Jump to content

யாழ்.மிருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் கோர விபத்து -இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்தில் பலி


Recommended Posts

யாழ்.மிருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன்நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/145535

Link to comment
Share on other sites

வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

யாழில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 337 பேர் பல்வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வீதி விபத்து மற்றும் தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில்,

கடந்த கால விபத்துக்கள் தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

யாழ் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 337 பேர் பல்வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதத்தில் மட்டும் வீதி விபத்தில் சிக்கிய 212 பேரும், ஏனைய விபத்துக்களில் 118 பேரும், தீ விபத்தில் 07 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கடந்த 08 ஆம் திகதியில் இருந்து 14 ஆம் திகதி வரையில் வீதி விபத்தில் சிக்கிய 43 பேரும், ஏனைய விபத்தில் 68 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் வீதி விபத்தில் காயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனரென அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/145524

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

40 பேருக்கு கொரோனா என்ற போது பதறித்துடித்த சமூகம்.. 2009 க்குப் பின் விபத்துக்களால்.. திட்டமிட்ட.. மற்றும் திட்டமிடப்படாத விபத்துக்களால்.. எத்தனை உயிர்களை பலிகொடுத்திருக்கும். அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் ஏதும் இல்லாமல் போனது தான் ஏனோ..?????????! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

40 பேருக்கு கொரோனா என்ற போது பதறித்துடித்த சமூகம்.. 2009 க்குப் பின் விபத்துக்களால்.. திட்டமிட்ட.. மற்றும் திட்டமிடப்படாத விபத்துக்களால்.. எத்தனை உயிர்களை பலிகொடுத்திருக்கும். அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் ஏதும் இல்லாமல் போனது தான் ஏனோ..?????????! 

சிங்களவனின் நரிக்குணம் எப்படியென்றால் தமிழன் அழிந்து கொண்டு இருக்கணும் என்பதில் குறியாய் இருக்கிறான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் விபத்துக்களால் தமிழர் சாவதற்கும் சிங்களவன் தான் காரணமா 🤯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரதி said:

ஊரில் விபத்துக்களால் தமிழர் சாவதற்கும் சிங்களவன் தான் காரணமா 🤯

சிங்களவனும் ஒரு காரணம்.

என் கண்முன்னால் கண்டேன்.. சிங்களக் கடற்படை..  மற்றும் இராணுவம்.. ஓடும் டிப்பர்கள் சகட்டு மேனிக்கு வீதி ஒழுங்குகளையும் மீறி செலுத்தப்படுவதை. டிப்பரில் போவனுக்கு மரண பயமில்லை. ஆனால்.. கார்.. ஸ்கூட்டி.. மோட்டார் சைக்கிள்.. சைக்கிளில்.. போகும் எம் மக்களே.. இந்த பொறுப்பற்ற.. போர் வெற்றித் திமிர்த்தன சிங்களப் படையிருப்பின்.. திமிர்த்தன செயற்பாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

போர் முடிந்த கையோடு இராணுவம் குறைக்கப்பட்டு.. இராணுவத்தில் இருப்பவர்கள்.. பொது வாழ்வுக்கு பயிற்றப்பட்டு.. பொதுவாழ்வில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்.. சிங்கள தேசம் இன்னும் இன்னும் இராணுவ பூதத்தை வளர்க்கிறது. அதற்கு தீனி வடக்குக் கிழக்கு. 

வடக்குக் கிழக்கில்.. எத்தனை ஆயிரம் இராணுவ வாகனங்களும்.. இராணுவக் கட்டுமானங்களுக்காக ஓடித்திரியும் கனரக வாகனங்களும் உள்ளன என்பது தெரியுமா..???!

இவையும் தான் கூடுதல் மரணங்களுக்கு காரணம். மறுக்க முடியாத ஒரு காரணி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nedukkalapoovan said:

சிங்களவனும் ஒரு காரணம்.

என் கண்முன்னால் கண்டேன்.. சிங்களக் கடற்படை..  மற்றும் இராணுவம்.. ஓடும் டிப்பர்கள் சகட்டு மேனிக்கு வீதி ஒழுங்குகளையும் மீறி செலுத்தப்படுவதை. டிப்பரில் போவனுக்கு மரண பயமில்லை. ஆனால்.. கார்.. ஸ்கூட்டி.. மோட்டார் சைக்கிள்.. சைக்கிளில்.. போகும் எம் மக்களே.. இந்த பொறுப்பற்ற.. போர் வெற்றித் திமிர்த்தன சிங்களப் படையிருப்பின்.. திமிர்த்தன செயற்பாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

போர் முடிந்த கையோடு இராணுவம் குறைக்கப்பட்டு.. இராணுவத்தில் இருப்பவர்கள்.. பொது வாழ்வுக்கு பயிற்றப்பட்டு.. பொதுவாழ்வில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்.. சிங்கள தேசம் இன்னும் இன்னும் இராணுவ பூதத்தை வளர்க்கிறது. அதற்கு தீனி வடக்குக் கிழக்கு. 

வடக்குக் கிழக்கில்.. எத்தனை ஆயிரம் இராணுவ வாகனங்களும்.. இராணுவக் கட்டுமானங்களுக்காக ஓடித்திரியும் கனரக வாகனங்களும் உள்ளன என்பது தெரியுமா..???!

இவையும் தான் கூடுதல் மரணங்களுக்கு காரணம். மறுக்க முடியாத ஒரு காரணி. 

நெடுக்கர் ,நான் போன வருடம் யாழ் போய் கிட்டதட்ட 2 மாதங்கள் நின்று விட்டு வந்தேன்..அங்கே ஆமிக்காரங்களையோ ,கவச வாகனங்களையோ பெரிதாய் ரோட்டில் நான் காணவில்லை..

அங்கு விபத்துக்கள் நடப்பதற்கு முக்கிய காரணம் பெற்றோர் ...பிள்ளைகளுக்கு 18 வயசு வந்தவுடனே வாகனங்களை வேண்டி கொடுக்கிறது ...அதை ஒரு கெளரவமாய் நினைப்பது .
போட்டி போட்டுக் கொண்டு ஓடுவது 
குடிச்சுப் போட்டு ஓடுவது 
ஒழுங்காய் ஓடி பழக முன் ஓடுவது 
இப்படி பல காரணங்கள் இருக்கு  

Link to comment
Share on other sites

6 hours ago, Rajesh said:

பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன்நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

வலு கூடிய உந்துருளியில் கண்மண் தெரியாமல் ஓடி மோதுண்டு இறப்பதற்கு பொறுப்பற்ற அவர்களது பெற்றோர்கள் /அதற்கு பண உதவி செய்தவர்கள் தான் காரணம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.