றிப் பின்வாங்கிய வீரர்களை அந்த இடத்திலேயே தூக்கிலிடலாம். இந்தக் குழு பிப்ரவரி 2023 வரை கைதிகளில் இருந்து தனது படைக்கு ஆட்சேர்ப்பு செய்தது. பிறகு ரஷ்யாவுடனான அதன் உறவு மோசமாகத் தொடங்கியது. ப்ரிகோஜின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவின் ஆயுதப் படைகளுக்கு எதிராகக் கலகம் நடத்தினார். பின்னர் அதைக் கைவிட்டார். மேலும் திரும்பிச் செல்ல ஒப்புக்கொள்வதற்கு முன்பு மாஸ்கோவை நோக்கி முன்னேற முயன்றார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவர் விமான விபத்தில் கொல்லப்பட்டார். முன்வரிசையில் கொல்லப்பட்ட 9,000 ரஷ்ய சிறைக்கைதிகளின் பெயர்களை எங்கள் சமீபத்திய பகுப்பாய்வு மையமாகக் கொண்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்களில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, அவர்களின் ராணுவ ஒப்பந்தம் தொடங்கும் தேதிகள் மற்றும் அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். வாக்னரின் கீழ், அந்த முன்னாள் கைதிகள் சராசரியாக மூன்று மாதங்கள் மட்டுமே உயிர் பிழைத்திருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். இருப்பினும், மேலே உள்ள வரைபடம் குறிப்பிடுவது போல, பாதுகாப்பு அமைச்சகத்தால் அதற்குப் பின்னர் பணியமர்த்தப்பட்டவர்கள் சராசரியாக இரண்டு மாதங்கள் மட்டுமே பிழைத்திருந்தனர். பாதுகாப்பு அமைச்சகம் பொதுவாக புயல் படைப்பிரிவுகள் (Storm platoons) என்றழைக்கப்படும் ராணுவப் பிரிவுகளை உருவாக்கியுள்ளது. இது கிட்டத்தட்ட முழுக்க முழுக்க குற்றவாளிகளால் ஆனது. வாக்னரின் கைதி படைப்பிரிவுகளைப் போலவே, இந்தப் பிரிவினரும் போரில் முன்களத்தில் பலியிடப்படுவதற்கான ஒரு சக்தியாகவே கருதப்படுகின்றனர். “இந்தப் புயல் வீரர்கள், வெறும் சதைப்பிண்டம் மட்டுமே” என்று புயல் உறுப்பினர்களுடன் இணைந்து போராடிய ஒரு சராசரி சிப்பாய் கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார். சமீபத்தில், புயல் வீரர்கள் அஃப்திஃப்காவை பிடிக்கப் பல மாதங்கள் நீடித்த போரில் முக்கியப் பங்கு வகித்தனர். இந்த நகரம் எட்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவிடம் வீழ்ந்தது. அதோடு பாக்முத்திற்கு பிறகு புதினுக்கு மூலோபாய ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் ஒரு மிகப்பெரிய போர்க்கள வெற்றியை இது பிரதிநிதித்துவப்படுத்தியது.   பட மூலாதாரம்,REUTERS பயிற்சியின்றி போர்க்களத்தின் முன்வரிசைக்கு அனுப்பப்பட்ட கைதிகள் வாக்னர் கூலிப்படையின் கீழ், வீரர்களாக மாறிய சிறைக்கைதிகளுக்கு போரில் களமிறக்கப்படுவதற்கு முன்பாக 15 நாட்கள் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு நேர்மாறாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சேர்க்கப்பட்டவர்கள் சிலர் ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டே வாரங்களில் முன்வரிசையில் கொல்லப்பட்டதைக் கண்டோம். பிபிசி இறந்த மற்றும் உயிருடன் இருக்கின்ற ராணுவ வீரர்கள் சிலரது குடும்பத்தினரிடம் பேசியது. சிறையில் ஆட்சேர்ப்பு செய்தபோது படையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ராணுவப் பயிற்சி போதுமானதாக இல்லையென்று அவர்கள் கூறினர். கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி சிறையில் தனது கணவர் அமைச்சகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கணவரை இழந்த ஒரு பெண் எங்களிடம் கூறினார். மேலும், அவர் ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு போரில் முன்வரிசையில் சண்டையிட்டார். “அவர்கள் கூறியதன்படி சில வாரங்களுக்கு பயிற்சிகள் இருக்கும் என்று நான் உறுதியாக இருந்தேன். குறைந்தபட்சம் ஏப்ரல் இறுதிவரை பயப்பட ஒன்றுமில்லை என நினைத்தேன்.” தனது கணவர் தன்னிடம் பேசுவார் எனக் காத்திருந்ததாகவும் ஆனால் அவர் ஏப்ரல் 21 அன்று கொல்லப்பட்டதாகத் தெரிய வந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.   