Jump to content

கலாச்சாரம் என்ற பெயரில் அடி முட்டாள்தனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அகத்தான் said:

 

அகத்தான், நல்ல விரிவான பதிவுகள், தொடருங்கள். 

தனிமனித தாக்குதல் இல்லாமல் ஆரோக்கியமாக இந்த திரி சென்றால் நல்லது  👍

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, அகத்தான் said:

Cell போனைக் காதுக்குப் பக்கத்தில் வைத்திருந்தால் மூளையைப் பாதிக்கும், இதுவும் அறிவியல்தான்.

அகத்தான், 

ஆரம்பத்தில் வைத்த இந்தக் கருத்தில் திட்டவட்டமாக மூளையைப் பாதிக்கும் என்ற தொனி இருக்கின்றது. இதுவும் அறிவியல்தான் என்று சொல்லும்போது அது முதல் வாக்கியத்தை இன்னமும் அழுத்திச் சொல்லுகின்றது.

இப்படியான திரிபுகள், கட்டுடைத்தல்கள் (interpretations) சாதாரணர்களாகிய எங்களுக்கு என்ன செய்தியைச் சொல்லுகின்றது என்ற பொறுப்புணர்ச்சியுடன் சொல்லப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

அகத்தான், 

ஆரம்பத்தில் வைத்த இந்தக் கருத்தில் திட்டவட்டமாக மூளையைப் பாதிக்கும் என்ற தொனி இருக்கின்றது. இதுவும் அறிவியல்தான் என்று சொல்லும்போது அது முதல் வாக்கியத்தை இன்னமும் அழுத்திச் சொல்லுகின்றது.

இப்படியான திரிபுகள், கட்டுடைத்தல்கள் (interpretations) சாதாரணர்களாகிய எங்களுக்கு என்ன செய்தியைச் சொல்லுகின்றது என்ற பொறுப்புணர்ச்சியுடன் சொல்லப்படவேண்டும்.

https://www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/radiation/cell-phones-fact-sheet

https://www.sciencenewsforstudents.org/article/teens-cell-phone-use-linked-memory-problems

https://psychcentral.com/news/2018/07/21/cell-phone-radiation-may-affect-teens-memory/137194.html

https://www.sciencedaily.com/releases/2018/07/180719121803.htm

 

Ali Beale
This is so sad this was posted 2013 and here we are 2020 and they are unrolling 5G. My heart hurts on how human life is just disregarded for money.

 

காணுமா??? என்ன நீங்கள் அவரை பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட சொல்கின்றீர்கள், அவர் அதற்கு மேலாக செயற்படுகின்றார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அகத்தான் said:

திட்ட வட் டமாக இப்போ சொல்ல முடியாது. ஏனென்றால் போன் வந்து இன்னும் ஒரு தலை முறையாகவில்லை. காலம் எடுக்கும் ஆய்வு செய்து முடிய. Radiation புற்று நோயை தீவிரப்படுத்தும் என்பது வெளிப்படை. அது சிறியதோ பெரியதோ என்பதல்ல முக்கியம்.

சிகரெட்டுக்கும் இப் படித் தான் சொன் னவர்கள். ஆய்வு செய்ய 50+ வருடங்கள் பொறுத்திருக்க வேண்டியிருந்தது. அதுக்கு முதலே புற்று நோய் வந்து விட்டது. 

ஒரு தலைமுறை 30 வருடங்கள் என்றால் ஃபோன் வந்து ஒரு தலைமுறை தாண்டிவிட்டது. 30 வருட data ஐ வைத்து  இன்னமும் திட்டவட்டமாக mobile communication இல் பாவிக்கும் radio waves மூளையைப் பாதிக்கும், புற்றுநோயை உண்டு பண்ணும் என்ற hypotheses (கருத்துக்கள்) ஐ நிரூபிக்கமுடியவில்லை. ஆனால் உலகம் முழுவதும் radio waves ஆல் தொடர்பாடலில் இருக்கும் சாதனங்கள் பல்கிப் பெருகுகின்றன. 

சிகரட் போன்று தீங்கானது எனில் மாற்றுத் தொழில்நுட்பங்களை எப்போதே தேட ஆரம்பித்திருப்பார்கள். ஆனால் மொபைல் ஃபோனை காதுக்கு அருகில் வைத்து பாவித்தால் மூளைக்கு ஆபத்து என்று சொல்பவர்களும், கதிர்வீச்சால் புற்றுநோய் வரும் என்று சொல்பவர்களும் மொபைல் ஃபோனைப் பாவிக்காமலா இருக்கின்றார்கள்? 
 

NHS சொல்லுவது பின்வருமாறு.


https://www.nhs.uk/news/cancer/mobile-phones-a-possible-carcinogen/

How are mobile phones now classified?

The IARC classifies different substances and exposures according to whether they are likely to cause cancer. The IARC had classified mobile phones as belonging to Group 2B on their scale, which means there is a possibility they cause cancer in humans.

Within the IARC scale, there are five categories of risk:

  • Group 1: there’s extremely strong evidence that an agent causes cancer. Smoking and asbestos are in this category. 
  • Group 2a: an agent is ‘probably carcinogenic to humans’. The evidence in animal studies is 'sufficient' but 'limited' in humans. 
  • Group 2b: an agent is ‘possibly carcinogenic to humans’. There is limited evidence in humans that it causes cancer and the evidence from animal studies is ‘less than sufficient’. This is the new classification for mobile phones. Cancer Research UK consider Group 2B to mean that, ‘there is some evidence for a risk but it’s not that convincing’. 
  • Group 3: an agent is ‘not classifiable as to its carcinogencity to humans’. This means that the evidence is inadequate and limited in humans and animals. 
  • Group 4: an agent is probably not carcinogenic to humans. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

காணுமா??? என்ன நீங்கள் அவரை பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட சொல்கின்றீர்கள், அவர் அதற்கு மேலாக செயற்படுகின்றார். 

நல்லது உடையார். உடனேயே பொறுப்புணர்வுடன் இணைப்புக்களைத் தந்ததற்கு. அப்படியே மறக்காமல் மொபைல் ஃபோனைப் பாவிப்பதையும் முற்றாகத் தவிர்த்தால் அல்லது குறைத்தால் நல்லது. பிள்ளைகளுக்கு கொடுக்கவே வேண்டாம்.

 

 

12 hours ago, அகத்தான் said:

நீங்கள் எனது வீடியோ பார்க்கிறீங்களா, தயவு செய்து பார்த்து கருத் து கூறவும். அங்கு விளக்கமான பதில் உள்ளது.

விஞ்ஞான விடயங்கள் என்றால் பல்கலைக்கழகங்களினால் வெளியிடப்படும் யூரியூப் காணொளிகள், பெயர்பெற்ற நிறுவனங்களால் வெளியிடப்படும் காணொளிகள் மட்டும்தான் பார்ப்பேன். 

நீங்கள் விஞ்ஞான ஆராய்ச்சியில் இருந்தால் உங்கள் பல்கலைக்கழகம் ஊடாக வெளிவந்த காணொளிகளைக் காட்டினால் பார்க்கலாம். 

 

Link to comment
Share on other sites

6 minutes ago, கிருபன் said:

நல்லது உடையார். உடனேயே பொறுப்புணர்வுடன் இணைப்புக்களைத் தந்ததற்கு. அப்படியே மறக்காமல் மொபைல் ஃபோனைப் பாவிப்பதையும் முற்றாகத் தவிர்த்தால் அல்லது குறைத்தால் நல்லது. பிள்ளைகளுக்கு கொடுக்கவே வேண்டாம்.

 

 

 

விவாதிக்கப்படும் கருப் பொருளை மட்டும் சுற்றி நிற்க வேண்டும் பதில்கள்,

அப்படியே மறக்காமல் மொபைல் ஃபோனைப் பாவிப்பதையும் முற்றாகத் தவிர்த்தால் அல்லது குறைத்தால் நல்லது. பிள்ளைகளுக்கு கொடுக்கவே வேண்டாம்.” -  இது விவாதக்கருப் பொருள் அல்.

 

 

Group 2b: an agent is ‘possibly carcinogenic to humans’. There is limited evidence in humans that it causes cancer and the evidence from animal studies is ‘less than sufficient’. This is the new classification for mobile phones. Cancer Research UK consider Group 2B to mean that, ‘there is some evidence for a risk but it’s not that convincing’.

Question: Is it carcinogenic to humans?

Answer: yes!

Question: does it cause cancer?

Answer: yes, but there is only limited evidence, and classific…..

Question: answer “yes” or “no”.

Answer: yes!

Thats all your honor.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அகத்தான் said:

Gravity என்பது தமிழிலிருந்து வந்த சொல்லே என்பதே ஆதாரம்!

தமிழில் இருந்து போயிருந்தால் ஏன் gravity ஐ ஈர்ப்பு விசை என்று ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து சொல்கின்றோம்?