மற்றொரு தாய் கூறுகையில், போர்க்களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது மகனின் மரணம் குறித்துத் தெரிவிக்கத் தனது கணவரைத் தொடர்புகொள்ள முயன்றபோதுதான் தனது கணவரும் சிறையில் இருந்து போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தாம் அறிந்ததாகக் கூறினார். இரட்டைக் குழந்தைகளின் தந்தையான தனது மகன் வாடிம், இந்த ராணுவ ஆட்சேர்ப்புக்கு முன்னதாக எந்த ஆயுதத்தையும் ஏந்தியதில்லை என்று அவரது தாய் அல்ஃபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார். மகனின் மரணம் குறித்துத் தனது கணவர் அலெக்சாண்டரிடம் அவரால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவர் சண்டையிடுவதற்காக “போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று அவர் கூறுகிறார். வேறொரு கைதியின் தொலைபேசி அழைப்பு மூலமாகத்தான் தன் கணவர் சென்றிருப்பது அவருக்குத் தெரிய வந்தது. அலெக்சாண்டர் யுக்ரேனில் வளர்ந்ததாகவும் அங்கு குடும்பம் நடத்தியதாகவும் அல்ஃபியா கூறுகிறார். மேலும், பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ரஷ்யா யுக்ரேனை ஆக்ரமித்தது “பொய் என்று அவருக்குத் தெரியும்” எனவும் அவர் தெரிவித்தார். அவரது மகன் இறந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு கணவர் அலெக்சாண்டரும் போரில் கொல்லப்பட்டதாக அல்ஃபியாவுக்கு தெரிவிக்கப்பட்டது.   ‘இறப்பதற்குத் தயாராக இருங்கள்’ வாக்னர் கூலிப்படைக்கு வேலை செய்யும்போது, சிறைக்கைதிகள் பொதுவாக ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஒப்பந்த காலத்தின் இறுதியில் அவர்கள் உயிர் பிழைத்தால் அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும். ஆனால், கடந்த செப்டம்பரில் இருந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட கைதிகள் அவர்கள் இறக்கும் வரை அல்லது போர் முடியும் வரை, இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரைக்கும் போரில் சண்டையிட வேண்டும். சரியான சீருடைகள், காலணிகளை வாங்குவதற்கு உதவுமாறு உறவினர்களிடம் கேட்ட கைதிகள் பற்றிய கதைகளை பிபிசி சமீபத்தில் கேட்டுள்ளது. கைதிகள் சரியான உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள் அல்லது கலாஷ்னிகேவ் துப்பாக்கிகள் கூட இல்லாமல் சண்டைக்கு அனுப்பட்ட செய்திகளும் உள்ளன. ரஷ்ய போர் ஆதரவாளரும் பதிவருமான விளாதிமிர் க்ரூப்னிக் தனது டெலிகிராம் சேனலிலி, “பல வீரர்களிடம் போருக்குப் பொருத்தமற்ற துப்பாக்கிகள் இருந்தன,” என்று எழுதியுள்ளார். “முதலுதவிப் பெட்டி, அகழி தோண்ட மண்வெட்டி, உடைந்த துப்பாக்கியுடன் முன்வரிசையில் ஒரு சிப்பாய் என்ன செய்ய முடியும் என்பது பெரிய மர்மம்” எனக் குறிப்பிடுகிறார் அவர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES க்ரூப்னிக், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு யுக்ரேனை தளமாகக் கொண்டவர். சில துப்பாக்கிகள் “முற்றிலும் உடைந்து இருப்பதைக் கண்டறிந்தபோது, அவற்றை மாற்றுவது சாத்தியமற்றது” என்று தளபதிகள் கூறியதாக அவர் கூறுகிறார். “அந்தத் துப்பாக்கி ஏற்கெனவே அந்த நபருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் கடுமையான ராணுவ அதிகாரத்துவத்தால் அதுகுறித்து எதுவும் செய்ய முடியவில்லை,” என்று அவர் குறுப்பிடுகிறார். முன்னாள் கைதிகளும் தங்கள் தோழர்கள் தம் உயிர்கள் மூலம் இந்தப் போருக்காகச் செலுத்தியுள்ள அதிக விலையை விவரித்துள்ளனர். “நீங்கள் படையில் இப்போது பதிவு செய்தால், இறப்பதற்குத் தயாராக இருங்கள்” என்று புயல் வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கான ஆன்லைன் குழுவில் செர்கேய் கூறுகிறார். இந்தத் தளத்தில் அவர்கள் பற்றிய தகவல் பகிரப்படுகிறது. அவர் அக்டோபர் முதல் புயல் படையில் சண்டையிட்டு வரும் முன்னாள் கைதி எனக் கூறுகிறார். இந்தத் தளத்தைச் சேர்ந்த மற்றோர் உறுப்பினர், ஐந்து மாதங்களுக்கு முன்பு 100 வீரர்களைக் கொண்ட புயல் படைப்பிடிவில் தாம் சேர்ந்ததாகவும் இப்போது அதில் உயிருடன் இருக்கும் 38 வீரர்களில் தானும் ஒருவர் எனவும் கூறுகிறார். “போரில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும், மறுபிறவியைப் போல் உள்ளது” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2e074ry91ro
    • உந்த ஆறில எங்கண்ட ஒண்டும் இருக்கு. அதுக்கு பிரசாந்த் பரமலிங்கம் எண்டு பேர்!
    • https://www.jpost.com/middle-east/iran-news/three-quarters-of-israeli-public-opposes-an-iran-attack-if-it-undermines-security-alliance-survey-797523  முழுவதுமாக இணைப்பை வாசித்து விட்டு பதில் எழுத பழகவும். 74 வீதமான மக்கள் இணை நாடுகளை எதிர்த்து போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.