ஒரு சொல்லை மட்டும் வைத்து ஆதாரம் என்பதை விட ஒரு அறிவியல் வரலாற்று முனைவர் பட்டத்திற்காக இதனை ஆராய்ந்து பல்கலைக்கழகம் ஒன்றின் ஊடாக  வெளியிட்டால் நல்லது.

அப்படி இல்லாவிடின் மேற்கத்தைய விஞ்ஞான வளர்ச்சிக்கெல்லாம் நாம்தான் முன்னோடிகள் என்று பழம்பெருமை பேசி சிலரை மகிழ்ச்சிப்படுத்துவதுடன் மட்டுமே நின்றுவிடும்.

 

நியூட்டன் மட்டுமா ஏன் அப்பிள் கீழே விழுகின்றது என்று சிந்தித்தார்? மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் எல்லா தொல்மூத்தோரும் கட்டாயம் சிந்தித்து இருப்பார்கள். ஆனால் அதன் தொடர்ச்சி எங்கே அறுபட்டது?

Link to comment
Share on other sites

4 minutes ago, கிருபன் said:

தமிழில் இருந்து போயிருந்தால் ஏன் gravity ஐ ஈர்ப்பு விசை என்று ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து சொல்கின்றோம்?

ஒரு சொல்லை மட்டும் வைத்து ஆதாரம் என்பதை விட ஒரு அறிவியல் வரலாற்று முனைவர் பட்டத்திற்காக இதனை ஆராய்ந்து பல்கலைக்கழகம் ஒன்றின் ஊடாக  வெளியிட்டால் நல்லது.

அப்படி இல்லாவிடின் மேற்கத்தைய விஞ்ஞான வளர்ச்சிக்கெல்லாம் நாம்தான் முன்னோடிகள் என்று பழம்பெருமை பேசி சிலரை மகிழ்ச்சிப்படுத்துவதுடன் மட்டுமே நின்றுவிடும்.

 

நியூட்டன் மட்டுமா ஏன் அப்பிள் கீழே விழுகின்றது என்று சிந்தித்தார்? மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் எல்லா தொல்மூத்தோரும் கட்டாயம் சிந்தித்து இருப்பார்கள். ஆனால் அதன் தொடர்ச்சி எங்கே அறுபட்டது?

நான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். எனது வீடியோ பார்த் தீர்களா?

திரி இது தான்

 

“க” ஏன் தமிழின் முதலெழுத்தானது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, அகத்தான் said:

Thats all your honor

அவ்வளவு எளிமையானது அல்ல.

Hypothesis test பற்றி உயர்தரத்தில் படித்திருக்கின்றேன். அதன்படி Group 2B க்கு confidence level போதாமல் உள்ளது. இருந்திருந்தால் group 1 அல்லது group 2a என்று classifications கொடுத்திருப்பார்கள்.

 

 

Link to comment
Share on other sites

38 minutes ago, உடையார் said:

காணுமா??? என்ன நீங்கள் அவரை பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட சொல்கின்றீர்கள், அவர் அதற்கு மேலாக செயற்படுகின்றார். 

 

நன்றி, உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

நல்லது உடையார். உடனேயே பொறுப்புணர்வுடன் இணைப்புக்களைத் தந்ததற்கு. அப்படியே மறக்காமல் மொபைல் ஃபோனைப் பாவிப்பதையும் முற்றாகத் தவிர்த்தால் அல்லது குறைத்தால் நல்லது. பிள்ளைகளுக்கு கொடுக்கவே வேண்டாம்.

நான் அதை எப்பவோ செய்துவிட்டேன்👍🙏 தேவையில்லாமல் 2 நிமிடத்திற்கு மேல் யாருடனும் கதைத்ததில்லை. 

Link to comment
Share on other sites

9 minutes ago, கிருபன் said:

அவ்வளவு எளிமையானது அல்ல.

Hypothesis test பற்றி உயர்தரத்தில் படித்திருக்கின்றேன். அதன்படி Group 2B க்கு confidence level போதாமல் உள்ளது. இருந்திருந்தால் group 1 அல்லது group 2a என்று classifications கொடுத்திருப்பார்கள்.

 

 

இங்கு கருப் பொருள் "classifications " அல்ல.

Question: does it cause cancer? - yes!

35 minutes ago, கிருபன் said:

 

விஞ்ஞான விடயங்கள் என்றால் பல்கலைக்கழகங்களினால் வெளியிடப்படும் யூரியூப் காணொளிகள், பெயர்பெற்ற நிறுவனங்களால் வெளியிடப்படும் காணொளிகள் மட்டும்தான் பார்ப்பேன். 

நீங்கள் விஞ்ஞான ஆராய்ச்சியில் இருந்தால் உங்கள் பல்கலைக்கழகம் ஊடாக வெளிவந்த காணொளிகளைக் காட்டினால் பார்க்கலாம். 

 

நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, அகத்தான் said:

நான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். எனது வீடியோ பார்த் தீர்களா?

இல்லை. எனினும் உங்கள் ஆராய்ச்சி thesis ஐ பல்கலைக்கழகம் ஒன்றினூடாக வெளியிடும்போது படிக்க ஆவல். 

இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களின் Ph.D  ஆராய்ச்சிக் கட்டுரைகள் (தமிழிலும்) பலவற்றை  கீழுள்ள இணைப்பில் பார்த்தேன். இந்தியாவில் உங்கள் ஆராய்ச்சி எனில் அங்கும் இணைத்துவிடுங்கள்

https://shodhganga.inflibnet.ac.in

 

Link to comment
Share on other sites

இந்த மொபையில் சந்தடியில் ஒரு விடயம் முற்றாக தந்திரமாக  கடந்து செல்லப்பட்டு விட்டது 

 ஒரு கிரகம்  (தோசம்) எப்படி ஒரு குறிப்பிட திகதியில் பிறந்தவரை மட்டும் தாக்கி அடுத்தவரை விட்டு வைக்கிறது?  என்பதற்கு  பதில் தெரிந்தவர்கள் யாரும் சொல்லலாம். 

அதுவும்  சனி தோசம் உள்ளவரை சனிக்கிரகம் selectiveஆக எப்படி குறிவைக்கிறது . செவ்வாய் தோசம் உள்ளவரை செவ்வாய் கிரகம் எப்படி குறி வைக்கிறது.  தோசம் உடையவரைத் தாக்குவது சம்பந்தமாக கிரகங்கள் தமக்குள் deal வைத்துள்ளனவா? 

கிரக தோசத்திற்கு  பரிகாரம் செய்யப்பட்டு விட்டவுடன் எந்த Medium மூலம் அந்த கிறகத்திற்கு தகவல் அனுப்பட்டுகிறது?  அவ்வாறு பரிகாரம் செய்த பின்னர் அந்தந்த கிரகங்களிடம் இருந்து warranty card ஐயரால் பெறப்படுமா? 

7.7 பில்லயன்  மக்கள் வாழும் இந்த பூமியில் அதெப்படி ஒரு குறிப்பிட மக்களை மாத்திரம் இந்த கிரக தோசம்  வந்தடைகிறது? 

இதற்கான அறிவியல் விளக்கத்தை  யாரும் ஆதாரங்களுடன்  தெரிவிக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

இந்த மொபையில் சந்தடியில் ஒரு விடயம் முற்றாக தந்திரமாக  கடந்து செல்லப்பட்டு விட்டது 

 ஒரு கிரகம்  (தோசம்) எப்படி ஒரு குறிப்பிட திகதியில் பிறந்தவரை மட்டும் தாக்கி அடுத்தவரை விட்டு வைக்கிறது?  என்பதற்கு  பதில் தெரிந்தவர்கள் யாரும் சொல்லலாம். 

அதுவும்  சனி தோசம் உள்ளவரை சனிக்கிரகம் selectiveஆக எப்படி குறிவைக்கிறது . செவ்வாய் தோசம் உள்ளவரை செவ்வாய் கிரகம் எப்படி குறி வைக்கிறது.  தோசம் உடையவரைத் தாக்குவது சம்பந்தமாக கிரகங்கள் தமக்குள் deal வைத்துள்ளனவா? 

கிரக தோசத்திற்கு  பரிகாரம் செய்யப்பட்டு விட்டவுடன் எந்த Medium மூலம் அந்த கிறகத்திற்கு தகவல் அனுப்பட்டுகிறது?  அவ்வாறு பரிகாரம் செய்த பின்னர் அந்தந்த கிரகங்களிடம் இருந்து warranty card ஐயரால் பெறப்படுமா? 

7.7 பில்லயன்  மக்கள் வாழும் இந்த பூமியில் அதெப்படி ஒரு குறிப்பிட மக்களை மாத்திரம் இந்த கிரக தோசம்  வந்தடைகிறது? 

இதற்கான அறிவியல் விளக்கத்தை  யாரும் ஆதாரங்களுடன்  தெரிவிக்கலாம்.  

இறந்தபின் வந்து விளக்குகின்றேன் 😎. இவையெல்லாம் அடி முட்டாள் தனம், இதையேன் இங்கு தூக்கிட்டு வருகின்றீர்கள்????. 

Link to comment
Share on other sites

6 minutes ago, உடையார் said:

இறந்தபின் வந்து விளக்குகின்றேன் 😎. இவையெல்லாம் அடி முட்டாள் தனம், இதையேன் இங்கு தூக்கிட்டு வருகின்றீர்கள்????. 

இந்த அடி முட்டாள்தனம் மூடநம்பிக்கை இல்லை  அறிவியல் என்று  அகத்தான் இதே திரியில் கூறிய போது  பொங்காத நீங்கள்  அவரை வாழ்த்தி தொடருங்கள் என்று கொமன்ற் போட்ட  நீங்கள் என்னுடன் வந்து  இப்படி   பொங்கி எழுகிறீர்களே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

இந்த அடி முட்டாள்தனம் மூடநம்பிக்கை இல்லை  அறிவியல் என்று  அகத்தான் இதே திரியில் கூறிய போது  பொங்காத நீங்கள்  அவரை வாழ்த்தி தொடருங்கள் என்று கொமன்ற் போட்ட  நீங்கள் என்னுடன் வந்து  இப்படி   பொங்கி எழுகிறீர்களே! 

அவர் கூறிய விதத்தையும் நீங்கள் கூறியவிதத்தையும் ஒப்பிட்டு பாருங்கள், முட்டாள்தனம் விளங்கும்👍

Link to comment
Share on other sites

10 minutes ago, உடையார் said:

அவர் கூறிய விதத்தையும் நீங்கள் கூறியவிதத்தையும் ஒப்பிட்டு பாருங்கள், முட்டாள்தனம் விளங்கும்👍

நான. கூறி முட்டாள்த்தனங்கள் எமது சமூகத்தில் இப்போமும. இருக்கிறது என்ற ஜதார்ததத்தை புறம் தள்ள முடியாது. புலம் பெயர்  நாடுகளில்  உள்ள கோவில்களில் கூட கிரக தோசத்திற்காக அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. 

எமது சமுதாயத்தில்  தற்போது நடைமுறையில் உள்ள மூட நம்பிக்கை ஒன்றைப் பற்றி தான் கேள்வி எழுப்பும் போது,  அவை முட நம்பிக்கை என்று ஒத்துக்கொள்ளும் நீங்கள் ஏன் கோபப்படவேண்டும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அகத்தான் said:

இங்கு கருப் பொருள் "classifications " அல்ல.

Question: does it cause cancer? - yes!

 

உங்கள் கேஸ் எந்தக் கோர்ட்டிலும் வெல்லாது. முதலில் ஃபோனை காதுக்குக் பக்கத்தில் வைத்தால் மூளையைப் பாதிக்கும் என்றீர்கள். பின்னர் classification ஐக் கொடுத்தபோது திட்டவட்டமாக பாதிக்கும் என்று சொல்லமுடியாது என்றீர்கள். 

பின்னர் மிகவும் எளிமையாக ஆம் பாதிக்கும் என்கின்றீர்கள். இது உண்மையாக இருந்தால் ரல்கம் பவுடர் கான்ஸரை உண்டாக்கியதற்காக போட்ட கேஸ் போல பல கேஸ்கள் அப்பிள், சாம்சுங் போன்ற கொம்பனிகளுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கவேண்டும்.

சரி. உங்களின் “Yes” க்கும் பிரித்தானியா கான்சர் ஆய்வு தொண்டு நிறுவனத்தின் “No” க்கும் உள்ள வேறுபாட்டையும் நம்பகத்தன்மையயும் புரிந்துகொண்டுள்ளேன்.

Do mobile phones cause cancer?

No. So far, the best scientific evidence shows that using mobile phones does not increase the risk of cancer.

There also aren't any good explanations for how mobile phones could cause cancer. The radiofrequency electromagnetic radiation that mobile phones or phone masts transmit and receive is non-ionising and is very weak. This non-ionising radiation does not have enough energy to damage DNA and cannot directly cause cancer.

But research is still continuing, to make sure there aren’t any potential long-term effects. And we continue to monitor any new evidence

https://www.cancerresearchuk.org/about-cancer/causes-of-cancer/cancer-controversies/do-mobile-phones-cause-cancer

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற யூரியூப் தளத்தைப் பார்த்தேன். இந்தத் திரியில் அகத்தான் இணைத்த வீடியோ அங்கிருந்துதான் வந்தது. கிருஷ்ணன் பச்சைத் தமிழன் என்று உள்ளது. அட்லாண்டிஸ் கண்டம் (கடலுக்கடியில் உள்ளது)  லெமூரியா என்று இன்னொன்று. கூடவே நடப்பில் சூடான சாத்தாங்குளம் மரணங்கள் பற்றியும் ஒன்று. பலர் உலகமெல்லாம் சதிக்கோட்பாடு, சூழ்ச்சிக்கோட்பாடுகளைக் கொண்டுவருகின்றார்கள். அப்படியான ஒரு குழுவினர் என்பதை இந்த யூரியூப் தளம் என்று தெரிகின்றது. 

இப்படியான யூரியூப் பதிவுகள் யாழில் வருவது போலி பிரச்சாரத்திற்கு யாழ் களமும் தப்பாது என்றுதான் காட்டுகின்றது.

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:
 

உங்கள் கேஸ் எந்தக் கோர்ட்டிலும் வெல்லாது. முதலில் ஃபோனை காதுக்குக் பக்கத்தில் வைத்தால் மூளையைப் பாதிக்கும் என்றீர்கள். பின்னர் classification ஐக் கொடுத்தபோது திட்டவட்டமாக பாதிக்கும் என்று சொல்லமுடியாது என்றீர்கள். 

பின்னர் மிகவும் எளிமையாக ஆம் பாதிக்கும் என்கின்றீர்கள். இது உண்மையாக இருந்தால் ரல்கம் பவுடர் கான்ஸரை உண்டாக்கியதற்காக போட்ட கேஸ் போல பல கேஸ்கள் அப்பிள், சாம்சுங் போன்ற கொம்பனிகளுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கவேண்டும்.

சரி. உங்களின் “Yes” க்கும் பிரித்தானியா கான்சர் ஆய்வு தொண்டு நிறுவனத்தின் “No” க்கும் உள்ள வேறுபாட்டையும் நம்பகத்தன்மையயும் புரிந்துகொண்டுள்ளேன்.

Do mobile phones cause cancer?

No. So far, the best scientific evidence shows that using mobile phones does not increase the risk of cancer.

There also aren't any good explanations for how mobile phones could cause cancer. The radiofrequency electromagnetic radiation that mobile phones or phone masts transmit and receive is non-ionising and is very weak. This non-ionising radiation does not have enough energy to damage DNA and cannot directly cause cancer.

But research is still continuing, to make sure there aren’t any potential long-term effects. And we continue to monitor any new evidence

https://www.cancerresearchuk.org/about-cancer/causes-of-cancer/cancer-controversies/do-mobile-phones-cause-cancer

 

 

விவாதக் கருப்பொருள் "பாதிக்குமா இல்லையா". வேறு எங்கும் அலையக் கூடாது.
கோர்ட்டில் வெல்வது இங்கு கருப்பொருளல்ல.

கோர்ட்டில் யாரும் வெல்லலாம். வெற்றி, வாதத் திறமையைப் பொறுத்தது , நிஜத்தைப் பற்றியதல்ல.

மாட்டைப் பற்றி மட்டும் பேசுங்கள், மரத்தைப் பற்றிப் பேசுவது, திசை திருப்பல். 

 

Fact:

Question: does it cause cancer? - yes!

Thats all your honor!

 

3 hours ago, கிருபன் said:

இல்லை. எனினும் உங்கள் ஆராய்ச்சி thesis ஐ பல்கலைக்கழகம் ஒன்றினூடாக வெளியிடும்போது படிக்க ஆவல். 

இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களின் Ph.D  ஆராய்ச்சிக் கட்டுரைகள் (தமிழிலும்) பலவற்றை  கீழுள்ள இணைப்பில் பார்த்தேன். இந்தியாவில் உங்கள் ஆராய்ச்சி எனில் அங்கும் இணைத்துவிடுங்கள்

https://shodhganga.inflibnet.ac.in

 

நன்றிகள்

20 minutes ago, கிருபன் said:

தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற யூரியூப் தளத்தைப் பார்த்தேன். இந்தத் திரியில் அகத்தான் இணைத்த வீடியோ அங்கிருந்துதான் வந்தது. கிருஷ்ணன் பச்சைத் தமிழன் என்று உள்ளது. அட்லாண்டிஸ் கண்டம் (கடலுக்கடியில் உள்ளது)  லெமூரியா என்று இன்னொன்று. கூடவே நடப்பில் சூடான சாத்தாங்குளம் மரணங்கள் பற்றியும் ஒன்று. பலர் உலகமெல்லாம் சதிக்கோட்பாடு, சூழ்ச்சிக்கோட்பாடுகளைக் கொண்டுவருகின்றார்கள். அப்படியான ஒரு குழுவினர் என்பதை இந்த யூரியூப் தளம் என்று தெரிகின்றது. 

இப்படியான யூரியூப் பதிவுகள் யாழில் வருவது போலி பிரச்சாரத்திற்கு யாழ் களமும் தப்பாது என்றுதான் காட்டுகின்றது.

 

"விஞ்ஞான விடயங்கள் என்றால் பல்கலைக்கழகங்களினால் வெளியிடப்படும் யூரியூப் காணொளிகள், பெயர்பெற்ற நிறுவனங்களால் வெளியிடப்படும் காணொளிகள் மட்டும்தான் பார்ப்பேன். "

இது எந்தப் பல்கலைக் கழகத்தால், நிறுவனத்தால் வெளியிடப்பட்டது, ஐயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அகத்தான் said:

மாட்டைப் பற்றி மட்டும் பேசுங்கள், மரத்தைப் பற்றிப் பேசுவது, திசை திருப்பல். 

இந்தத் திரி திறக்கப்பட்டபோது வைத்த முதலாவது கருத்தைப் பார்த்தால் மாடு காணாமல் போய் கன நாட்களாகிவிட்டது😂🤣

நீங்கள் எவ்வளவுதான் fact என்று சொன்னாலும் பொறுப்பான அரசுகளும், அதன் சுகாதார அமைப்புக்களும், ஏன் கான்ஸர் ஆராய்ச்சியில் ஈடுபடும் தொண்டு நிறுவனமும் “yes” என்று சொல்லவில்லை. அதை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தெரியும். நீங்கள் ஏற்கவேண்டும் என்பதும் என் நோக்கமல்ல😎

 

இனி மாட்டைத் தேடிப் பிடித்து அதனைப் பற்றி உரையாடுங்கள்😀

Link to comment
Share on other sites

56 minutes ago, கிருபன் said:

இந்தத் திரி திறக்கப்பட்டபோது வைத்த முதலாவது கருத்தைப் பார்த்தால் மாடு காணாமல் போய் கன நாட்களாகிவிட்டது😂🤣

நீங்கள் எவ்வளவுதான் fact என்று சொன்னாலும் பொறுப்பான அரசுகளும், அதன் சுகாதார அமைப்புக்களும், ஏன் கான்ஸர் ஆராய்ச்சியில் ஈடுபடும் தொண்டு நிறுவனமும் “yes” என்று சொல்லவில்லை. அதை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தெரியும். நீங்கள் ஏற்கவேண்டும் என்பதும் என் நோக்கமல்ல😎

 

இனி மாட்டைத் தேடிப் பிடித்து அதனைப் பற்றி உரையாடுங்கள்😀

"சுகாதார அமைப்புக்களும்"  , ..... "தொண்டு நிறுவனமும்"

இதுக்கென்று வேறொரு திரி தொடங்கி எழுதுங்கள்

அவர்கள் ஏன் “yes” என்று சொல்லவில்லை, என்று "புரிந்துகொண்டு" ஏற்றுக்கொள்கிறேன் தாராளமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தத் திரி திறக்கப்பட்டபோது வைத்த முதலாவது கருத்தைப் பார்த்தால் மாடு காணாமல் போய் கன நாட்களாகிவிட்டது😂🤣

நீங்கள் எவ்வளவுதான் fact என்று சொன்னாலும் பொறுப்பான அரசுகளும், அதன் சுகாதார அமைப்புக்களும், ஏன் கான்ஸர் ஆராய்ச்சியில் ஈடுபடும் தொண்டு நிறுவனமும் “yes” என்று சொல்லவில்லை. அதை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தெரியும். நீங்கள் ஏற்கவேண்டும் என்பதும் என் நோக்கமல்ல😎

 

இனி மாட்டைத் தேடிப் பிடித்து அதனைப் பற்றி உரையாடுங்கள்😀

 

இவர் கருத்தாளர் மாங்குயில் என நினக்கின்றேன்

Link to comment
Share on other sites

பொதுவாக:

High School Physics:

ஒரு சதுரத்தின் நான்கு மூலைகள் A,B,C,D க்கு ஒவ்வொன்றாக நான்கு electrostaic charge கள் நிலைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சதுரத்தின் மையம் O வில் இன்னொரு electrostatic charge வைக்கப்பட்டுள்ளது.

சதுரத்தின் பக்கங்கள் மீட்டரோ, கிலோமீட்டரோ பரவாயில்லை.

electrostatic charge இன் அளவு சிறியதோ, பெரியதோ, சமனானதோ, இல்லையோ பரவாயில்லை.

இந்த அமைப்பினால், மையத்திலுள்ள electrostatic charge ஒரு விசைய அனுபவிக்கும், zeroவோ, இல்லை வேறெதுவோ. அது போல மற்ற electrostatic charge களும் ஒரு விசையை அனுபவிக்கும்.

இந்த விசையினால் O வில் உள்ள charge அசைந்து வேறொரு இடத்தில் நிலை கொள்ளும். அசையும் தூரம் பெரிசோ சிறிசோ என்பது பொருட்டல்ல, அது அசையும்.

இப்புதிய இடத்தை X என்போம்.

இப்போது, மூலைகளிலுள்ள ஏதாவதொரு charge ஐ சிறிதளவு நகர்த்தினால் X ல் உள்ள charge, தொடர்ந்து X இல் இருக்குமா அல்லது வேறொரு புதிய இடத் துக்கு நகருமா?

நகரும்!

இது charge க்கு மட்டுமல் ல,  mass - திணிவுக்கும் பொருந்தும்.

 

இப்போது charge களை, mass உள்ளதாகப் பார்த்தால், விளைவு, கூட்டு விளைவாக இருக்கும்.

அதாவது, X இல் உள்ள mass இன் gravitational field உம், electromagnetic field உம் மாறுபடும், பெரிசோ, சிறிசோ. 

இது அறிவியல்!

 

கிரகத்துக்கு gravitational field உம் இருக்கு, சொந்தமாக  electromagnetic field உம் இருக்கு.

ஒவ்வொரு உயிரினத்துக்கும் gravitational field உம் இருக்கு, சொந்தமாக  electromagnetic field உம் இருக்கு.

ஒரு கிரகம் அசைந்தால் அது மற்றக் கிரகங்களைப் பாதிக்கும், பெரிசோ, சிறிசோ, உயிரினமோ, கல்லோ.

இது அறிவியல் இல்லையா?

 

கிரகக் கொள்கையின் படி, சூரியன், சந்திரன் எல்லாம் கிரகமே, வெகு தூரத்திலிருக்கும் star உம் ஒரு வகையில் கிரகமே.

 

மூளை, computer என்பன இயங்குவது மின்னோட்டத்தினால் (இது புது விடயமல்ல!)  

 

Computer இலுள்ள chip கணிப்பைச் செய்வது electric pulse ஐப் பாவித்து (இது புது விடயமல்ல!)

மின்காந்த அதிர்வினால் computerஐ செயலிழக்கச் செய்யமுடியும்.

அணுவெடிப்பு, சூரியனில் ஏற்படும் coronal mass ejection (CME) என்பன பெரிய மின்காந்த அதிர்வை ஏற்படுத்தும். இவை அந்த ஏரியாவிலுள்ள சகல electronic chip களையும் செயலிழக்க வைத்துவிடும்.


Coronal Mass Ejections | NOAA / NWS Space Weather ...

Coronal Mass Ejections (CMEs) are large expulsions of plasma and magnetic field from the Sun's corona. They can eject billions of tons of coronal material and carry an embedded magnetic field (frozen in flux) that is stronger than the background solar wind interplanetary magnetic field (IMF) strength.

 

 மூளை இயங்குவது மின்னோட்டத்தினால். 

Queensland Brain Institute:

https://qbi.uq.edu.au/brain-basics/brain/brain-physiology/how-do-neurons-work#:~:text=Nerve impulses are the basic,other neurons (Fig 1). 

The key difference between neurons and glia is that neurons are ‘excitable’. This means that they produce electrical events called action potentials, which are also known as nerve impulses, or spikes. Nerve impulses are the basic currency of the brain. They allow neurons to communicate with each other, computations to be performed, and information to be processed. 

////////////

TMS therapy : மூளையில் உள்ள (nerve cells) நரம்பு செல்களைத் தூண்டுவதற்கு மின்காந்தம் பாவிக்கப்படுகிறது.

Transcranial Magnetic Stimulation (TMS) | How Does TMS Work 

TMS therapy involves the use of very short pulses of magnetic energy to stimulate nerve cells in the brain. First used in 1985, TMS therapy has been used by researchers around the world to help understand the function of different parts of the brain.

 

மின்காந்த அதிர்வில் ஏற்படும் மாறுதல்  மூளையின் செயற்பாட்டைப் பாதிக்கும்!

பாதிப்பு பெரிசோ சிறிசோ என்பது பொருட்டல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.